Showing posts with label ஹிந்து. Show all posts
Showing posts with label ஹிந்து. Show all posts

Sunday, October 30, 2011

பணிந்தது முத்தூட் பைனான்ஸ்!


முத்தூட் பைனான்ஸின் உத்தரவுக்கடிதம்!

இதனை எதிர்க்கும் வகையில் திரு. சு.சுவாமியின் கடிதம்!

Dr Swamy takes up Talibanic dress code of Muthoot
12/09/2011 00:36:12  

10th September, 2011.

To
Ms. Shiney Thomas,
Executive Secretary,
Muthoot Fincorp Ltd.
Muthoot Center
Punnen Road, Trivandrum.

Dear Ms.Thomas:

I am given to understand that you have issued a circular dated 17th March, 2011
resuring a dress code which discriminates against Hindu values and practices (see
enclosed).

If this circular is still operative, please let me know. As it stands, it is violative of a
Hindu’s fundamental rights.

Yours sincerely,

(SUBRAMANIAN SWAMY)




ஹிந்துக்கள் ஒற்றுமையாக போராடினால் ஹிந்துக்களின் உணர்வுகளை அவமதிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்களை அடக்க முடியும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!

உத்தரவை வாபஸ் வாங்கிய முத்தூட் பைனான்ஸ்!

Muthoot Fincorp withdraws Anti-Hindu circular for Hindu employees after protest by HJS




Mumbai: Restrictions imposed by the management of a company named ‘Muthoot Fincorp’ on its employees for wearing traditional things were withdrawn today acceding to the demand made by Hindu Janajagruti Samiti (HJS). The company has changed its order and has also rendered apology to HJS. (Hindus should pay gratitude at Srikrushna’s feet for this success ! – Editor SP)‘Muthoot Finance Corporation’ had issued an order on 17th March 2011 for its employees that they should follow a dress code as directed by the company; else disciplinary action would be taken against them. It was mentioned in the said order that men should not apply ‘sandalwood gandh’ or any kind of sign on their forehead, they should not wear anything on their hands other than ring on the finger; female employee should not apply ‘bindi’ or any sign on the forehead, should not adorn hair with flowers etc. News about the same was published on the website of HJS. Dr. Subramanyam Swami, the President of Janata Party had also written a protest letter to the company in this regard. Activists of RSS, VHP and HJS had started agitation against ‘Muthoot Finance Corporation’ in Kerala.

On 15th September, Mr. Shivaji Vatkar, the district-coordinator of HJS wrote a protest letter to the above company requesting to withdraw or modify the order issued by the company. HJS, while praising company’s efforts to maintain cleanliness, unity and discipline, also made them aware that imposing such restrictions was against the religious customs and traditions of Hindus and their culture besides being against the Constitution of this country. It also made a demand that the company should grant permission to women employees to apply ‘kumkum’, ‘bindi’, ‘mangalsutra’, flowers etc. as per the Indian traditions. It was stated that the company could face serious financial loss if the demands of HJS were not approved. The company’s Managaing Director George Lamanil contacted Mr. Shivaji Vatkar on 17th September and requested him to have a meeting. Accordingly, on 19th September, meeting was held between Mr. Ravindra Prabhudesai, the President of ‘Pitambari’ group of companies, Mr. Shivaji Vatkar and Mukund Ghanekar with Mr. George at Thane. Mr. George agreed to the demands of HJS and assured Mr. Vatkar to issue a revised circular requesting him to stop the agitations. The company has since informed HJS about revising their order regarding official dress code and apologized for hurting religious sentiments.


மூலச் செய்தி :- ஹிந்து ஜாக்ருதி

Tuesday, May 5, 2009

விதுர நீதி


பாண்டவர்களை அடைந்த‌ விதுரரை ஐவரும் அன்புடன் வரவேற்க்கின்றனர். ஓர் அழகான இருக்கையில் அவரை அமர்த்தித் தகுந்த முறையில் மரியாதை செய்தனர். யுதிஷ்டிரர் வினவிய பிறகு, விதுரர் த்ருதராஷ்ட்ரர் கூறிய வார்த்தைகளை அவரிடம் சொன்னார்: 

" திருதராஷ்ட்ரருக்கு நான் அங்கிருப்பது தேவையில்லை என்று தோன்றிவிட்டது. இதனால் நான் இங்கு வந்துவிட்டேன். அவருடைய மனம் மோத்தினாலும் பற்றுதலாலும் கலங்கித் தெளிவில்லாமல் இருக்கிறது. தர்மம் செய்வதற்கான வார்த்தைகளைக் கேட்பதற்க்குக் கூட அவர் விரும்பவில்லை. இப்போது கௌரவர்களுடைய அழிவு நெருங்கியிருக்கிறது என்றே தோன்றுகிறது. இந்த ஆபத்தைக் கண்டு அஞ்சி நடுங்க வேண்டியதில்லை. பகைவர் தரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு அனுகூலமான காலத்தை எதிர்பார்த்திருப்பவனுக்குப் பின்னால் சுகம் நிச்சயமாகக் கிடைக்கும்." என்று கூறினார்.  

விதுரர் மேலும் பாண்டவர்களுக்கு இவ்வாறு உபதேசிக்கிறார்:  

"செல்வச் செழிப்பில் இருக்கும் போதும் , சுகங்களை அனுபவிக்கும் போதும் தானே தன்னந்தனியாக அவற்றை அனுபவிக்காமல் பிறருக்கு உதவி செய்து எவன் அவற்றை சமமாகப் பங்கு கொடுக்கிறானோ, அவனுக்கு துக்கம் நேர்ந்த காலத்தில் துன்பச் சுமையை அவன் மட்டும் தனியாகச் சுமக்க வேண்டிவராது.  

அவனுடைய இன்னல்களைப் பகிர்ந்து கொள்பவர்கள் கிடைப்பார்கள். ஆதரவாளர்கள் கிடைப்பதற்கான மிகச் சிறந்த உபாயம் இதுதான். உதவிக்கு ஆட்கள் கிடைத்த பின் , வேண்டியனவெல்லாம் கிடைத்து விட்டன என்றே புரிந்து கொள்ள வேண்டும்.  

பணிவுள்ளவனாகத் தன்னை க்கிக் கொள்வதுதான் நன்மை பயக்கும். இதனாலேயே அவர்களுக்கு உயர்வு ஏற்படுகிறது." - விதுரர்

Sunday, April 5, 2009

கீதோபதேசம்


அர்ஜுனன் சொன்னது:  

பகவானே சூரியன் உங்களுக்கு முன்னால் பிறந்தவர். நீங்கள் சூரியனுக்கு பிறகு பிறந்தீர்கள். முதலில் நீங்கள் சூரியனுக்கு அழிவற்ற‌ யோகத்தை உபதேசித்ததாக கூறுகிறீர்கள். இதை நான் எவ்வாறு புரிந்து கொள்வது.  

ஸ்ரீ கிருஷ்னர் உபதேசம்:  

அர்ஜுனா! நானும் நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்.  

நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், குறைவு இல்லாத தன்மை உடையவன் இருந்தும் கூட என் இயல்பை அடக்கிக் கொண்டு என்னுடைய மாயா சக்தியினால் அவதாரம் செய்கிறேன்.  

அர்ஜுனா! உலகில் தர்மம் குறைந்து, அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.  

நல்லவர்களை காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்.  

என்னுடைய தெய்வீகமான பிறப்பு, செயல் ஆகியவற்றை உள்ளபடி அறிந்தவன் இந்த மனித உடலைவிட்டு நீங்கிய பிறகு மறுபிறவி அடைவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை வந்து அடைகிறான்.  

காமம் (ஆசை), பயம் கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவர்களும், என்னையே நினைத்து, என்னையே சரணாக அடைந்து, ஞானமாகிய அக்னிப் பரீட்சையால் பொசுக்கப்பட்டு புனிதர்களாய்ப் பலர் என்னுடன் ஒன்றாகி ஐக்கியம் அடைந்திருக்கிறார்கள்.  

மனிதர்கள் எந்த வழியில் என்னை நாடினாலும், அதே வழியில் நான் அவர்களுக்கு அருள் புரிகிறேன். அர்ஜுனா! மக்கள் எங்கும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

Saturday, March 28, 2009

கீதோபதேசம்!


அர்ஜுனர்: பரமாத்மாவை அடைவதற்க்கான வைராக்கியம் எப்படி ஏற்படும்?

ஸ்ரீ க்ருக்ஷ்னர்: வைராக்கியத்திற்குப் பல ஸாதனங்கள் உள்ளன. அவற்றில் சில‍ 

1. உலகியல் பொருட்களை ஆராய்ந்து அவற்றில் அழகு, அன்பு, ஸுகம் இல்லை என்பதை உணர வேண்டும். 

2. அவை பிறப்பிறப்பு, மூப்பு , நோய் முதலிய துக்கங்களும், குற்றங்களும் நிறைந்தவை; நிலையற்றவை; பயம் தருபவை என்று அறிய வேண்டும்.  

3. உலக வாழ்க்கை, பகவான் இவ்விரண்டின் தத்துவத்தை நிரூபிக்கின்ற அறநூல்களைக் கற்க வேண்டும்.  

4. தீவிர வைராக்கியம் உள்ள பெரியோர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். அத்தகைய சேர்க்கை கிடைக்காவிடில் வைராக்யம் நிறைந்த அவர்களுடைய படங்களையும், சரித்திரங்களையும் நினைத்து, மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.  

5. உலகில் உள்ள மிகப்பெரிய கட்டிடங்களின் இடிபாடுகளையும், பெரிய நகரங்களும், கிராமங்களும் அழிவதையும் பார்த்து உலகம் கணத்தில் அழியக்கூடியது என்று உணர வேண்டும்.  

6. ப்ரம்மம் ஒன்றே பகுதியற்றது; இரண்டற்றது என்ற ஞானம் பெற்று, மற்றவை எதற்கும் இருப்பே இல்லை என்று அறிய வேண்டும்.  

7. தகுதியுள்ள பெரியோர்களிடமிருந்து, பகவானுடைய வர்ணனைக்கடங்காத குணங்கள், ப்ரபாவங்கள், தத்வம், ப்ரேமை (அன்பு), ரகசியங்கள், அவருடைய லீலா சரித்திரங்கள், தெய்வீக அழகு, இனிமை இவற்றைத் திரும்பத் திரும்பக் கேட்டறிந்து, அவற்றில் முற்றும் ஈடுபட்டு, மூழ்கி விட வேண்டும். இவ்விதம் இன்னும் பல ஸாதனங்கள் உள்ளன.

விதுர நீதி


அறிவுள்ளவனின் குணங்கள்

"எவனுடைய கல்வி, அவன் புத்தியை அனுசரித்து இருக்கிறதோ, எவனுடைய புத்தி அவன் பெற்ற கல்விக்கு விரோதமாக இல்லையோ, பண்டைக்கால மனிதர்களால் நல்லதென்று தீர்மானிக்கப்பட்டிருக்கிற நடத்தையை எவன் மீறுவதில்லையோ, எவன் எப்பொழுதும் தொன்று தொட்டு இருந்து வரும் ஸநாதன தர்மத்தை தன் இதயத்தில் வீற்றிருக்கச் செய்துள்ளானோ, அவன் அறிவுள்ளவன் ஆவான்!"

அறிவற்றவனின் குணங்கள்

"சாஸ்திரங்களில் கூறியவற்றையும், உலகத்திலுள்ள பெரியோர்களின் சொற்களையும் செவிமடுத்துக் கேட்காதவனும், தன்னை மிகப் பெரியவன் என்று கருதி, கர்வம் கொள்பவனும், இதை முடிக்கத் திறமையில்லை எனத் தெரிந்தும் அதை நிறைவேற்றச் செயல்பட்டுக் கொண்டிருப்பவனும், பாவம் செய்து பொருளீட்ட விரும்புபவனும், தன் நன்பனை மோசம் செய்பவனும், பகைவரிடம் நட்புக் கொள்பவனும், தானே செய்ய வேண்டிய வேலைகளை, வேலைக்காரர்களைச் செய்யும்படி ஏவுபவனும், தராதரம் இல்லாமல் ஸ்நேகம் கொள்பவனும், அவசர அவசரமாகச் செயல்படுபவனும், விரைவில் செய்து முடிக்க வேண்டிய வேலையைச் செய்யாமல் தாமதம் செய்பவனும் அறிவிலிகள்".


மேலும் "பித்ருக்களுக்கு ஈமக்கடன்கள் செய்யாதவனும், தேவதைகளுக்கு பூஜை செய்யாதவனும், நல்லோரிடம் நட்பு கொள்ளாதவனும், அழைக்கப்படாத இடங்களுக்கு செல்பவனும், கேட்காவிட்டாலும் பல விஷயங்களை சொல்லித்தீர்ப்பவனும், நம்பத் தகுந்தவனை நம்பாதவனும், தனது குற்றத்தைப் பிறர் மீது சுமத்துபவனும், பிறருடைய‌ மனைவியை காம நோக்குடன் பார்ப்பவனும், கஞ்சனுக்கு வேலை செய்பவனும் அறிவற்றவர்கள் ஆவர்."

