Tuesday, November 30, 2010

Thursday, November 25, 2010

நம்பிக்கை பூக்கும் தருணம் - இது நிலைக்கட்டும்!


நிதீஷ் குமார்

பீகார் மாநில முதல்வரான நிதீஷ் குமார் பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகிறார். இதில் விசேஷம் என்ன என்று தோன்றுகிறதா?

தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலையில் ரௌடிகளின் ராஜ்ஜியமாகவும் அராஜகங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த பீகாரில் ரௌடிகளை கட்டுப்படுத்தி அமைதியை உண்டு பண்ணி மக்களுக்கு நிம்மதி கொடுத்திருக்கிறார்.

மருத்துவர்கள் வராமலும் குப்பை கூளமாகவும் மட்டுமே இருந்த அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி பொதுமக்கள் அச்சமின்றி வந்து சிகிச்சை பெறுமாறு மேம்பாடடையச் செய்திருக்கிறார்.

காவல் துறை மற்றும் அரசு நிர்வாகங்களை மேம்மடுத்தி மக்கள் பணிகளை தொய்வின்றி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சியை 3.5 சதவீதத்திலிருந்து 11.35 சதவீதம் வரை அவரது ஆட்சி காலத்தில் உயர்த்தி இருக்கிறார்.

இப்படி அவரது மாநில முன்னேற்றம் சார்ந்த பல செய்திகள் வெளிவருகின்றன. எனவே மக்கள் ஜாதி மத பேதமில்லாமல் உண்மையான உழைப்பிற்கு வெற்றி வாய்ப்பை வழங்கியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆக மக்கள் வாய்ஜால அரசியலிலிருந்து விடுபட்டு நிஜமாக நாட்டிற்காக உழைக்கும் அரசியல் வாதிகளை ஆதரிக்கத் துவங்கி விட்டார்கள் என்று தெரிகிறது. இது ஒரு நல்ல முன் மாதிரி. இது மாதிரி பல மாதிரிகள் பல மாநிலங்களிலும் உண்டானால் அது நாட்டிற்கு நல்லது எனலாம்.

தமிழ் நாட்டில் இது போல நடப்பது சந்தேகமே! இங்கே மற்ற மாநிலங்களை விட பார்ப்பனன், ஆரியர்-திராவிடர், மனு தர்மம் என்றெல்லாம் உளரிக்கொண்டும் ஜாதிப் பிரிவினை பேசியும் மக்களை ஏமாற்றுபவர்களை நல்லவர்கள் என நம்பி புத்தி மழுங்கி கிடக்கும் கூட்டம் அதிகம்! அதையும் மீறி தமிழகத்தில் மாற்றம் வந்தால் அதே கூட்டம் குறுகிய காலத்திலேயே மீண்டும் அவர்களையும் மாற்றி விடும்.

எப்படியோ, குஜராத் மற்றும் பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகளை கவனிக்கும் மற்ற அரசியல் வாதிகள் இனி நிஜமாகவே மக்களுக்கு பயனுறும் வகையில் ஆட்சி செய்தால் தான் நாளை நமக்கும் வெற்றி கிடைக்கும் என்று எண்ணத் துவங்கினால் அதுவே நல்ல மாற்றத்திற்கு வழிவகுக்கும்!

இது ஜனநாகத்தின் மீது நம்பிக்கை பூக்கும் தருணம் - இது நிலைக்கட்டும் என பிரார்திப்போம்!

தொடர்புடைய ஒரு சுட்டி

.

Tuesday, November 23, 2010

கீதோபதேசம் - உயர்ந்தவை எதுவோ அதையே நீ செய்வாய்!


அர்ஜுனன் கேட்கிறான்:

க்ருஷ்ணா! சாஸ்திர விதிகளை மீறி - ஆனால் அக்கறையோடு வேள்வி செய்தோர்க்கு எந்த நிலை கிடைக்கிறது? 'சத்துவம்' என்ற தூய நிலையா 'ரஜோ' என்ற ஆசை நிலையா? 'தமோ' என்ற மயக்க நிலையா?

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

அர்ஜுனா! உயிர்களுக்கு இயற்கையாக சாத்விகி, ராஜஸி, தாமசி என்ற மூன்று வைகையான நம்பிக்கை உண்டாகிறது. அதை விளக்குகிறேன் கேள்.

பாரத குமாரா! ஒவ்வொருவருக்கும் அவரவரது இயல்பினைப் பொறுத்தவாறு நம்பிக்கை உண்டாகிறது. மனிதன் நம்பிக்கையிலே நிலைத்தவன். சத்துவம் என்ற தூய்மையில் ஒருவன் நம்பிக்கை வைத்தால், அவன் அவ்வாறே ஆகிறான். அப்படியே ஆசையிலோ, மயக்கத்திலோ நம்பிக்கை வைத்தால் அவ்வண்ணமே மாறுகிறான்.

தூய நம்பிக்கை (சத்துவம்) உள்ளவர்கள் மூலமான என்னையே வழிபடுகிறார்கள். ஆசையில் (ரஜொ) நம்பிக்கை வைத்தவர்கள் குட்டித் தேவதைகளையும், அரக்கர்களையும், வழிபடுகிறார்கள். மயக்க (தமோ) குணம் உள்ளவர்கள் மூதாதையர்களையும் பூதங்களையும் பேய்களையும் வணங்குகிறார்கள்.

சாஸ்திரத்தில் இல்லாத கடுமையான தவத்தை சிலர் மேற்கொள்கிறார்கள். ஆடம்பரமும் ஆணவமும் அவர்கள் தலையைச் சுற்றி அடிக்கின்றன. அவர்கள் செய்யும் தவத்தால் தங்கள் உடலையும் வருத்திக் கொள்கிறார்கள். அந்த உடலுக்குள் இருக்கும் என்னையும் துன்புறுத்துகிறார்கள். அவர்கள் அரக்க குணம் உள்ளவர்கள்.

அர்ஜுனா கேள்!

எல்லோருக்கும் பிரியமான உணவு மூன்று வகையாகும். அப்படியே யாகமும் தபனமும் கூட மூன்று வகைப்படும். அந்த பேதத்தைக் கூறுகிறேன் கேள்.

ஆயுளை வளர்ப்பது, மன வலிமை உடல் வலிமை தருவது, நோய் தராதது, சுகத்தை வளர்ப்பது, சாறுடன் கூடியது, குழம்பாக உள்ளது, நெய்ச்சத்து கலந்தது, மனதுக்கும் சுகம் அளிப்பது, இந்த வகையான உனவுதான் சாத்வீகம் என்று சொல்லப்படும். முதற்குணம் படைத்தவர்களுக்குப் பிடித்தமானது.

கசப்பானது, புளிப்பானது, உப்பு முகுந்தது, உலர்ந்தது, அதிகச் சூடானது, காரம் மிகுந்தது, பசியெடுக்காமல் செய்வது, குடல் எரிச்சலை உண்டு பண்ணுவது இந்த வகை உணவுதான், ராஜஸகுணம் என்னும் இரண்டாவது குணம் படைத்தவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. இவ்வகை உணவுப்பழக்கம் துன்பம், கவலை நோய்களைத் தரக்கூடியது.

வேகாதது, பழையது, குழம்பில்லாமல் வற்றிப் போவது, கெட்ட நாற்றம் அடிப்பது, முன்பு சாப்பிட்டு மிச்சம் வைத்தது, அசுத்தமானது - இந்த வகை உணவு தாமச குணம் என்னும் மூன்றாவது குணம் படைத்தவர்கள் விரும்பும் உணவாகும்.

அது போலவே அர்ஜுனா யாகத்திலும் மூன்று குணங்கள் உண்டு. அவற்றைச் சொல்கிறேன் கேள்!

எந்த வித லாபத்தையும் கருதாமல் சாஸ்திரம் காட்டும் சரியான வழியில் 'இது என் கடமை. ஆகவே இந்த யாகத்தைச் செய்கிறேன்' என்று செய்யும், யாகத்துக்கு "சாத்வீகம்" எனப் பெயர்.

ஏதாவது கிடைக்கும் என்றோ, அல்லது ஊரார் மதிப்பதற்காகவோ எந்த யாகத்தையும் செய்வதன் பெயர் "ராஜஸம்".

சாஸ்திர நெறி தவறி - அன்னதானம் செய்யாமல் - மந்திரங்களை உச்சரிக்காமல், தட்சணை வைக்காமல் - அக்கறையோ நம்பிக்கையோ இல்லாமல் செய்யப்படும் யாகத்தின் பெயர், "தாமசம்".

அர்ஜுனா! அவ்வாறே இனி உடல், வாக்கு, மனம் மூன்றாலும் செய்யப்படும் தவத்தை விவரிக்கிறேன் கேள்!

தூயகுணம் படைத்தோர், ஆச்சரியார்கள், ஞானிகள் ஆகியோரைப் பூஜித்தல்; புனித நீராடி உடல் சுத்தம் செய்தல்; நேர்மையைக் கடைப் பிடித்தல்; பிரம்மச்சரியத்தைக் (கடுமையான ஒழுக்கம்) கைக்கொள்ளுதல் அகிம்சையைப் பின்பற்றல் இவைகள் யாவும் சரீரத்தால் செய்யப்படும் தவமுறைகள் ஆகும்.

யாரையும் புண்படுத்தாத சொல்வன்மை; உண்மையையே உரைத்தல்; நல்லதையே கூறுதல்; கனிவாக உரைத்தல் வேதம் ஓதுதல் - இவை வாக்கினால் செய்யப்படும் தவமுறைகளாகும்.

தெளிந்த உள்ளம்; பரம சாதுவாக இருத்தல்; மௌனத்தையே தாய்மொழியாகக் கொள்ளுதல்; மனத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்; ஆத்மாவைத் தவிர ஒன்றை நினையாதிருத்தல் - இவை மனத்தினால் செய்யப்படும் தவமுறைகளாகும்.

இவற்றில் பலனை விரும்பாத சுயநலமற்ற நம்பிக்கை மிகுந்த முதல் தவம் சாத்வீகத் தவம்.

ஊரார் மதிக்க வேண்டும் என்பதற்காகவும், மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்க்காகவும், தன் பெருமை வெளிப்பட வேண்டியும் செய்யும் தவம் ராஜஸ தவமாகும்.

காரணம் இல்லாமலும், தேவை இல்லாமலும் பிடிவாதமாகவு, தன்னை வருத்திக் கொண்டு செய்யும் தவமும் மற்றவர்களை ஒழிப்பதற்காகச் செய்யப்படும் தவமும், தாமசத் தவமாகும்.

அர்ஜுனா! இவற்றில் உயர்ந்தவை எதுவோ அதையே நீ செய்வாய்!

- பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்.





.

Friday, November 19, 2010

வள்ளுவர் வாக்கு!



தெரிந்து வினையாடல்:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்


விளக்கம்: இந்தச் செயலை, இன்ன காரனத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து அந்தச் செயலை செய்யும் பொறுப்பை அவனிடமே வழங்கினால் கொடுக்கப்பட்ட காரியம் வெற்றிகரமாக செய்து முடிக்கப்படும்.

திரு வள்ளுவர் எழுதிய இந்தக் குறள் சரியாக பொருட்பால் - அரசியல் அதிகாரத்தில் வருகிறது. அதாவது ஒருவரை ஒரு வேலைக்கு நியமிக்கும் போது அவன் அந்த வேலையை சரியாகச் செய்து முடிப்பானா, அதற்கான திறமைகள், தகுதிகள் இருக்கிறதா என்று பார்த்து தான் அவரை அந்த வேலைக்கு நியமிக்க வேண்டும் என்று கூறுகிறது குறள்.

ஆனால் தங்களைத் தமிழர்கள் என்று கூறிக்கொள்ளும் யாரும் திருக்குறளைக் குறிப்பாக இந்தக் குறளைப் படிக்கவே இல்லையோ என்று தோன்றுகிறது. தவறான ஆட்களை தவறான பணிக்கு ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள்!





தூ... வெக்கம் கெட்ட திருடர்கள்!

.
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"


- நான் திருக்குறள் படி சரியா செஞ்சிட்டேன்ல....!


"ஸ்பெக்ட்ரம் என்னவோ கருணாநிதியின் குடும்பச் சொத்தாகவே ஆகிவிட்டது. நாடு, நாட்டு நலன் என்பதெல்லாம் பற்றி அவர்கள் கவலைப் படவே இல்லை. ஏற்கனவே சினிமா கருணாநிதியின் குடும்பத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. இனி அதை வெளியே கொண்டு வருவது கடினம். ரியல் எஸ்டேட் அவர்கள் கையில், அதையாவது முயன்றால் வெளியே கொண்டுவரலாம். இன்னொரு முறை இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு தாங்காது என்று பொது ஜனங்களே பேசிக்கொள்ளும் அளவிற்கு வந்து விட்டது - திரு சோ. இன்றைய ஜெயா செய்தியிகளில்"

மீண்டும் மேற் சொன்ன குறளை நினைவு படுத்திக் கொண்டிருக்கும் போது எனக்கு அந்த சின்னப்பெண்ணின் நினைவு தான் வந்தது.




சின்னப் பெண் ஒருத்தி ஒரு நாள் ஒரு பசுவை இழுத்துக் கொண்டு சென்றுகொண்டு இருந்தாள்...

அதைப் பார்த்த ஒரு பெண்மணி "என்னம்மா இவ்ளோ கஷ்டப்பட்டு இந்தப்பசுவை இழுத்துக்கிட்டு போறியே, என்ன சமாசாரம்?" என்றாள்..

"இது எங்க அப்பாவோட பசுங்க ...இதை அடுத்த தெருவில் உள்ள காளை மாட்டுக்கிட்ட கூட்டிடுப் போறேன்.... "

"என்னம்மா அநியாயம் இதை உங்க அப்பாவே செய்யக்கூடாதா? " என்றாள் அந்தப் பெண்மணி..

"இல்லைங்க ....காள மாடு தான் செய்யணும்.."


"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்" - சிந்திப்பீர்.


Monday, November 15, 2010

சாதனையாளர் மதிப்பிற்குரிய நரேந்திர மோடி!


நரேந்திர மோதி

அமைச்சர் ஆ.ராசாவை துறத்தாத குறையாக ஒரு வழியாக வெளியேற்றி விட்டார்கள். ஊழல்களால் உண்டான அவப்பெயரை மறைக்க தி மு க சப்பைக்கட்டு பேச்சுக்களை பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் சரியாக அவர்களின் முகத்தில் அறைந்தார் போல சென்னையில் நேர்மையாகவும் மக்கள் வளர்ச்சிக்காகவும் ஒரு அரசு எப்படி இயங்க வேண்டும் என்று பேட்டி அளித்திருக்கிறார் திரு நரேந்திர மோடி அவர்கள்! தமிழகம் மட்டுமல்ல பல கேடு கெட்ட ஊழல் அரசியல் வாதிகள் இவரைப் பார்த்தாவது பாடம் கற்க வேண்டும்! நரேந்திர மோடியை என்ன தான் மத வாதி என்று ஒட்டு மொத்த ஊடகங்களின் துணையைக் கொண்டு காங்கிரஸ் அரசு பிரசாரம் செய்யப்பார்த்தாலும் உண்மை என்னவோ வேறாகத் தான் இருக்கிறது என்பது மோடிக்கு ஓட்டு போடும் முஸ்லீம்களின் எண்ணிக்கையே காட்டிவிடுகிறது!

இவரை மரணத்தின் வியாபாரி என்று தூற்றிப்பார்த்தும் இத்தாலி சோனியாவால் குஜராத்தில் தனது இத்தாலி ராஜ்ஜியத்தை நிறுவ முடியவில்லை. தமிழகத்தைப் போலவே குஜராத் சட்டசபைத் தேர்தலின் போதும் பல இலவச திட்டங்களை அறிவித்துப் பார்த்தது இத்தாலி காங்கிரஸ். ஆனால் இலவசங்களைப் புறக்கனித்த குஜராத்தியர்கள் காங்கிரஸையும் புறக்கனித்தனர்.

நரேந்திர மோடியிடம் ஒரு நிருபர் கேட்டார், "உங்கள் பார்வையில் செக்யூலரிஸம் என்றால் என்ன?" அதற்கு மோடியோ, "முழுமையான வளர்ச்சி, எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில் நாட்டை முழுமையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே உண்மையான செக்யூலரிசம்" என்றார்.

காந்தி உருவாக்கிய சுதேசி காங்கிரஸ் தற்போது இத்தாலி காங்கிரஸாகத்தான் இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை. பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் சோனியாவின் தலையசைப்பை கண்டே பணி செய்கின்றனர். ஆக காங்கிரஸின் முழு நடவடிக்கைகளுக்கும் சோனியாவே மூலக்காரணி என்கிற முறையில் மத்திய அரசின் குறைகளை குறிப்பிட நேரடியாக சோனியாவைச் சுட்டியே கேள்வி எழுப்பும் ஒரே இந்திய அரசியல் தலைவர் திரு.நரேந்திர மோடி மட்டுமே! அதனால் தான் அவர் மீது தீராத வண்மத்துடன் சோனியா தொடர்ந்து தாக்குவதும், ஊடங்கள் இத்தாலி காங்கிரஸிற்கு ஆதரவாக நரேந்திர மோடியை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பலவீனப்படுத்த முயற்சிப்பதையும் பார்க்க முடிகிறது.


ஆனால் இன்று வரை இவர்களது பருப்பு வேகவில்லை என்பது அவரது நிர்வாக செயல்பாடும் அதன் மூலமாக அவருக்குக் கிடைக்கும் வெற்றிகளையும் வைத்தே தெரிந்து கொள்ளலாம்!

இதோ மரணத்தின் வியாபாரி பற்றி திரு.சோ இவ்வாறு கூறி அழைக்கிறார்!





மோடியை ஆதரிக்கும் முஸ்லீம் வாக்காளரின் பேட்டி!


இந்த வக்காளர் கூறுவதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் "காங்கிரஸ் எங்களை ஓட்டு வங்கியாகவே உபயோகிக்கிறது. மோதி ஜி யின் வளர்ச்சிப்பணிகளைப் பார்த்தே நாங்கள் அவரை ஆதரிக்கிறோம்"




இதோ தினமலரில் இன்று வெளியான செய்தியைப்! பார்ப்போம்!

**** தொழிலதிபர்கள் மத்தியில் அவர் பேசியதில் இருந்து சில:இன்று, வர்த்தக முறை முற்றிலும் மாறிவிட்டது. எதையும், சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருந்த இடத்தில் இருந்தபடியே உங்கள் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம். அதற்கு குஜராத், தன்னை முழு அளவில் தயார்படுத்திக் கொண்டுள்ளது.முதல் காரியமாக, அரசு நிர்வாகத்தின் அத்தனை மரபுகளையும் உடைத்தெறிந்தோம். இழுத்தடிப்பு, பொறுப்பற்றத்தன்மை, சோம்பல், லஞ்சம் என, அரசு நிர்வாகத்தின் அவலட்சணமாக அறியப்பட்ட அனைத்தையும் தகர்த்தோம்.இன்று, ஆசியாவிலேயே, 24 மணி நேரமும் தடையற்ற, தரமான மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் குஜராத் தான்.


