Wednesday, January 27, 2010

மரணத்திற்கு அப்பால் - 6





"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."

அகண்ட தேகமும், மிகப் பெரிய உருவமும், முகத்தை மறைக்கும் மீசையும் சிவந்த கண்களும் கொண்ட எமன் நசிகேதனின் பிடிவாதமான இந்த நிலையை கண்டு திகைப்படைந்தான். நசிகேதனை அமைதியாக உற்றுப் பார்த்தான்...

அவனது பிடிவாதத்தைத் தளர்த்த கடைசி முயற்சியாக சிலவற்றைக் கூறினான். "நசிகேதா! மரணத்திற்கு அப்பால் உள்ளவைகளைத் தெரிந்து கொள்ள விரும்புவதற்கு பதிலாக, உலகில் அடைவதற்கரிய காரியங்கள் என்னவெல்லாம் உண்டோ எல்லாம் கேள்! சாரதிகளுடன் தேர்களைத் தருகிறேன்.

மானிடர்களுக்கு கிடைக்காத, ஆண்களை மயக்குகின்ற தேவலோகப் பெண்கள் எல்லோரையும் தருகிறேன். அவர்கள் உனக்கு வேண்டிய அளவு பணிவிடைகள் செய்வார்கள். இப்படி அனைத்தையும் பெற்றுக்கொள். ஆனால் மரணத்தைப் பற்றி மட்டும் கேட்காதே!" என்றான் எமதர்மன்.

ஆனால் நசிகேதனோ "மரணதேவனே! நீ கூறுகின்ற இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை. அவை மனிதனுடைய புலன்கள் அனைத்தில் ஆற்றலையும் வீனாக்குகிறது. வாழ்க்கையோ குறுகியது.

அப்படிப்பட்ட வாழ்க்கையில் ஒருவர் இது போன்ற சிற்றின்பங்களில் மூழ்கி தன் ஆற்றல்களை இழக்ககூடாது. எனவே நீ சொன்ன குதிரைகள், ஆடல், பாடல் எல்லாம் உன்னிடமே இருக்கட்டும். நிலையற்றதை அறியவும் அடையவும் நான் விரும்பவில்லை. என்றும் நிரந்தரமான உண்மை எதுவோ அதையே அறிய விரும்புகிறேன்" என்றான் தீர்க்கமாக.

பொதுவாக எந்த ஒரு குருவும் தம்மிடம் ஞானம் கற்க வருபவர்களுக்கு அதைப் பெறும் தகுதி இருக்கிறதா என்பதை அவர்களை வைத்தே சோதிப்பார்கள். அவ்வாறு சோதித்து குருவுக்கு, இவன் இதைக் கற்கத் தகுதிபடைத்தவன் என்ற திருப்தியடைந்தால் மட்டுமே அவனுக்கு ஞானத்தைப் போதிப்பார். அது போல எமதர்மனும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் ஆசை காட்டியும், கேட்காத பல வரங்களைக் கொடுத்தும் நசிகேதன் வாங்க மறுத்து விட்டான்.

எனவே எமதர்மனுக்கு நசிகேதன் மீது நம்பிக்கை வந்தது. இவனுக்கு மரணத்தைப் பற்றி எடுத்துச் சொல்லலாம் என்று தீர்மானித்தான்.

"நசிகேதா! நீ பல வழிகளில் திசை திருப்பியும் அழியும் அற்பப் போருட்கள் வேண்டாம் என்றும் நிரந்தர உண்மையை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்க்கமாய் இருக்கிறாய். உனக்கு வரம் கொடுப்பேன் என்று உறுதியளித்ததாலும் உன் உள்ள உறுதியை உணர்ந்து கொண்டதால் உனக்குச் நான் எடுத்துரைக்கிறேன். கவனமாகக் கேள்" என்று எமதர்மன் மரணத்திற்கு அப்பால் நடப்பன பற்றி நசிகேதனுக்கு கூறத்துவங்குகிறான்.

எந்த ஒரு விஷயத்தையும் நேரடியாகச் சொல்லி விடாமல் அதற்கு மனத்தைத் தயார் படுத்த வேண்டும். அவ்வகையில் மரணத்தை எதிர் கொள்வது பற்றியும் வாழ்க்கையின் சூட்ஷமத்தைப் பிரித்தரிந்து நடந்து கொள்ளுதல் பற்றியும் முதலில் எடுத்துக் கூறுகிறான் எமதர்மன்.


"பிரித்தறிந்து வாழ்! நசிகேதா, வாழ்க்கையின் இரு வேறு சுகங்கள் இருக்கின்றன. அக வளர்ச்சியால் பெறப்படும் மேன்மையும் புற வளர்ச்சியால் பெறப்படும் மேன்மையும் வெவ்வேறு சுகங்களைக் கொடுக்கிறது. அதாவது மனத்தை அமைதிப்படுத்தி இறைவனை நாடுவதில் மனம் மேம்படுமானால் அந்த மனத்தின் மூலம் கிடைக்கும் அமைதி ஒரு சுகமாகும். உடல் சார்ந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் பொருள், போகம், ஆடல், பாடல், காமம் போன்றவற்றை அடைவதில் முன்னேறி புற வளர்ச்சியால் அனுபவிப்பது ஒரு சுகமாகும். இவற்றில் அக வளர்ச்சி பெறுவதே மேலானது.

மேலானது வேறு, சுகம் தருவது வேறு. அவை இரண்டும் வேறுபட்ட பலன்களைத் தந்து அவற்றின் மூலம் மனிதனைப் பிணைக்கின்றன. மேலானதை ஏற்றுக்கொள்பவனுக்கு நன்மை உண்டாகிறது. சுகம் தருவதை நாடுபவன் லட்சியத்திலிருந்து வீழ்கின்றான்."

அதாவது அக வளர்ச்சியை நாடுபவன் மேலானதை ஏற்றுக் கொள்கிறான் என்றும் புற வளர்ச்சியான உடல் அனுபவிக்கும் சுகங்களை நாடுபவன் லட்சியத்திலிருந்து விலகிவிடுகிறான். அவன் ஆத்மாவை அறிவத்ல்லை.

மேலானது, சுகம் தருவது இரண்டும் மனிதனை அணுகுகின்றன. அறிவாளி அவற்றை ஆராய்ந்து, அவை இரண்டையும் பாகுபடுத்துகிறான். சுகம் தரும் உலக இன்பங்களை விட்டுவிட்டு மெலானதைத் தேர்ந்தெடுக்கிறான். மூடன், உடம்பின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சுகம் தருவனவற்றை நாடுகிறான்.

