Wednesday, March 30, 2011

நிவேதனம் செய்து உண்டால் உபநிஷத்து புரியும்!




ஒவ்வொரு குடும்பத்திலும் கடவுள் பூஜை நடக்க வேண்டும். சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகள் செய்யலாம். சௌகரியம் இல்லாவிடுல் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும். 


அலுவலகம் போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை
என்று ஒன்றைச் செய்ய வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச்சத்தம் கேட்க வேண்டும்.


பூஜை என்பதற்காகப் பெரிய சிரமம் எதுவும் தேவை இல்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கே இருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதர்காக இவ்வளவும் சொன்னேன்.


வீட்டிலே இருந்தால் 'மகா நைவேத்தியம்' செய்யவேண்டும். அதாவது அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம். 


நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சப்பிடப்போகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடச் செய்வது என்று அர்த்தமே இல்லை. அவருக்குச் சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவைச் சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை
முழுவதுமே தவிர, அவருக்குக் இதனால் ஆவது எதுவுமில்லை.


'நிவேதயாமி' என்றால், 'அறிவிக்கிறேன்' என்றுதான் அர்த்தமே தவிர, 'உண்பிக்கிறேன்' என்று அர்த்தமில்லை. 'அப்பனே இந்த வேளைக்கு உன் கருணையில் நீ இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய்' என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும்.


- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 


ஆக இந்த பிரபஞ்சத்தில் நம்மால் ஆனது ஒன்றும் இல்லை எல்லாம் அவனிலிருந்தே தோன்றியது அவனுக்கே அர்ப்பனிக்கப்படுகிறது என்ற உயர்ந்த உண்மை மனதில் பதிந்தால் அகங்காரம் குறையும். உபநிஷத்தின் அடிப்படை சாரமான அவனிலிருந்தே தோன்றியது அவனிடமே
ஐக்கியமாகிறது என்கிற உயர்ந்த பிரபஞ்ச சக்தி பற்றிய உண்மையை சாதாரன நிவேதன காரியத்தின் மூலமாகவே நம் முன்னோர்கள் உணர்த்தி விடுகிறார்கள். 


அதனாலேயே வைனவர்கள் பெரும்பாலும் இறைவனுக்கு நிவேதனம் செய்யாமல் தினசரி உணவே கூட சாப்பிட மாட்டார்கள். எல்லாம் அவனிலிருந்தே வந்தது, நாம் அனுபவிக்கும் எந்த அனுகூலத்திற்கும் அவனது இயக்கமே காரணம் என்றுணர்ந்து அடக்கத்துடன் வாழவே இறைவனுக்கு நிவேதனம் செய்வது பழக்கமாகியது. 


இப்படி பல சம்பிரதாயங்களும் நம் எண்ணங்களைச் செதுக்கி மனிதனை முழுமைப்படுத்த மேற்கொண்ட மனோவியல் வழிமுறைகள் ஆகும். 


பெரியோர்கள் கூறிய வழிமுறைகளை அப்படியே கடைபிடித்து வந்தால் சங்கிலிப் பிணைப்புகளாக பல நன்மைகள் நம்மையறியாமலேயே
நம்மை வந்தடைவதை உணரலாம்.


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!



.

No comments: