Sunday, February 10, 2013

மதச்சார்பற்ற நாடாக மாறிய துபாய்!



'துபாய் எப்போது மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது?' என்று என் நண்பனொருவன் கேள்வி கேட்க ஒன்றும் புரியாமல் பல செய்தி சேனல்களையும் நாளிதழ்களையும் இணைய ஊடகங்களையும் துழாவித் தேடினாலும் அப்படி ஒரு சேதி கிடைக்கவில்லை. மீண்டும் அதே நண்பனின் சட்டையைப் பிடித்து 'என்னைப் பாத்து ஏண்டா அந்தக் கேள்வி கேட்ட?' என்றால் இல்லை கமல் துபாய்க்குப் போவதாகச் சொன்னார்.  அதான் கேட்டேன் என்றான்.
  
விஷயம் என்னவென்றால் விஸ்வரூப பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்த போது 'நான் மதச்சார்பற்ற நாட்டைத் தேடிப் போக வேண்டியிருக்கும்' என்று வீர வசனம் பேசிய அதே கமல் வாரம் இருமுறை பத்திரிக்கை ஒன்றில் 'வெளிநாட்டிற்கு போய் விடுவேன் என்று கூறினீர்களே? என்று கேட்டால் 'அப்போது கூட துபாய்க்குப் போய்விடுவேன் என்று தானே சொன்னேன்' என்று கூறியிருக்கிறார். முஸ்லீம் பாய்மார்களிடம் குனிந்து விழுந்து கால்களைக் கழுவாத குறையாக இன்னும் என்னென்ன சொல்லியிருப்பாரென்று யாருக்குத் தெரியும். மதச்சார்பற்ற நாட்டைத் தேடுவேன் என்று அறிக்கை விட்டவர் முஸ்லீம்களைத் தாஜா செய்ய வேண்டி 'துபாய்க்குப் போவேன்' என்றும் மாற்றிப் பேசுகிறார்.


இப்படியெல்லாம் முஸ்லீம்களிடம் கொஞ்சிக் கூத்தாடி 'சகோதரர்கள்' 'பாய் பாய்' என்றெல்லாம் பேசும் இவர் ஹிந்துக்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதையும் பார்க்க வேண்டும்.

கமல ஹாசன் ஹிந்துக் கடவுளரை கேலி செய்யும் வசனங்களை இந்தப் படத்திலும் வைத்திருக்கிறார். இவர் தனது அதிமேதாவித்தனத்தை வெளிப்படுத்தி அபத்தவானாக எப்போதும் காட்சிப்படுவார். அத்தகைய வசனங்கள் இதிலும் உண்டு. உதாரணத்திற்கு ஒன்று:

FBI விசாரணையில் கதாநாயகி:

அதிகாரி: யார் உங்க கடவுள்?
கதாநாயகி: நான் ஹிந்து, என் கடவுளுக்கு நாலு கைகள் இருக்கும்
அதிகாரி: அப்புறம் எப்படி சிலுவையில் அறைவீர்கள்?
கதாநாயகி: நாங்க சிலுவையில் அறைய மாட்டோம், கடலில் தூக்கிப் போட்டுவிடுவோம்.

அதாவது விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை இவர் கிண்டலடிக்கிறாராமாம். ஆனால் இதே க மல ஹாசன் இல்லாத ஒரு புராணக்கதையை ஜோடித்து ஹிந்துக் கடவுளான பெருமாளை கடலில் தூக்கிப் போடுவது போல படம் எடுப்பாராம். அதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டுமாம். காரணம் அவர் அதிமேதாவி. ஆனால் இந்த அதிமேதாவியின் பிதற்றல்களையெல்லாம் ஹிந்துக்கள் தானே பொறுத்துக் கொண்டிருப்பார்கள். முஸ்லீம் பாய்மார்களிடம் பப்பு வேகுமா?

கமல ஹாசன் தனது படங்களில் ஜாதி அல்லது மதம் சார்ந்த கதாபாத்திரத்தில் இருப்பார், அல்லது ஜாதி மதங்கள் சார்ந்த கதாபாத்திரங்கள் தன்னைச் சுற்றி இருக்குமாறு வைத்துக் கொண்டு அவற்றை விமர்சிக்கும் கதாபாத்திரமாக அதற்கு வெளியே இருப்பார். பஞ்சதந்திரம் படத்தில் அவரது ஜாதி சொல்லப்படாது ஆனால் அவரைச் சுற்றி ஐயர், நாயர், ரெட்டி என்று பல ஜாதிக்கள் இருக்கும். அந்தப்படத்திலும் ஐயர் யூகி சேது கையில் 'லெக் பீஸை' தூக்கிப் பிடித்தப்படி பேசுவதாக வலிய காட்சிப்படுத்துவார். தசாவதாரம் படத்திலும் அவர் தன்னை 'நாயக்கர்' என்று கூறிக்கொண்டு வசதியாக ராமசாமி நாயக்கரை நினைவுபடுத்திக் கொண்டு ஹிந்துக் கடவுளரை அவமதித்தும் கிண்டலடித்தும் பேசி நடித்திருப்பார்.

தனக்கு அரசியல் தெரியாது வராது என்று சொல்லிக் கொண்டே ஜாதி மற்றும் அரசியல் வைத்து வியாபாரம் செய்யும் ஒரு சராசரி கீழ்நிலை வியாபாரியாகவே இவர் இருக்கிறார். அதற்கு மேல்பட்ட சமூக மரியாதையை பெறுவதற்கு க மல ஹாசன் தகுதியுடையவர் அல்ல என்றே தோன்றுகிறது. அவருடைய திறமைகள் என்று பேசினால் அதெல்லாம் அவரது தொழில் சார்ந்ததேயன்றி சமூகத்திற்கு அதனால் சல்லிக்காசுக்கு பிரயோஜனம் இருக்கவில்லை என்பதே உண்மை.

நான் பகுத்தறிவு வாதி என்று சொல்வதில் பெருமை கொள்ளும் க மல ஹாசன் அதே பகுத்தறிவு மனத் தின்மத்தை முஸ்லீம்களிடம் காட்ட முடியாமல் தோற்றுப் போனதை 'மன்மதன் அம்பு' படத்தின் ஆண்டாளைப் பற்றிய காமப்பாடல் சர்ச்சையின் போது அவர் வெளியிட்ட அறிக்கை காட்டுகிறது.

'இதுவே எனது படமாக இருந்திருந்தால் நிஜ ஆன்மீக வாதிகளை புண்படுத்தாது என்ற நம்பிக்கையில் சென்சார் சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன்' - கமல்

இப்போது சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டு மீண்டும் மேலே இருக்கும் கமலஹாசனின் வீராப்பு வசனத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். என்ன புரிந்ததா...? சரி நானே சொல்கிறேன்..! அதாவது, மக்களைத் தன் குடும்பமென உருவகித்து..'என் குடும்பத்தில் வைணவரும் , சைவரும், இஸ்லாமியரும்,  கிருத்துவரும் இருக்கின்றனர்' என்று பேசுகிறார். இதில் எவ்வளவு நஞ்சுகலந்த தொனி இருக்கிறது என்பதை கவனியுங்கள்! இஸ்லாமியர்களைப் பற்றிக் கூறும் போது ஷியாவும் , சுன்னியும், அஹமதியாவும், லெப்பையும், பட்டானியும் இருக்கிறார்கள் என்றோ, கிருஸ்தவர்களைப் பற்றிக் கூறும் போது ஆர் ஸிக்களும், ப்ராட்டஸ்டண்ட்டுகளும், பெந்தகோஸ்தேக்களும், யோகாபோ சாட்சியவாதிகளும் , இருக்கிறார்கள் என்றோ சொல்லவில்லை. அங்கெல்லாம் பொதுவாக முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என்று சொல்லிவிட்டு ஹிந்துக்களைக் குறிப்பிடும் போது மட்டும் 'சைவரும், வைணவரும்' என்று பிரித்துக் கூறுகிறார். இதிலிருந்தே இவர் எத்தகைய ஹிந்து துவேஷி என்பதையும் ஹிந்துக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியினை எப்படித் தன்னுடைய அதிமேதாவித்தன பாணியில் கையாள்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

கலைஞர் டிவியில் அவர் பேசிய போது '500 வருடங்களாக பாரதத்தில் முதல் குடிமகன்களாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் முஸ்லீம்கள். அவர்களுக்கு இன்று இரண்டாவது இடமோ, மூன்றாவது இடமோ கூட இங்கு கிடைக்கவில்லை. அந்த அநீதியின் ஞாயம் தான் அவர்களை இப்படி கோபப்பட வைக்கிறது' என்பதாகக் கூறி முஸ்லீம் ஜல்லி அடிக்கிறார் கமல ஹாசன். ஆனால் அவர் பல ஆயிரம் வருடங்களாக இந்தப் பாரதப் பூமியின் முதல் மற்றும் கடைசிக் குடிமகனாக வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கத் தெரியவில்லை.


