Saturday, April 19, 2014

கோவில்களைக் கொள்ளையடிக்கும் தமிழக அரசு!


சென்னை அஷோக்நகர் ஆஞ்சநேயர் கோவிலை அபகரித்துக்குள்ளும் வகையில் அறநிலையாதுறையிலிருந்து கடிதம் வந்திருப்பதாக கேள்விப்படுகிறோம். 

இருக்கும் தெருமுனை கோவிலிலிருந்து தமிழகத்தில் உள்ள எல்லா கோவில்களையும் அரசுடைமை ஆக்க துடியாய் துடிக்கிறார் ஜெயலலிதா. அறநிலையத்துறை என்கிற பெயரில் தமிழகத்தில் யாரும் விரும்பி தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு கோவில் கட்டி வழிபாடு செய்யக்கூடாது என்கிற நிலை உண்டாகிவிட்டது. வீட்டுச் சுவற்றில் பிள்ளையார் பதித்து வழிபட்டால் கூட அறநிலையத்துறை ஓடி வந்து வீட்டு மதில் சுவற்றை அரசுடைமை ஆக்கிவிடும் போல இருக்கிறது. ஜெயலலிதாவைப்  பொறுத்தவரை டாஸ்மாக் வருமானத்தையும் கோவில் வருமானத்தையும் ஒன்றாக நினைக்கிறார் போல. இரண்டிலும் மக்கள் கொடுக்கும் பணத்தை எடுத்து இலவசங்கள் கொடுத்து ஓட்டு வாங்க திட்டமிட்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. ஏன், கோடிகோடியாய் அரபுப்பண்ம் புழங்கும் மசூதிகளையும் கோடிகோடியாய் டாலர் புழங்கும் சர்ச்சுகளையும் அரசுடைமை ஆக்கினாலும் இலவச மிக்ஸி க்ரைன்டர் பெண்களுக்கான நாப்கின் எல்லாம் கொடுக்கலாமே.

கருனாநிதி கூட செயத் தயங்கும் அத்துனை ஹிந்து விரோத காரியங்களையும் தெய்வபக்தி உள்ள ஹிந்து அபிமானி என்கிற போர்வையில் ஜெயலலிதா செய்துவருகிறார் என்பதே காலப்போக்கில் வெளிப்பட்டு வருகிறாது.

அதிமுக வையும் திமுக வையும் ஹிந்துக்கள் நிரந்தரமாக ஒதுக்கினால் ஒழிய இனி ஹிந்துக்களுக்கு தமிழகத்தில் வாழ்வில்லை! இதுவே தருணம் நண்பர்களே, பாடம் புகட்டுங்கள் இரு திராவிஷ கட்சிகளுக்கும்!

2 comments:

Unknown said...

Adichu thorathanam rendu visha kirumogalayum

Unknown said...

Adichu thorathanam rendu visha kirumogalayum