Monday, February 28, 2011

யார் குரு?


"குரு முகமாக கற்க சொன்னிங்க என் குருவை எவ்வாறு நான் தரிந்துகொள்வது தயவுசெய்து எனக்கு சொல்லுங்க!" என்று நண்பர் அகோரி கேட்டிருந்தார்!


நண்பரே எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்!


குருவின் மூலமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பெரியோர்களது அறிவுரை. ஆனால் தற்காலத்தில் ஆன்மீக தேடலுக்கு விடை கொடுக்கக்கூடிய குரு யார் என்பதை கண்டுபிடிப்பது கஷ்டமானகாரியம். குரு என்பவர் யார் என்பதிலேயே நமக்கு ஒரு தெளிவு இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.


யார் குரு?


தம்மைத்தாமே யோகி என்று கூறிக்கொண்டு கேள்விகளுக்கு பதிலளிப்பவர்கள் குருவாகிவிடுவார்களா?


தம்மைத்தாமே பரமஹம்சர் என்று கூறிக்கொண்டு ஆன்மீக விளக்கங்களைக் கூறி பிரபலமடைபவர்கள் குருவாகிவிடுவார்களா? அல்லது காவியும் கமண்டலமும் கொண்டவர்களும், ஜடாமுடிக்காரர்களும் குருவா?


வேதங்கள், சாஸ்திரங்கள் என்று எல்லாவற்றையும் படித்துவிட்டு கேட்கும்போதெல்லாம் விளக்கம் சொல்லி புரியவைப்பவரை குருவாக ஏற்றுக்கொள்ளலாமா?


ஆனால் படித்தவைகளுக்கு விளக்கம் சொல்வது தான் ஒரு குருவாக இருக்கவேண்டியவரின் தகுதி என்றால் அதற்கு கற்றரிந்த பேராசிரியர் போதுமே! அவரை ஆன்மீக குரு என எப்படிக் கொள்ளலாம்?


மூச்சுப் பயிற்சி, யோகாசனம் சொல்லித்தருகிறேன். உங்கள் மன அமைதிக்கு வழி கூறுகிறேன் என்று அழைத்து உடலாசனங்களைச் சொல்லித்தருபவரை குருவாக ஏற்றுக்கொள்ளலாமா?


மூச்சுப் பயிற்சி, யோககலைகளில் சிறந்து விளங்கி அதைச் சொல்லித்தரும் தகுதியைக் கொண்டவரை குருவாக ஏற்றுக்கொள்ளலாம் எனில் அதற்கு ஒரு உடற்பயிற்சியாளர் போதுமே! அவரை ஆன்மீக குரு என எப்படிக் கொள்ளலாம்?


ஆனால் இவை யாவும் ஆன்மீகத்திற்கான படிக்கட்டுகளே! ஆன்மீக சாதகனுக்கான பாடங்களே! சாதகமும் தேடலும் நமக்குள்ளே நடக்கவேண்டும்! அதற்கு இவைகள் உதவும். 


அக்காலத்தில் குரு எனப்படுபவர்கள் சாதகங்கள் பல செய்து தவம் புரிந்து 
தான் உணர்ந்த ஆன்மீக அனுபவங்களை அவ்வழியே கற்றுத்தந்து ஆன்மீக மார்கத்திற்கு சிறப்பாக வழிகாட்டுவார்கள் எனப்படித்திருக்கிறோம். அனுபவத்தை அப்படியே பகிர்ந்து கொள்ளுதல் சிறப்பானதாகவும் நிதர்சனத்தை உணர்த்துவதாகவும் உண்மையை மெய்வழியில் விளக்குவதாகவும் இருக்கும். பரம்பரையாக இதைச் செய்தவர்களும் இருக்கிறார்கள்.


ஆனால் இக்காலத்தில் படித்த விஷயங்களை கதாபிரசங்கம் மட்டுமே செய்துவிட்டு தன்னைத் தானே யோகி எனவும், பரமஹம்சர் எனவும், குருஜி எனவும் அழைத்துக்கொள்பவர்கள் அதிகரித்திருப்பதால் சாதகத்தின் மூலமாக கற்றுணர்ந்து அதை அப்படியே பயிற்சியாக கொடுக்கும் குரு யாரென்பது தெரியாமல் போய்விடுகிறது.


ஆக, சாதகம் செய்த குருவும் அரிது, அவர் வழியே சாதகம் செய்து வாழ்கை ஓட்டத்திலிருந்து விலகிப் போவது நமக்கும் அரிது. ஆக நமக்கு வாய்த்தது கர்மயோகம் தான்! கீதையைப் படியுங்கள்!


முதலில் ஒரு அடிப்படையை இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டும்! இந்த பிரபஞ்சத்தில் நமக்கு துளியும் தெரிந்திராத ஒரு விஷயத்தை யாரும் நமக்குச் சொல்லித்தந்துவிடப்போவதில்லை!


பிறந்த குழந்தைக்கு பால் குடிக்கவும், வளர்ந்த மனிதனுக்கு காமுறவும் யாரும் கற்றுக்கொடுப்பதில்லல!


பிறப்பின் போதே அந்தராத்மாவில் படிந்திருக்கும் கற்பிதங்களை பிறந்தவுடன் நாம் செயல்படுத்திப் பார்க்கிறோம் அவ்வளவே!


ஆன்மீகமும் அப்படியே! நாம் சிலரிடம் கேள்வி கேட்டு அவர் நமக்கு விளக்கம் கொடுக்கும் போது "ஆங்! நானும் அப்படித்தான் நினைத்தேன்...!" என்போம். காரணம் அதுபற்றிய கேள்வியும் பதிலும் நம் மனதில் ஏற்கனவே பொதிந்திருக்கும். அதை வெளிக்கொண்டுவர ஒரு கருவி தேவைப்பட்டிருக்கும். நாம் யாரிடமிருந்து பதில் பெறுகிறோமோ அவரை கருவியாக்கிக் கொண்டோம், அவ்வளவுதான்!


குருவும் அப்படியே!


பாரதப்போரில் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்த கண்ணனும் அதை ஏற்றுக்கொண்ட அர்ஜுனனும் அவ்வழியே உரையாடியவர்கள் ஆவர். அர்ஜுனனின் மனதிலும் ஏற்கனவே ஆன்மீகமும் பிறவி மறுபிறவி பற்றிய சிந்தனைகளும் இருந்திருக்கும். போருக்கான அந்த இக்கட்டான சூழலில் அதனை அவன் உணர மறுக்கிறான். அதனால் மனம் பிறழ்கிறான். கண்ணன் உள்ளே புகுந்து ஏற்கனவே அர்ஜுனன் மனதில் பொதிந்திருக்கும் உணர்வைத் தூண்டிவிடுகிறான்.


"அர்ஜுனா! நானும் நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம்.  அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்."  


என்று அவன் அந்தராத்மாவின் ஒளியைத் தூண்டி விடுகிறார்.


இதனால் விழிப்படைந்த அர்ஜுனன் கண்ணன் வழியிலேயே போர் செய்து
வெற்றியும் பெருகிறான்.


ஆன்மாவைப்பற்றி அறிய முற்படுவதே ஆன்மீகம். அறிதல் என்றால் தெரிந்து கொள்ளுதல் அல்ல. உணர்தல். நமக்குள் ஆன்மா இருக்கிறது என்பதை உணர்வதும் நாம் ஆன்மா என்பதை உணர்வதும் ஆன்மீகம். அதை நமக்கு உணர்த்துபவர்கள் யாரோ அவரே குரு!


எப்படி உணர்வோம்!


ஆன்மா ஒரு மகாசக்தி! அதே நேரத்தில் மிகவும் நுண்ணிய பொருள்! அதன் அதிர்வுகளை நமக்கு உணர்த்துபவர் யாரோ அவரே குரு! ஒரு தொடுதல் மூலம், ஒரு பார்வை மூலம், ஒரு அருகாமையின் மூலம் நம்மிடம் யார் அதிர்வை உருவாக்குகிறாரோ, நம் உச்சந்தலையில் மொத்த சக்தியும் ஒன்று சேர மூச்சு முட்டி கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு நம் உடலில் அதிர்வை உண்டாக்கி நம் சக்தியை நமக்கே அடையாளப்படுத்திவிட்டு எதுவும் தெரியாத மாதிரி யாரால் அமர்ந்திருக்க முடியுமோ அவரே குரு!


அர்ஜுனனுக்கு கண்ணன் அவ்விதமே காட்சியளித்தான். தன் சுயரூபங்களின் மகாசக்தியை வெளிப்படுத்தி அர்ஜுனனின் அந்தராத்மாவை அதிரவைத்தான்.


அப்படி ஒரு குரு உங்களுக்கு கிடைத்துவிட்டால் அதன் பின் நீங்கள் இச்சமூகத்தில் சஞ்சரிக்க மாட்டீர்கள்!


அப்படி ஒருவர் உங்கள் ஆன்மாவை அதிரவைத்தாரென நீங்கள் உணர்ந்தால் எனக்கும் சொல்லுங்கள்! ஏனெனில் தேடுதல் எனக்கும் உண்டு!


அப்படி ஒரு குரு கிடைக்கும் வரை கீதையும், உபநிஷத்துமே உங்களது குருவாக இருக்கட்டும்!


உங்கள் சுய சோதனைகளும் சாதகங்களுமே உங்கள் குருவாக இருக்கட்டும்!


அதுவரை நீங்கள் மன அமைதியுடன் ஆன்மாவை உங்களுக்குள்ளே தேட துவங்குங்கள்!


உங்கள் தேடுதலே உங்களுக்குப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும்.


தேடுதல் தொடரட்டும்! 


தேடுதல் தொடரும் வரை எனக்கு கண்ணனே குரு! உங்களுக்கு?


.

Sunday, February 27, 2011

பிராமணர்கள் நிலை எதார்த்தத்தில்!




வீடியோவில் பேசப்படும் ஹிந்தி புரியாவிட்டாலும் அதன் உணர்ச்சியைப் புரிந்து கொண்டால் நீங்கள் மனிதர்களே!




ஆரியர் திராவிடர் என்னும் பிரிவினைவாத சூழ்ச்சி!

சுவாமி விவேகான‌ந்த‌ரின் பொன்மொழிக‌ள்!




நீங்கள் பார்க்கின்ற, உணர்கின்ற எல்லாம் அவரே. உங்களுள் தீமை இல்லாமல்
வெளியில் எப்படித் தீமையைப் பார்ப்பீர்கள்? உங்கள் இதயத்தில் எங்கேயோ
ஒரு மூலையில் திருடன் இல்லாவிட்டால் வெளியில் எப்படித் திருடனைப்
பார்ப்பீர்கள்? நீங்களே கொலைகாரர்களாக் இல்லாவிட்டால் வெளியில்
எப்படி கொலைகாரர்களைப் பார்ப்பீர்கள்? நல்லவர்களாக இருங்கள், 
உங்களுக்குத் தீமை மறைந்துவிடும்.

நீங்களே தூய்மை பொருந்தியவர்கள் என்பதை உளமாற நம்புங்கள்.
ஓ மாபெரும் வீரனே! கண்விழித்து எழுந்திரு. இந்த உறக்கம் உனக்குப் பொருந்தாது. விழித்துக்கொள். எழுந்து நில். 

துன்பப்படுபவனாகவும் பலவீனனாகவும் உன்னை நீ நினைக்காதே.
எல்லாம் வல்ல ஆற்றல் படைத்தவனே! விழித்தெழுந்தூன் இயல்பை நீ வெளிப்படுத்து. உன்னை நீயே பாவி என்று நினைப்பது உனக்குப் பொருந்தாது. உன்னை நீயே பலவீனன் என்று நீ கருதுவதும் உனக்குப் பொருந்தாது. 

மிருக பலத்தால் அல்லாமல், ஆன்மீக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப்போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக, அமைதி, அன்பு, ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும்.

எங்கும் எதிலும் இறைவனையே பார்க்க வேண்டும். அப்போது தான்
உலகை உண்மையாக அனுபவிக்க முடியும்.

புத்தனைப் போல் உணர்ச்சி கொண்டால் புத்தனாகவே ஆவாய். உணர்ச்சி தான் வாழ்க்கை, உயிர், வலிமை எல்லாம். உணர்வுப்பூர்வமான தேடல் அன்றி தீவிரமான அறிவு முயற்சியால் கடவுளை அடைய முடியாது.

புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்துவிட்டாள். தனது அரியணையிலே அவள் அமர்ந்திருக்கிறாள். உத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் த்கழ்கிறாள். 

இந்தக்காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போலத் தெளீவாக நான்
பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்.


- சுவாமி விவேகானந்தர்



.

Wednesday, February 23, 2011

கோத்ரா கொலையும் மௌனங்களும்!



குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தை பெரிது படுத்தி நரேந்திர மோடியை காய்ச்சி எடுக்கும் மீடியாக்கள், சோனியா மொய்னோ, சிதம்பரம் போன்றவர்கள் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் அந்தக் கொடூர கொலை பற்றி வாய் திறக்காமல் மௌனவிரதம் அனுஷ்டிக்கத் துவங்கி விட்டனர்.


செய்தி:


**********
ஆமதாபாத், பிப்.22: 2002-ம் ஆண்டு கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில், ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதியே என்று கூறிய ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றம், இதில்  தொடர்புடைய 31 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் பிப்ரவரி 25-ம் தேதி அறிவிக்கப்படும். மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 63 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸின் எஸ்-6 பெட்டி எரிக்கப்பட்ட சம்பவத்தில் 90 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ரயில் எரிக்கப்பட்டதில் 59 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கரசேவகர்கள். ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட நடத்தப்பட்டது என முதல்வர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்டார். இருப்பினும் இந்த சம்பவம் தானாக திடீரென நடந்தது என ஆரம்பகட்ட போலீஸ் விசாரணைகள் தெரிவித்தன. 


***************


மேலும் ரயில் திட்டமிட்டு நடுவழியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ரயிலின் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மிக அதிகளவில் பெட்ரோல் ஊற்றப்பட்டே ரயில் கொளுத்தப்பட்டிருக்கிறது என்ற ஆதாரங்களின் அடிப்படையிலேயே நீதிமன்றம் இதனை திட்டமிட்ட கொலை என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் இவை எதுவும் மீடியாக்களுக்கு கொலையாகத் தெரியவில்லை . அதன் எதிர்வினையான கலவரம் மட்டுமே பூதாகரமாக்கப்பட்டு அதைக்கொண்டு அரசியல் நடத்தப்பட்டும் வருகிறது.


காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், தீர்ப்பின் விவரம் தெரியவில்லை. தீர்ப்பைப் படித்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும்  என்றும் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதன் பிறகு நடந்த கலவரம் தான் முக்கியம் என்றும் நாகூசாமல் பேட்டியளிக்கிறார். இவர்களுக்கு திட்டமிட்ட கொலைபாதகத்தால் இறந்தவர்கள் பற்றி பரிதாபம் கூட இல்லை. 


என் டி டி வி யோ இந்த தீர்ப்பு குறித்து செய்தி வெளியிடும் போது கூட குஜராத் காயங்களுக்கு இந்த தீர்ப்பு மருந்தாகுமா? என்று கலவரத்தை மையப்படுத்தியே செய்தி வெளியிடுகிறது. திட்டமிட்ட ஒரு படுகொலை மதத்தின் பெயரால் நடத்தப்பட்டிருப்பது பற்றி இந்த இந்து விரோத டி வி கவலை கொள்ளவில்லை. மேலும் பர்க்காதத் 63 பேர்களில் 31 பேர்தான் குற்றவாளிகளென்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமிருந்த 32 அப்பாவிகள் இத்தனை வருடம் சிறையில் இருந்தார்களே அவர்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கேட்குமா என்று வருத்தப்படுகிறார்! ரயில் கொலையில் இறந்து போன 59 நபர்கள் வாழ்க்கை பற்றி வருத்தப்பட்டு பேசாத பர்காதத் 32 அப்பாவிகள் சிறையில் உயிருடனும் நலமுடனும் இருந்ததைப் பற்றி கவலைப்பட்டதை பார்க்கும் போது கண்ணீர் தான் வந்தது!


