Showing posts with label நரேந்திர மோடி. Show all posts
Showing posts with label நரேந்திர மோடி. Show all posts

Saturday, May 31, 2014

இறைவன் நிச்சயித்ததை யாரால் தடுக்க முடியும்?



இன்றைய அரசியல் நிலையைப் பார்க்கும் பொழுது, இத்தனை எதிர்ப்பிற்கிடையிலும் திரு நரேந்திர மோதி எப்படி அசாத்திய வெற்றியைக் கண்டார் என அவரைப் பிடிக்காத பலர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது. பகவத் ஸங்கல்பம் என்று ஒன்று உண்டு. இது இப்படித்தான் நடக்க வேண்டும் என இறைவன் நிச்சயித்திருந்தால் அதை நம்மால் மாற்ற முடியாது என்பார்கள். சமீபத்தில் அப்படி நடந்த ஒன்று தான் மோதி பாரதப்பிரதமர் ஆனது எனலாம். ஆம், எத்தனை அவதூறுகள் எத்தனை குற்றச்சாட்டுகள், எத்தனை எதிர்ப்புகள், எத்தனை விமர்சனங்கள் - அத்தனையையும் தாண்டி இந்த பெரிய ஜனநாயக்க நாட்டின் எதிர்ப்பாரற்ற பிரதமர் ஆவதென்றால் சும்மாவா? இது தான் ஈஸ்வரனின் விருப்பம் என்றால் பகவத் சங்கல்பத்தை யாரால் மாற்ற முடியும்? 

என்னதான் புத்தியை உபயோகித்து சில பரிகாரங்கள் செய்து விதியை மாற்றலாம் என்று நினைத்தாலும் இறைவன் நிச்சயித்தது எதுவோ அதுவே நடக்கும் என்பதற்கு பாஸ்கராச்சாரியாரின் கதையை உதாரணமாகச் சொல்லுவார்கள்.

யார் இந்த பாஸ்கராச்சாரியார் என்கிறீர்களா? நம் நாட்டில் முதன் முதலில் ஏவப்பட்ட இரண்டு வின்கலத்திற்கு ஆர்யபட்டா என்றும் பாஸ்கரா என்றும் பெயர் வைத்தார்கள் ஞாபகம் இருக்கிறதா? அதில் ஒருவர் தான் இந்த பாஸ்கராச்சார்யார். மிகப்பெரிய கணித மேதை, ஜோதிஷ வல்லுனர். வின்வெளி ஆராய்ச்சியாளர். அவரது வாழ்க்கையில் நடந்த ஸ்வாரஸ்யமான சம்பவத்தை திரு சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இப்படி அழகாக விளக்குகிறார்.

"எண்ணூறு வருஷங்களுக்கு முன் பாஸ்கராச்சாரியார் என்று பெரிய கணித ஸித்தாந்தி ஒருவர் இருந்தார். நமக்கு என்னதான் கெட்டிக்காரத்தனம் இருந்தாலும், பகவத் ஸங்கல்பத்தை மாற்ற முடியாது என்பதற்கு திருஷ்டாந்தமாக அவர் வாழ்க்கையில் ஒன்று நடந்தது. அவருடைய பெண்ணுக்கு லீலாவதி என்று பெயர். ஜாதகப்படி அவளுக்கு ரொம்பவும் மாங்கல்ய தோஷம் இருப்பதை ஜ்யோதிஷப் புலியான பாஸ்கராச்சாரியார் அறிந்திருந்தார். ஆனாலும் தமது கெட்டிக்காரத்தனத்தினால் ஸகல க்ரஹங்களும் தீர்க்க ஸெளமங்கல்யத்தைத் தரும்படியான ஒரு லக்னத்தைக் கண்டுபிடித்து அதிலே புத்ரிக்கு விவாஹம் செய்து விட்டால் அவள் தீர்க்க ஸுமங்கலியாக இருக்கச் செய்து விடலாம் என்று நினைத்தார். அந்த மாதிரியான க்ரஹ சேர்க்கை உடைய ஒரு லக்னத்தில் லீலாவதிக்குக் கல்யாண முஹ¨ர்த்தம் வைத்தும் விட்டார்.

அந்தக் காலத்தில் இப்போது போல் கடிகாரம் கிடையாது. வாஸ்தவத்தில் அக்காலத்தில் இருந்ததுதான் அசல் கடிகா. கடம், கடிகா, கடிகை என்பதெல்லாம் பானை மாதிரியான தீர்த்த பாத்திரத்தைக் குறிக்கும். இப்படிப்பட்ட ஜல பாத்திரமே பூர்வகாலத்திய கடிகா அல்லது கடிகாரம். அதிலே மேல்பாகம், கீழ்பாகம் என்று பிரிந்திருக்கும். மேல் பாகத்தில் துளித்துளியாக விழும். மருந்து பாட்டிலில் டோஸ் மார்க் பண்ணியிருக்கிற மாதிரி, கீழ் பாகத்தில் அளவுக்கோடுகள் போட்டிருக்கும். துளித்துளியாய் விழும் ஜலம் இன்ன கோடுவரை வந்தால் இத்தனை நாழிகை என்று கணக்குப் பண்ணிவிடுவார்கள். அதிலுள்ள டோஸ் மார்க் ஒருநாளில் அறுபதில் ஒரு பங்காகும். 'நாழிகை'என்று தமிழில் சொல்லப்படும் இந்தக் கால அளவுக்கு ஸம்ஸ்கிருதத்தில் 'நாடிகா'என்பதோடு 'கடிகா'என்றே இன்னொரு பெயர் உண்டு. அது 24 நிமிஷம் கொண்டது. Water -clock, Water glass என்று இங்கிலீஷிலும் சொல்வார்கள். ஜலம் சீதோஷ்ணத்தைப் பொறுத்து evaporate (ஆவி) ஆவதால், இதில் ஏதாவது கணக்குத் தப்பு வரும் என்று, ஜலத்துளிக்குப் பதில் 'எவாபொரேட்'ஆகாத மண் துகள் விழுகிற மாதிரிச் செய்யும் கடிகாரத்துக்கு hour - glass என்று பெயர்.

அந்நாள் வழக்கப்படி, லீலாவதி விளையாட்டுப் பெண்ணாக இருந்த சின்ன வயசிலேயே கல்யாணம் நிச்சயித்திருந்தது. அந்தக் குழந்தை மேலே சொன்ன மாதிரியான ஜல கடிகாரத்திடம் வந்து, குனிந்து பார்த்து ஏதோ சேஷ்டை பண்ணிற்று. அப்போது அதன் மூக்குத்தியிலிருந்து ஒரு சின்ன முத்து கடிகாரத்துக்குள் விழுந்து, மேல் பாகத்துக்கும் கீழ் பாகத்துக்கும் நடுவேயுள்ள துவாரத்தில் மாட்டிக் கொண்டு விட்டது.

இதனால் விழுகிற துளி சின்னதாகி விடும் அல்லவா? இப்படி, இருக்க வேண்டியதை விடச் சின்னதான துளிகளாக விழுந்து முஹூர்த்த லக்னக் கோட்டுக்கு ஜலம் வந்தபோது, வாஸ்தவத்தில் அந்த சுபநேரம் தப்பி, அடுத்த லக்னம் வந்து விட்டது!அது கெட்ட லக்னம். அந்த லக்னத்தில் விவாஹமானதால் லீலாவதி ஜாதகப்படியே ரொம்பவும் பிஞ்சு வயஸில் பதியை இழந்து விட்டாள்!

முத்து விழுந்ததை அந்தக் குழந்தை உள்பட ஒருத்தரும் முதலில் கவனிக்காதலால் இத்தனை பெரிய விபரீதம் நடந்துவிட்டது. அப்புறம் விஷயம் தெரிய வந்தபோது விதியை யாரும் மாற்ற முடியாது என்று தெரிந்து கொண்டார்கள்."

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

இதைத்தான் ரஜினி ஸ்டைல்ல சொல்லுவாங்களோ? "அவன் குடுக்க நினைக்கிறதை யாராலும் தடுக்க முடியாது, அவன் தடுக்க நினைக்கிறதை யாராலும் குடுக்க முடியாது"!! இதெப்டி இருக்கு?



Monday, April 7, 2014

இந்தியாவுக்கு வாக்களிப்பீர் - தொடர்ச்சி - 2

- ச. திருமலை

அருமை நண்பர் ச திருமலை தனது முகநூல் பக்கத்தில் எழுதி பகிர்ந்து கொண்டது. நண்பருகளுக்காக இங்கேயும்..! - Thirumalai Sa

மோடியின் மீது பல்வேறு குற்றசாட்டுகள் வைக்கப் படுகின்றன. ஒரு ஜனநாயக நாட்டில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் மீது அவதூறுகளும், குற்றசாட்டுக்களும் எழுவது சகஜமான ஒன்றே. மோடியின் மீதான விமர்சனங்கள் மென்மையானது முதல் கடுமையானவை வரை பல விதமாகவும் வீசப் படுகின்றன. அவற்றில் நியாயமான குற்றசாட்டுக்களோ சந்தேகங்களோ இருந்தால் அவற்றிற்கான பதில்களை விளக்கிச் சொல்லலாம். அதைத்தான் மது கிஷ்வர், மீடியா க்ரூக்ஸ், குருபிரசாத், ஒத்திசைவு ராமசாமி போன்றோர் ஆக்கபூர்வமாகச் செய்து வருகிறார்கள். 

மோடியின் வெற்றியை எப்படியும் தவிர்க்க முடியாது என்ற நிலையில் முடிந்த வரை அவர் மீது நம்பிக்கையின்மையை எறிந்து பார்க்கலாம் ஒட்டியது ஒட்டட்டும் என்று அவர் மீது தொடர்ந்து பல விமர்சனங்கள் வைக்கப் படுகின்றன. அவர் மீது எந்தவிதமான ஊழல் குற்றசாட்டுகளையும் அவர்களினால் வைக்க முடியவில்லை. அவர் மீது எந்தவிதமான கிரிமினல் குற்றசாட்டுக்களையும் இந்தியாவின் அனைத்து விதமான கோர்ட்டுகளையும் பயன் படுத்தியும் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே அவர் மீது வாக்காளர்களிடத்து அவநம்பிக்கையையாவது விதைக்க முடியுமா அதன் மூலமாக அவருக்குப் பெருகி வரும் ஆதரவுகளைக் குறைக்க முடியுமா என்று சூடோ செக்குலார் ஊடகங்களும் மோடி வெறுப்பு கட்டுரையாளர்களும் அரசியல்வாதிகளும் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களின் எரிச்சலும், கோபமும், வெறுப்பும், ஆதங்கமும்,படபடப்பும், பதட்டமும், கையாலாகதத்தன்மையும் அவர்களின் கட்டுரைகளின் மூலமாகவும் பேச்சுக்கள் மூலமாகவும் பெரிதும் அப்பட்டமாக வெளிப்படுகின்றன. 

அப்படி மோடி மீதான அவநம்பிக்கையை மக்கள் மனதில் உருவாக்கும் ஒரு உத்திகளில் ஒன்று மோடி குஜராத் மாநிலத்தை மட்டுமே ஆட்சி செய்து வருபவர் ஆகவே அவரால் சிக்கலான, கஷ்டமான, சோதனையான ஒட்டு மொத்த இந்தியாவை நிர்வாகம் செய்ய முடியாது என்பது. இதையே பல விதமாகவும் மீண்டும் மீண்டும் எழுதி வருகிறார்கள். மோடி குஜராத் என்ற ஒரு மாநிலத்தை நிர்வாகம் செய்திருக்கலாம் ஆனால் அது மட்டுமே இந்தியாவின் பிரதமராகும் தகுதியை அளித்து விடாது. அது மட்டுமே மாபெரும் இந்தியாவை ஆளும் தகுதியை அவருக்கு அளித்து விடாது ஆகவே அவர் இந்தியாவின் பிரதமர் ஆக அருகதை அற்றவர். ஆகவே மக்களே அவருக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்பதே இவர்கள் சொல்ல வரும் செய்தியின் சாரமாகும். இதை நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு விதங்களில் மீண்டும் மீண்டும் எழுதியும் சொல்லியும் ஒரு விஷப் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த விமர்சனத்தில் உள்ள அபத்தத்தை முதலில் காணலாம்

மோடி குஜராத்தை நான்காவது முறையாக ஆட்சி செய்து வருகிறார். அவர் குஜராத்தை அமெரிக்கா போலவோ வளர்ந்த வளமான ஐரோப்பா நாடுகள் போலவோ இன்னும் முழுமையாக மாற்றி விடவில்லை. அதற்கு முன்பாக 50 ஆண்டுகள் மோசமான ஆட்சியை அவரால் வெறும் 15 ஆண்டுகளில் மாற்றி விடவும் முடியாது. அதற்கான மந்திரக் கோல் எதுவும் அவரிடம் கிடையாது. இருந்தாலும் எதிர்காலம் குறித்த தீர்க்கமான பார்வையுடனும் நேர்மையான கடுமையான உழைப்பினாலும் நிர்வாகத் திறனாலும் ஆட்சி நிர்வாகத்தைப் பெரும் அளவு கணணிப் படுத்துவதினால் ஊழலை குறைக்கும் விதமாகவும் ஆட்சி செய்து வருகிறார். அவரது நிர்வாகத்தினால் மின்சாரம், நீர் மேலாண்மை, விவசாயம் போன்ற கட்டுமானத் திட்டங்கள் பெரிதும் வளர்ச்சி அடைந்து அதற்கான விளைவுகளை அளிக்க ஆரம்பித்துள்ளன. ஐ நா சபை முதல் மத்திய அரசாங்கம் வரை அவரது நிர்வாகத்தைப் பாராட்டி ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக குஜராத் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து அவரைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருகிறார்கள். இத்தகைய சூழலில் அவர் மீது மாநில அனுபவம் மட்டுமே உள்ளவர் மத்திய அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற அவநம்பிக்கை விதைக்கப் பட்டு வருகின்றன.

மோடியை விட்டு விடலாம். ஒரு கார்ப்போரெட் நிர்வாகம் தனது நிர்வாக மேலதிகாரிகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கும்? ஒரு ஐ டி நிறுவனத்தையே எடுத்துக் கொள்வோம். ஒரு சின்ன ப்ராஜக்ட்டை மேனேஜ் செய்த மேனேஜரை அதை விட அடுத்து பெரிய ப்ராஜக்ட்டை நிர்வாகிக்க தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு விற்பனை நிறுவனத்தில் ஒரு மாவட்டத்தில் விற்பனையை மேலாண்மை செய்த அதிகாரியை மாநில அளவின் அதிகாரியாக தேர்ந்தெடுக்க்கிறார்கள். மாநில அனுபவம் உடையவர்களை அகில இந்தியாவுக்கோ அல்லது இந்தியாவின் பல்வேறு ரீஜியன்களுக்கோ அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தியா முழுவதும் நிர்வாகிக்கும் ஒரு பொறுப்புக்கு ஏற்கனவே இந்தியா முழுதும் நிர்வாகித்த அதிகாரிதான் வேண்டும் என்று எந்த நிறுவனமும் பிடிவாதம் பிடிப்பதில்லை. முன் அனுபவம் அதை விடச் சிறிய துறையிலோ, பகுதியிலோ இருந்தாலும் அதன் அடிப்படையிலேயே அதை விடப் பெரிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதுவே எந்தவொரு தனியார் நிறுவனங்களிலும் தகுதியுள்ள நபர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை. 

இந்திய அரசு பதவிகளை எடுத்துக் கொண்டாலும் சரி மாவட்ட நீதிபதிகளாக இருந்தவர்களை மாநில நீதிபதிகளாக்குகிறார்கள். மாநில நீதிபதிகளாக இருந்தவர்களைத்தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக்குகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதியை நியமிக்கும் பொழுது நீ ஏற்கனவே இந்தியாவின் தலமை நீதிபதியாக இருந்திருக்க வேண்டும் என்று எவரும் சொல்வதில்லை. நீ மாநில அளவில் ஹைக் கோர்ட்டுகளில்தான் நீதிபதியாக இருந்துள்ளாய் ஆகவே உன்னை சுப்ரீம் கோர்ட்டுக்கு அமர்த்த முடியாது என்று எவரையும் மறுப்பதில்லை

மாவட்ட அளவில் டி ஆர் ஓ வாக கலெக்டராக இருந்த ஐ ஏ எஸ் அதிகாரியைத்தான் மாநில அளவில் செயலராக எடுக்கிறார்கள். மாநில அனுபவும் உள்ளவரைத்தான் இந்தியா அளவில் பெரிய பொறுப்புக்களுக்கு நியமிக்கிறார்கள். இதுதான் தனியார் நிறுவனம் ஆனாலும் சரி இந்திய பொதுத் துறைகள் ஆனாலும் சரி இந்திய அரசாங்கம் ஆனாலும் சரி ஏன் உலக அளவிலும் சரி இதுதான் நடைமுறை.

