Showing posts with label வேதாந்திரி மகரிஷி. Show all posts
Showing posts with label வேதாந்திரி மகரிஷி. Show all posts

Tuesday, July 26, 2011

நல்ல சிந்தனை கொண்டிருந்தால் நல்ல பிள்ளை பிறக்கும்!



நற்குணம் கொண்ட பெற்றோர்களுக்கு தீய குனம் கொண்ட குழந்தைகளும், தீய குணம் கொண்டவர்களுக்கு நற்குணம் கொண்ட பிள்ளைகளும் பிறக்க சில காரணங்கள் இருக்கிறது.

பரிணாமத்தில் வந்த பிறவித் தொடரில் எண்ணற்ற பதிவுகள் மனிதனிடம் இருக்கும். அவற்றை ஆழ்நிலைப் பதிவு என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தீயகுணம் உள்ளே அடங்கி இருக்கும் போது நற்குணம் செயலுக்கு வந்து கொண்டிருக்கும். அப்போது ஒருவன் நல்லதையே செய்வான்
நல்லவனாகவே வாழ்வான்.

உள்ளே அடங்கியிருக்கும் தீய குனங்களையும், தீய செயல்களையும் வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல் இருக்கலாம். அவை கருமையத்திலே மட்டும் ஆழ்நிலைப் பதிவாக இருக்கும். அவனுடைய வித்துவின் மூலம் பிறவித் தொடராகத் தோன்றும் குழந்தைகளிடம் அந்த எண்ணங்கள் எழுச்சி பெறும். அதனால் அந்தக் குழந்தைகள் அவர்களின் பெற்றோர் செய்ய முடியாமல் விட்டுவிட்ட தீய செயல்களையும் செய்கிறார்கள்.

அதனால் தான் நம் முன்னோர்கள் மனதால் கூட தீயசெய்லகளை நினைக்காதே என்பார்கள். அந்த நினைவே ஆழ்மன பதிவாக மாறி நாம் வெளிப்படுத்தாவிட்டாலும் நம் வழித்தோன்றல்களின் ஜீன்களின் பதிவாக மாறி அவர்களது குணத்தை மாற்றிவிடும்.

அதேபோல, நல்ல எண்ணங்களெல்லாம் ஒருவரிடம் அடக்கமாகவும் இருக்கலாம். வேறு வழியில்லாது ஒருவர் கசாப்புக்கடை வவத்திருப்பவராக இருக்கலாம். அவர் மனதில் தூய்மையான பணிசெய்தால் நல்லது என்ற எண்ணமே மேலோங்கி இருக்கலாம். அப்போது அவருக்குப் பிறக்கக்கூடிய குழந்தை அந்த நல்லெண்ணத்தைப் பதிவாகப் பெற்று இருக்கும்.

எந்த எண்ணத்தை மனதில் வைத்திருந்து அதைச் செயல்படுத்த முடியவில்லையோ அவை கருத்தொடரான குழந்தை வாயிலாகச் செயலுக்கு வரும்போது அத்தகையவருடைய குழந்தை உயர்ந்த எண்ணமுடியதாக இருக்கிறது.

அதனால் தான் நாம் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் மனத்தால் எப்பொழுதும் நல்லதையே நினைக்க வேண்டும் என்பார்கள்.

அதேபோல, ஒருவர், பூஜைகளெல்லாம் செய்து கொண்டிருப்பவர். அதே நேரத்தில் வருகின்றவர்களிடமெல்லாம் என்ன பறிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவருக்குப் பிறக்கும் குழந்தை பிறர் வளம் பறித்தலில் முதலிடம் வகிக்கும்.

தீய பதிவுகளைத் தவிர்க்க வேண்டுமெனில் மனதை விழிப்புடன் வைத்திருந்து
எப்போதும் நற்சிந்தனையையே வளர்த்து தீய பதிவுகள் எழாது காத்துக் கொள்ளும் நற்பண்பைப் பழக்கத்தில் கொண்டுவர வேண்டும்.

- ஸ்ரீ வேதாந்திரி மகரிஷி





----------------------------------------------------------------------------------------------------------


'உங்கப்பன் எந்த நேரத்தில தான் உன்னையப் பெத்தானோ?' என்பார்களே, அதன் அர்த்தம் இதுதானோ?


.

Tuesday, September 7, 2010

ஜீவ சமாதி என்றால் என்ன?



வாழ்க வளமுடன்

ஜீவ சமாதி என்று பேசப்படுகிறதே அப்படி என்றால் என்ன? அது இறந்த நிலையா அல்லது உயிரோடு இருக்கும் நிலையா? சமாதியில் அமைந்த பிறகு உடலில் உயிர் இருக்காதே! பிறகு அதை ஜீவ சமாதி என்று எப்படிக் கூறுகிறார்கள்? என்றெல்லாம் உங்களுக்குச் சந்தேகம் இருக்கலாம்.

அமைதியான மனதுடன் கூடிய ஆழமான தவ வாழ்க்கை மூலமே சாத்தியப்படும் விஷயம் அது.

ஞானிகள் தவத்தின் மூலமாகவு, தற்சோதனையின் மூலமாகவும் தன்னுடைய உயிரைத் தூய்மை செய்து முழுமைப் பேறு நிலையடைந்தும், காயகல்பத்தின் மூலமாகத் தன் வித்துவைக் கெட்டிப்படுத்தியும், உலக வாழ்க்கையில் தான் செய்ய வேண்டிய கடமையெல்லாம் செய்து நிறைவு பெற்றும், இனிமேல் நான் இவ்வுலகில் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பெற்றும் விட்டால், மனதை இறைநிலையோடு இணைத்துவிட்டு லம்பிகா யோகத்தின் மூலம் உயிரை உடலோடு சுவரச் செய்து விடுவார்கள்.

முன்னமே செய்திருந்த ஏற்பாட்டின் படி சீடர்கள் உடலைப் புதைத்துவிடுவார்கள். மன இயக்கமும் உடல் இயக்கமும் நின்று விட்டாலும் இந்த உடலைவிட்டு ஜீவன் பிரியாதிப்பதால் உடல் கெடாமல் இருக்கும். இதெவே ஜீவசமாதி என்றழைக்கப்படுகிறது.

இதுபோல தமிழ் நாட்டில் மகான்கள் அடக்கமான பதினெட்டு ஸ்தலங்கள் உள்ளன. பழனி, திருப்பதி, சிதம்பரம் வைத்தீஸ்வரன் கோவில், மந்த்ராலயம் போன்ற இடங்களிலெல்லாம் சித்தர்கள் அடக்கமாகியிருக்கிறார்கள்.

அந்த இடத்தின் மேல் நம் முன்னோர்கள் சிலைகளை வைத்து கோயில் கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைத்துள்ளனர். என்றைக்கும் அந்த மகானுடைய ஆற்றல் அவருடைய உடலைவிட்டுப் பிரியாதிருக்கும்.

அவர்கள் உலக நன்மைக்காக உடலடக்கம் பெற்ற போது எண்ணிய எண்ணங்கள் எல்லாம் அங்கேயே இருப்பதால் அதை மக்கள் சுற்றிவர சுற்றிவர, அந்த மகான்களுடைய எண்ணங்கள் மக்களை வழிநடத்தும்.

சித்தர்கள் அடக்கமான கோயில்களுக்குக் குடமுழுக்குத் தேவையில்லை. "ஜீவன்" என்றால் உயிர். "சமாதி" என்றால் சமன் - ஆதி. ஆதிக்குச் சமமாக மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி.

- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி.




Saturday, August 21, 2010

யோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் பொன்மொழிகள்!




நாம் வாழும் காலத்தில் நன்மை செய்தால் இறந்த பின் சொர்கத்திற்குச் சென்று இன்பத்தை அனுபவிக்கலாம் என்றும் தீமைச் செய்தால் நரகத்திற்குச் சென்று துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றும் பெறியோர்களால் கூறப்பட்டிருக்கிறது.

உண்மையில் சொர்கம் நரகம் என்று இருக்கிறதா என்றால் இல்லை. இவைகள் எல்லாம் அரியாத மக்களுக்கு ஆசைகாட்டியும் அச்சமூட்டியும் அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக பெரியவர்கள் சொல்லி வைத்த கற்பனைக் கதைகள்.

மனோதத்துவப்படி, மனிதன் ஒவ்வொரு செயலிலிருந்தும் ஒரு ஆதாயத்தை எதிர்பாக்கிறான். மனிதனுடைய இந்தத் தன்மையைப் பயன்படுத்தி ஞானிகள் சில கதைகளைக் கற்பித்தார்கள்.

"நீ நல்லது செய்தால் சொர்கத்திற்குச் செல்வாய் என்றும் தீமையைச் செய்தால் கொடிய நரகத்தில் தள்ளப்படுவாய் என்றும் எமலோகத்தில் துன்பத்தை அனுபவிக்க நேருமென்றும்" சொல்லி வைத்தார்கள். மக்கள் தீமையைச் செய்வதிலிருந்து தவிர்த்து அவர்களை நல்வழிப்படுத்தவே இது போன்ற தோற்ற மாயைகள் உருவாக்கப்பட்டன. இவைகள் யாவும் ஒரு வகை மனோவியல் காரணங்களுக்காகவே உண்டாக்கப்பட்டவை. இந்த நம்பிக்கைகள் இருப்பதால் தீங்கில்லை மாறாக நன்மைகளே விளைகின்றன.

'மரணம்' என்பது உண்மையில் என்னவென்று புரிந்து கொண்டால் அது பற்றிய கேள்விகளும் அச்சங்களும் நீங்க வாய்ப்பிருக்கிறது. மரணம் என்பது உடலியக்க விதியில் உண்டாகும் ஒரு மாற்றம் தான். வித்து, ஜீவகாந்தம், உயிர், உடல், புலன்கள், மனம் இவையனைத்தும் ஒரு இணைப்பாக இயங்குகிறது. அதுவே வாழ்வு என அழைக்கப்படுகிறது. இந்த இயக்கங்கள் முரண்பட்டு பிரிந்து விடும் நிலையையே மரணம் என்கிறோம்.

அதாவது உடல் தனது இயக்கத்திலிருந்து தளர்வடையும் போது அதனோடு இயங்கிக் கொண்டிருக்கும், அதன் இயக்கத்திற்குத் தேவையான கூட்டனுக்களும் இந்த உடலோடு இனி கூட்டாக இயங்க முடியாது என முடிவு செய்து விலகிச் சென்று தனித்தியங்கத் துவங்குகிறது. உதாரணமாக ஒரு நிறுவணம் நஷ்டத்தால் கலைக்கப்படுகிறது என்று கொள்வோம். அந்நிறுவனம் என்ற அமைப்பு கலைக்கப்படுகிறது. அந்த அமைப்பில் இருந்த பதவிகள் இல்லாமல் போகின்றன. ஆனால் அந்தப் பதவிகளில் பணி புரிந்து கொண்டிருந்த மனிதர்கள் வெவ்வேறு அமைப்புகளில் சேர்ந்து தனித்தியங்க துவங்குகிறார்கள். அது போலதான் மரணம் என்பதும். உடலிலிருந்து உயிர் பிரிந்தவுடன் உடலிலுள்ள அணுக்கள் குழு இயக்கம் பிரிந்து தனித்து இயங்க்குகின்றன. அவ்வளவே.


ஆக முற்றிலுமாக மரணம் என்பது நிகழ்வதே இல்லை. அணுக்களுடைய கூட்டு இயக்கச் சிறப்பு நிலைகள் மாற்றமடைவதும் அதே அணுக்கள் கூடி மற்றொரு உருவமாகத் திகழ்வதும் இயர்கையின் நியதி.

- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி




Sunday, June 6, 2010

யோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் மணிமொழிகள்!


வாழ்க வளமுடன்


எண்ணு, சொல், செய் எல்லார்க்கும் நன்மை தரும் வகையில், எண்ணும்படி
செய் , செய்யும்படி எண்ணு. அதுவே உங்களுக்கும் மற்றவர்க்கும் நன்மை பயக்கும்.

உண்மையில் எதிரி உங்களுக்கு உண்டு எனில் அது உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற
எண்ணமே ஆகும்.

எவரும் எதுவும் பிறக்கும் போது கொண்டு வந்ததில்லை. இறக்கும் போது கொண்டு போஅதும் இல்லை. மனித சமுதாயம் தான் ஒவ்வொருவருக்கும் வாழ்வளித்து வருகின்றது. அத்தகைய சமுதாயத்திற்கு தனது அறிவாற்றல் உடலாற்றல் இரண்டின் மூலம் கடனாற்ற வேண்டும்.

எல்லோரும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய முறையில் கடனாற்றினால் மனித சமுதாயம் எப்போதும் வளமுடன் இருக்கும். எல்லோரும் அதன் கீழ் இன்புற்று வாழலாம்.

சமுதாயத்தில் மக்கள் ஒவ்வொரு வரும் தேவை, விருப்பம், தகுதி ஆகியவற்றால் வேறுபட்ட நிலைகளில் வாழுகின்றார்கள். பலர் விருப்பத்திற்கும் தேவைக்கும் மதிப்பளித்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்வது பாதுகாப்பான ஒழுக்கமான உயர் முறையாகும்.

தனிமனிதன் சொத்துரிமையின் கீழ் வாழும் மக்கள் தங்கள் பொருள் வருவாய் அல்லது அறிவு, உடல் ஆற்றல்கள் இவற்றில் நூறில் ஒரு பங்கேனும் சமுதாய நலனுக்கென ஈடையாக்கி ஒதுக்கிப் பயன்படுத்துவது சமுதாயத்தைச் சிறப்பிக்கச் செய்யும் நற்தொண்டாகும்.

ஆராய்ச்சியில்லாத நம்பிக்கை தாழ்ப்பாள் இல்லாத கதவு போல ஆகும். லட்சியம் இல்லாத ஆராய்ச்சி கதவு இல்லாத வீடு போல ஆகும்.

பழக்கத்தால் மனிதன் உயரவும் முடியும். தாழவும் முடியும். வாழ்விற்கு உயர்வளிக்கும் பழக்கங்களே ஒழுக்கம் எனப்படும்.

எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன். மகான். ஞானி.

தவறான எண்ணங்களை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். அதற்கு வழி எப்போதும் நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனத்தில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

எண்ணம் என்பது எப்படி இயங்குகிறது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எவ்வாறு தோன்றுகின்றன என அடிக்கடி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் நீங்களும் ஞானியாகத் திகழலாம்.

- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி.




Thursday, January 7, 2010

யோகிராஜ் வேதாந்திர மகரிஷியின் பொன்மொழிகள்!


முன்னோர்களால் சொல்லப்பட்ட சம்பிரதாயங்கள் பலவும் ஆழ்ந்த அர்த்தம் உள்ளவை.

உதாரணமாக அமாவாசை அன்று சூரியன், சந்திரன் பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதால், பூமியின் ஆகர்ஷண சக்தி மற்ற நாட்களை விட அதிகமாக இருக்கும்.

அமாவாசை நாட்களில் ஏன் தர்பணம் செய்ய வேண்டுமென்றால், பூமியின் ஆகர்ஷண சக்தி அந்நாட்களில் அதிகரிக்கும். நம் ஒவ்வொருவரிடத்தும் இறந்து விட்ட பெரியவர்களின் ஆற்றல் உள்ளடங்கியிருப்பதால், அந்நாட்களில் அவர்களை நினைக்கவும், நம் சக்தியை வீணாகச் செலவிடாது இருக்கவும் அந்நாளை நினைவு நாளாக வைத்து, பெரியவர்களுக்குத் தர்பணம் செய்யும் விரத நாளாகவும் வைத்தார்கள்.

அந்நாட்களில் விஷக்கடி நோய் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகமாகும்.
மூளை நோய் உள்ளவர்களைக் கட்டி வைக்க வேண்டிய அளவுக்கு வெறி அதிகப்படும். மரணத்தருவாயில் உள்ளவர்களின் உயிர் பிரிந்து விடும்.

அந்த நாளைச் சிற்றின்பத்திற்குச் செலவு செய்வதோ, குழந்தைப் பேறு உண்டாவதோ நன்மையாக அமையாது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை உருவாகக் கூடும். ஏனெனில் நிலவு பூரணமாக ஒளி அற்ற நாளாகும் அது.

(அதனால் தான் அமாவாசை விரதம் என்று குறைவாக உண்பார்கள். மூக்குப் பிடிக்க சாப்பிட்டால் ஏதாவது செய்வோம் என்று உடம்பு தினவெடுக்கும். சிற்றின்பத் தூண்டுதல் உண்டாகும். அதைத் தவிர்க்கவே அமாவாசை விரதம் என்று குறைவாக உணவு உண்ணுதை வழக்கமாகக் கொண்டார்கள் என்பது புரிகிறதா?)

அதே போல் முழு நிலவு நாள் அன்று பூமி சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் வருகிறது. அந்நாள் தான் பௌர்ணமி. அந்நாளிலும் மனித உடல் அதிகமான சக்தி வந்து விந்து நாதத்தில் ஒரு பூரிப்பை ஏற்படுத்துகிறது.

அந்நாளில் ஒரு குழந்தை உண்டானாலும் மனவளர்ச்சி இல்லாத குழந்தையாக அது உருவாகக் கூடும்.

எனவே அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களைப் புனிதமான நாட்களாகவும், விரத நாட்களாகவும் மனதில் கொண்டு மதித்து இறைவனிடம் மனதைச் செலுத்தச் சொன்னார்கள்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் ஆகும்.

Saturday, October 3, 2009

யோகிராஜ் வேதாந்திர மகரிஷியின் பொன்மொழிகள்!

ஆண் பெண் உறவுகளின் ஒழுக்கத்தின் மூலமே உயர்ந்த நாகரீகம் உண்டாகும். இந்த ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் கவசமே திருமணம் ஆகும்.

வாழ்க்கையின் மேம்பாடாக நற்றுணையாக மதிக்க வேண்டியது கணவனை மனைவியும் மனைவியைக் கணவனுமே. எனவே ஒவ்வொருவரும் கணவன், மனைவி உறவை உயிர்க்கு மேலானதாக மதித்துப் போற்ற வேண்டும்.

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரின் உறவினர்களும் விருந்தினர்களாக வர வாய்ப்புகள் உண்டு. அவர்களை ஒத்த மதிப்போடு இருவரும் உபசரிப்பது கணவன் மனைவி இடையே அன்பு வளரச் செய்யும். எளிய உணவேயாயினும் விருந்தினரை உபசரிப்பதில் இன்முகம் காட்டுங்கள்.

கணவன் மனைவி உறவிலே பகைமை அல்லது பிணக்கு இருக்குமேயானால் ஒருவர் மற்றவர் மீது கோபம் கொள்வார்கள். அவற்றை உடனே சமாதானமாக பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அந்தக் கோபமே இருவருக்குமான சாபம் போல் அமைந்து விடும்.

குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்பில்லாமல் பேசுவதோ, குறை கூறுவதோ கூடாது. அவை குழந்தைகளின் ஒழுக்கப் பண்பாட்டின் உயர்வுக்கு தடையாக இருக்கும்.

உடல் பொருள் ஆற்றல் என்ற மூன்றையும் ஒருவருக்கொருவர் மனமுவந்து அர்ப்பணித்து வாழ்க்கைத் துணைவராகி இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு வாழும் பெருமை கணவன் , மனைவி உறவில்தான் அதிகமாக அடங்கியுள்ளது.

கற்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் உயிரைவிட மேலாகப் போற்றக்கூடிய ஒழுக்கம். உடல் உரம், மனநலம், பொருள் வளம் மூன்றையும் காக்க வல்லது கற்பு.

ஒருவர் தேவைகளையும் விருப்பங்களையும் மற்றவர் மதித்து உதவி செய்து, தன் தேவை விருப்பங்களை கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை அறத்தை கணவன்-மனைவி இருவருமே உயிர் போல காக்க வேண்டும். துணையின் தேவையறிந்து உதவி செய்வதால் ஏற்படும் மகிழ்ச்சியின் அளவாகவே குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் இன்பமும் அமையும்.

அன்பு, அருள், இன்முகம், களை போன்ற அம்சங்களுடன் கூடிய உருவப்படங்களை வீட்டில் மாட்டி வையுங்கள். குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். குழந்தைகளும், நல்லவர்களாக, அழகு மிக்கோராகப் பிறப்பார்கள், வளர்வார்கள்.