- விதுர‌ர்

Saturday, March 21, 2009

இந்து திருமண‌த்தில் அம்மி மிதித்தல் பொருள் என்ன?



இந்து திருமண‌த்தில் அம்மி மிதித்தல் என்ற சம்பிரதாயம் இருப்பதன் பொருள் என்ன?

பழங்காலம் முதல் இந்து திருமண‌த்தில் மனிதர்கள் அனுஷ்டிக்க வேண்டிய தர்மங்களை சில செய்கைகள் மூலம் மனதில் பதிய வைக்க‌ முயற்ச்சிப்பது வழக்கம். அவற்றில் ஒன்று தான் இந்த அம்மி மிதித்தல் என்ற சம்பிரதாயம். செய்முறை பயிற்சி என்று இன்று நாம் சொல்கிறோமே அது போல தான்.

சரி முதலில் இந்த சம்பிரதாயத்தின் அர்த்தம் என்ன என்பதை பார்ப்போம். அதாவது மணப்பெண் அம்மி மிதிக்கிறபோது பெண்ணின் வலது காலை மாப்பிள்ளை அம்மி மீது தூக்கி வைக்கிறான். அப்போது சொல்லப்படும் மந்திரத்திற்கு "வாழ்க்கையில் பகைவர்களைப் போல் துன்பம் அளிக்கக்கூடிய நிலைகள் ஏற்படலாம். அப்போது நீ இந்தக் கல்லைப் போல் அசையாமல் இருக்க வேண்டும். எவ்வளவு துன்பங்கள் நேரிட்டாலும் அதை நீ உறுதியாக தாங்கி எதிர்கொள்ள‌ வேண்டும்." என்பது பொருள்.

சரி இதை வெறும் வாயாலேயே சொல்லலாமே. அதை ஏன் மெனக்கெட்டு ஒரு அம்மிக்கல்லை தூக்கி வந்து அதன் மேல் கால் வைத்து சொல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். நான் ஏற்கனவே சொன்னது போல் இது ஒரு வகை செய்முறை பயிற்சி தான். அம்மியின் மீது மணப்பெண்ணின் காலை பிடித்து வைத்து கல்லின் உறுதித்தன்மையை மணமகன் உண‌ர்த்துகிறான். இவ்வாறு தொடு உணர்வு மூலம் உணர்த்தப்படும் போது அது ஆழமாக மனதில் பதிகிறது.மேலும் உறவினர்கள் எல்லோரும் கூடி நின்று வேடிக்கை பார்க்க ஒரு ஆண் அனைவரின் முன்னிலையிலும் ஒரு பெண்ணின் காலை பிடிக்கும் போது ஏற்ப‌டும் உண‌ர்வு
அன்றைய‌ தின‌த்தை ப‌ல‌ நாட்க‌ளுக்கு ஞியாப‌க‌ம் வைத்திருக்க‌ச் செய்யும். அது ம‌ட்டும் அல்லாம‌ல் அந்த‌ நிக‌ழ்ச்சியை ம‌ற‌க்காம‌ல் இருக்க‌வும் அன்றைய‌ தின‌த்தில் போதிக்க‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ள் வாழ்நாள் முழுவதும் ம‌ன‌தை விட்டு நீங்காம‌ல் இருக்க‌வுமே அம்மியில் கால் வைத்த‌வுட‌ன் ம‌ண‌ம‌க‌ன் , ம‌ண‌ப்பெண்ணின் காலில் மெட்டி இடுகிறான்.


ஆக‌ திரும‌ணத்தின் போது ம‌ண‌ம‌க்க‌ளுக்கு வாழ்க்கை தர்மங்கள் மனதில் ஆழப்பதியவும், அது வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருக்கவும் செய்யப்படும் செய்கைகளே சம்பிரதாயங்கள் எனப்படுகிறது. இது ஒருவ‌கை மனோ ரீதியான சூட்சம நடவடிக்கையே. சரியாகச் சொல்லப்பட்டு இவ்வாறு மனதில் ப‌திய‌வைக்க‌ப்ப‌டும் த‌ர்ம‌ங்க‌ள் வாழ்நாள் முழுவ‌தும் ம‌ற‌க்காம‌ல் காப்பாற்ற‌ப்ப‌டும்.

இந்து த‌ர்ம‌த்தில் இப்ப‌டி ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் மிக‌ உள்ளார்ந்த‌ அர்த்த‌ங்க‌ளுட‌ன் இருப்ப‌தை அனுப‌த்து உண‌ர்ப‌வ‌ர்க‌ளுக்கு மிக‌ ந‌ன்றாக‌வே புரியும். ஆத‌லால் சொல்கிறேன், இந்து த‌ர்ம‌ம் என்ப‌து ம‌னோவிய‌லும் அறிவிய‌லும்.

Saturday, March 7, 2009

இந்து தர்மத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்?


ஏன் இத்தனை தெய்வங்கள்?


இந்த கேள்வியை ஆராயும்முன் முதலில் நமக்கு ஏன் இத்தனை குணங்கள் என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு மூளை ஒரு உடல் மட்டுமே கொண்ட நமக்கு எத்தனை குணங்கள். நாமே ஒருவருக்கு நல்லவராகவும் ஒருவருக்கு கெட்டவராகவும் தெரிகிறோம். ஏன்? நமக்குள்ளே எத்தனை உணர்வுகள் ஏன்? பாசம், கோபம், அமைதி, காதல் மற்றும் காமம் என்று பல ரூபங்களை எடுக்கிறோமே ஏன்? வீட்டில் உள்ளவர்களிடம் பாசத்துடன் பழகும் நாம் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் பழகும் போது பயத்துடன் பழகுகிறோம் ஏன்? அலுவலக மேலதிகாரியிடம் ஏன் பாசத்தை பொழிவதில்லை? இப்படி நாம் ஒருவரே வெவ்வேறான நபராக நம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் போது இந்த பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த சக்தியான கடவுளுக்கு பல உருவங்கள் ஏன் இருக்கக் கூடாது? இது ஒரு வாதமே என்று எடுத்துக்கொண்டாலும் இந்த பல உருவ வழிபாட்டில் உள்ள மனோவியல் ரீதியான உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.


இந்து தர்மத்தில் பல தெய்வங்கள் இருப்பது வேறு எந்த மதங்களிலும் இல்லாத ஒரு சிறப்பாகவே கருத வேண்டும். ஏனெனில் கடவுளை வணங்குவதற்கு நமக்கு விருப்பமான எந்த ரூபத்தையும் நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ள இந்த ஒரு தர்மத்தில் மட்டுமே சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சுதந்திரம் வேறெந்த மதத்திலும் கொடுக்கப்படவில்லை என்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும்.


இப்போது மேற்குறிப்பிட்ட கேள்விக்கான புரிதலுக்கு வருவோம். பொதுவக ஒவ்வொரு மனிதரும் அவரவர் குணங்களுக்கு ஏற்பவே நண்பர்களையே தேர்ந்தெடுப்பார்கள். அப்படியிருக்க தாங்கள் வணங்கும் கடவுளும் தங்களுக்கு பிடித்த மாதிரியான குணாதிசய‌ங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவது மிகவும் இயல்பானதே! அது போலவே பல கடவுளர்களின் குணங்களும் அதற்கேற்ற கதைகளும் மக்கள் வாழிடத்திற்கு ஏற்றார்போல அவ்வப்பொழுது உருவாக்கப்படுவதும் உண்டு. தம்மை வழிநடத்தும் கடவுள் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒவ்வொருவரின் கற்பனையே அவன் விரும்பும் கடவுளாகவும் மாறுகிறது. அமைதியான, அன்பான‌ அதே நேரம் வீரமுள்ள கடவுளை வழிபட வேண்டுவோர் இராமரை வணங்குவதும் , எந்த துன்பத்திலுருந்தும் தம்மைக்காக்கும் சூத்திரதாரி வேண்டுவோர் கிருஷ்னரையும் வணங்குவர். பயந்த சுபாவம் கொண்டவர்கள் பயங்கர ஆயுதங்கள் கொண்ட‌ கடவுளை காக்கும் தெய்வங்களாக வணங்குவதைக் காணலாம்.


அதிக கோபம் சமூக அக்கிரமங்களை கொடூரமாக அழிப்பதே சரி என்று மனோவியல் ரீதியாக எண்ணுபவர்கள் பத்திரகாளி போன்ற ரத்த மயமான தெய்வங்களைத் தேர்ந்தெடுக்கலாம். கடவுளை தாயாக பாவிக்க நினைப்பவர்கள் மீனாட்சி , காமட்சி , மாரியம்மன் என்ற பெண் தெய்வங்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.


மேலும் சிலர் இயற்கையின் மீதும் வினோத படைப்புக்கள் மீதும் ஈர்க்கப்பட்டால் அவர்கள் மனித உருவும் விலங்கு உருவும் கொண்ட வித்தியாசமான தெய்வங்களான பிள்ளையார், அனுமார் போன்ற கடவுளை தேர்ந்தெடுப்பர்.


மொத்தத்தில் பக்தி செலுத்தவும் தியானிக்கவும் ஒரு உருவம் தேவை. ஒரே உருவத்தின் மீது எல்லோருக்கும் ஈர்ப்பு ஏற்படுவது நடைமுறைக்கு ஒத்து வராது. எனவே தியானிப்பதற்கும் பக்தியை மனதில் இருத்தி , மனதை ஒரு நிலைப்படுத்தி நிரந்தரமான அமைதியை அடைந்து நல்வழிப்பட மனிதர்களுக்கு பல்வெறு உருவங்கள் கொண்ட தெய்வ வழிபாடு சிறப்பாக உதவுகிறது.


இந்த பல உருவ வழிபாட்டை இன்னொரு நிலையிலும் பார்க்க வேண்டும். ஒரு மார்கத்திற்கு ஒரே ஒரு உருவம் தான் கடவுள் என்று மொத்த பேரும் அந்த உருவத்தை வணங்கி பிரார்த்தனை செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த பிரார்த்தனை நிரைவேறாமல் போனால், அந்த உருவத்தின் மீதான நம்பிக்கை குறையும் அதே நேரத்தில் அந்த உருவத்தை மையப்படுத்தும் மார்க்கத்தின் மீதும் நம்பிக்கை போய்விடும். ஆனால் இந்து தர்மத்தில் ஒரு உருவ தெய்வத்தின் மீது நம்பிக்கை போனால் கூட அவன் இன்னொரு உருவ வழிபாட்டை தேர்ந்தெடுத்துக் கொள்வான். அவனது நம்பிக்கை உருவத்தின் மீது தான் இல்லாமல் போகுமே ஒழிய அவன் பின்பற்றும் தர்மத்தின் மீது நம்பிக்கை போகாது. இதுவே இந்து தர்மத்தின் சூட்சுமம். அதாவது ஒரு மனிதன் எந்த உருவத்தின் வாயிலாக‌ வழிபட்டாலும் தத்துவமார்க்கமான தர்மத்தை கடைபிடிக்கும் வாழ்க்கைக்குள் வந்து விட வேண்டும் என்பதேயன்றி உருவ வழிபாடு மட்டும் முக்கிய நோக்கமல்ல.


ஆதலால் மீண்டும் சொல்கிறேன், இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.





Sunday, February 8, 2009

வீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்?


துளசி மாடம்:


தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது நமக்கு தெரியும். ஆனால் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலைத்தையே சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனாலேயே ஒவ்வொரு வீடுகளிலும் ஆக்ஸிஜனை அதிகம் வெளியிடும் துளசியை நட்டு வளர்த்து அதிகாலை வேளையில் அதைச்சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர்.


அதிகாலை மூன்று ம‌ணிமுத‌ல் ஐந்து ம‌ணிவ‌ரை பிர‌ம்ம‌ முஹூர்த்த‌ம் என்று சொல்லுவார்க‌ள். அதாவ‌து இந்த‌ வேளையில் தான் இய‌ற்கையின் அத்த‌னை அம்ச‌ங்க‌ளும் மிக‌வும் புதிதாதக‌ச் சுத்திக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌தைப் போல‌ இருக்கும். அதாவ‌து இந்த‌ நேர‌த்தை தான் ஓசோன் அதிக‌மிருக்கும் நேர‌ம் என்று இன்றைய அறிவிய‌லாள‌ர்க‌ள் கூறிகிறார்க‌ள். அதாவ‌து இய‌ற்கைய‌க‌வே காற்றில் ஆக்ஸிஜ‌ன் அதிக‌மாக‌ இருக்கும் நேர‌மான‌ அதிகாலை வேளையில் துள‌சிச் செடியைச் சுற்றி வ‌ந்தால் அதிக‌ சுத்த‌மான‌ ஆக்ஸிஜ‌னை சுவாசிக்க‌லாம் என்ப‌து இத‌ன் சாராம்ச‌ம். அதாவ‌து எல்லா ஜீவ‌ராசிக‌ளும் சுத்த‌மான‌ ஆக்ஸிஜ‌னை சுவாசித்து ஆரோக்கிய‌மாக‌ வாழ‌ வேண்டும் என்ற‌ தாத்ப‌ரிய‌த்திலேயே இந்த‌ ச‌ம்பிர‌தாய‌ம் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

தற்போது தாஜ்மஹாலைக் காப்பாற்ற அதைச்சுற்றி லட்சக்கணக்கில் துளசிச் செடியை நட்டு வைக்கப் போகிறார்கள். ஏனெனில் தாஜ்மஹாலைச் சுற்றி காற்று மாசுபடுவது தடுக்கப்படுவதால் அந்த பழம்பெருமை வாய்ந்த கட்டடம் வேகமாக அழிவதிலிருந்து காப்பாற்றப்படும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஒரு கல்லால் கட்டிய கட்டிடத்தையே துளசிச் செடி காக்குமென்றால் இரத்தமும் சதையும் கொண்ட மனிதனையும் காக்கும் என்பது உண்மைதானே. இந்துக்கள் வழிபடும் துளசியை தாஜ்மஹால் முன்பு நடக்கூடாது என்று எந்த முஸ்லீமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனேனில் இது அறிவியல் ரீதியான விளக்கத்துடன் நட்டு வைக்கப்படப்போகிறது. இந்து தர்மத்தில் இது நல்லது என்று சொல்லப்பட்டிருக்கிறது அதனால் நட்டுவைக்கிறோம் என்று சொல்லியிருந்தால் பெரிய பிரளயமே வந்திருக்கும் என்பது வேற விஷயம்.அது மட்டும் அல்ல, ம‌ருத்துவ‌த்திலும் துள‌சிக்கு மிக‌ முக்கிய‌மான‌ இட‌ம் உண்டு. துள‌சி இல்லாத‌ ஆயுர்வேத‌ ம‌ற்றும் சித்த‌ ம‌ருத்துவ‌மே கிடையாது. இப்ப‌டியான‌ அற்புத‌ச் செடியை க‌ண்ட‌றிந்து அத‌ன் ப‌ல‌னையும் அனைத்து ம‌க்க‌ளும் ஆழ‌மாக‌ அனுப‌விக்க‌ வேண்டும் என்ப‌ற்க்காக‌ அதை ஒரு வ‌ழிபாட்டுச் ச‌ம்பிர‌தாய‌மாக‌வே ந‌ம் இந்து த‌ர்ம‌த்தில் வைத்துள்ளார்க‌ள். வேறு எந்த‌ ம‌த‌த்திலும் இவ்வாறு செடி கொடிக‌ளை கூட‌ பூஜிக்கும் உண்ண‌த‌ப்ப‌ழ‌க்க‌ம் கிடையாது என்ப‌தை எல்லோரும் யோசிக்க‌ வேண்டும்.


எந்தப் பெருமாள் கொயிலுக்கு போனாலும் ம‌ன நலனுக்கு பெருமாளைக் கும்பிட்டால் உட‌ல் ந‌ல‌த்திற்கு துள‌சி தீர்த்த‌த்தையும் பிர‌சாத‌மாக‌ வாயில் போட்டு சுவைக்க‌ துள‌சியும் கையில் கொடுப்ப‌துண்டு. ஆக‌ ம‌னோவிய‌லும் அறிவிய‌லும் ஒருங்கே சேர்ந்து தான் இந்து த‌ர்ம‌ம் ந‌ம் எல்லோரையும் வ‌ழி நட‌த்திவ‌ருகிற‌து என்ப‌தை ந‌ன்றாக‌ப் புரிந்து கொள்ள‌ வேண்டும். பெருமாள் கோவிலுக்கு வார‌ம் ஒரு முறை போங்கள். துளசிப்பிரசாதம் சாப்பிடாமல் வராதீர்கள் சரியா!.


த‌ற்கால‌த்தில் வீட்டில் ம‌ணிபிளான்ட் வைத்தால் ப‌ண‌ம் வ‌ரும் என்று ந‌ம்புகிறார்க‌ள், காசு குடுத்து ம‌ணிபிளான்ட் செடி வாங்கி வீட்டில் வைத்து ப‌ண‌ம் கூரையைப்பிய்த்துக் கொண்டு கொட்டாதா என்று வான‌த்தைப் பார்த்துக் கொண்டு இருப்பார்க‌ள். ஆனால் துள‌சி மாட‌ம் வைத்து அதை வ‌ண‌ங்குவ‌து ப‌த்தாம் ப‌ச‌லித்த‌னம், மூட‌ந‌ம்பிக்கை என்று அதை ம‌திக்க‌ மாட்டார்க‌ள். இனி ரோஜாச்செடி வைக்க‌ ஆசைப்ப‌டும் முன் முத‌லில் தொட்டியில் ஒரு துள‌சிச் செடி வ‌ள‌ர்க்க‌ ஆசைப்ப‌டுங்க‌ள். உங்க‌ள் ந‌ல‌னுக்கும் ந‌ல்ல‌து சுற்றுச்சூழ‌ல் மாசு த‌டுக்க‌ப்ப‌டுவ‌தால் ச‌மூக‌த்திற்ற்கும் ந‌ல்ல‌து. என்ன‌ செய்வீர்க‌ளா?










Saturday, January 10, 2009

இந்து தர்மத்தில் எல்லாமே மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாளர்கள் தொடர்ந்து விஷம் பரப்பிவருகிறார்களே அது உண்மையா?


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் சேர்ந்ததுதானே ஒழிய அது வெறும் பொய்க்கதைகளோ அல்லது மூட நம்பிக்கைகளோ கிடையாது. இந்து தர்மத்தில் பல கதைகளும் புராணங்களும் உள்ளன. பல விந்தையான நிகழ்வுகள் சில நம்பமுடியத சம்பவங்கள் என்று பலவகைக் கதைகளும் சொல்லப்படுகின்றன. மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்களும் இருக்கும். ஆனால் இவை யாவும் சமூக‌த்தையும் மக்களையும் ஏமாற்றும் நோக்கத்திற்காக அல்ல. மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்கள் மூலமாக அல்லது சம்பவங்கள் மூலமாக மக்கள் மனதில் தர்மத்தின் சாரத்தை அழுத்தமாகப் பதியச்செய்யவே கையாளப்பட்டன. ஆனால் அவ்வாறு கையாளப்பட்ட எவையும் இந்த உலக நிகழ்வுகளிலிருந்தோ அல்லது பிரபஞ்ச விந்தைகளிலிருந்தோ வேறுபட்டு நிற்பதில்லை என்பது அவ்வாறு சொல்லப்படும் புராணங்களையும் இதிகாசங்களையும் ஆழ்ந்து படித்துணர்ந்தால் நன்றாகப்புரியும்.


உதாரணமாக இராமாயணத்தில் இரு வேறு மனித ரூபங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று முழுமையான மனிதனாக விளங்கும் உருவம் மற்றொன்று குரங்கும் மனிதனும் கலந்தாற்போன்ற ஒரு உருவம். இவற்றை இந்த கால மனித வாழ்க்கையிலிருந்து பார்க்கும் போது அது மிகைப்படுத்தப்பட்ட கதையாக, ஜோடனை கதாபாத்திரங்களாகத் தான் தெரியும். ஆனால் மனித குல பரிணாம வளர்ச்சி பற்றிய அறிவியளாலர்களின் கூற்றைப்படித்துப் பார்த்தால் இந்த கதாபாத்திரத்தின் கூற்றுக்கள் பொய் இல்லை என்று நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்.
அறிவியளாலர்களின் கூற்றுப்படி பார்த்தால் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் நியாண்டர்தால் மனிதர்கள் என்று ஒரு மனித இனம் இருந்ததாகவும், அத்தகைய மனிதர்கள் மிகவும் பலசாலிகளாக இருந்தனர் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் சாய்ந்த நெற்றியுடன் குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட ரூபத்தில் இருந்ததாக கூறுகிறார்கள். அவர்களின் உருவம் தற்கால மனிதனை விட சுமார் நான்கு மடங்கு பெரியதாக இருந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. பாறைப்படிவங்களில் கிடைக்கப்பெற்ற ஒரு காலடித்தடத்தை ஒரு பெண்ணின் காலடித்தடத்தடம் என்று கண்டுனர்ந்து அதை தற்கால பெண்ணின் காலடித்தடத்தோடு ஒப்பிட்டு பார்த்ததில், நவீன காலப்பெண்ணின் காலடித்தடத்தைவிட‌ அது மூன்று மடங்கு பெரிதாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அத்தகைய மனிதர்களின் பலத்தை நிகழ்கால மனிதர்களோடு ஒப்பிட்டால் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஷ்வாஸ்னெகர் அவர்களின் ஒரு குழந்தைக்கு சமம் என்றும் கூறுகிறார்கள். இப்போது நம் இதிகாசத்துக்கு வருவோம்.


இராமாயணத்தில் கூறப்பட்ட வாணரப்படைகள் இந்த மனிதர்களை ஒத்ததாகவே அமைந்துள்ளனர். அனுமாரும் வாலியும் மற்றும் சுக்ரீவனும் மிகபலசாலிகளாக சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காண‌லாம். மலையை கைகளால் கொண்டுவரும் அனுமாரும்,பாறைகளை தூக்கிப்போட்டு வான‌ர சேனைகள் பாலம் கட்டுவதும், மரங்களை பெயர்த்து சண்டைபோடுவதும் எந்த விதத்திலும் மிகப்படுத்தப்பட்டதாக கூறமுடியாது. இப்படி வானர மனிதர்கள் வாழ்ந்திருக்க சாத்தியமே இல்லை இது முழுமையான மூடநம்பிக்கை என்று சொல்வார்களேயானால், அத்தகைய பகுத்தறிவாளர்கள், மேற்சொன்ன அறிவியளாலர்களின் பரினாம வளர்ச்சி பற்றிய கூற்றையும் பொய்தான் என்று தைரியமாக வாதாடுவார்களா?



பகுத்தறிவாளர்கள் பிறப்பதற்கு முன் வாழ்ந்த மனிதர்களை அவர்கள் பார்த்ததில்லை. அவர்கள் காலத்திற்குப் பின் வரப்போகும் மனிதகுலம் பற்றி அவர்கள் அறியப்போவது இல்லை. ஆனால் இவர்கள் எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்று சொல்வார்களேயானால் இவர்களின் அறிவின் ஆழம் என்ன என்பதை நீங்கள் தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.



கதாபாத்திரங்களின் தன்மையை நம்பாமல் போனாலும், இப்படி ஒரு கதை நடக்கவே இல்லை என்று வாதிட்டாலும் இவை மனிதர்களுக்கு சொல்ல வந்த தர்மம் என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இராமாயணத்தில் சொல்லப்பட்ட தர்மம் என்ன? மாற்றான் மனைவி மீது ஆசைப்படாதே என்பது ராமன் மூலமாகவும், என்ன துன்பம் வந்தாலும் கற்பை கைவிடமாட்டேன் என்ற தர்மத்தை சீதையின் மூலமாகவும் வலியுறுத்தினார்கள். மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்கள் மூலம் இந்த தர்மத்தை போதிப்பதும், அந்த கதாபாத்திரங்கள் மனதில் ஆழப்பதிந்து விடுவதன் மூலம் தர்மமும் பதியப்படுகிறது என்ற மனோவியல் தத்துவப்படியே இத்தகைய கதைகள் சொல்லப்படுகின்றன. எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்று சொல்லும் இந்த நாகரீக சமூகத்தில் இன்று நடப்பது என்ன? தினசரியில் தினசரி குறைந்தது நான்கு கொலைகள் பற்றிய செய்தி. யாவும் கள்ளத்தொடர்பு, மாற்றான் மனைவி மீது காமுற்றவனால் அல்லது கற்பு என்ற படியைத் தாண்டிய பெண்களால் நடக்கும் கொலைகள் என்பது பெருமளவு காணத்துவங்கியுள்ள சீரழிவு. ஆக இந்து தர்மத்தைப்பற்றி அனாவசியமாக விதன்டாவாதம் செய்வதை விட இந்த தர்மம் என்ன சொல்கிறது என்பதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் தானே ஒழிய மூடநம்பிக்கை அறவே கிடையாது. இந்து தர்மத்தின் சாரத்தை யார் அழிக்க முயற்சித்தாலும் அது நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டுவதற்குச் சமமாகும்.

அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பரந்து வருவது கூட ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஸ்பெஷல் ரிலேட்டிவிட்டி தியரியுடன் ஒத்துப்போடக்கூடியதே! அது பற்றி அடுத்த இடுக்கையில் பார்ப்போம்.

Thursday, January 1, 2009

தமிழ் வருடப்பிறப்பு எப்படி உண்டானது?









































































அம்பேத்கர் பிறந்தநாளை யாரும் கொண்ட்டாடுவதில்லை என்று, அம்பேத்கரை ஜாதி சங்க தலைவராக ஆக்கிவிட்டவர்கள் பகுத்தறிவு தாத்தாவிடம் புலம்பியதால் , ஜாதி ஓட்டு வங்கிக்காக ஒட்டு மொத்த இந்துக்களின் உணர்ச்சியையும் மதிக்காமல் தமிழ்ப்புத்தாண்டை சித்திரை ஒன்று அதாவது ஏப்ரல் பதினான்கிலிருந்து வேறு தேதியில் மாற்றிவிட்டார் பகுத்தறிவு தாத்தா. ஓட்டு வியாபாரம் தான் பகுத்தறிவு என்பதும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதும் தான் பகுத்தறிவு என்பதும் வெளிச்சமாகத் தெரிகிறது.

ஆனால் இதற்கு இவர்கள் சொல்லும் காரணம் வள்ளுவர் ஆண்டு என்பது. அதாவது வள்ளுவர் பிறந்த ஆண்டு முதல் தமிழ் ஆண்டு கணக்கிடப்படுகிறதாம். வள்ளுவரின் பர்த் சர்டிபிகேட் பார்த்துதான் இந்த பகுத்தறிவு வாதிகள் வள்ளுவர் ஆண்டைக் கணித்தார்களோ என்னமோ!

ஆனால் உண்மையில் 'ஜாதீய அடிப்படைக் காரணங்களுக்காகவே' ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பண்டைய தமிழ் விவசாயிகளால் உருவாக்கப்பட்டு, அறிவியல் ரீதியாகவும் கால நிலைப் பற்றிய கணிப்பாகவும் பயன்படுத்தப்பட்டு பாரம்பரியமாக கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்பட்டு வந்த தமிழ்ப் புத்தாண்டு தினத்தை ஒரு குறுகிய அரசியல் வியாபாரத்திற்காக ஒரு தனிமனிதன் தன் சுய நலத்திற்காக‌ மாற்றுவது சுத்த அயோக்கியத்தனம்.

இத்தகைய அயோக்கியத் திருடர்களுக்கு இந்துக்கள் காலத்திற்கும் ஓட்டு போடக்கூடாது. நம் சொந்த கலாச்சாரத்திற்கு ஆட்காட்டி விரலால் ஆப்பு வைத்துக்கொள்ளாதீர்கள். அதில் உறுதியாக இருங்கள். சொந்த நாட்டில் மத உரிமைக்காகப் பேசுவது மதவாதமாகாது என்பதை ஒவ்வொரு இந்துக்களும் புரிந்துகொள்ளுங்கள். இல்லையேல் நாளைய நம் தலைமுறைக்கு பாதுகாப்பு நம்மிடம் இல்லை.

பாரத் மாதாகீ ஜெய்! ஹிந்து தர்ம கீ ஜெய்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

Saturday, October 4, 2008

"கேயாஸ் தியரியும் இந்து தர்மமும்"


"கேயாஸ்" என்பது ஒரு கிரேக்க வார்த்தை.

'ஒழுங்கான ஒழுங்கற்ற தன்மை தான் கேயாஸ் என்பது. அதாவது ஒழுங்கற்றது போல் இருக்கும் ஒரு விஷயத்தில் ஒழுங்கைத் தேடும் இயல். உதாரணமாக வானிலை ஒருநாளைப் போல ஒரு நாள் இருப்பதில்லை. ஆனால் பருவ நிலை மாற்றங்கள் வருடம் முழுவதும் ஒரு சீராக குறிப்பிட்ட கால அளவுகளில் சொல்லி வைத்தாற்போல மாறி வருவதை நாம் காணமுடியும்.

இப்படியும் சொல்லலாம், ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத நிகழ்வுகள் ஒரே சீராக நிகழ்வது கேயாஸ் தியரி என சொல்லலாம். உதாரணமாக கச்சா எண்ணெய் இருக்கும் நாடுகளில் ஏதாவது பிரச்சனை என்றால் நமது ஊரில் காய்கறி விலை ஏறுவது போலதான். இந்த நிகழ்வு எப்படி நிகழ்கிறது. கச்சா எண்ணெய் நாடுகளில் எண்ணெய் விலை உயர்த்தப்பட்டாலோ அல்லது உற்ப்பத்திக்கு பாதிப்பு வந்தாலோ நமது நாடுகளில் எண்ணெய் தட்டுப்பாடு வந்து விடும். அதனால் லாரிகளின் விலை அதிகரித்து அதனால் காய்கறி விலை அதிகரித்து அதையும் வாங்காமல் போனால் வீட்டு அம்மனியிடம் திட்டு வாங்க நேர்கிறது. எங்கோ நடக்கும் ஒரு செயல் நம்மை ஒரு சீரில்லாத ஆனால் ஒரு சீரான தொடர்புகளின் மூலம் வந்தடைகிறதே இதை கேயாஸ் தியரி என்று சொல்லலாம்.


இப்படி ஒழுங்கற்ற நிகழ்வுகள் ஒழுங்கான ஒரு நிகழ்வை ஏற்படுத்துவதை வைத்து கமல்ஹாசன் "தசாவதாரம்" என்ற படம் எடுத்து அதை நீங்க‌ள் கண்டுகளித்திருப்பீர்கள். சரி அதற்கும் நமது இந்து தர்மத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை இப்போது பார்கலாமா!



இந்த‌ 'ஒழுங்கான ஒழுங்கற்ற ' என்ற‌ விதியை ந‌ம் இந்து த‌ர்ம‌த்திலே ப‌ல‌ ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளாக‌வே மிக‌ச்ச‌றியாக‌ புரிந்து வைத்திருப்ப‌தை இங்கே பார்க்க‌லாம். உதார‌ண‌மாக‌ ப‌ருவ நிலை மாற்ற‌த்தைப்ப‌ற்றி மேலே பார்த்தோம் அல்ல‌வா. அப்ப‌டிப்ப‌ட்ட ப‌‌ருவ‌ மாற்றத்தின் அதாவ‌து 'ஒழுங்கான ஒழுங்கற்ற 'த‌ன்மையை ந‌ன்றாக‌ க‌னித்து அதை வ‌ரிசைப்ப‌டுத்தி ஒவ்வொரு மாத‌த்திற்கும் பெய‌ர் வைத்து ஒழுங்கற்ற மாற்ற‌ங்க‌ளின் ஒழுங்கு த‌ன்மையை க‌ண்கானித்திருக்கிறார்க‌ள். சித்திரை, வைகாசி என‌ தொட‌ங்கி ப‌ங்குனி வ‌ரை ப‌ருவ‌ கால‌ங்க‌ளுக்கு பெய‌ரிட்டு 'ஒழுங்கான ஒழுங்கற்ற ' தன்மையை உண‌ர்ந்த்து உப‌யோகப்ப‌டுத்தி இருக்கிறார்க‌ள்.



