Showing posts with label rajini. Show all posts
Showing posts with label rajini. Show all posts

Saturday, May 28, 2011

ராணா வேண்டாம், ரஜினி போதும்!



இவர் நலமடைய இறைவன் அருள வேண்டும்!



இது ரஜினி சிங்கப்பூர் செல்வதற்கு முன்பாக ரசிகர்களுக்காக பேசிவிட்டுச் சென்றதாக பல தளங்களிலும் Rajinifans.com-லும் கூறப்பட்டிருக்கிறது. தேர்தலில் ஓட்டுப் போட்டு விட்டு பேட்டி கொடுத்த போதே மிகவும் நலிந்த குரலில் பேசியவர் இன்று பேசுவதற்கு கஷ்டப்பட்டு பேசுவதாகவே படுகிறது. இந்த குரலை இவர்கள் வெளியிட்டிருக்கவே வேண்டாம் எனத் தோன்றுகிறது. இப்படி ஒரு தளர்வான ரஜினியின் குரலை கேட்டதே இல்லை என்பதால் மனம் கொஞ்சம் பதற்றமடைகிறது.









 நான் பார்த்த முதல் ரஜினிப்படம் முரட்டுக்காளை என்று ஞாபகம்! பாயும் புலி துடிக்கும் கரங்கள் என்று எத்தனையோ படங்களை குழந்தைப் பருவம் முதல் பார்த்து வளர்ந்திருக்கிறேன். வரிசையாக வந்த ரஜினிபடங்களை அவற்றில் நான் பார்த்த படங்களையெல்லாம் பள்ளிக்காலத்தில் ஒரு அட்டையில் எழுதி சுவற்றில் மாட்டி வைத்து பரவசப்பட்டதுண்டு.




பள்ளிப் பருவத்தில் ரஜினியின் படங்களின் ரிலீஸுக்குச் சென்று அவர் தோன்றும் காட்சிகளில் பேப்பர் கிழித்துப் போட்டு "ஸூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க" என்று தொண்டை கிழிய கத்திக் கூப்பாடு போட்டு ஆனந்தக் கூத்தாடிய பள்ளிப்பருவங்கள் மறக்க முடியாதவை.




அவர் கூடவே இருந்து அவர் மூலமாகவே அனுகூலங்களை பல அடைந்து விட்டுப் பின் அவரை கன்னடர் என்று மொழிபேதம் செய்து முதுகில் குத்தியவர்கள் ஏராளம். தமிழர்களால் அவர் சம்பாதித்தாரோ அல்லது தமிழர்கள் அவரால் சம்பாதித்தார்களோ தெரியாது, ஆனால் தமிழர்கள் அத்துனைபேரும் பரவசமாக மெய்மறந்து மகிழ்ச்சியாக இருந்த பல தருணங்கள் ரஜினியாலேயே நிரம்பியிருக்கும் என்றால் மிகையாகாது.


அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு அத்துனை பேரின் உணர்வுகளிலும் இரண்டரக்கலந்து விட்டவர் ரஜினி.


சிங்கப்பூரில் உள்ள கிட்னி பவுண்டேஷன் சிறந்த மருத்துவமனை என்று கூறப்படுகிறது. இங்குதான் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் அமர்சிங் சில ஆண்டுகளுக்கு முன் மாற்று சிறுநீரகங்கள் பொருத்திக் கொண்டு இன்று வரை அவர் நலமாகவும், சுறுசுறுப்புடனும் அரசியலில் இயங்கி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. அதே போல ரஜினியும் விரைவில் நலமுடன் திரும்புவார் என நம்புவோமாக!


என் பிரார்த்தனை, இது ரஜினியின் குரலாக இருக்கக்கூடாது, அவர் உடல் நிலை விரைவில் குணமடைய வேண்டும்!


சண்டை போடும் ராணாவைப் பார்க்கிறோமோ இல்லையோ மீண்டும் சிரித்துப் பேசும் ரஜினியை பார்க்க வேண்டும்! ஆண்டவன் சொல்லனும் ரஜினி செய்யனும்!


ஈஸ்வரோ ரக்ஷது!

.

Sunday, March 22, 2009

சூப்ப‌ர்ஸ்ட்டாரை சீண்டிப்பார்க்கும் தின‌ம‌ல‌ர்!

இன்று மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சீண்டியிருக்கிறது தினமலர். "அரசியலில் நாடு முழுவதும் பரவி விட்டது சினிமா மோகம்" என்ற தலைப்பில் நடக்கப் போகும் தேர்தல் களத்தில் பங்கேற்க்கப் போகும் நடிகர் நடிகைகளைப் பற்றிய குறிப்புக்கள், அவர்களின் அரசியல் பலம் போன்ற தனது எழுத்தாய்வுகளை வெளியுட்டுள்ளது. நடிகர் சிரஞீவி, பாலகிருஷ்னா , சஞ்சய் தத் மற்றும் நடிகைகள் நக்மா, ஜெயசுதா முதல் புதிய வரவான ஜெ கெ ரித்தீஷ் வரை அனைவரை பற்றியும் வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசியலில் பங்கேற்பவர்கள் மட்டுமல்ல பல பகுதிகளில் தேர்தலில் போட்டியிட்டும், தங்களது கட்சிக்காக பிரசாரமும் செய்யப்போகிறவர்கள்.

இவர்கள் எல்லோர் பற்றியும் போட்டுவிட்டு க‌டைசியில் சூப்ப‌ர்ஸ்ட்டார் ர‌ஜினி ப‌ற்றியும் குறிப்பை ம‌ற‌க்காம‌ல் சேர்த்து வ‌ம்புக்கு இழுத்துள்ள‌து. "சூப்ப‌ர் ஸ்ட்டார் ர‌ஜினி அதிக‌ ர‌சிக‌ர்க‌ளைக் கொண்ட‌வ‌ர். இவ‌ர் ச‌மீப‌த்தில் எந்த‌ க‌ட்சியையும் ஆத‌ரிக்க‌வில்லை. இவ‌ர் ஏதாவது வாய் திற‌க்க‌ வேண்டும் த‌மிழ‌க‌ க‌ட்சிக‌ள் காத்திருக்கின்ற‌ன‌" என்றெல்லாம் தேவையில்லாம‌ல் வெறும் வாயை மென்று த‌ன‌து வியாபார‌ குள்ள‌ந‌ரி புத்தியை வெளியிட்டுள்ள‌து. த‌மிழ‌க‌ க‌ட்சிக‌ள் சூப்ப‌ர்ஸ்டார் வாய் திற‌க்காம‌ல் இருப்ப‌தையே விரும்புகின்ற‌ன‌ என்ப‌தே உண்மை. ர‌ஜினி வாய் திற‌ந்து ஏதாவது பேசி வைத்தால் ந‌ம‌து தொழில் கெட்டுவிட‌ப்போகிற‌தே என்று தான் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் க‌வ‌லையில் உள்ள‌ன‌. அத‌னால் தான், முடிந்த‌ வ‌ரை அவ‌ரை அவ‌மான‌ப்ப‌டுத்தி அவ‌ர் வாயை மூட‌ வைக்கும் வேலையில் ப‌ல‌ வித‌ங்க‌ளில் காய் ந‌க‌ர்த்தினார்க‌ள் என்ப‌தும் உண்மை. அதில் ஒன்றுதான் ர‌ஜினி கன்னடர் என்ற‌ பிரிவினை வாத‌ப் பேச்சும் கூட‌.

உண்மை இப்படி இருக்கும் போது தினமலரில் தமிழக கட்சிகள் ரஜினி குரலை எதிர்பார்ப்பதை போன்று வெளியிட்டுள்ளது சுத்த அயோக்கியத்தனம். உண்மையைச் சொல்லப்போனால் இது போன்ற பத்திரிக்கைகளுக்கு தான் இந்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் சூப்ப‌ர்ஸ்டார் வாய் திறந்தால் அவரை திட்டி பேசுபவர்களையும், ஆதரித்து பேசுபவர்களையும் பற்றி மாறி மாறி எழுதி காசு பார்க்கலாமே! ஆனால் ப‌ழி ம‌ட்டும் சூப்ப‌ர்ஸ்ட்டாருக்கு.

யானை இருந்தாலும் ஆயிர‌ம் பொன், இற‌ந்தாலும் ஆயிர‌ம் பொன் என்ற‌ ப‌ழ‌மொழியைப்போல‌ சூப்ப‌ர்ஸ்டாரை புக‌ழ்ந்தாலும் காசு, இக‌ழ்ந்தாலும் காசு. அத‌னால் அவ‌ரைப் ப‌க‌டைக்காயாய் ப‌ய‌ன்ப‌டுத்தி குளிர்காய‌ எத்த‌னைப் பேர். அர‌சிய‌ல் க‌ட்சிகள் நேரடியாக அவமதிப்பது ஒரு புறம், அவ‌ர் கூட‌வே ப‌ணியாற்றி அவ‌ரையே முதுகில் குத்தும் ஒரு சில‌ திரைத்துறைப் பிர‌க‌ஸ்ப‌திக‌ள் ஒரு புறம், போதாக்குறைக்கு இந்த‌ மீடியாக்க‌ள்.

ச‌மீப‌த்தில் ஒட்டப்பட்ட‌ "அர‌ச‌ன்" திரைப்ப‌ட‌ சுவ‌ரொட்டியில் இவ்வாறு எழுதியிருந்த‌து "இன்று வேட்டை விரைவில் கோட்டை". இந்த வாசகம் சூப்ப‌ர்ஸ்ட்டார் ர‌ஜினியின் அனுமதி பெற்று தான் போடப்பட்டதா என்பது தெரியாது. ஆனால் ப‌ட‌ம் வியாபார‌ம் ஆக வேண்டும் என்ப‌தற்க்காக‌ ர‌சிக‌ர்க‌ளின் உண‌ர்ச்சிக‌ளை உசுப்பி விடும் வாச‌க‌மாக‌வே தெரிகிற‌து. இப்ப‌டி ஆளாளுக்கு சூப்ப‌ர்ஸ்ட்டாரையும் அவ‌ர‌து அமைதி காக்கும் குண‌த்தையும் வியாபார‌ம் ஆக்கி அவ‌ரை மாட்டி விடுவ‌தும் பிற‌கு அவ‌ர் மீது ப‌ழி அனைத்தையும் போட்டு அவ‌ருக்கு எதிராக‌வே உட்கார்ந்து கேள்வி கேட்ப‌தும் அவ‌ரை முதுகில் குத்தும் அப்ப‌ட்ட‌மான‌ துரோக‌மே அன்றி வேறில்லை.


இன்னும் எத்த‌னை பேர் சூப்ப‌ர்ஸ்ட்டார் ர‌ஜினியை மிதித்து முன்னேற‌ காத்திருக்கிறார்க‌ளோ?. சிக‌ர‌த்தை மிதித்த‌வ‌ர்க‌ள் உய‌ர‌த்துக்கு போவ‌துண்டு. ஆனால் மிதிப‌ட்ட‌ கார‌ண‌த்தால் சிக‌ரத்தின் உயரம் குறைந்ததில்லை. சூப்ப‌ர்ஸ்ட்டார் என்றும் சிக‌ர‌மே!

இறைவா! மீடியாக்களில் இருந்து தலைவரைக் காப்பாற்று. எதிரிக‌ளை அவ‌ர் பார்த்துக் கொள்வார்.

Friday, February 6, 2009

வள்ளுவர் வாக்கு


2. பொருட்பால் (2. Wealth)
2.1 அரசியல் (2.1 Royalty)
2.1.1 இறைமாட்சி (2.1.1 The Grandeur of Monarchy)

_____________________________________________________________

386. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்

(That land prospers where the king is to see, not harsh of words.)

_____________________________________________________________

ஒரு நாட்டை ஆளும் அரசனாக இருப்பவர் காட்சிக்கு எளிமையானவனவராக‌வும் மக்களிடம் கடும் சொல் பேசாதவராக‌வும் இருக்கவேண்டியது அவசியம். அவ்வாறு இருக்கும் அரசரை இந்த உலகம் போற்றி புகழும் என்பது வள்ளுவர் வாக்கு. நடைமுறை வாழ்க்கையில் எடுத்துக் கொண்டால் தனிப்பட்ட மன்னர்கள் கிடையாது எனினும் தலைவர்களாக இருப்பவர்களை மன்னர் என்ற இடத்தில் ஒப்பிட்டு நோக்கலாம்.

உதாரணமாக தமிழக சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற‌ நடிகராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காட்சிக்கு எளிமையானவராகவும் யாரிடமும் கடுஞ்சொல் பேசாதவராகவும், மிக எளிமையாக‌ எல்லோரிடமும் பழகுபவராக இருப்பதாலேயே உலகம் முழுவதும் அவருக்கு தனி மரியாதையும் புகழும் பரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

இவ்வாறு குறளின் ஒவ்வொரு பாடலும் அதன் பொருளும் எக்காலத்திற்கும் ஏற்புடையதாக இருப்பதாலேயே வள்ளுவர் வாக்கு மிக உயர்ந்து நிற்கிறது.