Showing posts with label hindu. Show all posts
Showing posts with label hindu. Show all posts

Saturday, April 14, 2012

நகரப்பள்ளிகளிலும் கட்டாயக் கிறிஸ்தவம்! பாதிரிகளின் அடிமைகள் நாம்!



எஸ் பி ஓ ஏ பள்ளியில் அட்டூழியம் -   ஹிந்து நாளிதழ் செய்தி!


LAVANYA M.

A chemistry teacher of SBOA School and Junior College in Anna Nagar West was suspended last week for ‘manhandling and misbehaviour', but the teacher claimed that she was punished for reciting a Hindu prayer to students of Class XII .

On March 13, as the students were gearing up for their examination, teachers were about to recite their routine prayer. “Since the usual group of teachers pray before every examination, I volunteered this time. I said a prayer invoking the blessings of Hindu, Christian and Muslim Gods,” said the teacher, P. Abirami.
Even as Ms. Abirami was reciting the prayer, some of the other teachers allegedly turned off the microphone. “If they had an issue with my prayer, they could have called me aside and spoken to me rather than behaving rudely in front of students,” she said. “I did not give up but continued to say the prayers even more fervently,” she added.

Students on Wednesday said it was unusual for teachers to behave in this way. “Usually a Christian prayer is said before we write examinations. But last week a teacher said some Hindu mantras and the other teachers tried to stop her by turning off the microphone,” said a student.

Principal P. C. Selvarani, said that disciplinary action was taken against the teacher for behaving in an inappropriate manner . “The teacher does not handle Class XII and was on paper-correction duty that day. In spite of this, she came to up the dais, grabbed the mike and started speaking,” she said. “It was against the code of conduct. She just intervened.,” she said.

This sparked off protests by the BJP, VHP and the Hindu Munnani. Their activists staged a protest outside the school on Wednesday, following which 60 people were arrested and later released.

Keywords: SBOA School


லாவன்யா என்கிற இந்த ரிப்போர்ட்டர் நேர்மையும், துணிவும் கொண்டவர் எனக் கூறப்படுகிறது. பொதுவாக கிறிஸ்தவ மற்றும் சீன மாவோயிஸ ஜால்ரா தட்டப்படும் ஹிந்து நாளிதழில் இப்படிப்பட்ட உண்மைகள் வெளிவரும் போது அந்த நாளிதழின் மீது மதிப்பு வருவது போல் தோற்றம் உண்டாகிறது.

மேலே காண்பது இருபது நாட்களுக்கு முன்னால் வந்த பழைய செய்தி தான். இப்போது ஞாபகம் வரக்காரணம், நேற்று என் அலுவலக நண்பர் மாவோயிஸ்டுகள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா என்று அவர்களுக்காக நெஞ்சுருகிப் பேசிக்கொண்டிருந்தார். கொஞ்சம் நேரம் பேசிய பின் தான் தெரிந்தது அவர் தொடர்ந்து வீட்டில் ஹிந்து பேப்பர் படிப்பவர் என்று. நான் அவரிடம் சொன்னேன் ஐயா தொடர்ந்து இப்படி ஹிந்து பேப்பர் மட்டுமே படித்தீர்களென்றால் நீங்கள் சீன ஆதரவாளர்களாகவும் மவோ, நக்சல் போன்ற தீவிரவாத இயக்கங்களின் நெருங்கிய நண்பராகவுமே ஆகி விடுவீர்கள். ஏனெனின் ஹிந்து பத்திரிக்கையின் சார்பு நிலை அப்படி. துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சாலையில் இறங்கிவிடாமல் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றேன்! அது தான் ஹிந்து பத்திரிக்கையின் நிலை!

அப்படி ஒரு பத்திரிக்கை கிறிஸ்தவ சார்பில்லாமல் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களின் நிலையை இப்போது வெளியிட்டிருக்கிறது. இதை வெளியிட்ட ரிப்போர்ட்டர் லாவன்யாவை அந்த பத்திரிக்கை திட்டாமல் விட்டால் சரிதான்! ஹிந்துப் பத்திரிக்கையின் இந்த மாற்றம் என்னை மீண்டும் இந்த செய்தியைப் பற்றி நினைவு கொள்ளச் செய்தது. ஹிந்துப் பத்திரிக்கையின் இந்த நல்ல மாற்றம் தொடருமானால் அதன் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

எஸ்பிஓஏ பற்றி!

எஸ்பிஓஏ பள்ளி ஒரு கிறிஸ்தவ பள்ளி அல்ல. ஆனாலும் அங்கே பாதிரியார்களின் ஆதிக்கமும் சர்ச்களின் சொற்படி மாணவர்களை கிறிஸ்தவ சார்புள்ளவர்களாக ஆக்கும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அங்கிருக்கும் கிறிஸ்தவ ஆசிரியர்கள் மாணவர்களை கிறிஸ்தவ சார்புள்ளவர்களாக ஆக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்து இப்போது வெளிப்படையாக தெரிந்து விட்டது. இன்னும் பல பள்ளிகளின் இது போன்ற நிலைமை வெளித்தெரியாமல் இருக்கிறது.

பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்கிற ஒரே காரணத்திற்காக பெற்றோர்கள் இது போன்ற நிலைமைகளை சகித்துக் கொள்வதை கிறிஸ்தவ ஆசிரியர்கள் தங்களுக்குச் சாதகமான சூழலாக எடுத்துக் கொள்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

எஸ்பிஓஏ பள்ளி பெயருக்குத்தான் ஸ்டேட் பாங்க் ஆஃபீசர்ஸ் அசோஷியேஷனே அன்றி உண்மையில் பெரும்பாலான அனேகமாக 80% ஆசிரியர்கள் கிறிஸ்துவர்களாகவே இருக்கிறார்கள். இதை நடத்தும் ஸ்டேட் பாங்க் ஆபீசர்ஸ் அசோஷியேஷன் நிர்வாகிகள் யார் என்பதைப் பார்த்து அவர்களிடம் இந்து தலைவர்கள் பேச வேண்டும். 

சென்னை எஸ்பிஓஏ பள்ளியிலும் அவர்களின் பிற ஊர் கிளைகளிலும் பெரும்பாலான ஆசிரியர்கள் கிறிஸ்துவர்களே. ஸ்டேட் பேங்க் ஆபீசர்ஸ் அசோஷியனின் சில கிறிஸ்துவ நிர்வாகிகள் ஆரம்ப காலத்திலேயே கிறிஸ்துவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமித்து விட்டதன் பலனாக இன்று வரை சர்ச் சொல்லும் ஆட்களையே ஆசிரியர்களாக அப்பாயிண்ட்மெண்ட் செய்து வருகிறார்கள். இந்தப் பிரச்சினையை முதலில் ஸ்டேட் வங்கி ஆபீசர்ஸ் அசோஷியனில் எழுப்ப வேண்டும் . சென்னை பள்ளியில் அந்த டீச்சர் ப்ரேயரில் குருப் பிரம்மா குரு விஷ்ணு ஸ்லோகத்தை படித்ததற்காக சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கிறார். அதே ப்ரேயரில் தினமும் பைபிள் கதைகளும் வாசகங்களும் படிக்கப் படுகின்றன. இதே நிலைதான் அனைத்து எஸ்பிஓஏ பள்ளிகளிலும் என்றாலும் எதுவும் செய்ய முடியாத மைனாரிட்டி நிலையில்தான் இந்து டீச்சர்கள் இருக்கிறார்கள். பள்ளிக்குள்ளேயே அடிக்கடி அவர்கள் கூடி ப்ரேயர்கள் நடத்திக் கொள்வதும் சர்ச் உத்தரவின் பேரில் செயல் படுவதும் தினமும் நடப்பதாக் கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சினையை வி எச் பி எடுத்துக் கொண்டு போராடிய பின்னால் பெற்றோர்களை ஏமாற்ற ப்ரேயர் ஒன்றில் கந்தர் சஷ்டி கவசம் ஒலிக்க வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து இந்து இயக்கங்கள் எஸ் பி ஓ ஏ ஆபீஸர் அசோஷியனின் நிர்வாகிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் இந்த நிலை மாறும்.  

அனைத்து இந்து டீச்சர்களுக்கும், இந்து மாணவர்களுக்கும் இந்து இயக்கங்களின் நடவடிக்கைகள் பெருத்த சந்தோஷத்தை அளிப்பதாக இருந்திருக்கிறது.

இந்து அமைப்புகள் முனைப்புடன் இருப்பது சிறிய அளவிலேனும் உரிய பலனை அளிப்பது திருப்தியளிக்கிறது. மீண்டும் அந்த ஆசிரியையை பணியில் சேர்க்கும் வரைக்கும் நம் அமைப்புகள் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துப் போராட வேண்டும். மேலும் எஸ்பிஓஏ பள்ளிகளில் உள்ள கிறிஸ்துவ ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் ஸ்டேட் வங்கியில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் இது போன்ற கிறிஸ்தவர்களின் அட்டூழியத்திற்கு எதிராக போராட வேண்டும்.

ஹிந்துக்களின் அமைப்புகள் மட்டும் இது போன்ற விஷயங்களுக்காகப் போராடினால் அது அரசியலாக மட்டுமே ஆகும். ஒவ்வொரு ஹிந்துவும் போராடும் இயக்கங்களுடன் சேர்ந்து கொண்டு உணர்வுப்பூர்வமாக ஆதரவு தெரிவித்து இயங்கவும் வேண்டும். அப்போதுதான் நிரந்தரத்தீர்வுகள் பல எட்டப்படும். இல்லையே ஹிந்துக்களுக்கெதிரான இது போன்ற பள்ளிக்கூட அட்டூழியங்கள் ஒழிக்கப்படவே முடியாமல் போய்விடும்!

ஹிந்துக்கள் மெஜாரிட்டியாம்! என்ன கொடுமை சரவணா!

Sunday, October 31, 2010

இந்த கருமத்துக்குத் தான் மதம் மாறுகிறார்களா?


தினமலர் செய்தி:

திருச்சி : திருச்சி மேலப்புதூர் கல்லறையில் உள்ள தீண்டாமை சுவரை இடிக்க முயன்ற ஒன்பது பேரை, போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மேலப்புதூர் வேர்ஹவுஸ் பகுதியில், கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான உத்திரிய மாதா கோவில் கல்லறை உள்ளது. பிள்ளைமா நகர், தர்மநாதபுரம், செங்குளம் காலனி, செந்தண்ணீர்புரம் உட்பட 32 பகுதிகளில் இறப்பவர்களை, 200 ஆண்டாக இங்கு அடக்கம் செய்கின்றனர். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களை அடக்கம் செய்ய தனி இடம் ஒதுக்கி, இடையில் மதில் சுவர் ஒன்றை, மேல்ஜாதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் எழுப்பினர். அதை அகற்ற தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர், பல ஆண்டாக கோரிக்கை விடுத்தனர். நேற்று காலை 9.05 மணிக்கு, கடப்பாரை, சுத்தியலுடன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் மாவட்ட செயலர் நிலவழகன் தலைமையில் சிலர், கல்லறைக்கு வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில், தீண்டாமை மதில் சுவரை இடிக்க துவங்கினர்.

தகவலறிந்த பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், சுவர் இடித்தவர்களை தடுத்து நிறுத்தினர். பாலக்கரையை சேர்ந்த செல்வராஜ் கொடுத்த புகாரின்படி, அத்துமீறி நுழைதல், கலவரத்தை தூண்டுதல் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, நிலவழகன் உட்பட ஒன்பது பேரை கைது செய்தனர். திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, 15 நாள் காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்தரப்பினர் பிரச்னையில் ஈடுபடாமல் இருக்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது

****

இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் இருக்கிறது என்றும் வர்னாசிரமம் கடைபிடிக்கப்படுகிறது என்றும் அதை ஒழிக்கவே வேறு மதங்களுக்கு மாறுவதாகவும் கூறிக்கொள்பவர்கள் தங்கள் செயலுக்காக வெட்கப்பட வேண்டும். ஜாதிகளும் வருனாசிரமங்களும் கடைபிடிக்கப்படுவதாக கூறிக்கொண்டு அதன் பொருட்டே இந்து மததின் மீது வெறுபுணர்ச்சியை பரப்பி வரும் நாத்திகர்களும், மதம் மாற்றும் பாதிரியார்களும் இனி என்ன கூறப்போகிறார்கள்?

கிறிஸ்தவர்களின் தீண்டாமைச் சுவரை உடைக்க மட்டும் கம்யூனிஸ்ட்கள் ஏன் போகவில்லை?

அடிப்படையில் மனிதர்கள் ஆதிக்க குணம் படைத்தவர்களே! யாராவது யாரையாவது தனக்குக் கீழே அடிபணியச் செய்து பழக்கப்பட்டவன். எனவே இதற்கு மதங்களைப் பொறுப்பாக்காமல் உண்மையான ஆண்மீகத் தேடலுக்கு வழி வகுத்து மக்களிடையே ஆன்மீக விழிப்புணர்வு உண்டாகச் செய்வதே சரியான தீர்வாக இருக்க முடியும்!

இனியும் இந்து மதத்தில் தான் ஓட்டை உடைசல் இருக்கிறது என்று நாத்திக மற்றும் இந்து மத எதிர்ப்புக் கூட்டம் பேசிக்கொண்டிருந்தால் தன்னைத் தானே அவர்கள் கேலி செய்து கொள்கிறார்கள் என்றே பொருள் கொள்ளப்படும்!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!

.

Wednesday, September 9, 2009

பொறுமை - விதுர நீதி!

ஸஞ்ஜயன் திருதிராஷ்டிரரிடம், "பாண்டவர்களுக்கு ஒன்றுமே கொடுக்கப்படாவிட்டால் போரை இனி தடுக்க முடியாது" என்று கூறிச்செல்ல அதைக் கேட்ட திருதிராஷ்டிரர் மிகுந்த மனக்கவலை அடைந்தார்.

அவர் விதுரரை வரவழைத்து இவ்வாறு கூறினார் " விதுரரே!, உம்மைப் போன்று தர்மம்
அதர்மங்கள் பற்றி அறிந்தவர் யாருமில்லை. நான் மிகவும் மனக்கவலை அடைந்திருக்கிறேன்! இவையெல்லாம் ஏன் நடக்கிறது? என்னுடைய நன்மைக்குத் தகுந்த அறிவுரைகளைச் சொல்" என்றார்.

விதுரர் கூறினார், "மன்னா! ஆயுதத்தால் ஒரே ஒருவன் தான் கொல்லப்படுகிறான். ஆனால் கெட்ட எண்ணங்களால் பலருக்கு அழிவு ஏற்படுகிறது.

பொறுத்தருள்தல் மனிதனுக்கு மிகச்சிறந்த பலம். வலிமையற்றவர்களுக்குப் பொறுமை ஒரு நற்குணமாகும். திறமைசாலிகளுக்கு அது ஒரு அணிகலன்.

எவனுடைய கையில் பொருமை என்னும் வாள் இருக்கிறதோ, கெட்டவர்கள் அவனுக்கு எந்தக் கெடுதலையும் செய்ய முடியாது.

தர்மமே மிகச்சிறந்த நன்மையை அளிக்கக் கூடியது. பொறுமையே மிகச்சிறந்த அமைதியைக் கொடுக்கும். ஞானமே மிகச்சிறந்த திருப்தியை அளிக்கும். அஹிம்ஸை ஒன்றே எல்லா ஸுகங்களையும் கொடுக்கக் கூடியது.

அரசனாக இருக்கும் ஒருவன் போரைக் கண்டு அஞ்சினாலோ, அந்தணன் ஒருவன் வீட்டைத் துறக்க அஞ்சினாலோ அவனை பூமி விழுங்கி விடுகிறது.

திறமைசாலியிடமுள்ள பொறுமையும், ஏழையிடமுள்ள தானம் செய்யும் குணமும் மோஷத்தை உண்டு பண்ணக் கூடியவை. செல்வம் இருந்தும் எவன் தானம் செய்வதில்லையோ, வறியவனாயிருந்தும் எவன் தவம் செய்வதில்லையோ, கல்லைக் கட்டிக் கொண்டு நீருக்குள் மூழ்குவதற்குச் சமமானவர்கள்.

பணம் இரண்டு தகாத வழிகளில் செலவழியக் கூடும். ஒன்று தகுதியற்றவர்களுக்குக் கொடுத்தல், மற்றொன்று தகுதியுள்ளவருக்குக் கொடுக்காமலிருத்தல். யோகியான துறவி, போரில் முனைந்ததால் கொல்லப்படவிருக்கும் க்ஷத்ரியன் இவ்விருவரும் ப்ரம்மலோகத்திற்குச் செல்கிறார்கள்.

ஸநாதன தர்மம்!

ஸநாதன தர்மம் என்றால் நிரந்தரமான தர்மம்.

எக்காலத்திற்கும் , எல்லா மனிதர்களுக்கும் நிரந்தரமான வகையில் பொருந்தக்கூடிய வகையில் சொல்லப்பட்டிருக்கும் தர்மம்.

காலங்கள் பல மாறினாலும் வாழும் மனிதர்களின் முறைகள் மாறினாலும் இந்த தர்மங்களை மீறி ஒருவனது வாழ்க்கைப் பயனம் அமைந்து விடாது என்பதை எடுத்துக்காட்டுவதே ஸநாதன தர்மம்.

உண்மைகள் பல இருப்பினும் நிரந்தரமான உண்மை எதுவோ அதன் வழியே மக்கள் செல்லத்துவங்குவார்கள். இறுதியில் அதுவே நிலைக்கும்.

கீழ்க்கண்ட செய்தி இதை நிரூபிக்கிறதோ!

Wednesday, September 2, 2009

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்


தியான நிலையே மிக உயர்ந்த நிலை என்று யோகிகள் கூறுகிறார்கள். மனம் புறப் பொருட்களை ஆராயும் போது அந்தப் பொருட்களுடன் தன்னை

ஒன்றுபடுத்திக் கொள்கிறது. அந்தப் பொருட்களின் மயமாக ஆகிவிடுகிறது. அதாவது நீ எதை அதிகம் சிந்திக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்ற கூற்றுப்படி மனம் செயல்படவே செய்யும்.

பண்டைய இந்தியத் தத்துவ ஞானி ஒருவர் இதற்கு ஓர் உவமை கூறியுள்ளார்: மனிதனின் ஆன்மா ஒரு பளிங்கு போல் உள்ளது. பளிங்கு தன் அருகில் உள்ள எந்த நிறத்தையும் ஏற்றுக் கொள்கிறது அது போலவே, ஆன்மா எதனுடன் சேர்ந்தாலும் அதன் தன்மையை அடைகிறது. நாமும் உடலின் இயல்பிலேயே ஒன்றி, நாம் யார் என்பதை மறந்து விட்டோம். புற அழகில் மயங்கி அகத்தைப் பற்றி நினைக்கத் தவறுகிறோம்.

அழியக்கூடிய இந்த உடலிலிருந்தே எல்லா துயரங்களும் உண்டாகின்றன.
நமது கவலை, சஞ்சலம், தொந்தரவு, தவறு, பலவீனம், தீமை எல்லாம் நாம் உடம்பே என்று கருதும் ஒரு பெரும் தவறிலிருந்தே உண்டாகின்றன.

ஆக தியானம் இந்த மனம் வேறு உடல் வேறு என்ற நிலையை உணர்த்தும் அற்புத மூலமாக இருக்கிறது. உங்களுக்கு தியானத்தில் மூலத்தைச் சொல்லித்தருகிறேன். நல்லவைகளை நினைத்து தியானித்தால் நன்மையே உண்டாகும்.

இதோ தியானிக்க சூத்திரம்..

"இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவரான அந்தப் பரம் பொருளின் மகிமையைத் தியானிக்கிறேன். அவர் என் உள்ளத்தை ஒளிரச் செய்வாராக!"

மேலே நீங்கள் படித்தது காயத்ரீ மந்திரத்தின் திரண்ட பொருளாகும்.

"ஓம் பூர்புவஸ்வ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி! தியோ யோ ந: ப்ரசோதயாத்!!

இதனைப் பத்துப் பதினைந்து நிமிடங்கள் வரை தியானம் செய். உனக்குக் கிடைக்கும் அனுபவக் காட்சிகளை உன் குருவைத் தவிர யாரிடமும் சொல்லாதே.

இயன்றவரை குறைவாகப் பேசு.

நல்லவற்றின் மீது உன் நினைவுகளை வைத்திரு. நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடம் உண்டு.

புனிதமானவற்றை நீ தியானிப்பது எல்லா மன அழுக்குகளையும் எரித்துவிட உதவும்.

- சுவாமி விவேகானந்தர்.

Saturday, August 22, 2009

விநாயர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்!



அன்பர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

எல்லோரும் நலம் வாழ விநாயகரைப் பிரார்த்திக்கிறேன்!

அன்புடன்

நண்பன் ராம்!

நல்லது செய்தால் நல்லது நடக்கும்!


"நீ பிறருக்கு நல்லது செய்தால் உனக்கு யாராவது நல்லது செய்வார்கள்!" "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்". இவையெல்லாம் இந்து தர்மத்தில், நமது கலாச்சாரத்தில் தர்மத்தை அனைவரும் கடை பிடிக்க வேண்டும் என்பதற்காக காலம் காலமாக சொல்லப்பட்டுவரும் வாக்கியங்கள்.

தற்கால சூழ்நிலையில் இதை நம்புவது சற்று கடினமே. நான் ஒருவருக்கு நல்லது செய்தால் அவர் தான் எனக்கு பிரதிபலனாக நல்லது செய்யவேண்டும் அது தானே முறை. எனக்கு சம்பந்தம் இல்லாத வேறு யாரோ ஒருவர் எனக்கு எப்படி நன்மை செய்வார் என்று தோன்றும். தற்காலத்தில் இது வெறும் சமாதானத்திற்கான வார்த்தையாகவே தோன்றும். நான் எல்லோருக்கும் தான் நன்மை செய்கிறேன். ஆனால் எனக்கு உபத்திரவம் செய்பவர்கள் தான் ஜாஸ்தி. நான் விழுந்து விழுந்து நல்லது செய்தாலும் எனக்கு தீமை தான் நடக்கிறது என்று புலம்புபவர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வதும் சரியாகவே இருக்கும். ஆனால் இவை ஏன் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்டால் இந்த புலம்பலை விட்டு விட்டு மேற்கொண்டு நன்மைகள் செய்யவும் பிறரை செய்யத் தூண்டுவதற்கும் நமது மனம் உந்தப்படும்.


ஆம்! சொர்கத்தையும் நரகத்தையும் நம் கண்முன்னே நமக்கு மிக அருகாமையில் இதோ பார், இது தான் சொர்கம். இதோ பார் இது தான் நரகம் என்று மிக எளிதாக காட்டக்கூடிய ஒரு ஆத்மார்த்தமான தெய்வீக தத்துவத்தை மிக எளிய வாக்கியத்தில் உள்ளடக்கி இருக்கிறது இந்து தர்மம். கண்ணை மூடிக்கொண்டு இந்த வாக்கியத்தை சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் நம்பி அதன் படி வாழ்ந்தாலே போதும், சொர்கத்தை நாம் வாழும் காலத்திலேயே கண்முன்னால் காணலாம்.

