Sunday, December 15, 2013

'ஹோரா'வில் இருந்து வந்தது 'Hour' !



நிருக்தம் என்பது வேதத்துக்கு அகராதி (dictionary) அகராதி என்பது 'கோசம்'என்று ஸம்ஸ்கிருதத்தில் சொல்லப்படும். 'அமர கோசம்'என்று பிரஸித்தமான அகராதி இருக்கிறது. 'நிகண்டு'என்றும் சொல்வதுண்டு. தமிழிலும் 'நிகண்டு'என்றே சொல்வர். ஒவ்வொரு வார்த்தையும் இந்த தாதுவிலிருந்து வந்தது என்று அட்சர அட்சரமாகப் பிரித்து ஒவ்வொரு அட்சரத்துக்கும் அர்த்தம் சொல்வது நிருக்த சாஸ்திரம். இதை Etymology என்கிறார்கள்.

நிருக்தம் வேதபுருஷனுக்கு ச்ரோத்திர ஸ்தானம், அதாவது, காது. வேதத்தில் உள்ள அரிய வார்த்தைகளுக்கு இன்ன இன்ன அர்த்தம் என்று அது சொல்கிறது. ஏன் இந்தப் பதம் இங்கே உபயோகப்படுத்தப்பட்டது என்பதைக் காரணத்துடன் அது சொல்லும்.

நிருக்த சாஸ்திரம் பலரால் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் முக்கியமானது யாஸ்கர் செய்தது. வேத நிகண்டுகளில் ஒவ்வொரு பதத்திற்கும் அது இப்படி உண்டாயிற்றென்று காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. 'ஹ்ருதயம்'என்றே ஒரு பதம் இருக்கிறது. அது ஏன் இப்படி வந்தது? வேதமே அதன் காரணத்தைச் சொல்லியிருக்கிறது. 'ஹ்ருதி அயம்':'ஹ்ருதயத்தில் அவன் இருக்கிறான்' என்பது அர்த்தம். 'ஹ்ருத்'என்பதே பௌதிகமான ஹ்ருதயத்தின் பெயர். ஆனால் 'அயம்'என்று அதில் கிட்ட உள்ளவனான ஈச்வரனனையும் சேர்த்துச் சொல்வதால் அதன் ஆத்மிகமான முக்யத்வமும் குறிப்பிடப்படுகிறது.எந்த சாஸ்திரமானாலும் ஈச்வரனில் கொண்டுவிட வேண்டும். ஹ்ருதயத்தில் பரமேச்வரன் இருப்பதால், அதற்கு, 'ஹ்ருதயம்'என்று பெயர் வந்தது என்று தெரிய வருகிறது. இபப்டி ஒவ்வொரு பதத்திற்கும் காரணம் உண்டு.

அதை ஆராய்வது நிருக்தம். ஸம்ஸ்கிருதத்தில் எல்லாப் பதங்களுக்கும் தாது உண்டு. தாதுவை "ரூட்"என்று இங்கிலீஷில் சொல்லுவார்கள். இங்கிலீஷில் கிரியாபதங்களுக்கு ( verb s) தாது உண்டே தவிரப் பெயர்ச் சொல்லுக்கும் இன்ன க்ரியையால் இப்படிப் பெயர் வந்தது என்று தாது காட்ட முடிகிறது. அப்படி உள்ள பதங்களின் விகாரங்களை மற்ற பாஷைகக்காரர்கள் எடுத்து உபயோகித்தார்கள். அதனால்தான் அந்த பாஷைக்காரர்கள் எடுத்து உபயோகித்தார்கள். அதனால்தான் அந்த பாஷைகளில் பல வார்த்தைகளுக்கு ரூட் தெரிவதில்லை. அந்த பாஷைக்கே உரிய சொல்லாக இருந்தால்தானே சொல்ல முடியும்?மணியை இங்கிலீஷில் Hour என்று சொல்லுகிறார்கள். அந்தப் பதத்தில் அமைந்துள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை அநுசரித்துப் பார்த்தால், ஹெளர் அல்லது ஹோர் என்றே சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் "ஹோர்"என்றே சொல்லியிருக்க வேண்டும். "ஹோரா சாஸ்திரம்"என்று ஸம்ஸ்கிருதத்தில் ஒரு சாஸ்திரம் உண்டு. 'அஹோராத்ரம்' 
(இரவு பகல்) என்பதிலிருந்து, அந்த 'ஹோரா' என்பது வந்தது. 'ஹோரா'என்பது தமிழில் 'ஒரை'ஆயிற்று. கல்யாணப் பத்திரிக்கைகளில் முஹ¨ர்த்த காலத்தை 'நல்லோரை'என்று போடுகிறார்கள். 

அந்த ஹோராவே இப்போதைய இங்கிலீஷ் ஸ்பெல்லிங்கில் hour -ஆகவும், உச்சரிப்பில் 'அவர்' என்றும் வந்திருக்கிறது. 

இப்படியே heart என்பது ஸம்ஸ்கிருத 'ஹ்ருத்'என்பதிலிருந்து வந்தது. இப்படிப் பல வார்த்தைகள் இருக்கின்றன. இவைகள் பிற பாஷைகளில் தற்காலத்திய ஸ்வரூபத்தை அடைவதற்கு எவ்வளவோ காலம் ஆகியிருக்க வேண்டும். அந்த பாஷைகாரர்களுக்குப் பதங்களின் மூலம் தெரியாமல் இருப்பதற்குக் காரணம் இந்தப் பழமைதான்.

- ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

No comments: