Monday, July 30, 2012

ஹிந்துக்களை அவமதிக்கும் - நீயா நானா?




”நீயா நானா?” 

”நாங்க தான்” என்று நிரூபித்த ஹிந்துக்கள். 

இன்று (29/07/2012) ”நீயா நானா” நிகழ்ச்சியில் ஹிந்துத் துறவிகளை கொச்சைப் படுத்தும் விதமாக நிகழ்ச்சி தயாரித்திருந்தது ஆண்டனி என்பவரின் மெர்குரி கிரியேஷன்ஸ் நிறுவனம். ஹிந்து கலாசாரத்தையும் ஆன்மீகப் பாரம்பரியத்தையும் புண்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் தயாரிப்பது இந்த நிறுவனம் அடிக்கடி செய்யும் அயோக்கியத்தனம். 
... 

ஆகவே இன்றைய (29.07.2012) நிகழ்ச்சியை ஒளிபரப்பவிடாமல் செய்ய வேண்டும் என்று சில ஹிந்து நண்பர்கள் தீர்மானித்தனர். அவர்கள் உடனே ஹிந்து முன்ன்ணியையும், ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பையும் தொடர்பு கொண்டனர். ஹிந்து முன்னணியின் துணைத்தலைவர்களுள் ஒருவரான திரு.இளங்கோ அவர்கள் தலைமையில் சுமார் 300 பேர் திரண்டு விஜய் டிவி நிறுவனத்தின் முன்னால் போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, எதிர்ப்புக்கு ஏற்பாடு செய்த ஹிந்து நண்பர்கள் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் கொடுத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஹிந்து ஜனஜாக்ருதி அமைப்பினரும், கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை மற்றும் தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினரும் எழுத்து மூலமாகத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து காவல்துறை அதிகாரிகளிடம் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்புவதைத் தடுத்து நிறுத்துமாறு வேண்டிக்கொண்டனர். 

உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள் விஜய் டிவி நிறுவனத்தாரிடம் நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிட்டு அவர்களிடம் உறுதி மொழியும் பெற்றனர். குறிப்பாக நுங்கம்பாக்கம் காவல்துறை ஆய்வாளரும் சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தினரும் நமது நன்றிக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள். 

கைது செய்யப்பட்ட ஹிந்து முன்னணி நண்பர்கள் அனைவரும் பின்பு விடுதலை செய்யப்பட்டனர். ஹிந்து முன்னணியினருக்கு நம் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக. 

எங்களுடைய அனுபவத்தில் நாங்கள் கண்டது இந்த ஊடகங்கள் என்றும் திருந்தாத ஜன்மங்கள் என்பதுதான். சில நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் தங்கள் அழுக்கு புத்தியைக் காண்பிப்பார்கள். 

எனவே ஹிந்துக்களாகிய நாம் அனைவரும் செய்ய வேண்டியது என்னவென்றால் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை ஸ்பான்ஸர் செய்யும் நிறுவனங்களின் பொருட்களை நிராகரிப்பதுதான். அவர்களின் பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி அவர்கள் வியாபாரம் குறைந்துபோனால்தான் அவர்களும் ஸ்பான்ஸார் செய்வதை நிறுத்துவார்கள். இது ஒவ்வொரு ஹிந்துவின் கடமையாகும்.


- ஹர்ஷ் தமிழ்

இனி நான்: இந்த விஜய் டிவியின் நீயா நானா நடத்தும் ஆன்ட்டனி பாதிரியார்கள் - கன்னியாஸ்திரிகள் பற்றிய நிகழ்ச்சிகளை ஒரு போதும் நடத்தியதில்லை. பாதிரியார்களின் ஓரினச்சேர்க்கை, பாதிரியார்கள் காப்பகங்கள் நடத்துகிறேன் என்று கூறி குழந்தைகளை காம இச்சைக்கு பயன்படுத்துவதைப் பற்றி நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. கன்னியாஸ்திரிகளும் பாதிரிகளும் சர்ச்சுக்குள் குடும்பம் நடத்தும் சர்ச்சைகளைப் பற்றி ஒரு நாளும் நிகழ்ச்சி நடத்தியதில்லை. 

கடந்த முறை இந்துக்களின் புனித பாரம்பரியமான தாலி வேண்டுமா வேண்டாமா என நிகழ்ச்சி ஒளிபரப்பிய இந்த ஆள், முஸ்லீம்களின் பர்தா வேண்டுமா வேண்டாமா என்கிற நிகழ்ச்சியை விளம்பரத்துடன் நிறுத்திக் கொண்டான். 

ஆனால் தொடர்ந்து ஹிந்து கலாச்சாரம், திருமணம், மாமியார் மருமகள் மற்றும் குடும்ப உறவுகள், பண்டிகைகள், துறவிகள் என தொடர்ந்து ஹிந்துக்களின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளை சர்ச்சையாக்கும் விஷயங்களையே நீயா நானாவில் நடத்திக் கொண்டிருக்கிறான்.

சகோதரர் ஹர்ஷ் தமிழ் எழுதியிருப்பதைப் போல, இந்த ஆண்ட்டனி சில நாள் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் இதே நிகழ்ச்சியையோ அல்லது இது போல வேறொன்றையோ ஒளிபரப்புவான். நாம் தான் விழிப்புடன் இருந்து தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்!

Tuesday, July 24, 2012

ஆன்மா இயங்குவது எப்படி?


ஆன்மாவைப் பற்றி பேச்சு வந்த போது அது எப்படி செயல்படுகிறது என்று விளக்க ஒரு உதாரணத்திற்கு இப்படி எழுதினேன். தமிழில் இன்னும் விளக்கமாக எழுதிவிட்டுப் பதிவிடுவோம் என்று நினைத்து மாதக்கணக்கானதால் இப்போதைக்கு இந்தியாவின் தேசிய மொழியில் அப்படியே!

"Soul" can never be cut into pieces by any weapon, nor can he be burned by fire, nor moistened by water, nor withered by the wind

let me explain the soul like this...

 Human body is a technology created by nature. The technology can be compared with the cell phone for example. And the soul can be compared with the wave or cell phone signal.

 Now the cell phone will be sleep with no movement or sound or light till it gets a signal into in. if a wave or signal passed into a cellphone it gets activated, gives light, makes sounds, singing, vibrating and dancing. If the wave or signal goes away from the cellphone again it will become like a dead vessel.

In the same way the human body which has been created by nature, only it will work if the soul gets into the body. After the soul gets inside, the body activated and sings, dances, speaks doing all things. If the soul gets away from the body, the body goes dead.

Now see

Cellphone = human body , (both are only an instrument made by some technology)
Wave or signal = soul

So soul is nothing but a wave which is an unpredictable tiny, nano, very small and its got the energy of the universe can be compared with the bigbang explosive.

Coz, an atom only makes fire = proof, Hiroshima, and Nagasaki.

Soul is an atom but infinitive Nano size with full of energy by which you people are living till now in this world.

Soul is nothing but an infinitive nano size sun.
Sun is a very big soul which you can see.

Sun = soul ; size is only the different.

Which you can see and cannot see!

" wave " can never be cut into pieces by any weapon, nor can he be burned by fire, nor moistened by water, nor withered by the wind

இன்னொரு நாள் ஆன்மாவின் மூலமாக முற்பிறவி குணங்கள் எப்படி அடுத்த பிறவிக்கு கடத்தப்படுகிறது என்றும் ஆன்மாவின் மூலமாக பாவ புண்ணியத்தின் பலன்கள் எப்படி தொடர்கிறது என்றும் கொஞ்சம் பார்க்கலாம்.

Sunday, July 22, 2012

பேசும் படம்!


ஹிந்து சாமியார்ன்னா கைது செய், மசூதி இமாம்னா கால்ல விழு!



இது ஒரு கவனிக்கப்பட வேண்டிய பதிவு...முக நூலில் அருமை நண்பர் ஹர்ஷ்தமிழ் பகிர்ந்து கொண்டது வாசகர்கள் கவனத்திற்காக இங்கேயும்...!


2001-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், 2006-ம் வருடத்திலிருந்து தில்லி ஜம்மா மசூதி இமாம் புகாரிக்கு ஜாமின் இல்லா வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. பலமுறை தில்லி போலிஸ் அந்த வாரண்ட்களைச் செயல்படுத்தவில்லை.

பத்து தினங்களுக்கு முன்னால் புகாரி மேல் தொடுத்த வழக்கை வாபஸ் பெறுவதாகச் சொல்லி தில்லி நீதிமன்றத்தில் மனு அளித்த தில்லி போலிஸ், புகாரியைக் கைது செய்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை வரும் என்று வெட்கமில்லாமல் காரணம் சொல்லியது.

தில்லி போலிஸைக் கடுமையாகக் கண்டித்து அவர்கள் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மிண்டும் ஒரு ஜாமின் இல்லா வாரண்ட் கொடுத்து பத்து தினங்களுக்குள் புகாரியைக் கைது செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜரான தில்லி போலிஸ், புகாரி கண்மறைவாக இருப்பதாகவும் அதனால் வாரண்டை செயல்படுத்தி கைது செய்ய முடியவில்லை என்றும் வெட்கமில்லாமல் கூறியுள்ளது.

போலிஸை மீண்டும் கடுமையாகக் கண்டித்த நீதிபதி, அவர்கள் எடுத்த முயற்சிகளைப் பற்றிய விவரமான அறிக்கையைக் கேட்டதுடன், மீண்டும் ஒரு வாரண்ட் பிறப்பித்துள்ளார்.

நான் ஜூலை 11-ம் தேதி போட்ட பதிவில், “கடைசியாக ஒரு நீதிபதி தனக்கு முதுகெலும்பு இருக்குன்னு காமிச்சுட்டாரு. ஆனா கண்டிப்பா போலிஸ் காமிக்கமாட்டாங்க... என்று கூறியிருந்தேன். அதை நிரூபித்துள்ளனர் போலீஸார்.

நடு இரவில் ஆழ்ந்த நித்திரையில் உறங்கிக்கொண்டிருந்த பாபா ராம்தேவையும் அவருடைய பக்தர்களையும் அடித்து நொறுக்கி சட்ட ஒழுங்கைநிலை நாட்டிய தில்லி போலிஸுக்கு இமாம் புகாரியைக் கைது செய்ய முடியவில்லையாம். சட்டம் ஒழுங்குப் பிரச்சனை வந்துவிடுமாம்.

பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்த ஆணையிட்ட உள்துறை மந்திரி பீ..சீ க்கு புகாரியை கைது செய்யச் சொல்லி தில்லி போலீசுக்கு ஆணையிட முடியாதாம்.

சூனியா அரசின் மதச்சார்பின்மையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் ஆட்சியும் நம்மைப் புல்லரிக்க வைக்கிறது.

ஆட்சியாளர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்:- 

போங்கையா….போய் புகாரியோட ரம்ஜான் விருந்துல கலந்துகிட்டு அவனோட கஞ்சிய குடிச்சுட்டு வாங்க.

தொடர்புடைய செய்தி!

- ஹர்ஷ் தமிழ்

கஞ்சியை மட்டுமா? விட்டா சிறுபான்மைச் சிறுநீரையே குடிப்பார்கள்!

Friday, July 20, 2012

ஹிந்துக் கோவில்கள் படும் பாடு!



தினமணி செய்தி 


ஈரோடு,  ஜூலை  17:  ஈரோடு அருகே நசியனூரில் உள்ள அருள்மிகு மூவேந்தர் ஆதிநாராயணப் பெருமாள் கோவிலில் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.  இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஈரோட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சேலம்- கோவை 4 வழிச்சாலைக்கு அருகே உள்ள நசியனூரில் இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீ முத்து மரகதவல்லி சமேத மூவேந்திர ஈஸ்வரர், ஈஸ்வரன் கோவிலின் இடதுபுறம் கிழக்கு நோக்கி,  பூதேவி-ஸ்ரீதேவி சமேத ஆதிநாராயணப் பெருமாள் சன்னிதானங்கள் உள்ளன.

இக்கோவில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மூவேந்தர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் புராதனப் பெருமைமிக்க சிலைகள், மண்டபங்கள் உள்ளன. சன்னிதானங்களில் உள்ள சுவர்கள், மண்டபங்களில் உள்ள தூண்களில் பழங்கால வரலாற்றுச் சம்பவங்கள், கோவில் தொடர்பான தகவல்கள் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.ண்

இக்கோவிலில் சீரமைப்பு என்ற பெயரில் பழம்பெருமை வாய்ந்த 16 தூண்களைக் கொண்ட மண்டபம் இடிக்கப்பட்டுவிட்டதாகவும், கோவிலில் உள்ள கல்வெட்டுகள், சிலைகள் இந்து சமய அறநிலையத்துறையால் தடை செய்யப்பட்ட "சேண்ட்  பிளாஸ்டிங்' (மணலை தண்ணீர் போலப் பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தும் முறை) முறையில் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும்  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கோவில் புனரமைப்பு என்ற பெயரில் புராதனச் சின்னங்களை அழிப்பது எந்த வகையில் நியாயம் என்பது பக்தர்களின் நியாயமான கேள்வி.

இதுகுறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் கோவை மாவட்ட செயல் தலைவரும், வழக்குரைஞருமான லட்சுமண நாராயணன் கூறியது:

கங்கை குல காராள வம்ச நாட்டுக் கவுண்டர்கள், காணியாள வெள்ளாளக் கவுண்டர்களில் 6 குலத்தினர் ஆகியோருக்குச் சொந்தமானது இக்கோவில். இங்கிருந்த தெப்பக்குளத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே மூடிவிட்டனர். இப்போது கோவிலைப் புனரமைப்பதாக பெயருக்கு அனுமதி பெற்றுவிட்டு கோவிலில் இருந்த பழமையான 16 கால் மண்டபத்தை இடித்துவிட்டு, கான்கிரீட் மண்டபத்தைக் கட்டி வருகின்றனர்.

இதில் இருந்த 16 தூண்களையும், ஈரோடு, சூரம்பட்டியைச் சேர்ந்த ஒரு  இடைத்தரகர் மூலமாக ரூ. 3 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் ஆகியோரிடம் புகார் தெரிவித்ததும், அந்த 16 தூண்களுக்குப் பதிலாக வேறு தூண்களைக் கொண்டுவந்து வைத்துள்ளனர். கோவில் வளாகத்தில்தான் புதைத்து வைத்திருந்ததாக இப்போது தவறான தகவல்களைக் கூறுகின்றனர்.

சேண்ட் பிளாஸ்டிங்குக்குப் பதிலாக தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. அதைப் பயன்படுத்தி கோவில் சிலைகள், மதில் சுவர்கள், கல் தூண்களை சுத்தப்படுத்தியிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல் புராதனச் சின்னங்களை சேதமுறச் செய்திருப்பது மிகப்பெரிய குற்றம் என்றார்.

இதுகுறித்து, தேசிய சிந்தனைக் கழக மாநில இணை அமைப்பாளர் ஆ.சரவணன் கூறியது:

கோவிலில் பழமையான கல் மண்டபத்தை அகற்றிவிட்டு, கான்கிரீட் மண்டபம் கட்டுவதால் கோவிலின் பழமை மாறியுள்ளது. பக்தர்களின் குற்றச்சாட்டு  குறித்து  இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். ஆகம விதிக்கு மாறாக இருக்கிறதா  என்பதை ஆகம விதிகள் தெரிந்த குழுவை அமைத்துத்தான்  மாற்றி அமைக்க வேண்டும். கல் தூண்களை மண்ணில் புதைக்க வேண்டிய அவசியம் என்ன? அறநிலையத் துறை முழு விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். கோவில் மண்டபத்தை இடித்தது மிகப்பெரிய தவறு என்றார்.

'6 பேருக்கு நோட்டீஸ்'

இதுகுறித்து, இந்துசமய அறநிலையத் துறை செயல் அலுவலரும், இக்கோவிலின் தக்காருமான எம்.அருள்குமார் கூறியது:

ஏற்கெனவே இருந்த கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ரங்கசாமி தலைமையிலான குழுவினர் 23.9.2008-ல் அறநிலையத் துறையில் அனுமதி பெற்று இக்கோவில் புனரமைப்புப் பணியை நடத்தி வந்தனர். நான் தக்காராக பதவியேற்றப் பின்னர் கோவில் சீரமைப்புப் பணியில் சேண்ட் பிளாஸ்டிங் முறை பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அதை நிறுத்த உத்தரவிடப்பட்டது. 16 கால் மண்டபம் நான் பதவி ஏற்கும்முன்பே இடிக்கப்பட்டுவிட்டது. இது, மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் இடித்ததாக கோவில் அறங்காவலர் குழுவினர் தெரிவித்தனர்.

கோவில் ஆகம விதிப்படி சுவாமி சன்னிதானம் எந்த திசையை நோக்கி இருக்கிறதோ, அதே திசையில்தான் கோவில் மண்டபமும்  இருக்க வேண்டும். ஆனால், இங்கு ஈஸ்வர சுவாமி சன்னிதானம் மேற்கு நோக்கி உள்ளது. அதே நேரத்தில் மண்டபம் தெற்கு நோக்கி இருந்தது. இதனால், ஆகம விதிப்படி மண்டபத்தை இப்போது மேற்கு நோக்கி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. 

கோவிலில் கிரானைட் கற்கள் பதிக்க சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கிரானைட் என்பது இயற்கையான கல் என்பதால் அதைப் பயன்படுத்தி வருகிறோம். 

கோவிலில் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் இப்புகார் தொடர்பாக 6 பேருக்கு 1.6.2012-ல் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் கொடுத்த விளக்கத்தை அறிக்கையாகத் தயாரித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன் என்றார்.

நன்றி:தினமணி (18.7.2012)

Friday, July 13, 2012

பில்லா - 2 சுடச்சுட விமர்சனம்!


வாங்க...  வாங்க... நீங்க பில்லா - 2 பாத்துட்டீங்களா?

அப்போ உங்க விமர்சனத்தை சுருக்கமா கொஞ்சம் கமென்ட்டிவிட்டுப் போங்களேன்! ஏன்னா... நான் இன்னிமே தான் படம் பாக்கனும்...!

.ஹி ஹி ஹி!

Wednesday, July 11, 2012

மகாபாரத்தில் ஒரு நாள் - நான் ஒரு முடிவெடுத்தா...!





மஹாபாரதம் என்ற இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் ஃபார்முலா. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் வாழும் விளக்கங்கள். கலியுக மனிதர்களைக் காட்டும் கண்ணாடி. உலகத்தில் வேறெந்த மதத்திலும் வாழ்க்கை தர்மத்தை வாழ்ந்து காட்டி உபதேசிப்பதான ஒரு இதிகாசம் கிடையாது. அது பாரதக் கதையில் சாத்தியம். ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளும் கூட வாழும் மனிதர்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கிறது என்றால் மிகையாகாது.

பொதுவாக நம் எல்லோருக்குமே எந்த ஒரு சூழ்நிலையிலும் சரி தவறுகளை ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் திறன் இருக்கத்தான் செய்யும். மானைத் திண்ணும் புலிக்கு அதை எப்படி எப்போது சாப்பிடுவது என்று முடிவெடுக்கும் திறன் இருந்தால் அதனால் திண்ணப்படப் போகும் மானுக்கும் அதே புலியிடமிருந்து எப்போது எப்படி தப்பிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் திறனும் இருக்கும். இதில் புலியோ மானோ ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. ஆனால் ஒன்று மற்றொன்றுடன் தோற்கும் நிகழ்வைத் தீர்மானிப்பது அதனதன் சூழலே ஆகும்.

மனிதனும் அதே போன்ற சூழ்நிலைக் கைதிதான் என்பது இயற்கையின் நியதி. சூழ்நிலைகள் தான் பெரும்பாலும் நம்முடைய எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டு கடந்து வருபவன் சூழலை வெற்றி பெருகிறான். கடந்து வரமுடியாமல் சுழலுக்காட்பட்டு அதனால் தூண்டப்பட்ட எண்ணங்களினால் அலைக்கழிக்கப்படுபவன் பல துன்பங்களுக்கு ஆளாகிறான். ராமாயனம் , மகாபாரதம் மட்டுமல்லாமல் நடைமுறை வாழ்க்கையிலும் அதுபோன்று துன்புறுபவர்களை நாம் காணமுடியும்.

உதாரணமாக சிலருக்கு தான் முடிவெடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிற எண்ணம் நிலைத்திருக்கும். தன்னைப் பற்றி அவர்கள் பெருமிதப்பட்டுக்கொள்ளும் விஷயமாகவும் அது அமைந்திருக்கும். ஆனால் சூழ்நிலைகள் அவர்களை அறியாமலேயே அவர்களை மோசமாக வழிநடத்தும் போது அந்த பெருமிதம் துணைவராது. தன் முடிவு சரியென்ற நம்பிக்கையில் செயல்பட்டுப் பின் துன்பமுறுபவர்களை நாம் பார்க்கலாம்!

இதற்கு காரணம் எல்லாம் சீராகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம் முடிவுகள் சரியாக இருக்கும். ஆனால் அது பற்றிய சிந்தனை நம்  கண்களை மறைத்து ஒருவித கர்வத்தைக் கொடுத்துவிடும். அந்த மாயை நம் செயல்களின் மீது தெளிவு கொள்ளச் செய்யாது.பிறருடைய யோசனையைக் கேட்கவேண்டும் என்கிற எண்ணம் தோன்றாது. அத்தகைய மாய வலையில் நாம் சிக்கிக் கொண்டால் பின்னர் நம்முடைய முடிவுகளுக்கும் அதனால் விளையும் நன்மை தீமைகளுக்கும் நாமே காரணமாகி விடுகிறோம்.

அப்படி ஒரு சூழலில் தான் அன்று தர்மராஜன் யுதிஷ்ட்டிரர் இருந்தார். அந்த ஒரு நாள் பாண்டவர்களின் வாழ்வில் பல திருப்பங்களைக் கொண்டு வந்து நமக்கு கீதை கிடைக்கக் காரணமான நாள். மகாபாரத்தில் ஒரு நாள்!

ஆம், அரக்கு மாளிகை சூழ்ச்சியிலிருந்து தப்பிவந்த பாண்டவர்கள் தங்களுக்குக் கிடைத்த காண்டவ வனத்தை நாடாக மாற்றி இந்திரபிரஸ்தம் என்கிற நாட்டை உருவாக்கி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இனி நமக்கு துன்பமில்லை என்கிற மகிழ்ச்சியில் வாழ்ந்து கொண்டிருந்த தருமபுத்திரரை சூதாட அழைக்கின்றான் துரியோதனன். தர்மபுத்திரர் யுதிஷ்டிரரும் அவனது அழைப்பை ஏற்று சூதாட்டக்களத்தில் அமர்கிறார்.

மகிழ்ச்சியான வாழ்க்கை ஓட்டத்தில் சூதுவாதுகள் புரிவதில்லை. காரணம் இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்த சூதாட்ட அழைப்புக்கு முன்பாக ஒருநாள் சகுனி வெறுமனே விளையாடிக் கொண்டிருக்கையில் அவ்வழியே வந்த யுதிஷ்ட்டிரனை ஒரு ஆட்டம் போடு எனக் கூப்பிட அந்த ஒரே ஆட்டத்தில் யுதிஷ்ட்டிரன் வென்று சகுனி தோற்கிறார். அதாவது தோற்பது போல யுதிஷ்ட்டிரனிடம் நடிக்கிறார்.


காரணம் இது தான், யுதிஷ்ட்டிரன் தனது முடிவுகள் மீது நம்பிக்கை கொண்டவனாக ஏற்கனவே இருந்து வருகிறார். அவனிடம் ஒரு முறை தோற்றுக் காண்பித்தால் கண்டிப்பாக தனது முடிவுகள் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்கிற மனத்திரை பலமாக விழுந்து விடும் என்று சகுனி நம்பினார். அது பலித்தும் விட்டது.

சகுனி திட்டம் தீட்டிய அந்த நாள் வந்தது. சூதாட்டக் களத்தில் பாண்டவர்கள் ஒரு புறம் துரியோதனன் சகுனி மற்றும் கௌரவர்கள் மறு புறமும் அமர்ந்திருக்க ஆட்டம் துவங்கியது. அந்த வேளையில் துரியோதனன் வஞ்சகமாகச் சொல்கிறான் "அவையோர்களே, என் சார்பாக என் மாமா சகுனி காய்களை உருட்டி விளையாடுவார்." என்று அறிவித்தான். அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டனர். யுதிஷ்ட்டிரனும் புண்ணகையுடன் ஏற்றுக் கொண்டார். காரணம் ஏற்கனவே யுதிஷ்ட்டிரன் மனதில் சகுனி நம்மிடம் ஒரு முறை தோற்றவர் தானே என்றும் விளையாட்டில் நாமும் அவரை வெல்ல முடியும் என்றும் நம்பிக்கை இருந்தது. ஆனால் யுதிஷ்ட்டிரன் தான் சூழலின் மயக்கத்தில் ஆழ்ந்திருந்ததை உணரவில்லை.

ஆட்டம் துவங்கியது. தன் முடிவுகள் சரியாகத்தான் இருக்கும் என்கிற அவரது நம்பிக்கை பொடிப்பொடியானது. சகுனியின் சூதாட்டத் திறனுக்கு முன்னால் யுதிஷ்ட்டிரன் ஒரு முறை கூட ஜெயிக்க முடியவில்லை. தன் நாட்டை, செல்வங்களை, சகோதரர்களை, ஏன் தன்னையே வைத்து சூதாடி பின் தங்கள் மனைவியையும் வைத்துச் சூதாடி அனைத்தையும் இழந்து தலை குனிந்து நின்றான். சூழலின் மாயத்தோற்றத்தால் , அந்த மாயை தந்த மயக்கத்தால் யுதிஷ்ட்டிரன் தன்நிலை மறந்து தோல்வியுற்று நின்றான். தான் செய்யும் செயல்கள் அனைத்துமே சரியானதாக இருக்கும் என்றும் தன்னுடைய முடிவுகள் எப்போதும் வெற்றியையே தேடித்தரும் என்றும் பிறருடைய ஆலோசனைகள் தனக்குத் தேவைப்படாது என்றும் நினைப்பவர்களுக்கு அந்த நாள் ஒரு பாடமாக இருந்தது.

ஆட்டம் துவங்கும் முன்பாக யுதிஷ்ட்டிரன் ஒரு முறை தனக்கு உதவத் துணை வேண்டுமென்று நினைத்திருந்தால் இந்த சூழல் அப்படியே தலைகீழாக மாறியிருக்கும். துரியோதனன் தனக்குப் பதிலாக தன் மாமா சகுனி விளையாடுவார் என்று அறிவித்த அடுத்த நொடி யுதிஷ்ட்டிரனும் தனக்குப் பதிலாக தன் உறவினனும் உற்ற நண்பனுமான ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கே விளையாடுவார் என கண்ணனை அழைத்திருந்தால் அவன் நாடிழந்திருக்க மாட்டான். தன் சகோதர்களை இழந்திருக்க மாட்டான். மனைவி திரௌபதிக்கு அவமானம் தேடித்தந்திருக்க மாட்டான்.

அந்த ஒரு நாள் சூழல் மயக்கத்தால் யுதிஷ்ட்டிரர் செய்த தவறு குருக்ஷேத்திரத்திற்கு வழிவகுத்தது!

'என் முடிவே சரி! எனக்கு யாரும் புத்தி சொல்ல வேண்டாம்!" என்று உங்கள் அருகில் யாரேனும் பேசுகிறார்களா!

அவர்களிடம் சொல்லுங்கள்!

குருக்ஷேத்திரம் காத்திருக்கிறது!


பேசும் படம்!


Tuesday, July 10, 2012

கிருபானந்த வாரியாரின் அருள் மொழிகள்!



துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் மழையினால் உண்டாகும். மழையே மாநிலத்தின் உயிர்நாடி பயிர்தழைக்க உயிர் தழைக்கும். அத்தகைய மழைபொழிய வானில் இருண்ட மேகம் எழுந்த உடனே உலகிற்கு உண்டாகும் நலனைக் கருதி அந்நலம் தனக்கு எய்தியது போல் மகிழ்ச்சியுடன் தோகையை விரித்துக் களிநடம் புரிகின்றது மயில். இத்தகைய சிறந்த பண்புடைய மயிலைக் கருணை நாயகராகிய கந்தப் பெருமான் தனக்கு வாகனமாகக் கொண்டுள்ளார். அதாவது தன்னலமில்லாமல் பிறருக்கு நன்மையே நினைக்கும் எவரையும் எம்பெருமான் கந்தனுக்கு மிகவும் பிடிக்கும்.

குழந்தைகள் உணவு அருந்தாமல் வீதியில் வெயிலில் விளையாடிக்கொண்டேயிருக்குமானால் தாய் அக்குழந்தைகள் மீதுள்ள எல்லையற்ற கருணையால் வலிய வீட்டுக்குள் அழைத்துச் சென்று நீராட்டி ஆடை அணிகலன்களால் அழ்கு செய்து நல்லுணவு தந்து இன்பம் செய்வது போல், உயிர்களாகிய நாம் பாவமாகிய வெயிலில் விளையாடும் போது தாயினும் மேலான கருணையுள்ள இறைவன் நம்மை தகுந்த காலத்தில் அழைத்து பக்குவமான நிலைக்கு அழைத்துச் சென்று அருள்புரிவான். ஆனால் தாய் வலியச் சொல்லும் போது குழந்தைகள் மறுக்காமல் அதைக் கேட்டு நடப்பது போல இறைவன் சொல்படி கேட்டு நடக்கும் வகையில் மனதை தயார் நிலையிலேயே வைத்திருக்க வேண்டியது நமது கடமையாகும்.

நூலறிவு, குலத்தின் உயர்வு, கருணை, பெரும்புகழ், செல்வம், கைம்மாரு கருதாது உல்ளதை வழங்குதல், சிறப்பு, ஒழுக்கம், அரிய தவம், நியமம், நெருங்கிய நட்பு, சமானமில்லாத வலிமை, உண்மை, தூய்மை, அழகு ஆகிய இத்தனை நலன்களும் அடக்கமின்மை என்ற ஒரு தீயகுணத்தால் அழிந்து போகும்.

தன்னிடமுள்ள பொருட்களின் மேல் வைத்திருக்கும் பிடிப்பு பற்று எனப்படும். இன்னும் அது வேண்டும் இது வேண்டும் என்று கொழுந்து விட்டு எரிகின்ற நினைவுகள் ஆசை எனப்படும். இதை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைக்கவில்லையென்றால் எத்தனை வந்தாலும் திருப்தியின்றி நெய்விட, நெய்விட எரிகின்ற நெருப்பின் தன்மைபோல், சதா உலைந்து அலைந்து நிம்மதியற்ற தன்மையை உண்டாக்கும் பேராசை குணத்திற்கு நம்மை கொண்டுபோய் விட்டு விடும்.

Sunday, July 1, 2012

கீதோபதேசம் - யோகம் என்பது என்ன?


அர்ஜுனன் கேட்கிறான்..

ஹே பரமாத்ம! யோகம் என்றால் எது, யோகியின் தன்மைகளைப் பற்றி எனக்குக் கூறுவாய்!!

பகவான் சொல்கிறார்..

அர்ஜுனா! செயல்களின் பயனை எதிர்பார்க்காமல், தான் செய்ய வேண்டிய கடமையை யார் செய்கிறானோ அவன் தான் சந்நியாசியும், யோகியும் ஆகின்றான். அதிக வேட்கையும் தீவிரமான செயலும் அற்றவன் அவ்வாறு அழைக்கப்படுவதில்லை.

ஹே பாண்டவ! எதை துறவு என்று கூறுகிறார்களோ அது தான் யோகம் என்று அறிந்து கொள். எண்ணங்களைத் துறக்காத ஒருவன் யோகி ஆவதில்லை.

யோகத்தை அடையும் எண்ணம் கொண்ட ஞானிக்கு செயல் ஒரு சாதனமாகக் கூறப்படுகிறது. அதை அடைந்தபின் அதே மனிதனுக்கு செயலற்ற நிலை தான் சாதனமாகக் கூறப்படுகிறது.

எண்ணங்களைத் துறந்து விட்டு, புலன் உணர்வுப் பொருட்களோடும் , செயல்களோடும் பற்று இல்லாமல் இருப்பானானால் ஒரு மனிதன் யோக சித்தியை அடைந்தவன் ஆகிறான்.

அர்ஜுனா! ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. ஒருவனுக்கு நண்பனும் அவன் தான். பகைவனும் அவன் தான். வேறு ஒருவரும் இல்லை.

தன்னடக்கத்துடன் அமைதியாக இருப்பவனுடைய ஆத்மாவானது குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும், துன்பத்திலும், பெருமையிலும், சிறுமையிலும் சமநிலையில் இருக்கிறது.

சாஸ்திர அறிவினாலும் , அனுபவ அறிவினாலும் ஏற்பட்ட திருப்தியினால் மனம் நிறைந்தவனும், உறுதியான மனம் படைத்தவனும், தன்னுடைய புலன்களை வென்றவனும், மண் , கல், தங்கம், ஆகியவைகளைச் சமமாகக் கருதுபவனுமாகிய யோகியே யோகத்தில் நிலை பெற்றவனாக இருக்கிறான்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்