தனது உன்னைப் போல் ஒருவன் படத்தில் கலவரத்தின் போது கர்பினிப் பெண் ஒருத்தி கருவருக்கப்பட்டதாக உருகி உருகி வசனம் பேசிய கமலஹாசன் ரயிலில் கொடூரமாக திட்டமிட்டு எரிக்கப்பட்ட இந்துக்களுக்காக வசனம் வைக்காதது ஏனோ? 'எத்தனையோ ராமர்களும், கிருஷ்ணர்களும் இருந்தும் யாரும் அந்தப் பெண்ணை காப்பாற்றவில்லை என்று எழுதியவர், எத்தனையோ நபிமார்கள் கூட்டமாக இருந்தும் யாரும் ரயில் எரிப்பை தடுக்கவில்லையே, மனிதர்கள் கருகிச்சாவதைத் தடுக்கவில்லையே" என்று வசனம் வைக்காதது ஏனோ? கமலஹாசனுக்கும் இந்துக்கள் இறந்தால் அது விபத்து, பிற இனக்குழு இறந்தால் அது மட்டும் கலவரம் போல?


குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி வருடக்கணக்காக பேசிக்கொண்டிருப்பவர்கள் ரயிலில் திட்டமிட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டவர்களுக்காக இரக்கப்பட்டு கூட பேசாதது ஏன்? 
கொலை செய்தாலும் ஒரு சாரார் அப்பாவிகள், கொலையுண்டு செத்தாலும் இந்துக்கள் பாவிகள் என்கிற மனோநிலையில் இருக்கும் மீடியாக்களிடமிருந்தும், செக்யூலரிச அரசியல் வாதிகளிடமிருந்தும் நடுநிலையான ஞாயத்தை இந்துக்களுக்கான பாதுகாப்பை எதிர்பார்க்க முடியுமா?
.

யார் இறந்தாலும் பிரிவினைக்கார அரசியல் வாதிகளுக்கு அள்ள அள்ள (பி)பணம்!

இறந்தவர்களின் ஆத்மா இப்போதாவது சாந்தியடையட்டும்!


.

விதுரரும் விதுர நீதியும்!




மஹாத்மா விதுரர் தர்மத்தின் அவதாரம். திருதராஷ்ட்ரர், பாண்டு ஆகியோருக்கு ஒன்று விட்ட சகோதரர். சிறந்த அறிஞர், நீதி அறிந்தவர், 


தர்மம் அறிந்தவர். வித்வான், நன்னடத்தை உடையவர். மேலும் இறைபக்தி மிகுந்தவர். இத்தகைய மேலான குணங்கள் அவருக்கு பெரும் மதிப்பும் அரசவையில் உயர்ந்த பதவியும் கிடைத்தன.

அவர் திருதராஷ்ட்ரருக்கு அமைச்சராக இருந்தார். ஒருநாள் இரவு திருதராஷ்ட்ரர் தன் மகன் துரியோதனன் பொருட்டு சிந்தித்து மன அமைதி இழந்துகாணப்பட்டார். அவர் விதுரரை வரவழைத்து மன அமைதிக்கான வழியைப் பற்றிக் கேட்டார். அப்போது விதுரர் திருதராஷ்ட்ரருக்குத் தர்மம், நீதியைப் பற்றி மிகவும் அழகாக உபதேசம் செய்தார். அதுவே 'விதுரநீதி' என்ற பெயரில் உத்யோக பர்வத்தில் 33-40 வரை எட்டு அத்யாயங்களில் தொகுக்கப்பட்டுள்ளது. திருதராஷ்டிரருக்கும் விதுரருக்கும் நிகழ்ந்த 
உரையாடலில் ஒரு துளி!


திருதிராஷ்ட்டிரன்: விதுரா! உயர் குடும்பத்தில் பிறப்பதாலேயே ஒருவன் மதிப்புக்குரியவன் ஆகிவிடுவானா?

விதுரர்: இல்லை! ஒழுக்க நியாயமற்றவன் அவனுடைய பரம்பரையை மட்டும் வைத்து, மரியாதைக்குரியவன் ஆகிவிட மாட்டான்.

ஒருவனுடைய பிறப்பு எப்படிப்பட்டதாயியும், ஒழுக்கத்தை ஒட்டியே ஒருவனுக்கு மரியாதை கிட்டுகிறது.

ஏமாற்று வேலை மூலமாக வாழ்க்கை நடத்தும் மோசக்காரனை அறிவு காப்பாற்றி விடாது. கூட்டை விட்டு பறந்து செல்லும் பறவைகளைப் போல, அறிவு அவனை விட்டு விரைந்து ஓடுகின்றன.

திருதிராஷ்டிரர் கேட்டார்: 'நன் குணத்தையும், உலக நன்மையையும் போற்றும் கடவுள்கள் உயர் குடும்பங்களில் பிறந்தவர்கள் பால் அக்கறை காட்டுகிறார்கள். விதுரா! உயர் குடும்பங்கள் என்பதுதான் எவை?

விதுரர் சொல்கிறார்: 'சுய கட்டுப்பாடு, பொறுமை, தியாகம், அன்னதானம், தூய்மையான திருமணங்கள், தவம், பிரம்மத்தை உணர்ந்த தன்மை, மற்றவர்களைத் திருப்தி செய்யும் குணம் - இந்த எட்டு குணங்கள் எந்தக் குடும்பங்களில் எப்போதும் நிலவுகின்றனவோ, அவை உயர் குடும்பங்கள் ஆகும்.

பசுக்களும், செல்வமும் மிகுந்திருந்தாலும், நன்னடத்தையும் நற்குணமும் இல்லாத குடும்பங்கள், உயர்ந்த குடும்பங்கள் ஆக மாட்டா!"


குருக்ஷேத்திர யுத்தத்தின் முடிவில் திருதராஷ்ட்ரர் தம்முடைய நூறு புத்திரர்களும், உறவினர்களும் அழிந்தனர் என்பதை அரிந்த ராஜா த்ருதராஷ்ட்ரருக்குப் பெரும் துக்கம் ஏற்பட்டது. அப்போது விதுரர் திருதராஷ்டிரரை சமாதானம் செய்யும் பொருட்டு 'மரனம் என்பது தவிர்க்க முடியாதது' என்பதை வலியுறுத்தி உபதேசித்தார்.

"மன்னா! யுத்தத்தில் மரணம் அடைபவர்களுக்கு மேலான கதி கிடைக்கின்றது. ஆகவே அவர்களுக்காக வருந்தக்கூடாது. உயிர்கள் ஒவ்வொரு முறை பிறவி எடுக்குந்தோறும் அவர்கள் தனித்தனியான நபர்களுடன் தொடர்பைக் கொள்கின்றனர். மரணம் எய்திய பின்னர், இவை அனைத்தும் வெறும் கனவைப் போல் கலைந்து விடுகின்றன. எனவே எந்தக் காரணத்தாலும் மரணம் அடைந்தவர்களுக்காக வருந்துவது அரிவுடைமை ஆகாது. 

மேலும் சுகம் துக்கம், சேதல்-பிரிதல் என்று எவ்வளவு நிகழ்ச்சிகள்
ஏற்படுகின்றனவோ, அவை அனைத்தும் ஒருவர் செய்த நல்ல-தீய கர்மங்களின் விளைவாகவே வருகின்றன. செய்த கர்மத்தின் பலனை அனைவரும் அனுபவித்தே தீர வேண்டும்" எனவே அவற்றில் 'மரணம் தவிர்க்க முடியாதது' என எடுத்துரைத்து திருதராஷ்டிரரை சமாதானப்படுத்தினார்.

யுதிஷ்டிரர் அரியனை ஏறிய பிறகு, சிறிது காலம் அரசவையில் வாழ்ந்த விதுரர், 
திருதராஷ்ட்டிரரும் காந்தாரியும் வனவாஸம் சென்ற போது தானும் உடன் சென்றார். வனத்தில் விதுரர் தவமிருந்து வாழ்ந்தார். சிறிது காலத்திற்கு பிறகு யுதிஷ்டிரர் வனத்திற்குச் சென்று பெரியோர்களுக்கு மரியாதை செலுத்தச் சென்றார். 

அப்போது விதுரர் மெலிந்த தேகத்துடனும் ஜடாமுடியுடனும் திகம்பரர் நிலையில் யோகியாகவே காட்சியளித்தார். யுதிஷ்டிரரின் அன்பான மரியாதையை ஏற்றுக்கொண்ட விதுரர் அப்போதே சமாதிநிலை அடைந்து முக்தி பெற்றார்.

மகாபாரதத்தில் விதுரர் ஒரு மறக்க முடியாத பாத்திரம்!


.

Sunday, February 20, 2011

இஸ்லாம் அமைதி மார்க்கம்???????????????????????


குழந்தைகள், பெண்கள், இளகிய மனம் கொண்டோர் பார்க்க வேண்டாம்!


Anti-Ahmadiyya killing Ahmadiyya Muslims- INDONESIA 6th Februar 2011



[INDONESIA] People Watch as Religious Killings of Ahmadiyya Muslims Takes Place, 06/02/2011


அல்லாஹு அக்பர் என்று கூறிக்கொண்டே பெண் மீது கல்லெறியும் கொடுமை பார்க்க இங்கே க்ளிக்கவும்

.

கீதோபதேசம்-பாபங்களுக்குக் தூண்டுதலாக இருப்பது காமம் - 2



மேற்கண்ட திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை படிக்கிற போது பாபத்திற்கு தூண்டுதலாக இருப்பது எது? என்கிற முந்தைய பதிவுதான் ஞாபகம் வந்தது. முறையற்ற காமம் சைக்கோ கொலைகாரன் என மோசமாக சித்தரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் எனத் தெரிகிறது. இவ்வளவு சைக்கோத்தனமான உணர்வுகளை திரைப்படத்தின் மூலம் ஏன் வெளிப்படுத்துகிறார்களோ? சினிமாக்காரர்களிடம் கேட்டால் சமூகத்தில் இருப்பதைத் தானே காட்டுகிறோம் என்பார்கள். வீட்டுக்குள்ளே தான் கழிவறையும் இருக்கிறது. அதற்காக அதிலிருக்கும் மலத்தை கையிலெடுத்து நடுக்கூடத்தில் வைத்து எல்லோரும் சுற்றி உட்கார்ந்து அழகு பார்க்க முடியுமா? சினிமாக்காரர்களுக்கு எப்போதும் அவர்கள் செய்வது தான் சரி!

சரி நாம் விஷயத்திற்கு வருவோம். பாபங்களுக்குத் தூண்டுதல் காமம் என்று கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உரைக்கிறார்.

ஆனால் காமம் என்கிற வார்த்தையின் உண்மையான உள்ளார்ந்த அர்த்தம் தான் என்ன? காமம் பாபங்களுக்கு தூண்டுதல் என்றால் இன விருத்திக்கும் அது தானே காரணம். இனவிருத்தி என்பது இயற்கையான உணர்வு தானே! அதற்கு காரணமான காமம் என்ற உணர்வு பாபத்தின் தூண்டுதலாக எப்படி ஆகமுடியும்?

மிகவும் ஆழமான பரந்த விஷயங்களை போதித்துக் கொண்டிருக்கும் கண்ணன் வெறும் உடலுறவு கூடாது என்று ஒரு சிறிய சிற்றின்ப விஷயத்தைப் பற்றியா பேசிக்கொண்டிருப்பான். இல்லை. இந்த காமம் என்பது வெறும் உடலுறவு சம்பந்தப்பட்ட உணர்வைப்பற்றி சொல்வதாக இருக்க முடியாது. இந்த வார்த்தைக்கும் விரிவான உணர்வு மற்றும் மனோரீதியான பரந்த அர்த்தமிருக்க வேண்டுமே! இதோ சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

காமம் என்பதை பொதுவாக ஒரு பற்றுதல் உணர்ச்சி என்று எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக ஒரு புதிய புத்தகம் வாங்கினால் நாம் என்ன செய்கிறோம். அந்தப் புத்தகத்தை மூக்கால் முகர்ந்து பார்க்கிறோம். அதன் வாசனையின் வசீகரிப்பால் சில வினாடிகள் மயங்குகிறோம். அதன் அட்டைப்பட அழகை கண்களால் கண்டு ரசிக்கிறோம். அதன் தாள்களை தடவிப்பார்க்கிறோம். சில நிமிடங்கள் அதனோடு புலன்களால் உறவாடுகிறோம். இவ்வாறு எந்த ஒரு பொருளின் மீது நாம் புலன்களால் உறவாடுகிறோமோ அது அனைத்துமே காமம் என்றழைக்கபடும்.

இவ்வாறு புலன்களால் உறவாடிய அந்தப் பொருளின் மீது நமக்குப் பற்றுதல் தானாகவே வந்து விடுகிறது. அதன் மீது ஒரு உரிமை உண்டாகிறது. நான் வாங்கியது, என்னுடைய புத்தகம் என்ற பிரிவினை குணம் தோன்றுகிறது. அதன் மீது யாரும் கைவைத்தாலோ நம்மைக் கேட்காமல் எடுத்து கையாண்டாலோ கோபம் வருகிறது. அது மனசலசலப்பிற்கு வழிவகுக்கிறது. இந்த மனசலசலப்பு விரோதத்தை உண்டாக்குகிறது. அத்தகைய விரோதம் போட்டி, பொறாமை, வஞ்சம், வழக்கு, கொலை என்று முடிகிறது. ஆக இவை அத்தனைத்திற்கும் புலன்களால் உறவாடத் தூண்டும் காமம் என்கிற உணர்வும் அதன் காரணமாக எழும் பற்றுதல் உணர்வே காரணமாவதால் பாபங்களுக்கு அடித்தளம் காமமே என்று ஸ்ரீ க்ருஷ்ணர் கீதையில் உரைக்கிறார்.

ஆக காமம் என்பது ஒரு பற்றுதல் உணர்வு. புலன்களால் உறவாடும் படியான இந்த உணர்வு வெளிமனத்திலிருந்து உந்தப்படுகிறது. இதனால் ஏற்படும் 'நான்,' 'எனது' என்கிற பற்றுதல் உணர்வும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களும் ஆத்மாவில் பதியப்படுகிறது. அந்தப்பதிவே ஒவ்வொருவரின் பாவம் மற்றும் புண்ணியத்தின் ஆதாரமாகி விடுகிறது.

ஒரு குழந்தையை பார்க்கிறோம். அது சிரிக்கும் அழகை ரசிக்கிறோம். கண்களால் ஆன நம் உறவாடல் மனதை கவர்கிறது. அதனால் உந்தப்பட்டு அந்தக் குழந்தையை எடுக்கிறோம். உச்சி முகர்கிறோம். கண்ணத்தில் முத்தமிடுகிறோம். உடலோடு மெலிதாக அணைத்து அதன் கதகதப்பை உணர்கிறோம். குழந்தையைக் கொஞ்சுவதில் எந்த மனச்சலனமும் நமக்கு இருக்கப்போவதில்லை. ஆனால் இந்த சில வினாடிகள் அந்தக் குழந்தையுடன் நம் புலன்களின் மூலமாக உறவாடுவாடுகிறோம். இந்த உறவாடல் அந்தக் குழந்தையின் மீதான பற்றுதலை உண்டுபண்ணுகிறது.

ஒரு மைப்பேனா, ஒரு செல்பேசி, ஒரு தொலைக்காட்சிப்பெட்டி, புதிய துணிமணிகள் என்று எதை வாங்கினாலும் அவற்றோடு நாம் சில வினாடிகள் புலன்களால் உறவாடுகிறோம். முகர்ந்து பார்க்கிறோம். உடலோடு ஒரு தொடர்பை உண்டு செய்து விடுகிறோம். இதனால் அந்தப் பொருட்களின் மீது நமக்கு ஒரு பற்றுதல் உண்டாகிவிடுகிறது. அவற்றில் ஒன்று காணாமற் போனால் துக்கப்படுகிறோம். எடுத்தவனை எசுகிறோம். துவண்டு போகிறோம் அல்லது பழிவாங்கத் துடிக்கிறோம். காரணம் அந்தப் பொருட்களின் மீது நாம் புலன்களால் உறவாடிவிட்டோம். அதனால் பற்றுதல் உண்டாகிறது. அந்த உறவாடலுக்குப் பெயர் காமம்.

ஒரு நண்பன் புதிதாக இருசக்கர வாகனம் வாங்கி நம்மிடம் காட்டுகிறான்.

நாம் அதனருகில் சென்று அதனை ஆசையோடு தொட்டுப் பார்க்கிறோம். அதன் மீது அமர்ந்து அது நம் உடலோடு எவ்விதம் பொருந்துகிறது என்று பொருத்திப் பார்த்து பூரித்துப் போகிறோம். அதனை ஒரு முறை ஓட்டிப் பார்க்க அனுமதி பெற்று அந்த வாகனத்திற்கும் நமக்கும் ஒரு புலன்களின் ரீதியான உறவாடலை நிகழ்த்துகிறோம். இதனால் அந்த வாகனம் மீது பற்றுதல் உண்டாகிறது. நாமும் அதைப் போல் வாங்க வேண்டும் என்கிற தூண்டுதல் உண்டாகிறது. அது நிராசையில் முடிந்தால் அது நண்பன் மீதான பொறாமையாகவும், வைராக்கியமாகவும் மாறிவிடுகிறது. காரணம் அந்தப் பொருளின் மீது நாம் புலன்களால் உறவாடிவிட்டோம். அதனால் பற்றுதல் உண்டாகிறது. அந்த உறவாடலுக்குப் பெயர் காமம்.

நாய், பூனை, என எந்த செல்லப் பிராணியை வளர்த்தாலும் அதனோடு உடல் ரீதியாக நாம் பிணைப்பை உண்டு செய்ய மறப்பதில்லை. அவற்றிற்கு தடவிக்கொடுப்பது, கையில் எடுத்து மார்போடு அணைப்பாக வைத்திருந்து உடல் மொழியை பரிமாறச் செய்வது என்று புலன்களால் ஒரு உறவாடலை நிகழ்த்துகிறோம். அவற்றின் மீது பற்றுதல் உண்டாகிறது. அவற்றில் ஒன்று இறந்து போனால் துக்கப்படுகிறோம். அவை பிறரால் துன்புறுத்தப்பட்டால் கோபம் சண்டை பழிவாங்குவதல் என்று உணர்ச்சிப் போராட்டங்கள் உண்டாகிறது. காரணம் அவைகளோடு நாம் புலன்களால் உறவாடிவிட்டோம். அதனால் பற்றுதல் உண்டாகிறது. அந்த உறவாடலுக்குப் பெயர் காமம்.





இப்படி உயிரற்ற பொருட்களானாலும் உயிருள்ள பொருட்கள் ஆனாலும் அதனோடு உறவாடும் விதம் எல்லாமே அடிப்படையில் ஒன்றுதான். இந்த இயல்பான உணர்ச்சியின் வெளிப்பாடே ஆண் பெண்ணை முகர்தலும், உடலோடு ஒரு தொடர்பை உண்டு செய்து கொள்வதும் என தொடர்கிறது. இந்நிகழ்வு மனித இணத்திற்குள் நிகழ்வதால் அங்கே இனவிருத்தி உண்டாகிறது. மற்றவற்றில் உண்டாவதில்லை. வித்தியாசம் அவ்வளவே அன்றி புலன்களால் உறவாடும் குணத்தை நாம் எல்லா பொருட்களின் மீதும் வெளிப்படுத்துகிறோம்.

இதனை பொதுவாக நாம் உணர்வதில்லை. அதனால் காமம் என்பதே ஆண் பெண் சேரும் உடலுறவு மட்டும் தான் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. காமம் என்பது ஒரு பொதுவான உணர்வைக் குறிக்கும் வார்த்தை. காணும் பொருள் மீதெல்லாம் நம் புலன்களை வைத்து அவற்றை நம்மோடு இணைத்துக் கொள்ளத் துடிக்கும் உந்துதலைக் குறிக்கும் வார்த்தை காமம். ஆகவே கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணர் புலன்களை வெளிப்புறமாகச் செலுத்தாமல் உட்புறமாகச் செலுத்தி ஆன்மாவோடு அவற்றை. இணைத்து எவனொருவன் ஆன்மாவைத் தனதாக்கிக்கொண்டு அதனோடு இணைகிறானோ அவனே விவேகி என்கிறார்.

ஆக காமம் என்பது மனித உடலுறவு அல்ல. வெளி உலகோடு நம் புலன்கள் நடத்தும் உறவாடலும் அதனால் உண்டாகும் பற்றுதல் அனைத்துமே காமம் என்றழைக்கப்படும். அவ்வாறு உண்டாகும் பற்றுதல் வளர்ந்து கொண்டே இருக்கும். ஒன்று கிடைத்தால் இன்னொன்றின் மீது, அது கிடைத்தால் வேறொன்றின் மீது என அது தொடர்ந்து கொண்டே இருக்கும். புலன்கள், மனம், புத்தி ஆகியவைகள் மூலமாக நாம் மயங்கி அறிவை இழக்கச் செய்யும் எந்தச் செயலும் காமமே!

எனவே புலன்களினால் உறவாடி அதனால் பற்றுதலை உண்டாக்கிக் கொண்டு அதனை அடையும் பொருட்டு பாபங்களை செய்யாதிருத்தலை ஸ்ரீ க்ருஷ்ணர் தெளிவாக கீதையில் எடுத்துரைக்கிறார். நாமும் அவ்வழியை அடைய சாதகம் செய்வோமாக!




"அர்ஜுனா! அவ்வாறு பாபம் செய்யத் தூண்டுவது ரஜோ குணத்திலிருந்து தோன்றிய காமம் தான். இதுவே குரோதமாக மாறுகிறது. இதை எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி அடைவதில்லை. பெரிய பாபங்களுக்கு இதுவே காரணமாகிறது. இந்த உலகத்தில் அதுவே உன் எதிரி என்பதை உணர்ந்து கொள் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

நெருப்பு புகையினாலும், கண்ணாடி அழுக்கினாலும், கருவானது கருப்பையாலும் மூடப்பட்டிருப்பது போல் ஞானம் ஆசையால் மூடப்பட்டுள்ளது. குந்தியின் மகனே! தீயைப்போல் தணிக்க முடியாததும், தீர்க்க முடியாததும் ஆன காமம் தான் ஞானியின் அறிவை மூடிக்கொண்டிருக்கிறது.



புலன்கள், மனம், புத்தி ஆகியவைதான் அதன் இருப்பிடம் எனப்படுகின்றன. இவைகளின் வழியாக அவனை மயக்கி அவனுடைய அறிவை மூடி மறைக்கின்றது."
- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்


.

Tuesday, February 15, 2011

கீதோபதேசம் - சம்பவாமி யுகே யுகே!





அர்ஜுனன் சொன்னது:  

பகவானே சூரியன் உங்களுக்கு முன்னால் பிறந்தவர். நீங்கள் சூரியனுக்கு பிறகு பிறந்தீர்கள். முதலில் நீங்கள் சூரியனுக்கு அழிவற்ற‌ யோகத்தை உபதேசித்ததாக கூறுகிறீர்கள். இதை நான் எவ்வாறு புரிந்து கொள்வது.  

ஸ்ரீ கிருஷ்னர் உபதேசம்:  

அர்ஜுனா! நானும் நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்.  

நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், குறைவு இல்லாத தன்மை உடையவன் இருந்தும் கூட என் இயல்பை அடக்கிக் கொண்டு என்னுடைய மாயா சக்தியினால் அவதாரம் செய்கிறேன்.  

அர்ஜுனா! உலகில் தர்மம் குறைந்து, அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.  

நல்லவர்களை காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்.  

என்னுடைய தெய்வீகமான பிறப்பு, செயல் ஆகியவற்றை உள்ளபடி அறிந்தவன் இந்த மனித உடலைவிட்டு நீங்கிய பிறகு மறுபிறவி அடைவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை வந்து அடைகிறான்.  

காமம் (ஆசை), பயம் கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவர்களும், என்னையே நினைத்து, என்னையே சரணாக அடைந்து, ஞானமாகிய அக்னிப் பரீட்சையால் பொசுக்கப்பட்டு புனிதர்களாய்ப் பலர் என்னுடன் ஒன்றாகி ஐக்கியம் அடைந்திருக்கிறார்கள்.  

மனிதர்கள் எந்த வழியில் என்னை நாடினாலும், அதே வழியில் நான் அவர்களுக்கு அருள் புரிகிறேன். அர்ஜுனா! மக்கள் எங்கும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்



.

Thursday, February 3, 2011

ஏலகிரி மலைக் கோவில்








எமது தூரத்து நண்பர் ஒருவர் கோவில் கட்டி இருக்கிறார். தரிசனம் செய்ய விரும்புவோர் மேற்கண்ட விபரங்களை அனுகி பெருமாளை தரிசிக்கலாம்! ஏலகிரி பக்கம் சென்றால் இந்த கோவிலுக்கும் ஒரு முறை சென்று வரலாம்!

.

Wednesday, February 2, 2011

காமெடி ஸீன் - கொஞ்சம் டைம் பாஸ்!


கலைஞர்: பா ம க எங்கள் கூட்டனியில் தான் இருக்கிறது!


ராமதாஸ்: நாங்க இன்னும் கூட்டனி பற்றி முடிவே பண்ணல

கலைஞர்: ஆமாம்! அவங்களும் முடிவு பண்ணல, நாங்களும் முடிவு பண்ணல!



கலைஞர்: அவ்வ்வ்வ் எப்புடியெல்லாம் ஆப்பு வெக்கிறாய்ங்க!

நீதி: அதெல்லாம் எதுக்கு?


.