
பத்தாம் வகுப்பு மாணவி பள்ளிக்கூடத்தில் பிள்ளை பெற்றாள். நல்ல செய்தி!
ராமநாதபுரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி கழிப்பறையிலே பெண் குழந்தையை பெற்றெடுத்து அப்படியே போட்டு சென்றுள்ளார் என்கிறது அந்த செய்தி. மாணவியின் இச்செயலை கண்டித்து அவருக்கு டி.சி.,யை கொடுத்துள்ளதாம் பள்ளி நிர்வாகம். பின்ன, ஒரு பள்ளிக்கூடம் என்ன தான் செய்ய முடியும். ஆட்டு மந்தைகளை கூடத்தில் அடைப்பது போல ஆள் சேர்ப்பது, பின்னர் டி சியை கொடுப்பதும் மட்டுமே வேலையாக கொண்டிருக்கும் பள்ளிக் கூடங்களால் வேறென்ன செய்ய முடியும். கலாச்சாரம் , ஒழுக்கம் போன்றவற்றை பள்ளிக்கூடங்கள் போதிப்பதற்கு முன்னால் கற்பு பற்றியும் திருமணத்திற்கு முன்னால் உடலுறவு வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும் குஷ்பு போன்றவர்கள் கற்றுக்கொடுத்து விடுகின்றனரே! பிறகு பள்ளிக்கூடங்களால் பிள்ளைகளுக்கு என்ன கற்றுக் கொடுக்க முடியும்!
செய்தியின் மிச்சத்தையும் படியுங்கள் - "தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த இந்த யுவதி திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால் , கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் படித்த கொண்டிருந்த போது மாணவி , திடீரென கழிப்பறை செல்ல அனுமதி கேட்டு சென்றுள்ளார். அங்கு யாருடைய உதவியுமின்றி தானாக குழந்தையை பெற்று, அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு வகுப்பறை வந்துள்ளார். கழிப்பறையில் மற்ற மாணவிகள் சென்ற போது, பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது .
இதை பார்த்த அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர். ஆசிரியர்கள் கழிப்பறையில் பெண் குழந்தை இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு, உடனடியாக குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். பின் சந்தேகமான மாணவியிடம் விசாரித்ததில் குழந்தை பெற்றதை ஒப்புகொண்டார். ஆசிரியர்கள் குழந்தை பெற்ற மாணவியின் உடையை மாற்றி உடனடியாக அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் மாணவி குழந்தை பெற்றது பெரும் சர்ச்சையை எழுப்பியதால் பள்ளி நிர்வாகம், மாணவியின் டி.சி.,யை அவரது பெற்றோரிடம் வழங்கினர்." செய்தி இங்கே .
சரி. இப்படி நடந்தது அதிர்ச்சியான தகவலா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் இந்த இயற்கையின் படைப்பில் ஆடு, மாடு, நாய், நரி, ஓநாய், கழுதை, குதிரை, பன்றி, யானை, ஒட்டகம், ஈ, கொசு, பூச்சிகள், வண்டுகள், பறவைகள், மீன்கள் மற்றும் மரம் செடி கொடிகள் என்று எல்லா ஜீவராசிகளுமே இனப்பெருக்கத்திற்கான வயதை எட்டியவுடன் தன் இனையைக் கூடுகிறது. இது இயற்கையின் நியதி தானே!
அதைப் போலத்தானே இப்போது இந்த பள்ளியில் படிக்கும் யுவதியின் விஷயத்திலும் நடந்திருக்கிறது. இணை சேரும் காலம் வந்தது. இணையைக் கூடினாள். இயற்கையின் நியதிப்படி இது சரியே! இந்தச் செய்தியில் அடிபட்ட யுவதியோ அல்லது அவளுடன் கூடியவனோ தண்டிக்கப்படக் கூடியவர்கள் அல்ல. பருவம் எய்தியவுடன் இணையைக் கூடுவது குற்றமும் அல்ல.
ஆனால் மனிதர்களாக வாழும் நாம் உணர்ச்சிப் பூர்வமாக நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறோம். உணர்வுகளின் அடிப்படையில் எழும் சில உணர்ச்சிப் போராட்டங்களைத் தவிர்க்கவும், உரிமைப் போராட்டங்கள் இல்லாமல் அமைதியாக வாழவும், வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க முயன்றும் சில விதிகளை நமக்குள்ளே நிர்ணயித்துக் கொண்டிருக்கிறோம். அதற்குப் பெயர் தான் நாகரீகம். அது தான் நாகரீகம் அடைந்தோம் என்று நம்மை நாமே கூறிக்கொள்ளும் மனித வாழ்க்கை ஆகும்.
விலங்குகளைப் போல கூடினோமா, குட்டிப்போட்டோமா பின் விட்டுச் சென்றோமா என்று சென்று விடுவது எளிது தான். ஆனால் பெற்றுப் போட்ட குட்டியின் நிலை என்ன என்ற உணர்ச்சிப் பூர்வமான கேள்வியை மனிதன் சிந்தித்த நாள் முதல் தான் மனிதன் விலங்குகளிடமிருந்து வேறுபடத்துவங்கி இருப்பான். இந்த சிந்தனை விரிவடைந்து ஒரு ஆணும் பெண்ணும் தான் பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கைக்குப் பொறுப்பாகிறார்கள் என்ற ஆத்மார்த்தமான சிந்தனை தான் மனிதனை விலங்குகளிடமிருந்து பிரித்து மேலும் செம்மையான நாகரீகத்திற்கு கொண்டு போனது என்றால் மிகையாகாது.
இப்படி ஒருவர் வாழ்க்கைக்கு மற்றவர்கள் தானாகவே பொறுப்பேற்றுக் கொண்டதனால் குடும்பம் என்ற அமைப்பு உண்டானது. குடும்பம் என்ற அமைப்பு உணர்வுப்பூர்வமாக உண்டான ஒரு அமைப்பு. இந்த அமைப்பை முறைப் படுத்தவே சில வழி முறைகளை பின்பற்றப்பட்டன. அதில் முக்கியமான வழி முறை தான் திருமனம் என்று அழைக்கப் படுகிறது.
இப்போது விஷயத்திற்கு வருவோம், நமது தாத்தா பாட்டி காலத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்ட வயதைக் கேட்டுப்பாருங்கள். கண்டிப்பாக எல்லோரும் இணை தேடும் பருவத்தில் மணம் புரிந்து கொண்டிருப்பார்கள். நம் முன்னோர்கள் ஒன்றும் பத்தாம் பசலிகளும் இல்லை. ஒன்றும் தெரியாத முட்டாள்களோ, காட்டு மிராண்டிகளாகவோ இருக்கவில்லை. பன்பட்ட நாகரீக மனிதர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.
ஆடு, மாடு, நாய், நரிகளைப் போல வாழாமல் முறையான மனித வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பருவத்தே கூட வேண்டியது இயற்கையின் நியதி என்பதை புரிந்து கொண்டு அதற்கு அணை போடாமல் அதை முறைப்படுத்தி, குடும்பம் என்ற அமைப்பு சிதையாமலும் தாங்களே தங்கள் வாரிசுகளுக்கு வயதிற்கேற்ற வரன் தேடிக்கொடுத்தும், முறையான வழியில் இணையைச்
சேரக் கற்றுக் கொடுத்தும் வாழ்கைக்கு வடிகால் வைத்துக் கொடுத்திருந்தார்கள்.
ஆனால் பதின் வயதில் திருமணம் செய்து கொள்வதை நாம் இன்று குழந்தைத் திருமணம் என்று அழைக்கிறோம். இது என்ன முரண்பாடு? பதினைந்து வயது யுவனும் யுவதியும், பாதுகாப்பு முறைகளுடன் உடலுறவு கொண்டால் தவறில்லை என்பது நாகரீகம் என்கிறார்கள். அதே பாதுகாப்பை ஒரு குடும்பம், திருமணம் என்ற அங்கீகாரத்துடன் அதே யுவனுக்கும் யுவதிக்கும் கொடுத்தால் அதை மூட நம்பிக்கை என்கிறார்கள். திருமண வயது பதினெட்டு என்பது என்ன கணக்கு? ஏன் பதினைந்து என்று வைத்துக் கொண்டால் யார் குடி முழுகிப்போகிறது?
பதின் வயதுகளில் இனக்கவர்ச்சி உண்டாகும் என்பதை ஒத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகள், பதின் வயதுகளில் சைட் அடிப்பது வயதிற்குரிய மாற்றம் என்று ஒத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகள், பதின் வயதுகளில் காதல் வரும் என்பதை ஒத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகள், பதின் வயதுகளில் காம உணர்வு வரும் என்பதை ஒத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகள், அத்தகைய காதல் காம உணர்வுகளுக்கான வடிகால்கள் என்ன என்பதை ஏன் வெளிப்படையாக சொல்வதில்லை? அப்படியே வெளிப்படையாக சொல்வதாகக் கூறிக் கொள்பவர்கள் உடலுறவு செய்து கொள்ளுங்கள். ஆனால் கருத்தடை சாதனங்களை உபயோகியுங்கள் என்று அறிவுரை கூறுகின்றன. இது தான் முறையான வடிகால் என்பதா?
