Wednesday, April 30, 2014

அம்பேத்காரை தோற்கடித்த தலித்துகள்!

- ஆனந்த் கணேஷ்


பௌத்தத்தால் தீண்டத்தகாதவராக ஆக்கப்பட்ட சுரண்டப்பட்ட ஜாதிகளை, தீண்டத்தகுந்த சமமாக மதிக்கத்தகுந்த ஜாதிகளாக மாற்ற உழைத்தனர் ஆதி சங்கரரும், அவருக்குப் பின்வந்த ராமானுஜரும்.

அவர்கள் நமக்கு வழிகாட்டும்போது கிறுத்துவ சர்ச்சின் வரையறைப்படி ஏன் நடக்க வேண்டும் ?

கிறுத்துவப் பாதிரிமார்களால் பயன்படுத்தப்பட்டு ஆங்கில அரசாங்கத்தால் பரப்பப்பட்ட தலித் எனும் நெகட்டிவான வார்த்தையை ஒதுக்குவது ஹரிஜனங்களின் நன்மைக்கு செய்ய வேண்டிய முதல் படியேறுதல்.

அந்த வார்த்தைக்குப் பதிலாக எம்பெருமான் ராமானுஜர் தந்த "திருக்குலத்தார்" என்கிற பொருத்தமான மதிப்புமிக்க பதத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இது பழகும்வரை தெய்வத்தின் குழந்தைகளாகக் கருதி வணங்கப்பட வேண்டியவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் அந்தஸ்தும் சம உரிமையும் தரப்பட வேண்டியவர்கள் என்கிற பொருளில் காந்தி ஜி தந்த ஹரிஜனர் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

ஆனால், இந்த மதிப்புத் தரும் வார்த்தைகளை ஹரிஜனங்கள் பயன்படுத்தவிடாமல் கிறுத்துவ ஆங்கிலேயர்களின் வழியிலேயே செயல்பட்டார் அம்பேத்கார்.

அவர் தலித் என்கிற வார்த்தையைப் பிரபலமாக்கினார். ஆனால், நேருவின் அரசில் பதவியில் இருந்தபோது உருவான ஒரு படைப்பிரிவுக்கு தலித் என்கிற பொதுப்பெயர் வேண்டும் என்று அவர் சொல்லவில்லை.

தனது ஜாதிப் பெயரான மகர் என்கிற பெயர்தான் வைக்கச் சொன்னார். இன்றும் இந்தியாவில் ஜாதிப் பெயரில் ஒரு படைப்பிரிவு இருக்கிறது என்றால் அது இந்த மகர் படைப்பிரிவு மட்டுமே.

எப்படி இனவெறியரான ஈவேரா பற்றிய உண்மைகளை பிசி, ஓபிசி, எம்பிசி ஜாதிக்காரர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமோ, அதைவிட அதிக அவசியம் அம்பேத்காரைப் பற்றித் தற்கால ஹரிஜனங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதிலும் இருக்கிறது.

அம்பேத்கார் என்பவர் சுயநலத்தின் காரணமாக ஹரிஜனங்களுக்குச் செய்த துரோகத்தை அவர்களுக்குத் தெரிவிப்பது அவசியமான ஒன்று.

இனவெறியரான ஈவேராவால் யாரும் பெரிதாகக் கொல்லப்படவில்லை. ஆனால், இனவாதியான அம்பேத்காரால் ஆயிரக்கணக்கான ஹரிஜனங்கள் கொல்லப்பட்டார்கள்.

கடைசிவரை அந்தக் கொலைகளை அம்பேத்கார் கண்டித்ததாகத் தெரியவில்லை.

ஏனெனில், அம்பேத்காரின் சுயநலப்பார்வையில் அவர்கள் அவருடைய உயர்ந்த சாதியினரான மகர்கள் இல்லை. கேவலம் ஹிந்து நாமதாரி ஜாதிக்காரர்கள்.

இந்த அம்பேத்கார் பற்றி அந்தக் காலத்து ஹரிஜனங்கள் தெளிவாகவே அறிந்து இருந்தார்கள். எந்தத் தேர்தலில் முஸ்லீம் லீகோடு சேர்ந்துகொண்டு வெற்றிபெற அம்பேத்கார் ஆயிரக்கணக்கான ஹரிஜனங்களின் கொலைக்குக் காரணமானாரோ, அந்தத் தேர்தலில், ஹரிஜனங்கள் மெஜாரிட்டியாக உள்ள தொகுதியில், அம்பேத்காரை ஹரிஜனங்கள் மிக மோசமாகத் தோற்கடித்தார்கள்.

அவருக்கு டெப்பாஸிட் கூட கிடைக்கவில்லை.

எனவே, அம்பேத்கார் பற்றிப் பேசுவது ஹரிஜனங்களின் மனத்தை பாதிக்கும் வருந்தச் செய்யும் என்கிற ஜல்லி வேண்டாம்.

இந்தக் காலத்தில் தமிழகத்தில் பறையர் ஜாதிக்காரர்கள் அம்பேத்கார்மேல் மிகுந்த பக்தியுடன் இருக்கிறார்கள். திருமாவளவன் வழியாக அம்பேத்காரின் இனவெறி திணிக்கப்படுவதாலும், அந்த இனவெறி அடிப்படையில் அவர்கள் தங்களை ஷத்திரிய மற்றும் பிராமணர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட நாகா இனத்தவராக கருதுவதாலும் அவர்கள் மட்டுமே அம்பேத்கார் பெயரை பக்தியுடன் உபயோகிக்கிறார்கள்.

தன்னுடைய மகர் ஜாதிக்குச் சலுகைகள் வேண்டும் என்று அம்பேத்கார் ஆங்கில அரசுக்கு எழுதும்போது மகாராட்டிரத்தில் மகர்களும், தமிழ்நாட்டில் பறையர்களும் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக, அவர்களது கொள்ளை கொலைகளுக்கு ஆதரவாக அவர்களது படைகளில் சேர்ந்தார்கள் என்பதை அம்பேத்கார் சுட்டுகிறார்.

அதன்மூலம் அப்போதே இந்த மகர் - பறையர் கூட்டு இனவெறிக்கு இந்திய எதிர்ப்பு வெறிக்கு அஸ்திவாரம் போட்டு இருக்கிறார்.


அதனாலும் பறையர் இனத்தவர்களிடம் மட்டுமே அதிக அளவில் அம்பேத்கார் பற்றிய மயக்கம் இருக்கிறது. மற்ற ஹரிஜன ஜாதிகளில் கிருத்துவத்துக்கு மதம் மாறிய பள்ளர்களிடமும் அந்த மயக்கம் சர்ச்சால் திணிக்கப்படுகிறது.

மற்றபடி ஹிந்து பள்ளர் இனத்தவர்களும், ஹிந்து சக்கிலியர் இனத்தவர்களும் அம்பேத்கார்மேல் அவ்வளவு பிடிப்புக் கொண்டவர்கள் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அம்பேத்கார் ஒரு மகாராஷ்டிரப் பறையர் இனத்தவர் என்பது போன்ற பார்வையே நிலவுகிறது.

தங்கள் ஜாதித் தலைவர்களுக்கு வரவேண்டிய மதிப்பும் மரியாதையும் கிடைக்காமல் போவதற்கு அம்பேத்கார் காரணம் என்று நினைக்கிறார்கள்.

இந்த நினைப்பு ஒன்றும் ஜாதிவெறியால் வந்தது இல்லை. வரலாற்று உண்மைகளில் இருந்து ஞானிகளான ஹரிஜனங்களுக்கு வந்த புரிதல் அது.

அம்பேத்கார் தன்னைத் தவிர மற்ற எந்த ஹரிஜனத் தலைவரையும் மதித்தது கிடையாது. அவர்களை மிக மோசமாக திட்டியும் வைதும் வந்தார்.

அதற்கு உதாரணம்,அம்பேத்காரால் இருப்பதிலேயே மிக மோசமாக திட்டப்பட்டவர் தமிழ்நாட்டு ஹரிஜனத் தலைவரான ராஜா அவர்கள்.

எனவே, பொதுவான சாதீயவெறியர்களின் புரிதலுக்கு மாறாக ஹரிஜனங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அம்பேத்கார்மேல் அவர்கள் விலகல் கொண்டு இருக்கிறார்கள்.

பள்ளர் ஜாதியைச் சேர்ந்த ஒருவர் "அம்பேத்கார் எங்கள் முதுகில் குத்திய துரோகி" என்று என்னிடம் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.

எனவே, அம்பேத்காரை அனைத்து ஹரிஜனங்களுக்கும் தலைவராக, நபியாகக் காட்டும் பொய் பிரச்சாரத்தை இங்கே செய்ய வேண்டியதில்லை.

அம்பேத்காரை முன்வைப்பதன் மூலம் பறையர் ஜாதி மற்ற ஹரிஜன ஜாதிகளைவிட "உயர்ந்த" ஜாதியாகக் காட்டப்படுகிறது.

எல்லா ஜாதியும் சமம் என்ற பேசுதல்கள் உண்மையானால் இங்ஙனம் பறையர் ஜாதீய வெறியைத் தூக்கிப்பிடிப்பது பொய்மை. அதன்மூலம் ஒரு புதிய இனவெறியை நுழைப்பது கயமை.

அந்தக் கயமையை ஒதுக்குவதும் ஒறுப்பதும் உண்மையானவரின் இயல்பு.

Sunday, April 27, 2014

இத்தாலி ராணியும் மங்குனி அமைச்சரும்!







மியூட் மோஹன் அசிங்கத்திற்கு ஈகோவே கிடையாதாம். யாருக்கு வேணும்னாலும் கூப்டவுடன் போய் வேலை செய்வாராம்.

ராபர்ட் வத்ரா: யாரெங்கே, யாரங்கே, அடேய் யாரங்கே...

மியூட்மோகன்:  இதோ வந்திட்டேன்,

ராபர்ட் வத்ரா:  அடேய் மங்குனி அமைச்சனே, எவ்ளோ நேரம் கத்துறது கூப்ட ஒடனே வரத்தெரியதா?

மியூட்மோகன்: இல்லை , ராகூல் பையனுக்கு கை தொடைக்க டிஷ்யூ பேப்பர் இல்லியாம், அவசரமா கூப்டாங்க.அதான் போய் எடுத்து குடுத்துட்டு வந்தேன். அதுக்குள்ள நீங்க கூப்டுடீங்க.

ராபர்ட் வத்ரா: சரி சரி, என்னோட ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு பைல் எங்கே,

மியூட்மோகன்:  இதோ இங்கே இருக்கு

ராபர்ட் வத்ரா: அதை எரிச்சி போட்ரு காணோம்னு நீயே பத்திரிக்கைக்கு சொல்லிடு. சரி, அப்டியே ப்ரீயா இருந்தா ப்ரியங்காவைப் போய்ப் பாரு. புள்ளைங்க ஸ்கூல்லருந்து இன்னும் வரிலியாம். என்னன்னு விசாரிச்சி வை.

மியூட்மோகன்: : ஓகே சார், மியாவ்

ஆ.ராசா: மிஸ்டர் மன்மோகன்,

மியூட்மோகன்:  யெஸ் ஸார். அந்த 2 ஜி ஊழல் பைலை  ஒளிச்சி வையின்னு சொன்னேனே செஞ்சியா?

மியூட்மோகன்:  இல்லை சார். மறந்திட்டேன்.

ஆ.ராசா: யோவ், ஒனக்கு மண்டைல டர்பன் தான் பெரிசா இருக்கு, அதுல மூளை கொஞ்சம் கூட இல்லியே!! நான் கலைஞ்சர் ட்ட சொன்னா என்ன நடக்கும்னு தெரியுமா?

மியூட்மோகன்:  சாரி சார், மியாவ், நான் இப்பவே அந்த வேலையை பாத்திடறேன்.

ஆ.ராசா:  சரி சரி, இதுல அது பத்தி ஒரு அறிக்கை எழுதி வெச்சிருக்கேன். உன்னோட கையெழுத்து வாங்கி ஒனக்கு தெரிஞ்சி தான் எல்லாமே நடந்திருக்குன்னு எழுதிருக்கு.  சோனியாகிட்டயும் சொல்லிட்டேன். நாளைக்கு பத்திரிக்கைல  அப்டியே குடுத்திரு.

மியூட்மோகன்:  அப்படியா?  இருந்தாலும்...சார், அது வந்து..

ஆ.ராசா: என்னய்யா யோசிக்கிற, சோனியாட்ட சொன்னா என்ன நடக்கும்னு தெரியுமா, பதவி வேணுமா வேணாமா?

மியூட்மோகன்:  வேணும் வேணும்,

ஆ.ராசா: ம்ம் அப்ப்போ சொன்னதை செய், போ!! அஹ்.. ஸ்ஸப்பா,

மியூட்மோகன்: என்ன சார்,

ஆ.ராசா: என் பேப்பர்ஸெல்லாம் கீழ விழுந்திடிச்சி,

மியூட்மோகன்:  இதோ நான் குனிஞ்சி எடுத்து தர்றேன் சார்...

ஆ.ராசா: ம்ம் குட் பாய். கலைஞ்சர் ட்ட உன்னைப் பத்தி நல்லவிதமாச் சொல்றேன்...வர்ட்டா.

ஆ.ராசா: ஓகெ மியாவ்!

Saturday, April 19, 2014

கோவில்களைக் கொள்ளையடிக்கும் தமிழக அரசு!


சென்னை அஷோக்நகர் ஆஞ்சநேயர் கோவிலை அபகரித்துக்குள்ளும் வகையில் அறநிலையாதுறையிலிருந்து கடிதம் வந்திருப்பதாக கேள்விப்படுகிறோம். 

இருக்கும் தெருமுனை கோவிலிலிருந்து தமிழகத்தில் உள்ள எல்லா கோவில்களையும் அரசுடைமை ஆக்க துடியாய் துடிக்கிறார் ஜெயலலிதா. அறநிலையத்துறை என்கிற பெயரில் தமிழகத்தில் யாரும் விரும்பி தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு கோவில் கட்டி வழிபாடு செய்யக்கூடாது என்கிற நிலை உண்டாகிவிட்டது. வீட்டுச் சுவற்றில் பிள்ளையார் பதித்து வழிபட்டால் கூட அறநிலையத்துறை ஓடி வந்து வீட்டு மதில் சுவற்றை அரசுடைமை ஆக்கிவிடும் போல இருக்கிறது. ஜெயலலிதாவைப்  பொறுத்தவரை டாஸ்மாக் வருமானத்தையும் கோவில் வருமானத்தையும் ஒன்றாக நினைக்கிறார் போல. இரண்டிலும் மக்கள் கொடுக்கும் பணத்தை எடுத்து இலவசங்கள் கொடுத்து ஓட்டு வாங்க திட்டமிட்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. ஏன், கோடிகோடியாய் அரபுப்பண்ம் புழங்கும் மசூதிகளையும் கோடிகோடியாய் டாலர் புழங்கும் சர்ச்சுகளையும் அரசுடைமை ஆக்கினாலும் இலவச மிக்ஸி க்ரைன்டர் பெண்களுக்கான நாப்கின் எல்லாம் கொடுக்கலாமே.

கருனாநிதி கூட செயத் தயங்கும் அத்துனை ஹிந்து விரோத காரியங்களையும் தெய்வபக்தி உள்ள ஹிந்து அபிமானி என்கிற போர்வையில் ஜெயலலிதா செய்துவருகிறார் என்பதே காலப்போக்கில் வெளிப்பட்டு வருகிறாது.

அதிமுக வையும் திமுக வையும் ஹிந்துக்கள் நிரந்தரமாக ஒதுக்கினால் ஒழிய இனி ஹிந்துக்களுக்கு தமிழகத்தில் வாழ்வில்லை! இதுவே தருணம் நண்பர்களே, பாடம் புகட்டுங்கள் இரு திராவிஷ கட்சிகளுக்கும்!

Sunday, April 13, 2014

தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!




Monday, April 7, 2014

இந்தியாவுக்கு வாக்களிப்பீர் - தொடர்ச்சி - 2

- ச. திருமலை

அருமை நண்பர் ச திருமலை தனது முகநூல் பக்கத்தில் எழுதி பகிர்ந்து கொண்டது. நண்பருகளுக்காக இங்கேயும்..! - Thirumalai Sa

மோடியின் மீது பல்வேறு குற்றசாட்டுகள் வைக்கப் படுகின்றன. ஒரு ஜனநாயக நாட்டில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் மீது அவதூறுகளும், குற்றசாட்டுக்களும் எழுவது சகஜமான ஒன்றே. மோடியின் மீதான விமர்சனங்கள் மென்மையானது முதல் கடுமையானவை வரை பல விதமாகவும் வீசப் படுகின்றன. அவற்றில் நியாயமான குற்றசாட்டுக்களோ சந்தேகங்களோ இருந்தால் அவற்றிற்கான பதில்களை விளக்கிச் சொல்லலாம். அதைத்தான் மது கிஷ்வர், மீடியா க்ரூக்ஸ், குருபிரசாத், ஒத்திசைவு ராமசாமி போன்றோர் ஆக்கபூர்வமாகச் செய்து வருகிறார்கள். 

மோடியின் வெற்றியை எப்படியும் தவிர்க்க முடியாது என்ற நிலையில் முடிந்த வரை அவர் மீது நம்பிக்கையின்மையை எறிந்து பார்க்கலாம் ஒட்டியது ஒட்டட்டும் என்று அவர் மீது தொடர்ந்து பல விமர்சனங்கள் வைக்கப் படுகின்றன. அவர் மீது எந்தவிதமான ஊழல் குற்றசாட்டுகளையும் அவர்களினால் வைக்க முடியவில்லை. அவர் மீது எந்தவிதமான கிரிமினல் குற்றசாட்டுக்களையும் இந்தியாவின் அனைத்து விதமான கோர்ட்டுகளையும் பயன் படுத்தியும் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே அவர் மீது வாக்காளர்களிடத்து அவநம்பிக்கையையாவது விதைக்க முடியுமா அதன் மூலமாக அவருக்குப் பெருகி வரும் ஆதரவுகளைக் குறைக்க முடியுமா என்று சூடோ செக்குலார் ஊடகங்களும் மோடி வெறுப்பு கட்டுரையாளர்களும் அரசியல்வாதிகளும் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களின் எரிச்சலும், கோபமும், வெறுப்பும், ஆதங்கமும்,படபடப்பும், பதட்டமும், கையாலாகதத்தன்மையும் அவர்களின் கட்டுரைகளின் மூலமாகவும் பேச்சுக்கள் மூலமாகவும் பெரிதும் அப்பட்டமாக வெளிப்படுகின்றன. 

அப்படி மோடி மீதான அவநம்பிக்கையை மக்கள் மனதில் உருவாக்கும் ஒரு உத்திகளில் ஒன்று மோடி குஜராத் மாநிலத்தை மட்டுமே ஆட்சி செய்து வருபவர் ஆகவே அவரால் சிக்கலான, கஷ்டமான, சோதனையான ஒட்டு மொத்த இந்தியாவை நிர்வாகம் செய்ய முடியாது என்பது. இதையே பல விதமாகவும் மீண்டும் மீண்டும் எழுதி வருகிறார்கள். மோடி குஜராத் என்ற ஒரு மாநிலத்தை நிர்வாகம் செய்திருக்கலாம் ஆனால் அது மட்டுமே இந்தியாவின் பிரதமராகும் தகுதியை அளித்து விடாது. அது மட்டுமே மாபெரும் இந்தியாவை ஆளும் தகுதியை அவருக்கு அளித்து விடாது ஆகவே அவர் இந்தியாவின் பிரதமர் ஆக அருகதை அற்றவர். ஆகவே மக்களே அவருக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்பதே இவர்கள் சொல்ல வரும் செய்தியின் சாரமாகும். இதை நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு விதங்களில் மீண்டும் மீண்டும் எழுதியும் சொல்லியும் ஒரு விஷப் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த விமர்சனத்தில் உள்ள அபத்தத்தை முதலில் காணலாம்

மோடி குஜராத்தை நான்காவது முறையாக ஆட்சி செய்து வருகிறார். அவர் குஜராத்தை அமெரிக்கா போலவோ வளர்ந்த வளமான ஐரோப்பா நாடுகள் போலவோ இன்னும் முழுமையாக மாற்றி விடவில்லை. அதற்கு முன்பாக 50 ஆண்டுகள் மோசமான ஆட்சியை அவரால் வெறும் 15 ஆண்டுகளில் மாற்றி விடவும் முடியாது. அதற்கான மந்திரக் கோல் எதுவும் அவரிடம் கிடையாது. இருந்தாலும் எதிர்காலம் குறித்த தீர்க்கமான பார்வையுடனும் நேர்மையான கடுமையான உழைப்பினாலும் நிர்வாகத் திறனாலும் ஆட்சி நிர்வாகத்தைப் பெரும் அளவு கணணிப் படுத்துவதினால் ஊழலை குறைக்கும் விதமாகவும் ஆட்சி செய்து வருகிறார். அவரது நிர்வாகத்தினால் மின்சாரம், நீர் மேலாண்மை, விவசாயம் போன்ற கட்டுமானத் திட்டங்கள் பெரிதும் வளர்ச்சி அடைந்து அதற்கான விளைவுகளை அளிக்க ஆரம்பித்துள்ளன. ஐ நா சபை முதல் மத்திய அரசாங்கம் வரை அவரது நிர்வாகத்தைப் பாராட்டி ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக குஜராத் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து அவரைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருகிறார்கள். இத்தகைய சூழலில் அவர் மீது மாநில அனுபவம் மட்டுமே உள்ளவர் மத்திய அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற அவநம்பிக்கை விதைக்கப் பட்டு வருகின்றன.

மோடியை விட்டு விடலாம். ஒரு கார்ப்போரெட் நிர்வாகம் தனது நிர்வாக மேலதிகாரிகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கும்? ஒரு ஐ டி நிறுவனத்தையே எடுத்துக் கொள்வோம். ஒரு சின்ன ப்ராஜக்ட்டை மேனேஜ் செய்த மேனேஜரை அதை விட அடுத்து பெரிய ப்ராஜக்ட்டை நிர்வாகிக்க தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு விற்பனை நிறுவனத்தில் ஒரு மாவட்டத்தில் விற்பனையை மேலாண்மை செய்த அதிகாரியை மாநில அளவின் அதிகாரியாக தேர்ந்தெடுக்க்கிறார்கள். மாநில அனுபவம் உடையவர்களை அகில இந்தியாவுக்கோ அல்லது இந்தியாவின் பல்வேறு ரீஜியன்களுக்கோ அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தியா முழுவதும் நிர்வாகிக்கும் ஒரு பொறுப்புக்கு ஏற்கனவே இந்தியா முழுதும் நிர்வாகித்த அதிகாரிதான் வேண்டும் என்று எந்த நிறுவனமும் பிடிவாதம் பிடிப்பதில்லை. முன் அனுபவம் அதை விடச் சிறிய துறையிலோ, பகுதியிலோ இருந்தாலும் அதன் அடிப்படையிலேயே அதை விடப் பெரிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதுவே எந்தவொரு தனியார் நிறுவனங்களிலும் தகுதியுள்ள நபர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை. 

இந்திய அரசு பதவிகளை எடுத்துக் கொண்டாலும் சரி மாவட்ட நீதிபதிகளாக இருந்தவர்களை மாநில நீதிபதிகளாக்குகிறார்கள். மாநில நீதிபதிகளாக இருந்தவர்களைத்தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக்குகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதியை நியமிக்கும் பொழுது நீ ஏற்கனவே இந்தியாவின் தலமை நீதிபதியாக இருந்திருக்க வேண்டும் என்று எவரும் சொல்வதில்லை. நீ மாநில அளவில் ஹைக் கோர்ட்டுகளில்தான் நீதிபதியாக இருந்துள்ளாய் ஆகவே உன்னை சுப்ரீம் கோர்ட்டுக்கு அமர்த்த முடியாது என்று எவரையும் மறுப்பதில்லை

மாவட்ட அளவில் டி ஆர் ஓ வாக கலெக்டராக இருந்த ஐ ஏ எஸ் அதிகாரியைத்தான் மாநில அளவில் செயலராக எடுக்கிறார்கள். மாநில அனுபவும் உள்ளவரைத்தான் இந்தியா அளவில் பெரிய பொறுப்புக்களுக்கு நியமிக்கிறார்கள். இதுதான் தனியார் நிறுவனம் ஆனாலும் சரி இந்திய பொதுத் துறைகள் ஆனாலும் சரி இந்திய அரசாங்கம் ஆனாலும் சரி ஏன் உலக அளவிலும் சரி இதுதான் நடைமுறை.

ஆனால் மோடி என்று வரும் பொழுது மட்டும் இவர்கள் வைக்கும் வாதம் என்ன? அவருக்கு மாநில அனுபவம் மட்டுமே உள்ளது ஆகவே அவரை மத்தியில் பிரதமராக்க முடியாது என்று. சரி அந்த அபத்தமான வாதத்தை ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொண்டாலும் கூட அவருக்கு மாற்றாக இந்த அறிவு ஜீவிகள் வைப்பது எவரை? ராகுல் காந்தியையும், சோனியாவையும், சீத்தாராம் யெச்சூரிகளையும், கேஜ்ரிவால்களையும் தானே? ஏற்கனவே பிரதமராக இருந்த அனுபவம் உள்ளவர்தான் வேண்டும் என்றால் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்றால் அவர்கள் முன்னால் உள்ள தேர்வு என்ன? தேவகவுடாவும். வாஜ்பாயியும், குல்ஜாரிலால் நந்தாவும் தானே? மற்றவர்கள் உயிருடன் இல்லை. இதில் வாஜ்பாயியும் நந்தாவும் முதுமை அடைந்தவர்கள் சுயநினைவில் இல்லாதவர்கள். தேவகவுடா மட்டுமே பிரதமராக இருந்த அனுபவம் உடைய ஒரெ தகுதியுள்ள நபர். அவைத்தான் இந்த மோடி எதிர்ப்பாளர்கள் முன்னிறுத்துகிறார்களா என்ன? 

ஆக மோடி அளவு கூட தகுதியும் நிர்வாக அனுபவமும் இல்லாத ராகுல். சோனியா, கரத், யெச்சூரி போன்றவர்களை ஆதரிக்கும் இதே அறிவாளிகள் அவர்களை விட தனது திறமையையும் நிர்வாகத் திறனையும் பல முறை நீரூபித்து பல விருதுகளைப் பெற்ற மோடியை மூர்க்கமாக நிராகரிக்கிறார்கள். ஏன்? என்ன காரணம்? அவர் ஆட்சிக்கு வந்து விட்டால் குஜராத் போலவே இந்தியாவும் முன்னேறி நகர ஆரம்பித்து விடும். அப்படி இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்ல ஆரம்பித்து விட்டால் மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது, ஊழல்கள் செய்ய முடியாது, நாட்டை விற்க முடியாது, பிற அந்நிய மதங்களை வளர்க்க முடியாது. ஏழ்மையை வைத்துப் பிழைப்பு நடத்த முடியாது. இந்து மதத்தை நம்பும் ஒருவர் அதை ஏற்றுக் கொள்ளும் ஒருவர் பிரதமர் ஆவதைக் கனவிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே அனைத்து விதமான மோடி எதிர்ப்பாளர்களும் இவை போன்ற சொத்தைக் காரணங்களை முன் வைத்து மோடியை எதிர்த்து அவர் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட பாடு படுகிறார்கள். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று திரிகிறார்கள். 

மோடியினால் சிக்கலான இந்தியாவை நிர்வாகிக்க முடியாது என்பது மற்றொரு வாதம். அதுவும் இதைப் போலவே அபத்தமான ஒரு வாதமே. ஆகவே அனைத்து விதங்களிலும் முன் அனுபவமும் திறமையும் நேர்மையும் உடைய ஒரு தகுதியுள்ள தலைவர் மோடி அவர் குஜராத் போலவே இந்தியாவையும் நிர்வாகிப்பார் என்ற நம்பிக்கையை மக்கள் வைத்து அவரை ஆதரிக்க வேண்டும்.

செய்வார்களா? செய்வார்களா?


Saturday, April 5, 2014

இந்தியாவுக்கு வாக்களிப்பீர்!


- ச திருமலை



அருமை நண்பர் ச திருமலை தனது முகநூல் பக்கத்தில் எழுதி பகிர்ந்து கொண்டது. நண்பருகளுக்காக இங்கேயும்..! - Thirumalai Sa

நரேந்திர மோதியின் தலமையிலான பி ஜே பி கட்சி ஓரளவுக்கு போதுமான இடங்களைப் பெற்று சில கூட்டணிகள் மூலமாகவோ அல்லது தனியாகவோ வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

இந்தக் கருத்துக் கணிப்புகளை அப்படியே நம்ப வேண்டியதோ எடுத்துக் கொள்ள வேண்டியதோ அவசியம் கிடையாது. இருந்தாலும் அவை அனைத்துமே ஒரே விதமான கணிப்புகளை முன் வைக்கின்றன. இவற்றை ஒரு விதமான அறிகுறியாக கருதிக் கொண்டு மோதிக்குச் செல்லும் இடமில்லமெல்லாம் வரலாறு காணாத கூட்டம் கூடுவதையும் மக்களிடம் பரவலாக இருக்கும் எதிர்பாப்புக்களையும் சேர்த்து நோக்கும் பொழுது இந்தக் கணிப்புகள் அனேகமாக சாத்தியமாகி விடும் என்று நம்புவதற்கான முகாந்திரங்கள் உள்ளன.

மோதியின் வெற்றி அனேகமாக உறுதி செய்யப் பட்டு விட்டாலும் கூட இரண்டு பெரும் அச்சுறுத்தல்களை நம்மால் ஒதுக்கி விட முடியாது. அவை இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் அவர் உயிருக்கு இருக்கும் அபாயம். இரண்டாவது எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின். 

இந்த எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்களில் ரிமோட்டாக ஊடுருவி அதில் இடப் பட்டுள்ள ஓட்டுக்களை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மாற்றி விடலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இதை இந்திய கோர்ட்டுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த சூழ்நிலையில் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கின் பேரில் ஓட்டுப் பதியும் பொழுது ஒரு அச்சிட்ட ரசீதையும் அளிக்கும் விதமாக அந்த இயந்திரத்தில் மாறுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் வழக்கம் போலவே இந்தியக் கோர்ட்டுகளின் வழ வழா கொழ கொழா தீர்ப்புகளைப் போலவே அதை இந்தத் தேர்தலுக்குள்ளாகவே செய்ய வேண்டும் என்று உறுதியாக எந்தத் தீர்ப்பையும் வழங்காதபடியால் அதையே சாக்காகக் கொண்டு காங்கிரஸ் அரசாங்கம் ஓட்டுப் பெட்டியில் மாற்றம் செய்வதற்கான நிதியை ஒதுக்காமல் இருந்து கொண்டது. அதனால் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் அதே சந்தேகத்துக்குரிய இயந்திரங்களே மீண்டும் பயன் படுத்தப் படப் போகின்றன. அந்த மெஷின்களில் சில தொகுதிகளில் மாறுதல் செய்வதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடித்து விடக் கூடிய அபாயகரமான சூழ்நிலையும் நிலவி வருகிறது. அப்படி நடந்து விடாது என்பதை எவரும் உறுதியாகச் சொல்லி விட முடியாது. 

மோடியின் வெற்றியை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று காங்கிரஸ் கம்னியுஸ்டு கட்சிகள் முதல் வெளிநாடுகள் வரை முயற்சி செய்து வருகின்றன. அவரை கொலை செய்தாவது அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கரண் தப்பார், ஞாநி சங்கரன் போன்ற பத்திரிகையாளர் முதல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வரை ஒரே குரலில் சொல்கிறார்கள். இதை இந்தியாவின் அறிவு ஜீவிகளும் முற்போக்குவாதிகளும் மவுனமாக ஆதரித்தும் வருகிறார்கள். இப்படியாகப் பட்ட ஒரு சூழலில் வோட்டிங் மெஷின்கள் மூலமாக இந்தத் தேர்தலின் முடிவுகள் மாற்றப் படுவதற்கும் பெருத்த வாய்ப்புகள் உள்ளன.

இந்த இரு அச்சுறுத்தல்களையும் மீறி இந்தியாவில் உண்மையான தேர்தல் நடந்து ஆண்டவன் அருளால் மோடியின் உயிருக்கு ஆபத்து ஏதும் நேராமல் இருக்கும் பட்சத்தில் பி ஜே பி மத்தியில் மோடியின் தலைமையில் ஆட்சிக்கு வருவதை எவரும் தடுத்து விட முடியாது.

காங்கிரஸ், கம்னிய்ஸ்டு, இஸ்லாமிய பயங்கரவாதிகள், மதமாற்ற சக்திகள், பாக்கிஸ்தான், சீனா, இந்திய மீடியாக்கள், முற்போக்கு சூடோ செக்குலார் அறிவு ஜீவிகள் போன்ற அனைத்து விதமான இந்திய விரோத நாசகார சக்திகளும் ஒற்றுமையாக எப்பாடு பட்டாவது மோடியை நிறுத்தி விட வேண்டும் என்று முயன்று வருகிறார்கள். அதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் இந்தியாவின் மக்கள் செய்யக் கூடிய காரியம் ஒன்றே ஒன்றுதான். அனைவரும் ஜாதி மத வேறுபாடுகளை மறந்து நாட்டின் முன்னேற்றத்தில் மட்டுமே அக்கறை கொண்டு இத்தாலியக் கொள்ளைக் கும்பலின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க மோடி தலமையிலான பி ஜே பி க்கு தாமரைச் சின்னத்தில் வாக்களிப்பது மட்டுமே இந்திய விரோதிகளின் சதியை முறியடிக்கும். அதை இந்திய வாக்காளர்கள் செய்வார்களா? செய்வார்களா?

இந்தத் தொடரில் நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன் என்பதைச் சொல்லவிருக்கிறேன். அதற்கு முன்னால் நரேந்திர மோடி மீது அளவற்ற காழ்ப்புடனும் ஆழ்ந்த வெறுப்புடனும் இடதுசாரி அறிவு ஜீவிகளினாலும், மீடியாக்களீனாலும், இந்திய தேச விரோதிகளினாலும் வைக்கப் படும் சில விமர்சனங்களையும் விரிவாக அலசவிருக்கிறேன். நேரம் இருக்கும் பொழுதெல்லாம் தொடர்வேன். 

தொடரும்.......