Saturday, May 15, 2010

தானம் செய் நெஞ்சே, தானம் செய்!



ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது அவர் என்ன ஜாதி என்ன மதம், நல்லவரா, கெட்டவரா என்று ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்காமல், நம்மாலான உபகாரத்தைப் பண்ண வேண்டும். 'யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்' என்றே திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறது. அன்னதானத்திற்கு என்ன விசேஷம் என்றால், இதிலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திப்படுத்த முடியும்.

தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம் நீர்வாழ் - நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனசிலிருந்து அன்பு ஒரு தீபமாக எல்லோரையும் தழுவுவதாக பிரகாசிக்க வேண்டும். இந்த உத்தமமான சிந்தனையில் தான் சொக்கப்பானை அன்னாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்வீகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.

நம்மில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மந்திரத்தை உபதேசம் வாங்கிக் கொள்கிறோம். இவற்றை அவரவர் தங்கள் இஷ்டப்படி எடுத்துக் கொள்கிறார்கள். ஆனாலும் நம் அத்தனை பேருக்கும் உபநிஷத்திலேயே உபதேசித்துள்ள மந்திரம் - தத்த" - அதாவது "தானம் செய்". நல்ல கொடையாளியாக இரு என்பது தான் அது. மற்ற மந்திரங்களை எல்லாம் ஜபித்துக் காட்டலாம், இந்த 'தத்த' மந்திரத்தை செயலில் பண்ணிக் காட்ட வேண்டும்.

வைத்துக் கொண்டு அனுபவிப்பதை விட,கொடுத்து அனுபவித்தால் அதுவே பரம ஆனந்தத்தைத் தருகிறது. மஹாபலி வாரி வாரிக் கொடுத்தான். ஆனால், தான் கொடுக்கிறோம் என்ற அஹங்காரத்தால் கர்வம் கொண்டான். இதனால் தான் பகவானே அவனிடம் இந்த அஹங்கார நாசத்துக்கு அடையாளமாகத் தலையிலே கால் வைத்தான்.

'தானம் கொடுக்கிறோம்' என்று சொல்வது கூடத் தவறு தான். 'பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான், அதனால் கொடுத்தோம்' என்று அடங்கி பவ்யமாகத்தான் கொடுக்க வேண்டும். 'பியாதேஹம்' என்கிறது உபநிஷதம். கொடுக்கிறவன் தான் பயப்பட வேண்டும்.

'ஸம்வித்' துடன் என்று சொல்கிறது. 'ஸம்வித்' என்றால் 'நிறைந்த ஞானம்' என்று பொருள். கொடுக்கிறவன் , வாங்கிக் கொள்பவன் இரண்டு பேரும் உண்மையில் ஒருவனே தான் என்ற அறிவுதான் அந்த 'ஸம்வித்'. ஆக கொடுப்பதில் கூட நான் கொடுத்தேன் என்ற கர்வம் கூடாது.

(இன்றைய அரசியல் வாதிகளோ மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுத்து விட்டு நான் கொடுத்தேன் என்று பாராட்டு விழாவே நடத்திக் கொள்கிறார்கள். அதாவது நமது பையில் கைவிட்டு பணத்தை எடுத்து நம்கையிலேயே கொடுப்பவர்கள் கொடையாளிகளாம்.)

சரி, இப்படி தானம் கொடுப்பதால் என்ன பலன்? தானம், தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபமடைந்தாலும் அடையாவிட்டாலும் நம்முடைய மனஸின் அஹங்காரம் குறையும். எல்லோரும் சேர்ந்து குளம் வெட்டினால் அப்போது கொஞ்சம்கொஞ்சமாக நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் தண்ணீர் வருவதைவிட, நம் நெஞ்சில் ஈரம் வருகிறதே அது பரமாத்ம ஸ்வரூபத்தை நாம் உணருவதற்கு சமம்.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.


4 comments:

Pandi A said...

I am seeing this picture(color one) with eye full of tears..

It happened to see this picture in a saloon many years before and I took it to my home(Still keeping with me). Its the reason for many changes in my life.

Dear RAAM, You are wonderful person and doing wonderful service to this society.

kppradeep said...

Dear Ram,
just read this post and would like to add some thing similar said by Sri "Paramahansa Yogananda" in one of his speeches -" if you go to hotel and spend X amount of money for your food, do you pat yourself on your back for such an act of spending money on yourself?. The same thing applies when you give alms to somebody. That is you are helping yourself. The divine in you , me and every one is one and the same.
Have i confused you?. Yoganandaji's speeches are available as CD's. May be if you listen to that you will understand better what i am trying to say.
This post also was very good as usual
Please do not write about our politicians and degrade yourself

hayyram said...

thanks pandi.

hayyram said...

thanks mr.pradeep.

//Please do not write about our politicians and degrade yourself//

what to do. some times we had to compare how these people are, to make the readers realise at once while reading.

thanks for ur infos pradeep.