Sunday, August 18, 2013

இன்பத்தின் அளவீடு!


இன்பத்தின் அளவீட்டைப் பார்ப்போம். நல்ல வாலிப மிடுக்கு உடைய அறிவாளியான, சுயக்கட்டுபாடு உடைய, மன உறுதிகொண்ட , பலசாலியான இளைஞன் ஒருவனை அளவுகோலாகக் கொள்வோம். அத்தகையதோர் இளைஞனுக்கு எல்லாவித செல்வங்களாலும் நிறைந்த இந்த பூமி உரியதாவதாக வைத்துக்கொள்வோம். அந்த இளைஞன் பெறும் இன்பம் ஒரு மனித இன்பம். அத்தகைய நூறு மனித இன்பங்கள் சேர்ந்தால் அது ஒரு மனித-கந்தர்வ இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு தேவ-கந்தர்வ இன்பங்கள் நீண்ட ஆயுளை உடைய முன்னோர்களின் ஒரு இன்பத்திற்குச் சமம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு பித்ரு-இன்பங்கள் தேவலோகத்தில் பிறந்த தேவர்கள் அனுபவிக்கின்ற ஒரு தேவ-இன்பம், ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு தேவ-இன்பங்கள் ஒரு கர்மதேவ-இன்பம். செயல்களின் மூலம் தேவ நிலையை அடைந்தவர்கள் கர்ம தேவர்கள். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.


நூறு கர்மதேவ-இன்பங்கள் ஒரு முக்கியதேவ-இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு முக்கியதேவ-இன்பங்கள் ஓர் இந்திர-இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.


நூறு இந்திர-இன்பங்கள் ஒரு பிருகஸ்பதி-இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு பிருகஸ்பதி-இன்பங்கள் ஒரு பிரஜாபதி இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

நூறு பிரஜாபதி-இன்பங்கள் ஒரு பிரம்ம-இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

இந்த இன்பங்கள் எல்லாம் ஏதோ இறந்த பின்னர் கிடைக்கும் மாயலோக இன்பங்கள் அல்ல. யோக நிலையை பயிற்சி செய்து யாரொருவன் அக உணர்வின் மூலம் ஆன்மாவை நெருங்குகிறானோ அவனது இன்பத்தின் அளவீடு அதிகரிக்கிறது.

அந்த ஆனந்தத்தை அவனே உணர்வான்!


- தைத்ரிய உபநிஷத்து.

No comments: