Showing posts with label பகவத் கீதை. Show all posts
Showing posts with label பகவத் கீதை. Show all posts

Sunday, October 28, 2012

வேதம் கூறும் அறிவியல்!


"நமக்கிடையே நடக்கும் இந்தப் புனிதமான உரையாடலைப் படிக்கிறவன் எவனோ, அவன் என்னை ஞான யக்ஞத்தின் மூலம் வழிபட்டவன் ஆவான். இது என் கொள்கை. 

நம்பிக்கையுடன் , இகழாமலும், இதைக் கேட்பவனும் விடுதலை பெற்று நற்செய்கைகள் செய்பவர்கள் அடைகின்ற நல்லுலகங்களை அடைகிறார்கள்." - பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

ஆரியர் திராவிடர் என்பதெல்லாம் வெறும் திரிக்கப்பட்ட செய்தி! அகழ்வாராய்ச்சி ஆரியர் என்கிற அந்நியப் படையெடுப்பை முற்றிலும் மறுக்கிறது. இதை ஆராய்ச்சி செய்து கூறுபவர்கள் வெள்ளையர்களே. ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் நம்மவர்கள் வெள்ளைக்காரன் சொன்னால் தானே நம்புவார்கள். பிள்ளையார் முன்னே நின்று தோப்புக்கரம் போடு என்றால் மூட நம்பிக்கை என்பார்கள். அதை வெள்ளையன் வந்து சூப்பர் ப்ரெயின் யோகா என்றால் 'ஆ' வென்று வாய்பிளந்து கேட்பார்கள். இது வரை பார்த்திராதவர்களுக்கு...இதோ வேதம் கூறும் அறிவியல் பற்றி கீழே! 


ஆரியப் படையெடுப்பு கட்டுக்கதை!


பகவான் ஸ்ரீக்ருஷ்னர் உத்தவரிடம் கூறலானார்: "பாக்கியமுள்ள உத்தவரே! இன்றிலிருந்து ஏழாவது நாள் இந்த துவாரகா நகரம் கடலில் மூழ்கி மறைந்து விடும். மிக விரைவில் இங்கு கலி புருஷனும் வந்து விடுவான். கலியில் ஜனங்கள் அதர்மத்தில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். நீ இனிமேல் எல்லா உறவு, சினேகத்தை விட்டு விட்டு என்னிடத்தில் மனதைச் செலுத்தி சம சித்தத்துடன் பூமியில் சஞ்சரிப்பாயாக. இந்த உலகை கண்ணனாகவே பார்ப்பாயாக!" என்றார். 

- ஸ்ரீமத் பாகவதம்!

கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட துவாரகை!



சப்தங்களுக்கு சக்தி உண்டு! அவ்வாறு வடிவமைக்கப்பட்டதே மந்திரங்கள்! 


பகவான், "பார்த்தா! இதை ஒருமனதோடு கேட்டாயா? தனஞ்ஜயா, உனது அறியாமையால் விளைந்த மயக்கம் ஒழிந்ததா?


அர்ஜுனன் சொல்கிறான்! "அச்யுதா, மயக்கம் ஒழிந்தது. உன்னுடைய அருளால் எனக்கு நினைவு வந்துள்ளது. என்னுடைய சந்தேகங்கள் தீர்ந்து விட்டன. நான் உறுதியாக இருக்கிறேன். உன் சொற்படி நடக்கிறேன்"

Monday, June 4, 2012

குணங்களுக்கும் மேலே என்னைப் பார்!




 ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு குணங்களின் தன்மை பற்றி இவ்வாறு எடுத்துக் கூறுகிறார்.

குந்தியின் மகனே! உலகில் தோன்றும் எல்லா உயிர்களுக்கும் இயற்கைதான் பிறப்பிடம். நான் தான் விதை கொடுக்கும் தந்தை!


பெருந்தோளாய்! இயற்கையிலிருந்து தோன்றும் சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் 
குணங்கள் உடலில் வாசம் செய்யும் உயிரை உடலோடு பிணைக்கின்றன.

பாபமற்றவனே! இவற்றுள் களங்கம் இல்லாத சத்வம் எனப்படுவது ஒளி பொருந்தியது.
துன்பம் கொடுக்காதது. இன்பத்தையும், ஞானத்தையும் உண்டாக்கும் பற்றை அது வளர்க்கிறது.

குந்தியின் மகனே! ரஜஸ் என்ற ரஜோ குணம் ஆசை வடிவுடையும்து, அது காம வேட்கையையும்பற்றுதலையும் உண்டுபண்ணும் என்பதை அறிந்து கொள். அது செயலின் மேல் பற்றுதலை ஏற்படுத்தி, உயிரை உடலோடு பிணைக்கிறது.

பாரதா! தமோ குணமோ, அறியாமையில் பிறந்தது. அது உயிர்களை எல்லாம் 
மயக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது. அசட்டை, சோம்பல், தூக்கம் ஆகிய இயல்புகளால் உயிரை உடலோடு பிணைக்கிறது.

பாரதா! சத்வம் சுகத்திலும், ரஜஸ் கர்மத்திலும், தமஸ் அரிவை மறைத்து கவனமில்லாத தன்மையிலும் சேர்த்து விடுகிறது.

அர்ஜுனா! சத்வம், ரஜசையும், தமஸையும் அடக்கி மேலெழுகிறது. ரஜஸ், சத்வத்தையும், தமஸையும் அடக்கி ஆள்கிறது. அவ்வாறே தமஸ், சத்வத்தையும், ரஜஸையும் அடக்குகிறது. இந்த உடலின் பொறிவாயில் அனைத்திலும் எப்பொழுது ஞான ஒளி பிரகாசிக்கிறதோ, அப்பொழுது சத்வ குணம் மேலோங்கி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்!

சத்துவ குணம் கொண்டவர்கள் மேன்மை பெறுகிறார்கள். ரஜோ குணம் படைத்தவர்கள்
இடையில் இருக்கிறார்கள். தமோ குணம் உள்ளவர்கள், இழிவான குணம் உள்ள காரணத்தால் தாழ்வடைகிறார்கள். 

அர்ஜுனா! ஒருவன் எப்பொழுது குணங்களைத் தவிர செயல்படுவோன் எவரையும் காணாமல்குணங்களுக்கு மேலான பரம்பொருளைக் காண்கிறானோ, அப்பொழுது என்னை வந்தடைகிறான்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்


Sunday, May 20, 2012

எந்த தேவதையைத் தொழுதாலும் என்னையே வழிபடுகிறாய்!




ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு தன் வடிவத்தின் தன்மையை இவ்வாறு எடுத்துக் கூறுகிறார்.

அர்ஜுனா! மகாத்மாக்கள் என்னுடைய தெய்வீகத் தன்மை பெற்று, உயிர்களுக்கு என்றும் அழியாத பிறப்பிடம் நான் என்பதை அறிந்து, என்னைத் தவிர வேறு எங்கும் மனதைச் செலுத்தாது என்னை வழிபடுகின்றனர்.

எப்பொழுதும் என்னைப் புகழ்பவராயும், உறுதியான விரதத்தோடு முயல்பவராயும், பக்தியுடன் என்னை வணங்குபவராயும், நித்திய யோகிகள் என்னை வழிபடுகிறார்கள்.

ஞான வேள்வியால் வழிபடும் மற்றவர்களும் என்னை ஒன்றாய், வேறாய், பலவாய் இத்தனை விதங்களிலும் வணங்குகிறார்கள்.

தனஞ்ஜெய! நானே கிரது என்ற வைதீக கர்மம். நானே வேள்வி. மருந்துப் பூண்டுகளும், எல்லா வகையான தாவரங்களும் நான்; மந்திரமாவது நான். வேள்வியில் அளிக்கப்படும் நெய்யும் நானே! தீயும் நா; வேள்வி வேட்டலும் நானே!

நானே இந்த உலகத்தின் தாய், தந்தை , பாட்டன். கர்ம பலனைக் கொடுப்பவன் மற்றும் அறிய வேண்டிய பொருள், தூய்மையாக்குவோன், ஓங்காரம், ரிக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்கள் ஆகியவைகளும் நானே.

அடைக்கலம், வளர்ப்பவன், உடையவன், சாட்சி, இருப்பிடம் நண்பன், தோற்றம், அழிவு, ஆதாரம், களஞ்சியம், அழியாவித்து ஆகிய அனைத்தும் நானே!

வேறு எதைப்பற்றிய எண்ணமும் இல்லாதவர்களாய், மனதை ஒரு முகப்படுத்தி என்னையே வழிபடுகிறவர்கள் வேண்டியதைப் பெறுதலையும், பெற்றதைக் காப்பாற்றுதலையும் நானே கவனித்துக் கொள்ளுகிறேன்.

குந்தியின் மைந்தா! சிரத்தையோடு கூடிய பக்தர்கள் மற்ற தேவதைகளை வழிபடும்போது, அவர்களும் அறியாமையோடு என்னையே வணங்குகிறார்கள்!

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்



Saturday, February 11, 2012

நம்மோடு பேசும் மழை!



அது ஒரு அனுபவம்!

ஆம் சுவையான அனுபவம்! அனுபவங்கள் தான் நம்மைச் செதுக்கும் சிற்பி! அனுபவங்கள் உளியைப் போன்றது. உளி தரமாக இருந்தால் செதுக்கப்படும் சிற்பம் சிலையாகும். உளி ஒழுங்கற்றிருந்தால் கல் தூளாகுமே ஒழிய சிற்பமாகாது. நல்லனுபவங்கள் நம்மை சிற்பமாக செதுக்குகின்றன.

கேரளாவில் பாலக்காடு அருகே நெல்லியம்பதி என்று ஓரிடம் இருக்கிறது. மலைகளினூடே செல்லும் சாலைகள். சாலையைக் குறுக்கே கடந்து செல்லும் அழகான சிறிய நீர்வீழ்ச்சிகள். நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாக நிற்கும் உயர்ந்த மரங்கள். பச்சைப் பசேலெனத் தேயிலைத் தோட்டங்கள் என்று அற்புதமான மலையுச்சி அது.


அந்தப்பகுதி மக்களின் அழகான ஊட்டி. அன்றொரு ஓணம் பண்டிகையின் போது அந்த இடம் சென்று வர வாய்ப்பு கிடைத்தது. வளைந்து வளைந்து செல்லும் அருமையான
மலைப்பாதையில் மேலே செல்லச்செல்ல அற்புதமான அனுபவம். ஆம், மலை உச்சியின் மேலேயே சேட்டிலைட்டுக்குப் போட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் மேகக்கூட்டம் சேட்டிலைட்டுகள் பார்த்து பொறாமைப்படும் படியாக மலைச்சாலைகளில் இறங்கி  நடமாடத்துவங்கியது.


எதிரே குறிப்பிட்ட தூரத்திற்கு என்ன இருக்கிறது என்று தெரியாத அளவிற்கு பனி மூட்டம் சூழ்ந்திருந்தது. இரு சக்கர வாகனத்தில் சென்ற எனது தலையில் தண்ணீர்படலம்! நான் மேகங்களை அனைத்துக் கொண்டு உறவாடினேன். மெல்லிய காற்று சில்லென்று என்னை குளுமைப்படுத்தியது. மேகங்களோடு சேர்ந்து காற்றும் என்னை வரவேற்று, ஒன்றாய்க் கூடித் தழுவிக் கொண்டதாகவே மகிழ்ந்தேன். 

