
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா!
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா!
ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா!
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா!
சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா!
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா! (கேட்டதும் கொடுப்பவனே)
தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா!
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா!
ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா!
அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா! (கேட்டதும் கொடுப்பவனே)
நீயுள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா!
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா!
கோயிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா!
குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா!
எண்ணை இல்லாது ஒரு தீபம் எரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா!
உன்னை நினைந்தது உருகி இருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா!
கண்களைப் போல் எமைக் காவல் புரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா!
கண்ணன் திருவடி எண்ணியிருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா!
_______________________________________________________________________________
பாடியவர் : டி எம் எஸ்
எழுதியவர்: கண்ணதாசன்
ரசித்தவர்: அடியேன் :-)

