Showing posts with label vethanthira maharishi. Show all posts
Showing posts with label vethanthira maharishi. Show all posts

Monday, April 16, 2012

ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் - வெவ்வேறு குணங்கள்!



ஒரு தாய் தந்தையருக்கு மூன்று அல்லது நான்கு குழந்தைகள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் விதவிதமான குணங்களும் வாழ்க்கையையும் கொண்டு இருப்பதற்கு பல காரணங்கள் ஒருங்கே அமையப் பெறுகின்றன.

இதில் ஒரு விஞ்ஞான உண்மை புதைந்து இருக்கிறது. முதல் குழந்தை உருவாகும் பொழுது தாய், தந்தையரின் மனநிலை, வயது, உடல்நிலை, செல்வம், அறிவு இவைகளைப் பொறுத்தும், இப்பிரபஞ்சத்தில் அக்கால கட்டத்தில் கோள்களின் சஞ்சாரநிலைபஞ்ச பூதங்களில் ஏற்படுகின்ற ரசாயன மாற்றம் இவற்றைப் பொறுத்தும் அக்குழந்தையின் உருவ அமைப்பு, குணம் முதலியன ஏற்படுகின்றன.

பின் மூன்று அல்லது நான்கு வருடம் கழித்த பின்பு, தாய் தந்தையரின் மனம், உடல், கோள்கள் பஞ்ச பூதங்கள் இவற்றின் நிலையில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கும். இந்நிலைக்கேற்றவாறு அடுத்த குழந்தையின் உருவ அமைப்பு, குணம் முதலியன வேறுபடும்.

எனவே இந்நிலையில் முதல் குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் மாறுதல்கள் இருக்கத்தான் செய்யும். ஒரு மனிதன் வேறொரு மனிதனிடமிருந்து கருவமைப்பு தொடங்கி பல்வேறு பழக்க வழக்கம், ஒழுக்கம், கலையுணர்வு போன்ற பல குணங்களில் மாறுபடுகிறான். அவ்வாறு மாறுபடும் குணத்தைப் பொறுத்தே அவனது உருவமைப்பு , அறிவின் உயர்வு கீர்த்தி, உடல் வலிவு, உடல் நலம் மற்றும் செல்வம் போன்றவை உண்டாகிறது.

ஆக கரு ஒன்று உருவாகும் காலமும் அக்காலகட்டத்தில் சஞ்சாரிகும் கோள்களின் தாக்கமும் கருவின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தி வெவ்வேறு குணமும் உடல் வலிவும் கொண்ட வேறுபட்ட மனிதர்களை உருவாக்குகிறது.

- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி

Tuesday, July 26, 2011

நல்ல சிந்தனை கொண்டிருந்தால் நல்ல பிள்ளை பிறக்கும்!



நற்குணம் கொண்ட பெற்றோர்களுக்கு தீய குனம் கொண்ட குழந்தைகளும், தீய குணம் கொண்டவர்களுக்கு நற்குணம் கொண்ட பிள்ளைகளும் பிறக்க சில காரணங்கள் இருக்கிறது.

பரிணாமத்தில் வந்த பிறவித் தொடரில் எண்ணற்ற பதிவுகள் மனிதனிடம் இருக்கும். அவற்றை ஆழ்நிலைப் பதிவு என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தீயகுணம் உள்ளே அடங்கி இருக்கும் போது நற்குணம் செயலுக்கு வந்து கொண்டிருக்கும். அப்போது ஒருவன் நல்லதையே செய்வான்
நல்லவனாகவே வாழ்வான்.

உள்ளே அடங்கியிருக்கும் தீய குனங்களையும், தீய செயல்களையும் வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல் இருக்கலாம். அவை கருமையத்திலே மட்டும் ஆழ்நிலைப் பதிவாக இருக்கும். அவனுடைய வித்துவின் மூலம் பிறவித் தொடராகத் தோன்றும் குழந்தைகளிடம் அந்த எண்ணங்கள் எழுச்சி பெறும். அதனால் அந்தக் குழந்தைகள் அவர்களின் பெற்றோர் செய்ய முடியாமல் விட்டுவிட்ட தீய செயல்களையும் செய்கிறார்கள்.

அதனால் தான் நம் முன்னோர்கள் மனதால் கூட தீயசெய்லகளை நினைக்காதே என்பார்கள். அந்த நினைவே ஆழ்மன பதிவாக மாறி நாம் வெளிப்படுத்தாவிட்டாலும் நம் வழித்தோன்றல்களின் ஜீன்களின் பதிவாக மாறி அவர்களது குணத்தை மாற்றிவிடும்.

அதேபோல, நல்ல எண்ணங்களெல்லாம் ஒருவரிடம் அடக்கமாகவும் இருக்கலாம். வேறு வழியில்லாது ஒருவர் கசாப்புக்கடை வவத்திருப்பவராக இருக்கலாம். அவர் மனதில் தூய்மையான பணிசெய்தால் நல்லது என்ற எண்ணமே மேலோங்கி இருக்கலாம். அப்போது அவருக்குப் பிறக்கக்கூடிய குழந்தை அந்த நல்லெண்ணத்தைப் பதிவாகப் பெற்று இருக்கும்.

எந்த எண்ணத்தை மனதில் வைத்திருந்து அதைச் செயல்படுத்த முடியவில்லையோ அவை கருத்தொடரான குழந்தை வாயிலாகச் செயலுக்கு வரும்போது அத்தகையவருடைய குழந்தை உயர்ந்த எண்ணமுடியதாக இருக்கிறது.

அதனால் தான் நாம் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் மனத்தால் எப்பொழுதும் நல்லதையே நினைக்க வேண்டும் என்பார்கள்.

அதேபோல, ஒருவர், பூஜைகளெல்லாம் செய்து கொண்டிருப்பவர். அதே நேரத்தில் வருகின்றவர்களிடமெல்லாம் என்ன பறிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவருக்குப் பிறக்கும் குழந்தை பிறர் வளம் பறித்தலில் முதலிடம் வகிக்கும்.

தீய பதிவுகளைத் தவிர்க்க வேண்டுமெனில் மனதை விழிப்புடன் வைத்திருந்து
எப்போதும் நற்சிந்தனையையே வளர்த்து தீய பதிவுகள் எழாது காத்துக் கொள்ளும் நற்பண்பைப் பழக்கத்தில் கொண்டுவர வேண்டும்.

- ஸ்ரீ வேதாந்திரி மகரிஷி





----------------------------------------------------------------------------------------------------------


'உங்கப்பன் எந்த நேரத்தில தான் உன்னையப் பெத்தானோ?' என்பார்களே, அதன் அர்த்தம் இதுதானோ?


.

Tuesday, March 22, 2011

வேதாந்திரி மகரிஷியின் அருள் மொழிகள்!




பாவத்தின் பதிவுகள் மனித மனத்தில் எப்படித் தோன்றியிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சிகுரிய விஷயம். மனிதனின் பரினாம வளர்ச்சியோடு சேர்ந்து வந்த பல விலங்கினப் பதிவுகளில் இந்த பாவப்பதிவும் ஒன்று. 


முதல் மனிதன் விலங்கினத்தின் வித்துவிலிருந்து வந்தவன். விலங்கினங்கள் உணவிற்காகப் பிற விலங்குகளைக் கொன்று வாழ்கின்றன. பிற உயிர்களினுடைய வாழும் உரிமையைப் பறித்தே வாழ்கின்றன. இவ்வாறே பிறர்வளம் பறித்து வாழ்தல் என்பது மனிதனிடமும் வந்திருக்கின்றது.


அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் இக்குணத்தை மாற்றிக் கொள்ளச் சிந்திக்கவில்லை. 


"நான் ஏன் பிறருடைய வாழ்க்கையைப் பறித்து வாழ்கிறேன்?" என்ற எண்ணம் வந்தவர்களெல்லாம் ஞானியராகி விட்டனர். அவ்வாறு சிந்திக்காதவர்கள் எல்லோரும், ஒருவர் மற்றவரை வாழவிடாது செய்து கொண்டிருக்கின்றனர்.


இது தான் இன்றைய உலகம். பாவம் என்பது விலங்கினத்திலிருந்தே வந்தது. மனித உருவம் விலங்கினத்தின் வித்துத் தொடரிலிருந்தே தோன்றியது.


ஆதலால் அங்கேயே பாவத்துக்கான அடிப்படை ஆரம்பித்து விட்டது. எனவே விலங்கின பதிவுகளிலுருந்து நமக்கு இன்னும் எச்சமாக தொற்றிக் கொண்டிருக்கும் மனப்பதிவுகளைப் புரிந்து கொண்டு அவற்றை நம்மிடமிருந்து அகற்றாதவரை நாம் இன்னும் விலங்குகளே ஆவோம்!






.

Thursday, December 2, 2010

யோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் மணிமொழிகள்!





நல்லறத்தைக் கைக்கொண்டு பிறருக்குநன்மையே செய்து வாழும் தன்மையுடைய சிலர் விரைவில் மரணமடைகிறார்கள். ஆனால் பிறருக்குத் தீங்கையே விளைவிக்கும் சிலர் பொருள், புகழ் செல்வாக்கு பெற்று நீண்டகாலம் வாழ்கிறார்கள். இவற்றைப் பார்க்கும் நமக்கு இதன் காரணம் புரிவதில்லை. ஏன் இவ்வாறு நல்லோர் மடிவதும் தீயோர் நீடூழி வாழ்வதும் நடக்கிறது? வினைப்பயன் தான் இதற்குக் காரணம்.

வினைப்பயன் என்ற அளவில் பார்த்தால் பாரம்பரியப் பதிவின் காரணமாகச் சிலர் நீண்ட நாள் வாழக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய முன்னோர்கள் 80,90 வயது வரை வாழ்ந்திருப்பார்கள். அதற்கு மேலும் சிலர் தம்முடைய முயற்சியாலும், ஒழிக்கத்தாலும் தம் வாழ்நாளை நீட்டித்துக் கொள்வதும் உண்டு.

தீயோர்கள் பணமும் புகழும் கொண்டு நீண்ட நாள் வாழ்கிறார்கள் என்று கூறுவது பொறாமையால் உண்டாகும் உணர்வின் வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால் பணமும் புகழும் உடையவர் மனதில் அமைதி இருக்கின்றதா? உடலில் சுகம் இருக்கிறதா? இரவில் தூக்கம் வருகின்றதா? அவற்றைக் காத்துக் கொள்ள அவர் எவ்வளவு துன்பபடுகிறார் இதெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாது.

ஒருவரது ஆயுள் நீளத்தைக் கொண்டோ, பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் இவற்றைக் கொண்டோ ஒருவர் புண்ணியவான் என்று நினைப்பது ஒரு மயக்கமே!



உண்மையில் எதிரி உங்களுக்கு உண்டு எனில் அது உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே ஆகும்.

எவரும் எதுவும் பிறக்கும் போது கொண்டு வந்ததில்லை. இறக்கும் போது கொண்டு போஅதும் இல்லை. மனித சமுதாயம் தான் ஒவ்வொருவருக்கும் வாழ்வளித்து வருகின்றது. அத்தகைய சமுதாயத்திற்கு தனது அறிவாற்றல் உடலாற்றல் இரண்டின் மூலம் கடனாற்ற வேண்டும்.

பழக்கத்தால் மனிதன் உயரவும் முடியும். தாழவும் முடியும். வாழ்விற்கு உயர்வளிக்கும் பழக்கங்களே ஒழுக்கம் எனப்படும்.

கோயில்களில் வழிபாடு என்ற பெயரில் நூற்றுக்கணக்கில் ஆடு மாடுகளைப் பலியிடுவதால் அந்த இடம் மனித வாழ்க்கைக்குத்தகுதியற்ற இடமாக இருக்கும். மிருகங்களுடைய உயிர்கள் மனித உடலோடு இணைந்து செயல்பட முடியாது. அதே போன்று மனிதனுடைய உயிரும் மிருகங்களின் உடலில் புகுந்து கொள்ள முடியாது. காரணம் இரண்டினுடைய தன்மையும், பரிணாமமும் வேறுபட்டவை.

ஆனால் அங்கே கொலையை நிகழ்த்துகிற மனிதனுடைய எண்ணமும், கொலையுறுகின்ற உயிரினுடைய அலறலும் துடிதுடிப்பான உணர்வலைகளும் அந்த இடத்தை மாசுபடுத்தி இருக்கும். இவை ஆதிகால மக்கள் ஆன்மீக அறிவின் வளர்ச்சியில்லாத போது தொடங்கப்பட்ட பழக்கங்கள். அத்தகைய பழக்கங்களிலிருந்து மக்கள் மெதுவாக வெளியேறி ஆன்ம அமைதியை நாடும் வழிபாட்டு முறையை கைக்கொள்வது நலம்!



- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி.



Tuesday, September 7, 2010

ஜீவ சமாதி என்றால் என்ன?



வாழ்க வளமுடன்

ஜீவ சமாதி என்று பேசப்படுகிறதே அப்படி என்றால் என்ன? அது இறந்த நிலையா அல்லது உயிரோடு இருக்கும் நிலையா? சமாதியில் அமைந்த பிறகு உடலில் உயிர் இருக்காதே! பிறகு அதை ஜீவ சமாதி என்று எப்படிக் கூறுகிறார்கள்? என்றெல்லாம் உங்களுக்குச் சந்தேகம் இருக்கலாம்.

அமைதியான மனதுடன் கூடிய ஆழமான தவ வாழ்க்கை மூலமே சாத்தியப்படும் விஷயம் அது.

ஞானிகள் தவத்தின் மூலமாகவு, தற்சோதனையின் மூலமாகவும் தன்னுடைய உயிரைத் தூய்மை செய்து முழுமைப் பேறு நிலையடைந்தும், காயகல்பத்தின் மூலமாகத் தன் வித்துவைக் கெட்டிப்படுத்தியும், உலக வாழ்க்கையில் தான் செய்ய வேண்டிய கடமையெல்லாம் செய்து நிறைவு பெற்றும், இனிமேல் நான் இவ்வுலகில் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பெற்றும் விட்டால், மனதை இறைநிலையோடு இணைத்துவிட்டு லம்பிகா யோகத்தின் மூலம் உயிரை உடலோடு சுவரச் செய்து விடுவார்கள்.

