Monday, January 31, 2011

கிருபானந்த வாரியாரின் பொன்மொழிகள்!


நூலறிவு, குலத்தின் உயர்வு, கருணை, பெரும்புகழ், செல்வம், கைம்மாரு கருதாது உல்ளதை வழங்குதல், சிறப்பு, ஒழுக்கம், அரிய தவம், நியமம், நெருங்கிய நட்பு, சமானமில்லாத வலிமை, உண்மை, தூய்மை, அழகு ஆகிய இத்தனை நலன்களும் அடக்கமின்மை என்ற ஒரு தீயகுணத்தால் அழிந்து போகும்.

தன்னிடமுள்ள பொருட்களின் மேல் வைத்திருக்கும் பிடிப்பு பற்று எனப்படும். இன்னும் அது வேண்டும் இது வேண்டும் என்று கொழுந்து விட்டு எரிகின்ற நினைவுகள் ஆசை எனப்படும். இதை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைக்கவில்லையென்றால் எத்தனை வந்தாலும்
திருப்தியின்றி நெய்விட, நெய்விட எரிகின்ற நெருப்பின் தன்மைபோல், சதா உலைந்து அலைந்து நிம்மதியற்ற தன்மையை உண்டாக்கும் பேராசை குணத்திற்கு நம்மை கொண்டுபோய் விட்டு விடும்.

கோபத்தையும் புலனையும் வென்றவர்கள் சொர்கத்தின் வாயிலைப் பார்கின்றனர்.

வீட்டின் வாயிலில் நல்லவனை நிறுத்தி தகாதவர்களை விடாதே என்று காவல் காக்கச் சொல்வது போல நெஞ்சில் நல்லுணர்வு என்ற காவலை வைக்க வேண்டும். அதனால் தீய எண்ணங்களை எண்ணுவதற்கு இடமிராது. நல்லெண்ணங்களே தோன்றும்.

சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தருமம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்கள் மட்டுமே நமக்கு உகந்த உற வினர்கள் ஆவர்.

இன்சொல்லே பேசுகிறவர்களுக்கு உலகில் ஒரு வகையான துன்பமுமில்லை. எம வாதனையும் கிடையாது. சிவகதி திண்ணமாகக் கிடைக்கும்.

தெரியாத ஒருவனுக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு அந்த விஷயத்தின் நுட்பங்களைக்கூறி மேலும் தெளிவுபடுத்தலாம்.

ஆனால், இது நல்லது இது கெட்டது என்று அறியாதவனைச் சீர்திருத்த ஆண்டவனாலும் முடியாது.

விடாது கடைந்தால் பாலிலிருந்து வெண் ணெய் வெளிப்படும். அதுபோல, இடைய றாத தியானத்தாலும், வழிபாட்டாலும் இறைவன் நம் உள்ளத்தாமரையில் வெளிப்படுவான்.

பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியசீலர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது.

நாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பலமடங்கு பெருகி நம்மையே வந்தடையும். இளகிய தங்கத்தில் ரத்தினக்கல் பதியும். அதுபோல, இறைவனை மனமுருக வழிபட்டால் உருகிய நமது உள்ளத்தில் கடவுள் ஒன்றி விடுவார். எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாகவே வழிபடுங்கள். சாதாரணநீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.

-திரு முருக கிருபானந்த வாரியார்


.

Sunday, January 23, 2011

ஆர்ய - திராவிட என்பது இனமல்ல!



வேத சாஸ்திரங்களில் ஆரிய, திராவிட என்று இரண்டு வேறு இனங்கள் இருந்தன என்பதர்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் வெள்ளைக்காரர்கள் பிரித்தாளும் கொள்கைப்படி, அவன் ஆரியர் திராவிடர் என்ற இனவாத தியரியை நம்மிடையே புகுத்திவிட்டான்.

சாஸ்திரப் பிரகாரம் அந்த காலத்தில் அர்ய என்றால் 'மதிப்புக்குரிய' என்று அர்த்தம். அவ்வளவுதான். இன்றைய பிரிவினைவாத கொள்கைப்படி ஆரியனான அர்ஜுனனைப் பார்த்தே பகவான் கண்ணன் கீதையில் 'நீ என்ன இப்படி மனத்தளர்ச்சி அடைந்த அநார்யனாகி விட்டாயே!' என்கிறார். 'அநார்யன்' என்றால் 'ஆர்யன் அல்லாதவன்' என்று பொருள். (வார்த்தைக்கு முன்னே 'அன்' சேர்த்தால் அது எதிர்ப்பதமாகக் கொள்ளப்படும். ஆங்கிலேயன் இதைத்தான் காப்பியடித்தான். ('ஹாப்பிக்கு எதிர்ப்பதம் 'அன்-ஹாப்பி')

விஷயத்திற்கு வருவோம். அர்ஜுனனை 'அநார்யனாக ஆகிவிட்டாயே' என்று பகவான் குறிப்பிட்டதர்கு அர்த்தம் 'மதிப்பிற்குரியவனாக அல்லாமற் போய்விட்டாயே!' என்பது தான். ஆக ஆர்யன் என்பது இனத்தை குறிக்கும் சொல் அல்ல. உயர்ந்த அரசரை மதிப்பிற்குரிய புதல்வரே என்றழைப்பதற்கு 'ஆர்ய புத்திரரே!' என்று அழைப்பார்கள். உடனே வெள்ளைக்காரன் அவனை ஆர்யனின் புத்திரன் என்று மட்டமாகபுரிந்து கொண்டு இவர்கள் வடக்கே 'அரசாண்டவர்கள் ஆர்யர்கள்' என்று கதையாகவும் கட்டிவிட்டனர். பரப்பிவிட்டனர்.

அதே போல திராவிட என்பதும் இனப்பெயர் அல்ல. சாஸ்திரங்களில் ஒரே இனத்தைச் சேர்ந்த பாரத மக்களைத்தான் விந்திய மலைக்கு வடக்கே உள்ளவர்களை கௌடர்கள் என்றும், தெற்கே உள்ளவர்களை திராவிடர்கள் என்றும் கூறியிருக்கிறது. அப்படியே திராவிடர்கள் என்று தெற்கே உள்ளவர்களை அழைத்தாலும் அது இனப்பிரிவு ஆகாது. ஒரு பிரதேசத்தின் மக்களைக் குறிக்கும் சொல் அவ்வளவே!

ஆதியில் விந்திய மலைக்கு வடக்கே உள்ள தேசம் முழுவதும் கௌட தேசம்
என்றும் அதற்குத் தெற்கில் உள்ளது முழுவதும் திராவிட தேசம் என்றும் தான்
இருந்தது. ஆரியதேசம் என்று கூட எதுவும் இல்லை. ஒரு பிரதேசத்திலிருந்து
இன்னொன்றுக்குப் போனவர்களை அந்தப் பிரதேசப் பேரை வைத்தே
குறிப்பிடுவார்கள். அந்த முறையில் பார்த்தால் காசி முதலான அநேக வட
இந்தியப் பகுதிகளில் வசிக்கும் பிராமணர்கள் பலருக்கு 'திரவிட்' என்று பெயர்
இருக்கும் (sur name). ஆக தமிழ் தேசத்திலிருந்து வடநாட்டில் குடிபோனவர்கள்
பிராமணர்களானாலும் அவர்களை திராவிடர்கள் என்றே அக்காலத்தில்
அழைத்தனர்.

வெள்ளையர்களின் இனப்பிரிவினை தியரிப்படி பிராமணர்கள் திராவிடர்களுக்கு மாறானவர்கள், விரோதிகள், எதிரிகள் என்று கூடச் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் இன்றைக்கு வடதேசத்தில் தமிழ் நாட்டுப் பிராமண வம்சத்தவர்களுக்கே தான் 'த்ரவிட்' அடைமொழி இருக்கிறது.
(உதாரணம்:: ராகுல் த்ரவிட்).

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

ஆக திராவிடம் என்பது பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லே அன்றி இனத்தை குறிக்கும் சொல் அல்ல. விந்திய மலைக்கு தெற்கே வாழ்ந்தவர்கள் இன்றும் வாழ்பவர்கள் பிராமணர்களாக இருந்தாலும் அவர்கள் திராவிடர்களே!

மேலும் விரிவாக

ஆரியர்கள், திராவிடர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் * வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் கருத்து

மதுரை: "ஆரியர்கள், திராவிடர்கள் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என
கூறுவது தவறு. இருவருமே ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது' என்று இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டி.என்.திரிபாதி கூறினார்.

மதுரை காமராஜர் பல்கலை வரலாற்று துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:

எந்த நாட்டின் வரலாற்றையும் தொல்பொருள் துறை மற்றும் பாரம் பரியத்தையும் சேர்த்து ஆய்வு செய்தால் தான் தெரிந்து கொள்ள முடியும். வரலாற்றின் நோக்கமே உண்மையை அறிவது தான். வரலாற்று ஆய்வுகள் விருப்பு வெறுப்பின்றி இருக்க வேண்டும். வரலாறு, திருத்தி எழுதப்படாத நாடுகளே கிடையாது. எகிப்து, கிரேக்கம், சீனா, இந்தியா என இதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

அலெக்சாண்டர் படையெடுத்த பிறகு தான் இந்தியாவுக்கு என தனி வரலாறு தோன்றியது என்ற கருத்து முன்பு இருந்தது. பிரிட்டிஷார் தான் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்களை தோண்டி ஆராய்ச்சி செய்து, இந்தியாவின் பழமையான வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்ந்தனர். எகிப்து, கிரீஸ் நாடுகளுக்கு இணையாக இந்திய வரலாறும் பழமையானது. "தமிழ் பிராமி' எழுத்துக்கள் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டன. பண்டைக் காலத்திலேயே ரோமானியர்களுடன் தமிழர்கள் கடல் வாணிபம் செய்தனர்.

வட மாநிலத்தவர் ஆரியர்கள் என்பதும், தென்மாநிலத்தவர் திராவிடர்கள் என்பதும் தவறான கருத்து. மனிதர்களின் தோற்றம் பற்றி ஆய்வு செய்ய இப்போது "ஜெனீட்டிக்ஸ்' பயன்படுத்தப்படுகிறது. "ஆர்க்கியாலஜி', "ஜெனீட்டிக்ஸ்' ஆகிய வார்த்தைகளை இணைத்து "ஆர்க்கியோ ஜெனீட்டிக்ஸ்' என அழைக்கின்றனர். 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்காவில் இருந்து ஒரு மனித இனம் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதர்களின் படிவங்களை (பாசில்) ஆய்வு செய்தால் இந்த உண்மை புலப்படுகிறது.

வட மாநிலத்தவர் மற்றும் தென்மாநிலத்தவர் "ஜீன்'கள் ஒரே மாதிரி இருக்கின்றன. எனவே, ஆரியர்கள், திராவிடர்கள் என பிரிப்பது தவறு. தோலின் நிறம், உருவ அமைப்பை வைத்து மனிதர்களை வேறுபடுத்தக் கூடாது. "ஜீன்'களை வைத்து தான் பிரிக்க வேண்டும். "ஜீன்'கள் ஒரே மாதிரியாக இருந்தால் அது ஒரே இனம். தமிழும், சமஸ்கிருதமும் ஒரே குழுவில் இருந்து தோன்றிய மொழிகள். ஆனால், தனித்தனியாக வளர்ந்தன.

"மைட்டோகான்ட்ரியல் டெஸ்ட்' என்ற "ஆர்க்கியோ ஜெனீட்டிக்ஸ்' முறையில் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனிதர்களின் "செல்'லில் உள்ள "ஒய்' குரோமோசோம்களை ஆய்வு செய்கின்றனர். 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் படிவங்களில் உள்ள "ஜீன்'களுடன் இவற்றை ஒப்பிடுகின்றனர். இந்தியர்களின் "ஜீன்'கள், 60 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய மனிதர்களுடன் ஒத்துப் போகின்றன. எனவே, ஆரியர்கள் படையெடுத்து திராவிடர்களை தென்னிந்தியாவுக்கு தள்ளி விட்டனர் என்ற கருத்து இதில் அடிபட்டுப் போகிறது. மொழிகள் வேண்டுமானால்
இவர்களுக்குள் வேறுபட்டிருக்கலாம். இனம் ஒன்று தான்.

இவ்வாறு திரிபாதி கூறினார்.

தகவல் : தினமலர்!

வெள்ளைக்காரனின் இந்த அர்ய திராவிட இனப்பிரிவினை கட்டுக்கதைகளை தூண்டி விட்டு இன்றும் அவற்றை பற்றிய உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள விடாமல் இந்துக்களிடையே பிரிவினை வாதத்தை வளர்த்து வரும் அரசியல் வாதிகள் அம்பேத்கர் கூறும் மற்ற பிரிவினைகளைப் பற்றி மூச்சு கூட விடுவதில்லையே ஏன்?

டாக்டர் அம்பேத்கர் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை’ என்ற நூலில் கூறுகிறார்:-

”பொதுவாக, முகமதியர்கள் ஷேக்குகள், சையத்துகள், மொகலாயர்கள், பட்டாணியர்கள் என நான்கு இன மரபுக் குழுக்களாகப் பிரிந்திருப்பதுதான் வழக்கம். ஆனால் இது வங்க மகாணத்துக்குச் சிறிதும் பொருந்தாது. முகமதியர்கள் இரண்டு பிரதான சமூகப் பிரிவினைகளை ஒப்புக்கொள்கின்றனர்.

1. அஷ்ராஃப் அல்லது ஷராஃப், 2. அஜ்லாஃப் ஆகியவையே அவை.

அஷ்ராஃப் என்பதற்கு ”உயர் குடிமகன்” என்று பொருள். ஐயத்துக்கிடமற்ற அயல்நாட்டு வழித்தோன்றல்களும், மேல்சாதி இந்துக்களிலிருந்து மதம் மாறியவர்களும் இப்பிரிவில் அடங்குவர். தொழில் புரிவோர் உள்பட இதர எல்லா முகமதியர்களும், கீழ்ச் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களும் அஜ்லாஃபுகள், ஈனர்கள், இழிந்தவர்கள், கடைகெட்டவர்கள் என்பன போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பதங்களில் அழைக்கப்படுகின்றனர்.

மேலும், காமினாக்கள், இதார்கள், கீழ்த்தரமானவர்கள் எத்தகைய தகுதியுமில்லாதவர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. ரசில் என்றும் இவர்களைக் கூறுவார்கள். ரிஸால் என்னும் பதத்தின் மொழிச் சிதைவே ரசில் என்பது.

சில இடங்களில் மூன்றாவது ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அனைவரிலும் மிகத் தாழ்ந்தவர்கள்’ என்று இதற்குப் பொருள். இவர்களுடன் எந்த முகமதியர்களும் சேர்ந்து பழகமாட்டார்கள். இவர்கள் முசூதிகளில் நுழையவோ, பொது கல்லறைகளை அல்லது இடுகாடுகளை பயன்படுத்திக் கொள்ளவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்துக்களைப் போன்றே முஸ்லிம்களிடையேயும் சமுதாயத்தில் அவரவர் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து சாதிப்பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன.

I. அஷ்ராஃப்கள்-உயர்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வருமாறு:

1. சையத்துக்கள். 2. ஷேக்குகள் 3.பட்டாணியர்கள் 4.மொகலாயர்கள் 5.மாலிக்குகள் 6.மிர்ஜாக்கள்

II. அஜ்லாஃப்-என்பவர்கள் கீழ்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இவர்களில் பின்வரும் பிரிவினர் அடங்குவர்.

1. பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள ஷேக்குகளும் மற்றும் பூர்வீகத்தில் இந்துக்களாக இருந்து மதம்மாறி அஷ்ராஃப் சமூகத்தில் இடம் பெறாத பிராலி, தக்ராய் போன்றவர்களும்.

2. தார்ஜி, ஜொலாஹா, பக்கீர், ரங்ரெஸ்

3. பர்ஹி, பாதியரா, சிக், சுரிஹார், தய், தவா, துனியா, காத்தி, கலால், கசய், குலா குஞ்சரா, லாஹரி, மஹிஃப்ரோஷ், மல்லா, நலியா, நிகாரி

4. அப்தல், பாகோ, பெதியா, பாட், சாம்பா, தஃபாலி, தோபி, ஹஜ்ஜம், முச்சோ, நகர்ச்சி, நாத், பன்வாரியா, மதாரியா, துந்தியா

III. அர்ஸால் அல்லது மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் பிரிவினர்.
பனார், ஹலால்கோர், ஹிஜ்ரா, கஸ்பி, லால்பெகி, மெளக்தா, மெஹ்தார்.”

- டாக்டர் அம்பேத்கர்.
நன்றி:- தமிழ் ஹிந்து.காம்-பெரியாரின் மறுபக்கம்!

Friday, January 21, 2011

இவரை நம்பித்தான் இந்தியாவையே ஒப்படைத்தார்கள்!


நல்ல பலக்கம்

கையெடுங்க சார் கூச்சமா இருக்கு!

ஏன் எல்லாரும் எங்கேயோ பாக்கறாங்க!

ஆமாம், நீங்க இங்க்லீஷ் படிப்பீங்களா?


 ரெண்டு பேர்ல யார் அழகுன்னு சொல்லட்டுமா?

 
நீ தான் ரொம்ப அழகு!

என்னங்க, பயமா இருக்கு. வாங்க இங்கிலாந்துக்கே போயிடலாம்!


'அன்றும் இன்றும்' காங்கிரஸ் வெள்ளைக்காரிக்கு அடிமை?!

.

Thursday, January 20, 2011

ஒரே விலை!


வெங்காயம் ரூ.65/-          பெட்ரோல் ரூ.65/-           குளிர்ந்த பீர் ரூ.65/-


சூப்பரப்பு!

Wednesday, January 19, 2011

சபரிமலை சோகம்!



மனிதர்களை இழந்த உறவுகளின் அழுகுரல் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன புல்மேட்டு விபத்து எனும் அதிர்ச்சியான சம்பவத்தினால்.

அந்த இடம் வனத்துறைக்கு கட்டுப்பட்டது அதனால் நாங்கள் பொறுப்பல்ல என மாநில அரசு நழுவுகிறது. வனத்துறையோ, வனத்தை பாதுகாப்பது வேறு அலைஅலையான மக்கள் கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுப்பது என்பது வேறு. எனவே கோடிக்கணக்கில் கூட்டம் வரும் போது அவர்களை காப்பது அரசின் கடமை என்கிறது. கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்களை சரியாக வழிநடத்த காவல் துறையோ கண்காணிப்போ எதுவுமே இல்லாமல் தவித்தோம் என்கிறார்கள் பக்தர்கள். நடந்து முடிந்த மனித இழப்புகளுக்கு யார் மீது பழி போடலாம் என்று அலைகிறது கேரள அரசு.

நம்மூர்களில் தேர் திருவிழாக் கூட்டம் என்றாலே நூற்றுக்கணக்கில் காவலர்களை அரசாங்கம் குவிக்கிறது. சுற்றுலா பொருட்காட்சி நடத்தினாலே அவசர அழைப்பிற்கு தீயணைப்பு வண்டியை நிறுத்தி வைப்பார்கள். சில லட்சம் மக்கள் கூடும் இடத்திற்கே அரசு முனைந்து இத்தனை பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கிறது என்றால் கோடிக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடும் போது அந்த மக்கள் வந்து செல்லும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு அரசுக்கு மட்டுமே இருக்கிறது. ஆனால் கேரள அரசோ தனது பொறுப்பை வெட்கமில்லாமல் தட்டிக்கழிக்க பார்க்கிறது.

இந்நிலையில் இறப்பு பற்றிய முழுமையான் எண்ணிக்கை வெளிவரவில்லை என்றும் பள்ளத்தில் விழுந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் அங்கே சென்று வந்த பக்தர்களுக்குள் பயம் கலந்த பேச்சு இருக்கிறது. சபரிமலை சென்று காணாமல் போனவர்கள் பற்றிய சரியான புள்ளி விபரங்களை சேகரித்தால் எதிர்வரும் நாட்களில் ஏதேனும் தகவல் வரலாம் என்ற அச்சத்தை தெரிவிக்கின்றனர் சிலர். அப்படி எதுவும் வராமல் இருந்தால் நல்லது.

பக்தர்களிடம் வியாபாரம் செய்து காசு சம்பாதிக்க கடை நடத்திய மலையாள சேட்டன்கள் கூட்ட நெரிசலால் கடைக்குள் ஒதுங்கிய பக்தர்களை கட்டையால் அடித்து விரட்டிய கொடுமையும் நடந்திருக்கிறது என்று செய்திகளில் வாசிக்கிறார்கள்.



சாமிக்கும் பயமில்லை மனிதர்கள் மீது கருணையும் இல்லை. தத்துவம் சாராத பக்தியால் ஆகப்போவது என்ன? சாமியைக் கண்டால் மோட்சம் கிட்டும் என்ற கோஷத்துடன் சென்றவர்கள் ஜோதியைக் கண்டவுடன் மோட்ஷத்திற்கு போனார்களே! இது இறைவனின் கொடையா கொடுமையா? மோட்ஷத்திற்கு போனார்களா அல்லது மோசம் போனார்களா?

பக்தி பணமாகிக்கொண்டிருப்பதன் விளைவுகளில் இதுவும் ஒன்றா? ஐயப்பா சரணம் என்று வருபவர்களிடம் அள்ளி விடலாம் பணத்தை என்ற பேராசையால் ஓட்டை வண்டியை எடுத்து ஓட்டி சம்பாதிக்க நினைத்தவன் ஒட்டு மொத்த கூட்டத்தையும் கொன்று குவித்தானே என்ன கொடுமை?

வனத்தில் வண்டி போகக்கூடாது என்று சேட்டன் மார்கள் சட்டமியற்றி விட்டு
சாமிமார்களிடம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக சட்டையை கழற்றி எரிவது போல சட்டத்தை தூக்கி எறிந்தானே! சத்தமே இல்லாமல் பல உயிர்கள் சமாதியாவதற்காகவா?

தமிழனென்றாலே பாண்டிக்கூட்டமென்று முகம் சுழித்துப் பேசும் பட்டிக்கூட்டம்
தனது ஒட்டு மொத்த அலட்சியத்தால் இன்று உயிர்க்காவு வாங்கியிருக்கிறது.
சபரி மலைக்கு தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களுக்கு ரயில் பெட்டியிலேயே தொல்லைகள் தாளாது. மூன்று மாதம் முன்பாகவே அடித்துப் பிடித்து பயணச்சீட்டு எடுத்து ரயில் வந்த உடன் இடம் தேடி அமரப்போனால் இரவு எட்டு மணிவரை ரிஷர்வேஷன் என்பது கிடையாது. எட்டு மணிக்குப் பின் தான் நீங்கள் சீட்டு கேட்க வேண்டும் என்று சண்டைபிடிப்பார்கள் மலையாளிகள். எட்டு மணிவரை நீ முன்பதிவுப் பெட்டியில் பிரயானிக்கலாம் ஆனால் எனது ரிஷர்வேஷன் சீட்டில் உட்கார சட்டப்படி உனக்கு உரிமை இல்லை என்று வக்கீல் போல வாதாடித்தான் சாமிமார்கள் கேரள ரயில்களில் தனக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகளிலேயே உட்கார முடியும்.

சபரிமலைக்கு ஏறி விட்டால் அங்கே மக்கள் படும் அவஸ்தை வேறுமாதிரி.
சாமிமார்கள் சுத்தமாக ஆட்டு மந்தைகளாகவே நடத்தப்படுவார்கள். அவர்கள் தங்கும் அரைக்கு காசு வாங்குவார்கள். ஆனால் அரைகள் எதுவுமே சுத்தமாக இருக்காது. ஜன்னல் கண்ணாடி உடைந்து அரைக்குள் சிதறிக்கிடக்கும். மாட்டு சாணம் கூட காய்ந்திருக்கும். காகிதக்குப்பைகள், மழையால் பாசிபிடித்த ஈரமான தரைகள் என்று மோசமாக இருக்கும். இவை எதையுமே சுத்தம் செய்து தராத சேட்டன்கள் அந்த அரைக்கு நூறு முதல் ஐநூறு வரை கூட்டத்தை பொறுத்து காசுபார்ப்பார்கள். சாமி மார்கள் அவர்களே ஒரு துடைப்பத்தை வாங்கி பெருக்கி சுத்தம் செய்து பின்னர் உணவருந்தவோ உறங்கவோ செய்வார்கள்.

மலை மேலே இருக்கும் ஹோட்டல்கள் என்ற பெயரில் நடக்கும் மனிதாபிமானமற்ற கொள்ளை இன்னொரு புறம். வரண்ட தோசை, வேகாத இட்லி, மொட்டை தண்ணீர் காபி, டீ, சுகாதாரமே இல்லாத சுற்றுப்புறம், கழுவாத குடிநீர் டம்ப்ளர் என கொடுக்கும் காசிற்கு கொஞ்சமும் பிரயோஜனம் இல்லாத உணவுகள் உயிரை வாங்கும். 30 ரூபாய்க்கு தயிர் சாதம் கொடுப்பார்கள். ரயில்வே கேண்டீனில் தரப்படும் பார்சல் போல இருக்கும். திறந்து பார்த்தால் அதிர்ச்சி காத்திருக்கும். மொத்தமாக வாரி எடுத்தால் ஒரே ஒரு கவளம் தான் அதில் சோறு இருக்கும். இதை பற்றி கேட்கவும் முடியாது. கேட்டால் திரும்பி முகத்தை கூட பார்க்காமல் வேறுபக்கம் திரும்பி வேலையைப்பார்ப்பான் மலையாளச் சேட்டன். மலையேறிய களைப்பும், நெருக்கி வரும் தூக்கமும் சண்டை போட மனமில்லாமல் கொடுத்ததை முழுங்கிப் பின் படுத்துக்கொள்ள தூண்டும்.

நடக்கும் பாதைகள் குப்பை மேடுகளாகவும் வழுக்கும் பாசிகளாகவும், அரைகுரை சிமெண்ட் தரைகளாகவும் இருக்கும். கால் வைத்து நடக்க முடியாமல் தவித்து எப்போதடா படுத்து உறங்குவோம் என்றாகிவிடும் பக்தர்களுக்கு. அரைகுரை சாப்போடோடு தூங்கி விழித்து பிரசாதங்களை பிரித்துக்கொடுத்து தேங்காய் உடைத்து கையைத் தூக்கி கடைசியாக ஒரு கும்பிடு போட்டு ஐயப்பா இனி அடுத்த வர்ஷம் பாக்கலாம்ப்பா என்று சொல்லி கீழே இறங்கும் போது அப்பாடா என்றாகிவிடும்.

இதில் எந்த இடத்திலும் கேரள அரசாங்கம் பக்தர்களுக்காக அவர்களின் பாதுகாப்பிற்காக, அவர்களின் நுகர்வு உரிமைக்காக என்று எந்த நடவடிக்கைகளையும் இது நாள் வரை எடுத்ததில்லை. ஹோட்டல்களில் சரியான அளவுடன் தரமான உணவு கொடுக்கப்படுகிறதா என்று கண்காணிப்பதில் கேரள அரசுக்கு எந்த அக்கரையும் இல்லை. கூட்டம் கூட்டமாக மலைமேல் தங்கும் பக்தர்கள் சிறு நீர்கழிக்கக்கூட பொதுக் கழிப்பறைகள் தென்படுவதில்லை. கோவிலின் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்திருக்க எந்த முனைப்பும் எடுப்பதில்லை.

ரூம் புக்கிங், ரெஸ்ட் ஹால் போன்றவற்றிற்கு சேட்டன்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

இப்படி எண்ணற்ற அலட்சியத்தில் லட்சக்கணக்கான மக்களை ஆட்டு மந்தைக் கூட்டங்களைப் போல நடத்துவதை பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு மந்தை மந்தையான இந்த மரணங்கள். முழுமையான அலட்சியம்.

கேரள அரசு திருவாங்கூர் தேவஸ்வம் போர்டை குறை கூறுவதைப் பார்த்தால் ஏதோ உள்விவகாரம் இருக்கலாம் எனவும் ஐயம் உண்டாகிறது. காரணம் சில வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் பத்மநாதர் சுவாமி கோவிலை கையகப்படுத்த முனைந்தது கேரள அரசு. ஆனால் தேவசம் போர்டு மற்றும் பல இந்து அமைப்புகள் அதனை கடுமையாக எதிர்த்ததை அடுத்து அந்த முயற்சியை கைவிட்டது. அதனால் தேவசம் போர்டுக்கான பாதுகாப்பை
நாம் ஏன் செய்ய வேண்டும் என கேரள அரசு வேண்டுமென்றே அலட்சியப்படுத்தி இருக்கலாமோ என்கிற ஐயப்பாடும் உண்டாகிறது.

இப்படி பலவித அலட்சியங்கள் ஐயப்ப பக்தர்கள் மீது கேரள அரசாலும் திருவாங்கூர் தேவசம் போர்டாலும் நடத்தப்படுவது மிகவும் வெறுக்கத்தக்கது. இறைவன் மீது கொண்ட பக்தியாலும், மாலை போட்டிருக்கிறோம் என்கிற காரணத்தாலும் சண்டை போடக்கூடாது என்கிற மனோபாவமும் மட்டும் இல்லையெனில் எந்த மலையாளியும் இத்தனை அலட்சியத்தை தமிழர்கள் மீது காட்டிவிட்டு சபரிமலையில் தப்பி விட முடியாது. அது மட்டும் பக்தித்தளமாக இல்லாமல் இருந்திருந்தால் சேட்டன்களை தமிழர்களும் தெலுங்கர்களும் சாயா பிழிந்து குடித்திருப்பார்கள்! அத்தனை அலட்சியங்களும், அவமதிப்புக்களும், மோசமான சூழ்நிலைகளும் கோடிக்கணக்கான மக்களால் தாங்கிக்கொள்ளப் பட்டிருக்கின்றது என்றால் அது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான் என்பதை மறுக்க முடியாது.

அப்படிப்பட்ட அமைதியான கூட்டத்தின் உயிர்களை மயிறுக்குக்கூட மதிக்காமல் சாகடித்த கேரள அரசும் தேவசம் போர்டும் என்ன பதில் கூறப்போகின்றன? உயிருக்கு ஒரு விலை கொடுத்து விட்டு மீண்டும் தங்கள் தொழிலை பார்க்கப் போவார்களோ? தமிழக ஆந்திர அரசாங்கங்கள் தம் மக்கள் அண்டை மாநிலத்தில் படும் அவதியைத் தீர்க்க கேரள அரசோடு கைகோர்த்து ஏதேனும் செய்வார்களா?

மாயையில் சிக்கி வாழ்வது மனிதர்களின் இயற்கை. ஏதாவது ஒரு உணர்வில் மயங்கி வாழ்வது மனிதனுக்கு தேவைப்படுகிறது. பக்தியுணர்வும் ஒரு வித மயக்கமே. மற்ற மயக்கத்தை விட பக்தியென்ற மயக்கம் மயங்கியவனுக்கும் அவனைச் சார்ந்த மற்றவர்களுக்கும் நன்மையே செய்கிறது என்பதாலேயே அது சமூகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. அத்தகைய மயக்கம் மரணத்தை கொடுக்கும் ஆபத்தாகுமெனில் மயக்கத்திலிருந்து விழித்துக்கொள்வது மக்களின் கடமை.

ஆறாத காயத்திற்கு காலம் தான் கஷாயம்.

1942 - ல் சபரிமலை



.

Saturday, January 15, 2011

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!



அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 

பொங்கல் பானை பொங்குவதைப் போல 
இன்பமும் மகிழ்ச்சியும் வீட்டினில் பொங்க 
வெற்றித் திருமகள் வீட்டோடு தங்க 
எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறேன்.

அன்புடன் 
ராம்

Friday, January 14, 2011

சுபகாரியங்களில் வெற்றிலை பாக்கு பழம் கொடுப்பது ஏன்?




ஒரு முறை ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை தரிசிக்க ஒரு மாணவன் வந்திருந்தான். அவனிடம் பெரியவர் "என்ன படிக்கிறாய்?" என்றார். அவன் தாவரவியல் படிப்பதாகக் கூறினான். சுவாமிகள் தன் முன் வைத்திருந்த பழம் பாக்கு வெற்றிலைத் தட்டில் இருந்த வெற்றிலையைக் காட்டி "அதன் பெயர் என்ன?" என்று வினவினார்.

மாணவனும் 'வெற்றிலை' என்றான்.

"அதற்கு ஏன் வெற்றிலை என்று பெயர் வந்தது?" என்று சுவாமிகள் கேட்க மாணவன் சொல்லத் தெரியாமல் திகைத்தான்.

சுவாமிகள் கூறினார் "எல்லாக் கொடிகளும் பூவிடும், காய் காய்க்கும். ஆனால் வெற்றிலைக் கொடி பூக்ககாது, காய்க்காது. உண்ணக்கூடிய வெறும் இலை மட்டும் தான் விடும். அதனால் அது வெற்று இலை ஆயிற்று' என்றார்.

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு வெற்றிலையில் 'A' டு 'Z' எல்லா வைட்டமின்களும் இருக்கிறது. வெற்றிலையில் இரும்பு, சுண்ணாம்பு, பி.கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், லைகோபின், டோட்டல் பினால்ஸ், டோட்டல் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக்டிவிட்டி போன்ற 'டங்க் ட்விஸ்டர்கள்' இருக்கிறதென்று மருந்துகடை அன்னாச்சி நாக்கை சுழற்றினார்.

வெற்றிலை பாக்குடன் சுன்னாம்பு சேர்த்து சாப்பிட்டால் நீண்ட நேரம் நல்ல எனர்ஜி இருக்கும். வயிறு செரிமானத்திற்கு பெரிதும் உதவும். சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. வாயுத் தொல்லை நீங்கும். வெற்றிலையுடன் சுன்னாம்பு சேர்த்து சாப்பிடுவதால் கால்ஷியம் உடலில் சேரும்.

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும். தலை வலித்தால் பலர் வெற்றிலையை கிள்ளி தலையில் ஒட்டிக்கொள்வதை பார்த்திருப்போம்.

வெற்றிலைச் சாறும் சீரகமும் வயிற்று வலிக்கு நல்லது.

சளி இருமல் போன்றவற்றிர்கு வெற்றிலையுடன் சுக்கு கஷாயம் குடிப்பார்கள்.

வெற்றிலையையும் மிளகையும் சேர்த்து தின்றால் தேள் விஷம் கூட முறியும் என்பார்கள்.

வெற்றிலை பாக்கு சுன்னாம்புக் கலவை ஆண்மையின் உந்துதலுக்கு நல்லது. கணவனுக்கு மனைவி வெற்றிலை மடித்து கொடுத்து சந்தோஷப்படுத்துவது ஏன் என்று இப்போது புரிந்திருக்கும்.

அதனால் தான் சிறு வயது பிள்ளைகள் வெற்றிலை போட்டால் மாடு முட்டும் என்று பயமுறுத்துவார்கள். ஏதோ அடல்ஸ் ஒன்லி இலை போல கைவைக்க விடமாட்டார்கள். வாழைப்பழமும் வெற்றிலையும் ஆண்மைக்கு நல்ல தென்பதாலேயே கல்யாணம் மற்றும் சுபகாரியங்களுக்கும் ஒருவருக்கொருவர் வெற்றிலைபாக்கு பழம் கொடுத்து பரிமாரிக்கொள்கிறார்கள். குறிப்பாக பெண்கள் வீட்டிற்கு வரும் பிற பெண்களுக்கு வழியனுப்பும்போது வெற்றிலை பாக்கு பழம் வைத்து கொடுத்து வழியனுப்புகிறார்கள். அதாவது இதனால் எனக்கு கிடைத்த இன்பத்தை நீயும் உன் வீட்டில் அனுபவி என்பது பெண்களுக்குள்ளான சிம்பாலிக் 'கோட் வேர்ட்'.

ஏனெனில் கணவன் மனைவி உறவு எந்தளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறதோ அந்தளவிற்கு குடும்பம் பலப்படும். அதனால் வெற்றிலை பாக்கு பழம் இல்லாத சுபகாரியங்களும் நற்காரிய பரிமாற்றங்களும் நம் சமூகத்தில் பார்க்கவே முடியாது. நமக்கு குடும்பமே கோவில் அல்லவா!



கொசுறு: அந்த காலத்து ராஜாக்களெல்லாம் இப்படி பக்குவமாக வெற்றிலையை மடித்து கொடுப்பதர்கே சம்பளத்திற்கு ஆள் வைத்திருந்தார்களாம். சம்பளத்தில் வெற்றிலையும் அடங்குமாம்!




இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் ஆகும்!

.

Wednesday, January 12, 2011

சுவாமி விவேகான‌ந்த‌ரின் பொன்மொழிக‌ள்!


இறைவன் உள்ளத்தால் தான் காணப்படுகிறார். அறிவால் அல்ல.

இதோ ஓர் அற்புதமான உருவகம்! உடலைத் தேராகவும், ஆன்மாவைச் சவாரி செய்பவராகவும், புத்தியைத் தேரோட்டியாகவும், மனத்தைக் கடிவாளமாகவும், புலன்களைக் குதிரைகளாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். யாருடைய குதிரைகள் நன்கு பழக்கப்பட்டு இருக்கின்றனவோ, கடிவாளம் உறுதியாக உள்ளதோ, தேரோட்டி (புத்தி) அதை நன்றாகப் பிடித்திருக்கின்றானோ, அவனே எங்கும் நிறைந்திருக்கின்ற

நிலையான தன் குறிக்கோளை அடைவான்.

யாருடைய குதிரைகள் (புலன்கள்) அடக்கப்படாமலும், கடிவாளம் (மனம்)
உறுதியாகப் பிடிக்கப்படாமலும் இருக்கின்றனவோ, அவன் அழிவை நோக்கிப்
போகின்றான்.

யார் ஒருவர் இந்தியாவின் கடந்த காலப் பெருமைகளை வீடுதோறும் கொண்டு சென்று போதிக்கிறாரோ, அவரே நம் தாய்நாட்டிற்கு மிகப்
பெரிய அளவில் நன்மை செய்தவராவார்.



இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டன் அரசாங்கத்தை, பிரிட்டனின்
அரசாங்கத்தின் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தார் சுவாமி விவேகானந்தர். குறிப்பாக,மெக்காலே கல்வித் திட்டத்தை நிறுத்திட, சுவாமி விவேகானந்தர் போராடினார். “கிறிஸ்தவ அரசாங்கம் என்னைக் கைது செய்து, சுட்டுக் கொல்லட்டும்” என வெளிப்படையாக முழங்கினாராம்.

மகானுக்கு இன்று பிறந்தநாள்!

.

Tuesday, January 11, 2011

புராணங்கள் பொய்யல்ல!


புராணங்கள் பொய் என்று ஆங்கிலேயர்கள் சொல்லி நம்முடைய வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள். அதிலே தங்களுக்குப் பிடித்த பிரித்தாளும் கொள்கைக்கு சாதகமான துவேஷ தத்துவங்களையும் சேர்த்து விட்டார்கள். புராணம் பொய்யென்று இவர்கள் கூறினார்கள் என்றால் அதுபற்றி இவர்கள் எழுதிய வரலாற்றிலும் பொய் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு உள்ளதை உள்ளபடி எழுதுவதற்கு தற்போது முயற்சிகள் நடந்து வருகிறது.

புராணத்தை நம்ப முடியாதது என்று கூறி அதற்குக் காரணம் அதிலே இப்போது நாம் பார்க்கிற எதார்த்த நிலவரங்களுக்கு வேறான விஷயங்கள் இருக்கின்றன என்கிறார்கள். தேவர்கள் வந்தார்கள், போனார்கள், வரம் கொடுத்தார்கள் என்றால் அதெல்லாம் இந்த காலத்தில் நடக்காததால் அவற்றை பொய் என்று கூறிவிடுகிறார்கள். பெண்ணை கல்லாக்கினார்கள், கல்லை பெண்ணாக்கினார்கள், சூரியனை நிறுத்தி வைத்தார்களென்றெல்லாம் கூறுவது நம் சக்திக்கு உட்பட்டதில்லை என்பதால் அதெல்லாம் வெறும் புரட்டு என்கிறார்கள்.


தற்காலத்தில் நடக்க முடியாது என்று எப்படி சொல்லலாம்? வேத மந்திர சச்க்தியும் உயர்ந்த தபஸும் யோகாநுஷ்டானமும் பூர்வத்தில் நிறைய இருந்தன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் பழமையான புத்தகங்கள் பலவற்றில் இருக்கின்றன. அவைகள் இருந்தவரை தேவசக்திகளெல்லாம் இந்த உலகத்தினராலேயே சுலபமாக கிரக்கிக்கும் படி இருந்திருக்கின்றன. நம்மால் அது ஆகவில்லை என்பதால் பழமை பொய்யென்று ஆகிவிடாது.

 ஆங்கிலப் படிப்பு படித்து விட்டதாலேயே அறிவியலால் நிரூபிக்க முடியாததெல்லாம் புரளியென்று கூறுவது சரியான அனுகுமுறை ஆகாது. இப்போதும் கூட பல இடங்களில் புரானங்களில் கூறப்படுவது போன்ற பத்து பன்னிரண்டு அடி நீளமுள்ள மனித எலும்புக்கூடுகள் கிடைத்துக்கொண்டு தான் இருக்கின்றன. இதைப் பார்த்தால் பனைமர தென்னை மர உயரமுள்ள ராக்ஷஸர்கள், சிங்கம் மாதிரியான உடம்பும், .யானை மாதிரியான தும்பிக்கையும் கொண்ட யாளி போன்ற மிருகங்கள் முற்காலத்தில் இருந்திருக்ககூடும் என்பது நம்பக்கூடியதாகவே இருக்கிறது.





கால் எலும்பு மட்டுமே பதினாறு அடி நீளமுள்ள ஒரு மனிதனின் எலும்புக்கூடு, யானையைப் போல பத்து மடங்குள்ள ஒரு மிருகத்தின் எலும்புக்கூடு முதலானவைகளை ஐஸ்பெர்க்கில் ஆர்ட்டிக் பிரதேசத்தில் பனிக்கட்டிக்கு உள்ளிருந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை தொல்லியல் துறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று வியக்கிறார்கள், கூத்தாடுகிறர்கள். தொல்லியலோடு புவியிலையைம் சேர்த்து கணக்கிட்டு இவை இத்தனை லட்சம் வருஷத்திற்கு முன் இருந்தவை என்கிறார்கள். இதோடு புராணவியலையும் சேர்த்தால் நம்முடைய பழைய கதைகள் நிஜம் தான் என்றாகிவிடும்.




பூந்தமல்லி, டிச. 15-
குன்றத்தூரில் சிங்கம் முகம் போல பிறந்த பெண் குழந்தை
குழந்தை முகம் சிங்கம் போலவும், பற்கள் பெரியதாகவும், ஆக்ரோஷமாக காணப்பட்டது.

இந்து தர்மத்தில் கதை மூலமாக தத்துவம் போதிக்கப்பட்டது. அதற்காக கதையைப் பொய்யென்று கூற முடியாது. இந்தக்காலங்களில் கூட செய்தித்தாள்களில் இரண்டு தலையும் கொண்டகுழந்தை, நாலு கையுமாக பிறந்த குழந்தை என்றெல்லாம் படிக்கிறோம். மனித இனத்திலும் சேராமல் மிருக இனத்திலும் சேராமல் நடுவாந்திரமாக ஒரு விசித்திரக் குழந்தை பிறந்தது என்று படிக்கிறோம். இயற்கையும் சில நேரங்களில் மாறுபட்டு காட்சியளிக்கலாம் என்பது பல நேரங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் Freak என்பார்கள். ஆதலால் புராணங்களில் கூறப்பட்டிருப்பதைப் போல பல விசித்திரமான மனித தோற்றங்கள் வாழ்ந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

இது சும்மா!




புராணக்கதைகளில் கற்பனைகளும் இருக்கலாம். பிற்காலத்தில் சிலர் இடைச்செருகல்களைச் செய்திருக்கலாம். ஆனால் தற்காலத்தில் இவற்றைப் பிரித்து பார்க்க இயலாததால், அக்கதைகள் சொல்லவரும் கருத்துக்களை உள்வாங்கி அவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதே நமது கடமையாகும்.

எல்லாவற்றிர்கும் மேல், ஆராய்ச்சி, கீராய்ச்சி என்று சொல்லிவிட்டால் உடனே நாம் அப்படியே நம்பிவிடுவது என்பது தான் எல்லாவற்றையும் விடப் பெரிய மூடநம்பிக்கை. இன்றைய ஆராச்சிகளிலும் தவறுகளும், பொய்களும் கலந்திருக்கவே செய்கின்றன. எனவே கற்பனை என்று நினைத்தாலும் புராணக்கதைகள் மனதில் நன்மையை விதைத்து தீமையை விலக்கி இறைவனின் பால் நம்பிக்கை உண்டாகச் செய்வதால் புராணக்கதைகளின் நோக்கம் என்னவோ பூர்த்தியாகிவிடுகிறது.


- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.


.

Wednesday, January 5, 2011

வள்ளுவர் வாக்கு! - இனிய உளவாக இன்னாத கூறல்!


இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

இனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் கடுமையான சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்க காயைத் தின்பது போன்றதே
என்கிறார் வள்ளுவர்.

பல நேரங்களில் நாம் இனிமையாக பேசுவதை விட வள்ளென்று விழுவது நம்மையறியாமலே நடந்து விடும். அதையே கொஞ்சம் மென்மையாக சொல்லி இருந்தால் சங்கடங்களைத் தவிர்த்திருக்கலாமோ என்று பின்னால் தோன்றும். அலுவலகத்தில் வேலை செய்யும் போது பல நேரங்களில் பலரும் இப்படி உணர்ந்திருப்பார்கள். சே! கொஞ்சம் மென்மையா பேசியிருக்கலாம் என்று.

முன்பெல்லாம் சரியாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எனது அலைபேசியில் அழைப்பு வரும்..

அன்றும் அப்படித்தான்...

"ஏய், டெல்லி!" என்று அந்தப் பெண்குரல் அதிகாரமாக அழைக்கும் போது கொஞ்சம் மிரட்சியாக இருக்கும்.

"யாருங்க?" என்பேன்

"டெல்லி தானே?"

"இல்லீங்க, ராங் நம்பர்"

"இன்னாது..?"

"ஹலோ, ராங்க் நம்பருங்க!" என்பேன் எரிச்சலாக.

"ஆங்.." தொடர்பு துண்டிக்கப்பட்டது.

ஒரே நபரிடம் எத்தனை முறை "ராங் நம்பர்" என்று சொல்லிக்கொண்டே இருப்பது. அதனால் பதில் கடுப்பாகவே வெளிப்படும். "கனியிருப்ப காய்கவர்ந்தற்று!"

மறுநாள்..

அதே பெண் குரல்.

"ஏய், டெல்லீ.."?

"ஹலோ.. ராங் நம்பருங்க!"

"இன்னது ராங் நம்பரா.. ஏய் எங்கடா இருக்க நீ?"

"ஏங்க ராங் நம்பர்ங்க...!"

அதற்குள் எதிர் தரப்பில் ஆண்குரல் "டேய்... த்தா..இன்னா ராங் நம்பரா? டேய் நாயே.. ****** ******, ********* , *************, ******** , ****************, மீண்டும் பெண்குரல் டேய்...**** *****". 'ஸேம் ப்ளட்"

ஆத்தாடி தொடர்பை நானே துண்டித்து விட்டேன்..... ராங் நம்பர்ன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா?

நான் வாங்கிய அலைபேசி எண் இதற்கு முன்னர் டெல்லிக்கோ பம்பாய்க்கோ இருந்திருக்கலாம் என்று புரிந்து கொண்டேன்.

சரியாக ஆறு மாதம் கழித்து மீண்டும் அதே பெண் குரல்

"யாரு டெல்லியா?"

இந்த முறை எச்சரிக்கையாக பேச வேண்டும். எரிச்சலாக "ராங் நம்பர்" என்று சொல்லக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன்.

மிகவும் அன்பொழுக அதி மரியாதையாக "மேடம், நீங்க தப்பா டயல் பண்ணியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்... கொஞ்சம் செக் பண்றீங்களா
மேடம்!" என்றேன்.

உடனே "ஆங் சரி!" துண்டித்துக்கொண்டார்.

மீண்டும் ஒரு முறை அதே ஊரை கூப்பிட்டார்...அந்தப் பெண்.

மறுபடியும் மிகவும் மரியாதையாக அன்பாக அதே போல் பேசினேன்.

இவ்வளவு மரியாதையாக நம்மிடம் பேசுகிறான். எனவே இவன் நிஜமாகவே நாம் அழைக்கும் டெல்லி இல்லை என்று ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பார் போலும். ராங் நம்பர் தொல்லை அத்தோடு முடிந்தது.

வள்ளுவர் வாக்கும் பலித்தது.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

வாழ்க வள்ளுவர்!