Showing posts with label brahmins. Show all posts
Showing posts with label brahmins. Show all posts

Sunday, October 21, 2012

பிராமணர்கள் மீதான ஜாதிக்கொடுமை!

நன்றி: சுதேசி

தமிழகத்தில் மட்டும் இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவு பிராமணர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருக்கின்றது. 

நாயுடு ஹால், உம்மிடி பங்காரு செட்டி & சன்ஸ், ஜெயின் பில்டர்ஸ், நல்லி குப்புசாமி செட்டி & சன்ஸ் , தேவர் & சன்ஸ், நாடார் & சன்ஸ், என்று ஜாதிப் பெயரில் இருக்கும் அத்தனை கடைகள் முன்பாகவும் ஏன் இவர்கள் ஆர்பாட்டம் செய்வதில்லை? பிராமணர்களிடம் மட்டும் தான் இவர்களால் வீரம் காட்ட முடியுமா? மற்ற ஜாதியினர் முன்பு நிற்க கூட திராணியற்ற தொடை நடுங்கி ஜென்மங்களா இவர்கள்?

சரி கிரிஸ்டியன் காலேஜ் என்று மத பெயருள்ள இந்த கல்லூரி முன்பாக இவர்கள் போராட தயாரா? பிரிவினையைத் தோற்றுவிக்கும் இந்த மதப் பெயரை அதன் பெயர்பலகையிலிருந்து கரி பூசி அகற்ற தயாராக இருப்பார்களா இந்த பிராமண எதிர்ப்பு வீரர்கள்? ஒரு வேளை ராமசாமி நாயக்கரின் கால் நக்கிகளுக்கு வேறு ஜாதிக்காரர்களின் கடைகளுக்கருகே போனாலே அவர்களது ஆண் தன்மை பரிபோய்விடுமோ என்னவோ?





ஆனால் ஏன் பிராமணர்களை மட்டும் தொடர்ந்து தாக்க வேண்டும்? தமிழகத்தில் பிராமணர்கள் மீதான ஜாதிக் கொடுமை 50 வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. ராமசாமி நாயக்கர் என்கிற கன்னடர் தமிழர்களிடையே உண்டாக்கிய பேதத்தின் விளைவால் தொடர்ந்து பிராமணர்கள் மீது மிக கொடூரமான இனதுவேஷம் நடந்து வருகிறது. மேலே காணப்படும் செய்தி அதற்கு சாட்சி. 

"நீ ஏன் ஜாதிப் பெயரை வைத்திருக்கிறாய்?" என்று யாரும் கேட்க முடியாது? காரணம் அந்தக் கேள்வி பிராமணர்களை மட்டுமே நோக்கி கேட்கப் படுகிறது என்பதால்! பிராமணர், ஐயர் என்றெல்லாம் பெயரைப் பார்த்த உடனே ஒரு வித இன வெறுப்பு கொப்பளித்துக் கொட்டப்படுவது தமிழகத்தில் கட்டற்ற முறையில் நடந்து வருகிறது என்றே சொலல் வேண்டும். இந்த மனோவியாதியிலிருந்து தமிழகம் விடுபடாமல் தொடர்ச்சியான சைக்கோ தனத்தில் அமிழ்ந்திருக்கிறது என்பதற்கு இன்னொரு சாட்சி.. ஜனனி ஐயர்!



தமிழகத்தைத் தவிற இந்தியாவில் மற்ற  அனைத்து மாநிலத்திலும் குடும்பப் பெயர் அல்லது தங்கள் ஜாதிப் பெயரை பெயருக்குப் பின்னல் வைத்துக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பெயரில் மட்டும் வைத்துக் கொள்ளக்கூடாது மற்ற விஷயங்கள் அனைத்திலும் எல்லோரும் ஜாதி வெறியோடு நடந்து கொள்ளலாம் என்கிற மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி 'ஐயர்' என்கிற பெயரை 'சர் நேமாக' வைத்துக் கொண்ட காரணத்திற்காக இயக்குனர் கரு பழனியப்பன் ஜனனி ஐயரை கண்டித்தாராம்.

ஒருவர் எப்படி பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பது அவரவர் தனிப்பட்ட உரிமையே, தவிர கரு பழனியப்பன், சொரி முனியப்பன், காரி உமிழப்பன் என்று தெருவில் போவோர் வருவோரெல்லாம் அவற்றில் தலையிட எந்த அடிப்படை உரிமையும் கிடையாது. அதைக் கண்டிக்க வேண்டிய அவசியமும் கிடையாது.


சரி அப்படியே திரு.கரு.பழனியப்பனார் இதைக் கண்டிக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம்..ஐஸ்வர்யா ராய், ஷ்ரேயா ரெட்டி, லக்ஷ்மி ராய், காஜல் அகர்வால், சோனியா அகர்வால், மேக்னா நாயுடு, நவ்யா நாயர், அனுஷ்கா ஷெட்டி, சமீரா ரெட்டி, காம்னா ஜெத்மலானி, லக்ஷ்மி மேனன் என்று பலர் ஜாதிப் பெயர்களை சர் நேம்களாகக் கொண்டு நடிக்கும் போதெல்லாம் எங்கே ஓடிப்போய் ஒளிந்து மறைந்திருந்தார் என்று தெரியவில்லை. ஆனால் பெயரில் 'ஐயர்' என்ற அடைமொழியைப் பார்த்த உடன் கரு பழனியப்பனுக்கு வீரம் பொங்கி வந்து விட்டது. உடனே அவர் பலரும் இருக்கும் மேடையில் ஜனனி 'ஐயரை' ஏதோ அவர் ஜாதி வெறி கொண்டவர் என்பது போல சித்தரித்து ஜாதி மோகத்தை கண்டித்தும் பேசி அவமானப்படுத்தி இருக்கிறார் இந்த வீரர். 

வேறு எந்த விதத்திலும் சக மனிதர்களை, நடிகர்களை, நடிகர்களை அவமதிக்க துணியாதவர்கள் 'ஐயர்' என்ற பெயர் கொண்ட ஒருவரைப் பார்த்த உடன் பலர் முன்னிலையில் அவமதிக்கத் துணிகின்றனர். இது பிராமணர்களுக்கு எதிராக அப்பட்டமாக நடக்கும் ஜாதிக் கொடுமை என்பது தவிற வேறில்லை.


சமீபத்தில் பாடகி சின்மயி, சிலர் தொடர்ந்து முக நூல் மற்றும் ட்விட்டரில் தரக்குறைவான முறையில் தன்னைப் பற்றி எழுதுவதாக புகார் தெரிவித்திருந்தார். அந்த அவரது முகநூல் பக்கங்களுக்குச் சென்று பார்க்கும் போதும் , அவருடன் உரையாடியவர்களையும் உரையாடிய விஷயம் மற்றும் முறைகளை பார்க்கும் போது தெளிவாக சின்மயி ஒரு பிராமணப் பெண் என்பதாலேயே தொடுக்கப் பட்ட இழிவான தொடர் தாக்குதலாக உணர முடிந்தது. இது குறித்து சின்மயியின் தாயார் ஒரு நீண்ட பதிவிட்டிருப்பதை சின்மயி தனது முக நூலில் சுட்டிக் காட்டி இருந்தார். பதிவு இங்கே

அப்பதிவில் மிகத் தெளிவாக எந்தளவிற்கு கீழ்தரமான தாக்குதல் இருந்தது என்பதையும் தெரியப்படுத்தி இருப்பதைப் பார்க்கும் போது ப்ராமணர்கள் மீதான ஜாதிக் கொடுமை இந்தளவிற்கு மோசமான வெறித்தனத்துடன் நடந்து வருவது தெளிவாக தெரியவருகிறது. ஆனால் இத்தகைய கேவலமான வார்த்தைகளைக் கொண்ட ஜாதிக் கொடுமை வேறு ஒருவருக்கு நடந்திருந்தால் இன்று சட்ட சபை விவாதமாகவே கூட ஆகியிருக்கலாம். ஆனால் கீழ்காணும் மிக மோசமான ஜாதித் தாக்குல் மிக வெளிப்படையாக பிராமணர்கள் மீது கேட்பாரில்லாமல் நடந்து வருவது மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கும் விஷயம்! கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கும் மேலாக தொடர் தாக்குதலை நடத்தி வந்திருப்பதாகக் கூறுகிறார்.

'பார்ப்பாரப் பெண்களை ரோட்ல இழுத்துப் போட்டு ரேப் பண்ணனும்' என்பதாக ஜாதியை வைத்து கொடுமையாக எழுதப்பட்டிருப்பதும், அதோடு நிற்காமல் "இந்த பாப்பார நாயிங்கள சங்கு சங்கா அறுத்து எறியனும் தல" என்றும் கொடுமையான வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது.

"Now came the first onslaught. The group that has been trolling Chinmayi for over a year now had a lively conversation of atmost perversion. ‘Karuthu SolraLamo? Modalla indha pappara’ ……’ roadla izhuthupottu rape pannonum’. Next one to give his valuable idea: adhoda ille indha pappara nayingala sangu sanga aruthu eriyanum thala ’ Even before this could subside the next was unleashed."

மிக மோசமான மன வக்கிரத்துடன் வெளிப்படுத்தப்பட்ட இந்த வாசகங்கள் ஒரு தருணம் வரும் போது அவ்வழியே செயல்படுத்தப்படமாட்டாது என்பது என்ன நிச்சயம்? பிரபலமான பாடகியே பிராமணராக இருந்ததால் இந்தளவுக்கு ஜாதிக் கொடுமையை அனுபவித்தார் என்றால் சாதாரண பிராமணர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் எந்தளவிற்கு இருக்கும். சின்மயி இதை காவல் துறைகு புகார் கொடுத்ததன் மூலமாக ஆவனப்படுத்தி இருக்கிறார். ஆனால் வேறு பிராமணர்கள் மீது நடத்தப்பட்ட வெளிவராத ஜாதிக் கொடுமைகள் எத்தனையோ? இன்னும் எத்தனை விதமான கொடுமைகளுக்கு மேற்கண்ட வக்கிரத்தைப் போல திட்டமிடப்படுமோ

இவ்வளவு மோசமான வகையில் வெளிப்படையாக தமிழகத்தில் ஜாதிக் கொடுமை பிராமணர்கள் மீது ஒரு சிலரால் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற முறையற்ற ஜாதிக் கொடுமையில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் கன்னட ராமசாமி நாயக்கரால் பிராமண எதிர்ப்பு என்கிற பிரிவினை வாதப் பேச்சால் மூளை சலவை செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள் அல்லது கம்யூனிச சித்தாந்தத்த சைக்கோக்களாக இருப்பார்கள். ஆனால் அதன் தாக்கம் பல்வேறு தரப்பு சக மனிதர்களிடமிருந்து வெவ்வேறு சூழ்நிலைகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. 

இதில் விசித்திரம் என்னவென்றால், இது போன்ற மனநோயாளிகள் ராஜபக்ஷேவைத் திட்டுவதை ஒரு ஃபேஷனாக செய்து வருவார்கள். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் இன துவேஷத்தை எதிர்த்து இங்கே மேடை போட்டு அல்லது இணைய வழியில் வீராவேசமாகப் பேசுவார்கள். ஆனால் அடுத்த நிமிடமே, ராஜபக்ஷே இலங்கையில் தமிழர்களுக்கெதிராக என்ன செய்தாரோ அதையே பிராமணர்களுக்கெதிராக தமிழகத்தில் செய்துவிட ஆயத்தமாகி விடுகிறார்கள். 

ஜாதிக் கொடுமை, இனரீதியான துவேஷம் போன்றவை எந்த மனிதக் குழுவிற்கு எதிராக நடந்தாலும் அது கண்டிக்கப் பட வேண்டியதே! 

ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை பிற ஜாதியினர் மீது நடத்தப்படும் உடல் மற்றும் மனோரீதியான தாக்குதல்களே ஜாதிக்கொடுமைகளாகவும், அதுவே பிராமணர்கள் மீது நடத்தப்பட்டால் அது பகுத்தறிவுப் புரட்சி போலவும் பார்க்கப்படுவது மோசமான ஜாதிக் கொடுமை!

பிராமணர்கள் மீதான இந்த மோசமான தொடர் ஜாதிக் கொடுமை கேட்பாரற்று நீண்டு கொண்டே போவதைப் பார்க்கும் போது, தமிழகத்து ராஜபக்ஷேக்களால் இங்கொரு முள்ளிவாய்க்கால் உருவாக்கப்படுமோ என்கிற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது!!

பிராமணர்களை இழிவு செய்யும் முகமாக 'பார்ப்பான் பாப்பாத்தி' என்று விளிப்பதை தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்! கீழே ஒருவன் அப்படி விளிப்பதில் இருக்கும் ஜாதிக் கொடுமை வன்மத்தைப் பாருங்கள்..!

Wednesday, May 23, 2012

பைந்தமிழ் வளர்த்த ப்ராமணர்கள்!

அழிவில் இருந்த பழங்கால தமிழோலைச் சுவடிகளைத் தேடிப்பிடித்து அச்சிலேற்றி தமிழை வாழவைத்த தமிழ்த் தாத்தா உ. வெ. சுவாமிநாத அய்யர்!

ப்ராமணர்கள் தமிழர்களே கிடையாது, தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பொய்ப் ப்ரசாரங்களைப் பரப்பி தமிழ் வளர்த்த ப்ராமணர்கள் பற்றிய வரலாறுகளையே மறைத்துவிடுகின்றனர். ஆனால் தமிழ் வளர்த்த ப்ராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா! அதனால் இங்கே ஒரு சிறு பகிர்வு!

பைந்தமிழ் வளர்த்த ப்ராமணர்கள்!


சங்ககாலம்

1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார்
15. மார்க்கண்டேயனார்
16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
19. தாமப் பல்கண்ணனார்
20. குமட்டுர்க் கண்ணனார்

இடைக்காலம்

21. மாணிக்கவாசகர்
22. திருஞானசம்பந்தர்
23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
24. பெரியாழ்வார்
25. ஆண்டாள்
26. தொண்டரடிப்பொடியாழ்வார்
27. மதுரகவி
28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
29. பரிமேலழகர்
30. வில்லிபுத்தூரார்
31. அருணகிரிநாதர்
32. பிள்ளைப் பெருமாளையங்கார்
33. சிவாக்ரயோகி
34. காளமேகப் புலவர்

பிற்காலம்

35. பெருமாளையர்
36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
39. கோபாலகிருஷ்ண பாரதியார்
40. கனம் கிருஷ்ணையர்
41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
43. சண்பகமன்னார்
44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
47. சுப்ரமண்ய பாரதியார்
48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
49. சுப்பராமையர் (பதம்)
50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
51. ரா.ராகவையங்கார்
52. பகழிக் கூத்தார்
53. வென்றிமாலைக் கவிராயர்
54. வேம்பத்தூர் பிச்சுவையர்
55. கல்போது பிச்சுவையர்
56. நவநீதகிருஷ்ண பாரதியார்
57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
58. திரு, நாராயணசாமிஐயர்
59. மு.ராகவையங்கார்
60. திரு. நா.அப்பணையங்கார்
61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
62. கவிராஜ பண்டித கனகராஜையர்
63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
64. ம.கோபலகிருஷ்ணையர்
65. இவை.அனந்தராமையர்
66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
68. வ.வே.சு.ஐயர்
69. கி.வா.ஜகந்நாதையர்
70. அ.ஸ்ரீநிவாசராகவன்
71. ஸ்வாமி சாதுராம்
72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்.

 பாரதியார்!
(ப்ராமணர் என்பதாலேயே இவர் புகழை மறைத்தாலும் தமிழ் மூலம் உலகெங்கும் ஒலிக்கிறார், என்றும் ஒலிப்பார், ஒளிர்கிறார்)



Saturday, April 9, 2011

குரல்வளை நெறிபடும் பிராமணர்கள்!




குரல்வளை நெறிபடுவது பொறுக்காமல் ஓலமிடும் இன்னொருவர் இந்த தளத்தில் எழுதியது :

தேசிய மொழியில் அப்படியே!


Tamil Brahmins: Lost in Tamil Nadu.
by G. Venkatesh

Years ago, well-known Tamil actor and political satirist Mr Cho Ramaswamy had remarked tongue firmly in cheek – "Tamil Brahmins are people who fight with each other, degrade themselves and paint the entire community in shades of dark." If you look at the events (in literary and movie circles in Tamil Nadu and the political climate), you will realise that Mr Ramaswamy was absolutely right then, he is right even now.

We talk about Kashmiri Pandits becoming strangers in Jammu and Kashmir. The Tamil Brahmins find themselves alienated in their own land. With more than 75% of the younger generation of Tamil Brahmins having moved to foreign land in pursuit of job / education and others scattered across different parts of India, it is an easy guess that population of Tamil Brahmins in Tamil Nadu is steadily waning. The increasing trend of inter-caste marriages is a further threat.

Let us look at how some of the Tamil Brahmins have defiled themselves:

Well known Tamil actor Kamal Hasan leads the pack. At every opportunity, he has prided in calling himself an agnostic, but unfortunately the actor has never shied away from depicting Hindu Gods and Brahmins in poor light in his movies. See the irony of the situation..In the movie "Mahanadi", Kamalhasan is shown visiting the temple and a song plays in the background – "Sri Ranga Ranganathanin padam vandanam solladi" (Bow before the Lotus feet of Lord Ranganatha!)

In most Kamal Hasan movies, the lady with the 9-yard saree is a caricature, (Example, in one of his movies, an old lady in a 9-yard saree is shown stealing; in his movie Avvai Shanmughi (the Tamil version of "Chachi 420"), he has shown how the lady in the nine-yard saree unabashedly flaunts her assets and entices men to lust after her.)

No one has made mockery of the language used by Brahmins like Kamal Hasan has. His nieces Suhasini Manirathnam and Anu Haasan are not far behind. They consider themselves so progressive that Anu Hasan models for eggs, chicken masala, anything that is considered taboo in a Brahmin society.

In the name of exposing age-old traditions in Tamil Brahmin community that were regressive, well-known Tamil novelist Sivasankari ended up projecting Tamil Brahmins in poor light in some of her novels. She, along with another novelist called Indumathi, wrote a Tamil novel called "Irandu Per" (Two persons) where a bored Brahmin wife is sexually attracted to a photographer (shades of the Bengali movie Paroma perhaps ?).

K Balachander of course gets the credit as the director for showing Tamil Brahmins in poor light in the maximum number of Tamil movies and one Hindi movie (Ek Duje Ke Liye, which incidentally featured Kamal Haasan). Remember the hero's father in Ek Duje Ke Liye who carps endlessly ?

In "Arangetram" (1974), Balachander had the gall to compare a Tamil Brahmin girl's rape with the first dance recital of a Bharat Natyam student. "Arangetram" is the debut on-stage performance of a "Bharat Natyam" student.

When it was released, "Arangetram" raised the hackles in Tamil Nadu.The movie was a super hit. However, K balachander failed to recreate the magic in Hindi (the movie "Aaina" featuring Rajesh Khanna and Mumtaz).

In "Arangetram", the protagonist is the eldest of eight siblings. (Kamal haasan is one of them). The protagonist questions her mother as to why she has not adopted methods of family planning and is privy to her mother secretly moving to the kitchen to satiate her husband's lust. Such a screen play was written by K Balachander in the name of realism. Worse, after her rape, the protagonist decides to become a prostitute to support her family. In the end, her siblings turn out to be ungrateful and the protagonist loses her sanity.

By the way, I am a great fan of Mr K Balachander but find some of his views discordant and more extremist than rational.

K Balachander's daughter married outside the community so may be Balachander was disillusioned with the Brahmin community as a whole and so he chose to depict such scenes on screen that portrayed Tamil Brahmins in poor light.

A movie called "Savithri" was released in the mid 80s and then banned. This movie shows a young Brahmin wife (in nine yards) who is forced to marry a man who is much older than her. The protagonist leads a platonic life with her husband, gets frustrated and in the bargain is seduced by an artist who visits the village. In the end, she commits suicide.

There was another movie called "Agraharathil kazhuthai" ("A donkey in Brahmin lane") by director John which I believe won a few awards.

The late writer Anuradha Ramanan wrote a story called "Chirai" (Prison) in which a Brahmin wife deserted by her husband after being raped by a Catholic man goes and lives with the Catholic man. When the latter dies, she removes her mangal sutra and leads the rest of her life as the latter's widow. Progressive thought yes, but why Anuradha chose to show the protagonist as a Brahmin inspite of the fact that so many other communities exist in Tamil Nadu is anyone's guess. Of course, Anuradha Ramanan was a hardcore Tamil Brahmin.

I believe Anuradha went one step ahead and portrayed the wife of a Tamil priest as succumbing to the lecherous glances of another person in her novel " Kootu puzhukkal" (Worms living in groups).

Then you had well known writer Sujatha (Rangarajan) who began writing a serial story in the Tamil Magazine "Kumudam" in the 80s. The story titled as "Black Red White" was centered on the 1857 revolution. Sujatha, in his inimitable style, peppered the story with liberal doses of sex; he made the colossal mistake of naming one of the characters in the novel after one of the non-Brahmin communities in Tamil Nadu. 

Within two weeks, Sujatha (who lived in Bangalore at that time) received death threats and phone calls that his hands would be chopped off. Copies of the magazines were burnt by the said community with the threat that if publication of the serial continued, the editorial office would be burnt to ashes. 

The serial was stopped abruptly. The magazine and the writer profusely apologised for hurting the sentiments of the community. Much later, Sujatha rewrote the novel as "Rattam Orey Niram" (Blood is of the same colour).

One more Tamil Brahmin who wrote under the pseudonym "Hema Anandatheerthan" wrote such vulgar novels which were pure pulp fiction. His protagonists were mostly Brahmin girls who lusted after men. 
Thus, three factors contributed to degradation of Tamil Brahmins in Tamil Nadu.

• Negative influence of movies
• Negative influence of Tamil literature
• The Dravidian rule in Tamil Nadu

Ask any like-minded Tamil Brahmin settled abroad or settled in other parts of India, whether he would like to relocate to Chennai. The answer would be a strict no. Chennai auto drivers are notorious but they are particularly harsh on Tamil Brahmins. Some of my cousins who studied in Chennai have shared anecdotes of how they were ragged for speaking the Brahmin language.

A Malayalee will always support a Malayalee, but a Tamil Brahmin, will always work against other Brahmins. The people whom I have mentioned in the above paragraphs are classic examples. The net result of all these is that Tamil Brahmins are slowly losing their identity in Tamil Nadu.

2010. A village in Tamil Nadu. A street that houses Brahmins called as "Agraharam". Unlike the past, where "Agraharam" was symbolic of "Brahmins", today the "Agraharm" is a mere prop. Not a single house in the "Agraharam" belongs to a Brahmin.

2050. A child born to Tamil Brahmin parents asks his mother, `Mother, what is an agraharam?". The distraught mother promises her child that she will rather take him to the exhibition/ museum, as she herself is unable to answer the question.





.

Sunday, December 19, 2010

தமிழ் சினிமாவில் பிராமணர்கள் - 5



சமீபத்தில் காவல் துறையினர் தீவிர வாதிகள் ஊருக்குள் புகுந்தால் எப்படி நடவடிக்கை எடுப்பது என்று நடித்துப் பார்த்து பயிற்சி எடுத்துக் கொண்டனர். அதில் தீவிரவாதிகள் போல நடித்த சக போலீஸ்காரர்கள் தாடி வைத்திருந்தார்கள். உடனே முஸ்லீகள் எல்லோரும் ஒன்று கூடி தீவிரவாதியை முஸ்லீம் போல சித்தரித்து விட்டீர்கள் என்று தர்ணா நடத்தினாகள். காவல் துறையினர் தேச துரோகம் குற்றம் புரிந்து விட்டதைப் போல விழுந்தடித்து வந்து முஸ்லீம்களிடம் சமரசம் பேசி மன்னிப்பும் கோரினார்கள். இங்கே ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அங்காடித் தெரு படத்தில் ஏன் பிராமண பெண் கொடுமைக்காரியாக காட்டுகிறீர்கள் என்று கேட்டதற்கு வசனகர்த்தா ஜெயமோகன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.. "அங்காடித்தெரு எங்கே ’பிராமணர்களை’ காட்டுகிறது? ஒரு பிராமணப்பெண்ணை காட்டுகிறது. உங்கள் வாதம் சரி என்றால் ஒரே ஒரு பிராமணர்கூட அப்படி இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி நம்பும் மனக்கோளாறு உங்களுக்கு இருக்கலாம். நான் ஏன் அதை ஏற்கவேண்டும்?" என்று கூறுகிறார். தொடர்புடைய சுட்டி!


