Showing posts with label ramakrishnar. Show all posts
Showing posts with label ramakrishnar. Show all posts

Tuesday, May 5, 2009

ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள்!


சச்சிதானந்தப் பரம்பொருள் என்னும் மரத்தில் எண்ணற்ற இராமர்களும் கிருஷ்ணர்களும் புத்தர்களும் வாழ்கிறார்கள். இவர்களுள் ஓரிருவரே அவ்வப்போது உலகில் வந்து பெரிய மாறுதல்களை ஏற்படுத்துகிறார்கள்.  

பெரிய நீராவிக்கப்பல் பல படகுகளையும் கட்டுமரங்களையும் எளிதாக இழுத்துச் செல்லும்; அதுபோல அவதார புருஷரும் ஆயிரக்கணக்கானவர்களை மாயை என்னும் பெருங்கடலிலிருந்து கரையேற்றித் தம்முடன் அழைத்துச் செல்கிறார்.  

லௌகீக எண்ணங்களும் சிந்தனைகளும் உன்னைக் குலைக்க அனுமதிக்காதே. வேண்டியவற்றைக் குறித்த நேரத்தில் செய், மனத்தை மட்டும் எப்போதும் இறைவனிடமே வைத்திரு.  

ஒருவன் தமக்கு எவ்வளவு பொருட்களைச் சமர்ப்பிக்கிறான் என்பதை இறைவன் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை; மாறாக அன்பையும் பக்தியையும் தருபவனிடமே இறைவன் தமது அருளைப் பொழிகிறார்.  

மரண வேளையில் ஒருவனின் மனத்தில் எழும் எண்ணங்களே அவனது மறுபிறவியை நிர்ணயிக்கின்றன. எனவே ஆன்மீக பயிற்சிகள் மிகவும் தேவை. தொடர்ந்த பயிற்சியின் மூலம் உலக எண்ணங்களை நம் உள்ளத்திலிருந்து மாதிரி இறைநினைவே எப்போதும் இருக்குமாறு செய்தால் மரண வேளையிலும் அது மாறாமல் இருக்கும்.  

இறைவனின் திருநாமங்களும் தெய்வீக வடிவங்களும் எண்ணற்றவை; எதன் மூலமாகவும் அவனை அடையலாம்.  

மரத்தின் அடியில் நின்று கைகளைத் தட்டினால் மரத்தில் வாழும் பறவைகள் எல்லாம் பறந்தோடி விடுகின்றன. அதுபோல இறைவனின் திருப்பெயரைச் சொல்லிக் கைகளைத் தட்டிப் பாடினால் தீய எண்ணங்களாகிய பறவைகள் பறந்தோடிவிடுகின்றன.  

இறைவனே எல்லோருக்கும் வழிகாட்டி அவனே உலகனைத்திற்கும் குரு. இறைவனின் திருநாமத்தைக் கேட்ட உடனே யாருக்கு மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் வழிகிறதோ அவனுக்கு அதுவே கடைசிப் பிறவி.  

இறைவனது திருநாமத்தில் நம்பிக்கை வைத்தல், உண்மையையும் உண்மையற்றவைகளையும் பிரித்தறியும் ஆற்றல் இவையே இறைவனை அடையும் வழிகள்.



சுவாமி விவேகானந்தரின் அறிய புகைப்படம்

Friday, May 1, 2009

ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள்!


நீ யாருக்காக வேலை செய்கிறாயோ அவர் உனது தேவைகளை எல்லாம் கவனித்துக் கொள்வார். உன்னை இந்த உலகிற்கு அனுப்புமுன்னர் நீ வாழ்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் இறைவன் செய்தே வைத்திருக்கிறார்.  

காந்த ஊசி எப்போதும் வடக்கு நோக்கி நிற்பதாலேயே கப்பல் திசை மாறாமல் செல்கிறது. அது போல மனிதனின் உள்ளமும் இறைவனை நாடி நிற்கும் வரையில் அவன் இந்த உலக வாழ்க்கையில் வழி தவற முடியாது.  

இறைவனின் திருப்புகழைப் பாடுகின்ற இடத்தில் தீய சக்திகள் நெருங்குவதில்லை. நோயும் உடலும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்ளட்டும். மனமே நீ எப்போதும் ஆனந்தமாக இரு.  

இறைவனை நெருங்க நெருங்க ஒருவன் அவரைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்கிறான். முடிவில் அவரிலேயே ஒன்று கலந்துவிடுகிறான்.  

எப்போதும் சிந்தித்துப் பேசு. மனமும் வாக்கும் ஒன்றினைந்து செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு பதில் கட்டயம் கிடைக்கும்.  

கடவுள் கற்பக மரம் போன்றவர். வேண்டிய அனைத்தையும் கற்பக மரம் தருவது போல, இறைவனை அடைந்தவனும் எல்லா ஆசைகளையும் கடந்து நிம்மதி பெறுகிறான்.

Thursday, April 30, 2009

ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள்!



