Friday, August 31, 2012

பற்றின்மையால் இறைவனை அடைவாய்!


உலகியலின் நடுவில் வாழ்கின்ற மூடர்கள் தங்கலை அறிவாளிகள் என்றும் பண்டிதர்கள் என்றும் கருதி மூப்பு, மரனம் ஆகியவற்றின் வசப்பட்டு உழல்கிறார்கள். குருடனால் வழிகாட்டப்பட்ட குருடர்களைப் போல இவர்கள் மீண்டும் மீண்டும் பிறவிச் சூழலில் உழல்கிறார்கள்.

பக்குவமற்ற அவர்கள் உலகியலில் பலவிதமாக உழல்கிறார்கள். தாங்கள் லட்சியத்தை அடைந்து விட்டதாக நினைக்கின்ற அவர்கள் உண்மையை அறிவதில்லை. அவர்கள் பற்றுடன் கர்மம் செய்பவர்கள். எனவே துயருற்று, புண்ணியம் தீர்ந்ததும் சொர்கத்திலிருந்து கீழே வீழ்கிறார்கள்.

இந்த வடிகட்டின முட்டாள்கள் யாகங்களும் நற்பணிகளுமே எல்லாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு மேலான எதையும் அவரக்ள் அறிவதில்லை. சொர்க்க லோகங்களில் புண்ணிய பலனை அனுபவித்து பிறகு அவர்கள் இந்தப் பூமியையோ இதைவிட இழிந்த உலகங்களையோ அடைகிறார்கள்.

புலக்கட்டுப்பாடு உடைய அறிவொளி பெற்ற சான்றோர் பிச்சையேற்கும் வாழ்வொலோ காட்டில் சிரத்தையுடன் கூடிய தவ வாழ்க்கை வாழ்வதிலோ ஈடுபடுகிறார்கள்.  அவர்களின் வினைப்பயன்கள் அகல்கின்றன. அவர்கள் உத்தராயண பாதை வழியாக மரணமற்ற, அழிவற்ற இறைவனை அடைகிறார்கள்.

சான்றோன் ஒருவன், தான் செயல்களின் பலனாகப் பெற்ற உலக அனுபவங்களைமுதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் விளைவாக, 'கர்மங்களால் இறைவனை அடைய முடியாது, பற்றின்மையால்தான் முடியும்' என்பதை உனர்ந்து பற்றின்மை பெற வேண்டும்.

நிலையுள்ள பொருள்களிடை நிலையுள்ளவனாகவும், அறிவுள்ள உயிர்களின் அறிவாயும், ஒருவனாய் நின்று அனைவருடைய ஆசைகளையும் அளிப்பவனாயும், அனைத்திற்கும் காரணமாயும், ஞான யோகத்தால் அடைதற்குரியவனாயும் உள்ள அந்த தேவனை அறிந்து ஒருவன் எல்லாத் தளைகளினின்றும் விடுபடுகிறான்.

- முண்டக உபநிஷத்து.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... நன்றி...

ஐயனும் உதடுகள் ஓட்டும் குறளில் அதையே கூறினார்...