ஆக ஒரே ஒரு பிராமணப் பெண் கொடுமைகாரியாக இருந்தால் கூட பிராமணப் பெண்கள் எல்லோருமே அப்படித்தான் என்று அடையாளப்படுத்தும் அளவிற்கு சினிமாவில் அதைப் பெரிதுபடுத்திக் காண்பிப்பார்களாம். அப்படியெனில் தமிழ் சினிமாவில் முஸ்லீம் ஒருவனை தீவிரவாதியாக காண்பிப்பதை முஸ்லீம்கள் எதிர்க்கிறார்கள். அவர்களிடம் ஒரே ஒரு முஸ்லீம் தீவிரவாதியாக இருந்தால் கூட நாங்கள் முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரித்து படம் எடுப்பேன் என்று திமிரோடு கூறுவதற்கு இவர்களால் முடியுமா?

இவ்வளவுக்கும் சமீபத்திய வாரனாசி குண்டு வெடிப்பு நிகழ்த்தியது முஸ்லீம் அமைப்பு தானே? அதைச் செய்தது நாங்கள் தான் என இந்தியன் முஜாகிதீன் என்ற அமைப்பு பொறுப் பேற்றதையும் செய்திகள் கூறுகின்றனவே! அதனால் நாங்கள் தீவிரவாதி கதாபாத்திரம் என்றாலே முஸ்லீம் பெயருள்ள தாடி வைத்த தலையில் தொப்பி அணிந்த ஒரு முஸ்லீமாகவே காட்டுவேன் என்று இவர்கள் கூறமுடியுமா? முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது காவல் துறையே மன்னிப்பு கேட்கிறது. சினிமாக்காரர்கள் காலிலேயே கூட விழுவார்கள்.

முஸ்லீம் பெண்ணை கதாநாயகியாக சித்தரித்து பம்பாய் என்ற படம் எடுத்ததற்காக மணிரத்தை கொலை செய்ய குண்டு விச்சப்பட்டது. அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் முஸ்லீம் பெண்ணை கதாநாயகியாக சித்தரித்து ஒரு திரைப்படமும் வரவில்லை என்பதை கவனித்தாலே இந்த பயந்தாங்கொல்லி வீரர்கள் பற்றி புரிந்து கொள்ளலாம். பத்து சினிமாக்களில் எட்டு சினிமாக்கள் பிராமணப் பெண்ணையே கதாநாயகியாகச் சித்தரித்து படம் எடுப்பதில் மட்டும் இவர்கள் சலிப்பதே இல்லை. பிராமணர்களை மட்டும் எப்படி வேண்டுமானாலும் காட்டி விட்டு ஒருத்தர் கூட உங்களில் அப்படி இல்லையா?
என்று எதிர் கேள்வி கேட்பார்களாம். என்ன நியாயம்?






துரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, "போடா துரோகி, சொம்பை, சப்பை" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.

மனநலம் பாதிக்கப்பட்ட சைக்கோக்கள் குறிப்பிட்ட ஒருவரை நேரடியாக தாக்க முடியாத போது அவரது உருவத்தை வரைந்து அதன் மீது கத்தியால் குத்துவார்கள். இன்னும் என்னென்ன செய்ய முடியுமோ அது போல வக்கிரமாக அந்த உருவகத்தின் மீது செய்து பார்த்து தங்கள் வக்கிரத்தைத் தீர்த்துக்கொள்வார்கள். அது போல பிராமண காழ்ப்பு கொண்ட தமிழக சைக்கோக்கள் சினிமாவில் பல்கிப்பெருகி இருக்கிறார்கள் என்பதற்கு இது போன்ற படங்களே சாட்சி! பிராமணர்கள் மீது தனக்கு இருக்கும் சொந்த காழ்ப்புணர்ச்சியை திரைக்கதை என்ற பெயரில் காட்சிப்படுத்தி அந்த உருவகத்தை கேவலமாக வசனம் என்ற பெயரில் வசைபாடி மகிழ்கிறது இந்த சினிமாக்கூட்டம்.

இதே துரோகி என்ற படத்தில் இன்னொரு காட்சியில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில், பிராமணர் தனது மனைவியை கதாநாயகனின் ஆசைப்படி அவருக்கு வழங்க ஒத்துக்கொள்வது போல கேவலமான காட்சிப்படுத்தலும் இருந்தது. அந்த காட்சி என்னமோ வேறு ஒரு காரணத்திற்காக கதாநாயகன் பேசுவது போலத்தான் இருக்கும். ஆனால் காட்சிப்படுத்தலின் போது இருக்கும் இரட்டை அர்த்தம் ஏறக்குறைய கூட்டிகொடுக்க சம்மதிக்கும் பிராமணரை சித்தரிப்பது போன்ற பார்க்க சகிக்காத ஆபாசக் காட்சியாகவே காட்டி இருப்பார்கள்.

இவ்வாறு பிராமணர்களை காட்சிப்படுத்துவது பிராமனர்கள் பற்றிய மிகவும் கொச்சையான ஆழ்மன வக்கிரம் தான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அந்த வக்கிர புத்தியை வெளிப்படுத்துகிறார்கள். பிராமணப் பெண்களை எப்படியாவது பெண்டாட வேண்டும் என்கிற பொறுக்கித்தனமான கற்பழிப்பு புத்தி என்றே இதனை எடுத்துக் கொள்ள முடியும். தமிழ் சினிமாவில் கதாநாயகியரை எல்லாம் பிராமண கதாபாத்திரமாகவே காட்டுவதும் இப்படிப்பட்ட வக்கிர புத்தியின் வெளிப்பாடாகவே பார்க்கமுடிகிறது.

இங்கே இன்னொரு பரிமானத்தை நாம் கவனிக்க வேண்டும். ஒரு இனத்தை அடியோடு அழிக்க வேண்டுமெனில் அந்த இனப்பெண்களின் கருப்பைகளைப் கைப்பற்ற வேண்டும் என்பது இன அழிப்பு யுக்தி. தமிழகத்தைப் பொறுத்தவரை பிராமண இனத்தை அடியோடு அழிக்க அந்த இனப்பெண்களின் ஆழ்மனதில் வேறு ஜாதிக்காரன் தான் உனது ஹீரோ என்பதை நிலை நிறுத்திவிட்டால் - அப்பெண்களின் கருப்பைகளை கைப்பற்றி விட்டால் இனி அடுத்த சந்ததி அந்த இனத்திற்கு துளிர்க்க வாய்ப்பே இல்லை என்னும் மிகப்பெரிய திட்டமிடலும் வக்கிரமான அழிப்பு குணமும் இதன் பின்னால் ஆழமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் பத்திற்கு எட்டு படங்கள் பிராமண கதாநாயகிராகவே சித்தரித்து அவர்கள் கண்டிப்பாக வேறு ஜாதிக்காரனைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்கிற நியதியை காட்சிப்படுத்தலும் கருப்பையை கைப்பற்றத்துடிக்கும் இந்த இன அழிப்பு நோக்கமே ஆகும்.

மேலோட்டமாகப் பார்த்தால் இது வெறும் கற்பனை காட்சிப்படுத்தல் தானே என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அருவெறுக்கத்தக்க இன துவேஷமும் ஆழமான இன அழிப்புச் செயல்களும் கங்கனம் கட்டி நடத்தப்படுகிறது என்று சாதாரன பிராமணனுக்குத் தெரியாது. தங்களை முற்போக்கு பிராமணனாக காட்டிக் கொள்பவனுக்கு இது புரியாது. பிராமணர் அல்லாதவர்களுக்கு அப்படி ஒன்று நடப்பதாகவே உணர முடியாது.