இப்படிச் சொன்ன எமதர்மன் நசிகேதன் எவ்வாறு பிரித்தறிந்தான் என்றும் விளக்குகிறான். "நசிகேதா! நீயோ நன்றாகச் சிந்தித்து, செல்வங்களையும் அழகிய பெண்களையும் ஒதுக்கிவிட்டாய். எந்தப் பாதையில் பெரும்பாலான மனிதர்கள் உழல்கிறார்களோ அது செல்வத்தைக் குறிக்கோளாகக் கொண்டது. அந்தப் பாதையை நீ தேர்ந்தெடுக்க வில்லை. மாறாக இறைநெறியில் நாட்ட முள்ளவனாக நிரந்தரமான மேலான பாதை எதுவோ அதைப்பற்றி அறிந்து கொள்ள முடிவெடுத்தாய்" என்றான் எமதர்மன்.

மேலும் இறைநெறி, உலகியல் இரண்டும் வேறுபட்டவை, நேர்மாறானவை, வேறுவேறான பாதைகளைப் பின்பற்றுபவை. எந்த ஆசையும் உன்னை மேலான பாதையை நாடுவதிலிருந்து விலக்கவில்லை. நீ பாதை மாறாமல் நிரந்தர உண்மை அறியவே விரும்பினாய் என்று நசிகேதனை உயர்வாகப் பேசினான் எமதர்மன்.

பிறகு மனிதர்கள் எந்தெந்த சூழ்நிலைகளால் தம்மை வந்தடைகிறார்கள் என்பதைச் சொல்லத் துவங்கினான்.

(நாமும் கேட்போம்...பொருத்திருந்து)




மரணத்திற்கு அப்பால் - 7

Tuesday, January 26, 2010

கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவுத் துளிகள்!


ஒரு பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல இறைவழிபாட்டிற்கு அன்பும், ஒழுக்கமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும்.

கண்ணால் காணமுடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலேயுள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் தெய்வமும் உறைந்திருக்கின்றன. ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும் இறைவன் சன்னிதியே. அதனால், எல்லா உயிர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மை கடவுளுக்குச் செய்யும் நன்மையாகும்.

கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்காகும். ஒவ்வொரு யுகத்திலும் இறைவனை அடையும் வழிகள் வேறுவேறாகும். கிருதயுகத்தில் ஞானத்தினாலும், திரேதாயுகத்தில் தானத்தினாலும், துவாபரயுகத்தில் யாகத்தினாலும், கலியுகத்தில் பக்தியினாலும் முக்தி பெறலாம். பக்தி செய்ய பணச்செலவு செய்ய வேண்டியதில்லை. இறைவனின் திருநாமத்தை அன்போடு அனுதினமும் உச்சரித்தால் போதும்.

சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தருமம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்கள் மட்டுமே நமக்கு உகந்த உறவினர்கள் ஆவர்.

ந்திரன் இரவுப் பொழுதைப் பிரகாசிக்கச் செய்கிறது. சூரி யன் பகல் பொழுதினைப் பிரகாசிக்கச் செய்கிறது. ஒருவன் செய்த தருமம் மூன்று உலகங்களிலும் பிரகாசிக்கச் செய்யும். நல்ல பிள்ளை, பிறந்த குடும்பத்தை பிரகாசிக்கச் செய்கிறான்.

பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியசீலர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது.

ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும்.

உன்னை யாராவது புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும் கொள்ளாதே. புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மனஅமைதியுடன் வாழ முடியும்.

தாய், தந்தையரின் பழக்கம் தான் பிள்ளைகளிடத்தில் உண்டாகும். ஆகவே, நல்ல பழக்கவழக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் உண்டாக்க தாயும், தந்தையும் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.

நாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பலமடங்கு பெருகி நம்மையே வந்தடையும்.

எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாகவே வழிபடுங்கள். சாதாரணநீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.

குடியரசு தினத்தில் கோட்சேயின் நினைவு!



கோபால கோட்சே
நாதுராம் கோட்ஸேவின் சகோதரர்


காந்தியின் மரணம் ஒரு பார்வை....
________________________________________________________________________

'Gandhi used to systematically fool people. So we killed him' - Gopal Godse

Gopal Godse

Do you ever regret Mahatma Gandhi's killing?

Mahatma GandhiNo, never. Gandhi used to claim the Partition would be over his dead body. So after Partition when he didn't die, we killed him. Usually an assassination of a leader is either for personal benefit or to acquire power. We killed Gandhi because he was harmful to India. And it was a selfless act. No one paid us a single penny for it. Our love for the motherland made us do it. We are not ashamed of it. Gandhi should have been honest to admit that his life was a failure.

You see, right from Pakistan and Bangladesh every Muslim is a converted Hindu. Gandhi's appeasement attitude (towards the Muslims) went far too much. That was why we killed him. Two hundred and fifty thousand Hindus were killed in Noakhali in October 1946. Hindu women were forced to remove their sindhoor and do Muslim rituals. And Gandhi said, 'Hindus must bow their heads if Muslims want to kill them. We should follow the principle of ahimsa (non-violence).' How can any sensible person tolerate this? Our action was not for a handful of people -- it was for all the refugees who came from Pakistan.

So, till this day, I have never regreted being one of the conspirators in Gandhi's assassination. In fact, many of Nathuram's friends told me after my release, 'Nathuram ni gadhav pana kela, tyani majha chance ghalavla' (Nathuram did you an injustice. He made you miss your chance to kill Gandhi).

Did your family undergo any social pressure after the assassination?

Yes, very much. No one used to be ready to marry girls from my family. So we decided that the first thing we should put across to the bridegroom was that we are related to Nathuram Godse. It is only now that people appreciate our honesty. Now they are ready for marriage (into my family).

If the Muslim League could influence the Muslims in 1947, why was it that the Hindu Mahasabha could not influence Hindus?

(That was) because I don't have any leadership quality. My talent is to write. And I have convinced my readers with my writing.

Unfortunately, the so-called secular Hindu leaders from the Congress have been ruling the masses since 1885. And they have ruled the country for another 50 years. It is only now that Hindus have become conscious (about the Congress). They have thrown the party out from Maharashtra and all over India.

You cannot gauge a nation in merely five decades. It took 500 years for the Christians to drive away Muslims from Europe. Muslims ruled right up to Spain and Portugal. I don't know how many years it will take for Hindus to rule the entire Bharat. It may be a decade, or it may be a century.

Did you ever contest elections?

Yes, I contested from Ranchi in Bihar. People asked me why I was contesting there. I said my slogan is 'Ab ke bar Ranchi se agli bar Karachi se'. (This election I will contest from Ranchi and the next from Karachi). I was able to secure only 7,000 votes because I did not have any mass support.

Can Muslims and Hindus ever live together in peace?

Yes, if the Muslims give up their blind faith. It is written in the Koran that idol worship is not permitted. If Muslims don't want Hindus to pray to their gods, how can they live together with them (the Hindus)? They want to convert Hindus to Islam not realising that their ancestors were Hindus. They must give up this attitude. Then only the two can live together.

And who created Pakistan? It wasn't the Arabs but the Muslims of Bharat. Who was Jinnah? His grandfather was a Hindu. Benazir Bhutto is also a Hindu Rajput.

Every Muslim nation keeps away from modern science. And when they do that they are left far behind the rest of the world. When the telephone was invented, Muslim countries were not using it. They said it is not mentioned in the Koran, that it was un-Islamic!

Of the 140 million Muslims in India, how many would you say want to convert Hindus to Islam?

The number is not important. What's important is that it is written in their religion. They have already shown that by creating Pakistan. No secular Hindu can go for Haj. Why is it so that only Muslims are allowed there? Is it because only Muslims are secular?

Who wants to expand Islam in India? Can you name them?

No. You have to understand one thing. Individually a Muslim may be good to the Hindus. But when in a group, he will be out of the national mainstream.

குழு புகைப்படம்

'According to Nathuram the Sindhu was the only river which was pure as Gandhi's ashes were not immersed there'

What is the national mainstream?

I can give you an example: There was some inauguration of a dam in Kerala. A Muslim minister was asked to light the lamp. He refused, saying his religion does not permit him to do that! (சமீபத்தில் கூட ஒரு மத்திய மந்திரி அவ்வாறு நடந்து கொண்டார் என்பது செய்தி! அதைக் கண்டித்து ஜேசுதாஸ் கூட வெளிநடப்பு செய்தார்!) That's hypocrisy. Whenever you find benefits you keep your Islam away. And when you are asked to light a lamp you say it's against your religion! That's why I say Muslims in a mob are not in the mainstream.

Veer Savarkar once said, "If a Vithal is worshipped by a Harijan and you say that he is polluted, then he is no Vithal at all."

How can there be a mainstream in India when there are so many castes? A Maharashtrian has a different caste and culture from that of his counterpart in West Bengal.

Britishers created this caste system. Even in Maharashtra they wanted to create a split between the brahmins and the others. Laloo Prasad Yadav and Mulayam Singh Yadav are from the same caste. But still they quarrel. Why? Because they are hungry for power. What has tied them and every Indian together is the common culture. That is what we call Hindutva. For example, a marriage between a Mahar in Maharashtra and a brahmin in West Bengal. They come from the same mantras. That is what we call culture and Hindutva.

The most essential thing is why we are together. Because of language? No. Because of our common culture. And that is why from north to south people are going to attend the Amarnath Yatra. Once you forget your culture, the mere existence of the geographical boundary which is termed India will be of no use.

What were your experiences in jail?

When we took the step, we were sure of the consequences. We took it because we loved our nation. Bhagat Singh did not want to liberate his ancestral land. He wanted to liberate Lahore, Pune and the entire nation. So he sacrificed his life. Revolution is integrated with its leader. A man who sacrifices his life is not bothered about petty things. We knew Gandhi's leadership was not good for the nation. Someone had to jump in the fire. So we did it.

Veer Savarkar was made to do the work which bullocks did in an oil mill. And he did it. Why? Because he was dedicated to the nation. All revolutionaries have to make personal sacrifice. Luckily for us, all the jailers knew we were simple men. They knew our cause. So they never troubled us. And I never violated the prison rules. I studied about life imprisonment and wrote about it.

Can you tell me about your last meeting with Nathuram Godse?

I met him on November 13, 1948 in Ambala jail. It was the day before his execution and there were 20 others with me. Both he and Narayan Apte were jolly.

Nathuram told us that his ashes must not be immersed in any river in India -- it must be scattered only in the Sindhu in Pakistan. His explanation was that Gandhi's ashes have been immersed in all the rivers of the world -- even in the Nile, Volga and Thames. But the Pakistan government refused to immerse his ashes in the Sindhu, saying they didn't want to pollute it with the ashes of a kafir. According to Nathuram the Sindhu was the only river which was pure as Gandhi's ashes were not immersed there.

How do you see India's future?

(Laughs) You make me the prime minister and half the problem of this country will be solved. But I think we will improve only if our leaders adopt a selfless attitude. Take for example the education policy. We must set up a target: in 15 years we will educate so many people. And only those people who can read and write will be allowed to vote. In such an eventuality, politicians will get busy educating the masses in order to get votes.

Another problem is the large number of candidates. And many of them are uneducated. We must make some norms to prevent this. Only then we will improve. To date, nobody has any thought of the nation. Otherwise you would never have heard of recovering more than Rs 30 million from a politician's flat. They don't have any integration with the nation. They are only integrated with their family and sons-in-law.

What is your opinion about secularism in India?

All these 50 years we practised a mockery of secularism. The magistrate has to ask about the religion of a person before giving a judgment. If a man is a Hindu he gets one kind of justice and if he is a Muslim he gets another. Can you call this secularism? This is what is happening in our country. Even in the Property Act you have different rules for Muslims.

What about poverty in India?

Poverty has increased because resources have not increased. On one side you want to increase the life of a person. On the other, you don't want to increase the resources. If you have noticed, during the advertisement of family planning on television you never see a Muslim woman saying 'Hum do Hamare do' (We are two, ours two). And these secularists say that family planning is applicable to all of us! I don't understand why former prime minister Narasimha Rao says 'If there is a Common Civil Code riots will start all over the country'.

Which do you prefer -- the BJP or Shiv Sena?

The Shiv Sena. The BJP is more hesitant to stand by Hinduism. The Shiv Sena supports the killing of Gandhi. People accept them as a Hindu party. When I was honoured, the BJP kept away from it. In Maharashtra the Sena has more respect than the BJP.


Courtesy to: rediff.com

http://www.rediff.com/news/1998/jan/29godse.htm

http://www.rediff.com/news/1998/jan/29godse1.htm


படத்தைப் பெரிதாக்கிப் படிக்க!


___________________________________________________________________________

வன்முறை வேண்டாம் என்று சொன்னவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு சொல்லப்படும் காரணம், அவர் வன்முறை வேண்டாம் என்று இந்துக்களிடம் மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தார். ஏன் மற்றவர்களுக்கும் சொல்லவில்லை? என்பதே! தேசத்தந்தை போலி செக்யூலரிசத்தின் தந்தையாகவும் ஆகிப்போனாரென்பது கோட்சே & கோ வின் வாதம்.

தேசத்திற்க்காக தன் வாழ்க்கையே அற்பனித்த காந்தியடிகள் கொல்லப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாததே!. அண்ணல் காந்தி நம்முடன் இல்லை. ஆனால் அவர் மரணத்திற்காக சொல்லப்படும் காரணங்கள் மட்டும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகவே தோன்றுகிறது.!

அண்ணல் காந்தியடிகளுக்கு அஞ்சலி!


Monday, January 25, 2010

கோபத்தை குறைக்க பத்து கட்டளைகள்!


கோபத்தைக் குறைக்க வழிமுறைகள் என்று நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்தார். அந்த நண்பருக்கு நன்றி. இது போன்ற சில விஷயங்கள் எழுத்திற்கு அழகு சேர்க்கும் நிஜத்தில் செல்லாது என்று தோன்றும். சரி, முயற்சி பண்ணி பாப்போம்.

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

(அப்படியும் முடியலைன்னா?)

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

(அப்பவும் தனியலைன்னா?)

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

(போடா ங்கொயாலன்னா?)

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

(முடியாது போன்னா?)

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

(அப்பவும் அடங்கலேன்னா?)

6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்

(அப்படியும் முட்டிக்கிட்டா?)

7. நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

(அப்பவும் படியலன்னா?)

8. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

(நம்பர் தெரியலைன்னா?)

9. சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.

(இனிமே பொறுக்காதுன்னா?)

10. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.

(தண்ணியில்லைன்னா?)

ரொம்ப கஷ்டம் தான். முயற்சி பண்ணி பாப்போம்! முயற்சித்து வெற்றி பெற்றவர்கள் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்! சரியா!


Thursday, January 21, 2010

விக்கிரமாதித்தன் கதைகள் - 12


விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான்.

அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது.

விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!

ஒரு காலத்தில் அரசர் ஒருவருக்கு மூன்று அழகிய ராணிகள் இருந்தனர்.

ஒரு நாள் மன்னரும் முதல் ராணியும் அரண்மனைப் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

மலர்களின் வாசனையும் அருமையான தென்றல் காற்றும் வீசிக்கொண்டிருந்தது. மன்னரும் ராணியும் அதை ரசித்து அமர்ந்து கொண்டிருந்தனர். அந்த சமயம் மெல்லிய தென்றல் காற்றால் ஆடிய ஒரு பூச்செடியிலிருந்து மிக மெலிதான ஒரு அழகிய மலர் ராணியின் கையின் மீது விழுந்தது.

மிக மெலிதான அழகிய பூவாகினும், அது விழுந்ததால் வலி உண்டாகி ராணி துடிக்கத் தொடங்கினாள். "ஐயோ! என் கை வலிக்கிறதே. என்னால் தாங்க முடியவில்லையே!" என்று துடிக்கத் துவங்கினாள். இதைப் பார்த்த மன்னர் பயந்து போனார்.

அவர் ராணியின் கைகளைப் பார்த்தார். மெல்லிய பூ விழுந்த இடம் மிகவும் சிகப்பாக சிவந்து போய் இருந்தது. ஒரு மலர் விழுந்ததால் கை சிவந்து போகுமா என்று குழம்பிப்போன மன்னர் ராணியை அரைக்குப் போய் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார்.

பிறிதொரு நாள் மன்னர் தனது இரண்டாவது மனைவியுடன் ஜன்னலோரமாக காற்றாட அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ஜன்னலின் திரைச்சீலை விலகியது. உடனே ராணி திடீரென சப்தமிடத் துவங்கினாள். மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை. ராணியோ "அய்யோ! என்னால் தாங்க முடியவில்லை. இந்த நிலவின் ஒளி என்னைச் சுட்டு எரிக்கிறது" என்றாள். மன்னர் திகைத்துப் போனார்.

"என்ன நிலவின் ஒளி சுடுகிறதா?" என்றார்.

ராணியின் முகம் முழுவதும் நிலவின் ஒளிபட்டு கொப்பளங்கள் உண்டாகிப் போனது. மன்னர் திகைப்புடன் ராணியை தனது அரைக்கு அழைத்துப் போய் அமரச்செய்து ஓய்வெடுக்கச் செய்தார்.

மற்றொரு நாள் தனது மூன்றாவது மனைவியுடன் அரண்மனை முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராணிக்கு எங்கோ தூரத்தில் யாரோ அரிசியை உரலில் போட்டு உலக்கையால் இடிக்கும் ஓசை கேட்டது. திடீரென்று ராணி அலறத்துவங்கினாள் "ஐயோ, நிறுத்துங்கள். என்னால் இந்த சத்தத்தைக் கேட்க முடியவில்லை. தயவு செய்து யாராவது நிறுத்தச் சொல்லுங்கள். என் தலை இந்த சப்தத்தால் வெடித்துவிடும் போலிருக்கிறது" என்று கூறிக்கொண்டே மயங்கி விழுந்து விட்டாள். அவளது கைகளும் முகமும் வேதனை தாங்காமல் சிவந்து விட்டது.

மன்னர் ராணியை பத்திரமாக அவளது அரையில் உறங்கச் செய்தான்.

இதோடு கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமாதிதனைப் பார்த்து கேள்வி கேட்டது.

"விக்கிரமாதித்தா! இப்போது சொல். இந்த மூன்று ராணிகளில் யார் மிகவும் மென்மையானவள்?"

"மூன்றாவது ராணி தான் மிகவும் மென்மையானவள்" என்றான் விக்கிரமாதித்தன்.

"ஆம். மலர் மற்றும் நிலவின் ஒளி போன்றவை முதல் இரண்டு ராணியின் உடலையும் தீண்டுவதாக இருந்தது. ஆனால் உடலைத் தீண்டாத சப்தம் கேட்டதற்கே மூன்றாவது ராணியின் உடல் சிவந்து போனது. எனவே மூன்றாவது ராணிதான் மிகவும் மென்மையானவள்" என்றான் விக்கிரமாதித்தன்.

இதைக் கேட்ட வேதாளம் "சரியாகச் சொன்னாய் விக்கிரமாதித்தா! ஆனால் நீ வாய் திறந்து பேசியதால் நான் போகிறேன்" என்று கூறி மீண்டும் முருங்கை மரத்தை நோக்கிப் பறந்து போனது.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.

Sunday, January 17, 2010

மரணத்திற்கு அப்பால் - 5



_________________________________________________________________________________________
நாம் யார்? நமது வடிவம் என்ன? நமது உணர்ச்சிகள் என்ன? நமது நிஜமான இருப்பிடம் என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்?

இந்த வினாக்களையெல்லாம் புரிந்து கொள்ள நாம் அறிய வேண்டிய ஒரே மூலப் பொருள் "ஆத்மா".

ஆம் நாம் தான் அது. அது தான் நாம். அதன் வடிவம் என்னவோ அது தான் நமது நிரந்தர வடிவம். அதன் உணர்வு என்னவோ அதுதான் நமது நிரந்தர உணர்வு. அதன் நிரந்தர வசிப்பிடம் எதுவோ அங்கே செல்ல வேண்டி முயல்வது தான் நம்முடைய நிஜமான ஞானத்தின் அடித்தளம்.

"தத்வம் அஸி" - "நீ தான் அது" (அது = ஆத்மா) - இதை முதலில் உணர்ந்தால் அடுத்த கட்டமான "அஹம் ப்ரம்மாஸ்மி" என்பது உணரப்படும்.
________________________________________________________________________________________


தன்னை இன்னும் சிறிது நேரத்தில் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தப் போகிறான் அந்தச் சிறுவன் என்று தெரியாமலே நசிகேதனை வரவேற்கச் செல்கிறான் எமன்!.

வாயிலைக் கடந்த எமன் அங்கே சிறுவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தான். நசிகேதனிடம் அன்புடன் பேசலானான்.

"தூயவனே, விருந்தாளியாக என் இருப்பிடத்தை வந்து சேர்ந்திருக்கிறாய். உன்னை உடனே வரவேற்க்க முடியாத நிலையில், நீ உணவின்றி என் இடத்தில் மூன்று இரவுகள் வசிக்க நேர்ந்தது. பசியால் உடல் வாடி இருக்க நேர்ந்தது. பாலகனே! உன் வருத்தத்தால் எனக்கு தீமை உண்டாகாமலிருக்க உனக்கு மூன்று வரங்கள் அளிக்கிறேன். கேள்!" என்றான் எமதர்மன்.

பொதுவாக எமன் என்றால் உயிரை எடுப்பவன் என்று தான் நமக்குத் தெரியும். ஆனால் எமன் தர்மவான் ஆவதும் சிறந்த மான்புகளால் மட்டுமே என்பது இங்கே தெளிவாகிறது. அதனால் தான் 'எமதர்மன்' என்று அழைக்கிறோம். விருந்தினரை உபசரிக்கும் மாண்பு எமதர்மனாக இருந்தாலும் மீறப்படக்கூடாது என்பது இங்கே அழகாக எடுத்துரைக்கப்படுகிறது.

இதையே திருவள்ளுவர் இவ்வாறு எடுத்துக் கூறுகிறார்..

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

என்றார் வள்ளுவர். அதாவது அனிச்ச மலர் மோந்து பார்த்தாலே வாடிவிடுமாம். அதுபோல நம் முகம் மாறுபட்டு நோக்கினாலே விருந்தினர் உள்ளம் வாடிவிடுவார்கள் என்கிறார் வள்ளுவர் பெருந்தகையார்.

அப்படி உள்ளம் வாடியவனாக நசிகேதன் நின்று விடக்கூடாது என்ற பதற்றத்திலேயே எமதர்மனும் நசிகேதனுக்கு மூன்று வரங்களை அளிக்க முன்வருகிறான்.

எனவே உன் வருத்தத்தால் எனக்கு தீமை உண்டாகாமலிருக்க உனக்கு மூன்று வரங்கள் அளிக்கிறேன். கேள்!" என்றான் எமதர்மன்.

இதனால் உளம் மகிழ்ந்த நசிகேதன் எமதர்மனிடம் வரங்கள் கேட்க துவங்கினான். பொதுவாக எமலோகம் செல்பவர்கள் யாராக இருப்பார்கள்? இறந்தவர்கள் மட்டும் தான் எமலோகம் செல்ல முடியும். ஆனால் நசிகேதனோ தந்தையின் கட்டளைக்கினங்கியே எமதர்மனிடம் செல்கிறான்.

இறந்து மேலுலகம் செல்பவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புவரே ஆனால் அவரை ஆவியாக வந்திருப்பவர் அதாவது துர் தேவதையாகவே கருதுவர். அதனால் நசிகேதன் தனது முதல் வரத்தை அது குறித்து கேட்க முடிவு செய்தான்.

"எமதர்மனே! உன்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற என்னை எனது தந்தை புரிந்து கொள்ள வேண்டும். நான் ஒதுக்கத்தக்கவன் அல்ல என்றும் துர் ஆத்மா என்றும் நினையாமல் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு நான் அவரிடம் திரும்பிச் செல்லும் போது என் தந்தை என் மீது கோபம் இல்லாதவராகவும், தவறுகள் களைந்து தெளிந்த மனதுடையவராகவும் இருக்க வேண்டும். எனது தந்தையைப் பற்றிய இந்த கோரிக்கையை எனது முதல் வரமாக ஏற்றுக் கொள்வாயாக" என்று எமனிடம் தனது முதல் வரத்தைக் கேட்டான் நசிகேதன்.

இதனை ஏற்றுக் கொள்கிறான் எமதர்மன். "ஏ பாலகா! உன் விருப்பப் படியே உனது தந்தை உன்னைக் காணும்போது உன்னைப் புரிந்து கொள்வார். கோபங்கள் இல்லாமல் உன்னை அன்புடன் ஏற்றுக்கொள்வார். எனது அருளால் இரவில் சுகமாக உறங்குவார். உன் விருப்பப்படியே அவை நடந்தேறும்" என்றான்.

நசிகேதன் தனது இரண்டாவது வரத்தைக் கேட்கலானான். "எமதர்மனே! சொர்கத்தில் வாழ்பவர்கள் தேவத் தன்மையைப் பெறுகின்றனர். அங்கே அழைத்துச் செல்லக்கூடிய யாகத்தைப் பற்றி உனக்குத் தெரியும். கவனமுடன் புரிந்துகொண்டு அதன் படி நடந்து சொர்கத்தை அடைய விரும்பும் எனக்கு அத்தகைய யாகத்தைப் பற்றி சொல்வாயாக. இதனை எனது இரண்டாவது வரமாகக் கேட்கிறேன்" என்றான்.

எமதர்மனும் அதை ஏற்றுக்கொண்டு ஆதிகாலத்தில் நிகழ்த்தப்பட்ட அத்தகைய யாகங்களை விளக்கிச் சொன்னான். நசிகேதனும் அதனைக் கேட்டு புரிந்து கொண்டான். நசிகேதனின் கவனமும் புரிந்துகொள்ளும் தன்மையும் கண்ட எமதர்மன் மிகவும் மகிழ்ந்து போனான். வண்ணமயமான தனது மாலை ஒன்றை பரிசாகக் கொடுத்தான். பின் கூறினான் "நசிகேதா! சொர்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற யாகத்தைப் பற்றி நீ விரும்பிய படியே எடுத்துக் கூறிவிட்டேன். மக்கள் அந்த யாகத்தை இனி உன் பெயராலேயே அழைப்பார்கள். இனி மூன்றாவது வரத்தைக் கேள்!" என்றான்.

நசிகேதன் எமதர்மனை சங்கடத்தில் ஆழ்த்தப்போகிற வரத்தை இப்போது கேட்கலானான்.

"மரணத்திற்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகிறார்கள். இந்தச் சந்தேகத்தை உன்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். மரணத்திற்கு அப்பால் நடப்பது என்ன? என்று எனக்குச் சொல்லுங்கள். இதை எனது மூன்றாவது வரமாக கேட்கிறேன்" என்றான் நசிகேதன்.

சற்றே துனுக்குற்ற எமதர்மன் நசிகேதனை உற்றுப் பார்த்தான். திகைப்பில் பதில் சொல்ல சற்று தாமதித்தான். பின் நசிகேதனிடம் எடுத்துச் சொன்னான் "நசிகேதா! இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் கூட சந்தேகம் உள்ளது. இது முகவும் நுண்மையான விஷயம். எளிதாகப் அறிந்து கொள்ள முடியாது. என்னைக் கட்டாயப்படுத்தாதே, விட்டு விடு. நீ பாலகன், எனவே வேறு வரம் ஏதாவது கேள் தருகிறேன்! " என்றான்.

"ஓ, தேவர்களுக்கும் இந்த விஷயம் பற்றி சந்தேகம் உள்ளதா! எமதர்மனே! இதனை எளிதாக அறிய முடியாது என்று நீயும் சொல்கிறாய். அப்படியென்றால் இதை உபதேசிப்பதற்கு உன்னைப்போல் வேறொருவர் கிடைக்க மாட்டார். வேறு எந்த வரமும் இதற்கு இணையாக ஆகாது. எனவே இதுவே எனது இறுதி வரமாகக் கேட்கிறேன். நீயே சொல்லிவிடு. மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது." என்றான் நசிகேதன்.

"ஓ பாலகா, புரிந்துகொள். பல நூறாண்டு ஆயுளைக் கேள் தருகிறேன். நூற்றாண்டு காலம் வாழும் மகன்கள் பேரண்களைக் கேள் தருகிறேன். ஏராளமான பொன்னும் பொருளும் கேள் தருகிறேன். ஆயிரக்கணக்கான பசுக்கள், யானை, குதிரைகள் போன்றவற்றைக் கேள் தருகிறேன். பூமியில் பரந்த அரசைக் கேள் தருகிறேன். நீ விரும்பும் வரை மரணம் உன்னைத் தழுவாது என்றும் வரம் கொடுக்கிறேன், ஏற்றுக்கொள். இதை மட்டும் கேட்காதே" என்றான் எமதர்மன்.

ஆனால் நசிகேதன் தனது நிலையில் உறுதியாக இருந்தான். "வேறு எந்த வரமும் இதற்கு இணையாக ஆகாது. எனவே இதுவே எனது இறுதி வரமாகக் கேட்கிறேன். நீயே சொல்லிவிடு. மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது." என்றான் மீண்டும்.

அகண்ட தேகமும், மிகப் பெரிய உருவமும், முகத்தை மறைக்கும் மீசையும் சிவந்த கண்களும் கொண்ட எமன் நசிகேதனின் பிடிவாதமான இந்த நிலையை கண்டு திகைப்படைந்தான். நசிகேதனை அமைதியாக உற்றுப் பார்த்தான்...

(நாமும் பார்த்திருப்போம்...பொருங்கள்..)



மரணத்திற்கு அப்பால் - 6

Friday, January 15, 2010

சம்பவாமி யுகே யுகே!


அர்ஜுனன் கேட்கிறான்:

பகவானே! சூரியன் உங்களுக்கு முன்னால் பிறந்தவன். நீங்கள் சூரியனுக்குப் பிறகு பிறந்தீர்கள். ஆனால் முதலில் நீங்கல் சூரியனுக்கு உபதேசித்ததாகக் கூறுகிறீர்கள். இதை நான் எவ்வாறு புரிந்து கொள்வது?

ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார்:

அர்ஜுனா கேள்! நானும், நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்.

நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், குறைவு இல்லாத தன்மை உடையவன். இருந்தும் கூட என் இயல்பை அடக்கிக் கொண்டு என்னுடைய மாயா சக்தியினால் நான் அவதாரம் செய்கிறேன்.

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் மேலும் கூறுகிறார்..

"யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்-பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்"

அர்ஜுனா! உலகில் தர்மம் குறைந்து, அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்.

"பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!"

நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்.

என்னுடைய தெய்வீகமான பிறப்பு, செயல் ஆகியவற்றை உள்ளபடி அறிந்தவன் இந்த மனித உடலைவிட்டு நீங்கிய பிறகு மறுபிறவி அடைவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை வந்து அடைகிறான்.

காமம், ஆசை, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவர்களும், என்னையே நினைத்து, என்னையே சரனாக அடைந்து, ஞானமாகிய அக்னிப் பரீட்சையால் பொசுக்கப்பட்டு புனிதர்களாய்ப் பலர் என்னுடன் ஒன்றாகி ஐக்கியம் அடைந்திருக்கிறார்கள்.

மனிதர்கள் எந்த வழியில் என்னை நாடினாலும், அதே வழியில் நான் அவர்களுக்கு அருள் புரிகிறேன். அர்ஜுனா! மக்கள் எங்கும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

இங்கே ஒரு விஷயம் கவனிக்கத்தக்கதாகிறது. பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் "நானும், நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்" என்று உரைக்கிறார்.

பல பிறவிகள் என்று சொல்லும் போது பெரும்பாலும் அதில் நம்பிக்கை உண்டாவதில்லை. ஏனெனில் நம்முடைய இன்றைய இருப்பிற்கு முன்னால் என்ன இருந்தது என்றும் அதற்கு பின்னால் என்ன இருக்கப் போகிறது என்றும் நமக்குத் தெரிவதில்லை. அதனால் நமக்கு அதில் நம்பிக்கை உண்டாவதில்லை. ஆனால் பல பிறவிகள் இருப்பது உண்மை என்பதையே பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் எடுத்துரைக்கிறார்.

உபநிஷத்துக்கள் முழுவதுமே ஆத்மாவின் நிரந்தரத் தன்மையையும் பிறவி மற்றும் மறுபிறவி பற்றிய தத்துவ போதனைகளையே எடுத்துச் சொல்கின்றன. அவை இன்றைய வாழ்விருப்பின் தன்மைக்கேற்ப 'நீ மறுபிறவி அடைவாய்' என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

உதாரணமாக சில விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். இரண்டரை வயது குழந்தை தன்னுடைய முற்பிறவி பற்றி கூறுவதும் நான் இன்னார், எனது மனைவி இவள் நான் இந்த ஊர்க்காரர் என்று சொல்வது அவை ஆராயப்படும் போது நிஜமாக இருப்பதும் நடந்திருக்கிறது. அவர்களின் உடல் அழிந்திருக்கிறதே தவிற ஆத்மா அழிவதில்லை. மீண்டும் பிறப்பெய்தி இருக்கிறது.

ஒரு குழந்தை பிறந்தது முதல் மூன்று அல்லது நான்கு வயது வரை புனர்ஜென்ம ஞாபம் இருக்கும். பிறகு அவை வாழும் சூழ்நிலைகளுக்குத் தகுந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக பழைய நினைவுகளை இழந்து விடும். மிகச்சிலரே அவற்றைப் பேசும் அளவுக்கு ஆற்றல் கொண்டிருப்பார்கள். பலருக்கு அவை எது பற்றிய நினைவு என்பதையே உணர முடியாது. இவையாவும் மனிதன் ஜென்ம ஜென்மங்களாக பிறப்பெடுப்பதையே காட்டுகிறது.

சில குழந்தைகள் மழலைப் பேச்சு மாறுவதர்குள்ளாகவே சிறந்த அறிவாற்றலை வெளிப்படுத்துவார்கள். அவர்களின் பூர்வ ஜென்ம தொடர்ச்சியாகவே அது கருதப்படுகிறது.

சிலர் குழந்தைப் பருவத்திலேயே மிகவும் கோபக்காரர்களாகவும், திருடும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சில குழந்தைகள் மிகவும் சாந்தமான குணம் கொண்டதாக இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக இருக்கும். இவை யாவும் முற்பிறவியில் அவர்களின் இயல்புகளை ஒட்டியே அமைவதாகக் கூறப்படுகிறது.

ஆக நம்மைப் போன்ற பிறவிப்பெருங்கடலில் சிக்கி நிரந்தர நினைவுகள் மறந்து போனவர்களால் அவற்றை ஞாபகப் படுத்தி பார்ப்பது இயலாததாகி இருக்கிறது. எனவே "'அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்" என்று பகவான் அர்ஜுனனுக்கு எடுத்துக் கூறுவது நமக்கே சொல்வதாகும்.

ஸ்ரீ க்ருஷ்ணரின் பிறப்பிற்கும் நமது பிறப்பிற்கும் அதுவே வித்தியாசம். அவர் அறிந்தே பிறக்கிறார். நாம் அறியாமல் (அறியாமையால்) பிறக்கிறோம். "நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், குறைவு இல்லாத தன்மை உடையவன். இருந்தும் கூட என் இயல்பை அடக்கிக் கொண்டு என்னுடைய மாயா சக்தியினால் நான் அவதாரம் செய்கிறேன்", அதாவது நிரந்தரமான தன்மையை உடையவர் தனது சக்தியினால் பிறப்பை உணர்ந்து அவதரிக்கிறார். ஆக எப்பொழுது தொடர்ச்சியான சாதகத்தால் நாம் பிறப்பையும் இறப்பையும் உணரும் தன்மையைப் பெறுகிறோமோ அப்பொழுது நாமும் ஸ்ரீ க்ருஷ்ணராகியிருப்போம்.

அப்படியென்றால் 'மறுபிறவி அடையாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்' என்ற கேள்வி உண்டானால் மறக்காமல் கீதையைப் படியுங்கள். கீதை முழுவதிலும் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் பாதை காட்டுகிறார்.

படிப்போம், தொடர்வோம்!


Wednesday, January 13, 2010

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!



மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் சேதாரம் இல்லாமல் அமைய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!






தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல் பொய்க்காமல் எல்லோருக்கும் நன்மைகள் வந்து சேர, அன்பர்கள்எல்லோர் வாழ்விலும் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் உண்டாக இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.

Tuesday, January 12, 2010

விவேகானந்தரின் லட்சியம்! - துக்கங்களைக் கண்டு அழாதே!


இன்று வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 148 ஆவது பிறந்தநாள்!


சுவாமி விவேகானந்தர் தனது வாழ்வின் லட்சியமாக இவ்வாறு சொல்கிறார்

"மக்களுக்கு அவர்களுடைய தெய்விகத் தன்மையை எடுத்துப் போதிப்பதும் வாழ்க்கையின் ஒவ்வோர் இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதை எடுத்துச் சொல்வதும் தான் என்னுடைய லட்சியம்."

இளைஞர்களை வழிநடத்தும் ஓர் பிரகாசமான வழிகாட்டியாக இருந்தார் சுவாமி விவேகானந்தர்.

"ஓ வீரனே, துணிவு கொள். 'நான் இந்தியன், ஒவ்வோர் இந்தியனும் என் சகோதரன்' என்று கர்வத்துடன் சொல். அதை உரத்த குரலில் பெருமையாகக் கூறு. 'இந்தியன் எனது சகோதரன், இந்தியன் எனது வாழ்க்கை...இந்தியாவின் நலன் தான் என்னுடைய நலன்'.

நம்பிக்கையை இழந்து விடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு, விழித்துக்கொள். மனம் தளராதே. நீ அடைய வேண்டிய உனது லட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.

அறியாமை மிக்க, உயிரற்ற புல்பூண்டு வாழ்க்கையைக் காட்டிலும் மரணமே மேலானது.

தோல்வியைத் தழுவி உயிர்வாழ்வதைவிடப் போர்களத்தில் மாய்வதே மேல். சகோதரா, துக்கங்களைக் கண்டு அழுவது கூடாது. மரணமோ, நோயோ உனக்கில்லை. துன்பமோ துரதிஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா, மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப் படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு.

இவனை 'நம்பு அல்லது அவனை நம்பு' என்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், 'முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை'. அது தான் வழி. உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை - எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து.

'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தைப்
பொருட்படுத்தாது இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.

இரவும் பகலும் திரும்ப திரும்ப பிரார்தனை செய் 'ஓ உலக நாயகியே! என் பலவீனத்தைப் போக்கு, என் கோழைத்தனத்தைப் போக்கு! என்னை மனிதனாக்கு!

- சுவாமி விவேகானந்தர்.

Saturday, January 9, 2010

மரணத்திற்கு அப்பால் - 4


ரயிலில் இரவு உணவை முடித்து விட்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தோம். ஊர் வருவதற்குள் முழுமையாகச் சொல்லி விடும் படி குருசாமியை கேட்டுக் கொண்டேன். அவரும் தொடர்ந்தார்.

