Thursday, November 15, 2012

தீமை விளைவிக்காத செயல்களைச் செய்வாய்!




வேதங்களைக் கற்பித்த பிறகு ஆச்சாரியர் மாணவர்களுக்குச் சில அறநெறிகளைப் போதிக்கிறார்:

உண்மை பேசுங்கள். தர்ம வழியில் செல்லுங்கள். கல்வியைக் கைவிடாதீர்கள். ஆச்சாரியருக்கு விருப்பமான செல்வத்தைக் கொடுத்து அவரை மன நிறைவு பெறச் செய்யுங்கள். அந்ததிச் சங்கிலியை வெட்டாதீர்கள்.

உண்மையிலிருந்து விலகாதீர்கள். தர்மத்திலிருந்து விலகாதீர்கள். நன்மை தருபவற்றிலிருந்து விலகாதீர்கள்.

கற்பதிலிருந்தும் கற்றுக் கொடுப்பதிலிருந்தும் விலகாதீர்கள். தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகாதீர்கள்.

தாயைத் தெய்வமாகப் போற்றுங்கள். தந்தையைத் தெய்வமாகப் போற்றுங்கள். ஆசிரியரைத் தெய்வமாகப் போற்றுங்கள். விருந்தினரைத் தெய்வமாகப் போற்றுங்கள்.

தீமை விளைவிக்காத செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக் கூடாது.

நற்பண்புகளை வளர்க்கின்ற செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக் கூடாது.

நம்மைவிட உயர்ந்தவர்களோ தூயவர்களோ வரும்போது எழுந்து அவர்கள் அமர இருக்கை அளித்து அவர்களின் களைப்பைப் போக்கி உபசரிக்க வேண்டும்.

நம்பிக்கை மிக்க ஈடுபாட்டுடன் தானம் செய்ய வேண்டும். அலட்சியமான மனநிலையோடு தானம் செய்யக் கூடாது. வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்ய வேண்டும். பணிவுடனும் மரியாதையுடனும் தகுந்த அறிவுடனும் தானம் செய்ய வேண்டும்.

உங்கள் கடமை என்ன, குறிப்பிட்ட சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பவை பற்றி சந்தேகம் எழுந்தால் சான்றோர்களைப் பின்பற்ற வேண்டும். ஆழ்ந்து சிந்திக்கின்ற மன ஒருமைப்பாடு மிக்க , சுதந்திரமான கோனல் புத்தி இல்லாத, நல்வழியில் நடக்கின்ற அந்தச் சான்றோர்கள் அந்த விஷயங்களில் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படி நீங்களும் செயல்படுங்கள்.

- தைத்ரீய உபநிஷத்து


1 comment:

premprakash said...

மிக்க நன்றி நண்பரே. உங்கள் சேவைக்கு நான் என்ன கைமாறு செய்வேனோ ? வாழ்க வளமுடன். தொடரட்டும் உங்கள் எழுத்து பணி.