இப்படி பிராமணர்களை மிகவும் கேவலமான வக்கிரங்களுடன் பார்ப்பதும் அவரவர் பார்வைக்குத்தகுந்தாற்போல் படமாக்கி தங்கள் கீழ்தரமான ஆழ்மன வக்கிரங்களை பிராமண காட்சிப்படுத்தல் மூலம் வெளிப்படுத்துவதும் இன்றைக்கு தமிழ் சினிமாவில் சகிக்க முடியாத அளவிற்கு பெருகியிருக்கிறது என்றால் மிகையாகாது.

இந்த சூழலில் சமீபத்திய இன்னொரு செய்தி பற்றி படிக்கும் போது சினிமாக்காரர்களின் ஜாதீய வெறி பிராமணர்களுக்கெதிரான கீழ்தரமான காழ்புணர்ச்சி வெட்டவெளிச்சமாக வெளிப்பட்டது.

இது செய்தி

"உத்தம புத்திரன் விவகாரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, தனுஷ், மித்ரன் R ஜவகர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் அடங்கிய ‘உத்தமபுத்திரன்’ படக்குழுவினர், சர்சைக்குள்ளான காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக கூறியதோடு, தங்கள் வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டனர். கௌண்டர் சமூகத்தாரை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகளையும், வசனங்களையும் நீக்க வேண்டும் என கொங்குநாடு முன்னேற்ற கழகத்தினர்
போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, படத்தை தடை செய்யும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதாக நாம் முன்பே செய்தி அளித்திருந்தோம். சேலம், கோவை, திருச்சி, கரூர் உள்ளிட்ட இடங்களில் 80ற்கும் மேற்பட்ட இடங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது".
இந்த கேவலமான ஜாதி காழ்ப்புணர்ச்சி கொண்ட சினிமா வியாபாரிகளிடம் சில கேள்விகள் கௌண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது படக்காட்சிகளை நீக்கி அவர்களிடம் மன்னிப்பும் கோரும் திரையுலகம், முஸ்லீம் கதாபாத்திரத்தை நெகட்டிவாக படமாக்ககூட பயப்படும் திரையுலகம் ஏன் பிராமணர்களை மட்டும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலமாகவும் கேலியாகவும் காட்ட முற்படுகிறார்கள்?

பிராமண பாலச்சந்தராலேயே தொடங்கி வைக்கப்பட்ட இந்த கேவலமான காரியத்தை ஒரு மனிதாபிமானத்திற்கு கூட ஏன் சினிமாக்காரர்கள் இன்று வரை நிறுத்த மறுக்கிறார்கள்?

பிராமணர்களை சித்தரித்தே நாம் ஏன் கதை அமைக்க வேண்டும் என்றும் அதை விட்டுவிடலாமே என்றும் ஏன் ஒரு சினிமாக்காரருக்கு கூட தோன்றமாட்டேன் என்கிறது?

ஒரு நடிகை நீதிமன்றத்திற்கு பர்தா அனிந்து வந்ததையே முஸ்லீம்களின் உடை என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லீம்களின் பேச்சை சாடாத அரசியல் வாதிகள் சினிமாக்காரர்கள் ஏன் மடிசார் பிராமணர்களின் உடை அதை அணிந்து ஏன் ஆபாசமாக நடிக்கிறீர்கள் என்று கேட்டால் மட்டும் உன் முப்பாட்டனை பழிவாங்கவே அவ்வாறு செய்கிறேன் என்று எகத்தாளமாக பேசுவது ஏன்?





இதே ஜவஹர் இயக்கி தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தில் பிராமண கதாபாத்திரத்தை எவ்வளவு சுதந்திரமாக பயன்படுத்தினார்கள். எல்லா பிராமண மாமிகளும் ஒரு டாட்டா சுமோவில் தனுஷை அமுக்கி அவன் மீது லஜ்ஜையே இல்லாமல் விழுந்து விழுந்து பிரயாணிப்பது போல காட்டினார்களே அப்போது ஏன் இவர்களுக்கு தான் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை மிகவும் அபத்தமாக காண்பிக்கிறோமே என்று தோன்றவில்லை? ஜவஹர் வீட்டுப் பெண்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி இப்படி குடும்பத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு ஆண்மகனோடு மேலே விழுந்து ஒட்டி உரசி வண்டியில் ஒன்றாகச் செல்வார்களா? தன் குலப் பெண்களைப் பற்றி அவ்வாறு நினைக்க முடியாத ஒருவர் மற்ற குலப்பெண்கள் இப்படி நடந்து கொள்வார்கள் என்று நினைப்பது ஆழ்மன வக்கிரத்தின் வெளிப்பாடில்லையா?

சீந்திப்பீர்களா சினிமாக்காரர்களே...? சிந்திப்பீர்களா?

தமிழ் சினிமாவில் இன்னும் எவ்வாறெல்லாம் பிராமணர்கள் கேலிக்குரியவர்களாக கேவலமாகவும் காட்சிப்படுத்தப்படுகிறார்கள் என்பதை தொடர்ந்து பார்ப்போம்...

தொடரும்....




Sunday, December 12, 2010

தமிழ் சினிமாவில் பிராமணர்கள் -4



அந்த நாள் அலுவலக நேரம். பேருந்திற்காக எல்லோரையும் போல காத்துக்கொண்டிருந்த காலை. பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்து புறப்பட தையாரானது. தூரத்திலிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பிராமணப் பெரியவர் அந்தப் பேருந்தில் ஏற ஓடி வந்தார். அதற்குள் பேருந்து நகர்ந்து விடவே 'நிறுத்துங்கோ! நிறுத்துங்கோ!' என்று கத்திக் கொண்டே அருகே வந்து அடித்துப் பிடித்து ஏறினார். ஐயோ பாவம் பெரியவருக்கு என்ன அவசரமோ என்று நான் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் 'கல கல' வென சிரிப்புச் சத்தம் கேட்டது. அருகாமையில் நின்றிருந்த கல்லூரி யுவதிகள் மூன்று பேர் குடுமி வைத்த அந்த பெரியவர் பேருந்தை நோக்கி நிறுத்துங்கோ! நிறுத்துங்கோ! என்று கூறி ஓடி வந்ததைப் பார்த்து பொத்துக் கொண்டு சிரித்தார்கள்.

அவர்கள் அந்தக் காட்சியை ஒரு நகைச்சுவை காட்சியைப் போல் பார்த்திருக்கிறார்கள். ப்ராமணப் பெரியவரின் அவஸ்தை இவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரனம் தமிழ் சினிமா. நடிகர் விவேக் முதல் பலதரப்பட்ட நடிகர்களும் குடுமி வைத்த ப்ராமணரைக் காட்டியே சிரிப்பு மூட்டி பழக்கப்படுத்தி விட்டதால் இந்த குடுமி வைத்த பிராமணரைப் பார்த்த உடன் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர் இந்த யுவதிகள். அவசரத்தின் அவஸ்தையில் ஓடும் ஒரு வயதானப் பெரியவர் என்ற பச்சாதாபம் கூட அவர்களிடம் உண்டாகவில்லை. என்ன அவசரத்தில் என்ன அவஸ்தையில் ஒரு பெரியவர் பேருந்து பிடிக்க ஓடியிருப்பாரோ என்கிற யோசனையையும் மீறி பிராமணப் பெரியவர் அவஸ்தைப் படுவது பொத்துக் கொண்டு சிரிப்பை வரவழைத்தது பிராமணர்களை தொடர்ந்து காமெடி பீஸுகளாகவே அடையாளப்படுத்தின் தமிழ் சினிமாவின் தாக்கம்.

சமீபத்தில் குரு சிஷ்யன் என்ற சத்தியராஜ் சுந்தர் சி நடித்த பட்த்தை பார்க்க நேர்ந்தது. படத்தில் ஒரு காட்சி வருகிறது. சுந்தர் சி சத்தியராஜை ஒரு விபச்சாரி வீட்டிற்கு விஷயத்தைச் சொல்லாமல் அழைத்துப் போகிறார். அங்கே ஷகிலா பல பெண்களை சத்தியராஜிடம் காட்டி விட்டு கடைசியாக திருநெல்வேலி அக்கிரஹாரத்து பொன்னு, இவ மகுடிக்கு மயங்காத ஆம்பளைங்களே கிடையாது என்று கூறி ஒரு பெண்ணை வரவைப்பதாகக் காட்சி. வருபவள் ஷ்பஷ்டமாக மடிசார் கட்டிக்கொண்டு வருகிறாள். “கேட்டேளோ இங்கே வரமாட்டேளோ அங்கே” என்ற பழையாடலின் ரீமிக்ஸில் அத்தனை பெண்களும் மடிசார் கட்டிக்கொண்டு ஆடுகிறார்கள்.

பிராமணப் பெண்கள் இன்று மடிசார் கட்டிக்கொண்டு இருக்கவில்லை தான்
(சில வைதீக பிராமணர் வீடுகளில் இன்றும் தினசரி மடிசார் உண்டு). ஆனால் மடிசார் என்றாலே ப்ராமணர்களின் உடை என்று சினிமாவினாலேயே அடையாளப்படுத்தி விட்டு அதே போன்று பெண்களை விபச்சாரிகளாகக் காட்டி ஆடவிடுவதும் ஒரு ஜாதியினரை அசிங்கப்படுத்தும் செயலாக சினிமாக் காரர்களுக்கு ஏன் தோன்றாமல் போகிறது?

சில மாதங்களுக்கு முன்பு வெளியான அங்காடித்தெரு திரைப்படத்தில் வயதிற்கு வந்த சின்னப்பெண்ணை ஒரு பிராமண மாமி நாய் கூண்டில் அடைத்து வைத்தது போன்ற காட்சிப்படுத்தல் வைத்திருந்தார்கள். 'நாங்க ரொம்ப ஆச்சாரமானவா, உன் தங்கச்சிய பின்னாடி வெச்சிருக்கேன் போய் கூட்டின்டு போ' என்று வசனம் பேசும் பிராமண மாமியையும் காட்டி இருப்பார்கள். நாய் கூண்டுக்குள் அடைத்து வைக்கும் அளவிற்கு கொடுமைக்காரியை சித்தரிக்க இவர்களுக்கு பிராமண சமூக பெண்கள் தான் கிடைத்ததா? எல்லா ஜாதியிலும் விதவிதமான கொடுமைக் காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவான ஜாதியில்லாத ஒரு கொடுமைக்கார பெண்ணை சித்தரித்திருக்க கூடாதா?




கொடுமைககரர்களை அம்பலப்படுத்தும் துணிவு மிக்க இந்த கனவான்கள் எந்த படத்திலாவது 'தலித்' மனிதன் வாயில் மலம் தினித்த ஜாதிக்காரர்களை அவர்கள் ஜாதீய அடையாளத்தை குறிப்பிட்டு காட்சிப்படுத்தி இருப்பார்களா? எங்கள் தெருவில் செருப்பு போட்டுக்கொண்டு கூட நீ நடக்ககூடாது என்று கூறும் ஜாதீய மனிதர்களை அவர்களின் ஜாதி அடையாளத்தோடு இவர்கள் காட்சிப்படுத்தி இருப்பார்களா? கீழ்விஷாரம், காயல்பட்டினம் போன்ற ஊர்களில் முஸ்லீம் பெரும்பான்மையினரால் இந்துக்கள் எப்படி அடிமைப்படுத்தப்பட்டு நடத்தப்படுகிறார்கள் என்பதை படமாக்கி இருப்பார்களா? அவற்றிர்கெல்லாம் துணிவு தான் இவர்களுக்கு இருக்கிறதா?

ஆனால் பிராமணர்கள் என்றாலே கொடுமைக்காரர்கள் என்கிற உணர்ச்சியை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தி அதன் மூலம் பிராமண காழ்புணர்ச்சியை தூண்டி விட்டு குளிர்காய எத்தனிக்கிறார்களே ஒழிய சமூகத்தின் நிஜமான கொடுமைகள் இவர்களால் வெளிக்கொண்டு வரப்படுவதில்லை.

இப்படி வெளியான இந்த அங்காடித்தெரு திரைப்படத்தின் வசனகர்த்தாவான திரு. ஜெயமோகனிடம் இது பற்றி வினவியபோது அவரது பதில் "நீங்கள் பிராமணராக உணரும் வரை அந்த அம்புகள் வந்து தைத்தபடியேதான் இருக்கும். இந்தப்புண்படுதல் சங்கதியை நீங்கள் கொஞ்சம் அடக்கிக்கொள்ளத்தான் வேண்டும்" என்பதுதான். (தொடர்புடைய சுட்டி) அதாவது பிராமணர்களை இப்படி மோசமாக காட்டாதீர்கள் எங்கள் மனம் புண்படுகிறது என்று கூறினால் அப்படித்தான் புண்படும். நீங்கள் அடக்கிகொள்ளுங்கள் என்கிறார்கள்.

'உத்தம புத்திரன்' பட விவகாரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, தனுஷ், மித்ரன் R ஜவகர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் அடங்கிய ‘உத்தமபுத்திரன்’ படக்குழுவினர், கௌண்டர்களை இழிவு படுத்தியதாக கூறப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக கூறியதோடு, தங்கள் வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

ஆனால் அப்படித்தான் செய்வோம், நீங்கள் அடக்கிகொள்ளுங்கள் என்ற பதிலை இந்த சினிமாக்காரர்களால் கௌண்டர்களிடம் ஏன் கூற முடியவில்லை? தேவர்களும் கௌண்டர்களும் புண்படும் போது அவர்களிடம் மன்னிப்பு கோர தயாராகும் திரையுலகம் ஏன் பிராமணர்களை மட்டும் எப்படி வேண்டுமானாலும் திரையில் காட்சிப்படுத்துகிறார்கள்?

இது போன்ற பல கேள்விகளை அடுக்கிய பின்னர் ஜெயமோகன் அவர்கள் ஒரு விஷயத்தை ஒத்துக்கொண்டார். அதாவது "அதேசமயம் தம்ழி சினிமாக்களில் பலர் பிராமணர்களை திட்டமிட்டே இழிவுசெய்கிறார்கள், பிறசாதிகளை அப்படிச்செய்ய துணிவதில்லை என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்" என்றார். (தொடர்புடைய சுட்டி) இந்தக் கருத்தை வெளிப்படையாக சொல்வதற்கு கூட பலர் தயங்கும் நிலையில் திரைத்துறையிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கும் ஜெயமோகன் எழுத்துக்களில் பார்ப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த ஒரு வரியாவது ஏதாவது ஒரு சினிமா கதாசிரியரையோ, இயக்குனரையோ அல்லது நடிகர்களையோ யோசிக்க வைத்தால் அதுவே பெரிய நிகழ்வாக இருக்கும்.

ஜாதியில்லாமல் சினிமா எடுத்தால் கதை கெட்டு விடும் என்பது மதிப்பிற்குரிய ஜெயமோகனின் கருத்தாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சமூகத்தில் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூச்சல் போடும் சினிமாக்காரர்களால் கேவலம் இரண்டரை மணிநேர சினிமாவை ஜாதி இல்லாமல் எடுக்க முடியாது என்று கூறுவது பொட்டைத்தனமான வாதம். 

பிராமண துவேஷிகளை அதிர வைத்த திரைப்படம் 'அந்நியன்'

இங்கே குறிப்பிடப்படப்பட வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அந்நியன் படம் வந்த போது 'பார்ப்பனத் திரைப்படத்தை பார்க்காதீர்கள்' என்று போஸ்டர் அடித்தே ஒட்டினார்கள் பிராமண துவேஷிகள். அதன் காரணம் பின்னால் தான் புரிந்தது. வழக்கமாக பிராமணர்களை காமெடிப்பீஸாகவும், ஆபாசமாகவும், கொடுமைக்காரர்களாகவும் மட்டுமே சித்தரித்து வெளிவரும் சினிமாக்களைப் பார்த்து பழகிப்போய் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்த பிராமண துவேஷிகள் நவீன கலத்தில் பிராமணனை சமூக அக்கரை உள்ளவனாகவும், இரக்கமுள்ளவனாகவும், நல்லவனாகவும் காட்டியது பொறுக்கவில்லை.

அவர்களால் தாங்கிகொள்ள முடியாத இன்னொரு முக்கியமான விஷயமும் இதில் இருக்கிறது. அதாவது பிராமணப் பெண் பிராமண ஆணையே கல்யாணம் செய்வதாக அந்தத் திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் வைத்து விட்டார்கள். இந்த அதிர்ச்சியை பிராமண துவேஷிகளால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஏதோ தாங்கள் மோசம் போய்விட்டதாக எண்ணினார்கள். அதெப்படி சினிமா விதிகளை மீறி ஒரு ப்ராமணப் பெண் பிராமண ஆணையே திருமணம் செய்ய முடியும். ஆகவே இது ஒரு பார்ப்பனத் திரைப்படம் என்று கூறி அதை பார்க்காதீர்கள் என்றும் போஸ்டர் அடித்து ஒட்டி விட்டார்கள். சினிமாவில் பிராமண துவேஷத்தை வியாபாரமாக்கியே தீருமளவிற்கு இருக்கும் இந்த நிலை இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் என்பது விடைதெரியாத கேள்வியாக இருக்கிறது.

பிராமணர்களுக்கு சங்கங்கள் இருந்தும் இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் போராடிக் கொண்டிருப்பதில்லை. அது நேரத்தை வீனடிக்கும் செயல் என்றும் அந்த நேரத்தில் நாம் உருப்பட ஏதாவது வழியைப்பார்க்கலாம் என்றும் இருந்து விடுகிறார்கள். இரண்டாவது இவர்களிடம் போராடி ஒன்றும் பிரயோஜனப்படாது என்கிற எண்ணமாகவும் இருக்கலாம். மூன்றாவது நாம் ஏதாவது போராடப்போய் இன்னும் அதிகமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரலாம் என்ற பயமும் காரணமாக இருக்கலாம். ஆனால் கேள்விகள் மட்டும் மனதில் எழாமல் இருப்பதில்லை.

தியேட்டருக்கு முன்னே போய் படத்தை ஓடவிடமாட்டோம் என்று போராடினால் பயப்படும் திரையுலகம் தூரத்தில் இருந்து கொண்டே இப்படிச் செய்ய வேண்டாமே என்று மெதுவாகக் கேட்டால் ஏறி மிதிப்பது ஏன்?

ஸ்ரீரங்கத் தெருவில் மறைந்த ராமசாமி நாயக்கரின் தோற்றம் கொண்ட உருக்கல்லை யாரோ சேதப்படுத்தினார்கள் என்பதற்காக சென்னை அயோத்தியா மண்டபத்தில் சென்னை அயோத்தியா மண்டப வாசலில் ஐம்பது பைசா லாபத்திற்கு பூனூல் விற்றுக்கொண்டிருந்த கிழவரை பிராமண துவேஷ காழ்ப்புணர்ச்சியால் வெட்டிப் போட்டது ஒரு கும்பல். எத்தனையோ பிராமணர்கள் உடன் பழகுபவர்களாலேயே தினந்தோறும் பரிகசிக்கப்பட்டு வருகிறார்கள். இது போன்ற சினிமாக்காரர்கள் பிராமண துவேஷ காட்சிப்படுத்தலை மிகைப்படுத்தி தொடர்ந்து காட்டுவதன் மூலம் ஏற்கனவே பிராமணர்கள் பற்றிய வெறுப்புணர்ச்சியை சைக்கோத்தனமாக வளர்த்துக்கொண்டவர்கள் இன்னும் ஆத்திரம் கொள்ள மாட்டார்களா? அப்படி காழ்புணர்வு தூண்டப்பட்ட பலர் இன்னும் பல பிராமணர்களை வெட்டி வீழ்த்த கிளம்பமாட்டார்களா? பிராமணப் பெண்களை மானபங்கம் செய்ய அலைய மாட்டார்களா? அதைத்தான் இந்த திரையுலகம் விரும்புகிறதா? (தொடர்புடைய சுட்டி)

அதே போல 'துரோகி' என்றொரு கேவலமான ப்ராமண துவேஷ படம்..அது பற்றி அடுத்த பதிவில்

தமிழ் சினிமாவில் இன்னும் எவ்வாறெல்லாம் பிராமணர்கள் கேலிக்குரியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதை தொடர்ந்து பார்ப்போம்...

தொடரும்.......

தமிழ் சினிமாவில் பிராமணர்கள் - 5

Saturday, May 9, 2009

தமிழ் சினிமாவில் பிராமணர்கள் - பாகம் 3


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அற்புதமான கலைஞர். மிகவும் நல்ல மனிதராக அறியப்படுபவர். தன்னை அவமதிக்கும் எதிரிகளுக்கும் நட்புக்கரம் நீட்டுபவர். இப்படி எல்லா உயர்ந்த குணங்கள் கொண்ட இந்த நல்ல மனிதரையும் பிராமண கதாநாயகியை மணக்கும் பாத்திரத்தில் நடிக்கும் ஆசை விட்டு வைக்கவில்லை.

வீரா. இவர் நடித்த திரைப்படம். படத்தின் முக்கிய கதையே ரெண்டு பொண்டாடி. இப்படத்தில் கையாளப்பட்ட முக்கிய அம்சம் நகைச்சுவை. இந்த நகைப்புக்கும் முக்கிய கதாபாத்திரமாக பயன்படுத்தப்பட்டது பிராமண அடையாளம். இது இந்திய மொழிகளில் வேறெந்த மொழி திரைப்படத்துறையிலும் இல்லாத துவேஷம். நகைப்புக்கும், கேலிக்கும், துவேஷத்திற்க்கும் பிராமண அடையாளங்கள்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சூப்பர்ஸ்ட்டாரும் இதில் விதிவிலக்கில்லாமல் விளையாடிவிட்டார். இதற்க்கு முன்னரே உழைப்பாளி என்ற படத்திலும் நகைச்சுவைக்காட்சிக்காக "பகவான் போகச்சொன்னார், போனேன்" என்றொரு பிராமணரைப் பயன்படுத்தி சிரிப்பு மூட்டினார். (நடித்தவரும் அசல் பிராமணரே, அதுபற்றிய விமர்சணங்களும் வரும் பதிப்புகளில் பார்க்கலாம்). இப்படி பிராமண அடையாளங்களை சிரிப்பு பொருளாக பயன்படுத்த யாரும் பாரபட்சமே காட்டவில்லை.

ரஜினிகாந்த் அவர்கள் மனதறிந்து யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் என்பது அறிந்ததே. அவர் நல்லவர் தான். கோழி மிதித்து குஞ்சு சாகாது தான். ஆனால் வலிக்கிறதே. அது கோழிக்கு தெரியுமா?



ஆர்.பார்த்திபன். பாக்கியராஜ் அடைகாத்து பொறித்தனுப்பியவர் அல்லவா. "இது நம்ம ஆளு" எடுத்து நமது குரு மிகவும் புகழும் பணமும் சம்பாதித்ததைப் போல தாமும் சம்பாதிக்கவேண்டும் என்று இவருக்கு ஆசை இருக்காதா?. இவரும் பிராமண கலாச்சார அழிப்பில் தன் பங்கிற்க்கு குதித்தார். பொண்டாட்டி தேவை. இவரது பொழுது போக்கு மற்றும் சென்டிமென்ட் திரைப்படம். ஒரு ஏழை பிராமணப் பெண்ணை கண்டெக்டரான இவர் காதலிப்பார். அந்தப் பெண் வீட்டில் இவளது சம்பளத்தில் தான் குடும்பமே நடக்கிறது. அதை விடுவதற்கு மனமில்லாமல் அவளது அப்பாவே வரும் வரன்களையெல்லாம் கலைத்து விடுகிறார். இப்படிப்பட்ட குடும்பத்தில் இருக்கும் இந்தப் பெண்ணை பார்த்திபன் எப்படி காப்பாற்றி திருமணம் செய்து கொள்கிறார் என்பது கதை. கூடவே பிராமணர்களுக்கு புத்தி சொல்வதும் தமிழ்ப்பட சட்டப்படி நடக்கும். போதாக்குறைக்கு பிராமணர்களின் பாஷையை பார்த்திபனும் படத்தில் அவ்வப்பொழுது கிண்டலாக பேசுவார்...




இப்படி பிராமணர்களுக்கு புத்தி சொல்லி பிராமண கலாச்சாரத்தை கேலி செய்யும் அற்புதத்தை நிகழ்த்தி பேர்வாங்கினார் பார்த்திபன். நீங்கள் நினைக்கலாம். பெற்றோர்கள் பணத்திற்க்காக பெண்ணிற்க்கு திருமணம் செய்யாமல் இருந்தால் அது இப்படித்தானே முடியும். இதில் பார்த்திபனின் தவறென்ன? தமிழ் நாட்டில் பிராமணர்கள் மட்டும் தான் ஏழைகளாக இருக்கிறார்களா?. ஏன் பார்த்திபன் என்ன ராஜ குடும்பத்து இளவரசனா?. ஏழை பிராமணப் பெண்ணுக்கு வாழ்வு கொடுக்கும் தன் கற்பனையை நிகழ்த்திக்காட்ட. ஏழைக்குடும்பங்கள் எல்லா ஜாதியிலும் இருக்கும் போது பிராமணர்கள் வாழ்வு மட்டுமே சந்தைக்குக் கொண்டுவரப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது தமிழ் சினிமாவில். சமீபத்தில் "ஸ்லம் டாக் மில்லியனர்" என்ற படத்தைப் பற்றி அமிதாப்பச்சன் கூறிய விமர்சனம் என்ன? இந்தப்படம் இந்தியாவின் ஏழ்மையை கேலி செய்யும் படம் என்று கூறினார். பலரும் இதை ஆமோதித்தனர். வெள்ளையர்கள் இந்தியாவை அவமானப்படுத்தும் அதிகப்பிரசங்கித்தனம் இந்தப்படம் என்று கண்டனக்குரல்களும் வந்தன. அதே போல் தான் இந்தப்படத்திலும் பிராமணர்களின் ஏழ்மை கேலி செய்யப்பட்டது. வியாபாரம் ஆக்கப்பட்டது. பிராமணர்கள் உட்பட பல ஜாதிக்காரர்களின் குடும்பங்களிலும் இப்படி நிலை இருந்தாலும் பிராமண அடையாளங்களே பிரதான வியாபார‌ப்பொருளாகத் தமிழ் சினிமாவில் உபயோகப்படுத்தப்படுவது கண்டனத்திற்குரியது.

இத்துடன் விட்டாரா பார்த்திபன். அதற்குப் பிறகு இவரது சில திரைப்படங்கள் சரியாகப் போகவில்லை. வியாபாரத்தில் வெற்றி பெற மீண்டும் கையிலெடுத்தார் பிராமண ப்ராஜெக்டை. "சரி கம பத நீ" என்று இவர் எடுத்த படத்தில் மீண்டும் பிராமண குடும்பம் நாற‌டிக்கப்பட்டது. ஒரு திருமண வீட்டில் இவர் பிராமணப் பெண்ணிடம் சிலுமிஷம் செய்ய அதை அரசல் புரசலாக பார்க்கும் யாரோ ஒருவர் பின்னாளில் தெரியாத்தனமாய் அந்த வீட்டிற்கே பெண்பார்க்கப் போக, அந்த வீட்டில் நடக்கும் களேபரம் , அதனால் ஏற்ப்பட்ட அவமானம் போன்றவை அந்த பிராமணக் குடும்பம் கூண்டோடு தற்க்கொலை செய்து கொள்வது கதை. படத்தின் முக்கியத் திருப்பத்திற்க்கு பயன்படும் களமாக இதை உபயோகித்திருப்பார் பார்த்திபன் . படம் இவருக்கு பணத்தைத் தந்தது. பிராமணர்களுக்கு முகச்சுளிப்பைத் தந்தது. அதாவது இவர்களது ஃபார்மலாப்ப‌டி பிராமணர்களை கவுரவமான கதாபாத்திரத்தில் காட்டவேக் கூடாது. இப்படி மிகவும் அபத்தமாக காட்டினால் தான் அப்பாடா என்றிருக்கும். ஏன் என்று தெரியாது. பிராமணர்கள் என்றால் ஒரு அலர்ஜி, ஒரு வகை சாடிசம். அதன் வெளிப்பாடே இவ்வகையில் பிராமணர்களைச் சித்தரிக்க வைக்கிறது.

பகுத்தறிவு மாயை இவர்களுக்கு இந்தவகை சாடிச மனநோயை உண்டாக்கி ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் இப்படி ஒரு மனநோயுடன் காணப்படுகிறார்கள். சிலவகைக் காய்கறிகள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. அது போல தான் இதுவும் . தகுந்த மனோவைத்தியரைப்பார்த்தால், நல்ல முறையில் கவுன்சிலிங் செய்தால் சரி செய்யலாம்.

தமிழகத்தில் யாரும் அவரவர் ஜாதிகளை , அடையாளங்களை விடுவதற்க்குத் தயாராக இல்லை. ஜாதி சுவர் எழுப்பியர்களில் பிராமணர்கள் கிடையாது. இந்த நூற்றாண்டில் கிராமங்களில் கோவில்களில் பிற ஜாதிக்காரர்களை நுழையக்கூடாது என்று பிராமணர்கள் சொல்லவில்லை. ஜாதிக்காக வெட்டிக் கொலை செய்வதில் பிராமணர்கள் இல்லை. கொடியங்குளம் ஜாதி மோதல் பிராமணர்களாலோ அல்லது பிராமணர்களுக்காகவோ நடக்கவில்லை. சமூகத்தில் யாரும் அவ‌ரவர் ஜாதிகளை விட்டுக் கொடுக்க தயாரில்லை. ஆனால் பிராமணர்கள் மட்டும் தங்கள் ஜாதியை விட்டு விட வேண்டும். தங்கள் கலாச்சார அடையாளங்களை விட்டுவிட வேண்டும் என்று தொடர்ந்து நிர்பந்திக்கப்படுகிறார்கள். அவர்களது பிராமண பாஷையும் ஏளனம் செய்யப்படுகிறது.

வித்தியாசமாக பேசப்படும் தமிழாக பிராமண பாஷை இருக்கிறது. ஆனாலும் அது தமிழ் தான் வேறில்லை. எப்படி கோயமுத்தூர் தமிழ், மதுரைத்தமிழ், சென்னைத்தமிழ் , நெல்லைத் தமிழ் என்று இருக்கிறதோ அது போல இதுவும் ஒரு வட்டாரத் தமிழ். ஒரு இனத்தால் பேசப்படுகிறது. அவ்வளவு தான். முஸ்லீம்களில் பெரும்பாலானவர்கள் வீட்டில் ஹிந்தி அல்லது உருது அல்லது அரபி இப்படித்தான் பேசுகிறார்கள். மசூதிகளில் வெளிநாட்டு பாஷையில் தான் ஓதுகிறார்கள். எந்த சினிமாக்காரனுக்கு இதை கேலி செய்ய ஆண்மை இருக்கிறது. கோவில்களில் தமிழில் தான் ஓதவேண்டும் என்று சொல்பவர்கள் மசூதிகளுக்கும் அந்தச்சட்டம் பொருந்தும் என்று ஏன் சொல்லவில்லை.

பிறரை அவமதிக்கவேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை. ஆனால் எப்படி அவர்களின் ஜாதிகளை, அடையாளங்களை கேலி செய்யத் தயங்குகிறீர்களோ, மனிதத்தன்மை பார்க்கிறீர்களோ (பயம் என்பதே உண்மை) அதுபோல பிராமணர்கள் விஷயத்திலும் பார்க்கலாமே.

தமிழ் சினிமாவில் இன்னும் எவ்வாறெல்லாம் பிராமணர்கள் கேலிக்குரியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதை தொடர்ந்து பார்ப்போம்...

தொடரும்......



தமிழ் சினிமாவில் பிராமணர்கள் - 4