Thursday, July 29, 2010

ஒரு ஜென் தத்துவக் கதை!


ஒரு ஜென் குரு ஒரு அரசனின் அரண்மனை நோக்கி வந்தார். நேராக அரசவைக்கே சென்றார்.

அரசனின் சிம்மாசனத்துக்கு அருகில்
வந்ததும், அரசனே, " ஐயா! உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான்.

அவரோ, "இந்த விடுதியில் ஓரிரவு தங்க இடம் வேண்டும்" என்றார்.

அரசனோ, "இது விடுதி அல்ல. அரண்மனை." என்றான்.

ஜென் குரு, "உனக்கு முன் இது யாருடையது?" என்றார்.

"என் தந்தையாருடையது".

"அவருக்கு முன்?"

"என் பாட்டனாருடையது" என்றான் அரசன்.

இப்படி ஒவ்வொருவரும் சிறிது காலமே தங்கிச் சென்ற இது விடுதி இல்லாமல் வேறென்ன? என்றார் குரு.


Saturday, July 24, 2010

மனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா?




"பாவிகளே! உங்கள் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்கிறான். இங்கே வாருங்கள்!" என்று கூவிக்கூவி அழைப்பவர்கள் இருக்கிறார்கள்! ஏதோ பாவம் என்ற பொருளை இறைவன் 'ரீபர்ச்சேஸ்' செய்து கொள்கிறார் என்பது போல் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு அந்தக் கடைகளுக்குச் சென்று தங்கள் பாவங்களை குறைந்த விலைக்கு விற்றும் வருகிறார்கள். இறைவன் அதை வாங்கிக்கொள்கிறான் என்பது இந்த அப்பாவிகளின் நம்பிக்கை. பாவம்!

அப்படி பாவங்களை விற்றவர்கள் பற்றி இங்கே , இன்னொன்று இங்கே.

உண்மையில் பிறக்கும் மனிதர்கள் எல்லோரும் பாவிகளா என்றால் இல்லை என்கிறது இந்து தர்மம். நாம் செய்யும் கர்மங்களின் வினைப்பயனாகவே பிறப்பும் இறப்பும் அமைந்து விடுகிறது என்கிறது இந்து மத உபதேசங்கள்.


சரி கர்மம் என்றால் என்ன? கர்மம் என்றால் செயல்கள் என்று பொருள். செயல்களில் பாபமும் அடக்கம், புண்ணியமும் அடக்கம். அதற்கான வினைப் பயன் நமது அடுத்த பிறவியிலும் தொடர்கிறது. இது ஒரு சங்கிலித் தொடர் போன்று அமைகிறது. நன்மை செய்பவனும், தீமை செய்பவனும் அதற்கேற்ற பிறவிகளை அடைகிறான் என்கிறது உபநிஷத்து.

"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்" என்கிறார் உபநிஷத்தில் எமதர்மன்.

சரி இப்படி இருக்கும் போது பாபங்களை இறைவன் எடுத்துக் கொள்வான் என்று கூறப்படுவது சரியா? இறைவன் மனிதர்களின் பாபங்களை எடுத்துக் கொள்வாரா? ஓரிடத்திலிருந்து குப்பையை அகற்றினால் இன்னொரு இடத்தில் கொட்ட வேண்டும். குப்பைகள் கொட்டப்பட்ட புதிய இடம் நாற்றமடிக்கும். அந்நாற்றத்தை அகற்ற வேண்டுமானால் அங்கே இருந்தும் அதே குப்பைகளை அகற்ற வேண்டும். பாபங்களும் அப்படித்தானே! மனிதர்களின் பாபங்களை இறைவனிடம் கொடுத்து விட்டால் இறைவன் பாவியாயிற்றே! அவன் தன் பாபத்தை கழிக்க அதை யாரிடம் கொடுப்பார்? சரி எல்லா பாபங்களையும் வாங்கி ஜீரணிக்கும் அளவு சக்தி படைத்தவன் இறைவன் என்று வைத்துக் கொள்வோம், அப்படி பாபம் செய்யும் மனிதர்களை அவன் படைப்பானேன் பின் அதனை தானே வாங்கிச் சுமப்பானேன்? பாபங்களே செய்யாத மனிதர்களை இறைவன் படைக்கலாம் அல்லவா? ஏன் செய்யவில்லை?