மாநிலம் முழுவதும், 2,200 கிலோ மீட்டருக்கு எரிவாயுக் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை கிடையாது.ஒவ்வொரு குக்கிராமத்திலும், "பிராட் பேண்ட்' இணைப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி, மாநிலத்தில் உள்ள, 1.5 கோடி மாணவர்களுடன், தலைநகரில் இருந்தபடியே உரையாடுகிறேன். முதல்வர் அலுவலகத்திலும் வீடியோ கான்பரன்சிங் வசதி உள்ளது.கடந்த ஏழு ஆண்டுகளாக, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கத்திலேயே உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து 9.5 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளோம். இது, தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம். வைர வர்த்தகத்தில் குஜராத் தான் முதலிடம்.எங்கள் மாநிலத்தில் தொழில் தகராறுகள் இல்லை; தொழிலாளர்கள் பிரச்னை இல்லை; இதனால், 10 ஆண்டுகளாக தொழில் துறை, 12 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. இதோடு ஓய்வதில்லை; இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும் என்பது தான் எங்கள் தீர்மானம்.முதலீடுகளை முன்னிறுத்தியே, "சிறப்பு முதலீட்டு மண்டலங்கள்' (எஸ்.ஐ.ஆர்.,) 30 அமைக்க உள்ளோம். சர்வதேச பொருளாதார நகரம் (கிப்ட்) அமைக்க உள்ளோம். மாநிலத்தின் மொத்த வருவாயில், 30 சதவீதம் தொழிற்சாலைகள், 30 சதவீதம் விவசாயம், 30 சதவீதம் சேவைத் துறைகள் என்பது தான் எங்கள் சமன்பாடு. அப்போது தான், வளர்ச்சிப் பாதையில் இருந்து எந்தப் பகுதியும் விடுபடாமல் இருக்கும்.நான் முதல் முறை முதல்வராக பொறுப்பேற்றபோது, குஜராத் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாகத் திகழ்ந்தது. மின்சார பற்றாக்குறை நிலவியது. நிதிப் பற்றாக்குறையும் இருந்தது.


இன்று தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோம். மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வினியோகிக்கிறோம். நிதி நிலைமையில் உபரி மாநிலமாக உயர்ந்துள்ளோம்.குஜராத் அரசு இதுவரை ஏகப்பட்ட விருதுகளைப் பெற்று இருக்கிறது. விருது பெறுவது என்பது, ஏதோ வாராந்திர நிகழ்ச்சி மாதிரி ஆகிவிட்டது. 200க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்திருப்பதால், எது, எதற்கானது என்பது கூட நினைவில் இருப்பதில்லை.சமீபத்தில் வாங்கிய ஒரு விருதை மட்டும் சொல்கிறேன். குஜராத் முதல்வர் அலுவலகத்துக்கு ஐ.நா.,வின் சர்வதேச விருது வழங்கப்பட்டு உள்ளது (கைதட்டல்). இதுவல்ல விஷயம். எதற்காக இருந்த விருது வழங்கப்பட்டது என்பது தான் விஷயம்.முதல்வர் அலுவலகத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, அணுகுமுறைக்காக இந்த விருது கிடைத்துள்ளது (பலத்த கைதட்டல்).


முதல்வர் அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டதை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாங்கள் பெற்றிருக்கிறோம்.உங்கள் கனவுகளை நனவாக்க, உங்களோடு நான் இருக்கிறேன். இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் என்று மட்டும் தான் சொல்லுவேன்.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.


தொடர்ந்து, தொழிலதிபர்களுடன் கேள்வி - பதில் நிகழ்ச்சி நடந்தது. 70க்கும் மேற்பட்ட கேள்விகள் குவிந்தன. 10 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தவர், மற்றவற்றுக்கு இ-மெயில் மூலம் பதில் அனுப்புவதாக உறுதியளித்தார்.


குறுந்தொழில்களில் கவனம் : வந்திருந்த தொழிலதிபர்களில் ஒருவர், சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு (எஸ்.எம்.இ.,) வழங்கப்படும் வசதி வாய்ப்புகள் பற்றி மோடியைக் கேட்டார். அவர் அளித்த பதில்:எப்போதுமே எங்கள் முதல் முன்னுரிமை, சிறு மற்றும் குறுந்தொழில்களுக்குத் தான். வங்கிக் கடனில் இருந்து, அனைத்து வகையான அனுமதிகள் வரை எதுவாக இருந்தாலும், எஸ்.எம்.இ.,க்கு தான் முன்னுரிமை. இவற்றின் மூலம் தான் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. குஜராத் மாநிலத்தின், 70 சதவீத தொழில் வெற்றி எஸ்.எம்.இ.,க்கள் மூலம் தான் கிடைத்துள்ளது.இந்தியாவில் அதிகம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் குஜராத் மாநில அரசின் பங்கு, 78 சதவீதம். மொத்த இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களும் சேர்ந்து, 22 சதவீதம் தான். இதற்கு முக்கிய காரணம், சிறு மற்றும் குறுந்தொழில்களில் நாங்கள் கவனம் செலுத்துவது தான்.


நெருக்கடியிலும் நெத்தியடி : குஜராத் மாநில தொழில்துறைச் செயலர் சாகு பேசியதாவது:கடந்த 2009ல், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலவிய நேரத்தில், "துடிப்பான குஜராத்' மாநாட்டை நடத்த வேண்டுமா என, அனைத்து தரப்பில் இருந்தும் கேள்வி எழுந்தது. தொழிலதிபர்களும், அடுத்த ஆண்டு வைத்துக்கொள்ளலாமே என அறிவுரை வழங்கினர்.இது தொடர்பாக முதல்வரிடம் கருத்து கேட்டோம். அவர் சொன்னார்: நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள இது தான் சரியான நேரம். நிச்சயம், 2009ல், மாநாடு நடக்கும் என்றார். சொன்னபடியே நடந்தது. 12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான வாக்குறுதிகளைக் கவர்ந்தது; 8,663 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.இவ்வாறு சாகு பேசினார்.


ஒபாமா மீது மறைமுக தாக்கு : "குஜராத்தில் தொழில் துவங்க விரும்புகிறேன். உங்களால் எந்த விதத்தில் உதவ முடியும்?' என, இன்னொருவர் கேட்டார். அதற்கு மோடி சொன்னது:தாராளமாய் வரவேற்கிறோம். நான் ஒன்றும், அமெரிக்க அதிபர் ஒபாமா மாதிரி இங்கு வரவில்லை. பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை எங்கள் அதிகாரிகள் அனைவரும் இங்கு தான் இருப்பர். அதற்குள், குஜராத்தில் என்னென்ன செய்யப்போகிறீர்கள்? என்னென்ன தேவை? என்பவை பற்றி முடிவெடுக்கும் திறன் உங்களிடம் இருக்கிறதா? ஆமெனில், கையோடு அதற்கான உத்தரவைப் பெற்றுச் செல்லலாம்.மோடி இவ்வாறு பேசியதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. "அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியா வந்தபோது வெறுங்கையோடு வந்தார். அமைச்சர்கள், அதிகாரிகளோடு வராமல், தொழிலதிபர்களோடு வந்து, இங்கு ஏராளமான ஆர்டர்களை வாங்கிச் சென்றுவிட்டார். அதனால் தான், இரு நாட்டு ஒப்பந்தம் போன்ற விஷயங்கள் கையெழுத்தாகவில்லை' என ஒரு பேச்சு உண்டு."அவ்வாறில்லாமல், "ஒட்டுமொத்தமாக அதிகாரிகள் குழுவோடு வந்திருக்கிறேன். எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் இப்போதே போட்டுக்கொள்ளலாம்' என்பது தான் மோடியின் கருத்தாக இருந்தது ******

மோடியைப் போல ஒரு முதல்வர் தமிழகத்தில் சாத்தியமா?


ஆத்தீ...நினைச்சாலே தலை சுத்துதே!


.
ராசா, அடுத்து என்ன பண்ணலாம்னு 'உன்' ராணிக்கிட்ட கேட்டியா?


இந்த படத்தை சும்மா தான் போட்டேன்!



[DOT]

வளைகாப்பு என்னும் வரவேற்பு - 2


நம் இந்து தர்மத்தில் எந்த ஒரு சடங்கு சம்பிரதாயங்களும் தனி ஒரு மனிதரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கட்டாயத்தின் பெயரால் செய்யப்பட்டு வந்ததாக இருந்ததில்லை. பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை உளப்பூர்வமாக ஆராய்ந்து அது சரியென ஒருங்கே எல்லோருமாய் உணரும் போது அது சடங்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஒவ்வொரு பெரியோர்களும் வாழ்ந்து பார்த்து கடைபிடித்த சடங்கே வளைகாப்பு அல்லது சீமந்தம்.

பொதுவாக கர்பினிப்பெண்களுக்கு வளைகாப்பு சடங்கு கர்பம் தரித்து ஆறாவது முதல் எட்டாவது மாதம் வரை அவரவர் குடும்ப வழக்கப்படி நடத்தப்படுவதுண்டு. காரணம் ஆறாம் மாதம் முதல் ஒரு ஜான் குளத்தில் கவலையின்றி நீந்திக்கொண்டிருக்கும் குழந்தை வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்குகிறது. உஷ்ணம், குளிர், சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் சகல விஷயங்களையும் குழந்தை கவனிக்கத் துவங்குவது அந்த மாதத்தில் இருந்து தான். எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் குழந்தை நன்றாக கேட்க துவங்குகிறது.

நம் கலாச்சாரத்தில் எந்த ஒரு துவக்கத்தையும் முடிவையும் முத்தாய்ப்பாக நினைத்து கொண்டாடுவது வழக்கம். கருவாய் உருவாகி உதிப்பது முதல் உருவற்று அழிந்து நீர்த்துப்போகும் மறைவு வரை அத்தனையையும் தெய்வீகமாக நினைத்து கொண்டாடுவதே
நமது பழக்கம். ஏனெனில் நாம் எதையும் முழுவதுமாக முற்றுப்பெறுவதாக நினைப்பதில்லை.

அது போல ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்திலேயே அதன் கவனத்தை அந்த துவக்கத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்கிறோம். உன்னைச் சுற்றி நாங்கள் தான் இருக்கிறோம். உன் வரவை எதிர்பார்த்து உனக்காகவே காத்திருக்கும் உனது உறவுகள் நாங்கள் இருக்கிறோம் என்று குழந்தைக்கு உறுதி கூறும் சடங்கு தான் வளைகப்பு.

சில குடும்பங்களில் கர்பினிப் பெண்ணின் வயிற்றை விளக்கேற்றி ஆராத்தி எடுப்பார்கள்! காரணம் இருட்டுக்குள் இருக்கும் குழந்தைக்கு வெளிச்சம் காட்டி இதோ நாங்கள் தான் உனது உறவுகள். நன்றாகப் பார்த்துக்கொள். நீ வெளியே வந்தவுடன் உன்னை வரவேற்கப்போகும் சொந்தங்கள் நாங்கள் என்பதை உள்ளே இருக்கும் குழந்தைக்கு உறுதிப்படுத்தும் விதமாக சடங்கு செய்வார்கள். விளக்கொளி குழந்தைக்குத்தெரியுமா? தெரியும், தாயை பாதிக்கும் ஒளி, உஷ்ணம், ஒலி என எல்லாவற்றையும் குழந்தை உணர முடியும்.


மிகப்பலகாலமாக இந்த பூமியின் பழங்குடி மக்களாகிய இந்துக்கள் அதாவது நாம் கடைபிடித்து வரும் சம்பிரதாயங்களை எல்லாம் பார்த்து அவற்றை பற்றி ஆராச்ச்ய் செய்யும் வெள்ளையர்கள் சில முடிவுகளைக் கூறுகிறார்கள். அவற்றை கொஞ்சம் வரிசைப்படுத்தினால் நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ள சவுகரியமாக இருக்கலாம். இனி அவை!

1. கருவிலிருக்கும் போதே குழந்தைகள் சப்தங்களை கவனிக்கின்றது. அதீத சப்தத்தால் சில சமயங்களில் பாதிக்கப்படுவதும் உண்டு.

2. கருவிலிருக்கும் குழந்தையால் இசையைக் கேட்கமுடியும். ஒரு வயலின் வாசிப்பை விட ட்ரம்ஸ் வாசிப்பின் அதிர்வலைகளை குழந்தை எளிதில் உணர்கிறது.

3. கருவிலிருக்கும் குழந்தை தாயின் குரலையும் இதர சப்தத்தையும் சரியாக பிரித்துப் பார்த்து அறிந்து கொள்கிறது.

4. அமைதியான ஒரு இடத்தில் வாக்குவம் க்ளீனரின் சப்தம் முதல் பக்கெட்டில் தண்னீர் கொட்டும் சப்தம் வரை குழந்தையால் கவனிக்க முடியும்.

5. மனிதக் குரல்களின் மூலமாகவே வெளி உலகை குழந்தை பரிச்சியம் செய்து கொள்கிறது.

6. மற்ற சப்தங்களை விட தாய் மற்றும் தந்தையின் குரல்களை இயற்கையாகவே குழந்தை அடையாளம் கண்டு கொள்கிறது.

7. ஃப்ளாஷ் லைட் அடிக்கப்படும் போது குழந்தை அதனை எதிர் கொள்ளும் முகமாக அசைவதை ஆராய்ச்சிகளின் போது பல தாய்மார்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படி பல ஆராய்ச்சிகள் மூலம் வெள்ளையர்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் விஷயங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது முன்னோர்கள் சடங்குளாக கடைபிடித்து கருவிலிருக்கும் போதே புதிதாக வரப்போகும் ஜீவனுடன் உரையாடி உறவாடிப் பழகியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தான்.

ஆம் அப்படி ஒரு நுட்பமான விஷயத்தை வாழ்ந்தறிந்து கருவிலிருக்கும் குழந்தையோடு எப்படிப்பழகினார்கள் என்பதற்கு சான்று மகாபாரதத்தில் கூறப்படும் அபிமன்யுவின் கதையே சான்று.

மகாபாரதப் போர் துவங்கியபோது, அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்கு பதினாறு வயது. அபிமன்யுவும் போரில் ஈடுபட்டான். “கௌரவர்களின் சக்கர வியூகத்தை என்னால் உடைத்துக்கொண்டு போக முடியும்“ என்று கர்ஜனை செய்தவாறு உள்ளே நுழைந்து போரிட்டான். எதிரிகளை, எல்லோரும் வியக்கும்படி சின்னா பின்னமாக்கினான். ஆனால் உள்ளே போன அவனுக்கு வெளியே வரத் தெரியவில்லை; மாண்டான்.

சக்கர வியூகப் போர் முறையை யாருமே அவனுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை; வியூகத்தை உடைத்துப் போவதை எப்படிக் கற்றான்? வெளியே வரும் முறையை ஏன் கற்கவில்லை?

அர்ஜுனன் கருவிலிருக்கும் போதே தன் மகனுக்கு போரின் போது சக்ரவியூகத்தை உடைத்து உள்ளே செல்வது எப்படி என்கிற வித்தையை வெளியிலிருந்து பேசிப்பேசியே கற்றுக்கொடுத்து இருக்கிறான். சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே செல்ல கற்றுக்கொடுத்த அர்ஜுனன் அதிலிருந்து மீண்டு எப்படி வெளியேற வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்காமல் போய்விட்டான் என்கிறது பாரதம். ஆகவே அதை மட்டும் குழந்தையான அபிமன்யூ கற்றுக் கொண்டிருக்கிறான்!


அதெப்படி முடியும் என்று குதர்க்க கேள்வி கேட்பவர்கள், இன்று உலகம் முழுவதும் நடந்து வரும் கருவிலிருக்கும் குழந்தைக்கு பாடம் சொல்லித் தருவது பற்றிய ஆராய்ச்சியை உற்று நோக்கினால் விடை கிடைக்கும். கருவிலிருக்கும் குழந்தைக்கு பாடம் நடத்தும் பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகிறது. கர்பினிப்பெண்கள் தங்கள் குழந்தைகள் பிறக்கும் பொழுதே புத்திசாலியாகப் பிறந்து உலக ஓட்டத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆவலோடு இது போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள்.

இது போன்ற தற்காலச் சான்றுகளே மகாபாரத அபிமன்யூவின் சக்கர வியூகப்பயிற்சி பொய்யில்லை என்பதை நிரூபிக்கப் போதுமானதாகிறது. நமது இதிகாசங்களையும் சம்பிரதாய சடங்குகளையும் கேலிக்குரியவைகள், மூட நம்பிக்கைகள் என்று சித்தரிப்பவர்கள் அதையே வெள்ளைக்காரன் வேறு பெயரில் எடுத்துச் சொல்லும் போது கேட்டுவிட்டு மண்டையாட்டுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய நகைச்சுவை.

ஆக கருவிலிருக்கும் குழந்தை என்பது குடும்ப பட்ஜெட் போதவில்லை யென்பதால் கலைத்து விட்டுப் போகும் வெறும் சதைப்பிண்டம் அல்ல. அது ஒரு உயிர். நம்மோடு வாழ, நம்மவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நம்மை நாடி வந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன். இந்த உன்னதத்தை உணர்ந்த நம் தாய்மார்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடிக் கொண்டாடி மகிழ்ந்ததே வளைகாப்பு என்கிற சீமந்தச் சடங்கு என்றால் மிகையாகாது. எனவே நமது தாய்மார்கள் காலங்காலமாக கடைபிடித்து வரும் அறிவியல் மற்றும் மனோவியல் ரீதியான அற்புதாமன சடங்கை மதித்துப் போற்றி பாதுகாப்போம்.

வரப்போகும் உயிர்களை குதூகலமாக வரவேற்க தயாராவோம். கருப்பை ஜீவன்களை கழுவிப்போடும் கசடாக நினைத்து கருக்கலைப்பு செய்பவர்களைக் கண்டிப்போம். கருவிலிருக்கும் உயிரையும் நம்மைப் போன்ற ஜீவனாக நினைப்போம். பாரம்பரிய சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் காப்போம்.



இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

.

Sunday, November 14, 2010

ஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா? ஏன்?





அப்புசாமி அவசர அவசரமாக குப்புசாமியைப் பார்க்க ஓடி வந்தார். முகத்தில் மிகவும் பதட்டம் தெரிந்தது.

குப்புசாமி: என்ன அப்பு, ஏன் இப்டி தல தெறிக்க ஓடி வர, என்ன ஆச்சு?

அப்புசாமி: குப்பு, எனக்கு காவே வல்ல! ராத்திரி தூங்கிட்டிருந்தேனா, ஒரு கனவு.. கடவுள் வந்து என்ன வரம் வேணும்ன்னு கேட்டாரு.. நான் 'எனக்கு காவே வரக்கூடாதுன்னு' வேண்டிகிட்டேன். அதுலருந்து எனக்கு 'காவே' வரல.

குப்புசாமி குழம்பிப்போனார். விஷயம் இதுதான். அப்புசாமியின் கனவில் கடவுள் தோன்றி வேண்டிய வரத்தைக் கேள் என்று கூற, அப்புசாமியோ தனக்கு சாவே வரக்கூடாது என்று வேண்டிக்கொண்டார். கடவுளும் அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்து விட்டார்.

காலையில் ஒருவன் அப்புசாமியின் பெயரைக் கேட்க டக்கென்று 'அப்புமி' என்று கூறியிருக்கிறார். எத்தனையோ முறை முயற்சி செய்து பார்த்தும், பாவம் அவருக்கு 'சா'வே வரலை. அந்த பதட்டத்தில் தான் குப்புசாமியைப் பார்க்க ஓடோடி வந்து விஷயத்தை சாவில்லாமல் 'கொல்லிக்' கொண்டு இருக்கிறார். மேலும் பார்ப்போம்.

குப்புசாமி: அடப்பாவி, கனவுல தானேடா வரம் கேட்ட, இப்பவுமா அது பலிக்குது!

அப்புசாமி: என்னவோ தெரியல குப்பு, நான் அதிர்க்கி (ஷாக்) ஆயிட்டேன். கொஞ்ங்க நேரமா இப்டி தான் பேத்தறேன்.

குப்புசாமி: அடப்பாவி, உன் கூட பேசிட்டிருந்தா கொஞ்ச நேரத்தில நானும் கக்கா கிக்கீன்னு பேசுவேன் போலருக்கே!

அப்புசாமி: கேலி பண்ணாத குப்பு! காலைல இருந்து எல்லா கடவுளையும் மாத்தி மாத்தி வேண்டிக்கிட்டேன் இது கரியாக மாட்டேன்குது...ஐ மீன் கரெக்ட் ஆக மாட்டேன்குது.

குப்புசாமி: அட அப்பு, கடவுள்ங்கறது ஒன்னே ஒன்னு தான். அவங்கவங்களுக்கு பிடிச்ச உருவத்தில கும்பிடறதனால பல சாமிங்க இருக்கு. நீ ஏன் எல்லாத்தையும் கும்பிடற. ஏதாவது ஒரு சாமிய மனச அமைதியா வெச்சி தியானிக்க வேண்டியது தானே!

அப்புசாமி: குப்பு, எனக்கு ஒரு 'கந்தேகம்'... ஐ மீன் 'டவுட்'

குப்புசாமி: என்ன?

அப்புசாமி: எல்லா கடவுளையும் கும்பிட்டாலும் கார்த்தால கர்க்குக்கு போய் ஏகுவை... ஐ மீன் தேவாலயத்துக்கு போயி கர்த்தர் முன்னாடி நின்ன உடனே என் கண்ணுல இருந்து தாரை தாரையா தண்ணி ஊத்த ஆரம்பிக்கிடுக்கு. ஒரே அழுகையா வந்துது. ரெண்டு நிமிடம் நல்லா அழுதப்பறம் மனம் அமைதியா இருந்திக்கு. வேற எந்த 'காமியை' ஐ மீன் 'காட்' ஐ பாத்தாலும் இப்டி ஆகறதில்லை. அது ஏன் குப்பு எனக்கு இப்டி நடந்தது.

குப்புசாமி: அப்பு, அதுக்கு ஒரு மனோவியல் காரணம் இருக்கு.

அப்புசாமி: என்ன?!!!

குப்புசாமி: நீ காலைல என்ன மூட்ல இருந்த...

அப்புசாமி: ஐயோ, 'கா(சா)வே' வரலையே ஒரே பயத்துல அழுவுற நிலைமைல இருந்தேன்!

குப்புசாமி: அதான் காரணம். விலாவாரியா சொல்லனும்னா, ஒரு சினிமா பார்க்கறோம். அந்த சினிமால ஹீரோ குடும்பத்துக்காக கடினமா உழைக்கறவனா இருந்து க்ளைமேக்ஸிலே ரொம்ப கஷ்டப்பட்டு சாகற மாதிரியும் படம் முடிஞ்சா அந்த காட்சிகள்ல நம்மை அறியாம மனசு கனமாகி விழியோரங்கள்ல கண்ணீர் வந்திடும். ஏசுநாதர் பற்றி மக்களிடம் சொல்லப்படும் கதைகளும் இதே போன்றதொரு சோகக் கதை தானே! மக்களுக்காக உழைத்து கடைசியில் மிகவும் கஷ்டப்பட்டு இறக்கும் ஒரு கதாபாத்திரம். அதனால் அந்த கதை நாயகனின் உருவத்தைப் பார்த்த உடனேயே மனசு கனமாகி அழுகை வருது.

பாரு அப்பு..., பொதுவாவே எல்லாருமே நிறைய கஷ்டத்துல இருப்பாங்க. யாருக்கிட்டயாவது சொல்லி அழமாட்டோமான்னு நினைச்சிக்கிட்டு இருப்பாங்க. ஏற்கனவே மனம் நிறைய துக்கத்துடன் தேவாலயம் போறவங்க அங்க இருக்கிற சோகமான நம்ம கதைநாயகனைப் பார்த்தவுடன் கண்ணீர் விட்டு அழத்துவங்கிடறாங்க. அதைத்தான் நீயும் பண்ணிருக்க. எப்பவுமே கண்ணீர் விட்டு அழுதுவிட்டால் மனதில் உள்ள பாரம் குறைந்து மனது லேசான மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும். இது ஹியூமன் சைக்காலஜி. அது தான் உனக்கும் நடந்திருக்கு.

அப்புசாமி: ஓ, அப்ப அதுக்கு என் மனது தான் காரணமா? கர்த்தரோட அருள் இல்லையா?

குப்புசாமி: அருள் இருக்கோ இல்லையோ தெரியாது.. ஆனா உனக்குள்ள முட்டிக்கிட்டு இருக்கிற அழுகைய வெளியில கொண்டு வர ஏசுவோட சோகமான உருவம் ஒரு உந்து சக்தியா பயன்பட்டுவிடுகிறது. அது தான் நிஜம். ஆனா இந்த சராசரி மனோவியல் வடிகால்களைக் காட்டியே பலபேரை மதம் மாற்றிவிடுகிறது மதபோதகக் கும்பல். மதம் மாறின பலபேர் ஏசுவை கும்பிட்டா மனசு அமைதியா இருந்திச்சி. அதான் மாறிட்டேன் என்பார்கள்.

அப்புசாமி: கரி... ஐ மீன் 'ரைட்டு', ஆனா அது தப்பில்லையே... அந்த கடவுளால ப்ராப்ளம் தீர்ந்தா நல்லது நடந்ததுன்னு எடுத்துக்கலாம்ல்ல.

குப்புசாமி: அங்க தான் எல்லாரும் தப்பு பண்றாங்க அப்பு, மனசு சமாதானம் அடையறது வேறு பிரச்சனைகள் தீர்வது வேறு. ஏசுவ கும்பிட்டா மனசு சமாதானம் கிடைக்குதுங்கறது சரி தான். ஆனா அவர்கள் பிரச்சனைக்கு தீர்வை அது கொடுக்கிறதா என்பதை தான் பார்க்கனும்.

உதாரணமா, உன்னை நாய் துறத்துதுன்னு வெச்சிக்கோ... நீ ஏசுவை மனசில நினைச்சிக்கிட்டதால உன் மனசு சமாதானமா இருக்கும். இப்போ பதட்டம் இல்லாதவனா அமைதியான மனசோட உன்னால ஓட முடியும். ஆனா நாய் துறத்துவது நிக்கலையே! என்ன பிரயோஜனம். மன அமைதியா இருந்தாலும் எவ்வளவு தூரம் நாய் துறத்தலுக்காக ஓடிக்கிட்டே இருப்ப?

அப்புசாமி: அதானே!

குப்புசாமி: உத்வேகத்தோட போராட்டங்களில் ஜெயிப்பது தான் சராசரி வாழ்க்கைக்கு முக்கியம். அதனால தான் இந்து கடவுளர்களெல்லாமே தீமையை அழிப்பவர்களாகவும், துஷ்டர்களை வென்று ஜெயிப்பவர்களாகவும் வெச்சிருக்காங்க. இது போன்ற கடவுளரை ஆதர்ஷ நாயகர்களாகக் கொள்ளும் போது நமக்கும் வெற்றி நாயகனாகவே இருக்க வேண்டும் என்ற உத்வேகம் வரும். இன்னும் முனைப்புடன் வாழ்க்கையின் கஷ்டங்களை எதிர் கொண்டு பிரச்சனைகளை தீர்க்க இந்த உத்வேகம் உதவும். அதுக்கு தான் சாமியை அந்த மாதிரியெல்லாம் உருவகிச்சிருக்காங்க. இதெல்லாம் ஒரு மனக்கணக்கு தான்.

அப்புசாமி: அப்போ கர்த்தரை விட இந்துகடவுளர் தான் உயர்வு ன்னு கொல்றியா?

குப்புசாமி: நான் அப்படி சொல்லவரல. சாமின்னா எல்லாமே சாமி தான்.
நீ அழுவாச்சியா வந்திச்சுன்னியே அதுக்கு தான் இவ்வளவும் விளக்கினேன். உனக்கு ஏசுவை கும்பிடப்பிடிக்கும்ன்னா உங்க வீட்டு ராமர், க்ருஷ்ணர் சிவன் பக்கத்திலேயே ஏசுவையும் வெச்சிக்கோ. எந்த ரூபத்தை வேணும்னாலும் சாமியா கும்பிடற சிறப்பு இந்துக்களுக்கு மட்டும் தானே இருக்கு.

அப்புசாமி: ஆமாம் ஆமாம், அப்படி உயர்வான மதத்தில இருந்திக்கிட்டு கிலபேர் ஒரு கடவுள கும்பிடறதுக்காக போய் ஒரு மதமே மாறிடறாங்க. அவங்க அடையாளத்தையே அடியோட மாத்திக்கிட்டு வேற்று நாட்டு விகு(சு)வாகி(சி)களாகவும் ஆகிடறாங்க.

குப்புசாமி: இதைத்தான் 'வ' க்காண்டி ஒயின் ஷாப்பையே விலைக்கு வாங்கற கதைன்னு சொல்வாங்க.

அப்புசாமி: அதென்ன 'வ'

குப்புசாமி: அதான்பா 'குவாட்டர் கட்டிங்க்'

அப்புசாமி: அதெல்லாம் இருக்கட்டும் என் ப்ராப்ளத்துக்கு என்ன பண்ண...

குப்புசாமி: ஹா ஹா ஹா ஹா

அப்புசாமி: ஏன்பா இந்த ஹா ஹா....

குப்புசாமி: இல்ல, உங்க வீட்டு மொட்டை மாடிக்கு எப்ப போனாலும் உன்னை ஒரு காக்கா கொத்திக்கிட்டே இருக்குன்னு அடிக்கடி சொல்லுவியே..

அப்புசாமி: அதுக்கென்ன இப்போ...?

குப்புசாமி: ஹா ஹா இல்ல அப்பு, கனவுல சாமிகிட்ட வரம் கேட்டப்போ நல்ல வேளையா 'காக்கா'வே வரக்கூடாதுன்னு நீ கேக்கலை....

அப்புசாமி: கேட்டிருந்தா..?

குப்புசாமி: உன் உச்சரிப்பை தப்பா புரிஞ்சிக்கிட்டு சாமி அப்படியே ஆகட்டும்ன்னு சொல்லப்போய் உனக்கு 'கக்கா' வே வராம போயிருந்தா நீ என்ன பண்ணியிருப்பேன்னு நினைச்சேன். ஒரே சிப்பு சிப்பா வந்திடிச்சு.... ஹாஹ்ஹ்ஹ் ஹாஹ்ஹ் ஹா... ஐயோ ஐயோ!

அப்புசாமி: "போடா..ங்..இவனே..." என்று குப்புவை முறைத்துக்கொண்டே அடுத்த தூக்கத்திற்காக வீட்டை நோக்கி நடக்கலானார். மறுபடி கனவு வருமா?


.