முன்னமே செய்திருந்த ஏற்பாட்டின் படி சீடர்கள் உடலைப் புதைத்துவிடுவார்கள். மன இயக்கமும் உடல் இயக்கமும் நின்று விட்டாலும் இந்த உடலைவிட்டு ஜீவன் பிரியாதிப்பதால் உடல் கெடாமல் இருக்கும். இதெவே ஜீவசமாதி என்றழைக்கப்படுகிறது.

இதுபோல தமிழ் நாட்டில் மகான்கள் அடக்கமான பதினெட்டு ஸ்தலங்கள் உள்ளன. பழனி, திருப்பதி, சிதம்பரம் வைத்தீஸ்வரன் கோவில், மந்த்ராலயம் போன்ற இடங்களிலெல்லாம் சித்தர்கள் அடக்கமாகியிருக்கிறார்கள்.

அந்த இடத்தின் மேல் நம் முன்னோர்கள் சிலைகளை வைத்து கோயில் கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைத்துள்ளனர். என்றைக்கும் அந்த மகானுடைய ஆற்றல் அவருடைய உடலைவிட்டுப் பிரியாதிருக்கும்.

அவர்கள் உலக நன்மைக்காக உடலடக்கம் பெற்ற போது எண்ணிய எண்ணங்கள் எல்லாம் அங்கேயே இருப்பதால் அதை மக்கள் சுற்றிவர சுற்றிவர, அந்த மகான்களுடைய எண்ணங்கள் மக்களை வழிநடத்தும்.

சித்தர்கள் அடக்கமான கோயில்களுக்குக் குடமுழுக்குத் தேவையில்லை. "ஜீவன்" என்றால் உயிர். "சமாதி" என்றால் சமன் - ஆதி. ஆதிக்குச் சமமாக மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி.

- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி.




Saturday, August 21, 2010

யோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் பொன்மொழிகள்!




நாம் வாழும் காலத்தில் நன்மை செய்தால் இறந்த பின் சொர்கத்திற்குச் சென்று இன்பத்தை அனுபவிக்கலாம் என்றும் தீமைச் செய்தால் நரகத்திற்குச் சென்று துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றும் பெறியோர்களால் கூறப்பட்டிருக்கிறது.

உண்மையில் சொர்கம் நரகம் என்று இருக்கிறதா என்றால் இல்லை. இவைகள் எல்லாம் அரியாத மக்களுக்கு ஆசைகாட்டியும் அச்சமூட்டியும் அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக பெரியவர்கள் சொல்லி வைத்த கற்பனைக் கதைகள்.

மனோதத்துவப்படி, மனிதன் ஒவ்வொரு செயலிலிருந்தும் ஒரு ஆதாயத்தை எதிர்பாக்கிறான். மனிதனுடைய இந்தத் தன்மையைப் பயன்படுத்தி ஞானிகள் சில கதைகளைக் கற்பித்தார்கள்.

"நீ நல்லது செய்தால் சொர்கத்திற்குச் செல்வாய் என்றும் தீமையைச் செய்தால் கொடிய நரகத்தில் தள்ளப்படுவாய் என்றும் எமலோகத்தில் துன்பத்தை அனுபவிக்க நேருமென்றும்" சொல்லி வைத்தார்கள். மக்கள் தீமையைச் செய்வதிலிருந்து தவிர்த்து அவர்களை நல்வழிப்படுத்தவே இது போன்ற தோற்ற மாயைகள் உருவாக்கப்பட்டன. இவைகள் யாவும் ஒரு வகை மனோவியல் காரணங்களுக்காகவே உண்டாக்கப்பட்டவை. இந்த நம்பிக்கைகள் இருப்பதால் தீங்கில்லை மாறாக நன்மைகளே விளைகின்றன.

'மரணம்' என்பது உண்மையில் என்னவென்று புரிந்து கொண்டால் அது பற்றிய கேள்விகளும் அச்சங்களும் நீங்க வாய்ப்பிருக்கிறது. மரணம் என்பது உடலியக்க விதியில் உண்டாகும் ஒரு மாற்றம் தான். வித்து, ஜீவகாந்தம், உயிர், உடல், புலன்கள், மனம் இவையனைத்தும் ஒரு இணைப்பாக இயங்குகிறது. அதுவே வாழ்வு என அழைக்கப்படுகிறது. இந்த இயக்கங்கள் முரண்பட்டு பிரிந்து விடும் நிலையையே மரணம் என்கிறோம்.

அதாவது உடல் தனது இயக்கத்திலிருந்து தளர்வடையும் போது அதனோடு இயங்கிக் கொண்டிருக்கும், அதன் இயக்கத்திற்குத் தேவையான கூட்டனுக்களும் இந்த உடலோடு இனி கூட்டாக இயங்க முடியாது என முடிவு செய்து விலகிச் சென்று தனித்தியங்கத் துவங்குகிறது. உதாரணமாக ஒரு நிறுவணம் நஷ்டத்தால் கலைக்கப்படுகிறது என்று கொள்வோம். அந்நிறுவனம் என்ற அமைப்பு கலைக்கப்படுகிறது. அந்த அமைப்பில் இருந்த பதவிகள் இல்லாமல் போகின்றன. ஆனால் அந்தப் பதவிகளில் பணி புரிந்து கொண்டிருந்த மனிதர்கள் வெவ்வேறு அமைப்புகளில் சேர்ந்து தனித்தியங்க துவங்குகிறார்கள். அது போலதான் மரணம் என்பதும். உடலிலிருந்து உயிர் பிரிந்தவுடன் உடலிலுள்ள அணுக்கள் குழு இயக்கம் பிரிந்து தனித்து இயங்க்குகின்றன. அவ்வளவே.


ஆக முற்றிலுமாக மரணம் என்பது நிகழ்வதே இல்லை. அணுக்களுடைய கூட்டு இயக்கச் சிறப்பு நிலைகள் மாற்றமடைவதும் அதே அணுக்கள் கூடி மற்றொரு உருவமாகத் திகழ்வதும் இயர்கையின் நியதி.

- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி




Thursday, January 7, 2010

யோகிராஜ் வேதாந்திர மகரிஷியின் பொன்மொழிகள்!


முன்னோர்களால் சொல்லப்பட்ட சம்பிரதாயங்கள் பலவும் ஆழ்ந்த அர்த்தம் உள்ளவை.

உதாரணமாக அமாவாசை அன்று சூரியன், சந்திரன் பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதால், பூமியின் ஆகர்ஷண சக்தி மற்ற நாட்களை விட அதிகமாக இருக்கும்.

அமாவாசை நாட்களில் ஏன் தர்பணம் செய்ய வேண்டுமென்றால், பூமியின் ஆகர்ஷண சக்தி அந்நாட்களில் அதிகரிக்கும். நம் ஒவ்வொருவரிடத்தும் இறந்து விட்ட பெரியவர்களின் ஆற்றல் உள்ளடங்கியிருப்பதால், அந்நாட்களில் அவர்களை நினைக்கவும், நம் சக்தியை வீணாகச் செலவிடாது இருக்கவும் அந்நாளை நினைவு நாளாக வைத்து, பெரியவர்களுக்குத் தர்பணம் செய்யும் விரத நாளாகவும் வைத்தார்கள்.

அந்நாட்களில் விஷக்கடி நோய் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகமாகும்.
மூளை நோய் உள்ளவர்களைக் கட்டி வைக்க வேண்டிய அளவுக்கு வெறி அதிகப்படும். மரணத்தருவாயில் உள்ளவர்களின் உயிர் பிரிந்து விடும்.

அந்த நாளைச் சிற்றின்பத்திற்குச் செலவு செய்வதோ, குழந்தைப் பேறு உண்டாவதோ நன்மையாக அமையாது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை உருவாகக் கூடும். ஏனெனில் நிலவு பூரணமாக ஒளி அற்ற நாளாகும் அது.

(அதனால் தான் அமாவாசை விரதம் என்று குறைவாக உண்பார்கள். மூக்குப் பிடிக்க சாப்பிட்டால் ஏதாவது செய்வோம் என்று உடம்பு தினவெடுக்கும். சிற்றின்பத் தூண்டுதல் உண்டாகும். அதைத் தவிர்க்கவே அமாவாசை விரதம் என்று குறைவாக உணவு உண்ணுதை வழக்கமாகக் கொண்டார்கள் என்பது புரிகிறதா?)

அதே போல் முழு நிலவு நாள் அன்று பூமி சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் வருகிறது. அந்நாள் தான் பௌர்ணமி. அந்நாளிலும் மனித உடல் அதிகமான சக்தி வந்து விந்து நாதத்தில் ஒரு பூரிப்பை ஏற்படுத்துகிறது.

அந்நாளில் ஒரு குழந்தை உண்டானாலும் மனவளர்ச்சி இல்லாத குழந்தையாக அது உருவாகக் கூடும்.

எனவே அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களைப் புனிதமான நாட்களாகவும், விரத நாட்களாகவும் மனதில் கொண்டு மதித்து இறைவனிடம் மனதைச் செலுத்தச் சொன்னார்கள்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் ஆகும்.

Friday, December 18, 2009

எண்ணங்களும் வாழ்வும்!


எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன். மகான். ஞானி.

தவறான எண்ணங்களை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். அதற்கு வழி எப்போதும்
நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனத்தில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

எண்ணம் என்பது எப்படி இயங்குகிறது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எவ்வாறு தோன்றுகின்றன என அடிக்கடி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் நீங்களும் அறிஞர்களாகத் திகழலாம்.

எண்ணத்தின் வேகமும், இயல்பும், அறிந்தோர்க்கு எண்ணமே இன்பமயம். எண்ணம் அமைதி பெறும்.

எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி. எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்.

எண்ணத்தின் சக்தி இயல்பு அறிந்திடில் எண்ணம் பிறக்கும் இடமும் விளங்கும்.

எண்ணு, சொல், செய் எல்லார்க்கும் நன்மை தரும் வகையில், எண்ணும்படி செய் , செய்யும்படி எண்ணு. அதுவே உங்களுக்கும் மற்றவர்க்கும் நன்மை பயக்கும்.

உண்மையில் எதிரி உங்களுக்கு உண்டு எனில் அது உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே ஆகும்.

உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும், எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்.

ஒரு முறை ஒரு தீய எண்ணத்தை மனதில் எண்ணி விட்டால் போதும் மறுமடியும் அத்தகைய எண்ணம் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று. எனவே எண்ணங்களை நல்லவைகளாகவே எண்ணப்பழகுங்கள். அதுவே உங்கள் வாழ்வை செம்மைப்படுத்தும்.

- சுவாமி வேதாந்திரி மகரிஷி

Saturday, October 3, 2009

யோகிராஜ் வேதாந்திர மகரிஷியின் பொன்மொழிகள்!

ஆண் பெண் உறவுகளின் ஒழுக்கத்தின் மூலமே உயர்ந்த நாகரீகம் உண்டாகும். இந்த ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் கவசமே திருமணம் ஆகும்.

வாழ்க்கையின் மேம்பாடாக நற்றுணையாக மதிக்க வேண்டியது கணவனை மனைவியும் மனைவியைக் கணவனுமே. எனவே ஒவ்வொருவரும் கணவன், மனைவி உறவை உயிர்க்கு மேலானதாக மதித்துப் போற்ற வேண்டும்.

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரின் உறவினர்களும் விருந்தினர்களாக வர வாய்ப்புகள் உண்டு. அவர்களை ஒத்த மதிப்போடு இருவரும் உபசரிப்பது கணவன் மனைவி இடையே அன்பு வளரச் செய்யும். எளிய உணவேயாயினும் விருந்தினரை உபசரிப்பதில் இன்முகம் காட்டுங்கள்.

கணவன் மனைவி உறவிலே பகைமை அல்லது பிணக்கு இருக்குமேயானால் ஒருவர் மற்றவர் மீது கோபம் கொள்வார்கள். அவற்றை உடனே சமாதானமாக பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அந்தக் கோபமே இருவருக்குமான சாபம் போல் அமைந்து விடும்.

குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்பில்லாமல் பேசுவதோ, குறை கூறுவதோ கூடாது. அவை குழந்தைகளின் ஒழுக்கப் பண்பாட்டின் உயர்வுக்கு தடையாக இருக்கும்.

உடல் பொருள் ஆற்றல் என்ற மூன்றையும் ஒருவருக்கொருவர் மனமுவந்து அர்ப்பணித்து வாழ்க்கைத் துணைவராகி இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு வாழும் பெருமை கணவன் , மனைவி உறவில்தான் அதிகமாக அடங்கியுள்ளது.

கற்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் உயிரைவிட மேலாகப் போற்றக்கூடிய ஒழுக்கம். உடல் உரம், மனநலம், பொருள் வளம் மூன்றையும் காக்க வல்லது கற்பு.

ஒருவர் தேவைகளையும் விருப்பங்களையும் மற்றவர் மதித்து உதவி செய்து, தன் தேவை விருப்பங்களை கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை அறத்தை கணவன்-மனைவி இருவருமே உயிர் போல காக்க வேண்டும். துணையின் தேவையறிந்து உதவி செய்வதால் ஏற்படும் மகிழ்ச்சியின் அளவாகவே குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் இன்பமும் அமையும்.

அன்பு, அருள், இன்முகம், களை போன்ற அம்சங்களுடன் கூடிய உருவப்படங்களை வீட்டில் மாட்டி வையுங்கள். குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். குழந்தைகளும், நல்லவர்களாக, அழகு மிக்கோராகப் பிறப்பார்கள், வளர்வார்கள்.

Friday, August 14, 2009

யோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் பொன்மொழிகள்!

