இந்தியாவிலுள்ள முஸ்லீம்களின் வாழ்க்கை நிலை பற்றி ஆராய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சச்சார் கமிட்டி, பார்லிமெண்டுக்குச் சமர்பித்த அறிக்கையில் மற்ற மாநிலங்களை விட, குஜராத்தில் முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரம் நன்றாக உள்ளது என்றும், மற்ற மாநில அரசுகள் 'மதச்சார்பின்மை' என்று சொல்லிக் கொண்டு, ஓட்டு வங்கி அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றன என்று கூறப்பட்டிருக்கிறது. - இது உண்மையா?
தேசிய அலவில் 59.1% முஸ்லிம்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் குஜராத்திலோ 73.5% என்ற அளவில் முஸ்லிம்களின் கல்வி அறிவு அமைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் இந்த வித்தியாசம் இன்னமும் கூடுதலாக குஜராத்திற்குச் சாதகமாகவே தெரிகிறது.
தனிநபர் வருமானம் குஜராத்தில் தேசிய அளவிலான கணக்கை விட கூடுதலாகவே இருக்கிறது. முஸ்லிம்களுக்கு அதிக சலுகைகளைக் காட்டி வருகிற மாநிலங்களாக அறியப்பட்டிருக்கிற உத்திரப்பிரதேசம், ஆந்திரம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களை விட குஜராத்தில் முஸ்லிம்களின் தனிநபர் வருமானம் அதிகமாக இருக்கிறது.
குஜராத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொண்டால், 1987-ல் 54% ஆக இருந்த எண்ணிக்கை 2006-ல் 34% ஆக குறைந்துவிட்டது.
டெல்லி, மேற்கு வங்காளம் , மஹாராஷ்டிரம் போன்ற மாநிலங்களை விட முஸ்லிம்களுக்கு குஜராத்தில் அதிகமாக அரசு வேலைகள் கிட்டியிருக்கின்றன.
இப்படி பல விஷயங்களில் முஸ்லிம்கள் குஜராத்தில் திருப்திகரமான வாழ்க்கைத் தரம் பெற்று விளங்குகிறார்கள் என்று சச்சார் அறிக்கை கூறுகிறது.
ஆனாலும் மோடியின் அரசாங்கத்தை, முஸ்லிம் விரோத அரசாங்கம் போல் சித்தரிக்கும் பிரச்சாரம் என்னமோ இன்னமும் ஓயவில்லை.
நன்றி:- இவ்வார துக்ளக்
நரேந்திர மோடியிடம் ஒரு முறை 'உங்கள் பார்வையில் செக்யூலரிஸம் என்றால் என்ன?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'முன்னேற்றம். மாநிலத்தின் எல்லோருக்கும் ஒரேமாதிரியான முன்னேற்றம். அதுதான் எனது செக்யூலரிஸம்' என்றார். அதைத்தான் குஜராத்தில் செய்து காண்பித்துக் கொண்டிருக்கிறார்.
மற்றவர்களைப் போல உடனே 'சிறுபான்மை' ஜல்லி அடிக்கவில்லை. ஆன்டோனியோ மொய்னோ என்னதான் மோடி மீது சேறு வாரிப்பூசினாலும் குஜராத் மக்களுக்குத் தங்கள் வளர்ச்சி தெரியும் தானே. அது சச்சார் கமிட்டியில் பிரதிபலித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை.
.