ஆனால் மோடி என்று வரும் பொழுது மட்டும் இவர்கள் வைக்கும் வாதம் என்ன? அவருக்கு மாநில அனுபவம் மட்டுமே உள்ளது ஆகவே அவரை மத்தியில் பிரதமராக்க முடியாது என்று. சரி அந்த அபத்தமான வாதத்தை ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொண்டாலும் கூட அவருக்கு மாற்றாக இந்த அறிவு ஜீவிகள் வைப்பது எவரை? ராகுல் காந்தியையும், சோனியாவையும், சீத்தாராம் யெச்சூரிகளையும், கேஜ்ரிவால்களையும் தானே? ஏற்கனவே பிரதமராக இருந்த அனுபவம் உள்ளவர்தான் வேண்டும் என்றால் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்றால் அவர்கள் முன்னால் உள்ள தேர்வு என்ன? தேவகவுடாவும். வாஜ்பாயியும், குல்ஜாரிலால் நந்தாவும் தானே? மற்றவர்கள் உயிருடன் இல்லை. இதில் வாஜ்பாயியும் நந்தாவும் முதுமை அடைந்தவர்கள் சுயநினைவில் இல்லாதவர்கள். தேவகவுடா மட்டுமே பிரதமராக இருந்த அனுபவம் உடைய ஒரெ தகுதியுள்ள நபர். அவைத்தான் இந்த மோடி எதிர்ப்பாளர்கள் முன்னிறுத்துகிறார்களா என்ன? 

ஆக மோடி அளவு கூட தகுதியும் நிர்வாக அனுபவமும் இல்லாத ராகுல். சோனியா, கரத், யெச்சூரி போன்றவர்களை ஆதரிக்கும் இதே அறிவாளிகள் அவர்களை விட தனது திறமையையும் நிர்வாகத் திறனையும் பல முறை நீரூபித்து பல விருதுகளைப் பெற்ற மோடியை மூர்க்கமாக நிராகரிக்கிறார்கள். ஏன்? என்ன காரணம்? அவர் ஆட்சிக்கு வந்து விட்டால் குஜராத் போலவே இந்தியாவும் முன்னேறி நகர ஆரம்பித்து விடும். அப்படி இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்ல ஆரம்பித்து விட்டால் மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது, ஊழல்கள் செய்ய முடியாது, நாட்டை விற்க முடியாது, பிற அந்நிய மதங்களை வளர்க்க முடியாது. ஏழ்மையை வைத்துப் பிழைப்பு நடத்த முடியாது. இந்து மதத்தை நம்பும் ஒருவர் அதை ஏற்றுக் கொள்ளும் ஒருவர் பிரதமர் ஆவதைக் கனவிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே அனைத்து விதமான மோடி எதிர்ப்பாளர்களும் இவை போன்ற சொத்தைக் காரணங்களை முன் வைத்து மோடியை எதிர்த்து அவர் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட பாடு படுகிறார்கள். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று திரிகிறார்கள். 

மோடியினால் சிக்கலான இந்தியாவை நிர்வாகிக்க முடியாது என்பது மற்றொரு வாதம். அதுவும் இதைப் போலவே அபத்தமான ஒரு வாதமே. ஆகவே அனைத்து விதங்களிலும் முன் அனுபவமும் திறமையும் நேர்மையும் உடைய ஒரு தகுதியுள்ள தலைவர் மோடி அவர் குஜராத் போலவே இந்தியாவையும் நிர்வாகிப்பார் என்ற நம்பிக்கையை மக்கள் வைத்து அவரை ஆதரிக்க வேண்டும்.

செய்வார்களா? செய்வார்களா?


Saturday, April 5, 2014

இந்தியாவுக்கு வாக்களிப்பீர்!


- ச திருமலை



அருமை நண்பர் ச திருமலை தனது முகநூல் பக்கத்தில் எழுதி பகிர்ந்து கொண்டது. நண்பருகளுக்காக இங்கேயும்..! - Thirumalai Sa

நரேந்திர மோதியின் தலமையிலான பி ஜே பி கட்சி ஓரளவுக்கு போதுமான இடங்களைப் பெற்று சில கூட்டணிகள் மூலமாகவோ அல்லது தனியாகவோ வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

இந்தக் கருத்துக் கணிப்புகளை அப்படியே நம்ப வேண்டியதோ எடுத்துக் கொள்ள வேண்டியதோ அவசியம் கிடையாது. இருந்தாலும் அவை அனைத்துமே ஒரே விதமான கணிப்புகளை முன் வைக்கின்றன. இவற்றை ஒரு விதமான அறிகுறியாக கருதிக் கொண்டு மோதிக்குச் செல்லும் இடமில்லமெல்லாம் வரலாறு காணாத கூட்டம் கூடுவதையும் மக்களிடம் பரவலாக இருக்கும் எதிர்பாப்புக்களையும் சேர்த்து நோக்கும் பொழுது இந்தக் கணிப்புகள் அனேகமாக சாத்தியமாகி விடும் என்று நம்புவதற்கான முகாந்திரங்கள் உள்ளன.

மோதியின் வெற்றி அனேகமாக உறுதி செய்யப் பட்டு விட்டாலும் கூட இரண்டு பெரும் அச்சுறுத்தல்களை நம்மால் ஒதுக்கி விட முடியாது. அவை இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் அவர் உயிருக்கு இருக்கும் அபாயம். இரண்டாவது எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின். 

இந்த எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்களில் ரிமோட்டாக ஊடுருவி அதில் இடப் பட்டுள்ள ஓட்டுக்களை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மாற்றி விடலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இதை இந்திய கோர்ட்டுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த சூழ்நிலையில் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கின் பேரில் ஓட்டுப் பதியும் பொழுது ஒரு அச்சிட்ட ரசீதையும் அளிக்கும் விதமாக அந்த இயந்திரத்தில் மாறுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் வழக்கம் போலவே இந்தியக் கோர்ட்டுகளின் வழ வழா கொழ கொழா தீர்ப்புகளைப் போலவே அதை இந்தத் தேர்தலுக்குள்ளாகவே செய்ய வேண்டும் என்று உறுதியாக எந்தத் தீர்ப்பையும் வழங்காதபடியால் அதையே சாக்காகக் கொண்டு காங்கிரஸ் அரசாங்கம் ஓட்டுப் பெட்டியில் மாற்றம் செய்வதற்கான நிதியை ஒதுக்காமல் இருந்து கொண்டது. அதனால் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் அதே சந்தேகத்துக்குரிய இயந்திரங்களே மீண்டும் பயன் படுத்தப் படப் போகின்றன. அந்த மெஷின்களில் சில தொகுதிகளில் மாறுதல் செய்வதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடித்து விடக் கூடிய அபாயகரமான சூழ்நிலையும் நிலவி வருகிறது. அப்படி நடந்து விடாது என்பதை எவரும் உறுதியாகச் சொல்லி விட முடியாது. 

மோடியின் வெற்றியை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று காங்கிரஸ் கம்னியுஸ்டு கட்சிகள் முதல் வெளிநாடுகள் வரை முயற்சி செய்து வருகின்றன. அவரை கொலை செய்தாவது அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கரண் தப்பார், ஞாநி சங்கரன் போன்ற பத்திரிகையாளர் முதல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வரை ஒரே குரலில் சொல்கிறார்கள். இதை இந்தியாவின் அறிவு ஜீவிகளும் முற்போக்குவாதிகளும் மவுனமாக ஆதரித்தும் வருகிறார்கள். இப்படியாகப் பட்ட ஒரு சூழலில் வோட்டிங் மெஷின்கள் மூலமாக இந்தத் தேர்தலின் முடிவுகள் மாற்றப் படுவதற்கும் பெருத்த வாய்ப்புகள் உள்ளன.

இந்த இரு அச்சுறுத்தல்களையும் மீறி இந்தியாவில் உண்மையான தேர்தல் நடந்து ஆண்டவன் அருளால் மோடியின் உயிருக்கு ஆபத்து ஏதும் நேராமல் இருக்கும் பட்சத்தில் பி ஜே பி மத்தியில் மோடியின் தலைமையில் ஆட்சிக்கு வருவதை எவரும் தடுத்து விட முடியாது.

காங்கிரஸ், கம்னிய்ஸ்டு, இஸ்லாமிய பயங்கரவாதிகள், மதமாற்ற சக்திகள், பாக்கிஸ்தான், சீனா, இந்திய மீடியாக்கள், முற்போக்கு சூடோ செக்குலார் அறிவு ஜீவிகள் போன்ற அனைத்து விதமான இந்திய விரோத நாசகார சக்திகளும் ஒற்றுமையாக எப்பாடு பட்டாவது மோடியை நிறுத்தி விட வேண்டும் என்று முயன்று வருகிறார்கள். அதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் இந்தியாவின் மக்கள் செய்யக் கூடிய காரியம் ஒன்றே ஒன்றுதான். அனைவரும் ஜாதி மத வேறுபாடுகளை மறந்து நாட்டின் முன்னேற்றத்தில் மட்டுமே அக்கறை கொண்டு இத்தாலியக் கொள்ளைக் கும்பலின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க மோடி தலமையிலான பி ஜே பி க்கு தாமரைச் சின்னத்தில் வாக்களிப்பது மட்டுமே இந்திய விரோதிகளின் சதியை முறியடிக்கும். அதை இந்திய வாக்காளர்கள் செய்வார்களா? செய்வார்களா?

இந்தத் தொடரில் நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன் என்பதைச் சொல்லவிருக்கிறேன். அதற்கு முன்னால் நரேந்திர மோடி மீது அளவற்ற காழ்ப்புடனும் ஆழ்ந்த வெறுப்புடனும் இடதுசாரி அறிவு ஜீவிகளினாலும், மீடியாக்களீனாலும், இந்திய தேச விரோதிகளினாலும் வைக்கப் படும் சில விமர்சனங்களையும் விரிவாக அலசவிருக்கிறேன். நேரம் இருக்கும் பொழுதெல்லாம் தொடர்வேன். 

தொடரும்.......



Sunday, March 30, 2014

இத்தாலி காங்கிரஸை விரட்ட வேண்டும் - ஏன்?



பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டை தங்கள் வியாபாரத்திற்குச் சந்தையாக உபயோகித்தனர். அதே காலனி ஆதிக்கவழியில் தான் இத்தாலிகாங்கிரஸும் நம் நாட்டை தன் சொந்த நாடான இத்தாலிக்கு வியாபாரச்சந்தையாக ஆக்கியிருக்கிறார். இதனை உணர்ந்து கொள்ளும் எந்த ஒரு இந்தியனும் இத்தாலி காங்கிரஸ்க்கும் அதனது கூட்டனிக்கும் எந்த ஜென்மத்திலும் வாக்களிக்க மாட்டார்கள். அவர்களை நாட்டை விட்டே விரட்டுவார்கள்.

ஒரு சிறிய உதாரணத்தைப் பார்க்கலாம்:

சில மாதங்களுக்க்கு முன்னால் மின் மீட்டர்களுக்கு மீட்டர் பாக்ஸ்களுக்கு பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டது நினைவிருக்கலாம். பொதுவாக இது போன்ற மின் மீட்டர்கள் மற்றும் மீட்டர் பாக்ஸ்களெல்லாம் மும்பை மற்றும் டெல்லி என வட இந்திய மாநிலங்களில் இருந்தே அரசாங்கத்திற்கு அதாவது மின்வாரியத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். ஆனால் இந்த முறை தட்டுப்பாடு ஏற்பட்ட பிறகு வந்த மின் மீட்டர் பாக்ஸ்களிலெல்லாம் ஒரு வித்தியாசம் தென்பட்டது. அதாவது அந்த மின் மீட்டர்கள் பொருத்தப்பட்ட எல்லா டப்பாக்களிலுமே 'SEI' அல்லது 'OTTO' என்று எழுதியிருக்கும். இவையெல்லாம் இத்தாலிய வார்த்தைகள். 'SEI' என்றால் 'ஆறு' , ஆங்கிலத்தில் 'SIX' என்ற எண்ணைக் குறிக்கும். 'OTTO' என்றால் தமிழில்' எட்டு', ஆங்கிலத்தில் 'EIGHT' என்ற எண்ணைக் குறிக்கும். இப்படி இத்தாலிய மொழிகளடங்கிய இத்தாலிய பொருட்களை இந்தியாவில் வாங்கச் செய்து மக்களிக்கு அரசு நிறுவனங்கள் மூலமாகவே விற்பனை செய்விக்கப்படுகிறது. இத்தாலி நாட்டுப் பொருட்களை உள்நாட்டில் விற்பனை செய்வதர்காகவே உள்நாட்டுக் கொள்முதல்களை நிறுத்திவைத்து மெதுமெதுவாக இத்தாலிப்பொருட்களை இங்கே கொன்டுவந்து விற்கிறார்கள். இதனால் சில தற்காலிக தட்டுப்பாடுகளும் உண்டாகின்றன. இது போன்ற பல பொருட்கள் இத்தாலிய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா இத்தாலியின் காலனி ஆதிக்கத்தில் இருக்கிறது நாமெல்லாம் இத்தாலிக்காரியின் அடிமைகளாக இருக்கிறோம் என்பதை மறக்காதீர்கள். இத்தாலி காங்கிரஸை நாட்டைவிட்டே துரத்துங்கள். காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுங்கள்.

அதுமட்டுமல்ல, சமீபத்தில் ஜெயலலிதாவிற்கு பொருளாதாரம் தெரியாது என சிதம்பரம் செட்டியார் கூறுகிறார். சரி இவருக்கு பொருளாதாரம் என்ன தெரியும்?? மூலை முடுக்கென்று ஒரு இடம் விடாமல் உழைப்பவர்களின் பணத்தை வரி என்ற பெயரில் மொத்தமாகப் பிடுங்குவதைத்தவிர?? ஒரு காலத்தில் 'டியூயல் கரன்ஸி ஸிஸ்ட்டம்' அதாவது ஒரு நாட்டில் உள்நாட்டு கரன்ஸியுடன் டாலரையும் சேர்த்து புழங்க வேண்டுமென அமெரிக்கா வளரும் நாடுகளைக் கட்டாயப்படுத்திய போது அதனை ஏற்ற பல நாடுங்கள் தங்கள் உள்நாட்டு கரன்ஸி மதிப்பு சரிந்து அரசாங்கமே திவாலாயின. பின்னர் அதனை ஏற்ற அனைத்து நாடுகளும் டாலர் புழக்கத்திற்கு அதாவது 'டியூயல் கரன்ஸி ஸிஸ்ட்டம்' த்தை தடை செய்தன. அந்த சமயத்தில் இத்திட்டத்தை இந்தியாவில் புகுத்தியே ஆக வேண்டும் என பிடிவாதமாக ஒற்றைக்காலில் நின்றவர் தான் இந்த சிதம்பரம். நல்ல வேளையாக நாட்டுப்பற்றுள்ள ரிசர்வ் பேங்க் கவர்னர் உறுதியாக திட்டத்தை ஏற்கக்கூடாது என மறுத்ததாலும் பல எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பாலும் நம் நாடு திவாலாகாமல் தப்பித்தது. அப்படிப்பட்டவர் ஜெயலலிதாவிற்கு பொருளாதாரம் தெரியாது என விமர்சிக்கிறார்.

இப்போது ஜெயலலிதாவிற்கு பொருளாதாரம் தெரியுமா தெரியாதா என்பதல்ல விஷயம். ஆனால் சிதம்பரம் செட்டியார் அந்நியர்களின் கால்களைக் கழுவி நக்குவதற்காக நாட்டுப்பொருளாதாரத்தை எப்படி எல்லாம் அடகு வைக்கத்துணிந்தவர் என்பதுதான் முக்கியம். 

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கிளைநாடாக பாரதத்தை மாற்றவும் இத்தாலிய கிறிஸ்தவ ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடாக பாரதத்தை மாற்றவும் இத்தாலி காங்கிரஸ் கடந்த பத்து வருஷங்களாக பெருமுயற்சி எடுத்து வருகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை எந்த ஒரு அத்தியாவசியத்தேவையும் வியாபாரமாக இருக்கவேண்டும் என்பதுதான். அரசு நிவாரணமாக அதாவது 'ஸப்ஸிடி'யாக இலவசமாக, மக்கள் நலனுக்காக என அரசாங்கம் எந்த பொறுப்பையும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே. அதற்கு காரணம் உண்டு. ஒரு நாட்டின் அரசாங்கம் அத்தியாவசியப்பொருளின் உற்பத்தி அல்லது விநியோகத்தை தன் கையிலேயே வைத்திருந்தால் அந்தப் பொருளில் வெளி ஆட்கள் அதாவது வெளி நாடுகள் வியாபாரம் செய்ய முடியாது. அப்படி சுதந்திரமாக அத்தகைய பொருளில் வியாபாரம் செய்ய வேண்டுமெனில் ஒரு நாட்டரசாங்கம் அத்தியாவசிய பொருள்களின் உற்பத்தி அல்லது விநியோகத்திலிருந்து வெளியேற வேன்டும். அப்போது தான் அமெரிக்கா மற்றும் அந்நிய நாட்டரசாங்கங்கள் பாரத மக்களின் அத்தியாவசிய பொருள்களை பாரதத்தில் வியாபாரம் செய்து அதன் மீது தனது ஆதிக்கத்தைத் தினித்து ஒரு காலத்தில் அப்பொருள்களுக்கு அந்நியநாடுகளையே சார்ந்திருக்கச் செய்து நிரந்தர அடிமைகளாக மாற்ற முடியும். அதனால் உலக வங்கி என்னும் தரகனை கையில் வைத்துக் கொண்டு அமெரிக்கா வளரும் நாடுகளையெல்லாம் மிரட்டி அந்நாடுகள் தங்கள் சொந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் வரிப்பணத்திலேயே செய்யும் உதவிகளை நிறுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுகொண்டிருக்கிறது.

அதற்கு முக்கியமான ஏறக்குறைய அனைத்து மக்களும் ஒருங்கே பாதிக்கப்பட்ட விஷயம் சமயல் எரிவாயு. சமயல் எரிவாயு விஷயத்தில் மிகவும் கேவலமான ஒரு திட்டத்தை இத்தாலி காங்கிரஸ் நடைமுறைப்படுத்த முயன்றது. மக்களுக்குக் விநியோகம் செய்யப்ப்படும் சமயல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அரசாங்கம் நம்முடைய வரிப்பணத்திலிருந்தே நமக்கு விலையில் சலுகை கொடுக்கிறது. அப்படி 'ஸப்ஸிடியில்' விநியோகிக்கப்படும் சிலிண்டர்களுக்கான வித்தியாசத் தொகையை அரசாங்கம் எண்ணெய் நிறுவனங்களுக்கு நேரடியாகக் கொடுத்துவிடும். அதுவும் நமது வரிப்பணம் தான் அன்றி வேறில்லை என்பதையும் நினைவில் கொள்க. அப்படிப்பட்ட சலுகையைக் கூட ஏன் கொடுக்கிறாய்? எல்லாவற்றையும் மக்கள் தலையில் கட்டு என உலகவங்கி மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் கூறுவதால் அந்த சலுகைகளை நிறுத்தப்பார்க்கிறது இத்தாலி காங்கிரஸ். அதை உடனடியாக நிறுத்தினால் மக்கள் கொதித்துப் போவார்களே என்ன செய்யலாம் என யோசித்த அயோக்கியர்கள் அதற்கான மாற்று வழி ஒன்றை கண்டுபிடித்தனர். 'உங்கள் பணம் உங்களுக்கே' என ஒரு கோஷத்தைப் போடத்துவங்கினர்.

அரசாங்கம் நேரடியாக எண்ணெய் நிறுவனங்களுக்குச் செலுத்தும் 'சப்ஸிடி' தொகையை மக்களுக்க்கு நேரடியாக அவரவர் வாங்கும் சிலிண்டர்களுக்கு கொடுத்துவிடுவது இத்திட்டத்தின் முதல்படியாக தீர்மானிக்கப்பட்டது. அதே நேரத்தில் ''உங்கள் பணம் உங்களுக்கே' என்று சொல்லி மக்களுக்கு அரசாங்கம் நேரடியாக காசு கொடுத்தால் கையில் பணத்தைப் பார்பவர்கள் ஏதோ காங்கிரஸ் அரசு நமக்கு பணம் கொடுத்து உதவுகிறது என மயங்கி சந்தோஷப்பட்டு அவர்களுக்கே அதிக ஓட்டும் போட்டு விடுவார்கள் என்றும் எண்ணியது. இந்த அயோக்கியத்தனத்தை முறைப்படுத்த ஆதார் அட்டை என்கிற திட்டத்தையும் கொண்டு வந்தது.

இந்த ஆதார் அட்டை திட்டமே மிகப்பெரிய தேசத்துரோகத் திட்டம். காரணம் இத்திட்டத்தின் படி சேகரிக்கப்படும் ஒவ்வொரு தனிமனிதரின் விபரங்களும் அமெரிக்காவில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது. ஒரு நாட்டு மக்களின் அடிப்படை அடையாளங்கள் பற்றிய விபரங்களை மானமுள்ள எந்த நாடும் அடுத்த நாட்டிற்கு அனுப்பாது. ஆனால் பாரதத்தை ஆளும் இத்தாலி அரசோ தன் நாட்டின் நூறு கோடி மக்களின் வாழிட மற்றும் உடற்கூறு விபரங்கள் அடங்கிய அத்தனை விபரங்களையும் அமெரிக்காவிற்கு தாரை வார்க்கிறது என்றால் உங்களுக்கெல்லாம் அது ஏற்புடையதாக இருக்கிறதா? உங்கள் பெயர், தாய் தந்தையர் பெயர்,மனைவி குழந்தைகள் பெயர், வாழும் இடம் முகவரியுடன், மற்றும் உங்கள் கைரேகை அமைப்பு சகிதம் அமெரிக்காக்காரன்னுக்கு தெரியப்போகிறது என்றால் உள்நாட்டில் உங்கள் பாதுகாப்பு என்ன நிலையில் இருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள்?,

இந்த திட்டப்படி பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் கைரேகை போன்ற வாழிடம் மற்றும் உடல்கூறு ரீதியான அனைத்து விபரங்களும் அமெரிக்க நிறுவனம் ஒன்றிக்கு அனுப்பபடுகிறது. அந்த நிறுவனம் அமெரிக்க உளவு அமைப்பான சி ஐ ஏ வின் சகோதர நிறுவனம் போன்ற ஒரு நிறுவனமாகும். இச்செயல் ஏறக்குறைய அமெரிக்காவின் உளவு நிறுவனத்திற்கு நேரடியாக பாரத மக்களைக் காட்டிக்கொடுத்த செயலைப்போன்றதாகும். இத்தகைய நிறுவனங்கள் ஒரு நாட்டின் விபரங்களில் எதையெல்லாம் தெரிந்து கொள்ளக்கூடாதோ அவை அத்தனையையும் இத்தாலி காங்கிரஸ் அமெரிக்காவின் உளவு அமைப்புக்கு நேரடியாக தாரை வார்க்கிறது. இந்த விபரங்கள் தெரியாமல் நாமும் நமது அனைத்து விபரங்களையும் கொடுத்து போட்டோவுக்கு போஸும் கொடுத்து ஆதார் அட்டை என்று ஒன்றை வாங்கி வைத்து விடுகிறோம். இது பாரத மக்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் அல்லவா? இதையெல்லாம் அமெரிக்காவின் ஏஜன்டாகவே மாறி இந்நாட்டு மக்களை அமெரிக்காவிடம் அடமானம் வைக்கத்துணிந்த இத்தாலி காங்கிரஸாலும் இத்தாலிக்காரியாலும் மட்டுமே முடியும் என்பது தானே உண்மை!

இப்படிப்பட்ட துரோகத்தையும் மக்களுக்குச் செய்துவிட்டு எரிவாயு சிலிண்டரையும் மக்களுக்கு ஒழுங்காக வழங்காமல் அலைக்கழித்து இந்நாட்டு மக்களை ஆட்டுமந்தைகளாக நடத்தும் இத்தாலி காங்கிரஸ் அடியோடு ஒழிக்கப்படவேண்டும் என்பது மட்டுமல்ல, பாரத மக்களையெல்லாம் அடிமைப்படுத்தி அடமானம் வைக்கும் இத்தாலிக்காரிக்காரியை இந்த நாட்டை விட்டே துரத்த வேண்டும்.

இப்படியாக அரசாங்கம் மக்களுக்கென வழங்கும் சலுகைகளை படிப்படியாக குறைப்பது , அரசு ஆஸ்பத்திரிகள் கட்டாமல் தனியார் ஆஸ்பத்திரிகள் பெருக ஊக்குவிப்பது, அரசு பள்ளிகள் , கல்லூரிகள் கட்டப்படாமல் அவைகளும் தனியார்களின் வியாபரமாக மாறுவதற்கு ஊக்குவிப்பது என நாட்டு மக்களை எவ்வளவுக்கெவ்வளவு ஏழைகளாக உணரவைக்க முடியுமோ அவ்வளவு வேலைகளையும் இத்தாலி காங்கிரஸ் செய்கிறது. இவற்றிற்கெல்லாம் திட்டம் வகுத்து நாட்டை அடமானம் வைக்கக்கைத்தடியாக இருந்து துணைபோவது சிதம்பரம் செட்டியார். இன்றைக்கு தன் சொந்த தொகுதியில் தான் தோற்றுவிடுவோம் என பயந்து தனது தத்புத்திரனை நிறுத்தி தேர்தலில் போட்டியிட வைத்திருக்கிறார். நம்மக்களை அமெரிக்காவிற்கும் இத்தாலிக்கும் அடிமைகளாக்கி விட்டு கௌரவமாக வெட்கமின்றி வெளியே தலைகாட்டும் இவர்களையெல்லாம் நாட்டை விட்டே ஓட ஓட துரத்த வேண்டும்

செய்வீர்களா?? செய்வீர்களா?? நீங்கள் செய்வீர்களா?



Sunday, December 22, 2013

"நாட்டைக் காக்க வாருங்கள்" மோடியின் பேச்சு - "மோடியைக் கொல்லுங்கள்" சன் டி வி க்காரன் பேச்சு!


இன்றைய தினம் லட்சக்கணக்கான மும்பைவாசிகள் முன்னிலையில் மோடி உரையாற்றினார். அவரது உரையிலிருந்து சில துளிகளைப்பார்க்கலாம்:

குவிட் இன்டியா மூவ்மெண்ட் போல இப்போது ' Congress Free India ' கோஷத்துடன் புறப்படுங்கள் சகோதரர்களே, காங்கிரஸிடமிருந்து இந்தியாவிற்கு முக்தி கொடுங்கள். காங்கிரஸ் ஃப்ரீ இந்தியாவை உருவாக்குவோம். அதுவரை தேசத்தில் அமைதி இருக்காது.

மொழியால் அடித்துக்கொள்ளுங்கள், தண்ணீரின் பெயரால் அடித்துக் கொள்ளுங்கள்,  மதத்தால் அடித்துக்கொள்ளுங்கள் என பிரித்தாளும் கொள்கையை கையாண்டு இந்த நாட்டை துண்டாடி வருகிறது காங்கிரஸ்.

கருப்புபணத்தை வெளிநாட்டில் பதுக்குகிறார்கள். நாங்களெல்லாம் வெளிநாட்டில் எங்களுக்குக் கருப்புப்பணம் இல்லை என எழுதிக் கொடுத்தோம். அது போல காங்கிரஸிடம்  நீங்களும் இப்படி எழுதிக் கொடுங்கள் பார்க்கலாம் என்றோம். இன்று வரை யாரும் முன்வர வில்லை. வெளி நாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் அத்தனை கருப்புப்பணத்தையும் கொண்டு நம் நாட்டு ஏழைகளுக்கு உதலாமா இல்லையா?

படிக்கிறீர்கள், பரீட்சை எழுதுகிறீர்கள், ஆனால் அரசு வேலை கிடைக்கிறதா, சிபாரிசு தேவைப்படுகிறது. சிபாரிசுக்கு என்ன வேண்டும், மஹாத்மா காந்தி படம் போட்ட நோட்டுக்கள் வேண்டும். ஒரு ஏழை தாயின் பிள்ளை எப்படி காந்தி படம் போட்ட நோட்டு கொடுப்பான். இன்டெர்வியூ என்ற பெயரில் இப்படி கொள்ளை அடிக்கிறார்கள். ஆனால் குஜராத்தில் நான் என்ன செய்தேன் இன்டெர்வியூ என்கிற முறையை ரத்து செய்தேன், பரீட்சை எழுதி தேர்வு பெற்ற லட்சக்கனக்கான பேரையும் கம்பியூட்டரில் ஏற்றினேன், கம்பியூட்டரிடம் கேட்டேன் இவர்களில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களை எனக்குக் காட்டு என்று. அது காட்டிய நபர்களுக்கெல்லாம் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். குஜராத் அரசு வெள்ளைத்தாளைப் போல சுத்தமானதாக இருக்கிறது.

காங்கிரஸ் நண்பர்களே கேட்டுக்கொள்ளுங்கள்?? டிவியின் பர்தாக்களுக்குப் பின்னால் மோடி இருக்கிறேனோ இல்லையோ, கோடிக்கனக்கான ஜனங்களின் மனதில் இருக்கிறேன். டிவிக்களை நீங்கள் மறைப்பதால் மோடியை மறைக்கமுடியாது" என்றார் மோடி. இவ்வாறு மோடி குறிப்படதற்கு காரணம், மும்பையில் பல இடங்களில் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு இருந்தது.

லட்சக்கணக்கானோரது கரகோஷத்தோடும் மோடியை வாழ்த்திய கோஷத்தோடும் பிரம்மாண்டமாக கூட்டம் நிறைவேறியது.

'மோடியைக் கொல்லுங்கள்' - சன் டி வி வீரபாண்டியனின் வன்முறை தூண்டிய பேச்சு::



இதற்கிடையில் மோடியைக் கொல்லுங்கள் என முஸ்லீம்களைத் தூண்டி விட்டு சன் டி வியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வீரபாண்டியன் முஸ்லீம்களின் கூட்டத்தில் நின்று பேசிய வீடியோ வெளியாகி பெரிய எதிர்ப்பை சந்தித்து வருகிறது. சன் டி வி தனக்கிருக்கும் கொஞ்சநஞ்ச மதிப்பையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் இந்த நபரை தொகுப்பாளர் வேலையிலிருந்து சன் டி வி நிர்வாகம்  நீக்க வேண்டும்.

இந்த வீடியோ வெளியான விதம் மற்றும் முஸ்லீம்களால் அந்தப்பகுதி பயத்தின் காரணமாக நீக்கப்பட்டது பற்றியும் பல தகவல்களை நண்பர் பால கௌதமன் தனது தளத்தில் விவரித்திருக்கிறார். 

அதில் வீரபாண்டியனின் குறுக்கு புத்திக்கான ஒரு சுவாரஸ்யத்தை அவர்  இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"இதே விஷப்பாண்டியன் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு பற்றிய விவாதத்தில், நானும் பேராசிரியர் நன்னன் அவர்களும் கலந்து கொண்டோம். அதில் என் கையே ஓங்கியிருந்தது. அதில் பல பகுதிகளை வெட்டியபின்னும், ஒளிபரப்பப்பட்ட விவாதம், சித்திரைதான் புத்தாண்டு என்பதை நிரூபித்து, எதிர் அணியின் வாதத்தை கேலிக்கூத்தாக்கியது. எல்லா விவாதங்களையும் வலைத்தளத்தில் போடும் சன் நியூஸ் தொலைக்காட்சி, இந்த விவாதத்தை மட்டும் இதுவரை வலைத்தளத்தில் போடவில்லை! இது தான் இவரின் நடுநிலமை!

இதில் கூட ஒரு நகைச்சுவை சம்பவம் நடந்தது. பேராசிரியர் நன்னன் அவர்கள் ஒரு சிறிய சூட் கேஸை எடுத்து வந்திருந்தார். விவாதம் தொடங்கும் முன், தை தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கான சான்றுகள் அந்தப் பெட்டியில் இருப்பதாகச் சொன்னார் வீரபாண்டியன்! சொன்னவுடன் நான் பயந்து விடுவேன் என்ற நினைப்பு! ஏதோ பெரிய சைகாலஜிஸ்ட் என்ற எண்ணம்! விவாதத்தின் இடைவேளையின் போது பேராசிரியர் நன்னன் அவர்கள் அந்த பெட்டியைத் திறந்தார். அதில் ஒரு தண்ணீர் பாட்டில்தான் இருந்தது. நான் நிமிர்ந்து பார்த்தேன் வீரபாண்டியனை! பாவம் என் முகத்தைக்கூட அவரால் பார்க்க முடியவில்லை."

அது பற்றி விபரமாகப் படிக்க க்ளிக்கவும்: சன் நியூஸில் ஒரு பின் லாடன்



Thursday, September 26, 2013

Sunday, December 11, 2011

மோடியின் சாதனைகளும் முஸ்லீம்களின் மகிழ்ச்சியும்!



நாங்கள் 13.11.2011 மதியம் 12 மணிக்கு திரு நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்தோம். பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக எங்களுக்குப் பல சோதனைகள் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

நாங்கள் அமர்ந்து சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்த பொழுது 'வணக்கம்' என்று ஒரு கம்பீரமான குரல் கேட்டது. எழுந்து நின்று திரும்பிப் பார்த்தால், மோடி சிரித்த படியே வந்து கொண்டிருந்தார். 'ஸ்வாகதம்' என்று கூறினார். நாங்கள் பதிலுக்கு அவருக்கு வணக்கம் தெரிவித்து, எங்கள் குழுவினர் எல்லோரையும் அரிமுகப்படுத்தினோம். அவர் முகத்தில் மிகவும் மகிழ்ச்சி பொங்கியது.

தன்னுடைய சட்டசபைத் தொகுதியில் அதிகம் பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தான் என்றும் அவர்களுடைய பிரதிநிதியாக திகழ்வதில் தனக்கு எப்போதும் மனமகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.

மோடி "நீங்கள் உள்ளே வரும்போது செக்யூரிட்டி காரணமாக பெரிய தொந்திரவுகள் எதுவும் இருந்தனவா?" என்று கேட்டார். "நாங்கள், அப்படி எதுவும் இல்லை' என்றோம்.

ஆனால் 'என்னென்ன சோதனைகள் செய்யப்பட வேண்டுமோ, அத்தனையும் முறைப்படி செய்யப்பட்டன. அது உங்களுக்குத் தெரியாத வகையில் நடந்தது. அது தான் இங்குள்ள அதிகாரிகளின் திறமையும், நிர்வாகத்தின் சாமர்த்தியமும்" என்று விளக்கினார்.

