Wednesday, May 30, 2012

சாணக்கியன் சொல்!



ஒருவனாக இருந்து தனிமையில் ஜபம் செய்வது நல்லது.

இருவராகச் சேர்ந்து படிப்பது உதவும்.

மூவராகச் சேர்ந்து பாடுவது சிறக்கும்.

நால்வர் சேர்ந்து வெளியில் செல்வது மகிழ்ச்சிகு உதவும்.

ஐந்து பேர் சேர்ந்து க்ஷேத்ரங்களுக்கு யாத்திரை செல்வது துணை பயக்கும்.

போரென்று வரும்போது பலர் சேர்வது நலம் பயக்கும்.

தெய்வ பக்தி உள்ளவளும், வீட்டு வேலைகளில் திறமைசாலியும், கற்பு உள்ளவளுமே உயர்ந்த மனைவி!

கெட்டவர்கள் உள்ள கிராமத்தில் குடியிருத்தல், கீழ்மக்களிடம் பணி புரிதல், சுவையில்லாத உணவு, எரிந்து விழும் மனைவி, முட்டாளான மகன் ஆகிய இவையாவும் ஒரு மனிதனுடைய உடம்பை நெருப்பு இல்லாமலே எரித்து விடுகின்றன.

பால் கறவை அற்றுப் போன ஒரு மலட்டுப் பசுமாடு எப்படி உபயோகம் அற்றதோ அதேபோல கல்வியும், தெய்வ பக்தியும் இல்லாத மகனால் எந்த உபயோகமும் இருக்கப் போவதில்லை!

ஒரு சந்திரன் இருளைப் போக்குகிறது. ஆனால் நக்ஷத்திரங்கள் ஆயிரமிருந்தும் இருளைப் போக்க முடியாது. அது போல நூறு குணமில்லாத மகன்களை விட ஒரு குணமுள்ள மகன் மேலானவன் ஆவான்.

தர்மத்தில் பற்று, பேச்சில் இனிமை, தானம் கொடுப்பதில் உற்சாகம், நண்பனிடம் நேர்மை, குருவிடம் பணிவு, உள்ளத்தில் கம்பீரம், நடத்தையில் சுத்தம், நற்குணங்களுக்கு மதிப்பு, சாஸ்திரங்களில் தேர்ச்சி, உருவத்தில் அழகும், சிவனிடத்தில் பக்தி இவை எல்லாம் சான்றோரின்
லக்ஷணங்கள் ஆகும்.

- சாணக்கியர்

Monday, May 28, 2012

வீர சாவர்க்கர்!

வினாயக் தாமோதர் சாவர்க்கர்

இன்று தலை சிறந்த தேசபக்தரும் சுதந்திர போராட்ட வீரருமான வீர சாவர்க்கரின் பிறந்த தினம்!

இந்த தேசபக்தி வீரருக்கு நமது வணக்கங்களை செலுத்துவோமாக!



Born: May 28, 1883
Died: February 26, 1966