Saturday, August 31, 2013

உயரமும் எடையும்!

உங்க உயரத்துக்குச் சமமான எடை இருக்கிறதா? இந்தப் பட்டியலில் சரிபார்க்கலாம்!


Wednesday, August 21, 2013

சாணக்கியன் சொல்!



அரசனாக இருப்பவன் நாட்டின் செல்வ வளத்தை அதிகரிக்கும் வழிமுறைகளின் மீது கவனமுள்ளவனாக இருக்க வேண்டும்.

·         நாட்டின் செழிப்பை நிலைநாட்டுதல்

·         சிறந்த முயற்சிகளையும், வெற்றிமிக்க கொள்கைகளையும் தொடர்தல்

·         அரசு அலுவலர்கள் மீதான கட்டுப்பாட்டை நிலை நிறுத்துதல்

·         வேளாண்மை உற்பத்தியைப் பெருக்குதல்

·         வணிகத்தை மேம்படுத்துதல்

·         பிரச்சினைகள் மற்றும் அபாயங்களைத் தவிர்த்தல்

·         இவ்வகையில் பணவரவை அதிகரித்தலில் கவனம் செலுத்த வேண்டும்.

அரசாங்க உடைமைகளைத் தவறாகப் பயன்படுத்துதல், அரசாங்க அலுவலர்களால் எழுதப்படும் பொய்க்கணக்கு போன்றவற்றை கண்காணித்து தடுக்க வேண்டியது அரசனின் கடமை.

அது போக, நடிகர்களும் கலைஞர்களும் நிரந்தரமாய் தங்குவதை தடை விதிப்பதன் மூலம் மக்கள் கவனச்சிதறல் இன்றி ஆக்கப்பூர்வமான பணிகளில்  ஈடுபடுவார்கள்.

மேலும், எவ்விதக் கவனச் சிதைவும் இல்லாத நிலையில் மக்கள் வேலைகளில் முழுமையாய் ஈடுபட்டால் அதன் விளைவாய் பணம், வணிகப்பொருள்கள், தானியங்கள், மற்றும் வேலையாட்களின் வரவு கருவூலத்தில் அதிகரிக்கும்

- சாணக்கியர்


Sunday, August 18, 2013

இன்பத்தின் அளவீடு!


இன்பத்தின் அளவீட்டைப் பார்ப்போம். நல்ல வாலிப மிடுக்கு உடைய அறிவாளியான, சுயக்கட்டுபாடு உடைய, மன உறுதிகொண்ட , பலசாலியான இளைஞன் ஒருவனை அளவுகோலாகக் கொள்வோம். அத்தகையதோர் இளைஞனுக்கு எல்லாவித செல்வங்களாலும் நிறைந்த இந்த பூமி உரியதாவதாக வைத்துக்கொள்வோம். அந்த இளைஞன் பெறும் இன்பம் ஒரு மனித இன்பம். அத்தகைய நூறு மனித இன்பங்கள் சேர்ந்தால் அது ஒரு மனித-கந்தர்வ இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு தேவ-கந்தர்வ இன்பங்கள் நீண்ட ஆயுளை உடைய முன்னோர்களின் ஒரு இன்பத்திற்குச் சமம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு பித்ரு-இன்பங்கள் தேவலோகத்தில் பிறந்த தேவர்கள் அனுபவிக்கின்ற ஒரு தேவ-இன்பம், ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு தேவ-இன்பங்கள் ஒரு கர்மதேவ-இன்பம். செயல்களின் மூலம் தேவ நிலையை அடைந்தவர்கள் கர்ம தேவர்கள். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.


நூறு கர்மதேவ-இன்பங்கள் ஒரு முக்கியதேவ-இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு முக்கியதேவ-இன்பங்கள் ஓர் இந்திர-இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.


நூறு இந்திர-இன்பங்கள் ஒரு பிருகஸ்பதி-இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு பிருகஸ்பதி-இன்பங்கள் ஒரு பிரஜாபதி இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு பிரஜாபதி-இன்பங்கள் ஒரு பிரம்ம-இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

இந்த இன்பங்கள் எல்லாம் ஏதோ இறந்த பின்னர் கிடைக்கும் மாயலோக இன்பங்கள் அல்ல. யோக நிலையை பயிற்சி செய்து யாரொருவன் அக உணர்வின் மூலம் ஆன்மாவை நெருங்குகிறானோ அவனது இன்பத்தின் அளவீடு அதிகரிக்கிறது.

அந்த ஆனந்தத்தை அவனே உணர்வான்!


- தைத்ரிய உபநிஷத்து.

Friday, August 9, 2013

கருக் முருக் நொறுக்ஸ்!

தானே எரியும் குழந்தை!

தானே எரிந்த தடையங்கள்!


தமிழகத்தைப் பொறுத்த வரை ஆச்சரியமான செய்தி. ஆனால் உலகின் பல நாடுகளில் இது மாதிரி நிகழ்ந்திருக்கிறதாம். இதனை 'ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பியூஷன்' என்று அழைப்பார்களாம்.

!! 'Spontaneous' Combustion: Can Bodies Burn From the Inside !!

When human beings are discovered burned to a crisp alone in their otherwise unscathed homes amidst no evidence of mayhem -- no telltale blowtorches, cigarettes or Butane -- rumors swirl: of mysteries and miracles in which bodies inexplicably burst into flames. It might be an urban legend, sheer magic or divine wrath (hey, it happens in Leviticus), but it is one of the most hotly debated (and  hot) causes of death.

இது பற்றி பல தகவல்களை தொகுத்து மதன் கீழ்கண்டவாறு தனது புத்தகத்தில் பதிவு செய்கிறார்:

மனிதனின் வயிற்றுக்குள் எரியக்கூடிய காற்றுப் பொருள்கள் (combustible gases) உண்டு! அரிதாகச் சிலருக்கு மட்டும் மிகவும் அதிக் அலவில் அவை உற்பத்தி ஆகின்றன. தவிர, நம் எல்லோருடைய உடலிலும் மின் சக்தியும் உன்டு. அப்படி ஒரு மின்சாரம் உடலுக்க்குள்ளேயே பளிச்சிட்டு கூடவே வயிற்றுக்குள் காக்டெய்ல் போன்ற காஸ் விஷயங்களும் அதிக் அளவில் பரவி இருந்தால் இப்படி ஒரு விபரீதம் ஏற்படுவது சாத்தியம் என விஞ்ஞானிகள் விளக்குகிறார்கள்.

1993 ல் ஜெர்மனியில் இரு விஞ்ஞானிகள் சில விலங்கினங்களின் வயிற்றுக்குள் பாஸ்பஃபேன் காஸ் இருப்பதை கண்டுபிடித்தார்கள்.! பாஸ்ஃபேன் வாயு - பாஸ்பரஸ் போல தானாகவே திடீரென்று எரிகிற பொருள். (வயற்புரங்களில் அந்தரத்தில் எரியும் தீப்பிழம்புகள் பாஸ்ஃபேன் காஸ்தான். அதைத்தான் நாம் கொள்ளிவாய் பிசாசு என்கிறோம்). விலங்குகளுக்கு இப்படி நிகழும் என்றால் மனிதனுக்கும் இது சாத்தியம் என்கிறார்கல் விஞ்ஞானிகள்.

- மனிதனும் மர்மங்களும், மதன்

தமிழகத்தில் அதிசயக்குழந்தையான தானே எரியும் குழந்தையுன் வயிற்றில் பாஸ்ப்ஃபேன் காஸ் எந்தளவு இருக்கிறது என்பதை சோதனை செய்து பார்த்து அந்த வாயு உடல் தோல்கள் வழியாக வெளியாறாமல் இருக்கும் வன்னம் ஆவன செய்யலாம். பொதுவாக நாம் என்ன சாப்பிடுகிறோமோ அந்தப் பொருள் சார்ந்த வாசனை நம் உடலிலிருந்து வெளிப்படும். நம் உடல் வாடையாக அல்லது வியர்வையின் வாடையாககூட வெளிப்படும். சிலர் அசைவம் அதிகம் சாப்பிட்டால் குறிப்பாக மாட்டுக்கறி சாப்பிட்டால் ஓரிரு நாட்களுக்கு அவர்களின் உடலிலிருந்து வழக்கத்திற்கு மாறான மணம் வெளிப்படும். காரணம் வயிற்றில் இருந்து ஜீரணத்தின் போது உருவாகும் வாயு நாம் மூச்சு விடும் பொழுது உடல் தோலில் மெல்லிய துவாரங்கள் வழியாக வெளியேறுவது வழக்கம்.

உடலில் பாஸ்ஃபேன் போன்ற வாயு அதிகம் இருக்கும் அரிதான நபராக ஓருவர் இருந்தால் அவர் உடல் தோலின் மெல்லிய துவாரங்கள் வழியாக வெளியேறும் போது சட்டென்று வெளிப்புறச் சூட்டின் காரணமாக பாஸ்பரஸ் எரிவது போன்று தோலின் மேல்பகுதியில் நின்று எரிந்து விட வாய்ப்பிருக்கிறது. அத்தகைய வாயு குழந்தையின் உடலில் அதிகளவில் இருந்தால் அதனை கட்டுப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். குழந்தையின் உடல் சூடாகாமல் பார்த்துக் கொள்ளலாம். அப்புறம் ஆன்டவன் கையில்!


செக்யூலரிச இட ஒதுக்கீடு. ஏழையாக பிறந்தாலும் ஹிந்துவாகப் பிறக்காதே எனச் சொல்ல வைப்பார்கள் போல!

ஹிந்து ஆதி திராவிடர்கள் ஒதுக்கீட்டின் பயனாய் வாழ்ந்ததெல்லாம் போதும். இனி கிறிஸ்தவ ஆதி திராவிடர்கள் வாழட்டும். ஏன் ஒட்டு மொத்த கிறிஸ்தவர்களை அப்படியே ஆதிதிராவிடர்கள் என ஓர் இரவில் அறிவித்து விட்டால் மொத்த கிறிஸ்தவ பிரிவுகளின் ஓட்டுகளையும் அள்ளிவிடலாமே. இவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு என்றால் ஆர் சி கிறிஸ்தவர்கள் என்ன ஆதிதிராவிட கிறிஸ்தவர்களை விட தாழ்ந்தவர்களா. அவர்களுக்கு அரசாங்கம் ஒதுக்கீடு கொடுத்து கௌரவிக்காதா?

நாடார் கிறிஸ்தவர்கள் வன்னிய கிறிஸ்தவர்கள் எல்லாம் என்ன பாவம் செய்தார்கள்?

ஏற்கனவே ஏழை மாணவர்களுக்கு மதம் பார்த்து உதவித்தொகை தருவதை எதிர்த்து வருகிறார்கள். ஹிந்து ஏழை மாணவர்களுக்கும் உதவித்தொகை வேண்டும் என்ற போராட்டம் வலுத்து வருகிறது. இப்போது இதுவேரையா? ஓட்டுப் பிச்சை செக்யூலரிச அரசியல் வாதிகள் ஹிந்துக்களை இந்நாட்டு அகதிகளாக்கி விடுவார்கள் என்பது நிச்சயம்.

**

சேரனின் அழுகை!

'தவமாய்த் தவமிருந்து' என அப்பாக்கள் சார்பாக படம் எடுத்த சேரன் தன் மகளால் வருந்திக்கொண்டு இருக்கிறார். சினிமாக்கள் தான் சமூகத்தின் உணர்ச்சிகளோடு பெரிதும் விளையாடும் ஊடகம். ஆனால் அவற்றின் மூலம் சினிமாக்காரர்கள் மட்டும் பாதிக்கப்படக்கூடாது என சினிமாக்காரர்கள் நினைப்பது போல இருந்தது சேரனும் அவர்களது சகாக்களும் மீடியா முன்னால் நடத்திய கூத்துக்கள் எல்லாம்.

சமீபத்தில் தான் சேரன் பிழியப் பிழிய அழுதார். இனியாவது தமிழ் சினிமாவில் அம்மா அப்பா பாசத்தை அவர்கள் குழந்தைகளை ஆளாக்கப் பாடுபடும் கஷ்டங்களைச் சொல்லியும் , குடும்ப பாசம் சம்பந்தப்பட்ட படங்களும் நிறைய வரவேன்டும் தமிழ் சினிமாவில்.

'ஆதலால் காதல் செய்வீர்' என்று இளசுகளின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு பணம் சம்பாதிக்க படம் ஒன்று வரப்போகிறது, விளம்பரமாகப் போட்டுத் தள்ளுகிறார்கள். அழுகைப் புலி சேரனோ, அவரோடு தோளோடு தோள் கொடுத்த அமீர்  போன்றவர்களும் இந்தப்படத்தை எதிர்ப்பார்களாசரி எத்தனை அப்பாமார்கள் எதிர்ப்பார்கள்? மாட்டார்கள். அதே அரைச்ச மாவு தான்.

'சார் , நாங்க காதலுக்கு எதிரி இல்லீங்க!, நல்லவனாப் பாத்து காதலிங்கன்னு தான் சொல்றோம்' என்பார்கள்.

அதைத்தானே நான் செஞ்சேன் என்று அவர்களது பெண்கள் சொன்னால் - ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அழுவார்கள்.

அழுகுனி ஆட்டம்...!

**

ஆடோக்களில் பிரசவத்துக்கு இலவசம் என்கிற வாசகம் எல்லாம் காணாமல் போய்விட்டது. இருக்கும் விலைவாசியிலும் க்ளோபலைசேஷன் சமூகச் சூழலிலும் எங்கும் யாருக்கும் இலவசம் எதிலுமில்லை. மனிதாபிமானம் செத்துக்கொண்டு வருகிறது. டாக்டர்கள் பிரசவத்துக்கு இலவசம் என்று போட்டால் இக்காலத்தில் அது தான் மனிதாபிமானம். இது நாள் வரை ஆட்டோக்காரர்களிடத்தில் இருந்த மனிதாபிமானம் டாக்டர்களிடம் இடம்பெயருமா? பெயராது.

பெண்களின் திருமணவயதை தீர்மானித்து வந்த ஆட்டோக்காரர்கள் மத்தியில் நிஜமாகவே பெரிய விழிப்புணர்வு பிரச்சாரம் தேவைப்படுகிற ஒரு வாசகத்தை ஒரு ஆட்டோவின் பின்புறம் பார்த்தேன்.

' சாலையில் எச்சில் துப்பாதீர்கள்! ' துப்பிகள் கவனிப்பார்களாக.



'ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பியூஷன்'



அக்பர் அவையில் தான்சேன் 'தீப' ராகம் பாடும் போது அவரது உடலில் தீப்பற்றிக் கொள்ளுமாம். பின்னர் மழைவரவைக்கும் ராகம் பாடி அனைப்பார்களாம். தான்சேன் பாடும் போது  அந்த ராகத்தால் உடலின்  'பாஸ்ஃபேன்' அதிகப்பட்டு உடல் எரியுமோ?