Sunday, October 28, 2012

வேதம் கூறும் அறிவியல்!


"நமக்கிடையே நடக்கும் இந்தப் புனிதமான உரையாடலைப் படிக்கிறவன் எவனோ, அவன் என்னை ஞான யக்ஞத்தின் மூலம் வழிபட்டவன் ஆவான். இது என் கொள்கை. 

நம்பிக்கையுடன் , இகழாமலும், இதைக் கேட்பவனும் விடுதலை பெற்று நற்செய்கைகள் செய்பவர்கள் அடைகின்ற நல்லுலகங்களை அடைகிறார்கள்." - பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

ஆரியர் திராவிடர் என்பதெல்லாம் வெறும் திரிக்கப்பட்ட செய்தி! அகழ்வாராய்ச்சி ஆரியர் என்கிற அந்நியப் படையெடுப்பை முற்றிலும் மறுக்கிறது. இதை ஆராய்ச்சி செய்து கூறுபவர்கள் வெள்ளையர்களே. ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் நம்மவர்கள் வெள்ளைக்காரன் சொன்னால் தானே நம்புவார்கள். பிள்ளையார் முன்னே நின்று தோப்புக்கரம் போடு என்றால் மூட நம்பிக்கை என்பார்கள். அதை வெள்ளையன் வந்து சூப்பர் ப்ரெயின் யோகா என்றால் 'ஆ' வென்று வாய்பிளந்து கேட்பார்கள். இது வரை பார்த்திராதவர்களுக்கு...இதோ வேதம் கூறும் அறிவியல் பற்றி கீழே! 


ஆரியப் படையெடுப்பு கட்டுக்கதை!


பகவான் ஸ்ரீக்ருஷ்னர் உத்தவரிடம் கூறலானார்: "பாக்கியமுள்ள உத்தவரே! இன்றிலிருந்து ஏழாவது நாள் இந்த துவாரகா நகரம் கடலில் மூழ்கி மறைந்து விடும். மிக விரைவில் இங்கு கலி புருஷனும் வந்து விடுவான். கலியில் ஜனங்கள் அதர்மத்தில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். நீ இனிமேல் எல்லா உறவு, சினேகத்தை விட்டு விட்டு என்னிடத்தில் மனதைச் செலுத்தி சம சித்தத்துடன் பூமியில் சஞ்சரிப்பாயாக. இந்த உலகை கண்ணனாகவே பார்ப்பாயாக!" என்றார். 

- ஸ்ரீமத் பாகவதம்!

கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட துவாரகை!



சப்தங்களுக்கு சக்தி உண்டு! அவ்வாறு வடிவமைக்கப்பட்டதே மந்திரங்கள்! 


பகவான், "பார்த்தா! இதை ஒருமனதோடு கேட்டாயா? தனஞ்ஜயா, உனது அறியாமையால் விளைந்த மயக்கம் ஒழிந்ததா?


அர்ஜுனன் சொல்கிறான்! "அச்யுதா, மயக்கம் ஒழிந்தது. உன்னுடைய அருளால் எனக்கு நினைவு வந்துள்ளது. என்னுடைய சந்தேகங்கள் தீர்ந்து விட்டன. நான் உறுதியாக இருக்கிறேன். உன் சொற்படி நடக்கிறேன்"

Sunday, October 21, 2012

பிராமணர்கள் மீதான ஜாதிக்கொடுமை!

நன்றி: சுதேசி

தமிழகத்தில் மட்டும் இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவு பிராமணர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருக்கின்றது. 

நாயுடு ஹால், உம்மிடி பங்காரு செட்டி & சன்ஸ், ஜெயின் பில்டர்ஸ், நல்லி குப்புசாமி செட்டி & சன்ஸ் , தேவர் & சன்ஸ், நாடார் & சன்ஸ், என்று ஜாதிப் பெயரில் இருக்கும் அத்தனை கடைகள் முன்பாகவும் ஏன் இவர்கள் ஆர்பாட்டம் செய்வதில்லை? பிராமணர்களிடம் மட்டும் தான் இவர்களால் வீரம் காட்ட முடியுமா? மற்ற ஜாதியினர் முன்பு நிற்க கூட திராணியற்ற தொடை நடுங்கி ஜென்மங்களா இவர்கள்?

