Showing posts with label அம்பேத்கார். Show all posts
Showing posts with label அம்பேத்கார். Show all posts

Wednesday, April 30, 2014

அம்பேத்காரை தோற்கடித்த தலித்துகள்!

- ஆனந்த் கணேஷ்


பௌத்தத்தால் தீண்டத்தகாதவராக ஆக்கப்பட்ட சுரண்டப்பட்ட ஜாதிகளை, தீண்டத்தகுந்த சமமாக மதிக்கத்தகுந்த ஜாதிகளாக மாற்ற உழைத்தனர் ஆதி சங்கரரும், அவருக்குப் பின்வந்த ராமானுஜரும்.

அவர்கள் நமக்கு வழிகாட்டும்போது கிறுத்துவ சர்ச்சின் வரையறைப்படி ஏன் நடக்க வேண்டும் ?

கிறுத்துவப் பாதிரிமார்களால் பயன்படுத்தப்பட்டு ஆங்கில அரசாங்கத்தால் பரப்பப்பட்ட தலித் எனும் நெகட்டிவான வார்த்தையை ஒதுக்குவது ஹரிஜனங்களின் நன்மைக்கு செய்ய வேண்டிய முதல் படியேறுதல்.

அந்த வார்த்தைக்குப் பதிலாக எம்பெருமான் ராமானுஜர் தந்த "திருக்குலத்தார்" என்கிற பொருத்தமான மதிப்புமிக்க பதத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இது பழகும்வரை தெய்வத்தின் குழந்தைகளாகக் கருதி வணங்கப்பட வேண்டியவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் அந்தஸ்தும் சம உரிமையும் தரப்பட வேண்டியவர்கள் என்கிற பொருளில் காந்தி ஜி தந்த ஹரிஜனர் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

ஆனால், இந்த மதிப்புத் தரும் வார்த்தைகளை ஹரிஜனங்கள் பயன்படுத்தவிடாமல் கிறுத்துவ ஆங்கிலேயர்களின் வழியிலேயே செயல்பட்டார் அம்பேத்கார்.

அவர் தலித் என்கிற வார்த்தையைப் பிரபலமாக்கினார். ஆனால், நேருவின் அரசில் பதவியில் இருந்தபோது உருவான ஒரு படைப்பிரிவுக்கு தலித் என்கிற பொதுப்பெயர் வேண்டும் என்று அவர் சொல்லவில்லை.

தனது ஜாதிப் பெயரான மகர் என்கிற பெயர்தான் வைக்கச் சொன்னார். இன்றும் இந்தியாவில் ஜாதிப் பெயரில் ஒரு படைப்பிரிவு இருக்கிறது என்றால் அது இந்த மகர் படைப்பிரிவு மட்டுமே.

எப்படி இனவெறியரான ஈவேரா பற்றிய உண்மைகளை பிசி, ஓபிசி, எம்பிசி ஜாதிக்காரர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமோ, அதைவிட அதிக அவசியம் அம்பேத்காரைப் பற்றித் தற்கால ஹரிஜனங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதிலும் இருக்கிறது.

அம்பேத்கார் என்பவர் சுயநலத்தின் காரணமாக ஹரிஜனங்களுக்குச் செய்த துரோகத்தை அவர்களுக்குத் தெரிவிப்பது அவசியமான ஒன்று.

இனவெறியரான ஈவேராவால் யாரும் பெரிதாகக் கொல்லப்படவில்லை. ஆனால், இனவாதியான அம்பேத்காரால் ஆயிரக்கணக்கான ஹரிஜனங்கள் கொல்லப்பட்டார்கள்.

கடைசிவரை அந்தக் கொலைகளை அம்பேத்கார் கண்டித்ததாகத் தெரியவில்லை.

ஏனெனில், அம்பேத்காரின் சுயநலப்பார்வையில் அவர்கள் அவருடைய உயர்ந்த சாதியினரான மகர்கள் இல்லை. கேவலம் ஹிந்து நாமதாரி ஜாதிக்காரர்கள்.

இந்த அம்பேத்கார் பற்றி அந்தக் காலத்து ஹரிஜனங்கள் தெளிவாகவே அறிந்து இருந்தார்கள். எந்தத் தேர்தலில் முஸ்லீம் லீகோடு சேர்ந்துகொண்டு வெற்றிபெற அம்பேத்கார் ஆயிரக்கணக்கான ஹரிஜனங்களின் கொலைக்குக் காரணமானாரோ, அந்தத் தேர்தலில், ஹரிஜனங்கள் மெஜாரிட்டியாக உள்ள தொகுதியில், அம்பேத்காரை ஹரிஜனங்கள் மிக மோசமாகத் தோற்கடித்தார்கள்.

அவருக்கு டெப்பாஸிட் கூட கிடைக்கவில்லை.

எனவே, அம்பேத்கார் பற்றிப் பேசுவது ஹரிஜனங்களின் மனத்தை பாதிக்கும் வருந்தச் செய்யும் என்கிற ஜல்லி வேண்டாம்.

இந்தக் காலத்தில் தமிழகத்தில் பறையர் ஜாதிக்காரர்கள் அம்பேத்கார்மேல் மிகுந்த பக்தியுடன் இருக்கிறார்கள். திருமாவளவன் வழியாக அம்பேத்காரின் இனவெறி திணிக்கப்படுவதாலும், அந்த இனவெறி அடிப்படையில் அவர்கள் தங்களை ஷத்திரிய மற்றும் பிராமணர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட நாகா இனத்தவராக கருதுவதாலும் அவர்கள் மட்டுமே அம்பேத்கார் பெயரை பக்தியுடன் உபயோகிக்கிறார்கள்.

தன்னுடைய மகர் ஜாதிக்குச் சலுகைகள் வேண்டும் என்று அம்பேத்கார் ஆங்கில அரசுக்கு எழுதும்போது மகாராட்டிரத்தில் மகர்களும், தமிழ்நாட்டில் பறையர்களும் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக, அவர்களது கொள்ளை கொலைகளுக்கு ஆதரவாக அவர்களது படைகளில் சேர்ந்தார்கள் என்பதை அம்பேத்கார் சுட்டுகிறார்.

அதன்மூலம் அப்போதே இந்த மகர் - பறையர் கூட்டு இனவெறிக்கு இந்திய எதிர்ப்பு வெறிக்கு அஸ்திவாரம் போட்டு இருக்கிறார்.


அதனாலும் பறையர் இனத்தவர்களிடம் மட்டுமே அதிக அளவில் அம்பேத்கார் பற்றிய மயக்கம் இருக்கிறது. மற்ற ஹரிஜன ஜாதிகளில் கிருத்துவத்துக்கு மதம் மாறிய பள்ளர்களிடமும் அந்த மயக்கம் சர்ச்சால் திணிக்கப்படுகிறது.

மற்றபடி ஹிந்து பள்ளர் இனத்தவர்களும், ஹிந்து சக்கிலியர் இனத்தவர்களும் அம்பேத்கார்மேல் அவ்வளவு பிடிப்புக் கொண்டவர்கள் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அம்பேத்கார் ஒரு மகாராஷ்டிரப் பறையர் இனத்தவர் என்பது போன்ற பார்வையே நிலவுகிறது.

தங்கள் ஜாதித் தலைவர்களுக்கு வரவேண்டிய மதிப்பும் மரியாதையும் கிடைக்காமல் போவதற்கு அம்பேத்கார் காரணம் என்று நினைக்கிறார்கள்.

இந்த நினைப்பு ஒன்றும் ஜாதிவெறியால் வந்தது இல்லை. வரலாற்று உண்மைகளில் இருந்து ஞானிகளான ஹரிஜனங்களுக்கு வந்த புரிதல் அது.

அம்பேத்கார் தன்னைத் தவிர மற்ற எந்த ஹரிஜனத் தலைவரையும் மதித்தது கிடையாது. அவர்களை மிக மோசமாக திட்டியும் வைதும் வந்தார்.

அதற்கு உதாரணம்,அம்பேத்காரால் இருப்பதிலேயே மிக மோசமாக திட்டப்பட்டவர் தமிழ்நாட்டு ஹரிஜனத் தலைவரான ராஜா அவர்கள்.

எனவே, பொதுவான சாதீயவெறியர்களின் புரிதலுக்கு மாறாக ஹரிஜனங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அம்பேத்கார்மேல் அவர்கள் விலகல் கொண்டு இருக்கிறார்கள்.

பள்ளர் ஜாதியைச் சேர்ந்த ஒருவர் "அம்பேத்கார் எங்கள் முதுகில் குத்திய துரோகி" என்று என்னிடம் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.

எனவே, அம்பேத்காரை அனைத்து ஹரிஜனங்களுக்கும் தலைவராக, நபியாகக் காட்டும் பொய் பிரச்சாரத்தை இங்கே செய்ய வேண்டியதில்லை.

அம்பேத்காரை முன்வைப்பதன் மூலம் பறையர் ஜாதி மற்ற ஹரிஜன ஜாதிகளைவிட "உயர்ந்த" ஜாதியாகக் காட்டப்படுகிறது.

எல்லா ஜாதியும் சமம் என்ற பேசுதல்கள் உண்மையானால் இங்ஙனம் பறையர் ஜாதீய வெறியைத் தூக்கிப்பிடிப்பது பொய்மை. அதன்மூலம் ஒரு புதிய இனவெறியை நுழைப்பது கயமை.

அந்தக் கயமையை ஒதுக்குவதும் ஒறுப்பதும் உண்மையானவரின் இயல்பு.

Saturday, October 13, 2012

வரலாற்றுப் பிழை!




தாழ்த்தப்பட்டவர்கள் என்று அரசியல்வாதிகளால் தொடர்ந்து கூறப்பட்டு வரும் மக்களில் பெரும்பாலானவர்கள் ஹிந்து மதத்திற்கு எதிரான விமர்சனத்தை வைப்பதையே அதற்கு தீர்வாக கருதுகிறார்கள். ஹிந்து மதத்தை விட்டு விலகி விடுவதால் தங்களின் நிலை உயர்ந்து விடும் என்றும் சிலர் நினைக்கின்றனர். குறிப்பாக தலித்துகளில் பெரும்பாலானவர்கள் இந்த விதமான மூளைச்சலைவைக்கு ஆளாகி இருக்கின்றனர். இதற்கு என்ன காரணம்?

திரு. அம்பேத்கார்

தலித்துகள் என்றால் மதம் மாறியே தீரவேண்டும் என்கிற டெம்ப்ளேட் உணர்ச்சியை அவர்கள் மனதில் ஆழப்பதிய வைத்த வரலாற்றுக் குற்றத்தை அம்பேத்கர் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அம்பேத்கரை பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டிருப்பவர்களின் பெரும்பாலானவர்கள்  இன்றைக்குச் கிறிஸ்தவத்தில் தான் இருக்கிறார்கள். அம்பேத்கர் இவ்வளவு பாடு பட்டு ஆய்வெல்லாம் செய்து 'இஸ்லாம் வேண்டாம் , கிறிஸ்தவம் வேண்டாம்' என்று அவற்றை விலக்கி புத்தமதம் மாறியது வீனாகிப் போனது. அவரை தலையில் தூக்கி வைத்து ஆடும் ஒருவரும் அவரை மதித்துப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. 

அம்பேத்கரை குலதெய்வம் போல் கொண்டாடுபவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பாதிரிமார்களின் மூலைச் சலவைக்கு ஆட்பட்டு மிஷனரிகளுக்கு விலை போய்விட்ட மக்களாகவே உள்ளனர். அல்லது விலை போய்விட்ட தங்களை, இந்திய பாரம்பரிய நீரோட்டத்தில் தொடர்ந்து தங்கள் இருப்பை வெளிப்படுத்த அம்பேத்கரை உபயோகப்படுத்தி வருகின்றனர். அம்பேத்கார் உயிருடன் இருந்திருந்தால் மிஷனரிகளுக்குவிலை போவதை விட தலித்துகளைப் பார்த்து நீங்கள் இந்து மதத்திலேயே இருந்துவிடுங்கள்என்று கூட கூறியிருப்பார். காரணம், ஜாதிகள் இல்லை என்று சொல்லி  ஊரை ஏமாற்றி ஜாதிக்கொரு சர்ச் கட்டி இருக்கிறார்கள் என்பது தான்.

வாழ்க்கை முறை , வாழிடம், சுற்றம் சூழம் வாழும் மனிதர்கள் என்று எதுவும் மாறாத நிலையில், தலித்துகள் தங்கள் வழிபாட்டு முறையையும் வழிபடும் தெய்வத்தையும் மாற்றினாலே அவர்களின் வாழ்க்கை நிலை மாறிவிடும் என்று ஒரு படித்த மேதை எப்படி கணக்கிட்டாரோ என்று தெரியவில்லை.

மதம் என்பதை ஏதோ ஒரு கம்பெனி வேலையை ராஜினாமா செய்து, இன்னொரு கம்பெனி வேலைக்குச் செல்வதைப் போல அம்பேத்கார் நினைத்து விட்டார் போலும். பொதுவாக ஒரு மனிதன் கடவுளைக்கும்பிடுவதும், ஒரு மதத்தில் இணைந்திருப்பதும் தனக்கு மரியாதை கிடைக்கும் என்பதற்காக அல்ல. ஏதோ ஒரு அபார சக்தியும், மகிமையும் நாம் இணைந்திருப்பதால் தன்னைக் காக்கிறது என்று எண்ணுவதாலேயே அதில் இருக்கிறான். மனிதர்கள் இறைவழிபாட்டால் பிரச்சனை தீரும் என்று நம்புவதாலேயே அதனைச் செய்கிறார்கள். 

அம்பேத்கார் வழியில் தலித்துக்கள் எல்லாருமே புத்தம் தழுவாமைக்கு முக்கியக் காரணம், புத்தரிடம் மகிமைக் கதைகள் இல்லை. புத்தர் ஒரு மனிதராகவே, போதனை மட்டுமே செய்யும் குருவாகவே அறியப்பட்டார். ஆனால் தலித்துக்கள், அம்பேத்காரே தனக்கு வேண்டாமென்று ஒதுக்கி விட்டுப் போன, 'கிறிஸ்தவத்திற்கும், மிஷனரிகளுக்கும்' விலை போவதற்கு முக்கியக் காரணம், ஏசுவிற்கு நிறைய மகிமைக் கதைகள் இருக்கின்றன. அவற்றைச் சொல்லிச் சொல்லி, 'ஏசுவைக் கும்பிட்டால் பிரச்சனைகள் தீர்ந்து விடுகின்றன' என்று ஆழப்பரப்பப்படுவதால். ஆனால் புத்தரிடம் அந்த ஈர்ப்பும் மகிமையும் கிடைக்கவில்லை. ஆக உணர்வுப்பூர்வமாக அனுகப்பட வேண்டிய விஷயத்தை அம்பேத்கார் அறிவுப்பூர்வமாக மட்டுமே அனுகி தலித் சகோதரர்கள் வெளிநாட்டு மிஷனரிகளிடம் கூட்டம் கூட்டமாக விலை போகும் வாய்ப்பை, தோற்றுவாயை ஏற்படுத்திவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

இதனால் தலித் சகோதரர்கள் இழந்தது தங்களது சொந்த பாரம்பரியம். மூதாதையர்களின் அற்புதமான இறைசார்ந்த கலாச்சார வாழ்க்கை முறை. மூலைச் சலவையற்ற சுதந்திரமான வாழ்க்கை தர்மம். தலை முறைத் தலைமுறையாக வந்த முன்னோர்களின் சங்கிலிப் பிணைப்பான உறவுத் தொடர்புகள், ஆழமான வாழ்வியல் தத்துவங்கள். 

கிறிஸ்தவத்துக்கோ இஸ்லாத்துக்கோ மாறினால் இவற்றையெல்லாம் நம் மக்கள் இழந்து விடக்கூடும் என்பதாலேயே இந்திய பாரம்பரியத்தின் வேரிலிருந்தே உருவான புத்தத்தின் பின்னால் போக நினைத்தார் அம்பேத்கார். ஆனால் அம்பேத்காரின் சொல்படி கேட்காமல் அவர் வழி நடக்காமல் 'கிறிஸ்தவத்துக்கும் , இஸ்லாத்துக்கும்' மாறும் தலித்துக்கள் தங்களுக்காகவே வாழ்நாள் முழுதும் போராடிய மதிப்பிற்குரிய அம்பேத்கரை மோசமாக அவமதிக்கின்றனர்.

நல்லவர்களோ கெட்டவர்களோ, தி க மற்றும் தி மு க போன்றவர்களால் அரசாங்க சட்டதிட்டங்களில் மாற்றம் ஏற்பட்டு தலித் மக்கள் இன்று சக மனிதர்களைப் போல் செல்வமும், செல்வாக்கும் பெற்று வாழ்கின்றனர். ஆனால் அப்படி அடிப்படை வாழ்க்கையை மாற்ற முயலாமல் ஒரு மதத்தை மாற்றுவதால் அவர்கள் வாழ்க்கை மாறி விடும் என்று மதிப்பிற்குரிய அம்பேத்கார் நினைத்தது, ஏதோ ஒரு வேகத்தில் எங்கோ சறுக்கியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இது ஒரு வரலாற்றுப் பிழை!

Wednesday, June 20, 2012

அம்பேத்கார் ஒரு தீர்க்க தரிசி - சில வரலாற்று நினைவுகள்!


Mr. B. R. Haran, Senior Journalist, Chennai
ஹிந்துஸ்தானம்! இந்த பெயரை உச்சரிப்பதையே செக்யூலரிசம் என்ற பெயரால் நிறுத்திவிட்டார்கள்.இங்கே ஹிந்துக்கள் பெரும்பான்மையினர். ஆனால் என்ன பயன்? பெரும்பாலும் திட்டமிட்டுத் தாக்கப்படுவது ஹிந்துக்களும் அவர்களது பாரம்பரியங்களும் நம்பிக்கைகளும் தான்! ஹிந்துக்களின் குடும்ப முறை திட்டமிட்டு அழிக்கப்பட்டும் வருகிறது. இவற்றை எல்லாம் செம்மையாகச் செய்வது ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் மீடியாக்கள். "அதான் தெரியுமே! இப்போ என்ன அதுக்கு" என்கிறீர்களா?

அது பற்றிய ஒரு செய்தியை மூத்த பத்திரிக்கையாளர் பி ஆர் ஹரன் கோவாவில் நடந்த பொதுக்கூட்டமொன்றில் பேசியிருக்கிறார்:

செய்தி: ஹிந்துஜாக்ருதி!


Ramnathi, Ponda (Goa) : Hindu unity that is going to result from the All India Hindu Convention is going to be an achievement to be proud of. To be able to do that Hindu organisations should put in spirited efforts. The Indian media, under the pretext of Secularism, repeatedly attacked the religious customs, traditions, Temples etc. which are the conservators of the Indian culture. The media has become eager to destroy the Hindu line of thinking from India. These views were expressed by Mr. B.R. Haran on the last day of the All India Hindu Convention. He was speaking on the topic of ‘Hindus and the Media’ !   

During the speech, he gave some examples to prove the point as followed :

1. Repeatedly defaming Shankaracharya, Dharmacharyas, Chiefs of sects, Saints, Mahants    along with Sabarimala, Amarnath Temple, Kanchi Kamkoti Peeth, Jagannath Puri etc.
2. Organising debate sessions during festivals-celebrations such as Deepavali, Durgapuja, Janmashtami, Kumbhamela, Ganesh immersion, Ayyappa Makar Jyoti etc.
3. Purposefully avoid topics such as ‘Abolishing Article 370 of the Constitution’, ‘Hanging Mahammad Afzal’, ‘Bringing Common Civil Code’, ‘Passing a law to ban religious conversions’ etc.
4. Glorifying the western culture

How should the code of conduct for the media be ?
1. Do not give entry to Political parties or the Politicians in the media
2. Ban reality shows.
3. Do not publish the investigative articles without proofs.
4. There should be a selection committee for advertises.
5. Those news items that disturb the communal harmony should be banned.
6. The educational organisations being run by the Hindu sects should include course in  journalism in the curriculum.


மேற்கண்ட செய்தியைப் படிக்கும்கால் சில விஷயங்களை யோசிக்கத் தோன்றுகிறது. ஹிந்துக்களின் நம்பிக்கைகளும் நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் தொடர்ந்து திறந்த முறையில் தடையில்லாமல் தாக்கப்பட்டு வருகிறது. இந்நாட்டின் தலைவர்களின் ஏகோபித்த ஆதரவு இல்லாமல் இந்த தாக்குதல்கள் தான் சாத்தியமாஇந்த தலைவர்கள் அனைவருமே ஹிந்துக்களின் மீதான தொடர்ந்த தாக்குதலை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

அதற்கு மூலக்காரணம்இந்நாடு சுதந்திரம் அடையும் காலகட்டத்திலேயே தெளிவான மக்கள் சார்ந்த உரிமைக் கொள்கைகள் வகுக்கப்படாமல் ஒரு குழம்பியக் குட்டையாகவே ஆட்சிக் கொள்கைகளை வரையறுத்து ஒரு மாபெரும் நாட்டின் பெரும்பான்மை மக்களை வாழ்வுரிமை இழந்து நிற்கும் அளவிற்கு இட்டுச் சென்றனர்  இந்த நாட்டை வழிநடத்துவதாக தம்மைக் காட்டிக் கொண்ட தலைவர்கள் என்றே தோன்றுகிறது.

பல்வேறு வரலாற்று விஷயங்கள் மூலம் இந்த தேசத்தின் பெரும்பான்மை மக்களான ஹிந்துக்களின் வாழ்க்கையும் அவர்தம் சூழ்நிலைகள் பற்றிய எண்ணங்களையும் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் முழுமனதுடன் புறக்கனித்திருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிந்து கொள்ளமுடிகிறது. உதாரணமாக காஷ்மீர் பண்டிட்டுக்கள் இன்றும் சொந்த நாட்டின் அகதிகளாக இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பரிக்கப்பட்ட உடமைகள் எதுவும் அவர்களுக்கு திருப்பி வழங்கப்படவில்லை. அவர்கள் உற்றார் உறவினர்களின் பறிக்கப்பட்ட உயிர்களுக்கு இது வரை ஞாயம் வழங்கப்படவில்லை. ஆனால் இவை எல்லாம் தெரிந்தே புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது வாழும் வரலாறு.

இப்படிப்பட்ட புறக்கனிப்பு இன்று தான் புதிதாக நடக்கிறாதா என்றால் இல்லை! ஹிந்துக்களையும் அவர்தம் உணர்வுகளையும் புறக்கனிப்பது என்பது காங்கிரஸின் வியாதி. ஆனால் காங்கிரஸின் இந்த வியாதியைத் தெரிந்து கொண்டு நாட்டுப் பிரிவினையின் போது தெளிவான அறிவுரை வழங்கியவர் திரு. அம்பேத்கார் அவர்கள்! 

சில வரலாற்று நினைவுகளைப் பார்ப்போம்:- 

1932 ஏப்ரல் 16ந் தேதி பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டனால்டு தலைமையில் அரசாங்கமே 'வகுப்பு வாரித் திட்டம்' ஒன்றை அறிவித்தது. அப்பொழுதே சிறுபான்மை ஜால்ராவையும் அதன் மூலமாக உருவாகியிருக்கும் பாரபட்சத்தையும் சுட்டிக்காட்டியவர் டாக்டர் அம்பேத்கார் :-

"இந்த வகுப்புவாரி திட்டம் முஸ்லிம் மற்றும் ஹிந்து சிறுபான்மையினரை பாரபட்சமில்லாமல் நடத்தத் தவறிவிட்டது.  இது ஹிந்து மாகானங்களில் வாழும் முஸ்லிம் சிறுபான்மையினர் தொகுதிக்கு சுய நிர்ணய உரிமை தருகிறது. ஆனால் அதே உரிமையை முஸ்லிம் மாகாணங்களில் வாழும் ஹிந்து சிறுபான்மையினருக்குத் தரவில்லை. ஹிந்து மாகானங்களில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினர் தாங்கள் விரும்பியபடி தொகுதி அமைத்துக் கொள்ள உரிமை உள்ளது. ஆனால் முஸ்லிம் மாகாணங்களில் தொகுதிகளை நிச்சயிக்க முஸ்லிம்களுகு மட்டுமே உரிமை உண்டு. ஹிந்து சிறுபான்மையினருக்கு இதில் உரிமையே கிடையாது. அதாவது இந்தத் திட்டம் ஹிந்து சிறுபான்மையினர் மீது முஸ்லிம் ஆட்சியைத் திணிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்."  என்று கண்டித்திருக்கிறார்.

-  தேசப்பிரிவினையின் சோக வரலாறு,  ஹொ வெ சேஷாத்ரி


பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கார்


"1940 வது வருடமே டாக்டர் அம்பேத்கார் பிரிவினைப் பற்றிய பெரும் எச்சரிக்கைகளைச் செய்திருந்தார். ஆனால் அதையெல்லாம் ஏற்காது கண் மூடித்தனமாக நாடு பிரிக்கப்படது. அதன் விளைவு - 10 லக்ஷம் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் கடத்தல், கற்பழிப்பு, கட்டாய மதமாற்றம் என எல்லாம் நடந்தன. ஹிந்து சமுதாயத்தின் அனுமதி, ஆலோசனைகளை பெறாது நடந்த கொடூரம் பாகப்பிரிவினை. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நேருவும் காங்கிரஸ் தலைவர்களும் இல்லை. முஸ்லீம் லீக் தலைவர்களும் இல்லை. அப்பாவி ஹிந்துக்கள் தான்.

பிரிவினையின் போது நடந்த கோர நிகழ்ச்சிகள் வெளி வராமல் தடுக்கப்பட்டன. கோடிக்கணக்கான ஹிந்துக்கள் வட இந்தியத் தெருக்களில் அகதிகளாகத் திரிந்தனர். 10 லக்ஷம் ஹிந்துக்களின் உயிர் பறிக்கப்பட்டது யாருடைய தவறால், 2 லக்ஷம் பெண்கள் கடத்தப்பட்டது யாருடைய தவறான கொள்கையால்? தங்கள் தவறை இவர்கள் ஒப்புக் கொண்டார்களா? ஹிந்துக்களிடம் மன்னிப்பு கேட்டார்களா? இல்லை.

எதுவும் நடக்காதது போல உடனே பிரிக்கப்பட்ட இந்தியாவின் பிரதம மந்திரியாக வெட்கமில்லாமல் எந்த வருத்தமும் இல்லாமல் தன்னை ஆக்கிக் கொண்டு, இந்த ஹிந்துப் படுகொலைகள் வெளியில் வராமல் பார்த்துக் கொண்டார் நேரு! அவரைப் பிரதமராக்கி அழகு பார்த்தார் காந்தி."

பிரிவினை நடந்த பிறகும், இந்தியா 'எல்லோருக்கும் சொந்தமான' நாடாகுமா? டாக்டர் அம்பேத்காரைத் தவிர யார் இதைப் பற்றி நினைத்துப் பார்த்தார்கள்? இந்தியா "ஹிந்து நாடு" என்று அறிவிக்க விரும்பினார். ஹிந்துக்கள் மாத்திரம் குடிமகன்களாகக் கொண்ட நாடு என்று அறிவிக்க அம்பேத்கார் விரும்பினார். பிரிவினையைத் தடுக்க இயலாத பட்சத்தில் மக்கள் பரிமாற்றமும் நடக்க வேண்டும் என்றார். பாகிஸ்தான் பகுதியில் உள்ள ஹிந்துக்கள் இந்தியாவிற்கும், இந்தியப் பகுதியில் உள்ள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும் மாற்றப்பட வேண்டும் என்று சொன்னார். அதை மூதறிஞர் ராஜாஜியும் ஆதரித்தார். ஆனால் அவ்வாறு நடக்க விடவில்லை நேருவும் காங்கிரஸ் தலைவர்களும்.

