Thursday, June 2, 2011

விலைவாசி உயர்ந்ததற்கு யார் காரணம்?




இந்த படக்காட்சியை பார்த்த போது தோன்றிய விஷயம், கடந்த ஐந்தாண்டுகளில் சகல பொருட்களின் மீதும் உண்டான மோசமான விலைவாசிக்கு யார் காரணம்?

வீட்டு வாடகை மற்றும் ரியல் எஸ்டேட் முதல் காய்கறி வரை சகல விலைவாசிகளும் உயர்ந்ததற்கு சாஃப்ட்வேர் நிறுவனங்களில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் தான் காரணம் என்று கூறி படமே வந்தது. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் ஏறிப்போன மோசமான விலைவாசி உயர்விற்கு பொறுப்பற்ற பிரமதமரையும், கொள்ளை கும்பல் முதல்வரையுமே கொண்ட அரசாங்கமும், அரசியல் வாதிகளின் கணக்கில்லா கருப்புப்பண புழக்கமே காரணம் என்று தோன்றுகிறது.

இனியாவது கட்டுக்குள் நிற்குமா? நடுத்தர வர்கத்தினர் வாழ வழிகிடைக்குமா? என்று தெரியவில்லை.

கேள்விகள் தான் மிச்சம்!

.

7 comments:

reno85 said...

இந்த படம் வெளி வரும் பொது அப்பொழுது IT துறை நன்றாக இருந்தது.. அதற்கடுத்து மிக பெரிய சரிவை சந்தித்தது..
எல்லா அரசாங்க துறைகளிலும் ஊழல்..
கொஞ்சம் இப்படி யோசித்தால் என்ன..

அரசாங்கம் சரியாக செயல்படுத்து மாயின்

நாட்டில் விவசாயங்களை வளர்க்க முயற்சி எடுக்கலாம்.
(எந்த துறையில் வேலை பார்த்தாலும் மனிதனுக்கு உணவு முக்கியம்)
இன்று சாப்பிடுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அதன் உற்பத்தி க்கு கொடுக்கவில்லை ..
உதாரணத்திற்கு இன்று விவசாயம் என்பது கெட்ட வார்த்தையாகி விட்டது...

அரசு மருத்துவமனை மிக சிறப்பாக இருந்தால் மக்கள் வேறு எங்கும் செல்ல இரண்டாவது தான் முடிவெடுப்பார்கள் ..

அரசு பள்ளிகளை உயர்த்தினால் (அதாவது Matric பள்ளிகளின் தரத்தில் உயர்த்தினாலே போதும்).
ஆரம்பத்தில் சிறு சிறு வேறுபாடுகள் (சாதி) மாணவர்களுக்கு அல்ல அவர்களுடைய பெற்றோர்களுக்கு இருத்தாலும் நாளடைவில் மறைந்து விடும் ...

அரசாங்க வேலைகள் நேர்மையாக கிடைக்குமேயானால் இன்று IT துறை மாணவர்களுக்கு 2 ம் பட்சம் தான்..
(ஏன் என்றால் IT துறையில் முக்கால் பங்கு சதவிகிதம் அரசாங்க வேலைகளுக்கு தாவ தயாராக இருக்கிறார்கள் )
அவர்களை தடுப்பது ஒன்றே ஒன்று ஊழல்..
MP and MLA சம்பளத்தை உயர்த்தினால் மட்டும் போதாது.
ஓர் அரசாங்கம் நஷ்டமடையாமல் லாபத்தில் செல்கின்ற பொழுது ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு போன்றவை கிடைக்க வழி செய்ய வேண்டும்..

தவிர அரசாங்கம் தன்னுடைய துறைகளை சிறப்பாக நிர்வாகம் பண்ணுமேயானால் நாட்டில் புரட்சிகர மாற்றம் உருவாகும்..
ஒரு வண்டியின் அனைத்து சக்கரங்களும் நன்றாக இருந்து ஓடினால் தான் வண்டி நகரும்..
நாம் இங்கே பார்க்க வேண்டியது ஒரு துறையின் வளர்ச்சி அல்ல...
மற்றவை ஏன் பின் தங்கி இருக்கிறது என்று அதற்கான் தேவை என்ன ஆராய்ந்தால் போதும்..

reno85 said...

அந்த படத்தில் house rent பற்றி சொல்லுவார்.. அது என்னவோ உண்மை.. Bangalore , Mumbai , Delhi , இப்பொழுது gurgaon போன்ற நகர்களில் வீடு உரிமையாளர்கள் தினசரி நாளிதழ்களில் IT துறையை பற்றி நாளுக்கு நாள் தெரிந்து வருவதாக கேள்வி பட்டேன்.. அப்பொழுதுதான் வாடகை என்ன கேட்கலாம் என்பதற்காக ..

reno85 said...

இதெல்லாம் நடக்கும் அரசாங்கம் சீராக இயங்கும் என்று நம்பும் கோடிகணக்கான (Anna Hazare போன்றோருக்கு மிக சிலரே ஆதரவு அளித்ததாக கேள்வி பட்டேன் )

இல்லை ஆயிரக்கணக்கான மக்களில் நானும் ஒருவன் ....

reno85 said...

இதெல்லாம் நடக்கும் என்று 1 சதவீத நம்பிக்கை கூட வர மாட்டேன் என்கிறது...
வெறும் ஆசையா அல்லது பேராசையா என்று தெரியவில்லை..

கலியுகத்தின் ஆரம்ப ஆண்டுகளே இவ்ளோ மோசமாக இருக்கிறது..
நம் சந்ததிகள் அல்லது மறு பிறப்பின் மீது நம்பிக்கை இருக்குமாயின் நாமே கலியுகத்தின் நடுஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதை எதிர் நோக்கி ? .................

hayyram said...

டாலர் கரன்ஸியில் சம்பளம் வாங்குபவர்களுக்குத் தான் அதிக வருமானம் இருக்கிறது(ஐடி, பி பி ஓ). இந்திய நிறுவனங்களில் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருடத்திற்கு இரண்டு மூன்று லட்சத்திற்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருப்பதால் இந்திய சம்பளக்காரர்கள் பாடு திண்டாடமாகத்தான் இருக்கிறது. அதிலும் இந்திய கரன்ஸி சம்பளக்காரர்களுக்கு வருடத்திற்கு 500 -1000 தான் சம்பள உயர்வும் இருக்கும்.

//கலியுகத்தின் நடுஆண்டுகளில்// ரொம்ப தூரம் போய் விட்டீர்கள், அடுத்த பத்து வருடங்களில் சென்னை மாநகரில் 15 - 20 ஆயிரங்கள் சம்பளம் வாங்குபவர்களே வாழமுடியாத சூழல் இருக்கும் போலத் தெரிகிறது. இப்பொழுதே வீட்டு வாடகை சதுர அடிக்கணக்கில் ஒரு சதுர அடி 10 ரூபாயாக கேட்கிறார்கள். குறைந்த பட்சம் 6000 முதல் 10-15 ஆயிரங்கள் வரை வாடகை விலை எகிறி விட்டது. அதுவும் கடைசி மூன்று வருடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றிருக்கிறது. இது வெறும் விலைவாசி ஏற்றம் மட்டுமல்லாது சொந்த விட்டை வாடகைக்கு விடுபவர்களின் அதீத பேராசையால் விளைகிறது.

பக்கத்து விட்டுக்கு 10000 வாடகை வருகிறதென்றால் இவரது வீட்டில் குடியிருப்பவரை காலி செய்யச் சொல்லி துரத்தி விட்டு அடுத்து வருபவர்களிடம் அதிக வாடகை வாங்கி தங்கள் வளத்தைப் பெருக்கிக் கொள்ளத் துணிகிறார்கள். பெரும்பாலானவர்கள் லோன் போட்டு வீடு வாங்கி விட்டு அந்த மாத தவனையை வாடகைக்கு குடிவருபவர்கள் மூலம் கட்டி அடைக்கும் படி செய்கிறார்கள்.

இது போதாமல் ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்கள் அட்டூழியம் வேறு, அவர்கள் பங்கிற்கு ஏற்றி விடுவார்கள். எது எப்படியோ இந்தப் படக்காட்சியில் வரும் வசனம் போல 5 லட்சம் சம்பளம் வாங்குபவனுக்கு தகுந்த மாதிரி விலைவாசி மட்டும் ஏறி விட்டது. ஆனால் இன்னும் குறைந்த பட்ச சம்பளம் என்னவோ 2000 ரூபாய் தான்.

ஒரு விஷயம் கவனித்துப் பாருங்கள், நாளிதழ்களில் வரும் வரிவிளம்பரங்கள் சமூக ஏற்றத்தாழ்வையும் பரிதாபத்தியுமே உண்டாக்குகின்றன. காரணம் ஒரு புறம் வீடு வாடகைக்கு என்ற தலைப்பில் 8 - 10000 வரை வாடகைக்கு வீடு இருப்பதாக விளம்பரம் இருக்கும். அதே பக்கத்தில் மார்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் வேலை, அக்கவுண்ட் எக்ஸிக்யூட்டிவ் வேலை, சம்பளம் 7000 என்று இருக்கும். நகரத்தில் வீட்டு வாடகையே பத்தாயிரம் இருக்கும் பட்சட்த்தில் அடிப்படை சம்பளம் மட்டும் ஆகக்குறைவானதாக இருக்கிறது. கேட்பார் இல்லை.

வாடகை உச்சவரம்பு சட்டமும் இல்லை, நில உச்சவரம்பு சட்டமும் இல்லை. மொத்தத்தில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே வாழ முடிகிறபடியாக நகரத்தின் நிலை சென்று கொண்டிருப்பது நடுத்தர வர்கத்தினரின் வாழ்வில் மிகப்பெரிய அபாயமான எதிர்காலத்தையே காட்டுகிறது.

reno85 said...

ஒரு வகையில் மக்களுடைய பேராசையும் சொல்லலாம்...
இன்று கண் மூடி திறக்கும் முன் அதாவது சினிமாவில் ஒரு பாட்டு வந்து போனவுடன் ஹீரோ பெரிய ஆளாகி இருப்பார்..
அதே போன்று மக்களும் (எல்லோரும் அல்ல ) தங்களுடைய வளர்ச்சியை எதிர்பார்கிறார்கள் ...

நகரம் சார்ந்த வாழ்க்கை சுயநல வாழ்க்கை ஆகிவிட்டது

Madhusudhanan D said...

There are many people working in call center and getting less than 10000 per month.

Are they providing government jobs common to everyone? 200000 candidates are writing group 1 exam for 131 vacancies, of which more than 50% are reserved for SC/ST, BC, and MBC. Of the remaining which is open for all castes, there are a lot of politics, recommendation, bribery, etc. Somehow after getting a job in government, the one who joined after us, becomes our senior in next 10 years because of the same reservation.

This does not happen in IT industry.

Do you think that all government employees do their job properly? Government doctors should be consulted in their clinic. The government is running by the work done by at most 30% of the employees. In IT companies, 100% of the employees do their work. The main drawback of government job is the job security. Whether or not they work, they get salary and increment.