Tuesday, August 2, 2011

ஒளவைப்பாட்டியின் அருந்தமிழ் கேளீர் - 5






அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு




குதித்துக் கூத்தாடி தாகம் தீர்த்து விளையாடிப் பசியாறிய குளத்தில் நீர் தீர்ந்து போனால் உடனே அந்தக் குளத்தை விட்டு நீங்கி வேறிடம் செல்லும் நீர்ப்பறவை போல, கூடிப்பேசி சிரித்து மகிழ்ந்து விளையாடிய உற்ற உறவினரை வறுமை வந்த போது நீங்குபவர் உறவினரே ஆகமாட்டார்கள். நீர் தீர்ந்த போதும் குளத்தில் அடியில் நீங்காமல் உள்ள கொட்டியும், அல்லியும் நெய்தல் செடிகளைப் போல நீங்காமல் உறவுக்கு உற்ற துணையாக இருப்பவர் யாரோ அவரே உறவினர்கள் ஆவார்கள்.

- தமிழ் பாட்டி ஒளவையார்






.

No comments: