Thursday, April 28, 2011

நல்லெண்ணங்களே உயர்வுக்கு வழி!




ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையின் கடைசி கட்டத்தை நெருங்கும் போது அந்த கடைசி நிமிடங்கள் எப்படி இருக்கும்? அந்த வினாடியில் நாம் என்ன நினைத்துக் கொண்டிருப்போம் என்று தோன்றும். 


ஒரு மனிதனின் கடைசி எண்ணமானது உயிர் விடும் மனிதனின் குணத்தைப் பொருத்தது. ஆன்மீகப் பயிற்சியிலேயே சிந்தனை செய்து கொண்டிருந்தவர் மரணமுறும் போது தெய்வீக எண்ணங்களாகத் தோன்றும். சிற்றின்பப் பிரியர்களுக்குக் கடைசி நேரத்திலும் சிற்றின்பம் பற்றிய எண்ணமே தோன்றும். 


கடைசி எண்ணம் என்பது திடீரென்று வந்து விடுவதில்லை. வாழ்நாளெல்லாம் எந்தத் தன்மையை ஒருவர் உருவாக்கிக் கொண்டாரோ அதர்கு நிகரான எண்ணமே தான் கடைசியிலும் தோன்றும்.


இறைநிலையடைய வேண்டும் என்று ஆசைப்படுபவர், வாழ்நாளெல்லாம் அதே முயற்சி பயிற்சியில் இருந்தால் தான் கடைசி எண்ணமும் அதே போன்று ஏற்பட்டு, அவரது வாழ்நாளின்பின் அவருக்கு இறைநிலை வாய்க்கும்.


அப்படியின்றி தவறான முறையில் வாழும் ஒருவருக்குக் கடைசி நிமிடங்களில் கீழான எண்ணமே தோன்றி அவரது ஆன்மாவானது அத்தகு தன்மை கொண்ட வாழ்வோரையே பற்றிக் கொண்டு தன் எண்ணத்தையும்
ஆசையையும் அவர் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும். அதன் தொடர்ச்சியாகவே அடுத்த பிறவிகளிலும் கீழான மனிதர்கள் கூட்டத்திலே பிறக்க நேரிடும். 


எனவே எல்லா காலங்களிலும் நற்சிந்தனை கொண்டிருப்பது கடைசி நிமிடங்களின் எண்ணங்களை நல்லெண்ணங்களாக தோன்ற உதவுவது மட்டுமின்றி அடுத்தொரு பிறவியிருப்பினும் அது நல்ல எண்ணங்களும், நல்ல சிந்தனை உள்ளவர்களின் கூட்டத்தோடு பிறந்து உயர வழிவகுக்கும்.

- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி


.

4 comments:

Mahan.Thamesh said...

நல்ல கருத்துக்கள் பகிர்தமைக்கு நன்றிகள்

hayyram said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Mahan. Thamesh.

அகோரி said...

அருமையான பதிவு

அகோரி said...

அருமையான பதிவு