Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Wednesday, May 23, 2012

பைந்தமிழ் வளர்த்த ப்ராமணர்கள்!

அழிவில் இருந்த பழங்கால தமிழோலைச் சுவடிகளைத் தேடிப்பிடித்து அச்சிலேற்றி தமிழை வாழவைத்த தமிழ்த் தாத்தா உ. வெ. சுவாமிநாத அய்யர்!

ப்ராமணர்கள் தமிழர்களே கிடையாது, தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பொய்ப் ப்ரசாரங்களைப் பரப்பி தமிழ் வளர்த்த ப்ராமணர்கள் பற்றிய வரலாறுகளையே மறைத்துவிடுகின்றனர். ஆனால் தமிழ் வளர்த்த ப்ராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா! அதனால் இங்கே ஒரு சிறு பகிர்வு!

பைந்தமிழ் வளர்த்த ப்ராமணர்கள்!


சங்ககாலம்

1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார்
15. மார்க்கண்டேயனார்
16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
19. தாமப் பல்கண்ணனார்
20. குமட்டுர்க் கண்ணனார்

இடைக்காலம்

21. மாணிக்கவாசகர்
22. திருஞானசம்பந்தர்
23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
24. பெரியாழ்வார்
25. ஆண்டாள்
26. தொண்டரடிப்பொடியாழ்வார்
27. மதுரகவி
28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
29. பரிமேலழகர்
30. வில்லிபுத்தூரார்
31. அருணகிரிநாதர்
32. பிள்ளைப் பெருமாளையங்கார்
33. சிவாக்ரயோகி
34. காளமேகப் புலவர்

பிற்காலம்

35. பெருமாளையர்
36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
39. கோபாலகிருஷ்ண பாரதியார்
40. கனம் கிருஷ்ணையர்
41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
43. சண்பகமன்னார்
44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
47. சுப்ரமண்ய பாரதியார்
48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
49. சுப்பராமையர் (பதம்)
50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
51. ரா.ராகவையங்கார்
52. பகழிக் கூத்தார்
53. வென்றிமாலைக் கவிராயர்
54. வேம்பத்தூர் பிச்சுவையர்
55. கல்போது பிச்சுவையர்
56. நவநீதகிருஷ்ண பாரதியார்
57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
58. திரு, நாராயணசாமிஐயர்
59. மு.ராகவையங்கார்
60. திரு. நா.அப்பணையங்கார்
61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
62. கவிராஜ பண்டித கனகராஜையர்
63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
64. ம.கோபலகிருஷ்ணையர்
65. இவை.அனந்தராமையர்
66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
68. வ.வே.சு.ஐயர்
69. கி.வா.ஜகந்நாதையர்
70. அ.ஸ்ரீநிவாசராகவன்
71. ஸ்வாமி சாதுராம்
72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்.

 பாரதியார்!
(ப்ராமணர் என்பதாலேயே இவர் புகழை மறைத்தாலும் தமிழ் மூலம் உலகெங்கும் ஒலிக்கிறார், என்றும் ஒலிப்பார், ஒளிர்கிறார்)



Sunday, June 14, 2009

வள்ளுவர் வாக்கு


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண்விடல்

விளக்கம்: இந்தச் செயலை, இன்ன காரணத்தால் இவன் செய்து முடிப்பான் என்று கண்டுகொண்டு அந்தச் செயலை முடிக்கும் பொறுப்பை அவனிடமே விடவேண்டும்.

இது மேனேஜ்மென்ட் தியரி. எம் பி ஏ படிப்பில் ஹியூமென் ரிசோர்ஸ் பாடத்தில் தொழிளாலர்களிடம் உற்சாகம் குறையாமல் வேலை வாங்குவது எப்படி என்ற பகுதியில் ஒரு தொழிளாலர்க்கு எந்த மாதிரியான வேலை கொடுக்கப்பட்டால் அவர் உற்ச்சாகமுடன் அதைச் செய்கிறார் என்று கவனிக்க வேண்டும். அந்த வேலையையே அவருக்கு தொடர்ந்து கொடுத்து அதில் ஊக்கமளித்தால் நிறுவனப் பணிகள் சிறப்புடன் நடக்க அது சரியான மேளாலரின் முடிவாக இருக்கும். இவ்வாறு எம் பி ஏ படிப்பவர்களுக்கு சொல்லிக்கொடுப்பார்கள். ஆனால் அதற்க்கு அவர்கள் லட்சக் கணக்கில் செலவு செய்து இரண்டு வருடங்கள் படிக்க வேண்டும்.

இதையே திருவள்ளுவர் இரண்டடியில் ஏழு வார்த்தையில் நறுக்கென்று விளக்கி விட்டார். இதைப் படித்தால் வேலை கொடுக்க மாட்டார்கள். என்ன கொடுமைடா சாமி? உலகம் முழுவதும் தமிழையும் வள்ளுவரையும் பரப்ப வேண்டும். பாதிரியார்கள் மதம் மாற்றுவது போல உலக மக்களையெல்லாம் தமிழால் தமிழராய் மாற்ற வேண்டும். இருக்கும் வேத புத்தகங்களையெல்லாம் தூக்கியெறிந்து மக்கள் திருக்குறள் தான் தமது வேதம், திருவள்ளுவர் தான் ஒரே தெய்வம் என்று ஒட்டு மொத்த உலக மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். அந்த நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்ப்போம்.

பின்குறிப்பு: நான் என் குஜராத்தி நண்பனுக்கு திருக்குறள் சொல்லிக்கொடுக்க துவங்கி விட்டேன். வாய்பிளந்து இவவளவு விஷயம் அதில் இருக்கா என்று அவர் அதிசயித்துப் போவதை ரசித்து மகிழ்கிறேன். முடிந்தால் நீங்களும் ஒரு வேற்று மொழிக்காரருக்கு திருக்குறள் சொல்லித்தாருங்கள்.

வாழ்க தமிழ், வளர்க தமிழ்.

Sunday, May 31, 2009

வள்ளுவர் வாக்கு


பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் 
திண்மையுண் டாகப் பெறின்.  

தான் கொண்ட கணவனுக்கு துரோகம் செய்யாத வாறு கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால் அந்தப் பெண்ணைவிடப் பெருமை மிக்கது உலகில் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை.

திருக்குறள்; 
அறத்துப்பால் ‍- இல்லறயியல்

Tuesday, May 5, 2009

தமிழர்கள் பிறந்த நாளை எந்த நாளில் கொண்டாட வேண்டும்?

தமிழ் ஆண்டுகள்:

உண்மையில் நாம் என்று பிறந்தோமோ அந்த நாளை பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்பது நியதி. அப்படிப் பார்க்கும் போது தமிழர்கள் அறுபது வருடத்திற்கு ஒருமுறை தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டும். நமது தமிழ் வருடங்கள் வான் கோள்களின் சுழற்சியின் அடிப்படையில் இயற்கையின் கணக்கீடுகளைக் குறிப்பதாகவே வடிவமைக்கப்பட்டிருகிறது. தமிழ் மாதங்களும் அவ்வாறே. அப்படிப் பார்க்கும் போது நாம் என்று பிறந்தோமோ அந்த வருடமும், எந்த நட்சத்திரத்தில் பிறந்தோமோ அந்த நாளில் தான் தமிழர்கள் உண்மையாகப் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.

அதாவது நாம் எந்த தமிழ் வருடத்தில் பிறந்தோமோ, அந்தத் தமிழ் வருடம், தமிழ் மாதம், தமிழ் நாள் எப்பொழுது மீண்டும் வருகிறதோ அன்று தான் நாம் முதல் பிறந்த நாளையே கொண்டாட வேண்டும். அது தானே சரி. அப்படிப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் அறுபது வருடங்களுக்கு ஒரு முறைதான் வருகிறது.

இப்படி நாம் பிறந்த அதே நாள் அதே வருடம் திரும்பி வருவதற்க்கு அறுபது வருடங்கள் ஆவதால் அந்த நாளை மிகச்சிறப்பாக அறுபதாம் கல்யாணமாக முழுகுடும்பத்துடன் கொண்டாடுகின்றோம். அதாவது அறுபது வயதில் ஒரு மனிதன் கண்டிப்பாக குடும்பத்துடன் தான் இருப்பான் என்பது இயற்க்கை என்பதால் அதை வெறும் பிறந்த நாளாக மட்டும் கொண்டாடாமல் குடும்ப நாளாகக் கொண்டாடுகின்றோம். மேலும் ஒரு மனிதன் வாழ்வின் ஒரு சுற்றை முடிப்பதற்க்குளே பல கஷ்டங்களை அனுபவித்து விடுகிறார்கள். சிலர் இல்லாமலே போகிறார்கள். இதனாலேயே இவைகளைத் தாண்டி இந்த முதல் பிறந்தநாள் அதாவது அறுபதாவது திருமணம் கொண்டாடுபவர்களை வணங்கி ஆசி பெறுகின்றனர். இப்படி இல்லாமல் ஆண்டுக்கொரு முறை பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் தமிழர்களா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதை எல்லோரும் மனதில் வைத்து தமிழ் வருடப்படி பிறந்தநாள் கொண்டாட வேண்டும். சரி இதையும் மூட நம்பிக்கை என்று பகுத்தறிவு மூடர்கள் சொன்னார்கள் என்றால் , தமிழ் புத்தாண்டு தேதியை மாற்றிய அவர்கள் தமிழ் வருட கணக்கீடுகளை மாற்ற ஏன் முன்வரவில்லை? தமிழ் வருடங்களின் பெயர்களை ஏன் மாற்றத் துணியவில்லை? முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். ஆதலால் அந்த மூடர்கள் படுத்தும் பாடுகளை மறந்து விட்டு நாம் உண்மையான தமிழர்களாக தமிழ்ப் புத்தாண்டை தமிழ் வருடப்படியே கொண்டாடுவோம். கீழே உங்கள் வசதிக்காக தமிழ் வருடங்கள்.

எண் தமிழ் வருடங்கள்

1 பிரபவ
2 விபவ
3 சுக்ல
4 பிரமோதூத
5 பிரசோற்பத்தி
6 ஆங்கீரச
7 ஸ்ரீமுக
8 பவ
9 யுவ
10 தாது
11 ஈஸ்வர
12 வெகுதானிய
13 பிரமாதி
14 விக்கிரம
15 விஷூ
16 சித்திரபானு
17 சுபானு
18 தாரண
19 பார்த்திப
20 விய
21 சர்வசித்து
22 சர்வதாரி
23 விரோதி
24 விக்ருதி
25 கர
26 நந்தன
27 விஜய
28 ஜய
29 மன்மத
30 துன்முகி
31 ஹேவிளம்பி
32 விளம்பி
33 விகாரி
34 சார்வரி
35 பிலவ
36 சுபகிருது
37 சோபகிருது
38 குரோதி
39 விசுவாசுவ
40 பரபாவ
41 பிலவங்க
42 கீலக
43 சௌமிய
44 சாதாரண
45 விரோதிகிருது
46 பரிதாபி
47 பிரமாதீச
48 ஆனந்த
49 ராட்சச
50 ந‌ள
51 பிங்கள
52 காளயுக்தி
53 சித்தார்த்தி
54 ரௌத்திரி
55 துன்மதி
56 துந்துபி
57 ருத்ரோத்காரி
58 ரக்தாட்சி
59 குரோதன
60 அட்சய

Sunday, March 22, 2009

சூப்ப‌ர்ஸ்ட்டாரை சீண்டிப்பார்க்கும் தின‌ம‌ல‌ர்!

இன்று மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சீண்டியிருக்கிறது தினமலர். "அரசியலில் நாடு முழுவதும் பரவி விட்டது சினிமா மோகம்" என்ற தலைப்பில் நடக்கப் போகும் தேர்தல் களத்தில் பங்கேற்க்கப் போகும் நடிகர் நடிகைகளைப் பற்றிய குறிப்புக்கள், அவர்களின் அரசியல் பலம் போன்ற தனது எழுத்தாய்வுகளை வெளியுட்டுள்ளது. நடிகர் சிரஞீவி, பாலகிருஷ்னா , சஞ்சய் தத் மற்றும் நடிகைகள் நக்மா, ஜெயசுதா முதல் புதிய வரவான ஜெ கெ ரித்தீஷ் வரை அனைவரை பற்றியும் வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசியலில் பங்கேற்பவர்கள் மட்டுமல்ல பல பகுதிகளில் தேர்தலில் போட்டியிட்டும், தங்களது கட்சிக்காக பிரசாரமும் செய்யப்போகிறவர்கள்.

இவர்கள் எல்லோர் பற்றியும் போட்டுவிட்டு க‌டைசியில் சூப்ப‌ர்ஸ்ட்டார் ர‌ஜினி ப‌ற்றியும் குறிப்பை ம‌ற‌க்காம‌ல் சேர்த்து வ‌ம்புக்கு இழுத்துள்ள‌து. "சூப்ப‌ர் ஸ்ட்டார் ர‌ஜினி அதிக‌ ர‌சிக‌ர்க‌ளைக் கொண்ட‌வ‌ர். இவ‌ர் ச‌மீப‌த்தில் எந்த‌ க‌ட்சியையும் ஆத‌ரிக்க‌வில்லை. இவ‌ர் ஏதாவது வாய் திற‌க்க‌ வேண்டும் த‌மிழ‌க‌ க‌ட்சிக‌ள் காத்திருக்கின்ற‌ன‌" என்றெல்லாம் தேவையில்லாம‌ல் வெறும் வாயை மென்று த‌ன‌து வியாபார‌ குள்ள‌ந‌ரி புத்தியை வெளியிட்டுள்ள‌து. த‌மிழ‌க‌ க‌ட்சிக‌ள் சூப்ப‌ர்ஸ்டார் வாய் திற‌க்காம‌ல் இருப்ப‌தையே விரும்புகின்ற‌ன‌ என்ப‌தே உண்மை. ர‌ஜினி வாய் திற‌ந்து ஏதாவது பேசி வைத்தால் ந‌ம‌து தொழில் கெட்டுவிட‌ப்போகிற‌தே என்று தான் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் க‌வ‌லையில் உள்ள‌ன‌. அத‌னால் தான், முடிந்த‌ வ‌ரை அவ‌ரை அவ‌மான‌ப்ப‌டுத்தி அவ‌ர் வாயை மூட‌ வைக்கும் வேலையில் ப‌ல‌ வித‌ங்க‌ளில் காய் ந‌க‌ர்த்தினார்க‌ள் என்ப‌தும் உண்மை. அதில் ஒன்றுதான் ர‌ஜினி கன்னடர் என்ற‌ பிரிவினை வாத‌ப் பேச்சும் கூட‌.

உண்மை இப்படி இருக்கும் போது தினமலரில் தமிழக கட்சிகள் ரஜினி குரலை எதிர்பார்ப்பதை போன்று வெளியிட்டுள்ளது சுத்த அயோக்கியத்தனம். உண்மையைச் சொல்லப்போனால் இது போன்ற பத்திரிக்கைகளுக்கு தான் இந்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் சூப்ப‌ர்ஸ்டார் வாய் திறந்தால் அவரை திட்டி பேசுபவர்களையும், ஆதரித்து பேசுபவர்களையும் பற்றி மாறி மாறி எழுதி காசு பார்க்கலாமே! ஆனால் ப‌ழி ம‌ட்டும் சூப்ப‌ர்ஸ்ட்டாருக்கு.

யானை இருந்தாலும் ஆயிர‌ம் பொன், இற‌ந்தாலும் ஆயிர‌ம் பொன் என்ற‌ ப‌ழ‌மொழியைப்போல‌ சூப்ப‌ர்ஸ்டாரை புக‌ழ்ந்தாலும் காசு, இக‌ழ்ந்தாலும் காசு. அத‌னால் அவ‌ரைப் ப‌க‌டைக்காயாய் ப‌ய‌ன்ப‌டுத்தி குளிர்காய‌ எத்த‌னைப் பேர். அர‌சிய‌ல் க‌ட்சிகள் நேரடியாக அவமதிப்பது ஒரு புறம், அவ‌ர் கூட‌வே ப‌ணியாற்றி அவ‌ரையே முதுகில் குத்தும் ஒரு சில‌ திரைத்துறைப் பிர‌க‌ஸ்ப‌திக‌ள் ஒரு புறம், போதாக்குறைக்கு இந்த‌ மீடியாக்க‌ள்.

ச‌மீப‌த்தில் ஒட்டப்பட்ட‌ "அர‌ச‌ன்" திரைப்ப‌ட‌ சுவ‌ரொட்டியில் இவ்வாறு எழுதியிருந்த‌து "இன்று வேட்டை விரைவில் கோட்டை". இந்த வாசகம் சூப்ப‌ர்ஸ்ட்டார் ர‌ஜினியின் அனுமதி பெற்று தான் போடப்பட்டதா என்பது தெரியாது. ஆனால் ப‌ட‌ம் வியாபார‌ம் ஆக வேண்டும் என்ப‌தற்க்காக‌ ர‌சிக‌ர்க‌ளின் உண‌ர்ச்சிக‌ளை உசுப்பி விடும் வாச‌க‌மாக‌வே தெரிகிற‌து. இப்ப‌டி ஆளாளுக்கு சூப்ப‌ர்ஸ்ட்டாரையும் அவ‌ர‌து அமைதி காக்கும் குண‌த்தையும் வியாபார‌ம் ஆக்கி அவ‌ரை மாட்டி விடுவ‌தும் பிற‌கு அவ‌ர் மீது ப‌ழி அனைத்தையும் போட்டு அவ‌ருக்கு எதிராக‌வே உட்கார்ந்து கேள்வி கேட்ப‌தும் அவ‌ரை முதுகில் குத்தும் அப்ப‌ட்ட‌மான‌ துரோக‌மே அன்றி வேறில்லை.


இன்னும் எத்த‌னை பேர் சூப்ப‌ர்ஸ்ட்டார் ர‌ஜினியை மிதித்து முன்னேற‌ காத்திருக்கிறார்க‌ளோ?. சிக‌ர‌த்தை மிதித்த‌வ‌ர்க‌ள் உய‌ர‌த்துக்கு போவ‌துண்டு. ஆனால் மிதிப‌ட்ட‌ கார‌ண‌த்தால் சிக‌ரத்தின் உயரம் குறைந்ததில்லை. சூப்ப‌ர்ஸ்ட்டார் என்றும் சிக‌ர‌மே!

இறைவா! மீடியாக்களில் இருந்து தலைவரைக் காப்பாற்று. எதிரிக‌ளை அவ‌ர் பார்த்துக் கொள்வார்.

Wednesday, January 14, 2009

வள்ளுவன் வாக்கு

அறத்துப்பால்; ஊழ் இயல் 373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.

நுண்ணிமையான நூல்கள் பல முயன்று கற்றாலும், சூழ்நிலைக்கு ஏற்ற அவற்றைப்பயன் படுத்தும் அறிவே கற்றவரைக் காப்பாற்றும்.