ரயில் பயணத்தின் போது, குஜராத் எல்லையில் நுழைந்தவுடனேயே எங்களுக்குப் பெரிய வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. எல்லா கிராமங்களிலும் விளக்கு வசதி இருப்பது நன்றாகவே தெரிந்தது. ஒவ்வொரு தெருவின் இறுதிவரை, பிரகாசமான தெருவிளக்குகள் எரிவதைப் பார்க்க முடிந்தது. கார்களில் பயணிக்கும் போது, தெருக்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கின்றன என்பதையும், அங்கு சாலைகள் எவ்வளவு சீராக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம்.

அஹமாதாபாத்திலும், சூரத்திலும் நாங்கள் சென்ற கார்களை ஓட்டியவர்கள் அனேகமாக முஸ்லிம்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள், 'மோடியினால் தான் நாங்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறோம்' என்று மனத் திருப்தியுடன் சொன்னது, எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும் சொல்வதும், நடைமுறை உண்மையும் வெவ்வேறாக இருக்கின்றன என்பதைக் கண்ணால் பார்த்தோம், காதால் கேட்டோம், புரிந்து கொண்டோம்.

நாங்கள் பல இடங்களுக்குச் சென்றோம். எங்கு சென்றாலும் அங்கு மக்கள், 'இந்த வசதி எங்களுக்கு மோடியால்தான் வந்தது... இந்த விஷயத்தை மோடிதான் உருவாக்கினார்.. நாங்கள் செய்த புன்ணியம் மோடி எங்களுக்கு முதல்வராகக் கிடைத்திருக்கிறார்..' என்றெல்லாம் பெருமிதத்தோடு கூறியது, குஜராத்தில் அவருக்குள்ள மதிப்பையும் மரியாதையையும் எங்களுக்கு உணர்த்தியது.

நரேந்திர மோடியைச் சந்திக்கச் சென்றபோது, எங்கள் குழுவில் ஒருவர் உனர்ச்சி வசப்பட்டு, அவர் காலில் விழுந்தார். மோடி அவரைத் தடுத்து, 'தயவு செய்து என் காலில் விழாதீர்கள். உங்கள் தலை என் காலில் பட்டால் என் தலையில் கனம் ஏறி விடும்' என்றார்.

-'டி வி' புகழ் வரதராஜன்

நன்றி:- இவ்வார துக்ளக்



இம்முறை ஜெயலலிதாவிற்கு ஓட்டுப் போட்டவர்களெல்லாம் அவரிடம் இத்தகைய ஒரு ஆட்சியை எதிர்பார்த்து தான் என்பதை ஜெயா உணர்வாரா?

Monday, November 15, 2010

சாதனையாளர் மதிப்பிற்குரிய நரேந்திர மோடி!


நரேந்திர மோதி

அமைச்சர் ஆ.ராசாவை துறத்தாத குறையாக ஒரு வழியாக வெளியேற்றி விட்டார்கள். ஊழல்களால் உண்டான அவப்பெயரை மறைக்க தி மு க சப்பைக்கட்டு பேச்சுக்களை பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் சரியாக அவர்களின் முகத்தில் அறைந்தார் போல சென்னையில் நேர்மையாகவும் மக்கள் வளர்ச்சிக்காகவும் ஒரு அரசு எப்படி இயங்க வேண்டும் என்று பேட்டி அளித்திருக்கிறார் திரு நரேந்திர மோடி அவர்கள்! தமிழகம் மட்டுமல்ல பல கேடு கெட்ட ஊழல் அரசியல் வாதிகள் இவரைப் பார்த்தாவது பாடம் கற்க வேண்டும்! நரேந்திர மோடியை என்ன தான் மத வாதி என்று ஒட்டு மொத்த ஊடகங்களின் துணையைக் கொண்டு காங்கிரஸ் அரசு பிரசாரம் செய்யப்பார்த்தாலும் உண்மை என்னவோ வேறாகத் தான் இருக்கிறது என்பது மோடிக்கு ஓட்டு போடும் முஸ்லீம்களின் எண்ணிக்கையே காட்டிவிடுகிறது!

இவரை மரணத்தின் வியாபாரி என்று தூற்றிப்பார்த்தும் இத்தாலி சோனியாவால் குஜராத்தில் தனது இத்தாலி ராஜ்ஜியத்தை நிறுவ முடியவில்லை. தமிழகத்தைப் போலவே குஜராத் சட்டசபைத் தேர்தலின் போதும் பல இலவச திட்டங்களை அறிவித்துப் பார்த்தது இத்தாலி காங்கிரஸ். ஆனால் இலவசங்களைப் புறக்கனித்த குஜராத்தியர்கள் காங்கிரஸையும் புறக்கனித்தனர்.

நரேந்திர மோடியிடம் ஒரு நிருபர் கேட்டார், "உங்கள் பார்வையில் செக்யூலரிஸம் என்றால் என்ன?" அதற்கு மோடியோ, "முழுமையான வளர்ச்சி, எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில் நாட்டை முழுமையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே உண்மையான செக்யூலரிசம்" என்றார்.

காந்தி உருவாக்கிய சுதேசி காங்கிரஸ் தற்போது இத்தாலி காங்கிரஸாகத்தான் இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை. பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் சோனியாவின் தலையசைப்பை கண்டே பணி செய்கின்றனர். ஆக காங்கிரஸின் முழு நடவடிக்கைகளுக்கும் சோனியாவே மூலக்காரணி என்கிற முறையில் மத்திய அரசின் குறைகளை குறிப்பிட நேரடியாக சோனியாவைச் சுட்டியே கேள்வி எழுப்பும் ஒரே இந்திய அரசியல் தலைவர் திரு.நரேந்திர மோடி மட்டுமே! அதனால் தான் அவர் மீது தீராத வண்மத்துடன் சோனியா தொடர்ந்து தாக்குவதும், ஊடங்கள் இத்தாலி காங்கிரஸிற்கு ஆதரவாக நரேந்திர மோடியை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பலவீனப்படுத்த முயற்சிப்பதையும் பார்க்க முடிகிறது.


ஆனால் இன்று வரை இவர்களது பருப்பு வேகவில்லை என்பது அவரது நிர்வாக செயல்பாடும் அதன் மூலமாக அவருக்குக் கிடைக்கும் வெற்றிகளையும் வைத்தே தெரிந்து கொள்ளலாம்!

இதோ மரணத்தின் வியாபாரி பற்றி திரு.சோ இவ்வாறு கூறி அழைக்கிறார்!





மோடியை ஆதரிக்கும் முஸ்லீம் வாக்காளரின் பேட்டி!


இந்த வக்காளர் கூறுவதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் "காங்கிரஸ் எங்களை ஓட்டு வங்கியாகவே உபயோகிக்கிறது. மோதி ஜி யின் வளர்ச்சிப்பணிகளைப் பார்த்தே நாங்கள் அவரை ஆதரிக்கிறோம்"




இதோ தினமலரில் இன்று வெளியான செய்தியைப்! பார்ப்போம்!

**** தொழிலதிபர்கள் மத்தியில் அவர் பேசியதில் இருந்து சில:இன்று, வர்த்தக முறை முற்றிலும் மாறிவிட்டது. எதையும், சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருந்த இடத்தில் இருந்தபடியே உங்கள் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம். அதற்கு குஜராத், தன்னை முழு அளவில் தயார்படுத்திக் கொண்டுள்ளது.முதல் காரியமாக, அரசு நிர்வாகத்தின் அத்தனை மரபுகளையும் உடைத்தெறிந்தோம். இழுத்தடிப்பு, பொறுப்பற்றத்தன்மை, சோம்பல், லஞ்சம் என, அரசு நிர்வாகத்தின் அவலட்சணமாக அறியப்பட்ட அனைத்தையும் தகர்த்தோம்.இன்று, ஆசியாவிலேயே, 24 மணி நேரமும் தடையற்ற, தரமான மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் குஜராத் தான்.


மாநிலம் முழுவதும், 2,200 கிலோ மீட்டருக்கு எரிவாயுக் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை கிடையாது.ஒவ்வொரு குக்கிராமத்திலும், "பிராட் பேண்ட்' இணைப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி, மாநிலத்தில் உள்ள, 1.5 கோடி மாணவர்களுடன், தலைநகரில் இருந்தபடியே உரையாடுகிறேன். முதல்வர் அலுவலகத்திலும் வீடியோ கான்பரன்சிங் வசதி உள்ளது.கடந்த ஏழு ஆண்டுகளாக, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கத்திலேயே உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து 9.5 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளோம். இது, தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம். வைர வர்த்தகத்தில் குஜராத் தான் முதலிடம்.எங்கள் மாநிலத்தில் தொழில் தகராறுகள் இல்லை; தொழிலாளர்கள் பிரச்னை இல்லை; இதனால், 10 ஆண்டுகளாக தொழில் துறை, 12 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. இதோடு ஓய்வதில்லை; இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும் என்பது தான் எங்கள் தீர்மானம்.முதலீடுகளை முன்னிறுத்தியே, "சிறப்பு முதலீட்டு மண்டலங்கள்' (எஸ்.ஐ.ஆர்.,) 30 அமைக்க உள்ளோம். சர்வதேச பொருளாதார நகரம் (கிப்ட்) அமைக்க உள்ளோம். மாநிலத்தின் மொத்த வருவாயில், 30 சதவீதம் தொழிற்சாலைகள், 30 சதவீதம் விவசாயம், 30 சதவீதம் சேவைத் துறைகள் என்பது தான் எங்கள் சமன்பாடு. அப்போது தான், வளர்ச்சிப் பாதையில் இருந்து எந்தப் பகுதியும் விடுபடாமல் இருக்கும்.நான் முதல் முறை முதல்வராக பொறுப்பேற்றபோது, குஜராத் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாகத் திகழ்ந்தது. மின்சார பற்றாக்குறை நிலவியது. நிதிப் பற்றாக்குறையும் இருந்தது.


