Tuesday, January 11, 2011

புராணங்கள் பொய்யல்ல!


புராணங்கள் பொய் என்று ஆங்கிலேயர்கள் சொல்லி நம்முடைய வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள். அதிலே தங்களுக்குப் பிடித்த பிரித்தாளும் கொள்கைக்கு சாதகமான துவேஷ தத்துவங்களையும் சேர்த்து விட்டார்கள். புராணம் பொய்யென்று இவர்கள் கூறினார்கள் என்றால் அதுபற்றி இவர்கள் எழுதிய வரலாற்றிலும் பொய் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு உள்ளதை உள்ளபடி எழுதுவதற்கு தற்போது முயற்சிகள் நடந்து வருகிறது.

புராணத்தை நம்ப முடியாதது என்று கூறி அதற்குக் காரணம் அதிலே இப்போது நாம் பார்க்கிற எதார்த்த நிலவரங்களுக்கு வேறான விஷயங்கள் இருக்கின்றன என்கிறார்கள். தேவர்கள் வந்தார்கள், போனார்கள், வரம் கொடுத்தார்கள் என்றால் அதெல்லாம் இந்த காலத்தில் நடக்காததால் அவற்றை பொய் என்று கூறிவிடுகிறார்கள். பெண்ணை கல்லாக்கினார்கள், கல்லை பெண்ணாக்கினார்கள், சூரியனை நிறுத்தி வைத்தார்களென்றெல்லாம் கூறுவது நம் சக்திக்கு உட்பட்டதில்லை என்பதால் அதெல்லாம் வெறும் புரட்டு என்கிறார்கள்.


தற்காலத்தில் நடக்க முடியாது என்று எப்படி சொல்லலாம்? வேத மந்திர சச்க்தியும் உயர்ந்த தபஸும் யோகாநுஷ்டானமும் பூர்வத்தில் நிறைய இருந்தன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் பழமையான புத்தகங்கள் பலவற்றில் இருக்கின்றன. அவைகள் இருந்தவரை தேவசக்திகளெல்லாம் இந்த உலகத்தினராலேயே சுலபமாக கிரக்கிக்கும் படி இருந்திருக்கின்றன. நம்மால் அது ஆகவில்லை என்பதால் பழமை பொய்யென்று ஆகிவிடாது.

 ஆங்கிலப் படிப்பு படித்து விட்டதாலேயே அறிவியலால் நிரூபிக்க முடியாததெல்லாம் புரளியென்று கூறுவது சரியான அனுகுமுறை ஆகாது. இப்போதும் கூட பல இடங்களில் புரானங்களில் கூறப்படுவது போன்ற பத்து பன்னிரண்டு அடி நீளமுள்ள மனித எலும்புக்கூடுகள் கிடைத்துக்கொண்டு தான் இருக்கின்றன. இதைப் பார்த்தால் பனைமர தென்னை மர உயரமுள்ள ராக்ஷஸர்கள், சிங்கம் மாதிரியான உடம்பும், .யானை மாதிரியான தும்பிக்கையும் கொண்ட யாளி போன்ற மிருகங்கள் முற்காலத்தில் இருந்திருக்ககூடும் என்பது நம்பக்கூடியதாகவே இருக்கிறது.





கால் எலும்பு மட்டுமே பதினாறு அடி நீளமுள்ள ஒரு மனிதனின் எலும்புக்கூடு, யானையைப் போல பத்து மடங்குள்ள ஒரு மிருகத்தின் எலும்புக்கூடு முதலானவைகளை ஐஸ்பெர்க்கில் ஆர்ட்டிக் பிரதேசத்தில் பனிக்கட்டிக்கு உள்ளிருந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை தொல்லியல் துறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று வியக்கிறார்கள், கூத்தாடுகிறர்கள். தொல்லியலோடு புவியிலையைம் சேர்த்து கணக்கிட்டு இவை இத்தனை லட்சம் வருஷத்திற்கு முன் இருந்தவை என்கிறார்கள். இதோடு புராணவியலையும் சேர்த்தால் நம்முடைய பழைய கதைகள் நிஜம் தான் என்றாகிவிடும்.




பூந்தமல்லி, டிச. 15-
குன்றத்தூரில் சிங்கம் முகம் போல பிறந்த பெண் குழந்தை
குழந்தை முகம் சிங்கம் போலவும், பற்கள் பெரியதாகவும், ஆக்ரோஷமாக காணப்பட்டது.

இந்து தர்மத்தில் கதை மூலமாக தத்துவம் போதிக்கப்பட்டது. அதற்காக கதையைப் பொய்யென்று கூற முடியாது. இந்தக்காலங்களில் கூட செய்தித்தாள்களில் இரண்டு தலையும் கொண்டகுழந்தை, நாலு கையுமாக பிறந்த குழந்தை என்றெல்லாம் படிக்கிறோம். மனித இனத்திலும் சேராமல் மிருக இனத்திலும் சேராமல் நடுவாந்திரமாக ஒரு விசித்திரக் குழந்தை பிறந்தது என்று படிக்கிறோம். இயற்கையும் சில நேரங்களில் மாறுபட்டு காட்சியளிக்கலாம் என்பது பல நேரங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் Freak என்பார்கள். ஆதலால் புராணங்களில் கூறப்பட்டிருப்பதைப் போல பல விசித்திரமான மனித தோற்றங்கள் வாழ்ந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

இது சும்மா!




புராணக்கதைகளில் கற்பனைகளும் இருக்கலாம். பிற்காலத்தில் சிலர் இடைச்செருகல்களைச் செய்திருக்கலாம். ஆனால் தற்காலத்தில் இவற்றைப் பிரித்து பார்க்க இயலாததால், அக்கதைகள் சொல்லவரும் கருத்துக்களை உள்வாங்கி அவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதே நமது கடமையாகும்.

எல்லாவற்றிர்கும் மேல், ஆராய்ச்சி, கீராய்ச்சி என்று சொல்லிவிட்டால் உடனே நாம் அப்படியே நம்பிவிடுவது என்பது தான் எல்லாவற்றையும் விடப் பெரிய மூடநம்பிக்கை. இன்றைய ஆராச்சிகளிலும் தவறுகளும், பொய்களும் கலந்திருக்கவே செய்கின்றன. எனவே கற்பனை என்று நினைத்தாலும் புராணக்கதைகள் மனதில் நன்மையை விதைத்து தீமையை விலக்கி இறைவனின் பால் நம்பிக்கை உண்டாகச் செய்வதால் புராணக்கதைகளின் நோக்கம் என்னவோ பூர்த்தியாகிவிடுகிறது.


- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.


.

3 comments:

jagadeesh said...

New information,thanks

hayyram said...

thanks and welcome jagadeesh

Jayachandran said...

நண்பா இன்றைய அறிவியல் மனிதன் வந்தே 200000 வருடங்கள் தான் ஆகிறது என்கிறது, ஆனால் கதை அப்படியல்ல 200000 வருடங்களுக்கு மட்டும் தான் அவர்களிடம் ஆதாரம்(?) உள்ளது....

கண்ணால் கண்டவரை தான் அறிவியல், கண்ணால் காண முடியாதது ஆன்மிகம்.........