Showing posts with label ராமசாமி நாயக்கர். Show all posts
Showing posts with label ராமசாமி நாயக்கர். Show all posts

Wednesday, May 1, 2013

நான் தப்பு செஞ்சிட்டேன்..! ஒத்துக்கொண்ட ஈ வெ ரா


பி டி ராஜன்

முதலியார்கள் மீது கடும் வெறுப்பு கொண்டிருந்தார் வெ ரா என்பதைப் பற்றி பார்த்தோம். தி மு வைத் தோற்றுவித்த அண்ணாதுரை வெ ரா வை எப்படியெல்லாம் புறக்கனித்தார் என்பதையும் பார்ப்போம்.

பொன்னம்பல தியாக ராஜன் பி டி ராஜன் என்று அழைக்கப்பட்டார். நீதிக்கட்சியை தோற்றுவித்தவர்களுள் இவரும் ஒருவர். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். தன் ஆளுகைக்குள் நீதிக்கட்சி வரவேண்டும் என்று விரும்பினார்ஆனால் பி டி ராஜன் இதனை விரும்பவில்லை

வெ ரா பி டி ராஜனுடன் முரன்பட்டார். காரணம் பி டி ராஜன் ஒரு முதலியார்அதனால் வெ ரா வின் திராவிடர் கழகத்தில் இணைந்திருக்க அவர் விரும்பவில்லை.  தனியாக நீதிக் கட்சியை பதிவு செய்து கொண்டு அதிலேயே நீடித்தார்

சில வருஷங்களுக்குப் பின்னர் திமுக மாபெரும் அரசியல் கட்சியாக உருவெடுத்து தேர்தலில் வென்றது. அண்ணாதுரை முதல்வரானார். அப்போது அண்ணாதுரையை நீதிக்கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பி டி ராஜன் அழைப்பு விடுத்தார். அந்நிகழ்ச்சியில் அண்ணாதுரை கலந்து கொள்ளக் கூடாது என வெ ரா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் வெ ரா முதலியார்களை ஒழிக்க வேண்டும் என்கிற பிரச்சாரத்தில் இருந்ததால் அண்ணாதுரை வெ ராவை புறக்கனித்தார். பி டி ராஜனின் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். காரணம் அண்ணாதுரையும் முதலியார்.

ஆக முதலியார்களை வெறுத்த வெ ரா வை முதலியார்கள் ஒதுக்கினார்கள் என்பது வரலாறு.

காங்கிரஸில் தனது செல்வாக்கு செல்லாக்காசானவுடன் பிராமணர்களை ஒழிக்க வேண்டுமென கிளம்பிவிட்டார் ராமசாமி நாயக்கர். காரணம் அக்கட்சியில் பிராமணர்கள் அதிகம் இருந்தார்கள் என்பதே! அது போலவே சில முதலியார்கள் மீது கொண்ட கோபத்தால் முதலியார் ஒழிப்பு போராட்டமும் நடத்திக் கொண்டிருந்தார்

ஆனால் அத்தகைய ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகள் மூலமாக தவறு செய்துவிட்டோம் என்பதை வெ ரா உணர்ந்தே இருந்திருக்கிறார்.

அது பற்றி 'சிலம்புச் செல்வர் பொ சி யுடன்' புத்தகத்தில் திரு மு மாரியப்பன் அதனைப் பதிவு செய்கிறார். அதிலிருந்து சில வரிகள்...

ஒரு முறை கும்பகோனம் பயனியர் விடுதியில் பொ சி மற்றும் அவருடன் மு மாரியப்பனும் தங்கி இருந்தார்கள். அங்கே பக்கத்து அரையில் ராமசாமி நாயக்கரும் தங்கியிருக்கிறார் என்ற விபரம் பொ சி க்கு தெரியவரவே இருவரும் சென்று வெ ரா வை அவரது அரையில் சந்திர்க்கிறார்கள்.

முதலியார்களின் மீது கடுமையான வெறுப்பைக் கொண்டிருந்த வெ ரா தான் எழுதிய முதலியார் ஒழிப்பு தலையங்கம் பற்றி பொ சி இடம் கேட்கிறார்.

" வெ ரா: 'முதலியார் ஒழிப்பு தலையங்கம் படிச்சீங்களா'

பொ சி: 'நாங்கள் இருவரும் படித்தோம்'

வெ ரா: 'தங்கள் அபிப்பிராயம் என்ன?'

'இதற்கு நான் என்ன அபிப்பிராயம் சொல்ல இருக்கிறது, உங்களுடைய பிராமண எதிர்ப்பு இயக்கம் இப்படித்தான் வந்து முடியும் என்று எனக்குத் தெரியும், இதோடு இது நிற்கப் போவதில்லை. இன்னும் பலபடி இறங்கி இவ்வியக்கம் தொடரும்' என்றார் பொ சிவஞானம் அவர்கள்.

உடனே ராமசாமி நாயக்கர் 'ஏதோ நல்லது என்று தான் செய்யப் போய் இவ்வாறு முடிந்து விட்டதே, தங்களைப் போன்றவர்கள் தான் இதனை சரிப்படுத்த வேண்டும்' எனக் கூறுகிறார்.

அதற்கு ஐயா பொ சி அவர்கள் "நான் மட்டுமல்ல யாராலும் எதுவும் செய்ய முடியாது. அந்த அளவுக்கு இப்பிரச்சனை செப்டிக் ஆகிவிட்டது" எனக் கூறினார்.

வெ ரா ஐயா சொன்னதை ஆழ்ந்த சிந்தனையுடன் கேட்டுக் கொண்டார்."

இவ்வாறு வெ ரா மற்றும் பொ சி அவர்களுடன் இருந்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் திரு மு மாரியப்பன் அவர்கள்.

இதனால் தெரிவிப்பது என்னவென்றால் ராமசாமி நாயக்கர் பிராமண எதிர்ப்பு என்று துவங்கியது தவறாகப் போய்விட்டது என்று தன்னளவில் உணர்ந்திருந்தார் என்பதே! "நான் தவறு செய்து விட்டேன், யாராவது தடுத்து நிறுத்துங்கள்" என்று மன்றாடி இருக்கிறார். தானாக முன்வந்து வெளிப்படையாகத் தன் தவறை ஒத்துக் கொள்ள அவரது 'கோ' இடம் கொடுக்கவும் இல்லை. அதைப் பற்றி நெருங்கியவர்களிடம் மட்டுமே கூறியிருக்கிறார். ஆனால் திட்டமிட்டு அதனை திராவிடக்காரர்கள் மக்களிடம் வெளிப்படுத்தாமல் மறைத்து வருகின்றனர். ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட காழ்ப்புகளை சித்தாந்தமாக்கி தமிழகத்தை இன ஒழிப்பு என்கிற ஆழ்ந்த சைக்கோத்தனமான மனநோய்க்குள் தள்ளி விட்டுவிட்டனர் என்பது புலனாகிறது.

தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்...! ஜாதி ஒழிப்பு என்று துவங்குவோரால் தான் ஜாதித்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது போன்ற திராவிடம் பேசுவோர்களை நம்பாமல் விலகி வாருங்கள்

ஆன்மீகமும் மனிதமும் மட்டுமே அடுத்த கட்ட சந்ததியினரை வாழ வைக்கும் என்பதை புரிந்து கொண்டு ஹிந்து என்கிற மனநிலையில் ஒன்று கூடுங்கள்.

ஒற்றுமையாய் இருப்போம்! பாரதம் காப்போம்!

Sunday, April 28, 2013

முதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்!

சிலம்புச் செல்வர் ம பொ சிவஞானம்

ராமசாமி நாயக்கர் தனது விடுதலை பத்திரிக்கையில் "முதலியார் ஒழிப்பு இயக்கம்" என்ற தலைப்பில் ஓர் தலையங்கம் எழுதினார். ஏன்? அவர் ஒரு முதலியார் மீது கடும் கோபம் கொண்டார். எனவே முதலியார்களையெல்லாம் ஒழித்து விடவேண்டுமென புறப்பட்டு விட்டார். அது தான் ராமசாமி நாயக்கர்.

யார் அந்த முதலியார்? அவர் தான் தமிழகத்தின் முன்னால் முதல்வர் திரு. பக்தவத்சலம். அவர் ஒரு முதலியார்.

தமிழகத்தைப் பொறுத்த வரை ஒரு பெரிய வியாதி உண்டு. சைக்கோத்தனமான வியாதி, அது திராவிட சித்தாந்த வியாதி. இந்த வியாதியின் மூலப்பகுதி பிராமண எதிர்ப்பு வியாதி. ஆனால் இதை ஏதோ ஒரு அறிவுசார் சித்தாந்தம் போலவே நினைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பவர்கள் அதிகம். இதன் ஆணிவேர் அடிவேர் தெரியாமல் மேடையில் வாந்தி எடுப்பவர்களின் திராவிட சித்தாந்த பார்ப்பன எதிர்ப்பை அப்படியே குடித்து விட்டு போகுமிடமெல்லாம் பதில் வாந்தி எடுப்பவர்களின் எண்ணிக்கை அளவில்லாதது.

ராமசாமி நாயக்கர் பேசியதெல்லாம் சித்தாந்தம் என நம்பிக்கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டம் அவரது ஜாதி எதிர்ப்பிற்கான உள்நோக்கங்களை முழுமையாக உணர்ந்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

ராமசாமி நாயக்கரின் பிராமண எதிர்ப்பு என்பது ஒரு சித்தாந்தம் அன்று, மாறாக ராமசாமி நாயக்கர் எந்த தனிப்பட்ட நபர்கள் மீதெல்லாம் கோபம் கொள்கிறாரோ அந்த ஜாதிக்காரர்களை அப்படியே ஒழித்து விட வேண்டும் என்று கூறுகிறார். இப்படிப்பட்ட ஆத்திரம் மிகுந்த குணம் ஒரு வித மனப்பிறழ்வு நிலை என்றே தோன்றுகிறது.

இது குறித்த ஒரு செய்தியைப் பார்ப்போம். பொ சி அவர்களோடு நெருங்கிப் பழகிய திரு மு மாரியப்பன் அவர்கள் 'சிலம்புச் செல்வர் பொ சியுடன் ' என்கிற தனது புத்தகத்தில் பொ சி யுடனான தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். அதில் ராமசாமி நாயக்கர் பற்றிய குறிப்பைப் பார்ப்போம்.

"ராமசாமி நாயக்கர் தனது விடுதலை பத்திரிக்கையில் "முதலியார் ஒழிப்பு இயக்கம்" என்ற தலைப்பில் ஓர் தலையங்கம் எழுதினார். அதில் முதல்வர் பக்தவத்சலனார் சார்ந்திருக்கும் ஜாதிக்கு எதிராகத் தாம் ஒரு போராட்டம் துவங்கப் போவதாகவும் இதுவரை தான் நடத்தி வந்த பிராமணர் எதிர்ப்புப் போராட்டம் தகுந்த பலன் கிடைக்கவில்லை என்றும் எழுதியிருந்தார். மேலும் முதல்வர் பக்தவத்சலம் அவர்களைக் கடுமையாக வார்த்தைகளால் வசை பாடியிருந்தார்." 
சரி, முதலியார்களையெல்லாம் சப்ஜாடாக ஒழிக்க வேண்டும் என்று ராமசாமி நாயக்கர் ஏன் கூறினார்.

தமிழகத்தின் முதல்வராக பக்தவத்சலம் தேர்வான பின்னர், பல அரசு உயர் பதவிகளை முதலியார் ஜாதியினர் பெற்று வந்தனர். ராமசாமி நாயக்கரின் செல்வாக்கு பக்தவத்சலத்திடம் செல்லுபடியாகவில்லை.  அதன் பின் நடந்தவற்றையும் திரு. மு மாரியப்பன் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்.

"விவசாயத் துறையில் இயக்குனர் பதவியிலிருந்த பிராமணர் ஒருவர் ஓய்வு பெற்றதன் விளைவாக அந்தப் பதவி காலியாக இருந்தது. வெ ரா பிராமணர் அல்லாத ஒருவரை (தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரா என குறிப்பில்லை)   அப்பதவிக்கு சிபாரிசு செய்தார். ஆனால் பக்தவத்சலமோ திரு க்ருஷ்ணமூர்த்தி என்பவரை நியமித்தார். "
 
மேற்கண்ட சம்பவம் வெ ரா வை கடுப்பேற்றியது, காரணம் நியமிக்கப் பட்ட க்ருஷ்ணமூர்த்தி என்பவரும் முதலியாரே. தனது செல்வாக்கு முதலியார்களிடம் பலிக்கவில்லை என்ற ஆத்திரம் ராமசாமி நாயக்கருக்கு தலைக்கு ஏறிவிட்டது. ஆக தனது சொந்த 'ஈகோ' பிரச்சனையை ஜாதிப்பிரச்சனையாக ஆக்குகிறார் வெ ரா. உடனே விடுதலையில் தலையங்கம் எழுதுகிறார்.

"முதலியார் ஒழிப்பு இயகம்" என்று!

ஆக ராமசாமி நாயக்கரை ஏதோ சித்தாந்த வாதி போல தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அவரது கால் நக்கிகளெல்லாம் கொஞ்சம் நின்று நிதானித்து புரிந்து கொள்ள வேண்டும். வெ ரா வின் எதிர்ப்புக்களெல்லாம் அவரது செல்வாக்கை நிலை நிறுத்தும் சுயநலப் போராட்டமாகத்தான் இருந்திருக்கிறதே ஒழிய சமூகப்போராட்டம் அல்ல என்பதை.

அப்படித்தான் யாரோ சில பிராமணர்கள் மீது தனக்கு இருந்த ஆத்திரத்தை ஒட்டு முத்தமாக பிராமண ஜாதியினர் மீது ராமசாமி நாயக்கர் திணித்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இப்படி கொசுவிற்காக வீட்டைக் கொளுத்துவது என்பது சித்தாந்தமா அல்லது மனநோயா என்று வரலாற்றை உற்று நோக்குபவர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். தன் சுயநல ஆதிக்கமும் செல்வாக்கும் செல்லுபடியாகவில்லை என்றால் ஒரு சமூகத்தையே அழித்துவிடுவது என்கிற காட்டுமிராண்டித் தனத்தை தமிழகத்தில் ஒரு கூட்டமே சித்தாந்தமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அத்தகைய கூட்டத்தினரின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது அத்தகையோரின் அடிப்படை மனோநிலையின் மீதே சந்தேகம் உண்டாகிறது.


முதலியார்களே! ஜாக்கிரதை..! ராமசாமி நாயக்கரது பக்தர்களின் அடுத்த இனஒழிப்பு இலக்கு முதலியார் ஒழிப்பாகவும் இருக்கலாம்...!.

கொசுவிற்காக வீட்டைக் கொளுத்தும் மனப்பிறழ்வு நிலைக்கு இன்னொரு எடுத்துக் காட்டு:

1950களின் இறுதியில், தமிழக அதிகாரிகளில் பலர் மலையாளிகளாக இருப்பதைப் பட்டியல் போட்டார் ராமசாமி நாயக்கர்

உடனே முழக்கமிட்டார்

"இப்படியே நிலைமை தொடருமானால், ‘மலையாளிகள் எதிர்ப்பு மாநாட்டைநடத்த வேண்டியிருக்கும்"