Showing posts with label பெண்ணியம். Show all posts
Showing posts with label பெண்ணியம். Show all posts

Monday, August 15, 2011

விவாகரத்திற்காக நடக்கும் திருமணங்கள்!


குப்புசாமி: என்ன அப்பு, எங்கே காலையில் இருந்தே ஆளைக் காணோம்?

அப்புசாமி: அதை ஏன் கேக்ற குப்பு, ஒரு பஞ்சாயத்து.

குப்புசாமி: பஞ்சாயத்தா, எந்த ஆலமரத்தடில..

அப்புசாமி: விளையாடாதப்பா, குடும்பத்துல பஞ்சாயத்து.

குப்புசாமி: ஏன் என்ன பிரச்சனை?

அப்புசாமி: என் தங்கச்சி வீட்ல, அவ மவனுக்கும் மருமவளுக்கும் ஒத்துப்போகலை.  விவாகரத்து வரைக்கும் வந்திருச்சு. பிரிஞ்சாலே ஆச்சுன்னு மருமவ ஒத்தக்கால்ல நிக்கிறா.

குப்புசாமி: யாரு, இப்போ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சே, உன் தங்கச்சி மகன். அவனுக்கா பிரச்சனை.

அப்புசாமி: ஆமாம் குப்பு, லட்ச லட்சமா செலவு பண்ணி தாம் தூம்னு நடந்த கல்யாணம். ரெண்டு மாசத்துல இவங்க பிரியுவாங்கன்னு யாராவது கனவுலயாவது நினைச்சிருப்போமா?

குப்புசாமி: பிரியரதுன்னே முடிவு பண்ணிட்டாங்களா? பொண்ணு வீட்ல அந்தப் புள்ளைய கண்டிச்சு ஒண்ணும் சொல்லலியா?

அப்புசாமி: நீ வேற! பொண்ணோட அம்மாவும் பொண்ணு கூடவே சேந்துக்கிட்டு வீட்டுக்கு வந்திடு, அந்தப்பய வேணும்னா நம்ம வீட்ல வந்து குடியிருக்கட்டும். இல்லன்னா அவன் உறவே வேண்டாம்னு சொல்லுதாம்.

குப்புசாமி: இதென்னடா வம்பா போச்சு, பெண்ணைப் பெத்தவங்க அந்தப் பெண்ணை நல்லபடியா வாழ வெக்கணுமேன்னு கவலைப்படுவாங்க. இங்கே தலைகீழா இல்ல இருக்கு. சரி, என்ன தான்யா பிரச்சனை கொஞ்சம் விளக்கமா சொல்லேன்.

அப்புசாமி: குப்பு, தங்கச்சி பையன் இஞ்சினியர் படிச்சிருக்கான். ஐடில நல்ல வேலைல இருக்கான். மாசம் எழுதாயிரம் சம்பாதிக்கறான். 25 வயசு தான் ஆச்சு. ஒரே பையன். செல்லமா வளந்திட்டான். அவன் அம்மாவுக்கோ பையனுக்கு காலாகாலத்துல கல்யாணம் பண்ணிப் பாக்கனும்னு ஆசை. பண்ணினா அந்தக் கடமையும் முடிஞ்சி அவன் சந்தோஷமா இருப்பதைப் பார்த்து தானும் நிம்மதியா இருந்திரலாம்னு நினைச்சி பெண் தேடினாங்க.

இன்டெர்நெட்ல போட்டு வெச்ச உடனேயே ஒரு வரன் வந்தது. பார்த்து பேசினாங்க, பையன், பெண் இருவருக்குமே பிடிச்சுப் போச்சு. உடனே கல்யாணமும் நிச்சயம் பண்ணி ரெண்டே மாசத்துல கல்யாணமும் ஆயிடிச்சு. சொன்னா நம்பமாட்ட. இந்த காலத்துல ஒரு பையனுக்கு பெண்பார்க்க
ஆரம்பிச்ச ரெண்டே மாசத்துல கல்யாணமே நடந்திருச்சுன்னா எனக்கே ஆச்சரியாமா இருந்திச்சு.

ஆனா அதுவே பின்னாடி கண்ணு பட்டாப்ல போயிருச்சு. என் தங்கச்சி
மவன் இருக்கானே உண்மையிலேயே சாது. ஆனா அந்தக் குடும்பத்தையே ஜெயிலுக்கு அனுப்ப பாத்திட்டா விளக்கேத்த வந்த மருமவ.

குப்புசாமி: அடடா, ஏன்? யாருமேல என்ன தப்பு?

அப்புசாமி: உண்மையா சொல்லனும்னா என் தங்கச்சிய தான் நான் தப்பு சொல்லுவேன். பையன் இஞ்ஜினியரிங் படிச்சிருக்கான் அதனால அவனுக்கு இஞ்சினியர் பொண்ணத்தான் பார்ப்பேன்னு பிடிவாதமா இருந்தா. எத்தனையோ தெரிஞ்ச எடத்துல பெண்ணெடுக்கச் சொல்லியும், "ஒரே புள்ள. அதனால வரப்போறவ அவனுக்குச் சரிசமமா இருந்தா தானே அவனுக்கும் மதிப்பு, எங்களுக்கும் பெருமை" ன்னு சொல்லி இஞ்ஜினியர் பொண்ணா தேடினா பாத்துக்கோ!

குப்புசாமி: நல்லது தானேயா. படிச்ச பொண்ணுனா குடும்பத்தை நல்லா பாத்துக்கும், அவனுக்கும் உறுதுணையா இருக்கும்னு நினைச்சிருக்காங்க. என்ன தப்பு?

அப்புசாமி: அடப்போ குப்பு, இந்த காலத்துல படிச்ச பொண்ணுங்கதான் குடும்பத்தை நல்லா பாத்துக்கறதை விட கும்பத்தை உடைச்சு நிர்மூலப்படுத்தறதில முன்னாடி நிக்கறாங்கன்னு. படிக்காத பொண்ணுங்களுக்கும் விஷய ஞானம் எல்லாம் உண்டு. ஆனாலும் எத்தனை படிக்காத பொம்பளைங்க கோர்ட்டுப் படி மிதிக்கிறாங்கன்னு சொல்லு? விவாகரத்து வழக்கை எடுத்து பாரு, நல்லா படிச்சு நுனி நாக்குல இங்கிலீஷ் பேசறதுங்க தான் விவாகரத்துக் கேட்டு கோர்ட்டுக்கு நடையா நடக்றாங்க.

கொந்தளித்தார் அப்புசாமி.

குப்புசாமி: சரி அப்பு, நீ கோபத்துல பேசற! எல்லா பொண்ணுகளும் அப்படியா இருக்காங்க? இப்ப வாய்ச்சவ என்ன லட்ஷனம். அதைச்சொல்லு.

அப்புசாமி: முக லக்ஷனத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. ஆனா அகங்காரியா போயிட்டாவ. அது தெரியாம போச்சு. பொண்ணும் இஞ்ஜினியரிங் படிச்சிருக்கு. அதுவும் ஐடி கம்பெனில வேலை. இவனுக்கு குறைவில்லாம அவளுக்கும் டாலர்ல சம்பளம். ரெண்டு பேருமே
பெங்களூரு கம்பெனில வேலை பாக்கறதால கல்யாணம் முடிஞ்சி ரெண்டு
பேரையும் அங்கேயே தனிக்குடித்தனம் வெச்சோம். அப்புறம் தான் பிரச்சனையே அரம்பிச்சது.

குப்புசாமி:: ஏன், பையன் வீட்டுக்கு லேட்டா வருவானா? இல்லை பொண்ணை நல்லா கவனிச்சுக்கலையா?

அப்புசாமி: அட சும்மா இரு குப்பு, இப்பல்லாம் பொண்ணுங்கதான் பையன்களை கொடுமைப்படுத்தாம நல்லா கவனிச்சுக்க வேண்டியிருக்கு. நடந்ததை சொல்றேன் கேளு!

பொண்ணு எட்டு மணி வரைக்கும் தூங்குவாளாம். எழுந்த உடன் குளிச்சு அபீஸுக்கு கிளம்பிடுவாளாம்.

குப்புசாமி: அப்போ காபி டிபன்? சாப்பாடு?

அப்புசாமி: அந்தக் கூத்த கேளு, தூங்கி எழுந்த உடனே பையன் கிட்ட "காப்பி போட்டியா?"ன்னு கேட்டிருக்கு அந்தப் பொண்ணு. பையன் ரெண்டு கையையும் தூக்கிட்டு அம்மான்னு கதறி அழுதுகிட்டே வீட்டுக்கு வராத குறையா அதிர்ச்சி அடைஞ்சிட்டான்.

குப்புசாமி: என்ன அப்பு,  காப்பி தானே, ஆசையா பொண்டாட்டிக்கு போட்டுக் கொடுக்க வேண்டியது தானே!

அப்புசாமி: நீ வேற, அவ காப்பி போட்டியான்னு கேட்டு, இவன் அதிர்ந்து போனது மொத நாள்ல இல்லை. தனியா குடித்தனம் போய் ஒன்பது நாளா இவன் தான் காப்பி போட்டு கொடுத்திருக்கான். பத்தாவது நாளாவும் அவ கேக்கும் போது தான் பொறுமையில்லாம போய்ட்டான். டெய்லி இவன் தான்
காப்பி போடனுமாம். லேட்டாச்சுன்னா பொண்ணு கொச்சிக்கிட்டு கெளம்பிப் போய்டுமாம்.

காப்பி கப்பை கையில எடுத்துக்கிட்டு கார்வரைக்கும் போய் "குடிச்சுட்டு போம்மான்னு" குடுத்து வழியனுப்பி வெச்சிருக்கான்யா நம்ம பையான்.

அப்படியும் அவ இவன் மேல எந்த ஒரு மதிப்பும் குடுக்காம இருந்திருக்கா.

குப்புசாமி: அப்போ சமையல் சாப்பாடு எல்லாம்!

அப்புசாமி: ஆங், அப்படி கேட்டுத் தெரிஞ்சிக்கோ. தினமும் காலை டிபன் இவனே சமைச்சி சாப்டுப்பான். மத்யானம் கேண்டீன். ராத்திரி வந்து தான் கூத்தே நடக்கும்.

குப்புசாமி: ஓ, அப்ப ராத்திரி சந்தோஷமாத்தான் இருந்திருக்காங்க.

அப்புசாமி: அடச்சீ., முழுசா கேளுயா! ராத்திரி வீட்டுக்கு வந்ததும் அந்தப் பொண்ணு இவனப்பாத்து ஏதாவது சமச்சு வெச்சியான்னு கேக்குமாம். இவனுக்கு தலையே சுத்திப் போய்டுமாம்.

"இந்தாம்மா, நீ எப்டி உங்க வீட்ல செல்லமா வளந்தியோ அது மாதிரிதான் நானும். எங்கம்மா எனக்கு காப்பி டீ போட சொல்லிகொடுத்திருக்காங்க. சாதம் வடிப்பேன். ஆனா சமையல் பண்ணி பந்தி பரிமாறுகிற அளவுக்கெல்லாம் கத்துதரல. எனக்கும் அது தேவைப்படலை. வந்ததுலேருந்து என்னமோ நீ ஆம்பளை மாதிரி அதிகாரம் செய்யறதும் என்னை பொம்பளை மாதிரி நடத்தப்பாக்கறதுமா இருக்கியே என்ன விஷயம்? உனக்கு சமைக்கத் தெரியாதா இல்ல தெரிஞ்சாலும் செய்ய மாட்டியான்னு?" கோவமா
கேட்டிருக்கான்.

அவளும் பதிலுக்கு "எனக்கும் தெரியாது. நீ சமைச்சா சப்பிடலாம். இல்லன்னா
நான் ஹோட்டலுக்குப் போய் சாப்பிடறேன். உனக்குப் பிடிச்சா வா இல்ல என்னமோ பண்ணு" ன்னு சொல்லிட்டு போய்டறாளாம்.

குப்புசாமி: அட்ப்பாவமே!

அப்புசாமி: கேளு, ஏண்டி இப்டி இருக்க. "படிச்சு வேலைக்குப் போற எல்லாப்பொண்ணுங்களும் உன்னை மாதிரியா இருக்காங்க. குடும்ப பொண்ணா லெட்சனமா வீட்ல சமைச்சி சாப்டா என்ன குறைஞ்சா பொய்டுவே?" ன்னு வாக்குவாதம் துவங்கிடிச்சு.

குப்புசாமி: அவன் கேக்றதும் ஞாயம் தானேயா? அவ என்ன சொன்னா?

அப்புசாமி: "இத பாரு, உனக்கு சமைச்சு போட்டு, காப்பி குடிக்கவெச்சு, உன் துணிமணி துவச்சுப் போடவா எங்கம்மா என்ன வளத்தாங்க. உங்க அம்மா உனக்கு சமைச்சிப் போட்டு உன்னைப் பாத்திக்கிட்ட மாதிரியே நானும் நடந்துக்கனும்னு எதிர்பாக்காத?"  ன்னு வெடுக்குனு கேட்டுடிச்சாம்.

இவன் "நீ மட்டும், புருஷனா இருக்கறவன் உங்கப்பாவை மாதிரியே சம்பாதிச்சுப்போடனும்னு எதிர்பாக்கலையா? உனக்கு மட்டும் உங்கப்பா மாதிரி சம்பாதிச்சுப் போடற புருஷன் வேணும். எனக்கு எங்கம்மா மாதிரி எனக்கு சமைச்சுப் போட்டு கவனிச்சிக்கற பொண்டாட்டி வேணாமா?"

அவளும் பதிலுக்கு "அதுக்காக, உனக்கு இஞ்ஜினியரிங் படிச்ச சமையல்
காரி வேணுமா?" ன்னு கேட்டிருக்கா

இவனும் விடலையாம் "உனக்கு சமைக்கற புருஷன் வேணும்னா எழுதப்படிக்காத சமையல்கார ஆம்பளை எவனையாவது கட்டிக்க வேண்டியது தானே. உன்ன ஒக்கார வெச்சு சமைச்சு போட்டிருப்பான்ல, உனக்கு மட்டும் இன்ஞ்ஜினியரிங் படிச்சு ஐடி கம்பெனில லட்சலட்சமா சம்பளம் வாங்கி சொந்த வீட்டுல குடியிருக்கிற பணக்கார சமையல்காரன் வேணுமா எவ்வளோ திமிர்டி உனக்கு" ன்னு கேட்டானாம்!

அவ்வளோ தான்! இப்படி ஆரம்பிச்ச வாக்குவாதம் சண்டையாகி மனக்கசப்புல போய் முடிஞ்சு ஒருத்தருக்கொருத்தர் புடிக்காம போய்டிச்சி.

ஒரு நாள் என் தங்கச்சி புள்ளை கூட ஒரு வாரம் இருந்திட்டு வரேன்னு ஊருக்குப் போனவ பேயறஞ்சாப்பில ஆயிட்டா. "என் பையன் பள்ளிக்கூடம் போறகாலம்தொடங்கி இன்னிவரைக்கும் அவன் கேக்காமலே வேண்டியத
கையிலெ எடுத்துக் கொடுத்து ராஜா மாதிரி வளத்தேன். இப்ப திமிர் பிடிச்ச எவளோ ஒருத்திக்கு வேலைகாரனா இருக்கறதப் பாக்க மனசு பொறுக்குமான்னே" ன்னு கேட்டு எனக்கு போன் பண்ணினா பாரு, எனக்கு கண்ணீரே வந்திடுச்சு.

கண்களில் கசிந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டார் அப்புசாமி.

குப்புசாமி: சரிப்பா, யாரவது போய் பேசிப்பாக்கலாம்ல. ரெண்டு பேரும் வேலைக்குப் போற வீடுகள்ள ராத்திரி கணவன் காய்கரி நறுக்கி வெச்சிருவான். காலைல அதை உபயோகிச்சு மனைவி சமையல் செஞ்சிடுவா. அவ சமைக்கிற நேரத்தில கணவன் குழந்தைகளை ஸ்கூலுக்குக்
கிளப்பிடுவான். இப்படி வேலைய பிரிச்சி செஞ்சிக்கறது காலத்தோட தேவையா ஆயிடுது இல்லையா? அது மாதிரி இந்த ரெண்டு பேரையும் சமையல் வேலையோ இல்லை மத்த எதுவாயிலும் சரிசமமா பகிர்ந்து செஞ்சி வாழுங்கன்னு எடுத்துச் சொல்லலாமில்லையா?

அப்புசாமி: குப்பு, நான் முதலிலேயே சொன்னேன். நம்ம பையன் சாதுன்னு. அவன் மாட்டேன்னா சொல்றான். ஆனா அந்தப் புள்ள சமையல் கட்டுக்குள்ள போய் சமைச்சுப் போடற வேலையைச் செய்யறதே தன் கவுரவத்துக்கும் self ego வுக்கும் குறைச்சல்ன்னு நினைக்குதாம்பா.

தெரியாம தான் கேக்கறேன் குப்பு, பொண்ணுங்க படிச்சி நாலு காசு சம்பாதிச்சிருச்சின்னா சமையல் செய்யறது அவமானமான வேலையாயிடுமா என்ன? நம்ம பையன் சமைக்கறது ஆம்பளைக்கு அவமானம்னு நினைச்சி, சமையல் கட்டுக்குள்ள போகாம இருந்து, அதனால பெண்ணும் போட்டிக்கு அப்படி பண்ணினா பையனுக்காவது புத்தி சொல்லலாம். ஆனா
நம்ம பையன் காப்பி போட்டு காருக்கே கொண்டு போய் குடுக்கறவன். அவங்கிட்ட இந்த மாதிரி திமிர் பிடிச்சி ஒரு பொண்ணு நடந்துகிட்டா யார்மேல தப்பு நீயே சொல்லு?

குப்புசாமி: சரி பெண்ணோட அம்மாவை கூப்பிட்டுச் சொல்லலையா?

அப்புசாமி: நீவேற, அந்தம்மா "எங்களுக்கு இல்லாத வசதியா? உங்க பையனை வேணும்னா எங்க வீட்டுக்கு அனுப்புங்க. நாங்க வீட்டோட மாப்பிளையா வெச்சிக்கிறோம்! எம்பொண்ணுக்கென்ன தலையெழுத்தா ஒங்க பையனுக்கு சமைச்சுப் போட? அப்டீன்னு கேக்குதாம்.

குப்புசாமி: அடடா, பிரச்சனையே சமைலால தான் போலருக்கே.

அப்புசாமி: நீ வேற, அந்தப் பையன் இத விட கொடுமைய அனுபவிச்சிருக்கான்.

குப்புசாமி: என்ன சொல்ற அப்பு?

அப்புசாமி: ஆமாம்பா, கல்யாணம் ஆகி ரெண்டு மூணுவாரம் பொகைச்சல்ல இருந்தாலும் கொஞ்சம் சுமூகமா தான் இருந்திருக்காங்க. ஆனா இந்தப் பொண்ணு , நம்ம பையன தொடவிடலையாம். உண்டாயிடிச்சின்னா அப்பறம் என் வாழ்க்கை கெட்டிடும். அவசரப்பட்டு கைவெக்காத" ன்னு சொன்னாளாம் பாத்துக்கோ.

குப்புசாமி: அடப்பாவமே! அப்பறம் எதுக்கு தான் இந்த மூதேவி ஒரு பையனை கல்யாணம் பண்ணிச்சு. பிரியனும் முடிவு பண்ணியே கட்டிக்கிட்ட மாதிரில்ல இருக்கு.

அப்புசாமி: அதுமட்டுமா, நாள் கிழமைன்னு கோவிலுக்கு வாடீன்னா வரமாட்டாளாம், பொட்டு வெச்சிக்க மாட்டாளாம், பூ வாங்கிகுடுத்தா இந்த வாடையே எனக்குப் பிடிக்காதுன்னு தூக்கி எறிஞ்சிடுவாளாம். இப்படி எதுக்குமே ஒத்துவராத ஒரு அடங்காப்பிடாரியா இருந்திருக்கான்னா பரேன்.

சரி அவளுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்குவோமேன்னு பையன் அவ கூப்பிட்டதுக்காக சினிமாக்குப் போயிருக்கான். அவ அனிமேஷன் படம் தான் பிடிக்கும்ன்னு கூட்டிட்டு போயிருக்கா. "பொம்மை படத்தை ரெண்டு மணிநேரம் அசையாம பாக்க நான் என்ன கொழந்தையா மாமா?"
ன்னு என்கிட்ட கேக்றான்பா பையன். எனக்கு என்ன தான் பதில் சொல்றதுன்னே தெரியலை.

குப்புசாமி: அட கஷ்டகாலமே, இப்போ என்ன தான் முடிவாச்சு,

அப்புசாமி: குடும்பத்துக்கேத்த பொண்ணா நடந்துக்கலைன்னு என் தங்கச்சி மருமவள திட்டவும், உங்க பையனும் வேணாம், ஒன்னும் வேணாம்னு மருமவ சாமன் செட்டை தூக்கிட்டு அவ வீட்டுக்கே கிளம்பிட்டா. ராத்திரியோட
ராத்திரியா அவ அம்மாவை வரவழைச்சு நகை நட்டு ஒன்னு விடாம எல்லாத்தையும்  எடுத்திக்கிட்டு போயிட்டான்னா பாறேன்.

குப்புசாமி: இவ்ளோவெல்லாம் பொண்ணுங்க செய்றாங்களாப்பா? என்னால நம்பவே முடியல.

அப்புசாமி: நான் கூட இந்தக்கால பொண்ணுங்க ரொம்ப அராஜகமாவும் திமிராவும் நடந்திக்கிறாங்கன்னு பலபேர் சொல்லும் போது நம்பல குப்பு. ஆனா எங்க வீட்லேயே ஒரு சம்பவம் நடந்த போது அதை இப்போ நம்பறேன்.

அத்தோட விட்டாளா? இன்னும் கேளு...! வீட்டை விட்டுப் போயிட்டவ விவாகரத்து வேணும்னு கேட்டா குடுத்திட்டு நிம்மதியா போயிருக்கலாம். ஆனா அவளோ, போலீஸ்டேஷன்ல போயி வரதட்சனை கேட்டு கொடுமை பண்ணினாங்கன்னு என் தங்கச்சி குடும்பம் மேல கேஸ பொட்டுட்டா!

குப்புசாமி: ஆத்தீ, இதென்னய்யா கூத்து. புடிக்கலைன்னா ஒதுங்கிக்க வேண்டியது தானே. அதுக்கு ஏன் கேஸ் குடுக்கனும்.

அப்புசாமி: அதான்ய இந்த காலத்துப் பொண்ணு! பின்ன, பையன் குடும்பம் தான் நமக்கு வேணாம்னு ஆயிடிச்சு, கல்யாணத்துக்கு செலவழிச்ச காசை ஈடு செய்ய அவங்களை அழவெச்சு பழிய தீத்துக்க வேண்டாம். அதான் காரணம்.

குப்புசாமி: அய்யய்யோ! இந்த வரதட்சினைகெதிரான சட்டம் 498A வை பொண்ணுங்க தவறா உபயோகப்படுத்தறாங்கன்னு நிறைய நியூஸ் வருதே.. இப்படித்தானா?

அப்புசாமி: அப்படியே தான். வரதட்சினைக் கொடுமைச் சட்டம் உண்மையிலேயே இப்போ பிடிக்காத புருஷன்மாறையும் அவங்க குடும்பத்தையும் அடியோடு சின்னாபின்னப்படுத்தி அழிக்கத்தான் பயன்படுது. அதுவும் சுலபமா. ஒரு விசாரணையும் வேண்டாம். யார் நல்லவர், யார் கெட்டவர்ன்னு பாக்க வேண்டாம். பொம்பளைங்க கேஸ்குடுத்தா பிடிச்சு உள்ள போட்டுருவாங்க!

குப்புசாமி: அப்பொ உன் தங்கச்சி..

அப்புசாமி: கூட்டிட்டு போனாங்களே, போலீஸ் ஸ்டேஷனுக்கு. என் தங்கச்சி, தங்கச்சி புருஷன், பையன் எல்லாரும் ஒருநாள் விசாரணைங்கர பேர்ல ஸ்டேஷன்லயே இருந்தாங்க. என் தங்கச்சி புருஷன் கொஞ்சம் ஆளு பேறு தெரிஞ்சவர்ங்கறதால ஸ்டேஷன்ல தங்க வெக்காம அன்னிக்கு அனுப்பிட்டாங்க. இப்போ பெயில்ல தான் இருக்காங்க.

குப்புசாமி: ஐயய்யோ! விஷயம் வெளிய தெரிஞ்சா பையனோட வேலையே போய்டுமே. அவன் எதிர்காலமே பாழாயிடுமேயா!

அப்புசாமி: அதப்பத்தி அந்த பிசாசு பொண்ணுக்கு என்ன கவலை. அழகு, படிப்பும், பணமும் இருக்குங்கற திமிர்ல அவ இன்னும் பந்தாவா வேலைக்கும் போயிட்டிருக்கா. சீக்கிரத்தில அடுத்த புருஷனையும் தேடினாலும் தேடிடுவா? ஆனா நம்ம புள்ளையோட வாழ்க்கை? நினைச்சாலே பயமா இருக்கு.

குப்புசாமி: யப்பா, நீ சொல்றத கேக்கும் போது வயித்த கலக்குது அப்பு!

அப்புசாமி: ம், என்ன செய்ய எல்லாம் நம்ம போதாத நேரம். பெண்ணியம், பெண் சுதந்திரம், ஆணும் பொண்ணும் சமம், அது இதுன்னு பேசி பணம் வந்திட்டா ஆம்பளையா ஒரு அடிமை தனக்கு இருந்தா போதும், புருஷன் வேண்டாம்னு பொண்ணுங்க நினைக்கிற அளவுக்கு பொம்பளைங்க மனச திமிரால நிரப்பி இறுக்கமாக்கிட்டாங்க. குடும்பம்ங்கிற அமைப்பையே மதிக்காம தான்தோனித்தனமா திரியறது தான் பொம்பளைங்க சுதந்திரம்ன்னு இந்தக்கால பெண்கள் மனசுல பதிந்ஞ்சு போச்சு. அதனோட விளைவு இப்போ
அப்பாவி ஆம்பளைங்களும் அவங்க குடும்பத்தினரும் அனுபவிக்கறோம்.

குப்புசாமி: மனச தளரவிடாத அப்பு! நீ தைரியமா இருந்தாதானே தங்கச்சிக்கும், மருமவனுக்கும் ஆறுதல் சொல்ல முடியும். இதுக்கு தான் அந்த காலத்தில தெரியாத இடத்துல பெண்ணோ பையனோ எடுக்க மாட்டாங்க. முடிஞ்சவரை சொந்தத்திலேயே சம்பந்தம் முடிச்சிருவாங்க. கோபதாபம் வந்தாலும் நம்மவீட்டுப் புள்ளதானேன்னு விட்டுக்கொடுக்கவோ இல்லை, தட்டிக் கேட்கவோ உரிமையா செயல் பட முடியும். ஒருதருக்கொருத்தர் ஏற்கனவே அறிமுகமாகியிருக்கும் போது சரி என்னதான் இருந்தாலும் நம்ம மனுஷங்க தானேன்னு அனுரிச்சுப் போற மனசு வரும்.

ஆனா இந்த காலத்துல யாரு இதெல்லாம் யோசிக்கறாங்க. பணத்துக்கும் பணத்துக்கும் பொருத்தம் பாக்கறாங்க. சர்டிபிகேட்டுக்கும், சம்பளத்துக்கும் தான் பொருத்தம் பாக்கறாங்க. ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருத்தம் பாக்கறது இல்லையே. அதான் இந்த கஷ்டமெல்லாம்.

"சரி அப்பு. நீ வருத்தப்படாத. அவங்களுக்கு தைரியம் சொல்லு. சட்ட உதவி ஏதாவது வேணும்னா நம்ம வக்கீல் நண்பர்கிட்ட சொல்லி நான் ஏற்பாடுபண்றேன். சரியா!" என்று அப்புவிற்கு ஆறுதல் கூறி தேற்றினார் குப்புசாமி.

இருவரும் கனத்த மனதுடன் அவரவர் இல்லம் நோக்கி நடந்தனர்.

குப்புசாமி இல்லவாசலுக்கு அருகே வரும் போது அவரது வீட்டுக்குள் இருந்து ஐந்தாறு பெண்கள் இறங்கி வெளியே வந்தனர். குப்புசாமியின் மனைவி இதோ இவர்தாங்க என் வீட்டுக்காரரு என்று வேறு கையைக் காட்டினார்.
திருதிருவென முழித்த குப்புசாமியை வந்த பெண்கள் சூழ்ந்து கொண்டனர்.

ஒரு பெண் முன்னே வந்து ஒரு நோட்டீஸை குப்பு சாமியின் கையில் திணித்துப் பேசலானாள்.

"சார், நாங்க இந்த ஏரியா மாதர் சங்கத்தில இருந்து வர்ரோம்."

குப்புசாமிக்கு சுற்றென்று ரத்தஓட்டம் தலையில் ஏறியது.

"பெண்ணிய விழிப்புணர்ச்சிக்காக வீடுவீடா பெண்கள் கிட்ட பேசிட்டு வர்ரோம். பெண்களின் நல்வாழ்வும் சுதந்திரமும் பற்றி வீட்டில் இருக்கும் ஆண்களும் தெரிஞ்சிக்கறது அவசியம் இல்லையா. அதான் உங்ககிட்ட பேசறோம்"

குப்புசாமியின் கண்கள் சிவந்தன. "அடிப்பாவிகளா என் குடும்பத்தையும் கலைக்கப்போறீங்களா?" மனதிற்குள் முணுமுணுத்தார்.

"சார், இந்த காலத்தில ஆணும் பெண்ணும் ஒண்ணு தான்"

அவ்வளோ தான் குப்புசாமிக்கு வந்ததே கோபம்.

"ஆணும் பெண்ணும் ஒண்ணுதான்னா, ஒண்ணுக்கு போறதுக்கும் ஒன்னா போகவேண்டியது தானே? எதுக்குடீ அதுக்கு மட்டும் தனித்தனி ரூம்ல
போறீங்க?"

"சார்...!!"

"என்னடீ, சாரு மோரு, ஆணுக்கும் பொண்ணுக்கும் தனித்தனியான பாலுடல் இருக்கு. தனித்தனியான பாலுடலுக்கு தனித்தனி பாலுணர்ச்சி இருக்கும். ரெண்டு பாலருமே சக பாலரிடம் பேசும் போது ஒருமாதிரியாகவும் எதிர் பாலரிடம் பேசும் போது வேறுமாதிரியாகவும் தான் நடந்துப்போம். ரெண்டு பேருக்குமே புத்தி சிந்தனை ஆளுமைன்னு எல்லாத்திலேயும் வித்தியாசம் இருக்கு. இதெல்லாம் இயற்கை. ஆனா வீராப்புக்காகவாவது, ஆணும் பெண்ணும் ஒண்ணுன்னு சொல்லிச் சொல்லி அடுத்த தலைமுறைப் பெண்கள் யாரையுமே ஆம்பளைங்கள மதிக்கவிடாம செய்யறது மட்டுமில்லாம, இன்னிக்கு என் வீட்டுக்குளேயே புகுந்து குழப்பத்தை உண்டு பண்ணிருக்கீங்க."

"இல்ல சார்..அது வந்து..."

"உங்களையெல்லாம் தெருவில நடமாட விட்டா நீங்க அமைதியா இருக்கிற கொஞ்ச நஞ்ச குடும்பத்தையும் கெடுக்கத்தான்டீ போறீங்க! உங்களை
என்ன பன்றேன்னு பாரு" என்று ஆத்திரம் முட்ட கீழே இடமும் வலமும் தேடி தடியொன்றை கையிலெடுக்க..

அலறியடித்துத் தெறித்து ஓடினர் பெண்ணியப் பேய்கள்!

பின்குறிப்பு: இதைப் படித்தவர்கள் வீட்டுக்கதவை மூடிவையுங்கள். ஓடியவர்கள் அவசரத்தில் உங்கள் வீட்டுக்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது.

ஜாக்கிரதை!
.

Tuesday, March 8, 2011

ஆண் விடுதலை வேண்டும்!



உலகில் இருப்பது இரண்டே இனம்
ஒன்று ஆணினம் மற்றொன்று பெண்ணினம்
இதில் ஓரினத்திற்கு மட்டுமென்ன தனி தினம்?


தினம் தினம் மங்கயரைக் கொண்டாடும் திருநாட்டில்
தனி தினம் அறிவித்து தனிமைப்பட்டுப் போவதேன்?

மங்கையருக்குத் தினம் என்று தனியாக அறிவித்து
மங்களமாக கொண்டாட சாதித்ததென்ன சமூகத்தில்?


ஆண்களையெல்லாம் பெண்களைப்போல் ஆக்கவென்னி
வஞ்சகமாய்ப் பெண்களுகென்றே தனியாக
சட்டங்கள் இயற்றி சாதகமாய்
ஆண்களையெல்லாம் சிறையில் தள்ளி
வென்று விட்டோம் ஆணினத்தை
என்று சொல்லிக் குதித்தாட
வைத்தீரோ மகளிர் தினம்?


மாமியாரை மாமனாரை பள்ளி செல்லும் மச்சினரை,
வஞ்சமில்லாமல் யாவரையும் வஞ்சித்துச் சிறைதள்ளி
வரதட்சினைக் கொடுமையென வழக்குதொடுத்துக்
கொண்டாட மகளிருக்கோர் தினம் வேண்டும் 
என்றென்னி வைத்தீரோ மகளிர்தினம்?


மீசை முளைத்தாலும் நீ பெண்தான்,
மீசை இல்லாவிட்டாலும் நான் ஆண் தான்
என்று எகத்தாளம் பேசி
இயற்கையின் படைப்பையே இழிவு
செய்து கொண்டாட தினமொன்று
வேண்டுமென வைத்தீரோ மகளிர் தினம்?


குடித்துக் கூத்தடித்து  
புகைபிடித்து உடல்கெடுத்து 
முலைதெரிய உடையணிந்து  
ஒழுக்கம் கெட்ட நாகரீகத்தை 
வளர்த்து விட்டோம் பாரதத்தில் 
என கொண்டாடிக் கூத்தாட 
வைத்தீரோ மகளிர் தினம்?


கடைத்தெருவில் பேருந்தில் நடுத்தெருவில்
வீடுகளில், பெண்ணியப் பேய்களால்
ஆண்களுக்கு நிகழ்ந்துவரும் அவமானங்கள்
எத்தனை? அவமானங்கள் எத்தனை?


ஆணை ஓர் பெண்ணடித்தால் பெண்ணுக்கு வீரமடி!
அவளையே ஓர்ஆண் அடித்தால் வன்கொடுமை கோரமடி!


தற்காலப் புருஷன்கள், 
பெண்டாட்டி கால்படிந்து
வாய்மூடி சமைத்துப் போட்டால் 
நாகரீகக் கணவன்களாம்!


அக்கணவன் கைமாறாய் தாகம்
தீர்க்க தண்ணீர் கேட்டால்
பத்தாம் பசலி ஆண்மகன் என்று
விவாகரத்தே கேட்டிடுவாள்... நாகரீகநங்கயராம்!