ஆம், நாம் நேசித்தால் அவைகள் நம்மோடு உறவாடும். இயற்கைக்கும் உணச்சிகள் உண்டு. அவைகள் நம்முடன் பேசும். கட்டிக்கொள்ளும். தழுவும். தாலாட்டுப் பாடி உறங்கச்செய்யும். சப்தம் போட்டு எழுப்பும்! அடித்துத் துறத்தும். எல்லாவற்றிர்கும் காரணங்கள் உண்டு. அதனை உணர்ந்து கொள்ளும் பக்குவத்திலிருந்து நாம் வெகு தூரம் வந்துவிட்டோம். இயற்க்கையுடனான உணர்ச்சி ததும்பும் உறவாடலை நாம் மறந்து விட்டோம். அவற்றை அக்ரினையாகப் பார்க்கக் கற்றுக் கொண்டுவிட்டோம்.

ஆனால் இயற்கை என்பது, தாய், தந்தை, சகோதரன், நண்பன், தெய்வம், குறிப்பிட்டுச் சொன்னால் இவை எல்லாமும் நானே என்று கூறும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

உச்சிமலை சென்று செங்குத்துப் பாறையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் போதும் அந்த மேகங்கள் என்னை விடவில்லை. முகத்தோடு ஒட்டி உரசி விளையாடிச் சென்றது. காற்றில் அவற்றை உறிஞ்சிக் குடித்தேன். கைகளால் தொட்டு மகிழ்ந்தேன். ஒரு அடி எடுத்து வைத்தால் அதள பாதாளம். ஆனால் பயம் வரவில்லை. அவற்றை நேசித்தேன்.

பண்டிகை நாளென்பதால் மனித நடமாட்டமே இல்லாமல் இருந்த அந்த இடத்தில் ராஜாக்களாக விளையாடிக் கொண்டிருந்தார்கள் என் நண்பர்கள்! சின்னதும் பெரிதுமாக பல வகையில் குரங்குகள்.

சிறுவயதில் 'கபீஷ்' என்ற பெயரில் சித்திரக்கதையில் படித்துப் பாசத்தின்பாற்பட்ட குரங்குகள் என்றைக்கும் என் குழந்தைப் பருவ நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

உச்சிப்பாறையின் உச்சியில் இவன் மட்டும் தனியாக இருக்கிறானே என்றெண்ணி அவர்கள் அருகே வந்தனர். என் பைகளின் என்ன வென்று நோட்டம் போட்டனர். முன்னே வந்து என் முகத்தைப் எட்டிப் பார்த்துவிட்டு சுற்றி சுற்றி வட்டமிட்டு வேறு வேலை பார்க்கச் சென்றுவிட்டனர்.

அந்தக் 'கபீஷ்' கள் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி, எத்தனை ஆர்வம், எத்தனை உற்சாகம், பூமிப்பந்தின் மொத்த ராஜ்ஜியமும் தமக்கே என்கிற ஆனந்தம். அவைகளை அன்புடன் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தேன்.


பல மணி நேரம் அந்த மலை உச்சியின் அமைதியை ரசித்து விட்டு கிளம்பலானேன். மிக அருகே இருந்தமேகம் இன்னும் குளிர்ந்து மழையாகப் பெய்தது. நனைந்தேன். அந்த ஈரத்தை ரசித்தேன். புறப்படும் நேரத்தில் இன்னும் நெருக்கமாக என்னைத் தழுவிக்கொண்டதாக மகிழ்ந்தேன். 

வானத்தைப் பார்த்து நாக்கை நீட்டி மழை நீரை வாஞ்சையுடன் குடித்தேன். என்னைத் தழுவிக்கொண்ட உன்னோடு நான்  என்றும் ஜீவித்திருப்பேன் என்று மனதாரக் கூறிவிட்டு புறப்பட்டேன். மழையோடு காற்றும் கைகோர்த்துக் கொள்ள குளிரில் பற்கள் டைப்படித்தன. வீடு போகும் வரை என்னை மறக்காதே என்று காற்று என்னைக் குளிர்வித்தனுப்பியதாக பூரித்தேன். வீடு சென்றேன். வீடு செல்லும் வரை என்மீது விழுந்த மழையின் துளிகளைத் துடைக்கவில்லை.



அன்று ஒரு வரண்ட நாள். வெறித்த வெள்ளை வானம் சூடாக சுட்டெரித்த தினம்.

இரவு கண்ணயர்ந்த நேரம். வாசலில் அழைப்புமணி சத்தம். வெளி வேலையாகச் சென்ற என் சகோதரர் இரவு தாமதமாக வீடு வந்தார். கதவைத் திறந்து விட்டு உள்ளே சென்று மீண்டும் படுத்துக் கொண்டேன்.

அயர்ந்த உறக்கத்தில் அப்படி ஒரு சப்தம். பலமான காற்று! ஜன்னல் கதவுகள் அடித்துக் கொண்டன. ஜன்னலுக்கு வெளியே இருந்த தகடுகள் மற்றும் தட்டுமுட்டு சாமான்களில் தண்ணீர் தடதடவென விழும் சப்தம். ஆம், திடீரென வெளியே மழை!

விழிப்பு வந்த நிலையில் கூடத்திற்குவந்தேன். அதிர்ச்சி காத்திருந்தது. வாசற்கதவு பெரிதாகத் திறந்திருந்தது. கூடத்திற்கு வெளியே சென்று பார்த்தால் வாசலில் இரும்புக்கதவு முழுதுமாகத் திறந்திருந்தது. மணியைப்பார்த்தேன். சரியாக ஒன்று! நள்ளிரவில் கதவு திறந்து கிடக்க ஒரு வித பதற்றத்துடன் வீடு முழுவதும் அவசர அவசரமாக சுற்றிப் பார்த்தேன். மழை நீர் விழும் சப்தம் வெளியே இன்னும் கேட்கிறது.