இங்கே தான் நாம் படைப்பின் ரகசியம் பற்றிய ஒரு தெளிவைப் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. இறைவன் கோடான கோடி உயிரினத்தையும் , பல கோடி விண்மீன்களையும், நட்சத்திரங்களையும் மெனக்கெட்டு உட்கார்ந்து படைத்துக் கொண்டிருக்கவில்லை என்பதே நிதர்சனம். இவை யாவும் பொதுவாக வியாபித்திருக்கும் ஒரு சக்தியில் இருந்து உண்டானது. பரிணாமங்களும் அதன் வளர்ச்சியும் தானே நடக்கும் செயல்கள். அதாவது கர்மங்கள். அந்த கர்ம வினைகளின் பலனாகவே பாபமும் புண்ணியமும். இவை யாவும் தானாகவே நடந்தேருபவை. இவைகளை இறைவன் என்ற ஒரு உருவகம் ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லாத ஒன்று என்பதை இந்து தர்மத்தின் பல்வேறு விளக்கங்களை படித்தாலே புரிந்து கொள்ள முடியும்.

தானாகவே உண்டான படைப்பின் ரகசியத்தை முண்டக உபநிஷத்து இவ்வாறு தெளிவாக்குகிறது.

தஸ்மாதக்னி: ஸமிதோ யஸ்ய ஸூர்ய:
ஸோமாத் பர்ஜன்ய ஓஷதய: ப்ருதிவ்யாம்|
புமான் ரேத: ஸிஞ்சதி யோஷிதாயாம்
பஹ்வீ: ப்ரஜா: புருஷாத் ஸம்ப்ரஸுதா:||

தஸ்மாத் - அவரிடமிருந்து; அக்னி - நெருப்பாலான க்ரகங்கள்

பஹ்வீ - பலவிதமான; ப்ரஜா: - உயிரினங்கள்; ஸம்ப்ரஸுதா: - உண்டாகின்றன.

"அந்த இறைவனிடமிருந்து வானுலகம் உண்டானது. சூரியன் அந்த வானுலகை ஒளிரச் செய்கிறான். சந்திரனிலிருந்து மேகங்கள் உண்டாயின. பூமியில் வளர்கின்ற செடிகொடிகள் மேகங்களின் காரணமாக உண்டாயின. ஆண் பெண்ணிடம் விந்துவை விடுவதன் மூலம் உயிர்கள் தோன்றின. இவ்வாறு அந்த இறைவனிலிருந்தே பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன." - முண்டக உபநிஷத்து.



இங்கே இறைவன் என்பதை ப்ரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் அளவிட
முடியாத சக்தி என்று கொள்வோம். அந்த அளவிட முடியாத சக்தியின் வாயிலாகவே எல்லாம் தோன்றியது என்று முண்டக உபநிஷதம் விளக்குகிறது. கவனிக்க, இறைவன் ஒவ்வொரு கிழமையாக ஒன்னொன்றையும் படைத்தான் என்று கூறவில்லை. இறைவனிடமிருந்து தோன்றியது என்று தான் கூறுகிறார்கள். ஆக இறைவனிடமிருந்து தோன்றியதே தவிற அவன் உட்கார்ந்து ஓவர் டைம் போட்டு படைக்கவில்லை. அதனாலேயே இறைவன் என்பதை ப்ரபஞ்சத்தின் சக்தியாக நாம் புரிந்து கொள்வோம். அப்படி எடுத்துக் கொண்டால் படைப்பின் (ப்ரம்மத்தின்) ரகசியத்தை இன்னும் எளிதாக நாம் புரிந்து கொள்ளலாம்.

சரி, படைப்பு என்பது ப்ரபஞ்சத்தில் இருந்து ஒரு சங்கிலித் தொடராக உண்டானது என்று கொண்டால், கர்மவினை, பாபம், புண்ணியம் போன்றவை எங்கிருந்து துவங்கியது என்பதையும் அறிய முற்படுவோம் அல்லவா. அந்தச் சங்கிலித் தொடரைப் பார்க்கலாம்.