கடைத்தெருவில் பேருந்தில் கடைந்தெடுத்த
பொறுக்கிப் பெண்கள் ஆண்கள் மீது
தான் இடித்தால் நாகரீகமென்பார்கள்
ஆண் இடித்தால் அதேகணத்தில் ஈவ்டீசிங் என்பார்கள்!


பொருளாதாரச் சுதந்திரம் பெண்களுக்கு வேண்டுமாம்!
ஆண்கள் மட்டும் அத்துனைபேரும் அம்பானிகளின் பேரன்களா?


அடிமைப் பிழைப்பில் மாட்டிக் கொண்டு
குடும்பம் காக்க ஓடாய்த் தேய்ந்து
நாக்கு தள்ளியே வாழ்நாள் தொலைக்கும்
ஆணுக்கும் வேண்டும் பொருளாதாரச் சுதந்திரம்!


பெண்ணாய் விரும்பி விவாகரத்து கேட்டாலும்
பெண்ணுக்கு ஜீவனாம்சம் தரவேண்டும் எனச்சொல்லும்
பெண்ணியச் சட்டத்திலிருந்து விடுபட்டு வெளியேற
ஆண்களுக்கும் வேண்டும் சட்டச் சுதந்திரம்!


ஆண் இறந்தால் சொத்திற்கெல்லாம்
மனைவியையே வாரிசாக்கி ஆணைப் 
பெற்ற தாய்,தந்தையரை நடுத்தெருவில் 
அலைய விடும் அடாவடி சட்டத்திலிருந்து
அப்பாவி ஆண்களின் பெற்றோரைக் காக்க
ஆணுக்கும் வேண்டும் உரிமைச் சுதந்திரம்!


பெண்ணியப் பேய்களின் அடாவடி
ஆட்டத்தைத் தடுத்து நிறுத்திட
ஆண் இனத்தைக் காத்திட
ஆண்களுக்கும் வேண்டும்
உணர்வுச் சுதந்திரம்!


பாரதத் திருநாட்டில்
பண்போடு வளர்ந்துவந்த
பெண்களெல்லாம் அடிமையென்று
வாய்கூசாமல் பேசிவிடும் பெண்ணியப்
பேய்களுக்கு ஆன்போடு ஆண்டவன்
ஆசீர்வாதம் அளிப்பானாக..


அடுத்த ஜென்மமொன்று
அவர்களுக்கு உண்டென்றால்
ஆப்கானிஸ்தானிலும் ஈரானிலும்
பிறந்து மகிழந்திட வேண்டுமென்று!









.

Sunday, November 7, 2010

பெண்ணாதிக்கமும் ஆணடிமைத்தனமும்!


சில நாட்களுக்கு முன் ஒரு அலைவரிசையில் நிகழ்ச்சி ஒன்றை பார்க்க நேரிட்டது. அநேகமாக ஜெயா டிவி என்று நினைக்கிறேன். நிகழ்சியின் பெயர் தெரியவில்லை. நான்கு ஜோடிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஒரு ஜோடி பேசிக்கொண்டிருந்தது. பெண் ஆணிடம் சில கேள்விகளைக் கேட்க அதற்கு அவன் அளிக்கும் பதிலைக் கொண்டு அவர்களது காதல் எத்தகையது என்று தீர்மானிப்பார்களோ என்னவோ?

சரி அங்கே அந்த ஜோடிக்குள் நடந்த உரையாடலைக் கொஞ்சம் பார்ப்போம்...

பெண்: கல்யானத்துக்கப்பறம் நான் என் சம்பளப்பணம் முழுவதையும் உங்ககிட்டேயே குடுக்கனும்னு எதிர்பாப்பீங்களா?

ஆண்: இல்லை, நான் அப்படி கேக்க மாட்டேன். இன்னும் சொல்லப்போனா நான் மணி மேனேஜ்மென்ட்ல கொஞ்சம் வீக்கு. அதனாலே என்னோட சம்பளத்தை கூட உங்க கிட்டேயே கொடுத்திடறேன். நீங்க பாத்து எனக்கு ஏதாவது குடுத்தா போதும். அப்போதான் நான் கன்ட்ரோலா இருப்பேன்.

பெண்: கல்யானத்துக்கு அப்பறம் நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசறதையோ வெளியே போறதையோ அலோவ் பண்ணுவீங்களா? இல்லை யாரையும் பாக்ககூடாதுன்னு தடை பண்ணுவீங்களா?

ஆண்: இல்ல உங்களுக்கும் ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்கல்ல. நான் வந்து அதை மதிக்கிறேன். உங்க ஃப்ரண்ட்ஸ் உங்க தனிப்பட்ட விஷயம். நான் அதுல தலையிட மாட்டேன்.

பெண்: கல்யானத்துக்கு அப்பறம் என்னோட பர்சனல் எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்லனும்னு நீங்க எதிர் பாப்பீங்களா?

ஆண்: சே சே! அப்படியெல்லாம் நான் எதிர்பார்க்கவே மாட்டேன். உங்க பர்சனல் விஷயங்கள்ல நான் தலையிட மாட்டேன்.

பெண்: நான் நிறைய படிச்சிருக்கேன். எனக்கு வெளி நாட்டில் வேலை கிடைச்சிதுன்னா என்னை போக விடுவீங்களா? ஏன்னா அது என்னோட ஃப்ரொபஷன். இல்லை, குடும்பத்தை காரணம் காட்டி அங்கெல்லாம் போககூடாதுன்னு தடை பன்னுவீங்களா?

ஆண்: இல்ல, உங்க திறமை காரணமா உங்களுக்கு வேலை கிடைச்சிருக்கு. அதுக்கு நான் ஃபுல் சப்போர்ட் பன்ணுவேன். நம்ம குடும்பத்துக்கு தானே நல்லது. முடிஞ்சா உங்க கூட நானும் வந்து உங்களுக்கு உதவ முடியுமான்னு பாப்பேன்.

பெண்: எனக்கு சுத்தமா சமைக்கத் தெரியாது. வெந்நீர் நல்லா வெப்பேன். நான் உங்களுக்கு சமைச்சுப் போடனும்னு எல்லாம் நீங்க எதிர் பாப்பீங்களா?

ஆண்: இல்ல, எனக்குநல்லா சமைகக்த் தெரியும். நானே என் கையால உங்களுக்கு சமைச்சு போடறேனே. நீங்க தான் சமைக்கனும்னு நான் சொல்ல மாட்டேன்.

இப்படி கேள்வி பதில் இருந்தது. அந்தப் பெண் கேள்வி கேட்டதையும் அதற்கு ஆண் கூறிய பதிலையும் கேட்ட போது உண்மையில் மிகவும்கேவலமாகத் தோன்றியது. பெண்கள் தங்கள் சுயம் பற்றி வாய்கிழியப் பேசி பென்ணியம் பெண் சுதந்திரம் என்று கூச்சலிட்டு கொண்டிருக்கையில் ஒரு ஆண் தன் சுயத்தை இழந்து பெண்ணின் கால்களை கழுவுவதே ஒரு நவநாகரீகமான ஆண்மகன் என எண்ணி பேசியதாக தோன்றியது. அல்லது அந்த நிகழ்ச்சியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்றென்னி இப்படி பேசிக்கொண்டார்களா தெரியாது. ஆனால் பார்க்கும் போது எரிச்சலைக் கொடுத்தது.

பெண் சொல்வதற்கெல்லாம் அப்படியே தலையாட்டுவதே பெண்களை மதிக்கும் குணம் என்றாகிவிட்டது. பொதுவாக இந்தியாவில் நடத்தப்படும் பெண்ணுரிமையின் அதிகப்பிரசங்கித்தனமெல்லாம் ஆண்களையே பெண்களாக்கும் நோக்கிலேயே நகர்ந்தது. ஆணுக்கும் பெண்ணுக்கும் மீசை மட்டும் தானே வித்தியாசம். மற்றபடி நீயும் பெண் தான்
என்று கூறும் அளவு கேவலமான பெண்ணியப் பேச்சுக்கள் தொடர்ந்து நடந்து வந்தன.

இந்த மாதிரியான அசிங்கமான பிரசாரங்களைப் பார்த்து பயந்து போன பல ஆண்கள் பெண்களுக்கு அப்படியே ஜால்ராதட்டுவதே பெண்களை மதிக்கும் குணம் என்று எண்ணி விட்டார்கள். இத்தகைய ஐயோ பாவம் கேஸ் தான் மேற்சொன்ன ஆண்மகன் என்று கூட எண்ணத் தோன்றுகிறது. 'சரி உன்கிட்ட இப்டி ஒரு கேள்விய ஒரு பொன்னு கேட்டா நீ என்ன சொல்லுவ?' என்றான் என் நண்பன்.

பெண்: கல்யானத்துக்கப்பறம் நான் என் சம்பளப்பணம் முழுவதையும் உங்ககிட்டேயே குடுக்கனும்னு எதிர்பாப்பீங்களா?

நான்: இல்ல, பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட குடுத்திடு. நான் அவன்கிட்ட கேட்டு வாங்கிக்கறேன்.

பெண்: கல்யானத்துக்கப்பறம் நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசறதையோ வெளியே போறதையோ அலோவ் பண்ணுவீங்களா? இல்லை யாரையும் பாக்ககூடாதுன்னு தடை பண்ணுவீங்களா?

நான்: நம்ம உறவையோ குடும்பத்தையோ பாதிக்கும்னா கண்டிப்பா அலவ் பண்ண மாட்டேன்!

பெண்: கல்யானத்துக்கு அப்பறம் என்னோட பர்சனல் எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்லனும்னு நீங்க எதிர் பாப்பீங்களா?

நான்: புருஷனுக்குத் தெரியாம பெண்டாட்டிக்கு பர்சனல் இருந்தா அதுக்கு பேரு ரகசியம். புருஷன் கிட்டயே ரகசியம் காக்கறவ நம்பிக்கையான பொண்டாட்டியா இருக்கமுடியாது. அதனால ரெண்டுபேருக்குள்ளேயும் ரகசியம் இருகக்கூடாதுன்னு நினைப்பேன்!

பெண்: நான் நிறைய படிச்சிருக்கேன். எனக்கு வெளி நாட்டில் வேலை கிடைச்சிதுன்னா என்னை போக விடுவீங்களா? ஏன்னா அது என்னோட ஃப்ரொபஷன். இல்லை குடும்பத்தை காரணம் காட்டி அங்கெல்லாம் போககூடாதுன்னு தடை பன்னுவீங்களா?

நான்: சூழ்நிலையை பொறுத்து தான் முடிவு செய்யனும். என்னோட படிப்பையும் சம்பளத்தையும் ஆதாரமா வெச்சி தான் நீ என்னைய கட்டிக்கிட முடிவு செஞ்ச. நான் வேலையில்லாம இருக்கும் போது உன் சம்பளத்தை நம்பி என்னைக் கல்யாணம் பண்ணியிருந்தா உன் கூடவே வந்திருப்பேன்.

பெண்: எனக்கு சுத்தமா சமைகத் தெரியாது. வெந்நீர் நல்லா வெப்பேன். நான் உங்களுக்கு சமைச்சுப் போடனும்னு நீங்க எதிர் பாப்பீங்களா?

நான்: ரொம்ப ஓவரா பேசாதடீ, எனக்கும் வெந்நீர் தான் வெக்கத் தெரியும். ரெண்டு பேரும் எத்தனன நாள் முடியுமோ அத்தனை நாள் வெந்நீர் குடிச்சே உயிர் வாழலாம்.

இப்படி சொல்லியிருப்பேன்னு நினைக்கறேன். சரி, நீங்க அந்த ஆண்மகனா இருந்தா இதே கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லியிருப்பீங்க? கொஞ்சம் சொல்லுங்களேன்...



ஆண்களே! ரொம்ப குனிஞ்சீங்க அப்பறம் இந்த கதிதான்!



.