வீட்டுக்குள் யாரும் இல்லை. அரையில் சகோதரர் நன்றாக உறங்கிக்கொண்டிருக்கிறார். அப்போது தான் பொறி தட்டியது. அவர் வரும்போது கதைவைத் திறந்துவிட்ட நான் பூட்டாமல் உள்ளே சென்று விட்டேன். நான் பூட்டுவேன் என்றெண்ணி சகோதரரும் போய் தூங்கிவிட்டார். ஆனால் கதவு திறந்தபடியே இருந்திருக்கிறது. முன்னிரவு தாண்டி நள்ளிரவும்!

அவசரமாக ஓடிச்சென்று வாசற்கதவைப் பூட்டி, கூடத்தின் கதவையும் நன்றாகப் பூட்டிவிட்டு உள்ளே சென்றேன். அப்படா என மனது சமாதானம் அடைந்தது.

பூட்டிய வீட்டிலேயே ஆட்டயைப் போடுபவர்கள் ரோட்டுமேலிருக்கும் ஒரு வீடு, வாசல் திறந்து வா வா எனக் கூப்பிட்டால்...!

நல்ல வேளை அப்படி ஏதும் நடப்பதற்குள் மழை வந்து எழுப்பியது என்றெண்ணினேன்.

ஆமாம், மழை எங்கே?

வெளியே இப்போது தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருக்கும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

காற்றில்லை! முழுவதும் அமைதியான சூழல்! ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன்!

அதே வரண்ட வானம்!

யார் என்னை எல்லாவற்றிலும் காண்கிறானோ, என்னிடம் எல்லாவற்றையும் காண்கிறானோ, அவன் என் பார்வையிலிருந்து மறைவதில்லை. நானும் அவனது பார்வையிலிருந்து மறைவதில்லை! 

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்!

Sunday, January 1, 2012

கீதோபதேசம் - பிரம்மம் என்பது எது?




அர்ஜுனன் சொன்னது..

மனிதரில் சிறந்தவனே! பிரம்மம் என்பது எது? அத்யாத்மம் என்றால் என்ன? கர்மம் என்பது யாது? அதிபூதம் என்றும் அதிதைவதம் என்றும் சொல்லப்படுபவை யாவை?

மதுசூதனா! இந்த உடலில் அதியக்ஞம் என்பது யாது? எவ்வாறு  உள்ளது? மேலும் மனம் ஒரு நிலைப்பட்டவர்கள் தங்கள் மரணகாலத்தில் உன்னை எவ்வாறு அறிந்து கொள்வது?

வீரர்களுள் சிறந்தவனான அர்ஜுனா! கேள்!

பிரம்மம் என்பது அழிவற்றது. எல்லாவற்றிலும் மேலானது. அதன் சிறப்பான இயல்புகளை அறிந்து கொள்ளுதல் ஆன்மீக ஞானம் எனப்படுகிறது. உயிர்களை உண்டு பண்ணி நிலைத்திருக்கச் செய்வதாகிய வேள்வியே கர்மம் எனப்படுகிறது.

உத்தமனே! அதிபூதம் என்பது அழியும் பொருள் என்று சொல்லப்படுகிறது. அழியக்கூடிய இயல்பைப் பற்றியது. புருஷன் அல்லது ஆன்மாதான் அதிதைவம் எனப்படும். இந்த உடலில் அதியக்ஞம் என்பது நானேதான்!

மரண காலத்தில் எவன் ஒருவன் என்னையே நினைத்து உடலைப் பிரிந்து செல்லுகிறானோ, அவன் என்னையே வந்தடைகிறான். இதில் சிறிதளவும் சந்தேகம் கிடையாது.

குந்தியின் மகனே! எவன் ஒருவன் இந்த உடலைவிட்டு நீங்கும் பொழுது எந்தப் பொருளைப் பற்றி எண்ணிக் கொண்டே இறக்கிறானோ, அவன் அதைப் பற்றி இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டிருந்த காரணத்தால் அதனிடத்தில் தான் சென்றடைகிறான்.

எனவே பார்த்தா..! எப்பொழுதும் நீ என்னை சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும், அன்றியும் போர் புரிய வேண்டும். உன் மனத்தையும், புத்தியையும் என்னிடத்திலேயே நீ நிலை நிறுத்தினால் சந்தேகம் இன்றி என்னை வந்தடைவாய்.

பார்த்தா! இவ்வகையிலான இடைவிடாத பயிற்சியால், மனதை வேறொன்றின் மீதும் செலுத்தாமல் உறுதியுடன் நிலைத்திருக்கும் சித்தத்துடன், ஒளிமயமான பரம்பொருளை யார் தியானிக்கிறானோ  அவன் அவரையே அடைகிறான்.

எல்லாவற்ரையும் உணர்ந்தவனை, பழமையானவனை, எல்லாவற்றையும் ஆளுபவனை, அணுவுக்கும் சிறிய அணுப்போன்றவனை, எல்லாவற்றையும் தாங்குபவனை, கற்பனைக்கு எட்டாத வடிவுடையவனை, சூரியனைப் போன்று ஒளிர்பவனை, அஞ்ஞான இருளுக்கு அப்பாற்பட்டவனை - யார் இறக்கும் நேரத்தில் சஞ்சலம் இல்லா மனத்துடனும் பக்தியுடனும், யோக சக்தியால் இருபுருவங்களுக்கு நடுவில் மூச்சை நிலைநிறுத்தி தியானம் செய்கிறானோ அவன் சுடரொளிவீசும் அந்தப் பரம்பொருளை அடைகிறான்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.


.

Sunday, August 8, 2010

கீதோபதேசம் - நீ அழியாத பரம்பொருள்!



அர்ஜுனன் கேட்கிறான்..

பரமேஸ்வரா! புருஷோத்தமனே! நீ உன்னைப் பற்றி விளக்கிக் கூறிய உன் தெய்வீக வடிவத்தைக் காண விரும்புகிறேன்.

இறைவா, அதைப் பார்க்க எனக்கு இயலும் என்று நீ நினைத்தால், யோகேஸ்வரா உன்னுடைய என்றும் அழிவற்ற உருவத்தை எனக்குக் காட்ட வேண்டும்.

பகவான் கூறுகிறார்...

"பார்த்தா! பலவகைப்பட்ட பல நிறங்களும், வடிவங்களும் உடைய எனது தெய்வீக உருவங்களை நூறு நூறாய், ஆயிரம் ஆயிரமாய் இனி பார்!"

ஆதித்யர்களையும், வசுக்களையும், ருத்ரர்களையும், அசுவினி தேவதைகளையும் மருத்துகளையும் அர்சுனா! இதுவரை காணாத அதிசயங்கள் பலவற்றைப் பார்.

அர்ஜுனா! எனது இவ்வுடலில், ப்ரபஞ்சத்தில் உள்ள அசையும் பொருட்களும், அசையாப் பொருட்களும் ஒருங்கிணைந்திருப்பதைப் பார். இதைத்தவிர மேலும் பார்க்க விரும்பும் வேரு பலவற்றையும் இப்போது பார்.

ஆனால் உனது இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண முடியாது. உனக்கு ஞானக்கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈஸ்வர யோக நினையைப் பார்."

ஸ்ரீ க்ருஷ்ணர் அருஜுனன்னுக்குத் தன்னுடைய மேலான ஈஸ்வர வடிவத்தைக் காட்டி அருளினார். அவ்வடிவம் அநேக முகங்கள் கண்கள் உடையது. தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்தது. தெய்வீக ஆயுதங்கள் பல ஏந்தியது.

திவ்யமான மாலைகளையும் ஆடைகளையும் அணிந்து கொண்டும் திவ்யமான வாசனையைப் பூசிக்கொண்டும், பெரும் வியப்பூட்டும் வகையிலும் ஒளி வீசிக்கொண்டும் எல்லாத் திசைகளிலும் முகங்களைக் கொண்டதாயும் இருந்தது. வானத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் சூரியர்கள் ஒளி வீசினால் எவ்வளவு பேரொளி தோன்றுமோ, அவ்வளவு ஒளியோடு அந்த மகாத்மாவின் உருவம் பிரகாசித்தது.

அப்போது பலவாய்ப் பிரிந்துள்ள உலகம் யாவும் தேவாதி தேவனின் அந்த உடலில் ஒன்றுகூடி இருப்பதை அர்ஜுனன் பார்த்தான்.

பிறகு அர்ஜுனன் பெருவியப்புடன் ரோமம் சிலிர்க்க குனிந்த தலையுடனும் கூப்பிய கரங்களுடனும் இறைவனை வணங்கிக் கூறலானான்.

"இறைவா! உன் உடலில் தேவர்கள் அனைவரையும் பல்வேறு உயிர்களின் கூட்டத்தையும், தாமரை மலரின் மேல் அமர்ந்துள்ள இறைவன் பிரம்மாவையும், ரிஷிகள் அனைவரையும் தேவலோகத்துச் சர்ப்பங்களையும் காண்கிறேன்.

உலக வடிவுடைய உலகநாயகா! எண்ணில் அடங்கா கைகள் வயிறுகள், முகங்கள், கண்கள் உடைய உமது எல்லையற்ற பரந்த உருவத்தை எங்கும் காண்கிறேன். மேலும் உமது தொடக்கத்தையோ நடுப்பகுதியையோ, முடிவையோ என்னால் காண முடியவில்லை.

சிவனின் அடியையும் முடியையும் காணமுடியாமல் விஷ்னும் ப்ரம்மாவும் தோற்ற கதையை இதோடு ஒப்பிடலாம். ப்ரபஞ்சம் என்பது அளப்பரிய அளவு பெரியது என்பதை ஒரு உருவகத்தோடு நம் மனதில் பதிய வைக்க இவ்வாறு கதைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதையே இங்கே அர்ஜுனன் நேரடியாக பார்த்து உணர்ந்திருக்கிறான் என்பது தெளிவாகிறது. மிகப்பெரிய சக்தியான இந்த ப்ரபஞ்சத்திற்கும் ஒரு மூலசக்தி அல்லது ஆதார சக்தி ஒன்று இருக்கிறது. அறிவியல் தான் எல்லாம் என்று கூறும் அறிவியளாலர்களின் கணிப்பிற்கும் அடங்காத அந்த சக்திமூலத்தை தான் இறைவன் என்று அழைக்கிறோம். அந்த சக்திமூலத்தை காணும் பாக்கியத்தையே அர்ஜுனன் அடைந்திருக்கிறான் என்பதை கீதை உணர்த்துகிறது.


"க்ரீடம் அணிந்து, கதையையும், சக்கரத்தையும் ஏந்தி எங்கும் பிரகாசிக்கும் ஒளிப்பிழம்பாய் காண்பதர்கு அரியவராய் சுடும் சூரியாக்கினி போன்றவராய், அளப்பரியவராய் உன்னைக் காண்கிறேன்.

ஆரம்பம், நடு முடிவு இல்லாதவரும் முடிவில்லாத சக்தியை உடையவரும், எண்ணற்ற கைகளை உடையவரும், சூரிய, சந்திரர்களே கண்களாய் கொழுந்து விட்டெரியும் நெருப்பே வாயாகக் கொண்டவரும், தன்னுடைய சுடரொளியால் ப்ரபஞ்சத்தையே எரிக்கின்றவரும் ஆகிய உம்மைக் காண்கிறேன்.

நீ அழியாத பரம்பொருள், அறியத்தக்கவனும் நீயே. இந்த உலகத்திற்கு ஒப்பற்ற உறைவிடமும் நீயே. நிலையான தர்மத்தைக் காப்பாற்றுபவனும் நீயே! என்றென்றும் உள்ள பரமாத்மா நீயே!"

என்று கூறி ஸ்ரீ க்ருஷ்ணரை நான் என்ற நினைவையே துறந்து திறந்த ஆன்மாவாக சரணடைகிறான் அர்ஜுனன்.



Wednesday, June 9, 2010

கீதோபதேசம் - எந்த உயிரையும் வெறுக்காதே!



அர்ஜுனன் கேட்டது!

எப்பொழுதும் இடைவிடாது யோகத்தில் உறுதியுடனிருந்து உன்னைத் தியானிக்கும் பக்தர்கள், அழிவற்றப் பரம்பொருளை வழிபடுவோர் இவர்களுள் யார் சிறந்த யோகிகள் ஆவார்?

ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார்..

என்னிடத்தில் மனதை நிலைநிறுத்தி, எப்பொழுதும் பக்தியுடனும் மாறாத உறுதியுடனும், மிகவும் மேலான நம்பிக்கையுடனும் என்னை யார் வழிபடுகிறார்களோ, அவர்களை நான் யோகத்தில் மேம்பட்டவர்கள் என்று கருதுகிறேன்.

எவன் ஒருவன் எந்த உயிரையும் வெறுக்காமல் இருக்கிறானோ, எல்லோரிடமும் நட்பு கொண்டவனாக, கருனை உள்ளவனாக இருக்கிறானோ, பற்றற்றும், நான், எனது என்ற எண்ணத்தை எல்லாம் அறவே கைவிட்டவனாக இருக்கின்றானோ, இன்பத்திலும், துன்பத்திலும் சமநிலையில் இருக்கிறானோ, மன்னிக்கும் பாங்கும், பொறுமை உடையவனாகவு இருக்கிறானோ அவனே எனக்குப் பிரியமானவன்.

எப்போதும் போதும் என்ற மனத்திருப்தி உடையவனாகவும், தியானத்தில் உறுதியாகவும், திடசித்தம் உடையவனாகவு, யோகப் பயிற்சியில் அனுபவம் பெற்றவனாகவும் இருக்கிறானோ அவனே எனக்குப் பிரியமானவன்.

எவனொருவன் தன்னடக்கம் உள்ளவனாகவும் உறுதியான கொள்கை உடையவனாகவும், தனது மனத்தையும், அறிவையும் என்னிடம் அர்ப்பணம் செய்தவனாகவும் யார் இருக்கிறானோ அத்தகைய பக்தனே எனக்குப் பிரியமானவன்.

தனஞ்செயா! எவன் உலகுக்கு யாதொரு துன்பமும் இழைப்பதில்லையோ, உலகால் துன்பமடையாமலும் இருக்கிறானோ, எவன் மகிழ்ச்சி, கோபம், அச்சம், கவலை ஆகியவை நீங்கியவனாக இருக்கிறானோ, அவனே எனக்கு விருப்பமானவன்.

எதையும் விரும்பாதவனாய், தூயவனாய், திறமைசாலியாய், பற்றின்றி எல்லாவற்றையும் சமமாக கருதுபவனாய், கவலையற்றவனாய், எல்லா ஆடம்பரங்களையும், செயல்களையும் துறந்தவனாய் என்னிடம் பக்தியோடு இருப்பவன் எவனோ அவனே எனக்குப் பிரியமானவன்.

மகிழ்ச்சியடைதலும், வெறுத்தலும், துயரமடைதலும், விரும்புதலும் இன்றி, நல்லது, கெட்டது எல்லாவற்றையும் எவன் துறந்து விடுகின்றானோ, அந்தப் பக்தனே எனக்குப் பிரியமானவன்.

அர்ஜுனா! விரோதியையும், நண்பனையும் ஒரே விதமாகக் கருதுபவனும், மானம் அவமானம், குளிர்-உஷ்ணம், இன்பம்-துன்பம் ஆகியவற்றை சமமாகக் கருதுபவனும், பற்றுதலில் இருந்து விடுதலை பெற்றவனும் எனக்குப் பிரியமானவன்.

புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதுபவனும், மௌனமாக இருப்பவனும், தனக்குக் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைபவனும் உறுதியான உள்ளம் படைத்தவனும், பக்திமானாகிய அவனே எனக்கு பிரியமானவன்.

அர்ஜுனா! நான் கூறியுள்ளபடி தர்மத்தின் சாரமான இதை யார் நம்பிக்கையுடனும், என்னைலட்சியமாகக் கொண்டு என்னை யார் பின்பற்றுகிறார்களோ, அத்தகைய பக்தர்களையே நான் மிகவும் விரும்புகிறேன்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்


Thursday, April 22, 2010

கீதோபதேசம் - பாபங்களுக்குக் தூண்டுதலாக இருப்பது எது?




க்ருஷ்ணா! ஒருவனுக்கு பாபம் செய்யவேண்டும் என்ற விருப்பம் இல்லாவிட்டாலும் அவனை வலுக்கட்டாயமாக பாபம் செய்யத் தூண்டுவது எது? - அர்ஜுனன்

அர்ஜுனா! அவ்வாறு பாபம் செய்யத் தூண்டுவது ரஜோ குணத்திலிருந்து தோன்றிய காமம் தான். இதுவே குரோதமாக மாறுகிறது. இதை எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி அடைவதில்லை. பெரிய பாபங்களுக்கு இதுவே காரணமாகிறது. இந்த உலகத்தில் அதுவே உன் எதிரி என்பதை உணர்ந்து கொள் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

நெருப்பு புகையினாலும், கண்ணாடி அழுக்கினாலும், கருவானது கருப்பையாலும் மூடப்பட்டிருப்பது போல் ஞானம் ஆசையால் மூடப்பட்டுள்ளது.

குந்தியின் மகனே! தீயைப்போல் தணிக்க முடியாததும், தீர்க்க முடியாததும் ஆன காமம் தான் ஞானியின் அறிவை மூடிக்கொண்டிருக்கிறது.

புலன்கள், மனம், புத்தி ஆகியவைதான் அதன் இருப்பிடம் எனப்படுகின்றன. இவைகளின் வழியாக அவனை மயக்கி அவனுடைய அறிவை மூடி மறைக்கின்றது.

எனவே பரதரில் சிறந்தவனே! நீ முதலில் உன்னுடைய புலன்களை கட்டுப்படுத்தி சாஸ்திர அறிவையும், அநுபவ அறிவையும் அழிக்கிற பாபத்தின் உருவமான இக்காமத்தை அறவே ஒழித்திடு.

புலன்கள் உடலை விட மேலானவை. அவற்றை விட மேலானது மனம். மனதை விட புத்தி மேலானது. புத்தியைவிட மேலானது ஆத்மா.

உயிர்தோழா! நீ இவ்வாறாக புத்தியைவிட மேலான ஆத்மாவை உணர்ந்து, புத்தியினால் மனதை நன்றாகக் கட்டுப்படுத்தி வெல்வதற்குக் கடினமானகாமம் என்ற எதிரியைக் கொல்வாயாக.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.




இங்கே ஒரு ஆழமான மனோவியல் விஷயத்தை மிக எளிதாக ஸ்ரீ க்ருஷ்ணர் தெரிவிப்பதைப் பார்க்க முடிகிறது. காமம் என்ற ஆசைகளைத் தூண்டும் உச்ச உணர்வு தான் ஒருவன் பாபங்கள் செய்யாமல் இருக்க நினைத்தாலும் அவனை செய்யத் தூண்டுகிறது. காமத்தின் வடிகால் இல்லாதவர்கள் கோபக் காரர்களாகவும், கொலைபுரியும் அளவு குரோதம் கொள்பவர்களாகவும் மாறிவிடுவதையும் கூட பார்க்க முடிகிறது.

காமத்தின் அதீத உந்துதலை கையாளத்தெரியாமல் சைக்கோக்களானவர்கள் பற்றிய நீண்ட குற்றவியல் வரலாறுகளும் உண்டு. அமெரிக்காவில் பெஞ்சமின் மில்லர் என்பவர் கறுப்புப் பெண்களாகத் தேர்தெடுத்து கொலை செய்வானாம். அவனுக்கு 'ப்ரா' கொலைகாரன் என்று பெயர் உண்டு! பெண்களின் கழுத்தை பெஞ்சமின் மில்லர் நெரித்துக் கொல்வது, அந்தப் பெண்களின் 'ப்ரா' வை உபயோகித்துத்தான். அரை டஜன் கொலைகளுக்குப் பிறகும் யாருமே அவனை சந்தேகிக்கவில்லை. காரணம் கனெக்டிகெட் என்ற ஊரில் இருந்த சர்ச்சில்
அவன் பாதிரியார். பாபத்திற்குத் தூண்டுதல் காமம்.

பெஞ்சமின் மில்லர் இங்கே .

காமத்தின் மீதான அதீத கற்பனையும், மனதில் கட்டுப்பாடற்ற ஆசைகளையும் கொண்டு அவற்றை கையாள முடியாத சிக்காட்டிலோ என்ற ரஷ்ய நாட்டுக்காரன் ஒரு சைக்கோகில்லராக பத்து வருடங்களுக்கு மேல் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கொலை புரிந்திருக்கிறான். இவன் மாட்டிக்கொண்டது கூட ஒரு சுவாரசியமான விஷயம். சந்தேகத்திற்குரிய நபர் பற்றிய ஒரு ஆய்வறிக்கயை மனோவியல் மருத்துவர் மூலமாக தயாரித்தனர் காவலர்கள். அதில் கொலைகாரனைப் பற்றி தங்கள் யூகங்களை எழுதியிருந்தனர். அதாவது கொலைகாரன் ஒரு நாற்பது வயது ஆள். அவன் குழந்தைப்பருவம் கொடூரமாக இருந்திருக்கும். அன்புடன் பழக ஆளில்லாதவனாகவும் தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக்வும் இருப்பான். இருபாலருடனும் பாலுறவு வைத்துக்கொள்ளும் அதீத ஆசை கொண்டவனாக இருப்பான். மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பான். அவன் ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கும் வாய்ப்புண்டு" என்று எழுதியிருந்தார்கள்.

ஒரு நாள் சிக்காட்டிலோ ஒரு சிறுவனிடம் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த காவலர்கள் வெறுமனே விசாரிக்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றனர். சில விசாரனைக்குப் பிறகு தாங்கள் எழுதி வைத்திருந்ததை அவனிடம் படித்துக் காண்பித்தனர். சும்மா இருக்காமல் "அட என்னைப் பற்றி அப்படியே எழுதியிருக்கிறார்களே" என்று உளறி விட்டான். பத்து வருடங்களுக்கு மேலாக டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த கொலைகாரன் பிடிபட்டான். ஆம் அவன் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். கொலைக்குக் காரணம் காமம்.

சிக்காட்டிலோ இங்கே .

ஒரு சில பெண்களை அவர்களின் கணவன்மார்கள் 'சரியாக' கண்டு கொள்ளவில்லையெனில் அவர்கள் வீட்டில் யார் மீதாவது அடிக்கடி எரிந்து விழுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். காமத்தை கையாள முடியாததால் வரும் வினை. யானைக்கும் மதம் பிடிக்கிறது. காமத்தை காலத்தே கொள்ளாமையால்.

ஆனால் எத்தனை முறை காமம் கொண்டாலும் அதன் மீதான ஆசை சாகும் வரை தீர்வதில்லை. அதனாலேயே ஒரு நிலையில் அந்த உணர்வை கையாள கற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த உணர்வுகளை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவந்தால் பாபம் செய்யும் தூண்டுதல்கள் குறைவுபடும் என்பதை தெளிவுபடுத்துகிறார்.

அதனாலேயே ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார் "பாபம் செய்யத் தூண்டுவது ரஜோ குணத்திலிருந்து தோன்றிய காமம் தான். இதுவே குரோதமாக மாறுகிறது. இதை எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி அடைவதில்லை. பெரிய பாபங்களுக்கு இதுவே காரணமாகிறது. இந்த உலகத்தில் அதுவே உன் எதிரி என்பதை உணர்ந்து கொள்" என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.



"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்"


Sunday, August 16, 2009

இலவசங்கள் தருவது நல்லாட்சியா?


நமது இந்து தர்மப் புராணக் கதைகளில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பது எல்லா காலத்திற்கும் ஏற்ப அழகாக விளக்கப்பட்டிருக்கிறது.

அகங்காரத்துடன் வாழக்கூடாது, அகங்காரம் பாவம் என்பதை பல முற்கால சம்பவங்கள் மற்றும் கதைகள் மூலம் விளக்கி உள்ளனர் பெரியோர்.

அவற்றில் ஒரு துளியை இங்கே பார்ப்போம்.

மகாபாரதத்தின் நிறைவு காலம். அதாவது பாரதப்போர் முடிந்து தருமரின் ஆட்சி நடந்து வந்தது. தருமரின் ஆட்சி தருமத்தின் ஆட்சியே ஆகும்.

தருமரின் ஆட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். பருவநிலைகள் சீராக இருந்தது. விவசாயம் பெருகியது. திருட்டு கொள்ளை மற்றும் பிற துர்காரியங்கள் எதுவும் நடக்காமல் மக்கள் நிம்மதியாக இருந்தனர். பசித்தவர்கள் யாருமே இல்லாமல் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தனர். இப்படி நல்லாட்சியை சிறப்பாக நடத்தி வந்தார் தருமர்.

இப்படி வாழ்ந்து கொண்டிருக்கையில் ஒரு முறை ஸ்ரீ க்ருஷ்ணர் தருமரைப் பார்க்கச் சென்றார். அங்கே நல் ஆட்சி நடப்பதையும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதையும் தருமரிடம் பேசுவதன் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

அவை யாவையும் கேட்டுக் கொண்டிருந்த கண்ணனுக்கு தருமருக்கு தனக்கு நிகராக நல்லாட்சி நடத்துபவர் யாரும் இல்லை என்பது போன்ற கர்வம் உண்டாகியிருப்பது புரியத்துவங்கியது. தருமருக்கு பாடம் புகட்ட எண்ணினார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

ஒரு நாள் தருமரை பாதாள உலகில் ஆட்சி புரிந்துவரும் மகாபலி என்னும் அரசனிடம் அழைத்துச் சென்றார் ஸ்ரீ க்ருஷ்ணர். மகபலி சகல மரியாதைகளுடன் தர்மபுத்திரரை வரவேற்றார்.



மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்து மதம்?


க்ருஷ்ணர் மகாபலியிடம் கூறினார்: "உனக்குத் தர்ம புத்திரரைப் பற்றித் தெரியுமா? தான, தர்மங்களின் இருப்பிடம் இவர்தான், நாள் தவறாமல் ஒவ்வொரு தினமும் பதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இவர் உனவு அளிக்கிறார். இப்படிப்பட்ட நல்லாட்சி நடத்தும் ஒரு அரசனை நீ எங்காவது பார்த்திருக்க முடியுமா?" என்றார்.

இதைக்கேட்ட மகாபலி சிரித்தார், "தினமும் பதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தன்னிடம் பிச்சை எடுத்துதான் தின்ன வேண்டும் என்ற நிலையில் அவர்களை வைத்திருப்பது, இவருடைய ஜம்பத்தைத்தானே காட்டுகிறது? இப்படி நடத்தப்படும் ஆட்சி ஒரு ஆட்சியா? எனது நாட்டில் நான் ஒரு ஊரைக் கொடுக்கிறேன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னால் கூட, என்னிடம் எந்தப் பிரஜையும் உணவுக்காக வந்து காத்திருக்க மாட்டான்.

இப்படிப் பதினாயிரத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களை வளர்த்து, தனது மமதையைக் கட்டிக் காத்துக் கொள்ளும் இந்தத் தர்மபுத்திரரா பெரிய அரசர்? இவரது ஆட்சியா நல்லாட்சி? தூ...! என்று காரி உமிழ்ந்து பரிகாசித்து விட்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தர்ம புத்திரரின் இறுமாப்பு அடியோடு ஒழிந்து அமைதியும் அடக்கத்துடனும் ஆட்சி செய்தார் என்கிறது பாரதம்.

இத்தகைய குணம் கொண்டவர்கள் எல்லாக்காலத்திலும் உள்ளார்கள். இந்த காலத்தில் ஆட்சியாளர்களுக்கும் இது பொருந்தும் தானே!

ஆதலால் தான் சொல்கிறேன், இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.