Monday, May 24, 2010

கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்!


மகாபாரதத்திலிருந்து ஒரு காட்சி!



தூர்தர்ஷனில் முன்பு ஒளிபரப்பிக் கொண்டிருந்த மகாபாரதத்தில் காட்சி ஆரம்பிக்கும் போது ஒரு சக்கரம் சுழலும். 'நான் காலம் பேசுகிறேன்' என்று பின்னனியில் குரல் ஒலிப்பதாகக் காண்பித்திருப்பார்கள்!

சாந்தனு மகராஜனில் துவங்கி பல தலை முறைகளைக் கடந்து கதை சொல்லப்படும் போதும் அதே காலம் அதே குரலில் பேசிக்கொண்டிருக்கும். ஒரு இதிகாசத்தை படமாக்கும் போதும் வெறுமனே வர்த்தக எண்ணத்துடன் மட்டுமே படமாக்காமல் அந்த இதிகாசத்தின் மகிமையை உணர்ந்தவர்களால் மட்டுமே இப்படி ஒரு அற்புதமான விஷயத்தை இதிகாசத்துடன் இனைத்து காட்ட முடியும். ஆம்! காலம். அது என்றைக்கும் இருக்கக் கூடியது. மைக்ரோ முதல் மாக்ரோ வரை எந்த ரூபத்திலும் நிலையான இயக்கத்துடன் இருப்பது காலம் ஒன்று மட்டுமே.

அத்தகைய காலத்தையும் அதன் சுழற்சியையும் யாரும் ஒரு வாழ்க்கை பருவத்தில் கணித்து விட முடியாது. பல முறை பிறப்பெடுத்து ஒவ்வொரு முறையும் விட்ட இடத்திலிருந்து ஆராய்ந்து மேலும் மேலும் உணர்ந்தறிபவர்கள் மட்டுமே காலத்தின் சுழற்சியை முழுமையாக கண்டறிய முடியும். அப்படி உணர்ந்து பார்த்து நம் முன்னோர்களால் சொல்லப்பட்டதாகக் கூறப்படுவதே நாம் பார்க்கும் நாள், வருடம், யுகம் போன்ற காலக்கணக்குகள். சூரிய உதயத்தின் அனு அளவு காலத்தில் துவங்கி யுகக் கணக்கு வரை இப்படி துல்லியமாக கணக்கிட்டிருக்கிறார்கள்.

சூரியனின் முதல் கதிர்கள் பூமியைத் தொடும் நேரம் (உதயம்) நாள் ஆரம்பிக்கும் நேரம்.
நாள் என்றால் சூரியனும், பூமியும் சேருவது. மாதம் என்றால், சூரியனும், சந்திரனும் சேர்ந்தவுடன் ஆரம்பிப்பது. வருடம் என்றால், பூமி சூரியனை சுற்றும் ஒரு முழுச்சுற்று.

இப்படிப்பட்ட காலக்கணக்கின் படி தான் பஞ்சாங்கம் மற்றும் ஜோடித ஸாஸ்திரங்கள் கணிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

இப்படியே வருடங்கள் சுற்றி சுற்றி லட்சக்கனக்கான வருடங்கள் ஆனால் அதை யுகம் என்கிறார்கள். சரி அப்படி எத்தனை வருடங்கள் சுற்றினால் ஒரு யுகம் வருகிறது என்றும் என்னென்ன யுகங்கள் எத்தனை வருடங்கள் என்றும் பார்க்கலாம்!

கிருதயுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள்

திரேதாயுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள். (ஸ்ரீ ராமர் வாழ்ந்த யுகம் எனப்படுகிறது)

துவாபரயுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள். (ஸ்ரீ க்ருஷ்ணர் வாழ்ந்த யுகம் எனப்படுகிறது)

கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்.

(கலியுகத்தில் அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழ தொடங்குவங்குவார்களாம். (50க்கு50) , சில நேரம் தேவர் பல நேரங்களில் அசுரர். கடவுள் பாதி மனிதன் பாதி. அதனால் தான் இந்த காலத்தில் யாரையும் நிரந்தரமான நல்லவர்கள் என்று முழுமையாக நம்ப முடிவதில்லை.)

யுகங்களில் கலியுகம் குறைந்த வருடங்களைக் கொண்டது. இப்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். கலியுகம் பிறந்தது பிப்ரவரி 18, 3102 என்று காலக்கணக்கீட்டு நிபுணர்கள் கண்டறிந்து இருக்கிறார்களாம், ஆக இந்த 2010 ஆம் வருடம் கலியுகத்தின் 5112 ஆம் வருடம் ஆகின்றது என்கிறார்கள்.

அதாவது கலியுகம் முடிய இன்னும் சுமார் 4,26,888 வருடம் இருக்கின்றது என்கிறார்கள். கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.

ஆம், காலம் சக்கரம் அல்லவா!

இவற்றில் கலியுகத்தில் தர்மங்கள் சார்ந்த வாழ்க்கை சீர்குலையுமென்றும் கலியுகத்தின் முடிவில் அதர்மவாதிகளே உச்சமாக ஆட்சி செய்யும் தருணத்தில் கல்கி அவதாரம் நிகழும் என்றும் கூறப்படுகிறது. கலியுகத்தில் அப்படி என்னென்ன நடக்குமாம். பார்ப்போம்..

கலியுகத்தில் தர்மம், ஸத்யம், பொறுமை, தயை, ஆயுள் தேஹ பலம், ஞாபகம் ஆகிய இவைகள் நாளுக்கு நாள் குறையும்.

கலியில் பணமுள்ளவனே மேலான குலத்தில் பிறந்தவன் ஆவான்.

பணமுள்ளவன் எவனோ அவனே ஆசாரம் உள்ளவனாக கருதப்படுவான்.

பலமுள்ளவன் எவனோ அவன் மட்டுமே தர்மம், ஞாயம் போன்றவற்றை தீர்மானிப்பான்.

மணம் செய்து கொள்பவர்கள் அவரவர் சொந்த விருப்பத்தின் படியே இயங்குவார்கள். குலம் மறைந்து போகும்.

மனிதர்கள் அவர்களின் குணங்களைக் கொண்டு சிறந்தவர்களாக போற்றப்பட மாட்டார்கள்.

பிராமணர்களுக்கு பூனூல் அடையாளமாக மட்டுமே இருக்கும்.

அதிகமாகப் பேசுபவனே பண்டிதன் என்ற புகழை அடைவான்.
(மேடைக்கு மேடை பேசியே மயக்கும் அரசியல் வாதிகளைப் பார்த்தாலே தெரிகிறதே!)

ஏழையாக இருப்பவர்களே பழிபாவங்களுக்கு ஆளாவார்கள். பணமுள்ளவனே நல்லவன் என்று பெயரெடுப்பான்.

மனிதர்கள் அதிகம் சாப்பிடுபவர்களாகவும், காமவெறி கொண்டவர்களாகவும், தரித்திரர்களாகவும் இருப்பார்கள்.

ஆணும் பெண்ணும் சம்மதித்து புணர்ந்தாலே விவாஹம் செய்து கொண்டதாகக் கருதப்பட்டு விடும். விவாஹம் தேவையற்றதாகும். (விவாகரத்தை வரவேற்கும் பெரிய கூட்டமும் திருமணம் தாலி போன்றவற்றை அவமதித்து வெளியேறத்துடிக்கும் கூட்டமுமே இதற்கு அறிகுறியாகிறார்கள் என்று தோன்றுகிறது)

ஸ்த்ரீகள் பதிவிரதைகளாக இருக்க மாட்டார்கள். வேசிகளைப் போலவே நடந்துகொள்பவராக இருப்பார்கள். ஸ்த்ரீகள் வெட்கம் இல்லாதவர்களாகவும், கடுஞ்சொல் பேசுபவர்களாகவும், திருட்டுத்தனம், மாயை, பிடிவாதம் அதிகம் கொண்டவர்களாக இருப்பர்.

மனிதர்கள் பூமியை தங்களுடையது என்று சொல்லிக்கொள்வார்கள். பூமையை சொந்தம் கொண்டாட தந்தையுடன் சண்டையிடுவார்கள். சகோதரர்கள் அடித்துக் கொள்வார்கள்.

அருகிலிருக்கும் கோவிலை விட தூரதேசத்தில் இருக்கும் க்ஷேத்திரமே புண்ணிய க்ஷேத்திரமாக கருதப்படும்.

புகழுக்காக மட்டுமே தானங்கள் செய்யப்படும்.

மயிர் வளர்ப்பு அழகுக்கான முக்கியப் பொருளாகிவிடும்.

தைரியமாகப் பேசுபவனே சபைக்குரியவனாகக் கருதப்படுவான்.
(இப்போதெல்லாம், உதார் விடுறவன் தானே பெரிய ஆள்! ரௌடிகள் வளர்வதும் இப்படித்தானோ!)

திருடர்கள், கருணையற்றவர்கள் மற்றுக் அயோக்கியர்கள் போன்றவர்களே அரசனாக இருப்பார்கள்!

அரசாள்பவர்கள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். வேதமார்கம் கெடுக்கப்படும்.


உலகத் தமிழ் செம்மொழி மாநாடு!

இந்தப் படத்துக்கும் கட்டுரைக்கும் சம்மந்தம் இல்லீங்கோ!


ப்ரஜைகளுடைய பணங்களை அரசர்களே திருடிக்கொள்வார்கள்! அவர்களால் உபத்திரவிக்கப்பட்டு மக்கள் மலைகளிலும் காடுகளிலும் ஒளிந்து வாழ நேரிடும்.

பருவகாலங்கள் மாறிப்போகும். மக்கள் குளிர், காற்று, வெயில், மழை, பசி, தாகம், வியாதி, கவலை இவர்களால் கஷ்டப்படுவார்கள்.

கலியுகத்தில் இருபது, முப்பது வயதே பரம ஆயுளாகும்.

பசுக்கள் பாலிலும் உருவத்திலும் ஆடுகள் போல் ஆகிவிடும். கறக்காத பசுவை பாதுகாக்கவோ வளர்க்கவோ விரும்பமாட்டார்கள்.
(அடிமாடு கொண்டு செல்லும் லாரியைப் பார்த்தாலே தெரிகிறதே)

ஜாதிகளெல்லாம் பெரும்பாலும் சூத்திர ஜாதிகளாகிவிடும்.

சந்நியாசிகள் எல்லாம் குடும்பஸ்தர்கள் போலவே நடந்துகொள்வார்கள். பணத்திலேயே மிக்க ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆண்களுக்கு பெண்டாட்டி வீட்டு பந்தங்களே முக்கியமானவர்களாகிப் போவார்கள். மச்சினி, மைத்துனர்களிடம் பிரிமயாகப் பழகுவார்கள். சொந்த தந்தை, சகோதர சகோதரிகளிடம் பிரியம் வைக்க மாட்டார்கள்.

மரங்கள் எல்லாம் வன்னி மரங்களாகவே இருக்கும்.
(வன்னி மரங்கள் எப்படி இருக்கும்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

மேகங்களில் மின்னல்கள் அதிகமாக இருக்கும். வீடுகள் மகிழ்ச்சியற்று சூனியமாகவே காட்சியளிக்கும்.

இப்படியெல்லாம் நடக்குமாம். இவற்றில் தற்காலத்தில் எவையெல்லாம் கலியுகத்திற்கு பொருத்தமாக நடக்கிறது என்று யோசித்துக் கூறுங்கள் பார்ப்போம்.



கல்கி வருவாரோ இல்லையோ கலியுகத்தில் நாம் காலத்தை ஓட்ட வேண்டுமே!

கொசுறு: தொலைக்காட்சிகள் கூட்டாக சேர்ந்து மறைக்கும் அதிர்ச்சி தகவல் -
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குழந்தைகளைக் கடந்தி விற்பனை செய்யும் கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் ஒரு பாதிரியாரும் அடக்கம். செய்தி இங்கே

கலிகாலத்தில் இப்படித்தான் நடக்குமாமே! ஈஸ்வரோ ரக்ஷது!

11 comments:

Anonymous said...

திரு ராம், இந்த சைட் பாருங்கள்...தைரியம் இருந்தால் இவர்களை பற்றி சன் தொலைகாட்சில் போடுவார்களா?
http://thatstamil.oneindia.in/news/2010/05/24/children-kidnapped-christian-father.html
நன்றி சுவாமி

hayyram said...

நன்றி சுவாமி.

Anonymous said...

nice post ram. keep it up.

sivaram

Anonymous said...

Hi Ram,

vanni maram is a throne tree
see the below side for picture and details.
(http://en.wikipedia.org/wiki/Prosopis_cineraria)

-Venkat

hayyram said...

oh! thanks mr.venkat.

hayyram said...

//nice post ram. keep it up.
sivaram// தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கு நன்றி திரு சிவராம்.

hayyram said...

//nice post ram. keep it up.
sivaram// தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கு நன்றி திரு சிவராம்.

Bala said...

It is told as the characteristics of Kali yuga. Obviously like minded people are very much worried on seeing these kind of developments. What my doubt is, is it possible for us to change the course even if we try? As it is the characteristic of this yuga how come we can change? Is it our fate to adjust with these kind if acts? Is there any reference given in our scriptures how to avoid and unaffected by these characteristics? I am very much interested in getting clarifications on this. If possible please help me. I really appreciate your work. Please go on

hayyram said...

பாலா, கலியுகத்தில் நடப்பவற்றை தடுக்க முடியாமல் போகலாம் ஆனால் அதன் தாக்கத்தை குறைத்துக்கொள்ள பக்தி மார்க்கம் வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது.

கரோக்கி இசை அலைகள் said...

இதில் நிறைய விஷயங்கள் யுகமுடிவு நாளின் அறிகுறிகளாக இஸ்லாம் சொல்லும் பெரும்பாலனவற்றுடன் ஒத்து போகின்றன. இவை எங்கு சொல்லப்பட்டுள்ளவை ? பகவத் கீதையிலா ? ஆதாரத்தை வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்

Anonymous said...

சோழர் குல மரம்