மேலும், இவ்விசயம் மனிதர்களுக்குள்ளும் எப்படிப்பட்ட நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் நன்கு உணர்ந்து ' நீ பிற‌ருக்கு ந‌ன்மை செய்தால் உன‌க்கு யாரேனும் ந‌ன்மை செய்வார்க‌ள்' , ஊரார் பிள்ளையை ஊட்டி வ‌ள‌ர்த்தால் த‌ன் பிள்ளை தானே வ‌ள‌ரும் என்ப‌து போன்ற‌ ப‌ழமொழிக‌ள் இந்த‌ 'ஒழுங்கான ஒழுங்கற்ற ' த‌ன்மையின் போக்கை ந‌ன்கு புரிந்து கொண்டு அதை ந‌ல்ல‌ வ‌ழியில் உப‌யோக‌ப்ப‌டுத்த‌ இந்து த‌ர்ம‌த்தில் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ப‌ழ‌மொழிக‌ள் ஆகும்.

அதாவ‌து நாம் ஒருவ‌ருக்கு உத‌வினால் அந்த‌ உத‌வியின் விளைவு அதைப்பெற்றவரிடத்தில் ஒரு மகிழ்ச்சியான ந‌ல்ல‌ அலையைத் தோற்றுவித்து அந்த நபர் பிற‌ரிட‌மும் அதே அலையைத் தோற்றுவிப்பார். இது ஒரு தொட‌ர் நிக‌ழ்வாயின் அத‌ன் ப‌ல‌ன் வேறு யாரேனும் ஒருவ‌ர் மூல‌மாக‌ ந‌ம்மை வ‌ந்த‌டையும் என்ப‌து தான் 'கேயாஸ்'.

இது ம‌ட்டும் அல்லாம‌ல் ந‌ம‌து இந்து ச‌ம்பிர‌தாய‌த்தின் ப‌டி காக்காய்கு சோறு ப‌டைத்த‌ல், எறும்புக்காக‌ மாக்கோல‌ம் போடுத‌ல் போன்ற‌ ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளும் சார்புயிரிக‌ளின் வாழ்க்கைக்கும் ம‌னித‌ர்க‌ளின் வாழ்க்கைக்கும் உள்ள‌ ச‌ங்கிலித் தொட‌ர்பை ந‌ன்றாக‌ புரிந்து வைத்து உருவாக்கிய‌ ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளே.


"ப‌ல்லுயிர் வ‌ள‌ம் காப்போம்" என்று மேலை நாடுக‌ளும் ந‌ம‌து நாடும் அறிவிய‌ல் ரீதியான‌ பிர‌சார‌ங்க‌ளை அடுக்கி வைக்கின்ற‌ன‌. ஆனால் இந்து த‌ர்ம‌த்திலே இத‌ற்க்காக‌வே சொல்ல‌ப்ப‌டும் ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளை மூட‌ந‌ம்பிக்கை என்று தூற்றுகின்ற‌ன‌ர்.


மேலை நாட்டுக்கார‌ன் சுமார் முப்ப‌து வ‌ருட‌ம் முன்னாலே எடுத்துச் சொன்ன‌ "கேயாஸ் திய‌ரியை" க‌ட்டிக்கொண்டு அழுப‌வ‌ர்க‌ள் ந‌ம்நாட்டில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே சொல்லப்பட்டிருக்கும் ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளை புரிந்து கொள்வ‌தில் அக்கறை காட்டுவ‌தில்லை என்ப‌து ந‌கைப்புக்குறிய‌ வேத‌னை.


"கேயாஸ் திய‌ரி", "குவ‌ன்ட‌ம் திய‌ரி", "ரிலேட்டிவிட்டி திய‌ரி" இப்ப‌டி எதை எடுத்தாலும் அத‌ற்கு இந்து த‌ர்ம‌த்தில் உதார‌ண‌ம் காட்ட‌ முடுயும். அவைக‌ளைப் ப‌ற்றி அடுத்த‌ ப‌திப்பில் பார்ப்போம்.

Thursday, October 2, 2008

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?

சம்ஸ்கிருதத்தில் இதை 'சப்தபதி' என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு த‌னது பிரார்த்தனையைச் சொல்கிறான்!

"முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"
"இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்"
"மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்"
"நான்காவது அடியில்: சுகத்தையும் , செல்வத்தையும் அளிக்க வேண்டும்"
"ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"
"ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்"
"ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்"
என்று பிராப்திப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூக்ஷமமான மனோவியல் விசயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள். இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும் என்பது சாஸ்திரம். உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள். ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களை முன்னே போக விட்டுவிடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம். இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குளாக நடந்துவிடும் என்பது ஒரு சூக்ஷமமான விஷயம். இதை மிகவும் நுணுக்கமாக ஆரய்ந்து நம் இந்து தர்மத்தில் அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும். இந்து தர்மத்தில் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. பல நுணுக்கமான அறிவியல் மற்றும் மனோவியல் விஷயங்கள் நிறைந்தது இந்து தர்மம்.

இதை வாழ்ந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் முயற்சிப்போம்....

விவாஹம் என்றால் என்ன?


மனிதகுலத்தின் நாகரீகம் மனிதன் ஆண் பெண் உறவை திருமணம் என்ற சடங்கின் மூலம் முறைப்படுத்துதலில் துவங்கியது என்று சொல்லலாம். காடுகளில் வாழும் மிருகங்கள் போலவே மனிதன் விரும்பிய ஆண் விரும்பிய பெண்ணுடன் கூடுவதாகவே நடந்து வந்தது. மனிதனுக்கு எதையும் தனது என்று சொந்தம் கொண்டாடும் இயற்கையான குணம் காரணமாக உறவுகளையும் உறுதிப்படுத்தி பாதுகாக்க நினைத்தான். அதன் பொருட்டு உருவான சடங்கு திருமணம்.

'விவாஹம்' என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு "சிறப்பாக வாழ்வது" என்று பொருள். தர்மங்களை தம்பதிகள் ஒன்றாக கடைபிடித்து வாழ்வது என்றும் பொருள்.

பகவான் ராம‌பிரானுக்கு சீதையை திருமணம் செய்து கொடுக்கிற போது ஜனகர் "என் மகளான சீதை இனி உன்னோடு சேர்ந்து தர்மத்தை கடைபிடிப்பாள்" என்று கூறுகிறார். அவ்வாறே விவாஹம் செய்யும் தம்பதிகள் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் விவாஹத்தின் தாத்பரியம்.