தமிழ் சினிமாவில் பிராமணர்கள்:
தமிழ்த் திரைப்படத்தில் பிராமணர்களைப் போல பந்தாடப்படுபவர்கள் , கேவலப்படுத்தப்படுபவர்கள், கேலிசெய்யப்படுபவர்கள் வேறு யாரும் கிடையாது.
கே பாலச்சந்தர். தமிழ் சினிமாவில் பிராமணர்களை மிகவும் கேவலமாக இழிவு படுத்திய முக்கியாமான இயக்குனர். இவருக்குப் பின்னர் படம் எடுக்கும் எல்லா இயக்குனர்களும் பிராமண கதாபாத்திரம் இல்லாமல் அதுவும் அதை ஒரு கேலிக்கதாபாத்திரமாக சித்தரிக்காமல் படம் எடுப்பதே இல்லை என்னும் அளவிற்க்கு சினிமாவில் பிராமண கதாபாத்திரங்கள் ஒரு பொழுது போக்கு அம்சமாகவே மாறிவிட்டது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் பாலச்சந்தரும் ஒரு பிராமணரே. இவர் எடுத்த படத்தின் கதை அழுத்தம் அப்படி.
பிராமணப் பெண்ணை விபச்சாரியாக சித்தரித்து மகிழ்ந்த அற்புத இயக்குனர். அந்த கருப்பு வெள்ளை காலத்தில் பிராமண குடும்பத்தை இப்படி காண்பிக்க பிராமணர் அல்லாதவர்களே யோசிக்கும் ஒரு தருணத்தில் இந்த பிராமண சிங்கம் தன் சொந்த குலப் பெண்டிரையே விபச்சாரியாக சித்தரித்து அழகு பார்த்து மகிழ்ந்தது.
பிராமண எதிர்ப்பாளர்களிடம் , தான் ஒரு முற்ப்போக்கு சிந்தனையுடையவன் என்று காண்பித்துக் கொள்ள பிராமணர்கள் தங்களைத் தாங்களே அவமதித்துக் கொள்வது ஒரு பெருமைக்குறிய விஷயமாகவே கூட கருதப்பட்ட காலம் அது. அந்த காலத்தில் இவர் செய்த அரங்கேற்றமே தொடக்கம் என இப்பொழுதும் பெரும்பாலான பிராமண குடும்பங்கள் மத்தியில் பொருமலாக பேசப்படுகிறது.
அந்த காலகட்டத்தில் இரண்டு திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்தன. ஒன்று "சில நேரங்களில் சில மனிதர்கள்" ஜயகாந்தன் அவர்களின் நாவல் படமாக்கப்பட்டு ஸ்ரீகந்த் , லக்ஷ்மி நடித்து வெளிவந்தது. ஒர் பிராமணப்பெண் நள்ளிரவு, மழை பெய்கிறது. வீட்டுக்கு போக பேருந்து வரவில்லை. நான் கொண்டு விடுகிறேன் என்று காரில் ஏற்றும் ஒருவரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறாள். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
விருது பெற்ற மற்றொரு படம் சிறை. ராஜேஷ், லக்ஷ்மி நடித்து வெளி வந்த படம். ஒரு ஊரில் கணவனுடன் வசிக்கும் பிராமணப் பெண். ஊர்பெரிய மனிதரின் கண்ணில் இவள் பட்டுவிட ஒரு நாள் வீட்டிற்குள் வஞ்சகமாக புகுந்து....அதேதான்! வஞ்சிக்கப் பட்ட பெண்ணின் கணவர் அவமானத்திலும் விரக்தியிலும் அவளை கைவிட...தன்னை வஞ்சித்தவன் வீட்டிற்க்கே போய் வாழத் துணிவது கதை.
பெண் என்பவள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது எந்த ஜாதியானாலும் பரிதாபத்திற்குரியதே. ஆனால் அந்த பரிதாபத்தையும் பிராமண பெண்ணின் மூலம் தான் உண்டாக்க வேண்டும் என்பது என்ன புரட்சிகரமான சிந்தனை என்பது அதை எழுதியர்களுக்கே தான் வெளிச்சம். இப்படி பிராமணப் பெண்களை சித்தரித்து தேசிய விருதுகளும் பெற்று பெருமை அடைந்து கொண்டார்கள்.
இவருக்குப் பின் தமிழ் சினிமாவில் பிராமண கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பாக்கியராஜ்.
"இது நம்ம ஆளு" என்று இவர் எடுத்த படம். ஒரு பிராமணப் பெண் வேறு ஜாதி ஆணை காதலித்து குடும்பத்தார் எதிர்ப்பிலும் திருமணம் செய்து அவனுடன் படுப்பதற்க்காக படாத பாடுபடுவதாக அற்புதமான கதை. ஒரு பிராமணப் பெண்ணை 'செக்ஸ் சிம்பளாகவே' சித்தரித்திருந்தார். இந்தப் படம் பார்த்துவிட்டு பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டார்கள். "ஏன்டா! ஐயர் பொண்ணுங்கன்னாலே சூடு பார்ட்டிங்களோ! ஐயர் பொண்ணுங்கல்லாமெ இப்படித்தான் இருப்பாங்க போல இருக்கு! என்று சீரியாஸாக விவாதித்துக் கொண்ட மாணவர்களும் உண்டு.
பிராமணப் பெண்டிரின் மீது சமூகத்தின் பார்வை ஒரு சராசரியான மரியாதைப் பார்வை என்பதும் மாறி காமப் பார்வை உண்டாக வைத்த திரைப்படம். இன்றைக்கும் அது தொடர்கிறது அந்த சமூகத்திற்க்கே வெளியே சொல்ல முடியாத வேதனை! பாலச்சந்தர், பாக்கியராஜ் தொடங்கி இன்றைய இளம் நடிகர்கள் தனுஷ், சிம்பு மற்றும் பேர் கூட தெரியாத புதிய முகங்கள் எல்லாருமே பிராமண கதாபாத்திரத்தில் கதை அமைப்பதும் , பிராமண பாஷையைக் கையாள்வதும் , "ஏய்! மாமிடா!" என்று வசனம் பேசுவதும் தொடர்கிறது.
பொதுவாக தமிழ் சினிமாவில் பிராமணர்களை ஜாதி வெறியர்களாக காண்பிப்பது முக்கிய நோக்கம். அதாவது ஜாதியில்லை என்று ஊருக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்றால் உடனே ஒரு பிராமணப் பெண்ணை வேறு ஜாதி ஆண் காதலிப்பதும் , அதற்கு பிராமண வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதும் உடனே அந்த படத்தின் நாயகன் அல்லது ஒரு ஊரே கூடி அந்த பிராமண குடும்பத் தலைவருக்கு புத்தி சொல்லி அந்த பெண்ணை வேறு ஜாதிக்கார ஆணை மணக்கச் செய்வதுமாக கதை வந்து விடும். இது ஒரு சமூக சேவை அல்லவா. ஏனென்றால் தமிழகத்தில் பிராமணர்கள் தான் ஜாதியுடன் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கெல்லாம் ஜாதியே கிடையாது. அவர்கள் எல்லாம் தங்கள் வீட்டுப் பெண்களை யாருடன் வேண்டுமானாலும் அனுப்பி விடுவார்கள் அல்லவா. அதனால் பிராமணனுக்கு புத்தி சொல்வது தான் முக்கியம் என ஒட்டு மொத்த சினிமாக்காரர்களும் ஒரு மனதாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி விட்டனர்.
இந்த வகையில் ஜாதிப்படம் எடுத்ததில் கொஞ்சம் நடுநிலைமையில் இருந்தப் படம் அந்த காலத்தில் வெளியான சத்தியராஜ் நடித்து வெளிவந்த வேதம் புதிது. இதில் பாரதிராஜா பிராமணர்களுக்கும் புத்தி சொல்லியிருப்பார். தேவர்களுக்கும் புத்தி சொல்லியிருப்பார். ஆனால் இதுலும் பிராமணப் பெண்ணை வேறு ஜாதி ஆணுக்கு திருமணம் செய்து அழகு பார்க்கும் ஃபார்மலாவை மட்டும் பாரதிராஜா விடவில்லை. அதுவும் ஐயர் வீட்டுப்பெண் தான் வேறு ஜாதிக்காரனைக் கல்யாணம் செய்ய வேண்டும். படம் எடுப்பவர்கள் அவர்கள் ஜாதிப் பெண்ணை வேறு ஜாதிக்காரன் கல்யாணம் செய்வது போல படம் எடுக்கலாமே. அப்படி செய்தால் அவர்கள் குலப்பெண்களை அது தவறாக வழி நடத்திவிடும் அல்லவா. ஆனால் பிராமண குடும்பப்பெண்கள் அவ்வாறாக வழிநடத்தப் பட்டால் அது பரவாயில்லை.
தமிழ் சினிமாவில் இன்னும் எவ்வாறெல்லாம் பிராமணர்கள் கேலிக்குரியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதை தொடர்ந்து பார்ப்போம்...
தொடரும்.......
தமிழ் சினிமாவில் ப்ராமணர்கள் - 2