எண்ணம், சொல், செயல் மூன்றாலும், தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடல் உணர்ச்சிக்கோ துன்பம் விளையாத அளவோடும் முறையோடும் எச்செயலையும் ஆற்றும் பண்பாடுதான் ஒழுக்கமாகும்.

பழக்கத்தால் மனிதன் உயரவும் முடியும். தாழவும் முடியும். வாழ்விற்கு உயர்வளிக்கும் பழக்கங்களே ஒழுக்கம் எனப்படும். செய்யும் செயல் பாப புண்ணியத்தைக் கணிப்பதில்லை, செயலின் விளைவின் மூலமாகவே அது அறியப்படுகிறது. நமது செயல்கள் யாவும் நமக்கோ பிறருக்கோ இன்பத்தைக் கொடுக்குமானால் அது புண்ணியச் செயல் மாறாக நமது செயல் நமக்கோ அல்லது பிறருக்கோ துன்பத்தை உண்டாக்கினால் அது பாபச் செயல் எனப்படுகிறது.

ஒருவரையும் பகைத்துக் கொள்ளாத இன்மொழியனாக இருந்தால் அது உலகையே உனக்கு வசப்படுத்திக் கொடுக்கும். வாழ்வை வெற்றிகரமானதாக்கித் தரும்.

இன்ப நிலை நீடிக்க வேண்டும் எனில் உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் என்ற ஐந்தையும் அலட்சியப்படுத்தவோ, மிகையாகவோ அல்லது முரணாகவோ உபயோகிக்கக் கூடாது.

வாங்கும் கடனும் தேங்கும் பணமும் வளர வளர வாழ்வைக் கெடுக்கும். வாழத்தெரியாதோர் பலர் வாழும் நாட்டில் ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்.

உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும் செய்வதும் மனிதனாகப் பிறந்தவனின் நித்தியக் கடனாகும்.

வெளிச்சத்திலே இருள் நிறைந்து இருப்பது போல அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கிறது. அதாவது அகக்கண்ணைத் திறந்து சுய தேடுதல் செய்தால் தான் இறைவன் தென்படுவான்.

இதை விளக்கக் ஒரு குட்டி கதை!

இரண்டு நண்பர்கள். ஒருவன் குருடன். இருவரும் ஒரு வீட்டில் கூடி பேசிக்கொண்டிருந்தனர். பார்வையற்றவன் வெகு நேரம் ஆகி விட்டது நான் கிளம்புகிறேன் என்று கூறி புறப்பட்டான்.

மற்றவனோ "நண்பா! இப்போது இருட்டி விட்டது, இந்த விளக்கை எடுத்துப்போ என்றான்! பார்வையற்றவனோ, "எனக்கு விளக்கு எதற்கு. எப்போதுமே அகக்கண்களால் தானே நடமாடுகிறேன்" என்றான்.

நண்பனோ "அதற்கில்லை, உனக்கு வெளிச்சம் தேவையில்லை ஆனால் உனக்கு எதிரில் வருபவர்களுக்கு நீ நடப்பது தெரிந்தால் ஒதுங்கிச் செல்வார்கள் இல்லையா!" என்று கொடுத்தனுப்பினான்.


இந்து திருமணத்தில் தாலி கட்டும் போது சப்தமாக மேளம் வாசிப்பது ஏன்?


பார்வையற்றவன் விளக்குடன் இருளில் சென்றான். பாதையில் ஒருவர் சடேரென்று அவன் மீது மோதினார். கண் தெரியாதவன் கேட்டான் "ஏனய்யா, எனக்குத்தான் கண் தெரியாது, உனக்குமா தெரியாது. இப்படி வந்து மோதுகிறீர்களே" என்றான். மோதியவனோ "மன்னித்து விடுங்கள் இருட்டில் தெரியவில்லை என்றான்".

பார்வையற்றவனோ "நான் தான் கையில் விளக்கை வைத்திருக்கிறேனே, அந்த தைரியத்தில் தான் சற்று வேகமாக நடந்தேன், அதைக்கூடவா நீங்கள் பார்க்கவில்லை?"

மோதியவன் சொன்னான் "தம்பி நீ விளக்கு வைத்திருக்கிறாய். ஆனால் அது அனைந்திருக்கிறது".

பார்வையற்றவன் விளக்கைத் தூக்கி எறிந்து விட்டு நடக்கலானான் தன் அகக்கண்களை நம்பி.

Friday, July 10, 2009

யோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் பொன்மொழிகள்


எண்ணமும் குணமுமே எக்காலத்திற்க்கும் வாழ்க்கையின் சிற்பி. எண்ணத்தின் சக்தி இயல்பு அறிந்திட்டால் எண்ணம் பிறக்கும் இடமும் விளங்கும். உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்திலெழும் ஒழுங்கற்ற எண்ணமே.

உண்ணும் உணவு உடல் வரை தான் பாயும். எண்ணும் எண்ணங்கள் பிரபஞ்சம் எங்கும் பாயும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது குணங்களுக்கேற்ப்ப மனமே நண்பனாகவும், எதிரியாகவும் இருக்கிறது. மனம் தீயவற்றை நினைத்தால் மூளை அதனை தீய செயல்கள் மூலம் வெளிப்படுத்துகிறது. அதுவே நல்ல செயல்களை நினைத்தால் மூளை நற்செயல்களை செயல்படுத்துகிறது.

சமூகத்தில் தீய எண்ணங்களை நினைப்பவன் தீயவனாகவும், நல்ல எண்ணங்களை நினைப்பவன் நல்லவனாகவும் உருவெடுக்கிறான். நீங்கள் நல்லவர்களாகவே வாழுங்கள். எப்போதும் நல்லவைகளையே நினையுங்கள்.

எண்ணமே எல்லாவற்றையும் இயக்கும் சக்தி. அவற்றை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். வேண்டாத எண்ணங்கள் விரட்ட விரட்ட வரும். அவற்றை கவனைத்து வரிசைப்படுத்தி மனதில் அது தோன்றிடாமல் தியானிக்க வேண்டும்.

ஆசையை அடியோடு ஒழிப்பது என்பது இயலாத செயல், அதற்குத் தேவையும் இல்லை. ஆசையைச் சீரமைக்க வேண்டும்.

மனதின் ஆசைகளினால் எழும் தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போகக்கூடாது. பெருக்கினோமானால் அதன் மோகத்திலேயே மனம் சென்று கொண்டிருக்கும். அதனால் நிம்மதி என்பதை உணராமாலேயே மனம் துன்பத்தில் ஆழக்கூடும். எனவே தேவையைச் சுருக்கிக் கொள்ள வேண்டும்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். வெறுத்து ஒதுக்குவது துறவாகாது. புரிந்து உணர்ந்து கொண்டு தேவை மற்றும் தேவையற்றதை பிரிக்கக் கற்றுக் கொள்ளும் மனோநிலையே துறவு.

*இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.*

Sunday, June 21, 2009

யோகிராஜ் வேதாந்திரி ம‌க‌ரிஷியின் ம‌ணிமொழிக‌ள்:


ம‌ன‌த்தை அட‌க்க‌ நினைத்தால் அலையும். ம‌ன‌த்தை அறிய‌ நினைத்தால் அட‌ங்கும்.

த‌வ‌றிழைப்ப‌து ம‌ன‌ம். இனித்த‌வ‌று செய்ய‌க்கூடாது என்று தீர்மானிப்ப‌தும் அதே ம‌ன‌ம் தான். ஆக‌வே த‌வ‌று செய்யாத‌ வ‌ழியைத் தேர்ந்து ந‌ட‌க்க‌ வேண்டிய‌தும் ம‌ன‌மே. ம‌ன‌த்தைப் ப‌ழைய‌ நிலையிலேயே வைத்துக் கொண்டு புதிய‌ ந‌ல்ல‌ வ‌ழியில் எப்ப‌டிச் செல்ல‌ முடியும். ம‌ன‌த்தின் குறைக‌ளைப் போக்கியாக‌ வேண்டும். ந‌ல்வ‌ழியில் தீர்மான‌மாக‌ நிற்கும் சுய‌ப‌ல‌த்தை ம‌ன‌த்திற்கு ஊட்டியாக‌ வேண்டும்.

தின‌ந்தோறும் ச‌மைய‌ல‌றையில் பாத்திர‌த்தை உப‌யோகிக்கிறோம். அதை சுத்த‌ம் செய்து வைத்தால் தானே ம‌று நாளைக்கு ந‌ன்றாக‌ இருக்கும். அது போல‌, தின‌ந்தோறும் நாம் ந‌ம்முடைய‌ வாழ்க்கையிலே ம‌ன‌தை அலைய‌ விட்டுக் கொண்டு அத‌னால் உட‌லையும் இன்னும் வாழ்க்கையில் உள்ள‌ ந‌ல‌ன்க‌ளையும் குழ‌ப்ப‌ம் செய்து கொள்வ‌தை மாற்றி, தின‌ந்தோறும் தியான‌த்தின் மூல‌ம் ம‌ன‌த்தைச் சுத்த‌ப்ப‌டுத்தி, ம‌ன‌த்தை அத‌ன் உண்மை நிலைக்குக் கொண்டு வ‌ந்து வைக்க‌ வேண்டும். அப்போது தான் ம‌ன‌ம் அமைதியாக‌ இருக்கும். சிந்த‌னைக‌ள் தெளிவாக‌ இருக்கும். த‌வ‌றில்லா வாழ்க்கை அமைத்துக்கொள்ள அதுவே உத‌வும்.