Showing posts with label துவாரகாபுரி. Show all posts
Showing posts with label துவாரகாபுரி. Show all posts

Sunday, October 28, 2012

வேதம் கூறும் அறிவியல்!


"நமக்கிடையே நடக்கும் இந்தப் புனிதமான உரையாடலைப் படிக்கிறவன் எவனோ, அவன் என்னை ஞான யக்ஞத்தின் மூலம் வழிபட்டவன் ஆவான். இது என் கொள்கை. 

நம்பிக்கையுடன் , இகழாமலும், இதைக் கேட்பவனும் விடுதலை பெற்று நற்செய்கைகள் செய்பவர்கள் அடைகின்ற நல்லுலகங்களை அடைகிறார்கள்." - பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

ஆரியர் திராவிடர் என்பதெல்லாம் வெறும் திரிக்கப்பட்ட செய்தி! அகழ்வாராய்ச்சி ஆரியர் என்கிற அந்நியப் படையெடுப்பை முற்றிலும் மறுக்கிறது. இதை ஆராய்ச்சி செய்து கூறுபவர்கள் வெள்ளையர்களே. ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் நம்மவர்கள் வெள்ளைக்காரன் சொன்னால் தானே நம்புவார்கள். பிள்ளையார் முன்னே நின்று தோப்புக்கரம் போடு என்றால் மூட நம்பிக்கை என்பார்கள். அதை வெள்ளையன் வந்து சூப்பர் ப்ரெயின் யோகா என்றால் 'ஆ' வென்று வாய்பிளந்து கேட்பார்கள். இது வரை பார்த்திராதவர்களுக்கு...இதோ வேதம் கூறும் அறிவியல் பற்றி கீழே! 


ஆரியப் படையெடுப்பு கட்டுக்கதை!


பகவான் ஸ்ரீக்ருஷ்னர் உத்தவரிடம் கூறலானார்: "பாக்கியமுள்ள உத்தவரே! இன்றிலிருந்து ஏழாவது நாள் இந்த துவாரகா நகரம் கடலில் மூழ்கி மறைந்து விடும். மிக விரைவில் இங்கு கலி புருஷனும் வந்து விடுவான். கலியில் ஜனங்கள் அதர்மத்தில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். நீ இனிமேல் எல்லா உறவு, சினேகத்தை விட்டு விட்டு என்னிடத்தில் மனதைச் செலுத்தி சம சித்தத்துடன் பூமியில் சஞ்சரிப்பாயாக. இந்த உலகை கண்ணனாகவே பார்ப்பாயாக!" என்றார். 

- ஸ்ரீமத் பாகவதம்!

கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட துவாரகை!



சப்தங்களுக்கு சக்தி உண்டு! அவ்வாறு வடிவமைக்கப்பட்டதே மந்திரங்கள்! 


பகவான், "பார்த்தா! இதை ஒருமனதோடு கேட்டாயா? தனஞ்ஜயா, உனது அறியாமையால் விளைந்த மயக்கம் ஒழிந்ததா?


அர்ஜுனன் சொல்கிறான்! "அச்யுதா, மயக்கம் ஒழிந்தது. உன்னுடைய அருளால் எனக்கு நினைவு வந்துள்ளது. என்னுடைய சந்தேகங்கள் தீர்ந்து விட்டன. நான் உறுதியாக இருக்கிறேன். உன் சொற்படி நடக்கிறேன்"