




மார்ச் 06,2010,00:00 IST
சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள, "விக்ரம சம்வத்ஸரம்' பஞ்சாங்கம் மிகவும் நுட்பம் உடையதாக, மிகச் சரியாக இருப்பதாக ஜோதிட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகை, மார்ச் 1ம் தேதி வந்துள்ளது. இதை வைத்து வட மாநிலங்களில் அனுசரிக்கப்படும் "விக்ரம சம்வத்சரம்' எனும் பஞ்சாங்கம் மிகச் சரியாகக் கணிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி ஜோதிட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்தியப் பருவங்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டும், மாதங்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டும், நாட்கள் சூரிய சந்திரர்களை அடிப்படையாகக் கொண்டும் கணிக்கப்படுகின்றன.பொதுவாக இந்தியப் பஞ்சாங்கங்களின் படி, சந்திரனை அடிப்படையாகக் கொண்டு 12 மாதங்கள் கணிக்கப்படுகின்றன. ஒரு மாதம் என்பது சந்திரனின் இயக்கப்படி 29 நாட்கள், 12 மணிநேரம், 44 நிமிடங்கள், 3 வினாடிகள் கொண்டது. ஆக, இந்தக் கணிப்பின்படி, ஒரு ஆண்டு என்பது, 354 நாட்கள், 8 மணிநேரம், 48 நிமிடங்கள், 36 வினாடிகள் கொண்டதாக இருக்கும்.
____
இப்படி நிரூபணங்களுடன் எடுத்துக்கூறினால் கூட நம்மவர்களின் போலி பகுத்தறிவு நமது பாரம்பரிய அறிவை ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை என்பது வெட்க்கக்கேடு. இதாவது பரவாயில்லை, புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்ததே ஐசக் நியூட்டன் தான் என்று வெட்கமில்லாமல் பாடங்களில் சொல்லிக்கொடுக்கச் செய்கிறார்கள் இந்த போலி பகுத்தறிவு வாதிகள். நம்முடைய ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய அறிவைப் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்கும் போலி பகுத்தறிவு வாதிகள் "ஐசக் நியூட்டனுக்கு முன்னாடி யாருமே புவியின் ஈர்ப்பு விசைக்கு ஆளானதே கிடையாதா அல்லது அதை உணர்ந்திருக்கவே முடியாதா?" என்று ஏன் கேட்கவில்லை.
நியூட்டன் "பழம் ஏன் கீழே விழுகிறது?" கேள்வி கேட்டுக்கொண்டிருந்த வருடம் 1666. ஆனால் கி பி 1000 வது வருடங்களிலேயே வானுயர கோபுரம் கட்டினானே ராஜராஜ சோழன் அவனுக்கு இந்த புவி ஈர்ப்பு விசை பற்றி அறிவில்லாமல் தான் இருந்ததா? மிகப்பெறிய பாறைகளைச் செதுக்கி வானுயர சாரங்களை அமைத்து ஆயிரக்கணக்கான யானைகளை வைத்து உயரே கொண்டு போய் கோபுரங்களைக் கட்டிய சோழர்காலத்து கட்டிடக்கலை வல்லுனர்கள் புவியீர்ப்பு விசையை உணராமல் தான் இருந்திருப்பரா? அந்த அறிவே இல்லாமல் தான் வானுயர்ந்த கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டனவா?
மேலே கொண்டு போக வேண்டிய ஒரு பாறையின் கணம் என்ன?, புவியீர்ப்பு விசைக்கு எதிராக அந்தப் பாறையை கொண்டு போக எதிர் விசை எவ்வளவு பயன் படுத்த வேண்டும்?, புவியீர்ப்பு விசைக்கு எதிரான விசையைக் கையாள எளிய வழி என்ன? என்பதை எல்லாம் அறிவுடன் யோசித்து தான் மர உருளைகளைக் கொண்ட சாரங்களைக் கட்டி, பெரிய யானைகளைக் கொண்டு இழுத்துச் செல்ல வைத்து கற்களை அடுக்கி கோபுரம் அமைத்தனர்! ஆனால் நம் பாட புத்தகத்தில் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்ததே ஐசக் நியூட்டன் தான் என்று சொல்லித் தருவார்கள். வெள்ளைக்காரன் சொன்னான் என்ற ஒரே காரணத்திற்காக நம்மூர் போலி பகுத்தறிவு வாதிகள் எதிர்க்கேள்விகள் கேட்காமல் ஆமாம் சாமியும் போடுவார்கள். நம் பிள்ளைகளிடமும் வெள்ளையன் தான் அறிவாளி, நீ ஒரு மகா மக்கு என்ற ரேஞ்ச்சுக்கு பாடம் சொல்லித்தருவார்கள்! என்றைக்கு நம் பாரம்பரிய அறிவை மதிக்கக் கற்றுக் கொள்கிறோமே அன்றைக்குத்தான் நிஜமான சுதந்திர பாரதம் நமக்குக் கிடைக்கப் போகிறது என்றால் மிகையாகாது!
சிரியுங்கள்! ஆங்கிலத் தேதிப்படி பிறந்தநாள் கொண்டாடிய தமிழினத் தலைவர்!

வழக்கம் போல நான் சொல்வதைச் சொல்லி வைக்கிறேன், -
"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்."