Saturday, May 8, 2010

மனிதரைக் கொல்ல புதுவழி - ஜெபம் பண்ணுதல்!






தினமலர் செய்தியில்: இந்த பரிதாபம்

********

தலைவலி நோயை பயன்படுத்தி கட்டாய மதம் மாற்றம் செய்த பெண், திருப்பத்தூரில் நடந்த ஜெப கூட்டத்துக்கு சென்று மர்மமான முறையில் இறந்ததாகவும், கிறிஸ்துவ அமைப்பினர் சிலர் கட்டாய மதம் மாற்றம் செய்வதாக கருங்கல்பாளையம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த நாகேந்திரன்(35), ஆயில் மில் தொழிலாளி. அவரது மனைவி சுமதி(28). அவர்களுக்கு ஆனந்தகுமார் (12), பொற்கொடி(10) என இரு குழந்தைகள் உள்ளனர். சுமதி சில ஆண்டுகளாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள 'புது சிருஷ்டி சபை' என்ற கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள் சிலர், கமலா நகர் பகுதி மக்களிடம் மதம் மாறச் சொல்லி பிரசங்கம் செய்துள்ளனர். சுமதி தலைவலியால் அவதிப்படுவதை அறிந்த நிர்வாகிகள், அவரை சந்தித்தனர். 'சபைக்கு வந்து 'ஜெபம்' செய்தால் உங்கள் நோய் குணமாகி விடும்' என, கூறியுள்ளனர். சுமதியும் கச்சேரி வீதியில் உள்ள சபைக்கு சில வாரங்களாக சென்று ஜெபம் செய்துள்ளார். அமைப்பு நிர்வாகிகள், பல்வேறு இடங்களில் நடக்கும் ஜெப கூட்டத்துக்கு சுமதியை அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டம் திருப்பத்தூரில் ஜெப கூட்டத்துக்காக சுமதி, தன் குழந்தைகள் மற்றும் உறவினர் பெண் ஒருவருடன் சென்றுள்ளார்.

ஜெபக்கூட்டத்தில் இருந்த சுமதிக்கு நேற்று முன்தினம் காலை திடீரென தலைவலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பாதிரியார், சுமதியின் தலையில் கை வைத்து ஜெபம் செய்து, 'சிறிது நேரத்தில் சரியாகி விடும்' என, கூறியுள்ளார். ஆனால், சுமதி திடீரென இறந்து விட்டார். மாத்திரை சாப்பிட அனுமதிக்காமல், ஜெபம் செய்ததால் இறந்து விட்டதாக உறவினர்கள் புகார் செய்துள்ளார்.

சுமதியுடன் சென்ற உறவினர் பெண் கூறியதாவது: சுமதிக்கு அடிக்கடி தலைவலி வரும். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தினசரி மாத்திரை சாப்பிட்டு வருகிறார். புது சிருஷ்டி சபையை சேர்ந்த நிர்வாகிகள், 'சுமதிக்கு நோய் சரியாகி விடும்' என கூறி கட்டாய மதம் மாற்றினர். அதைத்தொடர்ந்து ஜெப கூட்டங்களில் சுமதி கலந்து கொண்டார். திருப்பத்தூரில் நடந்த ஜெப கூட்டத்தில் கலந்து கொள்ள சுமதி மற்றும் அவரது குழந்தைகளுடன் சென்றிருந்தேன். நேற்று (நேற்று முன்தினம்) காலை ஜெப கூட்டம் நடந்தபோது, சுமதிக்கு தலைவலி ஏற்பட்டது. இது குறித்து அங்குள்ள பாதிரியாரிடம் கூறினேன். அவர், 'சுமதிக்கு 'பேய்' பிடித்துள்ளது. ஜெபம் செய்தால் போய்விடும்' எனக் கூறி, சுமதி தலையில் கை வைத்து ஜெபித்து விட்டு சென்றார்.

சிறிது நேரத்தில் சுமதிக்கு அதிகளவில் வலி ஏற்பட்டது. 'மாத்திரை கொடுக்கலாம்' என, பாதிரியாரிடம் கேட்டபோது, அவர் மறுத்து விட்டார். தலைவலி அதிகமாகி மயங்கி விட்டார். ஜெப கூட்ட நிர்வாகிகள் ஆம்புலன்ஸ் மூலம் எங்களை அனுப்பி வைத்தனர். வரும் வழியில் சுமதி இறந்து விட்டார். ஆம்புலன்ஸில் ஜெப கூட்டத்தை சேர்ந்த மூன்று பேர் வந்தனர். வெப்படை அருகே இருவரும், ஈரோட்டில் ஒருவரும் இறங்கி விட்டனர். நாங்கள் மட்டுமே வீட்டுக்கு வந்தோம். மாத்திரை சாப்பிட அனுமதித்திருந்தால் சுமதி இறந்திருக்க மாட்டார். இவ்வாறு அவர் கூறினர்.

கமலா நகரை சேர்ந்த மக்கள் கூறுகையில், ''கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்த சிலர் தினசரி வந்து, கட்டாய மதம் மாற்றம் செய்ய வற்புறுத்துகின்றனர். மதம் மாறினால் பல நன்மை ஏற்படும் என பிரசங்கம் செய்கின்றனர்,'' என்றனர். சுமதியின் உறவினர்கள் கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்றனர். சுமதி சந்தேக மரணமடைந்ததாக நேற்று மாலை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஈரோடு அருகே சொட்டையம்பாளையத்தில் ஏப்ரல் 25ம் தேதி தாசில்தார் உள்பட ஆறு பேர் கொண்ட கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கட்டாய மதம் மாற்றம் செய்ய வற்புறுத்தினர். இதில் ஆத்திரம் அடைந்த மக்கள் ஆறு பேரை சிறை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். கருங்கல்பாளையத்தில் கட்டாய மதம் மாற்றம் செய்யும் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

*******

இன்னுமொன்று...

கூடலூ‌ரில் சி.எ‌ஸ்.ஐ. பேராய‌ர் சு‌விரா‌ஜு‌க்கு கொலை ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்ததாக கோவை ம‌ண்டல பேராய‌ர் மா‌ணி‌க்க‌ம் துரை கைது செய்யப்பட்டுள்ளாராம்.

இது தொடர்பாக பதிவான வழக்கில் கூடலூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜராகு‌ம்படி பேராய‌ர் மா‌ணி‌க்க‌ம் துரை‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டது. ஆனா‌‌ல் பேராய‌ர் ஆஜராக‌வி‌ல்லையாம்.

இதையடு‌த்து அவரு‌க்கு ‌ஜாமீனில் வெ‌ளிவர முடியாத ‌பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மா‌ணி‌க்க‌ம் துரை‌யை போலீசார் கைது செ‌ய்தன‌ராம்.

மா‌ணி‌க்க‌ம் துரை மீது ‌திரு‌ச்சபை பண‌‌‌‌ம் ரூ. 3 கோடியை மோசடி செ‌ய்ததாக ஒரு வழ‌க்கும் நிலுவையில் உள்ளதாம். இந்த கருமாந்திர வழக்கில் மு‌ன் ‌ஜாமீன் பெ‌ற்று கைதாகாமல் தப்பி வந்தாராம்.

இந் நிலையில் சக பேராயருக்கு கொலை மிரட்டல் விடுத்து கைதகியுள்ளாராம். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் எந்த தொலைக்காட்சியிலும் சில வினாடிகள் கூட இந்த செய்திகள் அக்கிரமிக்கவில்லை என்பதே!

*****


எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன் தானும் மதம் மாறி தன் குடும்பத்தையும் மதம் மாற்றியவன். ஒரு நாள் தன் குழந்தைக்கு காய்ச்சல் வந்ததையும் அதை ஜெபம் செய்தே குணப்படுத்திவிடான் என்பதையும் பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தான். அப்போதே இந்த கிறுக்குத் தனத்தை செய்யாதே கூறியதோடு அவனை நினைத்து பரிதாபப்பட்டேன். சில தினங்கள் கழித்து ஒரு வாரம் அவனைப் பார்க்க முடியாமல் போனது. விசாரித்ததில் உடல் நிலை சரியில்லை மருத்துவ மனையில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதன் பின்னர் அவனைப் பார்த்த போது கடைசி வரை அவன் மருத்துவமனை சென்றதை ஒத்துக்கொள்ளவே இல்லை. லேசான ஜுரம் தானே சரியாகிவிட்டது என்றும் கதை கட்டினான்.

அதாவது மருத்துவரிடம் சென்று மருந்து சாப்பிட்டதால் தான் எனக்கு குணம் ஆனது என்று வெளிப்படையாக அவன் சொன்னாலே அவன் மதமாற்ற வியாபாரம் கெட்டு விடும் என்று சிந்தனை கொள்ளும் அளவிற்கு அந்த வியாபாரக்காரர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தான். அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

ஏற்கனவே இரு வேறு இடங்களில் இறந்து போன மனிதனை உயிர்ப்பிக்கிறேன் என்று கூறி வீட்டிலேயே அழுகிய பிணத்தோடு உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தவரை போலீசார் கைது செய்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. ஆனால் எந்த தொலைக்காட்சி அலைவரிசைகளும் அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இந்து சாமியார்கள் குறைந்தபட்சம் வேப்பிலையாவது கொடுப்பார்கள். வேப்பிலை ஒரு மருந்துப் பொருள் என்று வெள்ளைக்காரன் கூட ஒத்துக்கொண்டு விட்டான். ஆனால் அந்த வேப்பிலை அளவிற்கு கூட மருந்து கொடுக்காமல் ஜபம் செய்து கொலை புரியும் கிறிஸ்தவ பாஸ்டர்களைப் பற்றியும் பாதிரிகளைப் பற்றியும் நீயா நானாவிலோ அல்லது நிஜத்திலோ அல்லது திக் திக்..கிலோ காட்டுவார்களா என்று பார்ப்போம்!

பார்த்துக்கொண்டே இருப்போம்..!

Sample: **This page is built to educate others about the dangers of Christianity. This religion is one ruled by fear and false hoods, convincing people to give up their morals in return for promises never to be received.**

கிறிஸ்தவத்தின் அபாயங்களாக சில விஷயத்தை இந்த தளம் கூறுவதையும் கொஞ்சம் பார்க்கலாம்!

1 comment:

தனி காட்டு ராஜா said...

யாருக்கும் வெக்கமில்லை .....??!!