பதினைந்து வயதில் உடலுறவு கொள்வது சட்டப்படி தவறில்லை என்றால், அதை திருமணம் மூலம் குடும்பம் என்ற அமைப்போடு முறைப்படுத்துதலை மட்டும் சட்ட விரோதம் ஆக்கி இருப்பது என்ன நியாயம்? பதின் வயது உடலுறவு சட்டப்படி தவறில்லாத போது அதை முறைப்படுத்தும் திருமணத்தையும் சட்டப்படி தவறில்லை என்று அறிவிக்க வேண்டும். பதினான்கு வயது பூர்த்தியானவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். பிள்ளைகள் வழிதவறிப் போவதற்கு முன்னால் அவர்களை பாதுகாப்பாக குடும்ப அமைப்புக்குள் கொண்டு வந்து வாழ்க்கையின் பொறுப்புக்களை புரிய வைக்க ஒரு வழியாவது கிடைக்கும். கருத்தடை சாதனங்களை மளிகை சாமான் லிஸ்டிலேயே சேர்த்து வாங்கிப் போட்டு விட்டால், கண்டவர்களுடன் உறவு கொள்ளாமல் கணவன் மனைவி உறவாக உடலுறவு முறைப்படுத்தப்பட்டு வாழ்க்கை கேள்விக்குறி ஆகாமல் குடும்பத்தில் வாழ்கிறோம் என்ற பாதுகாப்பு உணர்வாவது மிஞ்சும். இதைத்தான் அக்காலத்தில் நம்முன்னோர்கள் கையாண்டிருக்கிறார்கள். காந்தியடிகளுக்கு பதிமூன்று வயதில் திருமணம் நடந்ததாம்! என்ன குறைந்து போனது? தேசத்தந்தை ஆகவில்லையா?

தேசத்தந்தை காந்தி மனைவியுடன்
நம் பிள்ளைகளை குடும்பத்தந்தையாகவேனும் ஆவதற்கான முறையான வழிகாட்டுதல் ஏற்படுத்திக் கொடுக்க வில்லை என்றால் எதிர்காலத்தில் தந்தை பெயர் தெரியாத ஒற்றைப் பெற்றோர்கள் இந்தியாவிலும் பெருகிவிடுவார்கள் என்பது தின்னம்.
பிறகு கண்ட இடத்தில் கூடி, கழிவறையில் குட்டி போட்டு நாய்க்கும் மனிதர்களுக்கும் வேறுபாடில்லாத மிருக வாழ்க்கையைத் தான் எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்ளும். குஷ்புவும் மகிழ்ச்சி அடைவார்.
__________________________________________________________________________
எச்சரிக்கை: இந்திய நாணயங்களில் தொடர்ந்து கிறிஸ்தவ மதச் சிலுவையும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிக்களின் படங்களும் அச்சிடப்பட்டு வருகின்றன. நாம் இந்தியாவில் வாழ்கிறோமா அல்லது இத்தாலியில் வாழ்கிறோமா என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

கேரளாவைச் சேர்ந்த மறைந்த கன்னி(?)யாஸ்திரி அல்போன்ஸாவின் உருவத்தைப் ஐந்து ரூபாய் நாணயங்களில் பொறித்து இத்தாலி அரசு கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் செய்து வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். இதேயே பி ஜெ பி காலத்தில், நாணயத்தில் ராமர் படமோ, சாய் பாபா படமோ போட்டிருந்தால் இந்துத்துவாவைத் தினிக்கிறது என்று கூறி ஒரு கலவரத்தையே நிகழ்த்த முன்னின்றுவிடும் நமது அரசியல் கட்சிகள் இப்போது மட்டும் வாய் மூடி வேடிக்கை பார்ப்பதேன்!
இந்து கடவுளரின் உருவம் பொறிக்கப்படும் போது இந்துத்துவா தினிக்கப்படுகிறது என்று கொண்டால், கிறிஸ்தவ பாதிரிகளின் படம் பொறிக்கப்படும் போது கிறிஸ்தவத்தை தினிப்பது ஆகிறதே! இதை தட்டிக்கேட்க மட்டும் தமிழகத்தின் பகுத்தறிவு வாதிகள் காணாமல் போய்விட்டனரே!
தமிழக அரசுச் சின்னத்தில் கோபுரம் இருப்பது மதச்சார்பாக இருக்கின்றது என்று கூறி அதை அகற்றி விட்ட கருணாநிதி, இந்திய ரூபாய் நாணயங்களில் பொறிக்கப்படும் மத சின்னங்களை எதிர்த்துப் பேசுவாரா? கோபுரத்திற்கு எதிராக சட்ட சபையில் உரை நிகழ்த்தியவர்கள், இந்த கிறிஸ்தவ அடையாளங்களுக்கு எதிராக குரல் கொடுப்பார்களா?
இந்துக்களே நினைவில் கொள்ளுங்கள்!. காங்கிரஸ் மற்றும் தி மு க ஆகிய இரு கட்சிகளும் இந்துக்களுக்கு எதிரானவையே! இந்துக்களின் பாரம்பரியத்தை அழிக்க அவதாரம் பூண்டவையே! இனி இறக்கும் வரை இவர்களுக்கு வாக்களிப்பதில்லை என்று இந்துக்கள் தீர்மானித்தாலே ஒழிய இந்துக்கள் சொந்த நாட்டின் மத அடிமைகளாகப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை!