Wednesday, August 19, 2009

விக்ரமாதித்தன் கதைகள் - 2


சென்றவாரத் தொடர்ச்சி

தன் பக்கத்திலிருந்த பீடத்தில் அந்தப் பழத்தை மன்னன் வைத்தான். அந்த சமயம் அரண்மனையில் அருமையாக வளர்ந்து வரும் கருங்குரங்கு அங்கு ஓடி வந்து மாதுளம் பழத்தை எடுத்து ஆசையோடு கடித்தது. அதனுள்ளிருந்து இரத்தினக் கற்கள் கலகலவென்று கீழே கொட்டின. இதனைக் கண்ட விக்கிரமாதித்தனும் அரசவையில் இருந்த அனைவரும் பிரமித்து விட்டனர்.

உடனே தன் பொக்கிஷ அதிகாரியை வரவழைத்து, "நான் தினமும் உன்னிடம் கொடுத்துவரும் மாதுளம் பழங்களை என்ன செய்கிறாய்?" என்று கேட்டான்.

"அவைகள் அனைத்தையும் பொக்கிஷத்திலேயே வைத்திருக்கிறேன்!" என்று அதிகாரி சொல்லி விட்டு அவற்றை அங்கு கொண்டு வந்தான். மாதுளம் பழங்களை உடைத்துப் பார்க்கையில் ஒவ்வொன்றிலும் ரத்தினக் கற்கள் இருப்பது வெளியாயிற்று.

ரத்தினக் கற்களைப் பார்த்த விக்கிரமாதித்தன் அளவிலாத மகிழ்ச்சி அடைந்தான். இருப்பினும் அவைகளை பரீக்ஷித்துப் பார்க்க ரத்தின வியாபாரியை அழைத்து வரச் செய்தான்.

அவற்றை நன்றாக பரிசோதித்த ரத்தின வியாபாரி பெருதும் ஆச்சரியத்துடன் மன்னனிடம் விளக்கினான். "அரசே இது வரை இப்படி அதீத பளபளப்பும் மகிமையும் கொண்ட ரத்தினக் கற்க்களை நான் பார்த்ததே இல்லை. இதற்கு மதிப்பு சொல்ல என்னால் இயலாது. மன்னா இந்த கற்கள் ஒவ்வொன்றிற்கும் நாம் வாழும் இந்த பூமிக்கு நீங்கள் என்ன மதிப்பு கொடுப்பீர்களோ அதற்கு நிகரான மதிப்பு என்றே கொள்ளுங்கள்" என்றான்.

தமிழ் சினிமாவில் பிராமணர்கள்-பாகம் 1

இதைக் கேட்டவுடன் விக்கிரமாதித்தன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். ரத்தின வியாபாரிக்கு நிறைய பொன்னும் பொருளும் பட்டாடைகளும் கொடுத்து வழியனுப்பினான். பிறகு அத்தகைய மாதுளங்கனிகளைக் கொடுத்த முனிவனை விசாரியாமல் போனோமே என்று அவன் வருந்தினான். ஒரு நாள் முனிவன் வழக்கம் போல மாதுளம் பழங்களோடு வந்தபோது மன்னன் அவனை வரவேற்று உபசரித்தான்.

பின்னர் அந்த முனிவரிடம் மன்னன் கேட்கலானான் "முனிவரே! தாங்கள் மாதுளங்கனிகள் மூலம் எனக்கு அளித்திருக்கும் ரத்தினக் கற்களுக்கு என் ராஜ்ஜியமே கூட ஈடாகாது. அப்படியிருக்க எதற்காக எனக்கு இந்த விலையுயர்ந்த ரத்தினக் கற்களை பரிசளித்தீர்கள்? அந்த காரணத்தைச் எனக்குச் சொல்ல வேண்டும்!" என்று வேண்டினான் விக்கிரமாதித்தன்.

முனிவரோ "மன்னா! இம்மாதிரியான விஷயங்களை பகிரங்கமாகப் பேசுவது நல்லத் அல்ல. ஆதலால் நான் உன்னிடம் தனியாக பேச வேண்டும்" என்றார் கபட முனிவர்.

அவ்வாறே விக்கிரமாதித்தனும் முனிவரை தனியே அழைத்துச் சென்று பேசலானான். "முனிவரே, நீங்கள் எனக்கு ஏராளமான ரத்தினக் கற்களைக் கொடுத்தீர்கள். ஆனால் நான் ஒருநாள் கூட உங்களை கவனிக்காமல் இருந்து விட்டேன். உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்" என்றான் மன்னன்.

கபட முனிவர் கூறினார் "மன்னா! மாவீரா! எனக்கு ஒரு லட்சியம் உண்டு! அதை அடைய நீ உதவுவதாக வாக்குக் கொடுப்பாயானால் நான் சொல்கிறேன்." என்றார். அவ்வாறே விக்கிரமாதித்தனும் வாக்கு கொடுத்தான்.

"முனிவரே! நான் வாக்கு கொடுத்து விட்டேன், இப்போது சொல்லுங்கள், உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?" என்றான் விக்கிரமாதித்தன்.

"மன்னா! நான் வனாந்திரத்திலுள்ள துர்க்கையம்மனை துதித்து யாகங்கள் செய்யப் போகிறேன். அதனால் எனக்கு அஷ்டமா சித்திகளும் கிடைக்கும். அதற்காக நீ ஒருநாள் முழுவதும் என்னுடன் துனையாக இருக்க வேண்டும். இதைத் தான் நான் உன்னிடம் கேட்கிறேன் என்றான் கபட முனிவன்.


தமிழ் சினிமாவில் பிராமணர்கள்-பாகம் 2


"சரி, நான் வருகிறேன்" என்றான் விக்கிரமாதித்தன்.

"வருகிற கிருஷ்ண பக்ஷத்து, சதுர்த்தசியும் செவ்வாய் கிழமையும் கூடிய தினத்தில் ராத்திரியில் நீ மட்டும் ஆயுதம் தாங்கி தனியாக வர வேண்டும்" என்றான் முனிவன் வஞ்சகமாக.

முனிவன் குறிப்பிட்ட தினமும் வந்தது. விக்கிரமாதித்தனும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காட்டுக்கு முனிவன் குறிப்பிட்ட இடத்தைத் தேடி தன்னந்தனியாகச் சென்றான்.

வேதாளம் வரும்.....

5 comments:

தேவன் said...

சுவாரஷ்யமாக இருக்கிறது அண்ணா....

கலக்குங்கள்....

hayyram said...

நன்றி கெசவன் தம்பி,

என்ஜாய் பண்ணுங்க. உங்க டெம்ப்லேட் மத்திட்டிங்க போலருக்கு. பேஷ். ஜமாய்ங்க.

ராம்

saravana kumar said...

mr ram, i am new follower. please guide me how to write comments in tamil

hayyram said...

dear sravana kumar, please download ekalappai, and type msg in note pad u can paste here, or u can type here directly in tamil after installing ekalappai.

or try this..

http://www.higopi.com/ucedit/Tamil.html

saravana kumar said...

நன்றி திரு ராம் அவர்களே.