Showing posts with label விதுர‌ர். Show all posts
Showing posts with label விதுர‌ர். Show all posts

Thursday, May 24, 2012

அகங்காரத்தால் அழியாதே - விதுர நீதி!



பாண்டவர்களும் கௌரவர்களும் போரில் இறப்பார்களே என்ற துயரத்தின் உச்சத்தில் ஆழ்ந்த திருதிராஷ்ட்டிரன் விதுரரிடம் கேட்கிறார்!

திருதிராஷ்ட்டிரன்: விதுரா! மனிதனுக்கு ஆயுள் நூறாண்டு காலம் என்று எல்லா வேதங்களும் சொல்கின்றன. அப்படி இருந்தும், மனிதன் நூறு ஆண்டுகளும் உலகில் இருப்பதில்லையே, அது ஏன்?

விதுரர்: மாமன்னா! மனிதர்களை எமன் கொல்வதில்லை. அவர்களின் ஆயுளை ஆறு கூர்மையான ஆயுதங்கள் அறுக்கின்றன. அவைகளைச் சொல்கிறேன் கேளுங்கள்.

மிதமிஞ்சிய அகங்காரம்

அதிகமான பேச்சு

குற்றங்களை மிகுதியாகச் செய்வது.

அதிகமான கோபம்

தன்னை மட்டும் காத்துக் கொள்வதில் ஆசை

நண்பர்களுக்குத் துரோகம் செய்வது.

என்கிற இவைகளே அந்தக் கூர்மையான ஆயுதங்கள். ஆகவே மன்னா! இந்தத் தீய குணங்களை ஒழித்து நீங்களும் உங்கள் பிள்ளைகளும் சுகமாக வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்!

- மகான் விதுரர்

Tuesday, May 5, 2009

விதுர நீதி


பாண்டவர்களை அடைந்த‌ விதுரரை ஐவரும் அன்புடன் வரவேற்க்கின்றனர். ஓர் அழகான இருக்கையில் அவரை அமர்த்தித் தகுந்த முறையில் மரியாதை செய்தனர். யுதிஷ்டிரர் வினவிய பிறகு, விதுரர் த்ருதராஷ்ட்ரர் கூறிய வார்த்தைகளை அவரிடம் சொன்னார்: 

" திருதராஷ்ட்ரருக்கு நான் அங்கிருப்பது தேவையில்லை என்று தோன்றிவிட்டது. இதனால் நான் இங்கு வந்துவிட்டேன். அவருடைய மனம் மோத்தினாலும் பற்றுதலாலும் கலங்கித் தெளிவில்லாமல் இருக்கிறது. தர்மம் செய்வதற்கான வார்த்தைகளைக் கேட்பதற்க்குக் கூட அவர் விரும்பவில்லை. இப்போது கௌரவர்களுடைய அழிவு நெருங்கியிருக்கிறது என்றே தோன்றுகிறது. இந்த ஆபத்தைக் கண்டு அஞ்சி நடுங்க வேண்டியதில்லை. பகைவர் தரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு அனுகூலமான காலத்தை எதிர்பார்த்திருப்பவனுக்குப் பின்னால் சுகம் நிச்சயமாகக் கிடைக்கும்." என்று கூறினார்.  

விதுரர் மேலும் பாண்டவர்களுக்கு இவ்வாறு உபதேசிக்கிறார்:  

"செல்வச் செழிப்பில் இருக்கும் போதும் , சுகங்களை அனுபவிக்கும் போதும் தானே தன்னந்தனியாக அவற்றை அனுபவிக்காமல் பிறருக்கு உதவி செய்து எவன் அவற்றை சமமாகப் பங்கு கொடுக்கிறானோ, அவனுக்கு துக்கம் நேர்ந்த காலத்தில் துன்பச் சுமையை அவன் மட்டும் தனியாகச் சுமக்க வேண்டிவராது.  

அவனுடைய இன்னல்களைப் பகிர்ந்து கொள்பவர்கள் கிடைப்பார்கள். ஆதரவாளர்கள் கிடைப்பதற்கான மிகச் சிறந்த உபாயம் இதுதான். உதவிக்கு ஆட்கள் கிடைத்த பின் , வேண்டியனவெல்லாம் கிடைத்து விட்டன என்றே புரிந்து கொள்ள வேண்டும்.  

பணிவுள்ளவனாகத் தன்னை க்கிக் கொள்வதுதான் நன்மை பயக்கும். இதனாலேயே அவர்களுக்கு உயர்வு ஏற்படுகிறது." - விதுரர்

Saturday, March 28, 2009

விதுர நீதி


அறிவுள்ளவனின் குணங்கள்

"எவனுடைய கல்வி, அவன் புத்தியை அனுசரித்து இருக்கிறதோ, எவனுடைய புத்தி அவன் பெற்ற கல்விக்கு விரோதமாக இல்லையோ, பண்டைக்கால மனிதர்களால் நல்லதென்று தீர்மானிக்கப்பட்டிருக்கிற நடத்தையை எவன் மீறுவதில்லையோ, எவன் எப்பொழுதும் தொன்று தொட்டு இருந்து வரும் ஸநாதன தர்மத்தை தன் இதயத்தில் வீற்றிருக்கச் செய்துள்ளானோ, அவன் அறிவுள்ளவன் ஆவான்!"

அறிவற்றவனின் குணங்கள்

"சாஸ்திரங்களில் கூறியவற்றையும், உலகத்திலுள்ள பெரியோர்களின் சொற்களையும் செவிமடுத்துக் கேட்காதவனும், தன்னை மிகப் பெரியவன் என்று கருதி, கர்வம் கொள்பவனும், இதை முடிக்கத் திறமையில்லை எனத் தெரிந்தும் அதை நிறைவேற்றச் செயல்பட்டுக் கொண்டிருப்பவனும், பாவம் செய்து பொருளீட்ட விரும்புபவனும், தன் நன்பனை மோசம் செய்பவனும், பகைவரிடம் நட்புக் கொள்பவனும், தானே செய்ய வேண்டிய வேலைகளை, வேலைக்காரர்களைச் செய்யும்படி ஏவுபவனும், தராதரம் இல்லாமல் ஸ்நேகம் கொள்பவனும், அவசர அவசரமாகச் செயல்படுபவனும், விரைவில் செய்து முடிக்க வேண்டிய வேலையைச் செய்யாமல் தாமதம் செய்பவனும் அறிவிலிகள்".


மேலும் "பித்ருக்களுக்கு ஈமக்கடன்கள் செய்யாதவனும், தேவதைகளுக்கு பூஜை செய்யாதவனும், நல்லோரிடம் நட்பு கொள்ளாதவனும், அழைக்கப்படாத இடங்களுக்கு செல்பவனும், கேட்காவிட்டாலும் பல விஷயங்களை சொல்லித்தீர்ப்பவனும், நம்பத் தகுந்தவனை நம்பாதவனும், தனது குற்றத்தைப் பிறர் மீது சுமத்துபவனும், பிறருடைய‌ மனைவியை காம நோக்குடன் பார்ப்பவனும், கஞ்சனுக்கு வேலை செய்பவனும் அறிவற்றவர்கள் ஆவர்."

- விதுர‌ர்