சரி கிரிஸ்டியன் காலேஜ் என்று மத பெயருள்ள இந்த கல்லூரி முன்பாக இவர்கள் போராட தயாரா? பிரிவினையைத் தோற்றுவிக்கும் இந்த மதப் பெயரை அதன் பெயர்பலகையிலிருந்து கரி பூசி அகற்ற தயாராக இருப்பார்களா இந்த பிராமண எதிர்ப்பு வீரர்கள்? ஒரு வேளை ராமசாமி நாயக்கரின் கால் நக்கிகளுக்கு வேறு ஜாதிக்காரர்களின் கடைகளுக்கருகே போனாலே அவர்களது ஆண் தன்மை பரிபோய்விடுமோ என்னவோ?





ஆனால் ஏன் பிராமணர்களை மட்டும் தொடர்ந்து தாக்க வேண்டும்? தமிழகத்தில் பிராமணர்கள் மீதான ஜாதிக் கொடுமை 50 வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. ராமசாமி நாயக்கர் என்கிற கன்னடர் தமிழர்களிடையே உண்டாக்கிய பேதத்தின் விளைவால் தொடர்ந்து பிராமணர்கள் மீது மிக கொடூரமான இனதுவேஷம் நடந்து வருகிறது. மேலே காணப்படும் செய்தி அதற்கு சாட்சி. 

"நீ ஏன் ஜாதிப் பெயரை வைத்திருக்கிறாய்?" என்று யாரும் கேட்க முடியாது? காரணம் அந்தக் கேள்வி பிராமணர்களை மட்டுமே நோக்கி கேட்கப் படுகிறது என்பதால்! பிராமணர், ஐயர் என்றெல்லாம் பெயரைப் பார்த்த உடனே ஒரு வித இன வெறுப்பு கொப்பளித்துக் கொட்டப்படுவது தமிழகத்தில் கட்டற்ற முறையில் நடந்து வருகிறது என்றே சொலல் வேண்டும். இந்த மனோவியாதியிலிருந்து தமிழகம் விடுபடாமல் தொடர்ச்சியான சைக்கோ தனத்தில் அமிழ்ந்திருக்கிறது என்பதற்கு இன்னொரு சாட்சி.. ஜனனி ஐயர்!



தமிழகத்தைத் தவிற இந்தியாவில் மற்ற  அனைத்து மாநிலத்திலும் குடும்பப் பெயர் அல்லது தங்கள் ஜாதிப் பெயரை பெயருக்குப் பின்னல் வைத்துக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பெயரில் மட்டும் வைத்துக் கொள்ளக்கூடாது மற்ற விஷயங்கள் அனைத்திலும் எல்லோரும் ஜாதி வெறியோடு நடந்து கொள்ளலாம் என்கிற மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி 'ஐயர்' என்கிற பெயரை 'சர் நேமாக' வைத்துக் கொண்ட காரணத்திற்காக இயக்குனர் கரு பழனியப்பன் ஜனனி ஐயரை கண்டித்தாராம்.

ஒருவர் எப்படி பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பது அவரவர் தனிப்பட்ட உரிமையே, தவிர கரு பழனியப்பன், சொரி முனியப்பன், காரி உமிழப்பன் என்று தெருவில் போவோர் வருவோரெல்லாம் அவற்றில் தலையிட எந்த அடிப்படை உரிமையும் கிடையாது. அதைக் கண்டிக்க வேண்டிய அவசியமும் கிடையாது.


சரி அப்படியே திரு.கரு.பழனியப்பனார் இதைக் கண்டிக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம்..ஐஸ்வர்யா ராய், ஷ்ரேயா ரெட்டி, லக்ஷ்மி ராய், காஜல் அகர்வால், சோனியா அகர்வால், மேக்னா நாயுடு, நவ்யா நாயர், அனுஷ்கா ஷெட்டி, சமீரா ரெட்டி, காம்னா ஜெத்மலானி, லக்ஷ்மி மேனன் என்று பலர் ஜாதிப் பெயர்களை சர் நேம்களாகக் கொண்டு நடிக்கும் போதெல்லாம் எங்கே ஓடிப்போய் ஒளிந்து மறைந்திருந்தார் என்று தெரியவில்லை. ஆனால் பெயரில் 'ஐயர்' என்ற அடைமொழியைப் பார்த்த உடன் கரு பழனியப்பனுக்கு வீரம் பொங்கி வந்து விட்டது. உடனே அவர் பலரும் இருக்கும் மேடையில் ஜனனி 'ஐயரை' ஏதோ அவர் ஜாதி வெறி கொண்டவர் என்பது போல சித்தரித்து ஜாதி மோகத்தை கண்டித்தும் பேசி அவமானப்படுத்தி இருக்கிறார் இந்த வீரர். 

வேறு எந்த விதத்திலும் சக மனிதர்களை, நடிகர்களை, நடிகர்களை அவமதிக்க துணியாதவர்கள் 'ஐயர்' என்ற பெயர் கொண்ட ஒருவரைப் பார்த்த உடன் பலர் முன்னிலையில் அவமதிக்கத் துணிகின்றனர். இது பிராமணர்களுக்கு எதிராக அப்பட்டமாக நடக்கும் ஜாதிக் கொடுமை என்பது தவிற வேறில்லை.


சமீபத்தில் பாடகி சின்மயி, சிலர் தொடர்ந்து முக நூல் மற்றும் ட்விட்டரில் தரக்குறைவான முறையில் தன்னைப் பற்றி எழுதுவதாக புகார் தெரிவித்திருந்தார். அந்த அவரது முகநூல் பக்கங்களுக்குச் சென்று பார்க்கும் போதும் , அவருடன் உரையாடியவர்களையும் உரையாடிய விஷயம் மற்றும் முறைகளை பார்க்கும் போது தெளிவாக சின்மயி ஒரு பிராமணப் பெண் என்பதாலேயே தொடுக்கப் பட்ட இழிவான தொடர் தாக்குதலாக உணர முடிந்தது. இது குறித்து சின்மயியின் தாயார் ஒரு நீண்ட பதிவிட்டிருப்பதை சின்மயி தனது முக நூலில் சுட்டிக் காட்டி இருந்தார். பதிவு இங்கே

அப்பதிவில் மிகத் தெளிவாக எந்தளவிற்கு கீழ்தரமான தாக்குதல் இருந்தது என்பதையும் தெரியப்படுத்தி இருப்பதைப் பார்க்கும் போது ப்ராமணர்கள் மீதான ஜாதிக் கொடுமை இந்தளவிற்கு மோசமான வெறித்தனத்துடன் நடந்து வருவது தெளிவாக தெரியவருகிறது. ஆனால் இத்தகைய கேவலமான வார்த்தைகளைக் கொண்ட ஜாதிக் கொடுமை வேறு ஒருவருக்கு நடந்திருந்தால் இன்று சட்ட சபை விவாதமாகவே கூட ஆகியிருக்கலாம். ஆனால் கீழ்காணும் மிக மோசமான ஜாதித் தாக்குல் மிக வெளிப்படையாக பிராமணர்கள் மீது கேட்பாரில்லாமல் நடந்து வருவது மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கும் விஷயம்! கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கும் மேலாக தொடர் தாக்குதலை நடத்தி வந்திருப்பதாகக் கூறுகிறார்.

'பார்ப்பாரப் பெண்களை ரோட்ல இழுத்துப் போட்டு ரேப் பண்ணனும்' என்பதாக ஜாதியை வைத்து கொடுமையாக எழுதப்பட்டிருப்பதும், அதோடு நிற்காமல் "இந்த பாப்பார நாயிங்கள சங்கு சங்கா அறுத்து எறியனும் தல" என்றும் கொடுமையான வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது.

"Now came the first onslaught. The group that has been trolling Chinmayi for over a year now had a lively conversation of atmost perversion. ‘Karuthu SolraLamo? Modalla indha pappara’ ……’ roadla izhuthupottu rape pannonum’. Next one to give his valuable idea: adhoda ille indha pappara nayingala sangu sanga aruthu eriyanum thala ’ Even before this could subside the next was unleashed."

மிக மோசமான மன வக்கிரத்துடன் வெளிப்படுத்தப்பட்ட இந்த வாசகங்கள் ஒரு தருணம் வரும் போது அவ்வழியே செயல்படுத்தப்படமாட்டாது என்பது என்ன நிச்சயம்? பிரபலமான பாடகியே பிராமணராக இருந்ததால் இந்தளவுக்கு ஜாதிக் கொடுமையை அனுபவித்தார் என்றால் சாதாரண பிராமணர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் எந்தளவிற்கு இருக்கும். சின்மயி இதை காவல் துறைகு புகார் கொடுத்ததன் மூலமாக ஆவனப்படுத்தி இருக்கிறார். ஆனால் வேறு பிராமணர்கள் மீது நடத்தப்பட்ட வெளிவராத ஜாதிக் கொடுமைகள் எத்தனையோ? இன்னும் எத்தனை விதமான கொடுமைகளுக்கு மேற்கண்ட வக்கிரத்தைப் போல திட்டமிடப்படுமோ

இவ்வளவு மோசமான வகையில் வெளிப்படையாக தமிழகத்தில் ஜாதிக் கொடுமை பிராமணர்கள் மீது ஒரு சிலரால் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற முறையற்ற ஜாதிக் கொடுமையில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் கன்னட ராமசாமி நாயக்கரால் பிராமண எதிர்ப்பு என்கிற பிரிவினை வாதப் பேச்சால் மூளை சலவை செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள் அல்லது கம்யூனிச சித்தாந்தத்த சைக்கோக்களாக இருப்பார்கள். ஆனால் அதன் தாக்கம் பல்வேறு தரப்பு சக மனிதர்களிடமிருந்து வெவ்வேறு சூழ்நிலைகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. 

இதில் விசித்திரம் என்னவென்றால், இது போன்ற மனநோயாளிகள் ராஜபக்ஷேவைத் திட்டுவதை ஒரு ஃபேஷனாக செய்து வருவார்கள். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் இன துவேஷத்தை எதிர்த்து இங்கே மேடை போட்டு அல்லது இணைய வழியில் வீராவேசமாகப் பேசுவார்கள். ஆனால் அடுத்த நிமிடமே, ராஜபக்ஷே இலங்கையில் தமிழர்களுக்கெதிராக என்ன செய்தாரோ அதையே பிராமணர்களுக்கெதிராக தமிழகத்தில் செய்துவிட ஆயத்தமாகி விடுகிறார்கள். 

ஜாதிக் கொடுமை, இனரீதியான துவேஷம் போன்றவை எந்த மனிதக் குழுவிற்கு எதிராக நடந்தாலும் அது கண்டிக்கப் பட வேண்டியதே! 

ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை பிற ஜாதியினர் மீது நடத்தப்படும் உடல் மற்றும் மனோரீதியான தாக்குதல்களே ஜாதிக்கொடுமைகளாகவும், அதுவே பிராமணர்கள் மீது நடத்தப்பட்டால் அது பகுத்தறிவுப் புரட்சி போலவும் பார்க்கப்படுவது மோசமான ஜாதிக் கொடுமை!

பிராமணர்கள் மீதான இந்த மோசமான தொடர் ஜாதிக் கொடுமை கேட்பாரற்று நீண்டு கொண்டே போவதைப் பார்க்கும் போது, தமிழகத்து ராஜபக்ஷேக்களால் இங்கொரு முள்ளிவாய்க்கால் உருவாக்கப்படுமோ என்கிற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது!!

பிராமணர்களை இழிவு செய்யும் முகமாக 'பார்ப்பான் பாப்பாத்தி' என்று விளிப்பதை தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்! கீழே ஒருவன் அப்படி விளிப்பதில் இருக்கும் ஜாதிக் கொடுமை வன்மத்தைப் பாருங்கள்..!