நிதீஷ் குமார்
பீகார் மாநில முதல்வரான நிதீஷ் குமார் பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகிறார். இதில் விசேஷம் என்ன என்று தோன்றுகிறதா?
தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலையில் ரௌடிகளின் ராஜ்ஜியமாகவும் அராஜகங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த பீகாரில் ரௌடிகளை கட்டுப்படுத்தி அமைதியை உண்டு பண்ணி மக்களுக்கு நிம்மதி கொடுத்திருக்கிறார்.
மருத்துவர்கள் வராமலும் குப்பை கூளமாகவும் மட்டுமே இருந்த அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி பொதுமக்கள் அச்சமின்றி வந்து சிகிச்சை பெறுமாறு மேம்பாடடையச் செய்திருக்கிறார்.
காவல் துறை மற்றும் அரசு நிர்வாகங்களை மேம்மடுத்தி மக்கள் பணிகளை தொய்வின்றி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சியை 3.5 சதவீதத்திலிருந்து 11.35 சதவீதம் வரை அவரது ஆட்சி காலத்தில் உயர்த்தி இருக்கிறார்.
இப்படி அவரது மாநில முன்னேற்றம் சார்ந்த பல செய்திகள் வெளிவருகின்றன. எனவே மக்கள் ஜாதி மத பேதமில்லாமல் உண்மையான உழைப்பிற்கு வெற்றி வாய்ப்பை வழங்கியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆக மக்கள் வாய்ஜால அரசியலிலிருந்து விடுபட்டு நிஜமாக நாட்டிற்காக உழைக்கும் அரசியல் வாதிகளை ஆதரிக்கத் துவங்கி விட்டார்கள் என்று தெரிகிறது. இது ஒரு நல்ல முன் மாதிரி. இது மாதிரி பல மாதிரிகள் பல மாநிலங்களிலும் உண்டானால் அது நாட்டிற்கு நல்லது எனலாம்.
தமிழ் நாட்டில் இது போல நடப்பது சந்தேகமே! இங்கே மற்ற மாநிலங்களை விட பார்ப்பனன், ஆரியர்-திராவிடர், மனு தர்மம் என்றெல்லாம் உளரிக்கொண்டும் ஜாதிப் பிரிவினை பேசியும் மக்களை ஏமாற்றுபவர்களை நல்லவர்கள் என நம்பி புத்தி மழுங்கி கிடக்கும் கூட்டம் அதிகம்! அதையும் மீறி தமிழகத்தில் மாற்றம் வந்தால் அதே கூட்டம் குறுகிய காலத்திலேயே மீண்டும் அவர்களையும் மாற்றி விடும்.
எப்படியோ, குஜராத் மற்றும் பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகளை கவனிக்கும் மற்ற அரசியல் வாதிகள் இனி நிஜமாகவே மக்களுக்கு பயனுறும் வகையில் ஆட்சி செய்தால் தான் நாளை நமக்கும் வெற்றி கிடைக்கும் என்று எண்ணத் துவங்கினால் அதுவே நல்ல மாற்றத்திற்கு வழிவகுக்கும்!
இது ஜனநாகத்தின் மீது நம்பிக்கை பூக்கும் தருணம் - இது நிலைக்கட்டும் என பிரார்திப்போம்!
.
