நீங்கள் கீழே காணப்போகும் நிழல் பேட்டிக்கும் நிஜப்பேட்டிக்கும் ஒரு ஆச்சரியமான ஒற்றுமை இருக்கிறது. முதல்வன் படத்தில் பேட்டி காணும் அர்ஜுன் இக்கட்டான கேள்விகளை அடுக்கும் போது அதற்கு பதில் சொல்ல விரும்பாத ரகுவரன், குடிக்கத் தண்ணீர் கேட்பார். பின் கேமிரா ஓடுவதை நிறுத்தச் சொல்வார். தான் பேச விரும்பவில்லை என்பதை அவரது செய்கைகளால் வெளியிடுவார்.
அதே போலவே குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் செய்கைகளும் இருப்பதைக் காணலாம். இப்படி ஒரு பேட்டி நிகழ்ந்தால் நிஜத்தில் ஒருவர் எப்படி எல்லாம் செய்யக்கூடும் என்பதை இயக்குனர் ஷங்கர் தத்ரூபமாகவே வடிவமைத்திருந்திருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. முதல்வன் படம் வெளிவந்தது 1999 ல், கோத்ரா ரயில் எரிப்பினால் அப்பாவி இந்துக்கள் கொல்லப்பட்ட
சம்பவம்
நிகழ்ந்தது 2002.
வீடியோவும் சுட்டியும் கீழே!
நிஜ முதல்வர் நரேந்திர மோடியை கரன் தாப்பர் பேட்டி காணும் காட்சி!