Showing posts with label ப்ராமணர்கள். Show all posts
Showing posts with label ப்ராமணர்கள். Show all posts

Wednesday, May 23, 2012

பைந்தமிழ் வளர்த்த ப்ராமணர்கள்!

அழிவில் இருந்த பழங்கால தமிழோலைச் சுவடிகளைத் தேடிப்பிடித்து அச்சிலேற்றி தமிழை வாழவைத்த தமிழ்த் தாத்தா உ. வெ. சுவாமிநாத அய்யர்!

ப்ராமணர்கள் தமிழர்களே கிடையாது, தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பொய்ப் ப்ரசாரங்களைப் பரப்பி தமிழ் வளர்த்த ப்ராமணர்கள் பற்றிய வரலாறுகளையே மறைத்துவிடுகின்றனர். ஆனால் தமிழ் வளர்த்த ப்ராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா! அதனால் இங்கே ஒரு சிறு பகிர்வு!

பைந்தமிழ் வளர்த்த ப்ராமணர்கள்!


சங்ககாலம்

1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார்
15. மார்க்கண்டேயனார்
16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
19. தாமப் பல்கண்ணனார்
20. குமட்டுர்க் கண்ணனார்

இடைக்காலம்

21. மாணிக்கவாசகர்
22. திருஞானசம்பந்தர்
23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
24. பெரியாழ்வார்
25. ஆண்டாள்
26. தொண்டரடிப்பொடியாழ்வார்
27. மதுரகவி
28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
29. பரிமேலழகர்
30. வில்லிபுத்தூரார்
31. அருணகிரிநாதர்
32. பிள்ளைப் பெருமாளையங்கார்
33. சிவாக்ரயோகி
34. காளமேகப் புலவர்

பிற்காலம்

35. பெருமாளையர்
36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
39. கோபாலகிருஷ்ண பாரதியார்
40. கனம் கிருஷ்ணையர்
41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
43. சண்பகமன்னார்
44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
47. சுப்ரமண்ய பாரதியார்
48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
49. சுப்பராமையர் (பதம்)
50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
51. ரா.ராகவையங்கார்
52. பகழிக் கூத்தார்
53. வென்றிமாலைக் கவிராயர்
54. வேம்பத்தூர் பிச்சுவையர்
55. கல்போது பிச்சுவையர்
56. நவநீதகிருஷ்ண பாரதியார்
57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
58. திரு, நாராயணசாமிஐயர்
59. மு.ராகவையங்கார்
60. திரு. நா.அப்பணையங்கார்
61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
62. கவிராஜ பண்டித கனகராஜையர்
63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
64. ம.கோபலகிருஷ்ணையர்
65. இவை.அனந்தராமையர்
66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
68. வ.வே.சு.ஐயர்
69. கி.வா.ஜகந்நாதையர்
70. அ.ஸ்ரீநிவாசராகவன்
71. ஸ்வாமி சாதுராம்
72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்.

 பாரதியார்!
(ப்ராமணர் என்பதாலேயே இவர் புகழை மறைத்தாலும் தமிழ் மூலம் உலகெங்கும் ஒலிக்கிறார், என்றும் ஒலிப்பார், ஒளிர்கிறார்)



Sunday, December 12, 2010

தமிழ் சினிமாவில் பிராமணர்கள் -4



அந்த நாள் அலுவலக நேரம். பேருந்திற்காக எல்லோரையும் போல காத்துக்கொண்டிருந்த காலை. பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்து புறப்பட தையாரானது. தூரத்திலிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பிராமணப் பெரியவர் அந்தப் பேருந்தில் ஏற ஓடி வந்தார். அதற்குள் பேருந்து நகர்ந்து விடவே 'நிறுத்துங்கோ! நிறுத்துங்கோ!' என்று கத்திக் கொண்டே அருகே வந்து அடித்துப் பிடித்து ஏறினார். ஐயோ பாவம் பெரியவருக்கு என்ன அவசரமோ என்று நான் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் 'கல கல' வென சிரிப்புச் சத்தம் கேட்டது. அருகாமையில் நின்றிருந்த கல்லூரி யுவதிகள் மூன்று பேர் குடுமி வைத்த அந்த பெரியவர் பேருந்தை நோக்கி நிறுத்துங்கோ! நிறுத்துங்கோ! என்று கூறி ஓடி வந்ததைப் பார்த்து பொத்துக் கொண்டு சிரித்தார்கள்.