சரி, 'ஹிந்து நாடு' என்பதுதான் அறிவிக்கப்படவில்லை. எனினும், ஹிந்து கலாச்சாரம், பழம்பெரும் ஹிந்துபாரம்பர்யம் முதலானவற்றை முன் நிறுத்தி, பெரும்பான்மையான ஹிந்துக்களின் உரிமையை வலியுறுத்தியாவது அரசியல் சாசனம் இயற்றப்பட்டதா? இல்லையே!

இந்தியா "ஒரு மதச்சார்பற்ற நாடு" என்று அரசியல் சாசனம் கூறிவிட்டது. எல்லோருக்கும் சொந்தம். ரத்தம் சிந்தி கிடைத்த பிறகு கூட எல்லோருக்கும் சொந்தம்! ரத்தம் சிந்த வைத்தவர்களுக்கும் நாட்டை பிரித்தவர்களுக்கும் கூட சொந்தம்! இந்தக் கேவலம் எந்த நாட்டிலும் நடவாதது.

ஆனால் நாட்டைப் பிரித்துக் கொண்டு போனவர்கள் தங்கள் பகுதியை "இஸ்லாமிய நாடு" என்று அறிவித்தனர்! ஆனால் இங்கே "வெள்ளைக்காரனை வெளியே போ" என்று தீர்மானம் போட்டுவிட்டு வெள்ளைக்காரனையே சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜனரலாக வைத்துக் கொண்ட கேவலம் நடந்தேறியது!

 - ஹிந்து மித்ரன், மாத இதழ்

மேற்கண்ட வரலாற்றுச் செய்திகளைப் படித்துப் பார்க்கும் போது ஒரு விஷயத்தை நன்றாக ஊகிக்க முடிகிறது. காங்கிரஸ் அன்று முதல் இன்று வரை ஹிந்துக்களின் வாழ்வின் மீது அலட்சியப் போக்கும் வெள்ளை அடிமைத்தனத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதும் தெரியவருகிறது. அதே நேரத்தில் பிரிவினையின் போது என்ன செய்யவேண்டும் என்றும் அதனைச் செய்யாவிட்டால் பாரதத்தின் தலையெழுத்து என்னாவாக இருக்கும் என்கிற தீர்க்கதரிசனம் பாபா சாகேப் டாக்டர்.அம்பேத்காரிடம் தெளிவாக இருந்தது என்பதையும் நாம் உணர முடிகிறது.

அம்பேத்கார் சொன்னதைப் போல பிரிவினையின் போது முழுமையான மக்கள் பரிமாற்றம் நடந்திருந்தால் காங்கிரஸின் செக்யூலரிச போர்வைக்கு வேலை இருந்திருக்காது. காஷ்மீரத்து பண்டிட்டுகள் சொந்த நாட்டின் அகதிகளாக விரட்டியடிக்கப்படிருக்க மாட்டார்கள்.  இந்தியா முழுவதும் இத்தனை முறை தடையில்லாமல் குண்டுகள் வெடித்திருக்காது. அவ்வகையில் டாக்டர்.அம்பேத்கார் எதிர் வரும் பிரச்சனைகள் பற்றி தெளிவு கொண்டிருந்த தீர்க்கதரிசியே ஆகிறார்!

டாக்டர். அம்பேத்கார்

Sunday, January 23, 2011

ஆர்ய - திராவிட என்பது இனமல்ல!



வேத சாஸ்திரங்களில் ஆரிய, திராவிட என்று இரண்டு வேறு இனங்கள் இருந்தன என்பதர்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் வெள்ளைக்காரர்கள் பிரித்தாளும் கொள்கைப்படி, அவன் ஆரியர் திராவிடர் என்ற இனவாத தியரியை நம்மிடையே புகுத்திவிட்டான்.

சாஸ்திரப் பிரகாரம் அந்த காலத்தில் அர்ய என்றால் 'மதிப்புக்குரிய' என்று அர்த்தம். அவ்வளவுதான். இன்றைய பிரிவினைவாத கொள்கைப்படி ஆரியனான அர்ஜுனனைப் பார்த்தே பகவான் கண்ணன் கீதையில் 'நீ என்ன இப்படி மனத்தளர்ச்சி அடைந்த அநார்யனாகி விட்டாயே!' என்கிறார். 'அநார்யன்' என்றால் 'ஆர்யன் அல்லாதவன்' என்று பொருள். (வார்த்தைக்கு முன்னே 'அன்' சேர்த்தால் அது எதிர்ப்பதமாகக் கொள்ளப்படும். ஆங்கிலேயன் இதைத்தான் காப்பியடித்தான். ('ஹாப்பிக்கு எதிர்ப்பதம் 'அன்-ஹாப்பி')

விஷயத்திற்கு வருவோம். அர்ஜுனனை 'அநார்யனாக ஆகிவிட்டாயே' என்று பகவான் குறிப்பிட்டதர்கு அர்த்தம் 'மதிப்பிற்குரியவனாக அல்லாமற் போய்விட்டாயே!' என்பது தான். ஆக ஆர்யன் என்பது இனத்தை குறிக்கும் சொல் அல்ல. உயர்ந்த அரசரை மதிப்பிற்குரிய புதல்வரே என்றழைப்பதற்கு 'ஆர்ய புத்திரரே!' என்று அழைப்பார்கள். உடனே வெள்ளைக்காரன் அவனை ஆர்யனின் புத்திரன் என்று மட்டமாகபுரிந்து கொண்டு இவர்கள் வடக்கே 'அரசாண்டவர்கள் ஆர்யர்கள்' என்று கதையாகவும் கட்டிவிட்டனர். பரப்பிவிட்டனர்.

அதே போல திராவிட என்பதும் இனப்பெயர் அல்ல. சாஸ்திரங்களில் ஒரே இனத்தைச் சேர்ந்த பாரத மக்களைத்தான் விந்திய மலைக்கு வடக்கே உள்ளவர்களை கௌடர்கள் என்றும், தெற்கே உள்ளவர்களை திராவிடர்கள் என்றும் கூறியிருக்கிறது. அப்படியே திராவிடர்கள் என்று தெற்கே உள்ளவர்களை அழைத்தாலும் அது இனப்பிரிவு ஆகாது. ஒரு பிரதேசத்தின் மக்களைக் குறிக்கும் சொல் அவ்வளவே!

ஆதியில் விந்திய மலைக்கு வடக்கே உள்ள தேசம் முழுவதும் கௌட தேசம்
என்றும் அதற்குத் தெற்கில் உள்ளது முழுவதும் திராவிட தேசம் என்றும் தான்
இருந்தது. ஆரியதேசம் என்று கூட எதுவும் இல்லை. ஒரு பிரதேசத்திலிருந்து
இன்னொன்றுக்குப் போனவர்களை அந்தப் பிரதேசப் பேரை வைத்தே
குறிப்பிடுவார்கள். அந்த முறையில் பார்த்தால் காசி முதலான அநேக வட
இந்தியப் பகுதிகளில் வசிக்கும் பிராமணர்கள் பலருக்கு 'திரவிட்' என்று பெயர்
இருக்கும் (sur name). ஆக தமிழ் தேசத்திலிருந்து வடநாட்டில் குடிபோனவர்கள்
பிராமணர்களானாலும் அவர்களை திராவிடர்கள் என்றே அக்காலத்தில்
அழைத்தனர்.

வெள்ளையர்களின் இனப்பிரிவினை தியரிப்படி பிராமணர்கள் திராவிடர்களுக்கு மாறானவர்கள், விரோதிகள், எதிரிகள் என்று கூடச் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் இன்றைக்கு வடதேசத்தில் தமிழ் நாட்டுப் பிராமண வம்சத்தவர்களுக்கே தான் 'த்ரவிட்' அடைமொழி இருக்கிறது.
(உதாரணம்:: ராகுல் த்ரவிட்).

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

ஆக திராவிடம் என்பது பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லே அன்றி இனத்தை குறிக்கும் சொல் அல்ல. விந்திய மலைக்கு தெற்கே வாழ்ந்தவர்கள் இன்றும் வாழ்பவர்கள் பிராமணர்களாக இருந்தாலும் அவர்கள் திராவிடர்களே!

மேலும் விரிவாக

ஆரியர்கள், திராவிடர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் * வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் கருத்து

மதுரை: "ஆரியர்கள், திராவிடர்கள் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என
கூறுவது தவறு. இருவருமே ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது' என்று இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டி.என்.திரிபாதி கூறினார்.

மதுரை காமராஜர் பல்கலை வரலாற்று துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:

எந்த நாட்டின் வரலாற்றையும் தொல்பொருள் துறை மற்றும் பாரம் பரியத்தையும் சேர்த்து ஆய்வு செய்தால் தான் தெரிந்து கொள்ள முடியும். வரலாற்றின் நோக்கமே உண்மையை அறிவது தான். வரலாற்று ஆய்வுகள் விருப்பு வெறுப்பின்றி இருக்க வேண்டும். வரலாறு, திருத்தி எழுதப்படாத நாடுகளே கிடையாது. எகிப்து, கிரேக்கம், சீனா, இந்தியா என இதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

அலெக்சாண்டர் படையெடுத்த பிறகு தான் இந்தியாவுக்கு என தனி வரலாறு தோன்றியது என்ற கருத்து முன்பு இருந்தது. பிரிட்டிஷார் தான் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்களை தோண்டி ஆராய்ச்சி செய்து, இந்தியாவின் பழமையான வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்ந்தனர். எகிப்து, கிரீஸ் நாடுகளுக்கு இணையாக இந்திய வரலாறும் பழமையானது. "தமிழ் பிராமி' எழுத்துக்கள் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டன. பண்டைக் காலத்திலேயே ரோமானியர்களுடன் தமிழர்கள் கடல் வாணிபம் செய்தனர்.

வட மாநிலத்தவர் ஆரியர்கள் என்பதும், தென்மாநிலத்தவர் திராவிடர்கள் என்பதும் தவறான கருத்து. மனிதர்களின் தோற்றம் பற்றி ஆய்வு செய்ய இப்போது "ஜெனீட்டிக்ஸ்' பயன்படுத்தப்படுகிறது. "ஆர்க்கியாலஜி', "ஜெனீட்டிக்ஸ்' ஆகிய வார்த்தைகளை இணைத்து "ஆர்க்கியோ ஜெனீட்டிக்ஸ்' என அழைக்கின்றனர். 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்காவில் இருந்து ஒரு மனித இனம் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதர்களின் படிவங்களை (பாசில்) ஆய்வு செய்தால் இந்த உண்மை புலப்படுகிறது.

வட மாநிலத்தவர் மற்றும் தென்மாநிலத்தவர் "ஜீன்'கள் ஒரே மாதிரி இருக்கின்றன. எனவே, ஆரியர்கள், திராவிடர்கள் என பிரிப்பது தவறு. தோலின் நிறம், உருவ அமைப்பை வைத்து மனிதர்களை வேறுபடுத்தக் கூடாது. "ஜீன்'களை வைத்து தான் பிரிக்க வேண்டும். "ஜீன்'கள் ஒரே மாதிரியாக இருந்தால் அது ஒரே இனம். தமிழும், சமஸ்கிருதமும் ஒரே குழுவில் இருந்து தோன்றிய மொழிகள். ஆனால், தனித்தனியாக வளர்ந்தன.

"மைட்டோகான்ட்ரியல் டெஸ்ட்' என்ற "ஆர்க்கியோ ஜெனீட்டிக்ஸ்' முறையில் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனிதர்களின் "செல்'லில் உள்ள "ஒய்' குரோமோசோம்களை ஆய்வு செய்கின்றனர். 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் படிவங்களில் உள்ள "ஜீன்'களுடன் இவற்றை ஒப்பிடுகின்றனர். இந்தியர்களின் "ஜீன்'கள், 60 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய மனிதர்களுடன் ஒத்துப் போகின்றன. எனவே, ஆரியர்கள் படையெடுத்து திராவிடர்களை தென்னிந்தியாவுக்கு தள்ளி விட்டனர் என்ற கருத்து இதில் அடிபட்டுப் போகிறது. மொழிகள் வேண்டுமானால்
இவர்களுக்குள் வேறுபட்டிருக்கலாம். இனம் ஒன்று தான்.

இவ்வாறு திரிபாதி கூறினார்.

தகவல் : தினமலர்!

வெள்ளைக்காரனின் இந்த அர்ய திராவிட இனப்பிரிவினை கட்டுக்கதைகளை தூண்டி விட்டு இன்றும் அவற்றை பற்றிய உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள விடாமல் இந்துக்களிடையே பிரிவினை வாதத்தை வளர்த்து வரும் அரசியல் வாதிகள் அம்பேத்கர் கூறும் மற்ற பிரிவினைகளைப் பற்றி மூச்சு கூட விடுவதில்லையே ஏன்?

டாக்டர் அம்பேத்கர் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை’ என்ற நூலில் கூறுகிறார்:-

”பொதுவாக, முகமதியர்கள் ஷேக்குகள், சையத்துகள், மொகலாயர்கள், பட்டாணியர்கள் என நான்கு இன மரபுக் குழுக்களாகப் பிரிந்திருப்பதுதான் வழக்கம். ஆனால் இது வங்க மகாணத்துக்குச் சிறிதும் பொருந்தாது. முகமதியர்கள் இரண்டு பிரதான சமூகப் பிரிவினைகளை ஒப்புக்கொள்கின்றனர்.

1. அஷ்ராஃப் அல்லது ஷராஃப், 2. அஜ்லாஃப் ஆகியவையே அவை.

அஷ்ராஃப் என்பதற்கு ”உயர் குடிமகன்” என்று பொருள். ஐயத்துக்கிடமற்ற அயல்நாட்டு வழித்தோன்றல்களும், மேல்சாதி இந்துக்களிலிருந்து மதம் மாறியவர்களும் இப்பிரிவில் அடங்குவர். தொழில் புரிவோர் உள்பட இதர எல்லா முகமதியர்களும், கீழ்ச் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களும் அஜ்லாஃபுகள், ஈனர்கள், இழிந்தவர்கள், கடைகெட்டவர்கள் என்பன போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பதங்களில் அழைக்கப்படுகின்றனர்.

மேலும், காமினாக்கள், இதார்கள், கீழ்த்தரமானவர்கள் எத்தகைய தகுதியுமில்லாதவர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. ரசில் என்றும் இவர்களைக் கூறுவார்கள். ரிஸால் என்னும் பதத்தின் மொழிச் சிதைவே ரசில் என்பது.

சில இடங்களில் மூன்றாவது ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அனைவரிலும் மிகத் தாழ்ந்தவர்கள்’ என்று இதற்குப் பொருள். இவர்களுடன் எந்த முகமதியர்களும் சேர்ந்து பழகமாட்டார்கள். இவர்கள் முசூதிகளில் நுழையவோ, பொது கல்லறைகளை அல்லது இடுகாடுகளை பயன்படுத்திக் கொள்ளவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்துக்களைப் போன்றே முஸ்லிம்களிடையேயும் சமுதாயத்தில் அவரவர் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து சாதிப்பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன.

I. அஷ்ராஃப்கள்-உயர்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வருமாறு:

1. சையத்துக்கள். 2. ஷேக்குகள் 3.பட்டாணியர்கள் 4.மொகலாயர்கள் 5.மாலிக்குகள் 6.மிர்ஜாக்கள்

II. அஜ்லாஃப்-என்பவர்கள் கீழ்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இவர்களில் பின்வரும் பிரிவினர் அடங்குவர்.

1. பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள ஷேக்குகளும் மற்றும் பூர்வீகத்தில் இந்துக்களாக இருந்து மதம்மாறி அஷ்ராஃப் சமூகத்தில் இடம் பெறாத பிராலி, தக்ராய் போன்றவர்களும்.

2. தார்ஜி, ஜொலாஹா, பக்கீர், ரங்ரெஸ்

3. பர்ஹி, பாதியரா, சிக், சுரிஹார், தய், தவா, துனியா, காத்தி, கலால், கசய், குலா குஞ்சரா, லாஹரி, மஹிஃப்ரோஷ், மல்லா, நலியா, நிகாரி

4. அப்தல், பாகோ, பெதியா, பாட், சாம்பா, தஃபாலி, தோபி, ஹஜ்ஜம், முச்சோ, நகர்ச்சி, நாத், பன்வாரியா, மதாரியா, துந்தியா

III. அர்ஸால் அல்லது மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் பிரிவினர்.
பனார், ஹலால்கோர், ஹிஜ்ரா, கஸ்பி, லால்பெகி, மெளக்தா, மெஹ்தார்.”

- டாக்டர் அம்பேத்கர்.
நன்றி:- தமிழ் ஹிந்து.காம்-பெரியாரின் மறுபக்கம்!