தவம் செய்ய வேண்டாம். தியாணம் செய்ய வேண்டாம். துறவு வாழ்க்கை வாழ வேண்டாம். எல்லோரும் எப்படி வாழ்கிறீர்களோ அப்படியே வாழ்ந்தால் போதும். சொர்கம் மிக அருகில் உங்கள் கண் முன்னே இருப்பதை உணர முடியும். அத்தகைய ஒரு அற்புத ஆத்ம தத்துவத்தை இந்து தர்மமும் நமது கலாச்சாரமும் வெறும் ஒற்றை வாக்கியத்தில் உள்ளடக்கியிருப்பது உலகில் வேறெந்த நாட்டிலோ வேறெந்த மதத்திலும் காணமுடியாத அற்புதம் ஆகும்.

சரி, இந்த வாக்கியத்தில் உள்ள சூட்க்ஷமம் என்ன?. இந்த பிரபஞ்சமே ஒரு அலை வடிவாகும். ஆம். நீரிலே ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் நீங்கள் காண்பது என்ன?. கல்லின் அதிர்வு உண்டான இடத்திலிருந்து வட்ட வடிவமான அலை ஒன்று புறப்பட்டு நீரின் எல்லா பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த அலை வடிவம் தான் நிரந்தரத் தத்துவம். நாம் பார்க்கும் இந்த வாக்கியத்தின் சூட்சமமும் அது தான். இந்த பிரபஞ்சமும் அதே அலை பரவல் முறையில் தான் இயங்குகிறது. கண்ணுக்குத் தெரிந்த , தெரியாத எல்லா இயக்கங்களும் அலை வடிவிலே தான் உள்ளன.

அண்ட வெடிப்பு ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. அந்த அதிர்வில் உண்டான அலை தான் நாம் வசிக்கும், பார்க்கும் இந்த கிரகங்கள். யோசித்துப் பாருங்கள், அலை வடிவம் பிரபஞ்சத்தில் இல்லையென்றால் ஏன் கிரகங்கள் எல்லாம் ஒரு வட்டப் பாதையில் சுற்ற வேண்டும். அலை வடிவமே யாவற்றுக்கும் மூலம். இந்த உலகில் நடக்கும் எல்லா மாற்றங்களுக்கும் பரவும் எல்லா நன்மை தீமைகளுக்கும் இந்த அலை வடிவமே பிரதானம். இதை மனதில் நன்றாக விளங்கிக் கொண்டால் நீங்கள் ஆன்மீகத்தின் அடித்தளத்தையே அழகாக புரிந்து கொள்பவர்களாவீர்கள்.

இந்த அலை வடிவத்திற்கு உதாரணம் சொல்கிறேன் உற்றுப் பாருங்கள். என்னை அல்ல. பூமியை. ஜப்பானில் ஒருநாள் பூகம்பம் வருகிறது. ரிக்டர் அளவில் 6 அல்லது 7 என்று செய்திகளில் சொல்லப்படும். பிறகு சில நாள் கழித்து மீண்டும் ஒரு பூகம்பச் செய்தி வரும். எங்கே? இந்தோனேசியாவில்! பிறகு சில நாள் கழித்து மற்றொரு பூகம்பச் செய்தி வரும். எங்கே? இந்தியாவின் வடக்கே, அல்லது பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான், பிறகு ஆப்பிரிக்காவின் ஒரு நாட்டில், பிறகு அமெரிக்காவின் ஒரு பகுதியில் இப்படியே ஒரு வட்ட வடிவமாக இந்த அலை பிரயானப்பட்டு மீண்டும் துவங்கிய இடத்திலேயே வந்து நிற்கும். "இன்று ஜப்பானில் பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவானது" என்று செய்திகள் வாசிக்கப்படும்.

பூமி ஒரு திடப்பொருளே. ஆனாலும் அதுவும் இந்த அலைவடிவத் தத்துவத்திலிருந்து விலகி இருக்க முடியாது. கடலில் அலை நம் கண்ணுக்குத் தெரிந்ததே. சுனாமி ஒன்றே போதும். எங்கேயோ துவங்கிய அலை ஆப்பிரிக்கா வரை தாக்கிய இந்த அலை வடிவத்தை நாம் கண்கூடாகக் கண்டோம். தென்றல் காற்றும், கொடும் புயலும் அலை வடிவே. இப்படி பிரபஞ்சத்திலும் பூமியிலும் வியாபித்திருக்கும் அலை நம்மிலும் தானே இருக்கும். நம் உடல் மற்றும் மனம் அதாவது உணர்ச்சி இரண்டுமே இந்த அலை வடிவ தத்துவமாகவே இயங்குகிறது.

உடலில் இது எப்படி வேலை செய்கிறது? யோசித்துப் பாருங்கள், பசியால் உங்கள் வயிறு சுருங்கும் போது தலையில் வலி ஏற்படுகிறது. வயிற்றுப்பகுதியில் உணவு இல்லாமல் அழுத்தம் குறைவுபடும்போது அந்த அழுத்தம் தலையில் உண்டாகிறது. தலைவலிக்கு இதுவே காரணம். இது தான் அலைவடிவ விளைவு.


இந்த விளைவு நமது உணர்ச்சியிலும் உண்டு. ஒருவர் முன் உட்கார்ந்து கொண்டு நீங்கள் வாய் விட்டுச் சிரியுங்கள். உங்கள் எதிரில் இருப்பவர் நீங்கள் என்னவென்று சொல்லாமலேயே சிரிக்கத் துவங்குவார். உங்கள் மனதில் உள்ள மகிழ்ச்சியான உணர்வு சிரிப்பு என்ற அதிர்வின் மூலம் வெளிப்பட்டு அலையாகப் பரவி அடுத்தவர்களை சென்று அடைகிறது. இதே போல் நீங்கள் ஒருவரை முறைத்துப் பாருங்கள், காரணம் சொல்வதற்கு முன்னடியே அவர் மனம் ஒரு பதற்றத்திற்கு வந்து விடும். இதுவும் அப்படியே!

தெருவில் உங்களிடம் ஒருவர் கோபப்படுகிறாரா? முன் தெருவில் அவரை யாரோ கோபப்படுத்தியிருப்பார்கள். உங்களிடம் ஒருவர் அன்பு காட்டுகிறாரா, அவர் பிறரால் அன்பாக நடத்தப்பட்டிருப்பார் என்பது நிச்சயம். நீங்கள் ஒரு ஏழைக்கு உதவுகிறீர்களா, அவருக்கு வசதி வந்தவுடன் அவர் பிறருக்கு உதவுவார். அவரால் உதவி பெற்றவர்கள் மற்றவர்களுக்கு, இப்படி மனிதனின் எல்லா நடவடிக்கைகளும் ஒரு அலை வடிவில் இந்த சமூகத்தில் பரவிக் கொண்டே இருக்கிறது. தீமைகளும் அவ்வாறே.




உணர்ச்சியின் அலை வடிவம் தான், நாம் செய்யும் நன்மையும் தீமையும் சுற்றி சுற்றி நம்மையே வந்தடையும் வேலையைச் செய்கிறது. உதாரணமாக நாம் ஒரு சாலையில் செல்கிறோம், எதிரே வாகனத்தில் வருபவர் நம்மீது லேசாக இடித்து விடுகிறார். நாம் அவரிடம் கோபப்படாமல், "பரவாயில்லை பார்த்துச் செல்லுங்கள்" என்று அவரிடம் சமாதானமாகச் சொல்லியனுப்பினால், அவர் செல்லும் போது மனது அமைதியாகவும், சக மனிதர் தன் மீது காட்டிய அன்பை நினைத்தும் பயணம் செய்வார்.

இப்போது அவர் மீது யாரேனும் மோதினால் கூட அதே போல அவரும் சமாதானமாக பேசி அனுப்புவார். இது அன்பின் அலை பரவுவதற்கு உதாரணம். இது மாறாக நடந்தால் என்ன ஆகும். வழியில் நாம் சண்டை போட, அதே கோபத்தில் அவர் இன்னொருவரிடம் சண்டை போட இப்படியே கோபமும் துன்பமும் ஒரு அலையாகப் பரவும். இது நாம் எளிதில் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் தான்.

மகிழ்ச்சி ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் போது சமூகத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இப்படி ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மகிழ்ச்சி பரவும் போது அந்த மகிழ்ச்சியின் அலையும் அது பரவும் மடங்கும் பல மடங்காக உயர்கிறது. மகிழ்ச்சியும் நன்மையும் மொத்த சமூகத்திற்கும் ஒன்றாகப் பரவினால் முழு சமூகமும் சொர்க்கத்தைப் போல மகிழ்ந்திருக்கும் என்பதற்காகவே இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பல்வேறு பண்டிகைகளை ஒன்றாகக் கொண்டாடுகிறோம்.

இப்படிப் பண்டிகைகளைக் கொண்டாடும் போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லோரும் ஒரே நேரத்தில் மகிழ்ந்திருப்பர். அந்த நாளில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருப்பதால் குற்றங்கள் எதுவும் நடக்காது. நல்ல நாளும் அதுவுமாக கோபப்படக்கூடாது என்பதால் கோபங்கள் வெளிப்படாது. குறிப்பிட்ட ஒரு நாளில் யாருமே கோபப்படவில்லையென்றால் எப்படி இருக்கும். அந்த சமூகம் சொர்கம் தானே.



எப்படி ஒவ்வொரு வீட்டிலும் ஒரே மாதிரியான பண்டிகையைக் கொண்டாடும் போது மொத்த சமூகமும் அமைதியும் மகிழ்ச்சியும் கொண்டிருக்கிறதோ, அதே போல ஒவ்வொரு தனி மனிதரும் நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்று நம்பி நன்மை செய்யும் போது முழு சமூகமும் நன்மைகள் கொண்ட சமூகமாகவே இருக்கும். இப்படி வாழ்நாள் முழுவதும் சமூகத்தில் உள்ள அனைத்து மக்களும் நன்மைகள் மட்டுமே செய்து வாழ்ந்தால் மொத்த சமூகமும் நன்மையும் மகிழ்ச்சியும் நிறைந்த சமூகமாகத்தானே இருக்கும். சமூகத்தில் குறையுள்ள மனிதர்களே இருக்க மாட்டார்களே! குறையற்ற மனிதர்கள் வாழும் சமூகம் சொர்கமே!

இப்படி மகிழ்ச்சி அலையாகப் பரவினால் அந்த சமூகம் சொர்கத்தை கண்ணால் காணும்.

மாறாக தனிமனிதர்கள் தீயகாரியங்களில் ஈடுபட்டு, தானும் துன்பத்தில் ஆழ்ந்து மற்றவர்களையும் துன்புறச்செய்தால் அந்த துன்ப அலையே சமூகத்தில் பரவும். இப்படி துன்பம் இரட்டிப்பாகி மொத்த சமூகத்திலும் அந்த அலை பரவினால் அந்த சமூகம் சச்சரவுகளும் போராட்டங்களு கொண்டதாகவே இருக்கும். யாரும் அமைதியும் மகிழ்ச்சியும் கொண்டிருக்க மாட்டார்கள். இப்படி அமைதியும் மகிழ்ச்சியும் இல்லாத சமூகம் நரகமாகவே கருதப்படும். சொர்கமும் நரகமும் இப்படித் தான் தீர்மானிக்கப்படுகிறது.

இப்படி நாம் செய்யும் நன்மை தீமைகள் யாவும் அலைவடிவில் ஒரு சுற்று சுற்றி திரும்பி நம்மையே வந்தடைகிறது என்பதை நன்கு புரிந்து கொண்டால் நாமும் நல்லது செய்வோம் பிறரையும் நல்லது செய்யத் தூண்டுவோம். ஏனெனில் அது தானே திரும்பி நமக்கு வரும். ஆக நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்பது உண்மையான தத்துவமேயன்றி வெறும் வாக்கியம் அல்ல. ஆகவே தீர்க்கமாக நம்புவோம். நல்லது செய்தால் நல்லது நடக்கும். நல்லதே செய்வோம்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

கொசுறு: இது இன்னும் புரியவேண்டும் என்றால் சிரஞ்சீவி நடித்த "ஸ்டாலின்" என்ற தெலுங்கு படத்தை பாருங்கள். ஒரு அற்புதமான தத்துவத்தை இவ்வளவு அழகாக காட்சி வடிவில் கொடுத்த ஒரே திரைப்படம் என்று இதை தைரியமாகச் சொல்லுவேன். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். பார்த்தவர்கள் பின்னூட்டத்தில் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். சரிதானே!

மீண்டும் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்


Sunday, August 16, 2009

இலவசங்கள் தருவது நல்லாட்சியா?


நமது இந்து தர்மப் புராணக் கதைகளில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பது எல்லா காலத்திற்கும் ஏற்ப அழகாக விளக்கப்பட்டிருக்கிறது.

அகங்காரத்துடன் வாழக்கூடாது, அகங்காரம் பாவம் என்பதை பல முற்கால சம்பவங்கள் மற்றும் கதைகள் மூலம் விளக்கி உள்ளனர் பெரியோர்.

அவற்றில் ஒரு துளியை இங்கே பார்ப்போம்.

மகாபாரதத்தின் நிறைவு காலம். அதாவது பாரதப்போர் முடிந்து தருமரின் ஆட்சி நடந்து வந்தது. தருமரின் ஆட்சி தருமத்தின் ஆட்சியே ஆகும்.

தருமரின் ஆட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். பருவநிலைகள் சீராக இருந்தது. விவசாயம் பெருகியது. திருட்டு கொள்ளை மற்றும் பிற துர்காரியங்கள் எதுவும் நடக்காமல் மக்கள் நிம்மதியாக இருந்தனர். பசித்தவர்கள் யாருமே இல்லாமல் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தனர். இப்படி நல்லாட்சியை சிறப்பாக நடத்தி வந்தார் தருமர்.

இப்படி வாழ்ந்து கொண்டிருக்கையில் ஒரு முறை ஸ்ரீ க்ருஷ்ணர் தருமரைப் பார்க்கச் சென்றார். அங்கே நல் ஆட்சி நடப்பதையும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதையும் தருமரிடம் பேசுவதன் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

அவை யாவையும் கேட்டுக் கொண்டிருந்த கண்ணனுக்கு தருமருக்கு தனக்கு நிகராக நல்லாட்சி நடத்துபவர் யாரும் இல்லை என்பது போன்ற கர்வம் உண்டாகியிருப்பது புரியத்துவங்கியது. தருமருக்கு பாடம் புகட்ட எண்ணினார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

ஒரு நாள் தருமரை பாதாள உலகில் ஆட்சி புரிந்துவரும் மகாபலி என்னும் அரசனிடம் அழைத்துச் சென்றார் ஸ்ரீ க்ருஷ்ணர். மகபலி சகல மரியாதைகளுடன் தர்மபுத்திரரை வரவேற்றார்.



மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்து மதம்?


க்ருஷ்ணர் மகாபலியிடம் கூறினார்: "உனக்குத் தர்ம புத்திரரைப் பற்றித் தெரியுமா? தான, தர்மங்களின் இருப்பிடம் இவர்தான், நாள் தவறாமல் ஒவ்வொரு தினமும் பதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இவர் உனவு அளிக்கிறார். இப்படிப்பட்ட நல்லாட்சி நடத்தும் ஒரு அரசனை நீ எங்காவது பார்த்திருக்க முடியுமா?" என்றார்.

இதைக்கேட்ட மகாபலி சிரித்தார், "தினமும் பதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தன்னிடம் பிச்சை எடுத்துதான் தின்ன வேண்டும் என்ற நிலையில் அவர்களை வைத்திருப்பது, இவருடைய ஜம்பத்தைத்தானே காட்டுகிறது? இப்படி நடத்தப்படும் ஆட்சி ஒரு ஆட்சியா? எனது நாட்டில் நான் ஒரு ஊரைக் கொடுக்கிறேன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னால் கூட, என்னிடம் எந்தப் பிரஜையும் உணவுக்காக வந்து காத்திருக்க மாட்டான்.

இப்படிப் பதினாயிரத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களை வளர்த்து, தனது மமதையைக் கட்டிக் காத்துக் கொள்ளும் இந்தத் தர்மபுத்திரரா பெரிய அரசர்? இவரது ஆட்சியா நல்லாட்சி? தூ...! என்று காரி உமிழ்ந்து பரிகாசித்து விட்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தர்ம புத்திரரின் இறுமாப்பு அடியோடு ஒழிந்து அமைதியும் அடக்கத்துடனும் ஆட்சி செய்தார் என்கிறது பாரதம்.

இத்தகைய குணம் கொண்டவர்கள் எல்லாக்காலத்திலும் உள்ளார்கள். இந்த காலத்தில் ஆட்சியாளர்களுக்கும் இது பொருந்தும் தானே!

ஆதலால் தான் சொல்கிறேன், இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

Saturday, July 25, 2009

ஓரினச்சேர்க்கையும் இத்தாலி ராணியும்


டும் டும் டும் டும் டும்

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி! சல்லாப மனிதர்களுக்கோர் அறிய வாய்ப்பு! இத்தாலி ராணியின் அதிரடி உத்தரவு!

நமது நாட்டில் இனி ஆணும் ஆணும் காதலிக்கலாம். பெண்ணும் பெண்ணும் காமம் கொள்ளலாம்.

நாட்டில் எல்லோரும் ஓரினச்சேர்க்கை வைத்துக்கொள்ளலாம் என்று இத்தாலி ரானியால் இனிதே ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.

டும் டும் டும் டும் டும்

மன்னின் மைந்தன்: "இது என்ன அநியாயம்? இது அக்கிரமம். புனிதமான உணர்வுகளையெல்லாம் வக்கிரமான சட்டமியற்றி கொச்சையான உறவுகளாக மாற்ற நினைப்பதா? இது என்ன இத்தாலி என்று நினைத்துக் கொண்டாளா உன் ராணி. இதை தம்பட்டம் அடித்து சொல்ல உனக்கே கூச்சமாக இல்லை? அருவெறுப்பாக இல்லை? நீயும் இந்த மன்னின் மைந்தன் தானே மடையனே!"

காவலாளி: ஏய்! நீ என்ன புரட்சிக்காரனா! ராணிக்குத் தெரிந்தால் உன் தலை சீவப்படும்! உடனே இங்கிருந்து போய்விடு.

மன்னின் மைந்தன்: ஐந்தாயிரம் வருடங்களுக்கும் பழமையான செம்மைப்படுத்தப்பட்ட புனிதமான எங்கள் கலாச்சாரத்தை அழிப்பதே தனது வேலை என எண்ணி சட்டம் இயற்றுகிறாள் உன் ராணி. இதைக்கண்டும் வாய்மூடி அடிமையாக இருக்கச் சொல்கிறாயா! வெள்ளைத் தோல் மாயை கொண்டவனே! வெள்ளைக்காரன் சொல்வது தான் நாகரீகம் என்று எண்ணுபவனே! உன் ராணியிடம் போய்ச் சொல், இந்நாட்டில் இது போன்ற இழிசட்டங்கள் இயற்றத் தேவையில்லையென்று.

காவலாளி: சல்லாபமாயிருப்பவர்களுக்கு துணைபோகும் சட்டம். உனக்கு ஏன் வலிக்கிறது?

மன்னின் மைந்தன்: ஏன்? நீ சட்டம் இயற்றாவிட்டால் அவர்கள் சல்லாபிக்கப்போவதே இல்லையா? இல்லை இது போன்ற இழி மனிதர்களை இங்கே யார் தடுத்தார்கள்? இவர்கள் இருட்டரைக்குள் எட்டிப்பார்த்தவர்கள் யார்? அல்லது இது வரை இவர்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று சொல்லி என்றாவது கைது செய்திருக்கிறீர்களா? மக்கள் தங்கள் தர்மத்திற்க்கு கட்டுப்பட்டுத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஓரினச்சேர்க்கையாளர்களை யாரும் சீண்டாத பொழுது தேவையில்லாமல் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நல்ல கலாச்சாரத்தில் வாழ்பவர்களை முறையற்ற வாழ்வுக்குத் தூண்டுகிறீர்கள். இந்த பாரதத்தின் கலாச்சார ஆணிவேரை அசைத்துப்பார்க்கத் துணிகிறீர்கள். ஒரு நாள் இந்த கேவலமான போக்கிற்க்கு நீயும் உன் ராணியும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

காவலாளி: மூடனே! அதிகப்பிரசங்கி. அரசியின் சட்டத்தை அவமதிக்கிறாயா! உன்னை ராணியின் முன் நிறுத்துகிறேன் பார்.

மன்னின் மைந்தனை இழுத்துச் சென்று இத்தாலி ராணியின் முன் நிறுத்தினான் காவலாளி.

இத்தாலி ராணி: என்ன பிரச்சனை?

காவலாளி: மகாராணி! இவன் மன்னின் மைந்தன். ஓரினச்சேர்க்கை செய்யுங்கள் என்று நீங்கள் இயற்றிய உயர்வான சட்டத்தை அவமதித்துப் பேசுகிறான்.

இத்தாலி ராணி: மன்னின் மைந்தா! உனக்கு ஓரினச்சேர்க்கை பிடிக்காதா? அல்லது உனக்கு ஒத்துப்போக சரியான ஆண் கிடைக்கவில்லை என்ற கோபமா?

மன்னின் மைந்தன்: தூ... வெட்கம் கெட்டவளே! கூச்சமில்லாதவளே! நாயைப்போல் வாழும் உங்கள் வாழ்க்கையைப் பேயைப்போல் வந்து எந்நாட்டில் திணிக்கப்பார்க்கிறாயே! இந்து தர்மமும் இந்நாட்டின் கலாச்சாரமும் உன்னையும் சேர்த்து வாழவைக்கும். நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்ட நினைக்காதே!

இத்தாலி ராணி: என்னடா பெரிய இந்து தர்மமும் உனது கலாச்சாரமும்! நீங்கள் எல்லோரும் காட்டுமிராண்டிகள் என்று உங்கள் ஊர்காரர் ராமசாமி நாயக்கரே சொல்லிவிட்டார். கருணாநிதியும் அதையே தான் வழிமொழிகிறார். உங்கள் சொந்தநாட்டுக்காரர்களே எங்கள் பக்கம் தான்! இத்தாலி நாட்டுச் சட்டத்தை நீ ஏற்றுக்கொள்ள வேண்டியது உனது தலைவிதி.

மன்னின் மைந்தன்: இழி பிறவிகள் இந்து தர்மத்தை எப்படி வேண்டுமானாலும் பழிப்பார்கள். அதை ஏற்றுக்கொள்ளும் அவசியம் எனக்கு இல்லை. இந்த நாட்டின் தர்மங்களும் மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்ற உயர்ந்த சிந்தனைகளுடைய கலாச்சாரமும் உன்னால் நசுக்கப்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன்!.

இத்தாலி ராணி: ஏய்! நீ அதிகம் பேசுவாய் போலிருக்கிறது. இதோ பார். மிருகங்களுக்குக் கூட ஓரினச்சேர்க்கை உண்டு என்றும் இது ஒரு இயற்க்கையான உணர்ச்சி என்றும் நிபுனர்களே சொல்லியிருக்கிறார்கள். எதுவும் தெரியாமல் எக்காளமிடாதே?

மன்னின் மைந்தன்: மமதை கொண்ட ராணியே! புனர்ச்சியின் உணர்ச்சிகள் இயற்க்கையானதே என்று உணர்ந்து, அத்தகைய உணர்ச்சிகள் உண்டாவதற்க்கான காரணமும் அறிந்து அவற்றை முறைப்படுத்தி முழுமையான மனிதனாக ஒருவன் வாழ என்ன செய்யவேண்டும் என்பதனை வகுத்து முறையாக அதன் படி வாழ்பவர்கள் நாங்கள். நீ எனக்குச் சொல்லித்தராதே!

இத்தாலி ராணி: ஹும்! நீ சாகாமல் போக மாட்டாய்! இதோ.. உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன்...எங்கே ஓரினச்சேர்க்கையை நீங்கள் கலாச்சாரம் கொண்டு எப்படிக் கட்டுப்படுத்தினீர்கள் என்று நான் திருப்தியடையும் வகையில் சொல் பார்க்கலாம். என் மனம் அதை ஏற்றுக் கொண்டால் உன்னை விடுவிக்கிறேன். இல்லையேல் உன் தலை கொய்யப்படும் ஜாக்கிரதை.

மன்னின் மைந்தன்: முதலில் அது உண்டாகும் காரணத்தை புரிந்து கொள். எல்லா மனிதர்களுக்கும் பதின் வயதுகளின் ஆரம்பத்தில் தோன்றும் ஒரு பரவச உணர்ச்சி தான் ஓரினக் கவர்ச்சி. அது உடலுறவுக்கு ஏங்கும் உணர்ச்சி அல்ல.

அது உடல் மாற்றத்தைக் கண்டு பரவசம் கொண்டு தம்மைப்போல் உள்ள சக மனிதனுக்கும் அதுவே தானா என்று ஆராய முற்படும் முயற்ச்சி. ஆணுக்கு ஆண் முழுமையாக தங்களை அறிந்து கொள்ளவும், அதே போல் பெண்ணுக்குப் பெண்ணும் தங்களை முழுமையாக புரிந்து கொள்ளும் ஒரு ஆர்வக் கோளாரின் வெளிப்பாடு.

பின்னர் நான் மட்டும் தனித்தவன் அல்ல. எல்லோரும் என்னைப்போல் தான் என்று உணர்ச்சிகள் ஒரு நிலைக்குத் திரும்பும் போது மனிதனின் வயது பதின் வயது துவக்கத்திலிருந்து பதினைந்தைத் தொட்டிருக்கும். பதினைந்து வயதைத் தொடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இப்போது தங்களைப்பற்றித் தெரிந்து கொண்டதைப்போல் எதிர் பாலரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலெழும். இது தான் இயற்க்கை.

இந்த உணர்ச்சி தான் ஆணையும் பெண்ணையும் இயற்க்கையான புனர்ச்சிக்குக் கொண்டு செல்லும். காதலும் காமமும் இந்த வயதில் தான் தலை தூக்கும். ஆணுக்குப் பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் அடையத்துடிக்கும் வயது. இந்த வயதில் காதலும் காமமும் முறையான உறவான திருமணம் என்ற சடங்கின் மூலமாக நிகழ்த்தப் பட்டு இல்லற வாழ்க்கை என்னும் தர்மத்திற்க்குள் நுழைந்து இயற்க்கையாக உண்டாகும் முறையான உணர்ச்சிகளை முழுமையாக அனுபவிக்கும் படி எங்கள் கலாச்சாரம் கட்டுக்கோப்பாக இயற்றப்பட்டுள்ளது.

இத்தாலி ராணி: சரி அப்படியானால் ஓரினச்சேர்க்கை உருவாவது ஏன்?

மன்னின் மைந்தன்: ஒரு ஆண் தன்னை முழுமையான ஆண் என்பதை உணரத் தவறும் போது. ஒரு பெண் தன்னை முழுமையான பெண் என்பதை உணரத் தவறும் போது, அவர்களின் உணர்வு ஒரே பாலினரிடமிருந்து மாறி எதிர் பாலினரை ஏற்க்கத் தடுமாறும். அவ்வாறு தடுமாறும் சமயங்களில் ஒருவருடைய மனம் சக பாலினரிடமே தம்முடைய உணர்வுக்கு ஆதரவை எதிர் பார்க்கும். அப்படிப்பட்ட இணக்கமான ஒரு ஆதரவு சக பாலினரிடம் இருந்தே கிடைக்கும் பொழுது அதையே இன்பமாகக் கொண்டு விடுகின்றனர்.

அதிலிருந்து விடுபட மனம் மறுக்கிறது. இது தான் உலகம், இதுவே இன்பம் என்று மனம் முடிவு செய்துவிடுகிறது. ஆணுக்கு பெண்ணின் அவசியமும், பெண்ணுக்கு ஆணின் அவசியமும் தேவையில்லை என்ற எண்ணம் தலைதூக்கி விடுகிறது.

இது இயற்கையான இல்லற வாழ்விலிருந்து அவர்களை வெளியேற்றி விடுகிறது. இவ்வாறான வாழ்க்கை சமூகத்திற்கு ஒவ்வாது. குடும்ப வாழ்க்கைக்கு கேடு விளைவிக்கும். குடும்பம் குடும்பமாக வாழும் சமூகத்தின் நடுவே இப்படிப்பட்டவர்கள் வாழ்வது அந்த சமூகத்தின் மற்ற தரப்பினரின் வாழ்க்கையை பாதிக்கக் கூடியதாக அமையும்.

அதனாலேயே அவ்வாறானவர்களை சமூகத்திற்க்கு அப்பாற்ப்பட்டவர்கள் என்று ஒதுக்க நேர்கிறது. அனால் இத்தாலி ராணியே! ஒட்டு மொத்தச் சமூகமும் ஓரினச்சேர்க்கையாளர்களாகவே ஆக வேண்டும் என்று நீ விரும்புகிறாய். இது சரிதானா? நீயே யோசித்துப்பார்!






இத்தாலி ராணி: சரி, இத்தகைய உணர்ச்சிகளை உங்கள் கலாச்சாரம் மூலமாக எப்படித் தடுக்கிறீர்கள்?

மன்னின் மைந்தன்: சுலபம். ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ தங்களுடைய பாலுணர்வை முழுமையாகப் புரிந்து கொள்ளச் செய்தால் போதும்.

உதாரணமாக பதின் வயதைத் தொடும் போது பெண் பூப்பெய்துகிறாள். எங்கள் கலாச்சாரப்படி பூப்பெய்தும் பெண்ணை உடனே மற்ற பெண்கள் எல்லோரும் சேர்ந்து அலங்காரம் செய்து அவளைச் சுற்றி நின்று பாட்டு பாடி அவளுடைய அழகை வார்த்தைகளால் சொல்லி , அவளுடைய பெண்மையை உணரச் செய்கிறார்கள்.

மனோரீதியாக அந்தப் பெண் தன்னுடைய பெண்மையை யாருடன் ரசிக்க வேண்டியவள் என்பதை பாட்டால் உணரச் செய்கிறார்கள். 'கட்டழகன் வருவான்', 'காளை உன்னைக் கட்டுவான்','வீரன் உன்னைக் கவர்ந்து செல்வான்' என்றெல்லாம் அவளது பாலுணர்வை ஆண்மீது செலுத்தச் செய்கிறார்கள். இதனாலேயே பருவம் எட்டும் வயதில் ஒரு பெண் தன் பெண்மையை முழுதாக உணர்கிறாள் மேலும் அவள் தன்னுடன் கூட வேண்டியது ஒரு ஆண் தான் என்று முழுமையாக மனதை எதிர் பாலரிடம் செலுத்த தயார் செய்து கொள்கிறாள். மாறாக அவள் பெண்ணைக் காதலிக்க விரும்பமாட்டாள்.

அதே போல் ஒரு ஆண் அரும்பு மீசை முளைத்தவனாக ஆகும் போது அவனிடம் ஆண் என்ற உடற்திமிரை ஏற்றி வைப்பார்கள். வீர விளையாட்டுக்கள், மல்யுத்தம், காளை அடக்குதல் போன்றவை எல்லாம் இப்படி வந்தவை தான். 'ஆம்பளப்புள்ள, நெஞ்ச நிம்த்தி நடப்பா!' என்று உசுப்பேற்றுகிறார்களே! அது ஆணாதிக்கம் உருவாகவும் பெண்ணை அடிமையாக்கவும் இல்லை. அப்படியெல்லாம் இருந்தால் தான் ஒரு ஆண் மனோரீதியாக தன்னை ஆண் என்று முழுமையாக உணரும் சூழல் உண்டாகிறது. (இந்த காலத்தில் ஆண் என்ற திமிர் ரவுடித்தனமும் அடியாள் வேலைக்கும் என்று ஆகிவிட்டது வேறு விஷயம்).

இப்படி ஒவ்வொரு ஆணும் முழுமையான ஆண்மகனாக நெஞ்சு நிமிர்த்தி நடப்பவனாக இருந்தால் அவன் சக ஆண்மகனிடம் தனது உணர்வுக்கு வடிகால் தேட மாட்டான். அவனது உணர்வு பெண்ணைக் கவர வேண்டும் என்பதிலேயே இருக்கும். ஆணும் ஆணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது காந்தத்தின் ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கும் என்ற தத்துவப்படி இருவரும் விலகிச் சென்று விடுவார்கள். காதல் கொள்ள மாட்டார்கள்.

பெயர் வைப்பதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் காட்டுவதும் ஒருவரை பெயர் சொல்லி அழைக்கும் போதே அவருடைய பாலின உணர்வு ஒவ்வொரு முறையும் உணரப்படுவதற்க்கே.

அதுமட்டுமல்ல ஆடைகளிலும் ஆண் பெண் என்று வேற்றுமை காட்டுவதும் நாம் எதிர் பாலரைப் பார்க்கிறோம் என்ற உணர்வு ஆணுக்கும்

பெண்ணுக்கும் உண்டாக வேண்டும் என்பதற்க்கே. உங்கள் நாட்டிற்கு வரும் எல்லோரும் சொல்லும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? அங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை என்பதே.

இத்தாலி ராணி: இது என்ன வேடிக்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் சீருடை இருக்குமா என்ன?

மன்னின் மைந்தன்: ஏன் இருக்கக் கூடாது? உமது காவல் துறைக்கு ஏன் சீருடை? கயவர்கள் கண்டால் கழிந்து ஓட வேண்டும் என்பதற்க்குத் தானே! பள்ளிக் குழந்தைகளுக்கு ஏன் சீருடை? பார்ப்பவர்களுக்கு பரிவு உண்டாக வேண்டும் என்று தானே! ஏன் உமது அமைச்சர்கள் எல்லாம் ஏன் வெள்ளையும் சொல்லையுமாக அலைகிறார்கள்? அவர்களை பார்த்தவுடன் பொதுமக்கள் பயப்பட வேண்டும் அதற்குத் தானே!

இதில் எல்லாம் எந்தக் காரணத்திற்க்காக சீருடை உள்ளதோ அதே போல் தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உளவியல் ரீதியாக புரிந்துணர்வு உண்டாக உடையில் வித்தியாசம் காண்பிக்கப்பட்டது.

இப்படி பல முறைகளில் எங்கள் கலாச்சாரத்தில் ஒரு ஆணை முழுமையான ஆணாகவும் ஒரு பெண்ணை முழுமையான பெண்ணாகவும் உணரச் செய்து அவர்களை முறையான இல்லற வாழ்க்கை வாழச் செய்கிறோம்.

ஆனால் நீயோ தேவையில்லாமல் சட்டமியற்றி எங்கள் கலாச்சாரத்தை அடியோடு உடைக்கப் பார்க்கிறாய்!







இத்தாலி ராணி: ம்ம்ம்! நீ சொல்வதை கேட்கும் போது எனக்கு சரியென்று தான் படுகிறது. ஆனால் இந்த நாட்டை இத்தாலி சாம்ராஜ்ஜியமாக 
மாற்ற வேண்டும் என்று எனக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் என்னால் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. 

அப்போது ஒரு காவலாளி ஓலை ஒன்றைக் கொடுக்கிறான். இத்தாலி ராணி சத்தமாகப் படிக்கிறாள். "பாரதத்தை ஆளும் இத்தாலி ராணியே! நீ இயற்றிய புதிய சட்டம் பற்றி கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள். இந்தியாவில் இந்து கலாச்சாரம் அடியோடு அழிக்கப்பட்டது என்ற நல்ல செய்தியை விரைவில் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். பதில் தேவை. இப்படிக்கு போப்"

இத்தாலி ராணி: பார்த்தாயா ஓலையை! இதோ உனக்காக ஒரு வாய்ப்பைத் தருகிறேன். கண்கானாமல் இந்த நாட்டிலிருந்து ஓடி விடு. உயிர் 
மிச்சமாகும். இல்லையேல் நீ செத்து மடியும் காலம் சில வினாடிகளில் வந்து விடும்! என்ன சொல்கிறாய்.

மன்னின் மைந்தன்: அந்நியநாட்டுப் பிசாசே! இத்தனைக்காலம் எங்களை ஆயுதத்தால் அடிமையாக்கினாய்! இப்பொழுது மதத்தால் அடிமையாக்கப் 
பார்க்கிறாய்.  நீ ஒழிந்தால் தான் இந்து தர்மத்தையும் இந்த நாட்டையும் காப்பாற்ற முடியும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. எங்கள் 
உணர்வுகளை அவமதிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து விட்டு பின்னால் சாவர்க்கர் காரணம், கோட்சே காரணம், மோடி காரணம், பட்நாயக் காரணம் என்று எங்கள் தலைவர்களை குற்றம் சொல்லிப் பயன் இல்லை. ஏன்னென்றால் நீ அவமதிப்பது எங்களைப் போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை. அசைக்கப் பார்ப்பது எங்கள் தாய்மை உணர்ச்சியை. இதற்க்கு நீயும் உன் இத்தாலி நாடும் ஒரு நாள் பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்பதை மறக்காதே!

இத்தாலி ராணி: சீ மூடனே! உனக்கு சாவுதான் ஒரே முடிவு. இவனை சிரச்சேதம் செய்யுங்கள்.

காவலாளிகள் மன்னின் மைந்தனை அழைத்துச் செல்கிறார்கள். கற்பாறையில் அவன் தாமரைத் தலை வைக்கப்பட்டது. காவலாளி கேட்கிறான். கடைசியாக ஏதாவது சொல்கிறாயா!

ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!

வெற்றிவேல் வீர வேல்! வெற்றிவேல் வீர வேல்!

ஓங்கிய வாள் வேகமாக கீழே இறங்க, குதித்துத் தெறித்தது உதிரம். சிதறி உருண்டது சிகரம். வீழ்ந்தது மன்னின் மைந்தனின் அங்கம். இன்பமாய் இளித்தாள் இத்தாலி ராணி.

புறாவின் கால்களில் கட்டி ஓலை ஒன்றை அனுப்பினாள்...

"மதிப்பிற்குரிய போப் அவர்களுக்கு, 

ஒரு இந்துப் பூச்சி நசுக்கப்பட்டது.  இந்தியா விரைவில் இத்தாலி ராஜ்ஜியம்...! நற்செய்திப் பெருங்கூட்டம் விரைவில் நடக்கும், 

உங்கள் தலைமையில்....!
.