அறிவியலாளர்களின் பிக் பேங்க் தியரியும் - முண்டக உபநிஷத்தின் மேற்கண்ட ப்ரம்மத்தின் தோற்றமும் ஒன்று படுவதை இங்கே கவனிக்கலாம். ஒரு நெருப்பு பிழம்பிலிருந்து பிரிந்தது தான் நாமிருக்கும் இந்த அண்ட வெளி என்கிறார்கள் அறிவியலாளர்கள். "அந்த இறைவனிடமிருந்து வானுலகம் உண்டானது" - முண்டக உபநிஷத்து. இறைவன் = ப்ரபஞ்ச சக்தி.

இப்போது முதல் கர்மம், கர்மவினை அதனால் உயிர்த் தோற்றம் அவற்றினால் உண்டான பாபம் புண்ணியம் போன்றவற்றை முண்டக உபநிஷத்தின் வழியில் விளக்கமாகப் பார்ப்போம்!

ஒரு நெருப்பு பிழம்பிலிருந்து பிரிந்தது தான் நாமிருக்கும் இந்த அண்ட வெளி. நம்முள் எந்த பொருளுக்கு ஆத்மா என்று பெயரோ அதே பொருள் தான் சூரியனின் மையப்பகுதியிலும் இருக்கிறது. பூமியின் மையத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் நெருப்பு பிழம்புதான் பூமிப்பந்தின் ஆத்மா எனக் கொள்வோம். சுழலுவதும் மழை பெய்வதும் அதன் கர்மா! அந்த மழையால் இடியும் மின்னலும் உண்டானது கர்ம வினை. அந்த கர்ம வினையின் பயனாகத் தோன்றிய முதல் உயிரி அமீபா! அந்த அமீபாவின் கர்மம் இனவிருத்தி என்று கொண்டால் அந்த கர்ம வினையின் பயன் பரினாம வளர்ச்சி, செடி கொடி முதல் மனிதர்கள் வரை.



ஆக பிரபஞ்சத்தின் நிலையில்லா கர்மமும் அதன் வினையும் தான் 'நாம்'. ஆக நாம் பிறந்ததும் நம்முடைய வாழ்க்கை சுழல்வதும் நமக்கு மேல் இருக்கும் மிகப்பெரிய சக்தியான பிரபஞ்சத்தின் கர்மத்தால் உண்டானது. ஆக பிக் பேங்க் வெடிப்பு முதல் கர்மம் என்று நமது சிற்றறிவிற்கு எட்டியவரைக் கொள்ளலாம். ஆக முதல் கர்மாவிலும் முதல் உயிரின் தொடக்கத்திலும் பாவம் புண்ணியம் இருக்கவில்லை. பின் உயிர்கள் ஒன்று இரண்டான போது ஒன்றின் பசிக்கு இன்னொன்று உணவானபோது தான் பாவமும் புண்ணியமும் பிறந்திருக்க வேண்டும். பின்னர், முதல் பாவம் அதற்குப் பலனாக வேறு பிறப்பு, பின்னர் அதில் பாவம் அதனால் இன்னொரு பிறப்பு என்று நீண்டு 'நம்' வரை வந்திருக்கிறோம்.

ஆக இந்த ப்ரம்மத்தின் ரகசியத்தைப் புரிந்து கொண்டு அதை உணர்ந்து வாழ்பவர்கள் யாரோ அவர்களே ஞானிகளாகின்றனர். அவர்கள் தங்களது ஞானத்தால் உணர்வுகளை இறைவனிடமே (அல்லது ப்ரபஞ்சத்தின் சக்தியிடமே) நிலை பெறச்செய்து இறுதியில் அதனுடனேயே கலந்து விடுகிறார்கள். அவ்வாறு இறைசிந்தனையில் ஆழ்ந்து கர்மங்களை தொலைப்பவர்கள் பாபங்களில் இருந்து தாமாகவே விடுபடுவார்கள்.

ஸ்ரீ க்ருஷ்ணர் இதை மெய்ப்பிக்கிறார்.

கீதைக்கு வருவோம், ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனிடம் இவ்வாறு கூறுகிறார் - "அர்ஜுனா! செயல்களையோ அவற்றைச் செய்யும் உரிமையையோ, செயல்களின் பயனோடு ஒன்றுபடும் தன்மையையோ இறைவன் இவ்வுலகில் ஏற்படுத்தவில்லை. அவ்வாறு செய்வது இயற்கையின் வேலை" என்கிறார்.

மேலும் "அர்ஜுனா! எங்கும் நிறைந்த இறைவன் எவருடைய பாவத்தையோ, புண்ணியத்தையோ வாங்கிக் கொள்வதில்லை. எவருடைய குணங்களையும் பொருட்படுத்துவதில்லை, அறிவு அறியாமையால் மறைக்கப்பட்டுள்ளது. எனவே உயிர்கள் மாயையில் மூழ்கி உள்ளன." என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

"அர்ஜுனா! யோகிகள் அறிவை இறைவனிடத்தில் நிலைக்கச் செய்வதாலும், அவர்கள் ஆன்மாவும் அதுவாகவே இருப்பதாலும், அதிலேயே நிலை பெறுவதாலும், அதுவே அவர்களுடைய மேலான லட்சியமாக இருப்பதாலும், அவர்களுடைய பாபங்கள் அனைத்தும் ஞானத்தால் அழிக்கப்பட்டு மீண்டும் பிறவாத நிலையான மோட்ச பதவியை அடைகிறார்கள்." - ஸ்ரீ க்ருஷ்ணர், ஸந்யாஸ யோகம்.

அதாவது பாபங்கள் யாருக்கும் தாரைவார்த்துக் கொடுக்கப்படுவதில்லை. தன்னுடைய உணர்வுகளை இறைவனிடத்திலே செலுத்தி கர்மங்கள் அதாவது பாபமோ, புண்ணியமோ எந்த விதமான உணர்ச்சிப்பூர்வ செயலிலும் ஈடுபடாமல் இறை சிந்தனையிலேயே கலந்து விடுபவர்கள் தன்னுடைய பாபங்களில் இருந்து தானே விடுபடுகிறான் என்பதே கீதோபதேசம்.


ஆக இந்து தர்மத்தின் எந்த உயர்ந்த உபதேசங்களும் இயற்கைக்கு மாறான நம்பிக்கையை வளர்ப்பதில்லை. அவை நிதர்சனமான உண்மையையும் இயற்கையின் சக்தியை முழுவதுமாகப் புரிந்து கொள்வதற்கும் உதவுகின்றன. இதனை புரிந்து கொள்ளும் மனிதர்கள் பாபம் செய்ய மாட்டார்கள். செய்த பாபத்தை வாங்கிக்கொள்ள (buy back) ஒரு சாமி வரும் என்று பாபத்தை விற்க வரிசையில் நிற்க மாட்டார்கள்!. இதனை நாமும் புர்ந்து கொள்வோம். மற்றவருக்கும் எடுத்துச் சொல்வோம்! அதாவது..

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!

பஞ்சதந்திரக் கதைகள் - 7 காக்கை பாம்பை கொன்ற கதை



ஒரு பெரிய மரம். அதில் ஆணும், பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தன. ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு காக்கை இடும் முட்டைகளை யெல்லாம் ஒவ்வொரு நாளும் காலி செய்து கொண்டு வந்தது.

பலநாட்கள் இப்படியே கழிந்தன! காக்கைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கருனாகத்தைக் காக்கை என்ன செய்ய முடியும்?, அதற்காக விட்டுவிட முடியுமா, விடலாமா?.

ஒரு நரியாரிடம் ஆலோசனை கேட்டது. நரி சரியான யோசனை ஒன்றைச் சொன்னது. ” அந்தப்புரத்தில் அரசகுமாரி குளிக்கிற இடத்துக்குப் போ. அவள் குளிக்கும்போது நகைகளைக் கழட்டி ஒரு பக்கம் வைப்பாள். அந்த ஆபரணங்களில் பெரியதான ஒன்றை எடுத்துக்கொள். பலர் பார்க்கும்படி மெல்லப் பறந்து வந்து அவர்கள் எதிரில் அந்த நகையை பாம்பு இருக்கும் பொந்தில் போட்டு விடு என்றது”.



காக்கை தாமதிக்கவில்லை. பறந்தது அந்தப்புரத்துக்கு. பார்த்தது அரசகுமாரியின் நகைகளை. ஒரு முத்துமாலை அதன் கண்ணை உறுத்தியது. அதையே கொத்தி எடுத்தது.

அங்கு இருந்த அரசகுமாரியின் தோழிகள், ஆ! காக்கை முத்துமாலையைக் கொத்திட்டுப் போகுது என்று கத்தினர். உடனே சேவகர்கள் ஓடி வந்தார்கள். காக்கை மெதுவாக அவர்கள் கண்ணில் படும்படியே பறந்தது. அவர்கள் அருகில் வந்ததும் பார்க்கும்படி அந்த முத்துமாலையை பாம்பு இருக்கும் பொந்தில் போட்டது.

உடனே சேவகர்கள் தம் கையிலிருந்த ஈட்டிகளால் அந்தப் பொந்தைக் குத்திக் கிளறினார்கள். உள்ளே இருந்த பாம்பு சீறி வெளியே வந்தபோது அதையும் கொன்றார்கள். சேவகர்கள் முத்துமாலையுடன் அரன்மனை நோக்கிச் சென்றார்கள். சரியான யோசனையால் நிறைவான பலனை அடைந்த காக்கைத் தம்பதிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன.

நீதி: விவேகத்தோடு கூடிய வேகமே வெல்வதற்கு வழி!
------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஹா ஹா...நாங்கள்லாம் பயப்படமாட்டோம்ல!



Friday, July 16, 2010

தாஜ் மஹாலா, தேஜோ மஹாலயாமா?



நண்பர் ஒருவர் இப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்! தாஜ்மஹாலைப் பற்றிய வெளிவராத குறிப்புக்களை பேராசிரியர் ஓக் என்பவர் ஆராய்ந்து வெளியிட்டிருப்பதாக தகவல் கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை நாம் படிப்பதெல்லாம் மறைக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட வரலாறுதான் என்பதால் இந்த தகவலை கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஒரு பகிர்விற்காக நமது தளத்தில்.....!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

BBC says about Taj Mahal---Hidden Truth - Never say it is a Tomb

Aerial view of the Taj Mahal

The interior water well

Frontal view of the Taj Mahal and dome



Close up of the dome with pinnacle





Close up of the pinnacle


Inlaid pinnacle pattern in courtyard

Red lotus at apex of the entrance


Rear view of the Taj & 22 apartments




View of sealed doors & windows in back

Typical Vedic style corridors


The Music House--a contradiction


A locked room on upper floor


A marble apartment on ground floor


The OM in the flowers on the walls


Staircase that leads to the lower levels


300 foot long corridor inside apartments


One of the 22 rooms in the secret lower level


Interior of one of the 22 secret rooms


Interior of another of the locked rooms


Vedic design on ceiling of a locked room


Huge ventilator sealed shut with bricks


Secret walled door that leads to other rooms .


Secret bricked door that hides more evidence


Palace in Barhanpur where Mumtaz died


Pavilion where Mumtaz is said to be buried


NOW READ THIS.......

No one has ever challenged it except Prof. P. N. Oak, who believes the whole world has been duped. In his book Taj Mahal: The True Story, Oak says the Taj Mahal is not Queen Mumtaz's tomb but an ancient
Hindu temple palace of Lord Shiva (then known as Tejo Mahalaya ) .

In the course of his research O ak discovered that the Shiva temple palace was usurped by Shah Jahan from then Maharaja of Jaipur, Jai Singh. In his own court ch ronicle, Badshahnama, Shah Jahan admits that an exceptionally beautiful grand mansion in Agra was taken from Jai SIngh for Mumtaz's burial . The ex-Maharaja of Jaipur still retains in his secret collection two orders from Shah Jahan for surrendering the Taj building. Using captured temples and mansions, as a burial place for dead courtiers and royalty was a common practice among Muslim rulers.

For example, Humayun,Akbar, Etmud-ud-Daula and Safdarjung are all buried in such mansions. Oak's inquiries began with the name of Taj Mahal. He says the term "
Mahal " hasnever been used for a building in any Muslim countries from Afghanisthan to Algeria . "The unusual explanation that the term Taj Mahal derives from Mumtaz Mahal was illogical in atleast two respects.

Firstly, her name was never
Mumtaz Mahalbut Mumtaz-ul-Zamani," he writes. Secondly, one cannot omit the first three letters 'Mum' from a woman's name to derive the remainder as the name for the building."Taj Mahal, he claims, is a corrupt version of Tejo Mahalaya, or Lord Shiva's Palace . Oak also says the love story of Mumtaz and Shah Jahan is a fairy tale created by court sycophants, blundering historians and sloppy archaeologists Not a single royal chronicle of Shah Jahan's time corroborates the love story.

Furthermore, Oak cites several documents suggesting the Taj Mahal predates Shah Jahan's era, and was a temple dedicated to Shiva, worshipped by Rajputs of Agra city. For example, Prof. Marvin Miller of New York took a few samples from the riverside doorway of the Taj. Carbon dating tests revealed that the door was 300 years older than Shah Jahan. European traveler Johan Albert Mandelslo,who visited Agra in 1638 (only seven years after Mumtaz's death), describes the life of the cit y in his memoirs. But he makes no reference to the Taj Mahal being built. The writings of Peter Mundy, an English visitor to Agra within a year of Mumtaz's death, also suggest the Taj was a noteworthy building well before Shah Jahan's time.

Prof. Oak points out a number of design and architectural inconsistencies that support the belief of the Taj Mahal being a typical Hindu temple rather than a mausoleum. Many rooms in the Taj ! Mahal have remained sealed since Shah Jahan's time and are still inaccessible to the public
. Oak asserts they contain a headless statue of Lord Shiva and other objects commonly used for worship rituals in Hindu temples Fearing political backlash, Indira Gandhi's government t ried to have Prof. Oak's book withdrawn from the bookstores, and threatened the Indian publisher of the first edition dire consequences . There is only one way to discredit or validate Oak's research.

The True Story of the Taj Mahal. This article provides an overview of the research by P. N. Oak Note: This book was banned in India by Indira Gandhi.

Taj Mahal–The True Story (ISBN: 0-9611614-4-2).


The current government should open the sealed rooms of the Taj Ma hal under U.N. supervision, and let international experts investigate.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

பேராசிரியர் ஓக் என்பவர் தேஜோ மஹாலயா என்றிருந்த சிவன் கோவிலே ஷாஜஹான் காலத்தில் தாஜ் மஹால் ஆனது என்று பல்வேறு அடையாளங்களைக் கூறி விளக்க முற்படுகிறார் என்கிறது இந்த செய்தி. இவர் எழுதிய தாஜ்மஹால் பற்றிய உண்மைகள் என்கிற தலைப்பிலான புத்தகம் இந்திரா காந்தியால் தடை செய்யப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் எப்பொழுதும் ஆங்கிலேயனுக்கு அடிமையாகவும், முஸ்லீம் ஆதரவு கட்சியாகவும் மட்டுமே இருந்திருக்கிறது என்பதற்கு இதை விட பெரிய சான்று தேவையில்லை. தற்போது கிறிஸ்தவ கட்சியாகவும் கூடுதல் ப்ரமோஷன் பெற்றிருப்பது காங்கிரஸின் தனிச்சிறப்பு!

முகலாயர் காலங்களில் பல இந்துக்கோவில்கள் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டதும், இந்துக் கோவில்களின் தூண்களும் கற்களும் பல மசூதிகள் கட்ட உபயோகப்படுத்தப்பட்டதும் நாம் அறிந்த வரலாறே! அதே போலவே சிவன் கோவிலும் சமாதி ஆக்கப்பட்டிருக்கலாம்.! யார் கண்டது.

மேலும் விபரங்களுக்கு கண்டிப்பாக இங்கே க்ளிக்கிப் படியுங்கள்!

இப்பொழுது இதைத் தெரிந்து கொண்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்றாலும் பல்வேறு காலகட்டங்களில் இந்துக்களின் கலாச்சாரம் எவ்வாறெல்லாம் சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு எச்சரிக்கை அடையாளமாக இதனை புரிந்து கொண்டால் சரிதான்.

சரி, மேற்கண்ட விஷயத்தை உண்மை என்று எப்படி நம்புவது என்கிறீர்களா!

"வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்யா!"