Saturday, April 14, 2012

நகரப்பள்ளிகளிலும் கட்டாயக் கிறிஸ்தவம்! பாதிரிகளின் அடிமைகள் நாம்!



எஸ் பி ஓ ஏ பள்ளியில் அட்டூழியம் -   ஹிந்து நாளிதழ் செய்தி!


LAVANYA M.

A chemistry teacher of SBOA School and Junior College in Anna Nagar West was suspended last week for ‘manhandling and misbehaviour', but the teacher claimed that she was punished for reciting a Hindu prayer to students of Class XII .

On March 13, as the students were gearing up for their examination, teachers were about to recite their routine prayer. “Since the usual group of teachers pray before every examination, I volunteered this time. I said a prayer invoking the blessings of Hindu, Christian and Muslim Gods,” said the teacher, P. Abirami.
Even as Ms. Abirami was reciting the prayer, some of the other teachers allegedly turned off the microphone. “If they had an issue with my prayer, they could have called me aside and spoken to me rather than behaving rudely in front of students,” she said. “I did not give up but continued to say the prayers even more fervently,” she added.

Students on Wednesday said it was unusual for teachers to behave in this way. “Usually a Christian prayer is said before we write examinations. But last week a teacher said some Hindu mantras and the other teachers tried to stop her by turning off the microphone,” said a student.

Principal P. C. Selvarani, said that disciplinary action was taken against the teacher for behaving in an inappropriate manner . “The teacher does not handle Class XII and was on paper-correction duty that day. In spite of this, she came to up the dais, grabbed the mike and started speaking,” she said. “It was against the code of conduct. She just intervened.,” she said.

This sparked off protests by the BJP, VHP and the Hindu Munnani. Their activists staged a protest outside the school on Wednesday, following which 60 people were arrested and later released.

Keywords: SBOA School


லாவன்யா என்கிற இந்த ரிப்போர்ட்டர் நேர்மையும், துணிவும் கொண்டவர் எனக் கூறப்படுகிறது. பொதுவாக கிறிஸ்தவ மற்றும் சீன மாவோயிஸ ஜால்ரா தட்டப்படும் ஹிந்து நாளிதழில் இப்படிப்பட்ட உண்மைகள் வெளிவரும் போது அந்த நாளிதழின் மீது மதிப்பு வருவது போல் தோற்றம் உண்டாகிறது.

மேலே காண்பது இருபது நாட்களுக்கு முன்னால் வந்த பழைய செய்தி தான். இப்போது ஞாபகம் வரக்காரணம், நேற்று என் அலுவலக நண்பர் மாவோயிஸ்டுகள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா என்று அவர்களுக்காக நெஞ்சுருகிப் பேசிக்கொண்டிருந்தார். கொஞ்சம் நேரம் பேசிய பின் தான் தெரிந்தது அவர் தொடர்ந்து வீட்டில் ஹிந்து பேப்பர் படிப்பவர் என்று. நான் அவரிடம் சொன்னேன் ஐயா தொடர்ந்து இப்படி ஹிந்து பேப்பர் மட்டுமே படித்தீர்களென்றால் நீங்கள் சீன ஆதரவாளர்களாகவும் மவோ, நக்சல் போன்ற தீவிரவாத இயக்கங்களின் நெருங்கிய நண்பராகவுமே ஆகி விடுவீர்கள். ஏனெனின் ஹிந்து பத்திரிக்கையின் சார்பு நிலை அப்படி. துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சாலையில் இறங்கிவிடாமல் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றேன்! அது தான் ஹிந்து பத்திரிக்கையின் நிலை!

அப்படி ஒரு பத்திரிக்கை கிறிஸ்தவ சார்பில்லாமல் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களின் நிலையை இப்போது வெளியிட்டிருக்கிறது. இதை வெளியிட்ட ரிப்போர்ட்டர் லாவன்யாவை அந்த பத்திரிக்கை திட்டாமல் விட்டால் சரிதான்! ஹிந்துப் பத்திரிக்கையின் இந்த மாற்றம் என்னை மீண்டும் இந்த செய்தியைப் பற்றி நினைவு கொள்ளச் செய்தது. ஹிந்துப் பத்திரிக்கையின் இந்த நல்ல மாற்றம் தொடருமானால் அதன் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

எஸ்பிஓஏ பற்றி!

எஸ்பிஓஏ பள்ளி ஒரு கிறிஸ்தவ பள்ளி அல்ல. ஆனாலும் அங்கே பாதிரியார்களின் ஆதிக்கமும் சர்ச்களின் சொற்படி மாணவர்களை கிறிஸ்தவ சார்புள்ளவர்களாக ஆக்கும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அங்கிருக்கும் கிறிஸ்தவ ஆசிரியர்கள் மாணவர்களை கிறிஸ்தவ சார்புள்ளவர்களாக ஆக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்து இப்போது வெளிப்படையாக தெரிந்து விட்டது. இன்னும் பல பள்ளிகளின் இது போன்ற நிலைமை வெளித்தெரியாமல் இருக்கிறது.

பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்கிற ஒரே காரணத்திற்காக பெற்றோர்கள் இது போன்ற நிலைமைகளை சகித்துக் கொள்வதை கிறிஸ்தவ ஆசிரியர்கள் தங்களுக்குச் சாதகமான சூழலாக எடுத்துக் கொள்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

எஸ்பிஓஏ பள்ளி பெயருக்குத்தான் ஸ்டேட் பாங்க் ஆஃபீசர்ஸ் அசோஷியேஷனே அன்றி உண்மையில் பெரும்பாலான அனேகமாக 80% ஆசிரியர்கள் கிறிஸ்துவர்களாகவே இருக்கிறார்கள். இதை நடத்தும் ஸ்டேட் பாங்க் ஆபீசர்ஸ் அசோஷியேஷன் நிர்வாகிகள் யார் என்பதைப் பார்த்து அவர்களிடம் இந்து தலைவர்கள் பேச வேண்டும். 

சென்னை எஸ்பிஓஏ பள்ளியிலும் அவர்களின் பிற ஊர் கிளைகளிலும் பெரும்பாலான ஆசிரியர்கள் கிறிஸ்துவர்களே. ஸ்டேட் பேங்க் ஆபீசர்ஸ் அசோஷியனின் சில கிறிஸ்துவ நிர்வாகிகள் ஆரம்ப காலத்திலேயே கிறிஸ்துவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமித்து விட்டதன் பலனாக இன்று வரை சர்ச் சொல்லும் ஆட்களையே ஆசிரியர்களாக அப்பாயிண்ட்மெண்ட் செய்து வருகிறார்கள். இந்தப் பிரச்சினையை முதலில் ஸ்டேட் வங்கி ஆபீசர்ஸ் அசோஷியனில் எழுப்ப வேண்டும் . சென்னை பள்ளியில் அந்த டீச்சர் ப்ரேயரில் குருப் பிரம்மா குரு விஷ்ணு ஸ்லோகத்தை படித்ததற்காக சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கிறார். அதே ப்ரேயரில் தினமும் பைபிள் கதைகளும் வாசகங்களும் படிக்கப் படுகின்றன. இதே நிலைதான் அனைத்து எஸ்பிஓஏ பள்ளிகளிலும் என்றாலும் எதுவும் செய்ய முடியாத மைனாரிட்டி நிலையில்தான் இந்து டீச்சர்கள் இருக்கிறார்கள். பள்ளிக்குள்ளேயே அடிக்கடி அவர்கள் கூடி ப்ரேயர்கள் நடத்திக் கொள்வதும் சர்ச் உத்தரவின் பேரில் செயல் படுவதும் தினமும் நடப்பதாக் கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சினையை வி எச் பி எடுத்துக் கொண்டு போராடிய பின்னால் பெற்றோர்களை ஏமாற்ற ப்ரேயர் ஒன்றில் கந்தர் சஷ்டி கவசம் ஒலிக்க வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து இந்து இயக்கங்கள் எஸ் பி ஓ ஏ ஆபீஸர் அசோஷியனின் நிர்வாகிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் இந்த நிலை மாறும்.  

அனைத்து இந்து டீச்சர்களுக்கும், இந்து மாணவர்களுக்கும் இந்து இயக்கங்களின் நடவடிக்கைகள் பெருத்த சந்தோஷத்தை அளிப்பதாக இருந்திருக்கிறது.

இந்து அமைப்புகள் முனைப்புடன் இருப்பது சிறிய அளவிலேனும் உரிய பலனை அளிப்பது திருப்தியளிக்கிறது. மீண்டும் அந்த ஆசிரியையை பணியில் சேர்க்கும் வரைக்கும் நம் அமைப்புகள் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துப் போராட வேண்டும். மேலும் எஸ்பிஓஏ பள்ளிகளில் உள்ள கிறிஸ்துவ ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் ஸ்டேட் வங்கியில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் இது போன்ற கிறிஸ்தவர்களின் அட்டூழியத்திற்கு எதிராக போராட வேண்டும்.

ஹிந்துக்களின் அமைப்புகள் மட்டும் இது போன்ற விஷயங்களுக்காகப் போராடினால் அது அரசியலாக மட்டுமே ஆகும். ஒவ்வொரு ஹிந்துவும் போராடும் இயக்கங்களுடன் சேர்ந்து கொண்டு உணர்வுப்பூர்வமாக ஆதரவு தெரிவித்து இயங்கவும் வேண்டும். அப்போதுதான் நிரந்தரத்தீர்வுகள் பல எட்டப்படும். இல்லையே ஹிந்துக்களுக்கெதிரான இது போன்ற பள்ளிக்கூட அட்டூழியங்கள் ஒழிக்கப்படவே முடியாமல் போய்விடும்!

ஹிந்துக்கள் மெஜாரிட்டியாம்! என்ன கொடுமை சரவணா!

1 comment:

premprakash said...

I want to say one incident in my life. I and my friends went to tour in group. In our tour programme, all the hindus entered into each and every church, some of us even prayed. But last day one temple came into our list. But to my irritation, three of my christian friends didn't event entered into the temple and also they were also joking on us in low tone between themselves. What a shame on them. Actually God is one in total universe, but only the way of worship differs.