Friday, November 19, 2010

வள்ளுவர் வாக்கு!



தெரிந்து வினையாடல்:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்


விளக்கம்: இந்தச் செயலை, இன்ன காரனத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து அந்தச் செயலை செய்யும் பொறுப்பை அவனிடமே வழங்கினால் கொடுக்கப்பட்ட காரியம் வெற்றிகரமாக செய்து முடிக்கப்படும்.

திரு வள்ளுவர் எழுதிய இந்தக் குறள் சரியாக பொருட்பால் - அரசியல் அதிகாரத்தில் வருகிறது. அதாவது ஒருவரை ஒரு வேலைக்கு நியமிக்கும் போது அவன் அந்த வேலையை சரியாகச் செய்து முடிப்பானா, அதற்கான திறமைகள், தகுதிகள் இருக்கிறதா என்று பார்த்து தான் அவரை அந்த வேலைக்கு நியமிக்க வேண்டும் என்று கூறுகிறது குறள்.

ஆனால் தங்களைத் தமிழர்கள் என்று கூறிக்கொள்ளும் யாரும் திருக்குறளைக் குறிப்பாக இந்தக் குறளைப் படிக்கவே இல்லையோ என்று தோன்றுகிறது. தவறான ஆட்களை தவறான பணிக்கு ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள்!





தூ... வெக்கம் கெட்ட திருடர்கள்!

.
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"


- நான் திருக்குறள் படி சரியா செஞ்சிட்டேன்ல....!


"ஸ்பெக்ட்ரம் என்னவோ கருணாநிதியின் குடும்பச் சொத்தாகவே ஆகிவிட்டது. நாடு, நாட்டு நலன் என்பதெல்லாம் பற்றி அவர்கள் கவலைப் படவே இல்லை. ஏற்கனவே சினிமா கருணாநிதியின் குடும்பத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. இனி அதை வெளியே கொண்டு வருவது கடினம். ரியல் எஸ்டேட் அவர்கள் கையில், அதையாவது முயன்றால் வெளியே கொண்டுவரலாம். இன்னொரு முறை இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு தாங்காது என்று பொது ஜனங்களே பேசிக்கொள்ளும் அளவிற்கு வந்து விட்டது - திரு சோ. இன்றைய ஜெயா செய்தியிகளில்"

மீண்டும் மேற் சொன்ன குறளை நினைவு படுத்திக் கொண்டிருக்கும் போது எனக்கு அந்த சின்னப்பெண்ணின் நினைவு தான் வந்தது.




சின்னப் பெண் ஒருத்தி ஒரு நாள் ஒரு பசுவை இழுத்துக் கொண்டு சென்றுகொண்டு இருந்தாள்...

அதைப் பார்த்த ஒரு பெண்மணி "என்னம்மா இவ்ளோ கஷ்டப்பட்டு இந்தப்பசுவை இழுத்துக்கிட்டு போறியே, என்ன சமாசாரம்?" என்றாள்..

"இது எங்க அப்பாவோட பசுங்க ...இதை அடுத்த தெருவில் உள்ள காளை மாட்டுக்கிட்ட கூட்டிடுப் போறேன்.... "

"என்னம்மா அநியாயம் இதை உங்க அப்பாவே செய்யக்கூடாதா? " என்றாள் அந்தப் பெண்மணி..

"இல்லைங்க ....காள மாடு தான் செய்யணும்.."


"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்" - சிந்திப்பீர்.


2 comments:

jagadeesh said...

super...ah sonneenga...namma alakiri ellam MP kku laaikke illa..super...

hayyram said...

நன்றி ஜகதீஷ்!