நேற்று (9.02.2013) பயங்கரவாதி அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்காக காஷ்மீர் மாநிலத்தில் கலவரம் உண்டாகும் என்று கருதி அதனை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. 'காஷ்மீர்' என்பது இந்தியாவா அல்லது பாகிஸ்தானா என்கிற சந்தேகம் நமக்கு உண்டாகிறது. ஒரு தீவிரவாதியை தூக்கிலிட்டால் முஸ்லீம்கள் பொங்குகிறார்கள் எனில் இவர்கள் பாரதத்திற்கு எந்தளவிற்கு விசுவாசமாக இருப்பார்கள்? இது பற்றி கமல் என்றைக்காவது வெளிப்படையாக விவாதித்திருப்பாரா? கொல்லப்பட்டும், கற்பழிக்கப்பட்டும், சொத்துக்களைப் பிடுங்கிக்கொண்டு விரட்டியடிக்கப்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகள் ஆண்களும் பெண்களுமாக சொந்த நாட்டில் அநாதைகளாக இருக்கிறார்களே அதைப் பற்றி என்றைக்காவது விவாதித்திருப்பாரா கமல ஹாசன்? 


சொந்த மண்ணின் மைந்தர்கள் கொல்லப்பட்டது பற்றி கவலைப்படாமல், ஆனால் இடையில் வந்து நாட்டைப் பிடித்த கொள்ளையர்கள் இங்கே குடியேறி வாழ்ந்துவிட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசும் க மல ஹாசனின் செக்யூலரிச வேஷம் எத்தகையது என்று இனிமேலாவது கமல் படத்தை காசு விரையம் செய்து பார்க்கும் ஹிந்துக்கள் உணர வேண்டும்.
  

இதில் அம்பேத்கர் ஏதோ முஸ்லீம்களுக்காக பேசியதாகவும் இடைச்செருகல் செய்கிறார். ஆனால் அதே அம்பேத்கர் தான் 'பிரிவினை என்பது உறுதியானால் முஸ்லீம்களை முழுதாக பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருக்கும் ஹிந்துக்களை முழுவதுமாக பாரதத்திற்கும் பரிமாற்றம் செய்துவிடுங்கள். இல்லையேல் இந்த பிரச்சனை பாரதத்திற்கு தீராத தலைவலியாக இருக்கும்' என்று எச்சரித்தார். அந்தத் தலைவலியைத் தானே இப்போது கமல் அனுபவிக்கிறார் என்பது ஏன் அவருக்கு உரைக்கவில்லை?


இஸ்லாமியர்களின் எதிர்ப்புக்குத் தனக்குத்தானே காரணங்களைத் தேடி ஜல்லியடித்த க மல ஹாசன்பிராமணர்களின் எதிர்ப்பை சப்ஜாடாக புறக்கனித்தார் என்பதை இந்தப் படத்தைப் பார்த்த பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் தெரியும்.

ஒருபக்கம் முஸ்லீம்களிடம் அடிவாங்கிக்கொண்டே இருந்தாலும் பிராமணர்களிடம் வீரம் காட்ட இவர் மறக்கவில்லை. அதே விஸ்வரூபம் படத்தில் இந்த தைரியசாலி க மல ஹாசன் வலிய ஒரு பிராமண கதாபாத்திரத்தை கதையில் தினித்து 'அடிவாங்குபவன் பெண் தன்மை கொண்ட பிராமணன்' என்றும் திருப்பி அடிப்பவன் வேறு ஜாதிக்காரன் அல்லது மதக்காரன் என்கிற பொது புத்தியை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தை உண்டாக்கி இருக்கிறார். அதுமட்டுமல்ல வழக்கம் போல பிராமணரது கலாசாரத்தைக் கேலி செய்யும் முகமாக காட்சிப்படுத்தல்களும் வைக்கத் தவறவில்லை.

சரி , பிராமணர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்.

இப்படத்தில் வரும் பிராமணக் காட்சிப்படுத்தலை எதிர்த்து பிராமணர் சங்கத்தினர்  அதன் மாநில பொதுச்செயலாலர் திரு ராமகிருஷ்ணன் தலைமையில் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியாத அதே வேளையில் உள்துறை அமைச்சரிடமும் புகார் மனு கொடுக்கப்பட்டது. அதன் மீது எந்த விசாரனையும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அப்படி எந்த செய்திகளும் ஊடகங்களில் வரவும் இல்லை. இத்தனைக்கும் இப்படத்தை பிராமணர்கள் தடைசெய்யக் கோரவில்லை. அதில் வரும் பிராமணர் சம்பந்தமான அவர்களின் பொதுவான உணவுப்பழக்கத்தை கொச்சைப்படுத்தும் விதமான காட்சிகளை நீக்க வேண்டும் என்று தான் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அந்தப் புகார் மனுக்களும் பிராமணர்களின் குமுறல்களும் கண்டுகொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது.








500 வருடங்களாக முஸ்லீம்கள் பாரதத்தின் முதல் குடிமகனாக வாழ்ந்தார்கள் என்று கூறும் க மல ஹாசன் பல ஆயிரம் வருடங்களாக இதே பாரதத்தில் முதல் இடை கடை என அனைத்து கட்ட குடிமகனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் பிராமணர்களின் உணர்வுகளை எண்ணிப்பார்க்கவில்லை. அதில் தான் க மல ஹாசனின் செக்யூலரிச ஜல்லியும் , கருப்புச்சட்டை வீரமும் பொங்கப் பொங்கத் தெரிகிறது.

இப்படியே ஜாதி மதத்தை வைத்து பணம் சம்பத்தித்து விடலாம் என்றால் க மல ஹாசன் தனது எல்லாப் படங்களின் வெளியீட்டிலும் ஏதாவது பிரச்சனையை சந்தித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறார்.

அடுத்தது விஸ்வரூபம் 2 ஆம் பாகம் இந்த ஆண்டே வந்துவிடுமாம். படம் எப்படி இருக்கும் என்று இப்போதே கனித்து விடலாம்!

1. ஹிந்து தீவிரவாதம் என்ற பதத்தை நிறுவும் முகமாக காட்சிகளை வைக்கத் தவறமாட்டார்.
2. பாபர் கும்மட்டம் இடிக்கப்பட்டது என்றும் அதனால் தான் முஸ்லீம்கள் கோபப்பட்டு நாடெங்கும் குண்டு வைத்தார்கள் என்றும் காட்டலாம்.
3. கோத்ரா ரயில் எரிப்பைக் காட்டாமல் குஜராத் கலவரம் பற்றி காட்சிகள் நீளலாம்.
4. இறுதியில் ஒரு பிராமணப் பெண் முஸ்லீம் ஹீரோவான இவரை காதலித்து மறுமணம் செய்யலாம்.

எது எப்படியானாலும் க மல ஹாசனுக்கு படத்திற்கு இலவசமான விளம்பரம் காத்திருக்கிறது.

மக்களும் காத்திருக்கிறார்கள் - க மல ஹாசனின் அடுத்த செக்யூலரிச முகமூடி கிழிந்து போவதைப் பார்ப்பதற்கு!

ஆனால் சொரனை இல்லாத ஹிந்துக்களின் விஸ்வரூபம் எப்போது?

காத்திருப்போம்!

3 comments:

kppradeep said...

Dear Ram,
I am posting this in face book, is it ok with you> And also please allow us to copy paste your article in between which is now disabled as it will help us highlight relevant points.

சிவ.சரவணக்குமார் said...

ராம் அவர்களே.......இவன் படங்களை ஹிந்துக்கள் காசு கொடுத்துப்பார்ப்பதே அவமானம்......இனிமேலாவது இவனது சுய ரூபத்தை ஹிந்துக்கள் புரிந்துகொண்டால் சரி....

jana said...

I am a big fan of Kamal. In my opinion, he is the best actor ever. Period. I would not be remiss if I use the word genius to describe him. I am unable to think of a single actor in the world who has acted in the breadth of roles Kamal has. He is equally adept at playing the role of a Palghat brahmin or a fireman talking "Madras Thamizh" (Michael Madhana Kamarajan). While the movie itself was nonsense, he made his mark with the sheer breadth of roles he played in Dasaavadharam. How many actors could portray an old brahmin widow so authentically? Certainly none of the over-rated, over-paid buffoons of Bollywood. Kamal is not just a great actor (No human being with a heart can avoid crying while seeing "Mahaanadhi"), he is also a great dancer, singer, and now, with Viswaroopam, a director as well.

However, there is another side of Kamal and I need to talk using the other side of my mouth. Even though born into brahmin caste, he never let go of any opportunity to disassociate himself from the caste of his birth (which is an oxymoron, since caste is never determined by birth..but stay with me for a moment). He has declared himself to be an atheist ( and so have his brothers) on many occasions. He always mocks Hinduism, Hindu Gods and brahmins in many of his pictures, but wouldn't dare to do that to Christianity or Islam. Even in Viswaroopam, a brahmin lady is shown to have a penchant for eating chicken. I wonder if Kamal would have the guts to show a muslim eating pork. Kamal should be happy to be born a Hindu. I know of a particular religion wherein if you declare yourself to be an atheist, you would either be ostracized from the society or your head will be chopped off (depending on the country you live in). Kamal mocks brahmins and brahminism all the time , but have no qualms working with brahmin artistes (Sukanya, Poornam Viswanathan, Crazy Mohan, Nagesh, Delhi Ganesh et al) or don the mantle of brahmin characters in his movies.


Regarding all the protests for Vishwaroopam, poor Kamalhasan. He should have stuck to what he does best: Bashing Hinduism and brahmins. There wouldn't have been a whimper of protest and that would have been one more medal in his secular chest !