அவர்கள் அந்தக் காட்சியை ஒரு நகைச்சுவை காட்சியைப் போல் பார்த்திருக்கிறார்கள். ப்ராமணப் பெரியவரின் அவஸ்தை இவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரனம் தமிழ் சினிமா. நடிகர் விவேக் முதல் பலதரப்பட்ட நடிகர்களும் குடுமி வைத்த ப்ராமணரைக் காட்டியே சிரிப்பு மூட்டி பழக்கப்படுத்தி விட்டதால் இந்த குடுமி வைத்த பிராமணரைப் பார்த்த உடன் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர் இந்த யுவதிகள். அவசரத்தின் அவஸ்தையில் ஓடும் ஒரு வயதானப் பெரியவர் என்ற பச்சாதாபம் கூட அவர்களிடம் உண்டாகவில்லை. என்ன அவசரத்தில் என்ன அவஸ்தையில் ஒரு பெரியவர் பேருந்து பிடிக்க ஓடியிருப்பாரோ என்கிற யோசனையையும் மீறி பிராமணப் பெரியவர் அவஸ்தைப் படுவது பொத்துக் கொண்டு சிரிப்பை வரவழைத்தது பிராமணர்களை தொடர்ந்து காமெடி பீஸுகளாகவே அடையாளப்படுத்தின் தமிழ் சினிமாவின் தாக்கம்.

சமீபத்தில் குரு சிஷ்யன் என்ற சத்தியராஜ் சுந்தர் சி நடித்த பட்த்தை பார்க்க நேர்ந்தது. படத்தில் ஒரு காட்சி வருகிறது. சுந்தர் சி சத்தியராஜை ஒரு விபச்சாரி வீட்டிற்கு விஷயத்தைச் சொல்லாமல் அழைத்துப் போகிறார். அங்கே ஷகிலா பல பெண்களை சத்தியராஜிடம் காட்டி விட்டு கடைசியாக திருநெல்வேலி அக்கிரஹாரத்து பொன்னு, இவ மகுடிக்கு மயங்காத ஆம்பளைங்களே கிடையாது என்று கூறி ஒரு பெண்ணை வரவைப்பதாகக் காட்சி. வருபவள் ஷ்பஷ்டமாக மடிசார் கட்டிக்கொண்டு வருகிறாள். “கேட்டேளோ இங்கே வரமாட்டேளோ அங்கே” என்ற பழையாடலின் ரீமிக்ஸில் அத்தனை பெண்களும் மடிசார் கட்டிக்கொண்டு ஆடுகிறார்கள்.

பிராமணப் பெண்கள் இன்று மடிசார் கட்டிக்கொண்டு இருக்கவில்லை தான்
(சில வைதீக பிராமணர் வீடுகளில் இன்றும் தினசரி மடிசார் உண்டு). ஆனால் மடிசார் என்றாலே ப்ராமணர்களின் உடை என்று சினிமாவினாலேயே அடையாளப்படுத்தி விட்டு அதே போன்று பெண்களை விபச்சாரிகளாகக் காட்டி ஆடவிடுவதும் ஒரு ஜாதியினரை அசிங்கப்படுத்தும் செயலாக சினிமாக் காரர்களுக்கு ஏன் தோன்றாமல் போகிறது?

சில மாதங்களுக்கு முன்பு வெளியான அங்காடித்தெரு திரைப்படத்தில் வயதிற்கு வந்த சின்னப்பெண்ணை ஒரு பிராமண மாமி நாய் கூண்டில் அடைத்து வைத்தது போன்ற காட்சிப்படுத்தல் வைத்திருந்தார்கள். 'நாங்க ரொம்ப ஆச்சாரமானவா, உன் தங்கச்சிய பின்னாடி வெச்சிருக்கேன் போய் கூட்டின்டு போ' என்று வசனம் பேசும் பிராமண மாமியையும் காட்டி இருப்பார்கள். நாய் கூண்டுக்குள் அடைத்து வைக்கும் அளவிற்கு கொடுமைக்காரியை சித்தரிக்க இவர்களுக்கு பிராமண சமூக பெண்கள் தான் கிடைத்ததா? எல்லா ஜாதியிலும் விதவிதமான கொடுமைக் காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவான ஜாதியில்லாத ஒரு கொடுமைக்கார பெண்ணை சித்தரித்திருக்க கூடாதா?




கொடுமைககரர்களை அம்பலப்படுத்தும் துணிவு மிக்க இந்த கனவான்கள் எந்த படத்திலாவது 'தலித்' மனிதன் வாயில் மலம் தினித்த ஜாதிக்காரர்களை அவர்கள் ஜாதீய அடையாளத்தை குறிப்பிட்டு காட்சிப்படுத்தி இருப்பார்களா? எங்கள் தெருவில் செருப்பு போட்டுக்கொண்டு கூட நீ நடக்ககூடாது என்று கூறும் ஜாதீய மனிதர்களை அவர்களின் ஜாதி அடையாளத்தோடு இவர்கள் காட்சிப்படுத்தி இருப்பார்களா? கீழ்விஷாரம், காயல்பட்டினம் போன்ற ஊர்களில் முஸ்லீம் பெரும்பான்மையினரால் இந்துக்கள் எப்படி அடிமைப்படுத்தப்பட்டு நடத்தப்படுகிறார்கள் என்பதை படமாக்கி இருப்பார்களா? அவற்றிர்கெல்லாம் துணிவு தான் இவர்களுக்கு இருக்கிறதா?

ஆனால் பிராமணர்கள் என்றாலே கொடுமைக்காரர்கள் என்கிற உணர்ச்சியை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தி அதன் மூலம் பிராமண காழ்புணர்ச்சியை தூண்டி விட்டு குளிர்காய எத்தனிக்கிறார்களே ஒழிய சமூகத்தின் நிஜமான கொடுமைகள் இவர்களால் வெளிக்கொண்டு வரப்படுவதில்லை.

இப்படி வெளியான இந்த அங்காடித்தெரு திரைப்படத்தின் வசனகர்த்தாவான திரு. ஜெயமோகனிடம் இது பற்றி வினவியபோது அவரது பதில் "நீங்கள் பிராமணராக உணரும் வரை அந்த அம்புகள் வந்து தைத்தபடியேதான் இருக்கும். இந்தப்புண்படுதல் சங்கதியை நீங்கள் கொஞ்சம் அடக்கிக்கொள்ளத்தான் வேண்டும்" என்பதுதான். (தொடர்புடைய சுட்டி) அதாவது பிராமணர்களை இப்படி மோசமாக காட்டாதீர்கள் எங்கள் மனம் புண்படுகிறது என்று கூறினால் அப்படித்தான் புண்படும். நீங்கள் அடக்கிகொள்ளுங்கள் என்கிறார்கள்.

'உத்தம புத்திரன்' பட விவகாரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, தனுஷ், மித்ரன் R ஜவகர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் அடங்கிய ‘உத்தமபுத்திரன்’ படக்குழுவினர், கௌண்டர்களை இழிவு படுத்தியதாக கூறப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக கூறியதோடு, தங்கள் வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

ஆனால் அப்படித்தான் செய்வோம், நீங்கள் அடக்கிகொள்ளுங்கள் என்ற பதிலை இந்த சினிமாக்காரர்களால் கௌண்டர்களிடம் ஏன் கூற முடியவில்லை? தேவர்களும் கௌண்டர்களும் புண்படும் போது அவர்களிடம் மன்னிப்பு கோர தயாராகும் திரையுலகம் ஏன் பிராமணர்களை மட்டும் எப்படி வேண்டுமானாலும் திரையில் காட்சிப்படுத்துகிறார்கள்?

இது போன்ற பல கேள்விகளை அடுக்கிய பின்னர் ஜெயமோகன் அவர்கள் ஒரு விஷயத்தை ஒத்துக்கொண்டார். அதாவது "அதேசமயம் தம்ழி சினிமாக்களில் பலர் பிராமணர்களை திட்டமிட்டே இழிவுசெய்கிறார்கள், பிறசாதிகளை அப்படிச்செய்ய துணிவதில்லை என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்" என்றார். (தொடர்புடைய சுட்டி) இந்தக் கருத்தை வெளிப்படையாக சொல்வதற்கு கூட பலர் தயங்கும் நிலையில் திரைத்துறையிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கும் ஜெயமோகன் எழுத்துக்களில் பார்ப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த ஒரு வரியாவது ஏதாவது ஒரு சினிமா கதாசிரியரையோ, இயக்குனரையோ அல்லது நடிகர்களையோ யோசிக்க வைத்தால் அதுவே பெரிய நிகழ்வாக இருக்கும்.

ஜாதியில்லாமல் சினிமா எடுத்தால் கதை கெட்டு விடும் என்பது மதிப்பிற்குரிய ஜெயமோகனின் கருத்தாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சமூகத்தில் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூச்சல் போடும் சினிமாக்காரர்களால் கேவலம் இரண்டரை மணிநேர சினிமாவை ஜாதி இல்லாமல் எடுக்க முடியாது என்று கூறுவது பொட்டைத்தனமான வாதம். 

பிராமண துவேஷிகளை அதிர வைத்த திரைப்படம் 'அந்நியன்'

இங்கே குறிப்பிடப்படப்பட வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அந்நியன் படம் வந்த போது 'பார்ப்பனத் திரைப்படத்தை பார்க்காதீர்கள்' என்று போஸ்டர் அடித்தே ஒட்டினார்கள் பிராமண துவேஷிகள். அதன் காரணம் பின்னால் தான் புரிந்தது. வழக்கமாக பிராமணர்களை காமெடிப்பீஸாகவும், ஆபாசமாகவும், கொடுமைக்காரர்களாகவும் மட்டுமே சித்தரித்து வெளிவரும் சினிமாக்களைப் பார்த்து பழகிப்போய் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்த பிராமண துவேஷிகள் நவீன கலத்தில் பிராமணனை சமூக அக்கரை உள்ளவனாகவும், இரக்கமுள்ளவனாகவும், நல்லவனாகவும் காட்டியது பொறுக்கவில்லை.

அவர்களால் தாங்கிகொள்ள முடியாத இன்னொரு முக்கியமான விஷயமும் இதில் இருக்கிறது. அதாவது பிராமணப் பெண் பிராமண ஆணையே கல்யாணம் செய்வதாக அந்தத் திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் வைத்து விட்டார்கள். இந்த அதிர்ச்சியை பிராமண துவேஷிகளால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஏதோ தாங்கள் மோசம் போய்விட்டதாக எண்ணினார்கள். அதெப்படி சினிமா விதிகளை மீறி ஒரு ப்ராமணப் பெண் பிராமண ஆணையே திருமணம் செய்ய முடியும். ஆகவே இது ஒரு பார்ப்பனத் திரைப்படம் என்று கூறி அதை பார்க்காதீர்கள் என்றும் போஸ்டர் அடித்து ஒட்டி விட்டார்கள். சினிமாவில் பிராமண துவேஷத்தை வியாபாரமாக்கியே தீருமளவிற்கு இருக்கும் இந்த நிலை இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் என்பது விடைதெரியாத கேள்வியாக இருக்கிறது.

பிராமணர்களுக்கு சங்கங்கள் இருந்தும் இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் போராடிக் கொண்டிருப்பதில்லை. அது நேரத்தை வீனடிக்கும் செயல் என்றும் அந்த நேரத்தில் நாம் உருப்பட ஏதாவது வழியைப்பார்க்கலாம் என்றும் இருந்து விடுகிறார்கள். இரண்டாவது இவர்களிடம் போராடி ஒன்றும் பிரயோஜனப்படாது என்கிற எண்ணமாகவும் இருக்கலாம். மூன்றாவது நாம் ஏதாவது போராடப்போய் இன்னும் அதிகமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரலாம் என்ற பயமும் காரணமாக இருக்கலாம். ஆனால் கேள்விகள் மட்டும் மனதில் எழாமல் இருப்பதில்லை.

தியேட்டருக்கு முன்னே போய் படத்தை ஓடவிடமாட்டோம் என்று போராடினால் பயப்படும் திரையுலகம் தூரத்தில் இருந்து கொண்டே இப்படிச் செய்ய வேண்டாமே என்று மெதுவாகக் கேட்டால் ஏறி மிதிப்பது ஏன்?

ஸ்ரீரங்கத் தெருவில் மறைந்த ராமசாமி நாயக்கரின் தோற்றம் கொண்ட உருக்கல்லை யாரோ சேதப்படுத்தினார்கள் என்பதற்காக சென்னை அயோத்தியா மண்டபத்தில் சென்னை அயோத்தியா மண்டப வாசலில் ஐம்பது பைசா லாபத்திற்கு பூனூல் விற்றுக்கொண்டிருந்த கிழவரை பிராமண துவேஷ காழ்ப்புணர்ச்சியால் வெட்டிப் போட்டது ஒரு கும்பல். எத்தனையோ பிராமணர்கள் உடன் பழகுபவர்களாலேயே தினந்தோறும் பரிகசிக்கப்பட்டு வருகிறார்கள். இது போன்ற சினிமாக்காரர்கள் பிராமண துவேஷ காட்சிப்படுத்தலை மிகைப்படுத்தி தொடர்ந்து காட்டுவதன் மூலம் ஏற்கனவே பிராமணர்கள் பற்றிய வெறுப்புணர்ச்சியை சைக்கோத்தனமாக வளர்த்துக்கொண்டவர்கள் இன்னும் ஆத்திரம் கொள்ள மாட்டார்களா? அப்படி காழ்புணர்வு தூண்டப்பட்ட பலர் இன்னும் பல பிராமணர்களை வெட்டி வீழ்த்த கிளம்பமாட்டார்களா? பிராமணப் பெண்களை மானபங்கம் செய்ய அலைய மாட்டார்களா? அதைத்தான் இந்த திரையுலகம் விரும்புகிறதா? (தொடர்புடைய சுட்டி)

அதே போல 'துரோகி' என்றொரு கேவலமான ப்ராமண துவேஷ படம்..அது பற்றி அடுத்த பதிவில்

தமிழ் சினிமாவில் இன்னும் எவ்வாறெல்லாம் பிராமணர்கள் கேலிக்குரியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதை தொடர்ந்து பார்ப்போம்...

தொடரும்.......

தமிழ் சினிமாவில் பிராமணர்கள் - 5