இன்று தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோம். மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வினியோகிக்கிறோம். நிதி நிலைமையில் உபரி மாநிலமாக உயர்ந்துள்ளோம்.குஜராத் அரசு இதுவரை ஏகப்பட்ட விருதுகளைப் பெற்று இருக்கிறது. விருது பெறுவது என்பது, ஏதோ வாராந்திர நிகழ்ச்சி மாதிரி ஆகிவிட்டது. 200க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்திருப்பதால், எது, எதற்கானது என்பது கூட நினைவில் இருப்பதில்லை.சமீபத்தில் வாங்கிய ஒரு விருதை மட்டும் சொல்கிறேன். குஜராத் முதல்வர் அலுவலகத்துக்கு ஐ.நா.,வின் சர்வதேச விருது வழங்கப்பட்டு உள்ளது (கைதட்டல்). இதுவல்ல விஷயம். எதற்காக இருந்த விருது வழங்கப்பட்டது என்பது தான் விஷயம்.முதல்வர் அலுவலகத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, அணுகுமுறைக்காக இந்த விருது கிடைத்துள்ளது (பலத்த கைதட்டல்).


முதல்வர் அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டதை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாங்கள் பெற்றிருக்கிறோம்.உங்கள் கனவுகளை நனவாக்க, உங்களோடு நான் இருக்கிறேன். இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் என்று மட்டும் தான் சொல்லுவேன்.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.


தொடர்ந்து, தொழிலதிபர்களுடன் கேள்வி - பதில் நிகழ்ச்சி நடந்தது. 70க்கும் மேற்பட்ட கேள்விகள் குவிந்தன. 10 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தவர், மற்றவற்றுக்கு இ-மெயில் மூலம் பதில் அனுப்புவதாக உறுதியளித்தார்.


குறுந்தொழில்களில் கவனம் : வந்திருந்த தொழிலதிபர்களில் ஒருவர், சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு (எஸ்.எம்.இ.,) வழங்கப்படும் வசதி வாய்ப்புகள் பற்றி மோடியைக் கேட்டார். அவர் அளித்த பதில்:எப்போதுமே எங்கள் முதல் முன்னுரிமை, சிறு மற்றும் குறுந்தொழில்களுக்குத் தான். வங்கிக் கடனில் இருந்து, அனைத்து வகையான அனுமதிகள் வரை எதுவாக இருந்தாலும், எஸ்.எம்.இ.,க்கு தான் முன்னுரிமை. இவற்றின் மூலம் தான் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. குஜராத் மாநிலத்தின், 70 சதவீத தொழில் வெற்றி எஸ்.எம்.இ.,க்கள் மூலம் தான் கிடைத்துள்ளது.இந்தியாவில் அதிகம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் குஜராத் மாநில அரசின் பங்கு, 78 சதவீதம். மொத்த இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களும் சேர்ந்து, 22 சதவீதம் தான். இதற்கு முக்கிய காரணம், சிறு மற்றும் குறுந்தொழில்களில் நாங்கள் கவனம் செலுத்துவது தான்.


நெருக்கடியிலும் நெத்தியடி : குஜராத் மாநில தொழில்துறைச் செயலர் சாகு பேசியதாவது:கடந்த 2009ல், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலவிய நேரத்தில், "துடிப்பான குஜராத்' மாநாட்டை நடத்த வேண்டுமா என, அனைத்து தரப்பில் இருந்தும் கேள்வி எழுந்தது. தொழிலதிபர்களும், அடுத்த ஆண்டு வைத்துக்கொள்ளலாமே என அறிவுரை வழங்கினர்.இது தொடர்பாக முதல்வரிடம் கருத்து கேட்டோம். அவர் சொன்னார்: நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள இது தான் சரியான நேரம். நிச்சயம், 2009ல், மாநாடு நடக்கும் என்றார். சொன்னபடியே நடந்தது. 12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான வாக்குறுதிகளைக் கவர்ந்தது; 8,663 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.இவ்வாறு சாகு பேசினார்.


ஒபாமா மீது மறைமுக தாக்கு : "குஜராத்தில் தொழில் துவங்க விரும்புகிறேன். உங்களால் எந்த விதத்தில் உதவ முடியும்?' என, இன்னொருவர் கேட்டார். அதற்கு மோடி சொன்னது:தாராளமாய் வரவேற்கிறோம். நான் ஒன்றும், அமெரிக்க அதிபர் ஒபாமா மாதிரி இங்கு வரவில்லை. பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை எங்கள் அதிகாரிகள் அனைவரும் இங்கு தான் இருப்பர். அதற்குள், குஜராத்தில் என்னென்ன செய்யப்போகிறீர்கள்? என்னென்ன தேவை? என்பவை பற்றி முடிவெடுக்கும் திறன் உங்களிடம் இருக்கிறதா? ஆமெனில், கையோடு அதற்கான உத்தரவைப் பெற்றுச் செல்லலாம்.மோடி இவ்வாறு பேசியதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. "அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியா வந்தபோது வெறுங்கையோடு வந்தார். அமைச்சர்கள், அதிகாரிகளோடு வராமல், தொழிலதிபர்களோடு வந்து, இங்கு ஏராளமான ஆர்டர்களை வாங்கிச் சென்றுவிட்டார். அதனால் தான், இரு நாட்டு ஒப்பந்தம் போன்ற விஷயங்கள் கையெழுத்தாகவில்லை' என ஒரு பேச்சு உண்டு."அவ்வாறில்லாமல், "ஒட்டுமொத்தமாக அதிகாரிகள் குழுவோடு வந்திருக்கிறேன். எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் இப்போதே போட்டுக்கொள்ளலாம்' என்பது தான் மோடியின் கருத்தாக இருந்தது ******

மோடியைப் போல ஒரு முதல்வர் தமிழகத்தில் சாத்தியமா?


ஆத்தீ...நினைச்சாலே தலை சுத்துதே!


.
ராசா, அடுத்து என்ன பண்ணலாம்னு 'உன்' ராணிக்கிட்ட கேட்டியா?


இந்த படத்தை சும்மா தான் போட்டேன்!



[DOT]

Sunday, March 21, 2010

முதல்வனும், முதல்வரும் - ஒரு நிழலும் ஒரு நிஜமும்!

நீங்கள் கீழே காணப்போகும் நிழல் பேட்டிக்கும் நிஜப்பேட்டிக்கும் ஒரு ஆச்சரியமான ஒற்றுமை இருக்கிறது. முதல்வன் படத்தில் பேட்டி காணும் அர்ஜுன் இக்கட்டான கேள்விகளை அடுக்கும் போது அதற்கு பதில் சொல்ல விரும்பாத ரகுவரன், குடிக்கத் தண்ணீர் கேட்பார். பின் கேமிரா ஓடுவதை நிறுத்தச் சொல்வார். தான் பேச விரும்பவில்லை என்பதை அவரது செய்கைகளால் வெளியிடுவார்.

அதே போலவே குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் செய்கைகளும் இருப்பதைக் காணலாம். இப்படி ஒரு பேட்டி நிகழ்ந்தால் நிஜத்தில் ஒருவர் எப்படி எல்லாம் செய்யக்கூடும் என்பதை இயக்குனர் ஷங்கர் தத்ரூபமாகவே வடிவமைத்திருந்திருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. முதல்வன் படம் வெளிவந்தது 1999 ல், கோத்ரா ரயில் எரிப்பினால் அப்பாவி இந்துக்கள் கொல்லப்பட்ட
சம்பவம்
நிகழ்ந்தது 2002.

வீடியோவும் சுட்டியும் கீழே!

நிழல் முதல்வர் ரகுவரனிடம் முதல்வன் அர்ஜுன் பேட்டி காணும் காட்சி!





நிஜ முதல்வர் நரேந்திர மோடியை கரன் தாப்பர் பேட்டி காணும் காட்சி!