________________________________________________________________________________________
"நாம் யார்? நமது வடிவம் என்ன? நமது உணர்ச்சிகள் என்ன? நமது நிஜமான இருப்பிடம் என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்?

இந்த வினாக்களையெல்லாம் புரிந்து கொள்ள நாம் அறிய வேண்டிய ஒரே மூலப் பொருள் "ஆத்மா"

ஆம் நாம் தான் அது. அது தான் நாம். அதன் வடிவம் என்னவோ அது தான் நமது நிரந்தர வடிவம். அதன் உணர்வு என்னவோ அதுதான் நமது நிரந்தர உணர்வு. அதன் நிரந்தர வசிப்பிடம் எதுவோ அங்கே செல்ல வேண்டி முயல்வது தான் நம்முடைய நிஜமான ஞானத்தின் அடித்தளம்.

"தத்வம் அஸி" - "நீ தான் அது" (அது = ஆத்மா) - இதை முதலில் உணர்ந்தால் அடுத்த கட்டமான "அஹம் ப்ரம்மாஸ்மி" என்பது உணரப்படும்."
__________________________________________________________________________________________

"என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப் போகிறீர்கள்" என்றான் நசிகேதன்.

வாஜ்ரவஸ் கோபமாக கர்ஜித்தான் "உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன்!"

இந்த வார்த்தை தான் நசிகேதன் எமனைச் சந்திக்க காரணமானது.

தந்தை ஆத்திரத்தால் சொன்னாலும், சொன்னது சொன்னது தான். அதனால் தான் எமனிடம் போய் ஆகவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான் நசிகேதன். ஆனால் போகும் முன் தன் தந்தைக்கு உண்மையை உணர்த்த விரும்பினான்.

அவன் தன் தந்தையிடம் கூறினான் " தந்தையே! நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். நாம் வாழ்ந்து அனுபவித்து தான் உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றிருந்தாலும், பிறருடைய அனுபவங்களும் நமக்குப் பாடமாக அமைவதுண்டு.

தீ சுடும் என்பதைத் தொட்டுப் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. சூடுபட்டவரின் வேதனையே நமக்கு அதை உணர்த்திவிடுவதுண்டு. அதனால் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அதன் வழி செல்வது நமக்கும் நன்மை பயக்கும்."

என்று கூறி எமலோகம் புறப்படுகிறான். தந்தை தன் மகனின் நிலையை உணர்ந்து வருந்துகிறார்.

ஆனால் நசிகேதனோ "நாம் செடி கொடிகளைப் போல மீண்டும் மீண்டும் பிறக்கவும் இறக்கவும் செய்கிறோம். ஆகையால் நான் எமலோகம் செல்வது பற்றி வருந்த வேண்டாம்". என்று தன் தந்தைக்கு ஆறுதல் கூறி புறப்படுகிறான்.




இதில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். நசிகேதன் பிடிவாதக்காரனாக இருந்த அதே நேரத்தில் மிகவும் அமைதியான குணத்தையும் கொண்டிருந்தான். தன்னை எமனுக்கு கொடுப்பேன் என்ற தன் தந்தையின் மீது அவனுக்கு கோபம் வரவில்லை.

என்னை இப்படி அனுப்பி விட்டாயே என்று தந்தையை நொந்து கொள்ளவில்லை. தந்தையின் வாக்கை கட்டளையாக பாவித்து அதை செயல்படுத்த துவங்கினான் என்பது ஒரு சிறுவனுக்கு இருக்கும் மிகப்பெரிய பக்குவம்.

இன்றைய நாட்களில் தாய் தந்தையர் பிள்ளைகளின் நலன்களுக்காக நல்லதைச் சொன்னால் கூட கேட்கும் பக்குவம் பிள்ளைகளுக்கு இருப்பதில்லை. சரி விஷயத்திற்கு வருவோம்.

எமதர்மன் இருக்கும் இடம் தேடி எமலோகம் சென்றான் நசிகேதன். நசிகேதன் சென்றபோது எமதர்மன் அங்கே இல்லை.

எனவே அவன் எமனின் மாளிகையின் முன்னால் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அதன் பிறகே எமதர்மன் வந்தான். எமனிடம் வாயிலில் நசிகேதன் என்றொரு சிறுவன் தங்களைக் காண காத்திருப்பதாக தகவல் சொல்லப்பட்டது.

செய்தி கேட்டு எமதர்மன் ஒரு சிறுவனை மூன்று நாட்கள் உணவு தண்ணீர் இல்லாமல் காத்திருக்கச் செய்தேனே என்று வருந்துகிறான். எமதர்மனது மந்திரிகள் அவன் வருத்தத்தைப் போக்க எமனிடம் யோசனை சொல்கிறார்கள் "நல்லோன் ஒருவன் விருந்தினனாக வரும்போது அவன் ஒரு நெருப்பைப் போலவே நுழைகிறான். நல்லவர்கள் அவனுக்கு தண்ணீரைக் கொடுத்து உபசரித்து அவனை அமைத்திப் படுத்துவார்கள். எமதர்மனே! நீயும் அந்தச் சிறுவனுக்கு தண்ணீர் கொடுத்து உபசரி" என்று எடுத்துச் சொல்கிறார்கள்.

மேலும் நல்ல மனிதர்கள் விருந்தினராக வந்தால் அவர்களை உபசரிக்காமல் புறக்கனிப்பதால் நடக்கும் தீமைகளையும் எடுத்துச் சொல்கிறார்கள்.

"எமதர்மனே! யாருடைய வீட்டில் நல்லோன் ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அவனது நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் அழிந்து விடுகின்றன. நல்லோனை உபசரிக்காதவன் அவன் செய்த புண்ணியங்களின் பலன்களை இழக்கிறான். இனிய பேச்சின் பலன்களையும் யாகங்களால் உண்டான பலன்களையும் இழக்கிரான். வழிபாடுகளினாலும் நற்பண்புகளாலும் உண்டான பலன்களை இழக்கிறான். அவனது பிள்ளைச் செல்வம், கால்நடைச் செல்வம் அவனிடமிருந்து அழிகின்றன. எனவே நீ அதற்கு இடம் கொடுத்து விடாதே!" என்று மந்திரிகள் எமனை எச்சரிக்கிறார்கள்.



இதனால் கலக்கமுற்ற எமதர்மன் நசிகேதனை வரவேற்க வாசலை நோக்கிச் செல்கிறான். தன்னை இன்னும் சிறிது நேரத்தில் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தப் போகிறான் அந்தச் சிறுவன் என்று தெரியாமலே அவனை வரவேற்கச் செல்கிறான் எமன்!.

தொடர்ந்து பயணிப்போம்......

மரணத்திற்கு அப்பால் - 5