இறைவனுக்கு நீ கொடுக்கின்ற ஒவ்வொன்றும் பன்மடங்காக உன்னிடமே திரும்பி வரும். எனவே மோசமான, தீய எதையும் இறைவனிடம் சமர்ப்பிக்காதே.  

பகவான், பாகவதம் (தெய்வீக நூல்கள்), பக்தன் மூவரும் ஒன்றே.  

மீன் எவ்வளவோ தூரத்தில் இருக்கலாம். ஆனால் கவர்கின்ற விதத்தில் ஏதாவது உணவைப் போட்டால் எங்கிருந்தாலும் விரைந்து அங்கு வந்து சேர்ந்து விடும். அது போல் அன்பும் நம்பிக்கையும் உடைய பக்தனின் இதையத்தில் இறைவன் விரைந்து வந்து குடிகொள்கிறான்.  

உருவமின்றியும் உருவத்துடனும் கடவுள் விளங்குகிறார். இந்த இரு நிலைகளை கடந்தும் அவரே விளங்குகிறார். அவர் எப்படியெல்லாம் இருக்கிறார் என்பதை அவர் மட்டுமே அறிவார்.  

ஓர் எறும்பு எவ்வளவு தான் முயற்சி செய்து வயிறார உண்டாலும் எடுத்துச் சென்றாலும் ஒரு பெரிய சர்க்கரை குன்று சிறிதும் பாதிக்கப் படுவதில்லை. முன்பிருந்த படியே அது இருக்கிறது. கடவுள் அது போலவே, பக்தர்கள் எவ்வளவு தான் பரவச நிலையில் ஆடினாலும் பாடினாலும் அவர் இன்னும் யாராலும் முழுமையாக அறியப்படாதவராகவே இருக்கிறார். முழுமையாக அவரை அறியவும் அவரது பெருமைகளை அனுபவிக்கவும் யாராலும் முடியாது.  

சீடன் ஒருபோதும் குருவை பழிக்கக் கூடாது. அவரது கட்டளைக்கு எவ்வித மறுப்பின்றி அவன் பணிய வேண்டும்.  

இறையருள் என்னும் காற்று இடயீடின்றி எப்போதும் வீசிக்கொண்டிருக்கிறது. சோம்பேறி படகோட்டி போன்றவர்கள் பாய்மரத்தை விரித்து அதை பயன்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் சுறுசுறுப்பான வலிமையானவர்கள் தங்கள் மனமாகிய பாய்மரத்தை எப்போதும் விரித்து வைத்திருந்து தாங்கள் சேர வேண்டிய இடத்தை விரைவில் எளிதில் அடைகிறார்கள்.  

குரு, தரகர் போன்றவர். ஆணையும் பெண்ணையும் தரகர் இணைத்து வைப்பது போல குரு மனிதனையும் இறைவனையும் சேர்க்கிறார்.

Thursday, April 23, 2009

ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள்!


ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள்!  


துறவியின் காவியுடை இயல்பாகவே மனத்தில் தெய்வீக எண்ணங்களை எழுப்புகிறது. உடைக்கென்று தனி மதிப்பு எதுவும் இல்லையென்றாலும் சில குறிப்பிட்ட உடைகள் நம் மனத்தில் குறிப்பிட்ட எண்ணங்களைத் தோற்றுவிப்பது உண்மைதான்.  


பிறரை விட அதிகமாக மதிப்பும் மரியாதையும் பணிவும் எங்குக் காண்பிக்கப்படுகிறதோ அங்குத் தெய்வீக ஆற்றல் அதிகமாக இருக்கிறது என்று பொருள்.  


இறைவனிடம் பக்தியின்றி செய்யப்படும் செயல்கள் நிலைக்காது. அது மணலில் கட்டப்பட்ட அஸ்திவரம் போன்றது. முதலில் பக்தியை வளர்த்துக் கொள். பின்னர், நீ விரும்பினால், பள்ளிகள் , மருத்துவமனைகள் கட்டித் தொண்டுகள் புரிவதில் ஈடுபடு.  


இறைவனை மனம் , வாக்கு, உடல் இவற்றால் வழிபடுவதே பக்தி, அவரையும் அவரது பெருமைகளையும் சிந்திப்பது மனத்தால் செய்யும் பக்தி, அவரது திருப்புகழை வாயாரப் பாடுவது வாக்கினால் செய்யும் பக்தி, திருக்கோவிலை வலம் வருவதும் தொண்டுகள் செய்வதும் உடலால் செய்யும் பக்தி.  


கடவுள் விரும்பினால் யானையையே ஊசியின் காது வழியாகச் செலுத்த முடியும். நினைத்ததைச் செய்ய வல்லவர் கடவுள்.  


கடவுளின் மனிதத் தூதனே அவதாரம். அரசனுக்குத் தளபதி போல கடவுளுக்கு அவதாரம். நாட்டில் குழப்பம் நிலவும் பகுதியில் அரசன் தளபதியை அனுப்பி அதை அடக்குகிறான். அது போல் உலகில் அறம் சீர்குலையும் போது இறைவனும் தமது அவதார பிறப்பை அனுப்பி அறத்தைக்காக்கவும் வளர்க்கவும் செய்கிறார்.